புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:28 pm

மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! 11742831_888282664577379_5617296111548915732_n

தமிழக வரலாற்றில் மறைந்த நாகரீகங்களும் உண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து, கால வெள்ளத்தில் மறைந்த நகரங்களும் உண்டு. அவ்வகையில் பாண்டிய நாட்டின் பழம் பெருமையை உலகிற்கு உணர்த்திய மண்ணில் புதைந்த மாங்குடி நகரத்திற்கும் தமிழக வரலாற்றில் தனிப்பெரும் இடம் உண்டு.

மாங்குடியை அறியாதவர்கள் சங்கப்புலவர் மாங்குடி மருதனார் பிறந்த ஊர் என்று கூறினால் எளிதில் அறிந்து கொள்வார்கள். நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோயிலில் இருந்து 20 கி. மீ தொலைவில் ராசபாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ள சிற்றூரே மாங்குடியாகும். சங்க கால மாங்குடியானது பெருமாள்பட்டி, சோலைசேரி, அருவன்குளம் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய நகரமாகத் திகழ்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் தேவியாறு மாங்குடி வழியாகப் பாய்ந்து வளம் சேர்த்தது என்பார்கள். மாங்குடி நகரத்தைப் பற்றி வரலாற்று ஆய்வாளரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியருமான இல.கணபதிமுருகன் தெரிவித்தது: ”"தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த 2002-03 ஆண்டுகளில் நிகழ்த்திய அகழாய்வின் வாயிலாக மாங்குடியின் பழம் பெருமை உலகிற்குத் தெரிய வந்தது. அகழாய்வில் கி.மு 4000-ஐச் சேர்ந்த எண்ணற்ற நுண் கற்காலக்கருவிகள் கண்டறியப்பட்டன. சங்க காலத்தைச் சேர்ந்த கறுப்பு, சிவப்பு மட்பாண்ட வகைகள், செம்பிலான ஊசிகள், வளையல்கள், இரும்பிலான அம்புமுனை, களிமண் பொம்மைகள், மணிகள், சுட்ட களிமண்ணால் செய்யப்பெற்ற அகல் விளக்குகள், மான்கொம்புகள், தாயக்கட்டை போன்றவை கண்டறியப்பட்டன. இவற்றின் காலம் கி.மு 300- கி.பி 300 ஆகும். மாங்குடி ஒட்டியுள்ள சோலைசேரி கிராமத்தில் தேவியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. இதனையொட்டி லிங்கத்திரடு (லிங்கத்திடல்) என்றழைக்கப்படும் பகுதி அமைந்துள்ளது. இந்த இடம் ஆவுடையார் தோட்டம் என்று கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. இத்தடுப்பணையில் கரையை ஒட்டி சுமார் ஒரு சதுர கி.மீ பரப்பிற்கு எண்ணற்ற தெய்வ உருவச்சிலைகள், வயிறு பெருத்த பூத கணங்களின் சிலைகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்விடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெரிய சிவாலயம் ஒன்று இருந்ததாகவும் சுற்று வட்டார மக்கள் தெரிவிக்கின்றனர்.

நுண்ணிய வேலைப்பாடுகள் அதிகம் இல்லாத, குறுகிய முகம் கொண்ட நந்தி சிலையொன்று மண்ணில் பாதியளவு புதைந்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கு அண்மையில் விநாயகரின் சிலை ஒன்று முகம் சிதைந்த நிலையில் உள்ளது. விநாயகர் இருகரங்களை உடையவராகவே, அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். விநாயகரின் தும்பிக்கை நீண்டவாறு, வலமாகவும், இடமாகவும் அல்லாமல் தொங்கியவாறு வடிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்திலிருந்து சற்றுத் தொலைவில் வயல் வெளிக்குள் தரையில் சாய்ந்த நிலையில் காளிதேவியின் சிலை ஒன்றும் காணப்படுகிறது.

காளிதேவியின் சிலையானது ஒரு காலினை பீடத்தில் மடக்கியவாறும், மற்றொரு காலை தரையில் ஊன்றியவாறும் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. கோவிலின் கோபுர வேலைப்பாட்டில் காணப்படும் தோள் உறுப்புகளான கர்ணகூடு, பஞ்சரம், சாலை போன்றவை தேவியாற்றுத் தடுப்பணையின் கரையை ஒட்டியே சிதறிக் கிடப்பதைக் காணமுடிகிறது. இவற்றின் வேலைப்பாடுகளையும் அமைப்பினையும் பார்க்கும் போது கி.பி 10-11ம் நூற்றாண்டு பாண்டியர்களின் கலைப்பாணியை ஒத்ததாகத் தெரிகிறது. மாங்குடி, பெருமாள்பட்டி மற்றும் சோலைசேரி பகுதிகளில் கிணறுகளை ஆழப்படுத்தும் போது, பல இடங்களில் எண்ணற்ற முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தாழியினுள் இறந்தோரின் எலும்புத்துண்டுகள், தவிடு, தானிய வகைகள் நிரம்பிய வட்டில், சிட்டிகை, போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தாழியினுள் கிடைத்த நாணயங்களில் முதலாம் ராஜராஜனின் (கி.பி. 985-1013) உருவம் பொறித்த செப்பு நாணயம் குறிப்பிடத்தக்கதாகும். மாங்குடி பெருமாள்பட்டி அய்யனார் கோயில் அருகே தூணில் பொறிக்கப் பெற்ற தமிழ்-கிரந்த கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. கிபி 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் பாண்டியர்களின் நிலைப்படையினைச் சேர்ந்த படை வீரர்களுக்கு விளைநிலமும், வீட்டு வசதியும் செய்து கொடுத்த செய்தி காணப்படுகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட தானங்கள் பரிக்கிரகம் எனப்பட்டன.

மாங்குடியின் அமைவிடம் சிறப்பு வாய்ந்ததாகும், எவ்வாறெனில் பாண்டிய நாடு- சேரநாடு பெருவழியின் இடையில் அமைந்த நகரமாக மாங்குடி திகழ்ந்தது. அரசியல் சிறப்புமிக்க, வணிக முக்கியத்துவம் வாய்ந்த காரணத்தினால் மாங்குடி அந்நியரின் படையெடுப்புகளுக்கு உள்ளான பகுதியாகவும் விளங்கியுள்ளது. மாங்குடி மருதனாரை ஆதரித்த பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். இவன் சேரன், செம்பியன் (சோழன்), திதியன், எழிநி, எருமையூரான் போன்றோரை போரில் தோற்கடித்தான். நெடுஞ்செழியனின் வெற்றியைப் பாடவே மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியைப் பாடினார்.

மாங்குடியை அழித்து சோழர்களே அதன் அருகாமையில் சோழசோரி என்ற நகரை நிர்மாணித்திருக்க வேண்டும். தற்போது சோழசேரி, சோலைசேரியாக மருவியுள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள சோழபுரமும், சோழர்களின் குடியேற்றப் பகுதியாக இருத்திருக்கலாம். பராமரிப்பின்றி சிதைந்த ஆலயத்தின் எஞ்சிய பகுதிகள் தேவியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட பயன்படுத்தப்பட்டன. கி.பி 18-19 நூற்றாண்டுகளில் தடுப்பணை கட்டப்பட்டிருக்கலாம். எனவே மாங்குடி நகரை பாண்டிய-சோழ ஆதிக்கப் போட்டியில் அழிந்த நகரமாக கருதலாம்” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இல.கணபதிமுருகன்.



மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:22 am

நல்ல கட்டுரை, நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 13, 2015 5:58 am

நல்ல கட்டுரை ...நன்றி சிவா மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 13, 2015 7:09 am

மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக