புதிய பதிவுகள்
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:29 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by ayyasamy ram Today at 5:29 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
Page 1 of 1 •
- Rajesh RKபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 08/01/2016
அனைவருக்கும் வணக்கம் ,
எனக்கு "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற புத்தகம் PDF வடிவில் கிடைத்தால் தாருங்கள்.
நன்றி.
எனக்கு "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற புத்தகம் PDF வடிவில் கிடைத்தால் தாருங்கள்.
நன்றி.
ஈகரை உறவுகள் வந்து உதவுவார்கள்...
-
-
இந்த நூலின் மதிப்புரை - காலச்சுவடு இதழில் வந்தது - பகிர்தலுக்காக - இங்கே
-
விடியல் பதிப்பகத்தின் வெளியீடாகத் தமிழில் வந்திருக்கும் ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்னும் சுயசரிதை நூல் சமீபத்தில் வெளிவந்துள்ள அரசியல் புத்தகங்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. இந்திய அரசியல்வாதிகளில் பலரும் இத்தகைய வாக்குமூலங்களை அளிப்பதற்குத் தகுதியானவர்கள்தாம். ஆனால், மிஸ்டர் கிளீன்களாகவும் தியாகிகளாகவும் மாவீரர்களாகவும் தம்மைக் கற்பனைசெய்துகொண்டிருக்கும் அவர்களுக்கு இது போன்ற ஒரு புத்தகத்தை எழுதுவதற்கான மன உறுதியும் சமூகப் பொறுப்பும் குற்ற உணர்வின் உறுத்தல்களும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஐரோப்பியர்களின் நீண்டகாலச் சுரண்டலில் இந்திய உடல்களும் விளைச்சல்களும் மட்டுமே கொள்ளையிடப்பட்டன. ஆனால், அமெரிக்கர்கள் நமது மூளைக்குள் குடியேறி நம் இருப்பை, எதிர்காலத்தைப் பேரம்பேசி எடுத்துக்கொள்கின்றனர். இது ஒருவகை அரூபத்திருட்டு. இதை யார் எங்கே, எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதையெல்லாம் யாராலும் தெளிவாக உணர முடியாது. ஆனால், இது நடந்துகொண்டே இருக்கும். நம்மை விற்பதைப் பரவசத்தோடு நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்; ஊக்குவித்துக்கொண்டிருக்கிறோம். இது வினோதமானதல்ல. நம் ரத்தத்தில் ஊறிக்கிடக்கும் அடிமைக் குணத்தின் இயல்பான செயல்பாடு என்றே இதை எடுத்துக்கொள்ளவேண்டும். இது சராசரி இந்தியனுக்கு மட்டுமல்ல, அறிவுஜீவி எனக் கூறிக்கொள்ளும் பல தமிழ் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக ஊதிப்பெருக்கப்பட்ட செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் பணவீக்க விகிதம் உயர்ந்துகொண்டே போகிறது. இது இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தையும் நுகர்வுப் பொருள்களின் வணிகத்தையும் இலக்காகக்கொண்டது. விவசாய வளர்ச்சியானது தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்றால், நம் பணத்தின் யோக்யதையை அணுசக்தி ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்பட்ட பிறகு பார்க்கலாம். தெற்காசியாவில் அமெரிக்க மேலாண்மையைக் கேள்விகளே இல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
-
இந்த அமெரிக்கமயப்படுத்துதல் மத்தியில் உள்ள காங்கிரஸின் சுதந்திரத்திற்கு முந்தைய தேசம் - தேசியம் என்னும் கருத்தாக்கம் திரிந்துபோனதன் அடையாளமே. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் தேசம் - தேசியம் குறித்த அக்கட்சியின் நிலைபாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தனியே பரிசீலிக்கப்பட வேண்டியவை. முந்தையது விடுதலை வேட்கை யூட்டப்பட்ட இந்தியச் சாமான்ய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தது என்றால், பிந்தையது முதலாளித்துவத்தின் வளர்ச்சியால் பலவீன முற்றிருந்த நிலக்கிழார்கள், ஜமீன்கள், முடிதுறந்த மன்னர்கள், சிவில் புரோக்கர்கள் போன்றவர்களின் மீது அக்கறைகொண்டது எனச் சொல்லலாம். இன்னும் கூர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், இவர்கள் அம்பேத்கரை எங்கே கழட்டிவிட வேண்டும் என்பதை அறிந்த புத்திசாதுர்யம் மிகுந்தவர்கள்.
-
91இல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளவாதத்தின் பாதிப்புகள் மிக வெளிப்படையானவை. ஒருபுறம் 'இழவு வீட்டின் நாட்டாமை'யான நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசின் பெரும்பான்மை அரசு அதன் உயர்சாதியினரிடையிலான அதிகாரப் போட்டிகளில் சிக்கித் திணறிக்கொண்டிருந்தது. அப்பொழுது அதிகார பீடங்களில் வீற்றிருந்த அர்ஜுன் சிங், சரத்பவார் போன்ற ராஜஸ்தான் ஜமீன்தார்கள், ராஜபுத்திரர்கள், மத்தியப் பிரதேசக் குறுநில மன்னர்கள், பீகாரிய அடிமை வியாபாரிகள், முன்னாள் உலக வங்கி மானேஜர், செட்டிநாட்டு ராஜா எனப் பரம்பரைக் கொழுப்பேறிகள் சேர்ந்துகொணர்ந்த புதையல்தான் 91இன் தாராளவாதம். ஆனால், காங்கிரஸின் அமெரிக்கச் சார்பு நிலையே, தாராளவாதம் இங்கே அனுமதிக்கப்படுவதற்கு முக்கியமான ஒரே காரணம்.
-
நரசிம்மராவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசுகள் தாராளவாதத்தை அமல்படுத்துவதற்கான அடித்தளங்களை ஐந்தாண்டுத் திட்டங்களின் வடிவில் படிப்படியாக உருவாக்கி வைத்திருந்தன. குறிப்பாகப் பசுமைப் புரட்சி. இருபத்தைந்தாண்டுப் பசுமைப் புரட்சி இந்திய விவசாயிகளுக்கும் நிலத்திற்குமான உறவை ஆட்டங்காணச் செய்துவிட்டது. "பேராசைமிக்க பிச்சைக்காரர்களான" மிடில் கிளாஸ் வர்க்கத்தினரை உருவாக்குவதில், அவர்களை நிர்வகிப்பதில், ஓட்டுவங்கியாக்கி அதிகாரத்தைத் தக்கவைப்பதில் மின்சாரத்தின் பங்கு அளப்பரியது. மின்சாரம் பரவலாக்கப்பட்ட பின் அதன் உற்பத்தியையும் விநியோகத்தையும் கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் மூலம் சுரண்டலை நிரந்தரமாக்குதல் இவைதாம் பொருளாதார அடியாள்களும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள். பின்தங்கிய நாடுகளுக்குள் ஆலோசகர்களாகவும் நலம்விரும்பிகளாகவும் ஊடுருவுவது, மின் உற்பத்தி மற்றும் எண்ணெய் வளங்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிவது, அவற்றின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் பொய்யான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பேராசைகளை மூட்டுவது, ஒப்பந்தக்காரர்களை அடையாளங்காட்டுவது, கடன் பெற்றுத்தருவது பிறகு அந்நாடுகளை மீள முடியாத கடனில் மூழ்கடித்துத் தம் சுரண்டலுக்கான வேட்டைக்காடாக்குவது போன்றவைதாம் பொருளாதார அடியாள்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்குமிடையேயான உறவின் வலைப் பின்னல்.
-
தெளிவாகவும் எளிமையாகவும் இவ்வலைப் பின்னலை விளக்கியிருக்கிறார் ஜான் பெர்கின்ஸ்.
-
உள்கட்டுமானங்கள், தங்கநாற்கரச் சாலைகள், மேம்படுத்தப்பட்ட எரி சக்தித் திட்டங்கள், பிரதமர்களின் யோஜ்கார்கள், எல்லோருக்கும் செல்போன் எனப் பாமரனுக்கும் அந்த ஆசைகளை மூட்டுவதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் தலைவர்கள். இந்தியாவில் இதற்கான அடித் தளங்களை உருவாக்கித் தந்ததில் பிஜேபி போன்ற வலதுசாரிகளுக்கும் அடல்பிகாரி வாஜ்பாய் போன்ற 'விவேக'மான தலைவர்களுக்கும் பெரும் பங்குண்டு. இன்று நுகர்வுச் சந்தையைக் கைப்பற்றுவதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் தமக்குள் அசுரத் தனமான போட்டிகளில் இறங்கியுள்ளன. அவர்களுக்கு ஏதுவாக இந்தியா முழுமையும் பொருளாதார தாதாக்களின் ஆட்சி செவ்வனே நடைபெறுகிறது. இதில் இந்தியக் கம்யூனிஸ்டுகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை மேற்குவங்கத்தில் பார்க்கலாம்.
-
இத்தகைய சூழலில் பெருமுதலாளிகளும் முதலீட்டு மாமாக்களும் பொலி காளைகளிடம் உயிரணுச் சேகரிப்பது போல, நுகர்வு என்றும் சுயபுணர்ச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும்போதே, இப்புத்தகத்தை வாசிப்பது தனிமனிதனுக்குத் தன் சுயநிர்ணயத்தில் பாரிய மன உளைச்சலை உருவாக்குகிறது. பல உடைப்புகளை ஏற்படுத்தும் சாத்தியமுள்ளது என்றாலும், இது தமிழ்ச் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டிவிடும் என்றெல்லாம் கருத முடியாது. ஆனால், குறைந்த அளவிலாவது பலவித இருண்மைகளிலிருந்து சமூகத்தின் மைக்ரோயூனிட்டான தனித்தன்னிலையை வெளி யேற்றிக்கொள்ள உதவும். இல்லையெனில் மீடியா, தொழில், குடும்பம் என்பவற்றின் மட்டகரமான சமூக விலங்காக மாறிப் போலி வெறி இன்பத்தில் மூழ்கும் திறனற்ற மூடனாகவோ அல்லது கடவுளுக்கு நிகர்த்தவனாகவோ மாற்றிவிடக்கூடும். இது இந்த ஒரு புத்தகத்தால் நேரக் கூடியதா என்று வியக்க வேண்டாம். மேம்படுத்தப்பட்ட பல புத்தகங்களின் ஒரு நிலை.
-
தனிநபராகத் திறனற்ற இந்தியக் கும்பலானது ஒருமித்து மோசமான வன்முறை சம்பவிக்கையில் அது தற்காலிக அதிகாரப் பரப்பாக மாறுகிறது. இந்தக் கூட்டெழுச்சி அறங்களின் பாலானதாக அமைவதில்லை. மாறாக எதிர்ச்செயல் ஊக்கியாகவே வினையாற்றுகிறது. இதற்குப் பல உதாரணங்களை அடுக்க முடியுமென்றாலும், சேதுக் கால்வாய் நல்ல சான்று. ஒருபுறம் வடக்கில் சிதறுண்ட இந்துத்துவவாதிகளை மீண்டும் ஒருங்கிணைக்க ஒரு வாய்ப்பாகவும் அதுவே தமிழகத்தில் காலாவதியான திராவிடக் கனவுகளைத் திரட்டி எழுச்சியடையச் செய்யும் வாய்ப்பாகவும் அமைந்தது. சேதுக் கால்வாய் பீட்டர்ஸ் சாலை மேம்பாலம்போல உதவாக்கரையான ஈகோ மாத்திரமே. நமது திராவிட உடன்பிறப்புகள் சொல் குறித்தோ 'மால்'வணிகம் குறித்தோ அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்தோ ஆசன வாயைக்கூடத் திறப்பதில்லை. ஏனென்றால், கல்வித் தந்தைகளாக அமெரிக்காவிற்கு உருப்படிகள் தயாரிக்கும் குடிசைத் தொழிலை நிர்வகிப்பவர்களில் பெரும்பான்மையான இவர்கள் நம்மை வழிநடத்தும்போது, நமது தனித்தன்னிலைகளை மீட்டுக்கொள்வதற்காக இது போன்ற புத்தகங்களில் பதுங்கிக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. ஏனென்றால், பணத்திற்கு வேலைபார்த்துக் காட்டிக்கொடுக்கும் ஜான் பெர்கின்ஸிற்கு இருக்கும் தெளிவோ அணுசக்தியைவிட மற்ற ஆற்றல்கள் தொழில்நுட்பரீதியில் உயர்ந்தவையாகவும் சிக்கனமாகவும் இருப்பதாகக் கூறும் தைரியமோ நமது ராசாக்களுக்கும் மானேஜர்களுக்கும் இல்லையென்பது நியாயங்கள் நிறைந்ததே.
-
இந்தியரீதியில் அறிவுத் துறையில், தொடர்புச் சாதனத்தில் பொருளாதார அடியாள்கள் நிரம்பி வழிகின்றனர். பொருளாதார அடியாள்களின் கை அரசியல் சூது, எண்ணெய் வளம், மின்சாரம், நுகர்வுப்பொருள் என்னும் அளவிலிருந்து இன்று பல நிலைகளுக்குத் தாவிவிட்டது. குடும்பச் சட்டம், தெய்வ வழிபாடுங்கூட அமெரிக்காவிற்குக் கட்டுப்பட்டுள்ளன. இருபதாண்டுகளுக்கு முந்தைய எம்.எஸ். உதயமூர்த்தி என்ற நபரை இன்னும் மறந்திருக்கமாட்டோம். தேவைப்படாத ஒன்றைப் பேசி அது தேவை என்னும் அவசியத்தை உருவாக்கி அமெரிக்காவிற்கு ஆள்பிடித்த நபர் அவர். இன்று இதுமாதிரி ஆள்கள் உள்மறைவாகச் செயல்படுகின்றனர். அமெரிக்கா இந்திய எண்ணெய் வளத்திற்காகவோ மின் நுகர்வுப் பொருள் விற்பனைக்காகவோ இல்லாவிட்டாலும் இந்தியாவின் அபரிமிதமான மனித வளத்திற்காகவும் மூளை உழைப்பிற்காகவும் (குறைந்த செலவினம்) தொடர்ந்து கலாச்சாரரீதியாகத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முயலும்.
-
புனைகதையாளனுக்குரிய சிரத்தையோடு ஜான் பெர்கின்ஸ் விவரிக்கும் நேர்த்தியில் சுரண்டல் குறித்த, கடனாளியாகும் தேசம் குறித்த துயரம் கவிகிறது. ஈக்வடர், கொலம்பியா, இந்தோனேஷியா, பனாமா, ஈராக், சவுதி, ஆப்கானின் நிலக்காட்சிகள், தேசங்களுக்குத் தரப்படும் மறைமுக நிதியுதவி ஆகியன ஒரே சீராக விவரணை செய்யப்படுகின்றன. லாப நோக்குமிக்க அரசியல்வாதிகளும் அவர்களால் அபாயத்தை உணராத அப்பாவி மக்களும் அடுத்தடுத்து வருகின்றனர். ராஸி, பிடல் போன்ற வெகுளி நண்பர்களும் அவர்களிடம் ஜானின் நடத்தையும் "மெய்ன்" சகாக்களோடு அவரது உறவும் அவரது இரட்டை வாழ்வின் பதிவுகள். கமலாங் இசையும் தலாங் பொம்மலாட்ட விவரிப்பும் பனாமாக் காமக்கிழத்திகளின் நடனமும் புஷ் பற்றிய (பக்: 115,116,117) குறிப்புகள், ஈக்வடர், பனாமா அதிபர்களின் மறைவு பற்றிய குறிப்புகள் தேர்ந்த எழுத்தாளனின் சமரசமற்ற பார்வையோடு உள்ளன. சவுதிகளின் பலியாட்டுத் தன்மை, ஓசாமாவின் நகர்வு, வியட்நாம் தோல்விக்கும் ஈராக் தோல்விக்குமான ஒற்றுமை, பல தேசங்களின் புவியியல், சூழலியல், அரசியல் பார்வையை அவரால் தரப்படுத்த முடிவது அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்களிலேதான். உலகத்தின் பிராந்தியக் கூறுகள் மற்றும் வரலாறு, இனவிவரம் போன்றனவெல்லாம் அமெரிக்க நூலகங்களுக்குக் கிடைக்கின்றன. பணத்திற்கு வேவு பார்க்கும் உள்ளூர் அறிவுத்திருடர்கள் நம்மோடு கமுக்கமாக இருக்கின்றனர் என்பதையே இது வெளிச்சமிடுகிறது.
-
இந்தப் புத்தகம் சார்ந்து நான் முன் வைத்துள்ளது ஒரு வாசிப்பு.
இதன் பல வாசிப்பு முறைகள் விவாதத்திற்குள்ளாகும்போது,
மேலும் பல விஷயங்கள் தெளிவுபெறும்.
இப்புத்தகம் தமிழில் விவாதத்திற்குரிய வரவாக வெளி வந்துள்ளது.
-
-----------------------
பழனிவேள்
காலச்சுவடு
-
-
-
இந்த நூலின் மதிப்புரை - காலச்சுவடு இதழில் வந்தது - பகிர்தலுக்காக - இங்கே
-
விடியல் பதிப்பகத்தின் வெளியீடாகத் தமிழில் வந்திருக்கும் ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்னும் சுயசரிதை நூல் சமீபத்தில் வெளிவந்துள்ள அரசியல் புத்தகங்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. இந்திய அரசியல்வாதிகளில் பலரும் இத்தகைய வாக்குமூலங்களை அளிப்பதற்குத் தகுதியானவர்கள்தாம். ஆனால், மிஸ்டர் கிளீன்களாகவும் தியாகிகளாகவும் மாவீரர்களாகவும் தம்மைக் கற்பனைசெய்துகொண்டிருக்கும் அவர்களுக்கு இது போன்ற ஒரு புத்தகத்தை எழுதுவதற்கான மன உறுதியும் சமூகப் பொறுப்பும் குற்ற உணர்வின் உறுத்தல்களும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஐரோப்பியர்களின் நீண்டகாலச் சுரண்டலில் இந்திய உடல்களும் விளைச்சல்களும் மட்டுமே கொள்ளையிடப்பட்டன. ஆனால், அமெரிக்கர்கள் நமது மூளைக்குள் குடியேறி நம் இருப்பை, எதிர்காலத்தைப் பேரம்பேசி எடுத்துக்கொள்கின்றனர். இது ஒருவகை அரூபத்திருட்டு. இதை யார் எங்கே, எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதையெல்லாம் யாராலும் தெளிவாக உணர முடியாது. ஆனால், இது நடந்துகொண்டே இருக்கும். நம்மை விற்பதைப் பரவசத்தோடு நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்; ஊக்குவித்துக்கொண்டிருக்கிறோம். இது வினோதமானதல்ல. நம் ரத்தத்தில் ஊறிக்கிடக்கும் அடிமைக் குணத்தின் இயல்பான செயல்பாடு என்றே இதை எடுத்துக்கொள்ளவேண்டும். இது சராசரி இந்தியனுக்கு மட்டுமல்ல, அறிவுஜீவி எனக் கூறிக்கொள்ளும் பல தமிழ் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக ஊதிப்பெருக்கப்பட்ட செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் பணவீக்க விகிதம் உயர்ந்துகொண்டே போகிறது. இது இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தையும் நுகர்வுப் பொருள்களின் வணிகத்தையும் இலக்காகக்கொண்டது. விவசாய வளர்ச்சியானது தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்றால், நம் பணத்தின் யோக்யதையை அணுசக்தி ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்பட்ட பிறகு பார்க்கலாம். தெற்காசியாவில் அமெரிக்க மேலாண்மையைக் கேள்விகளே இல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
-
இந்த அமெரிக்கமயப்படுத்துதல் மத்தியில் உள்ள காங்கிரஸின் சுதந்திரத்திற்கு முந்தைய தேசம் - தேசியம் என்னும் கருத்தாக்கம் திரிந்துபோனதன் அடையாளமே. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் தேசம் - தேசியம் குறித்த அக்கட்சியின் நிலைபாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தனியே பரிசீலிக்கப்பட வேண்டியவை. முந்தையது விடுதலை வேட்கை யூட்டப்பட்ட இந்தியச் சாமான்ய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தது என்றால், பிந்தையது முதலாளித்துவத்தின் வளர்ச்சியால் பலவீன முற்றிருந்த நிலக்கிழார்கள், ஜமீன்கள், முடிதுறந்த மன்னர்கள், சிவில் புரோக்கர்கள் போன்றவர்களின் மீது அக்கறைகொண்டது எனச் சொல்லலாம். இன்னும் கூர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், இவர்கள் அம்பேத்கரை எங்கே கழட்டிவிட வேண்டும் என்பதை அறிந்த புத்திசாதுர்யம் மிகுந்தவர்கள்.
-
91இல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளவாதத்தின் பாதிப்புகள் மிக வெளிப்படையானவை. ஒருபுறம் 'இழவு வீட்டின் நாட்டாமை'யான நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசின் பெரும்பான்மை அரசு அதன் உயர்சாதியினரிடையிலான அதிகாரப் போட்டிகளில் சிக்கித் திணறிக்கொண்டிருந்தது. அப்பொழுது அதிகார பீடங்களில் வீற்றிருந்த அர்ஜுன் சிங், சரத்பவார் போன்ற ராஜஸ்தான் ஜமீன்தார்கள், ராஜபுத்திரர்கள், மத்தியப் பிரதேசக் குறுநில மன்னர்கள், பீகாரிய அடிமை வியாபாரிகள், முன்னாள் உலக வங்கி மானேஜர், செட்டிநாட்டு ராஜா எனப் பரம்பரைக் கொழுப்பேறிகள் சேர்ந்துகொணர்ந்த புதையல்தான் 91இன் தாராளவாதம். ஆனால், காங்கிரஸின் அமெரிக்கச் சார்பு நிலையே, தாராளவாதம் இங்கே அனுமதிக்கப்படுவதற்கு முக்கியமான ஒரே காரணம்.
-
நரசிம்மராவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசுகள் தாராளவாதத்தை அமல்படுத்துவதற்கான அடித்தளங்களை ஐந்தாண்டுத் திட்டங்களின் வடிவில் படிப்படியாக உருவாக்கி வைத்திருந்தன. குறிப்பாகப் பசுமைப் புரட்சி. இருபத்தைந்தாண்டுப் பசுமைப் புரட்சி இந்திய விவசாயிகளுக்கும் நிலத்திற்குமான உறவை ஆட்டங்காணச் செய்துவிட்டது. "பேராசைமிக்க பிச்சைக்காரர்களான" மிடில் கிளாஸ் வர்க்கத்தினரை உருவாக்குவதில், அவர்களை நிர்வகிப்பதில், ஓட்டுவங்கியாக்கி அதிகாரத்தைத் தக்கவைப்பதில் மின்சாரத்தின் பங்கு அளப்பரியது. மின்சாரம் பரவலாக்கப்பட்ட பின் அதன் உற்பத்தியையும் விநியோகத்தையும் கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் மூலம் சுரண்டலை நிரந்தரமாக்குதல் இவைதாம் பொருளாதார அடியாள்களும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள். பின்தங்கிய நாடுகளுக்குள் ஆலோசகர்களாகவும் நலம்விரும்பிகளாகவும் ஊடுருவுவது, மின் உற்பத்தி மற்றும் எண்ணெய் வளங்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிவது, அவற்றின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் பொய்யான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பேராசைகளை மூட்டுவது, ஒப்பந்தக்காரர்களை அடையாளங்காட்டுவது, கடன் பெற்றுத்தருவது பிறகு அந்நாடுகளை மீள முடியாத கடனில் மூழ்கடித்துத் தம் சுரண்டலுக்கான வேட்டைக்காடாக்குவது போன்றவைதாம் பொருளாதார அடியாள்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்குமிடையேயான உறவின் வலைப் பின்னல்.
-
தெளிவாகவும் எளிமையாகவும் இவ்வலைப் பின்னலை விளக்கியிருக்கிறார் ஜான் பெர்கின்ஸ்.
-
உள்கட்டுமானங்கள், தங்கநாற்கரச் சாலைகள், மேம்படுத்தப்பட்ட எரி சக்தித் திட்டங்கள், பிரதமர்களின் யோஜ்கார்கள், எல்லோருக்கும் செல்போன் எனப் பாமரனுக்கும் அந்த ஆசைகளை மூட்டுவதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் தலைவர்கள். இந்தியாவில் இதற்கான அடித் தளங்களை உருவாக்கித் தந்ததில் பிஜேபி போன்ற வலதுசாரிகளுக்கும் அடல்பிகாரி வாஜ்பாய் போன்ற 'விவேக'மான தலைவர்களுக்கும் பெரும் பங்குண்டு. இன்று நுகர்வுச் சந்தையைக் கைப்பற்றுவதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் தமக்குள் அசுரத் தனமான போட்டிகளில் இறங்கியுள்ளன. அவர்களுக்கு ஏதுவாக இந்தியா முழுமையும் பொருளாதார தாதாக்களின் ஆட்சி செவ்வனே நடைபெறுகிறது. இதில் இந்தியக் கம்யூனிஸ்டுகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை மேற்குவங்கத்தில் பார்க்கலாம்.
-
இத்தகைய சூழலில் பெருமுதலாளிகளும் முதலீட்டு மாமாக்களும் பொலி காளைகளிடம் உயிரணுச் சேகரிப்பது போல, நுகர்வு என்றும் சுயபுணர்ச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும்போதே, இப்புத்தகத்தை வாசிப்பது தனிமனிதனுக்குத் தன் சுயநிர்ணயத்தில் பாரிய மன உளைச்சலை உருவாக்குகிறது. பல உடைப்புகளை ஏற்படுத்தும் சாத்தியமுள்ளது என்றாலும், இது தமிழ்ச் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டிவிடும் என்றெல்லாம் கருத முடியாது. ஆனால், குறைந்த அளவிலாவது பலவித இருண்மைகளிலிருந்து சமூகத்தின் மைக்ரோயூனிட்டான தனித்தன்னிலையை வெளி யேற்றிக்கொள்ள உதவும். இல்லையெனில் மீடியா, தொழில், குடும்பம் என்பவற்றின் மட்டகரமான சமூக விலங்காக மாறிப் போலி வெறி இன்பத்தில் மூழ்கும் திறனற்ற மூடனாகவோ அல்லது கடவுளுக்கு நிகர்த்தவனாகவோ மாற்றிவிடக்கூடும். இது இந்த ஒரு புத்தகத்தால் நேரக் கூடியதா என்று வியக்க வேண்டாம். மேம்படுத்தப்பட்ட பல புத்தகங்களின் ஒரு நிலை.
-
தனிநபராகத் திறனற்ற இந்தியக் கும்பலானது ஒருமித்து மோசமான வன்முறை சம்பவிக்கையில் அது தற்காலிக அதிகாரப் பரப்பாக மாறுகிறது. இந்தக் கூட்டெழுச்சி அறங்களின் பாலானதாக அமைவதில்லை. மாறாக எதிர்ச்செயல் ஊக்கியாகவே வினையாற்றுகிறது. இதற்குப் பல உதாரணங்களை அடுக்க முடியுமென்றாலும், சேதுக் கால்வாய் நல்ல சான்று. ஒருபுறம் வடக்கில் சிதறுண்ட இந்துத்துவவாதிகளை மீண்டும் ஒருங்கிணைக்க ஒரு வாய்ப்பாகவும் அதுவே தமிழகத்தில் காலாவதியான திராவிடக் கனவுகளைத் திரட்டி எழுச்சியடையச் செய்யும் வாய்ப்பாகவும் அமைந்தது. சேதுக் கால்வாய் பீட்டர்ஸ் சாலை மேம்பாலம்போல உதவாக்கரையான ஈகோ மாத்திரமே. நமது திராவிட உடன்பிறப்புகள் சொல் குறித்தோ 'மால்'வணிகம் குறித்தோ அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்தோ ஆசன வாயைக்கூடத் திறப்பதில்லை. ஏனென்றால், கல்வித் தந்தைகளாக அமெரிக்காவிற்கு உருப்படிகள் தயாரிக்கும் குடிசைத் தொழிலை நிர்வகிப்பவர்களில் பெரும்பான்மையான இவர்கள் நம்மை வழிநடத்தும்போது, நமது தனித்தன்னிலைகளை மீட்டுக்கொள்வதற்காக இது போன்ற புத்தகங்களில் பதுங்கிக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. ஏனென்றால், பணத்திற்கு வேலைபார்த்துக் காட்டிக்கொடுக்கும் ஜான் பெர்கின்ஸிற்கு இருக்கும் தெளிவோ அணுசக்தியைவிட மற்ற ஆற்றல்கள் தொழில்நுட்பரீதியில் உயர்ந்தவையாகவும் சிக்கனமாகவும் இருப்பதாகக் கூறும் தைரியமோ நமது ராசாக்களுக்கும் மானேஜர்களுக்கும் இல்லையென்பது நியாயங்கள் நிறைந்ததே.
-
இந்தியரீதியில் அறிவுத் துறையில், தொடர்புச் சாதனத்தில் பொருளாதார அடியாள்கள் நிரம்பி வழிகின்றனர். பொருளாதார அடியாள்களின் கை அரசியல் சூது, எண்ணெய் வளம், மின்சாரம், நுகர்வுப்பொருள் என்னும் அளவிலிருந்து இன்று பல நிலைகளுக்குத் தாவிவிட்டது. குடும்பச் சட்டம், தெய்வ வழிபாடுங்கூட அமெரிக்காவிற்குக் கட்டுப்பட்டுள்ளன. இருபதாண்டுகளுக்கு முந்தைய எம்.எஸ். உதயமூர்த்தி என்ற நபரை இன்னும் மறந்திருக்கமாட்டோம். தேவைப்படாத ஒன்றைப் பேசி அது தேவை என்னும் அவசியத்தை உருவாக்கி அமெரிக்காவிற்கு ஆள்பிடித்த நபர் அவர். இன்று இதுமாதிரி ஆள்கள் உள்மறைவாகச் செயல்படுகின்றனர். அமெரிக்கா இந்திய எண்ணெய் வளத்திற்காகவோ மின் நுகர்வுப் பொருள் விற்பனைக்காகவோ இல்லாவிட்டாலும் இந்தியாவின் அபரிமிதமான மனித வளத்திற்காகவும் மூளை உழைப்பிற்காகவும் (குறைந்த செலவினம்) தொடர்ந்து கலாச்சாரரீதியாகத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முயலும்.
-
புனைகதையாளனுக்குரிய சிரத்தையோடு ஜான் பெர்கின்ஸ் விவரிக்கும் நேர்த்தியில் சுரண்டல் குறித்த, கடனாளியாகும் தேசம் குறித்த துயரம் கவிகிறது. ஈக்வடர், கொலம்பியா, இந்தோனேஷியா, பனாமா, ஈராக், சவுதி, ஆப்கானின் நிலக்காட்சிகள், தேசங்களுக்குத் தரப்படும் மறைமுக நிதியுதவி ஆகியன ஒரே சீராக விவரணை செய்யப்படுகின்றன. லாப நோக்குமிக்க அரசியல்வாதிகளும் அவர்களால் அபாயத்தை உணராத அப்பாவி மக்களும் அடுத்தடுத்து வருகின்றனர். ராஸி, பிடல் போன்ற வெகுளி நண்பர்களும் அவர்களிடம் ஜானின் நடத்தையும் "மெய்ன்" சகாக்களோடு அவரது உறவும் அவரது இரட்டை வாழ்வின் பதிவுகள். கமலாங் இசையும் தலாங் பொம்மலாட்ட விவரிப்பும் பனாமாக் காமக்கிழத்திகளின் நடனமும் புஷ் பற்றிய (பக்: 115,116,117) குறிப்புகள், ஈக்வடர், பனாமா அதிபர்களின் மறைவு பற்றிய குறிப்புகள் தேர்ந்த எழுத்தாளனின் சமரசமற்ற பார்வையோடு உள்ளன. சவுதிகளின் பலியாட்டுத் தன்மை, ஓசாமாவின் நகர்வு, வியட்நாம் தோல்விக்கும் ஈராக் தோல்விக்குமான ஒற்றுமை, பல தேசங்களின் புவியியல், சூழலியல், அரசியல் பார்வையை அவரால் தரப்படுத்த முடிவது அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்களிலேதான். உலகத்தின் பிராந்தியக் கூறுகள் மற்றும் வரலாறு, இனவிவரம் போன்றனவெல்லாம் அமெரிக்க நூலகங்களுக்குக் கிடைக்கின்றன. பணத்திற்கு வேவு பார்க்கும் உள்ளூர் அறிவுத்திருடர்கள் நம்மோடு கமுக்கமாக இருக்கின்றனர் என்பதையே இது வெளிச்சமிடுகிறது.
-
இந்தப் புத்தகம் சார்ந்து நான் முன் வைத்துள்ளது ஒரு வாசிப்பு.
இதன் பல வாசிப்பு முறைகள் விவாதத்திற்குள்ளாகும்போது,
மேலும் பல விஷயங்கள் தெளிவுபெறும்.
இப்புத்தகம் தமிழில் விவாதத்திற்குரிய வரவாக வெளி வந்துள்ளது.
-
-----------------------
பழனிவேள்
காலச்சுவடு
-
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ராஜேஷ் , இது தமிழ் புத்தகமா இல்லை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழ் ஆக்கம் செய்ததா ? ஏன் கேட்கிறேன் என்றால் .. ஆங்கிலமாக (ஒரு வேளை) இருந்தால் அதன் பெயரை சொல்லுங்கள் . என்னால் இயலுமா என்று பார்கிறேன் ( நான் இருக்கும் இடம் அப்படி .. ). நீங்கள் நூல் ஆசிரியரின் பெயரை குறிப்பிடுங்கள் .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1186112ayyasamy ram wrote:
-
John Perkins
நூல் ஆசிரியர்
அய்யா , நலமா ? நான் புத்தகத்தை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தேன் . நீங்கள் சொல்லிவிடீர்கள் . ரொம்ப நன்றி அய்யா .
- Rajesh RKபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 08/01/2016
ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழ் ஆக்கம் செய்யப்பட்டது.அங்கிலதில் ( Confessions of an Econimic Hit Man ).
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்,John Perkins - Tamil Translation by R. Murugavel
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்,John Perkins - Tamil Translation by R. Murugavel
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1186132Rajesh RK wrote:ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழ் ஆக்கம் செய்யப்பட்டது.அங்கிலதில் ( Confessions of an Econimic Hit Man ).
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்,John Perkins - Tamil Translation by R. Murugavel
தகவலுக்கு நன்றி . நான் முயற்சி பண்றேன் .
- Chanthruபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 05/06/2016
அனைவருக்கும் வணக்கம் ,
எனக்கு "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற புத்தகம் PDF வடிவில் கிடைத்தால் தாருங்கள்.
நன்றி.
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1186105
எனக்கு "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற புத்தகம் PDF வடிவில் கிடைத்தால் தாருங்கள்.
நன்றி.
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1186105
- தமிழ்நேயன் ஏழுமலைபண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016
மேற்கோள் செய்த பதிவு: 1186105Rajesh RK wrote:அனைவருக்கும் வணக்கம் ,
எனக்கு "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற புத்தகம் PDF வடிவில் கிடைத்தால் தாருங்கள்.
இங்கே பதிவிட்டு உள்ளேன்
http://www.eegarai.net/t136156-topic
நன்றி.
“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”
எனது தளம்
http://ezhumalaimfm.blogspot.in/
- தமிழ்நேயன் ஏழுமலைபண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016
“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”
எனது தளம்
http://ezhumalaimfm.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|