புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_m10லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 4:52 pm

First topic message reminder :

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையை வாங்குபவனைப் பிழைக்கத் தெரிந்தவன் என்று இவ்வுலகம் கூறுகிறது . மாறாக
நீதி ,நேர்மை , தர்மம் என்று பேசிக்கொண்டு , வேலையற்றுத் திரிபவனை , பிழைக்கத் தெரியாதவன் என்று இவ்வுலகம் ஏசுகிறது . இவற்றில் எது சரி ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jul 10, 2015 3:39 pm

தவறு. கைப்புண்ணுக்கு கண்ணாடியா..

வறுமையை காரணம் காட்டி, அல்லது வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற காரணம் காட்டி உடலை வைத்து பிழைப்பது சரியா தவறா என்ற கேள்விக்கு என்ன விடை கூற இயலுமோ அதே விடை தான் இதற்கும்.

பலர் செய்வதால் தவறு சரியெனப் படுகிறது.







சதாசிவம்
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Thamaraiselvi
Thamaraiselvi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/07/2015

PostThamaraiselvi Fri Jul 10, 2015 4:25 pm

திறமையை அங்கீகரிக்கும் இடத்தில் வேலை செய்யலாம். தனியார் நிறுவனங்கள் திறமை உள்ளவர்களையே தேடுகிறது. நல்ல சன்மானமும் தருகிறது . பின் நம் திறமையை வளர்த்து கொள்வதில் என்ன தயக்கம்?

லஞ்சம் தவிர்ப்போம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 10, 2015 4:30 pm

Thamaraiselvi wrote:திறமையை அங்கீகரிக்கும் இடத்தில் வேலை செய்யலாம். தனியார் நிறுவனங்கள் திறமை உள்ளவர்களையே தேடுகிறது. நல்ல சன்மானமும் தருகிறது . பின் நம் திறமையை வளர்த்து கொள்வதில் என்ன தயக்கம்?

லஞ்சம் தவிர்ப்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1150213

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 10, 2015 5:59 pm

மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
-
24 வயதில் திருமணம், 32 வயதில் குழந்தைக்கு
பெற்றோர் ஆவது இளைஞர்களின் கனவு...
-
32 வயது முடிந்தும் வேலை கிடைக்காததால்
திருமணமும் முடிக்க இயலாத இளைஞர்கள்
லஞ்சம் கொடுத்தாவது வேலை வாங்க
முயற்சிப்பதில் தவறே இல்லை...!!
-
தமிழை படி படி என்று தலைவர்கள் சொன்னதால்
தமிழில் புலவர் பட்டம் பெற்ற ஒருவர், 35 வயது
ஆகியும் வேலை கிடைக்காமல் தவித்தார்....
-
பின்னர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை
தனியார் பள்ளியில் கடைகோடி தென்மாவட்டத்தில் வாங்கினார்....
-
ஓரிரு ஆண்டுக்குப்பின்னர், அவர் கேட்ட மாவட்டத்திற்கு மாற்றி கொடுத்தார்கள்...
-
அதன் பின்னரே திருமணத்திற்கு தகுதி பெற்றவரானார்...!!!
-
ஆகவே இயலாத இடத்து கையூட்டு (அதை
வாங்குபவர்கள் அப்படி சொல்வதில்லை)
அதாவது [color:bbac=#FF0000]நன்கொடை கொடுத்து வேலை வாங்குவது
தவறில்லை...!!!
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 12, 2015 11:50 am

M.Jagadeesan wrote:என்னுடைய கேள்வி லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா தவறா ? என்பது மட்டுமே ! பிறவகையான லஞ்சங்களைப் பற்றி இப்போது நாம் பேசவேண்டாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1149976

என்னை பொறுத்த வரை ரொம்ப தப்பு...............ஒருவரின் நியாயமான வேலையை பணம் தந்து மற்றவர் தட்டிப் பறிப்பதாகவே அர்த்தம்..............அதை செய்யக்கூடாது............ கூடாது கூடாது கூடாது சதா சிவம் சொல்வது போல நிறைய பேர் செய்வதால் தப்பு சரியாகாது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 27, 2015 3:57 pm

நடுவர் தீர்ப்பு :
==========
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா அல்லது தவறா ? என்பது தலைப்பு .

லஞ்சம் கொடுத்து வேலையைப் பெறுவதில் தவறில்லை என்று வேல்முருகன் , அய்யாசாமி ராம் , தமிழ்நேசன் ஆகிய மூவரும் தங்கள் வாதங்களை எடுத்து வைத்துள்ளனர் . ஆனால் ஷோபனா சகஸ் , தாமரைச்செல்வி , சதாசிவம் , கிருஷ்ணம்மா ,இரமனியன் ஆகிய ஐவரும் , லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவது தவறு என்று தங்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர் .


வேலையில்லாமல் இருப்பதைவிட ,லஞ்சம் கொடுத்து , ஒரு வேலையைப் பெறுவதில் தவறில்லை ; ஆனால் வேலையைப் பெற்றபின் லஞ்சம் வாங்குவது கூடாது என்று வேல்முருகன் கூறுகிறார் . இது எப்படி சாத்தியமாகும் ? இரண்டு லட்சமோ , மூன்று லட்சமோ லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவன் , அதை மீண்டும் வசூல் செய்வதில்தான் குறியாக இருப்பான் . ஒருதடவை லஞ்சம் வாங்கி ருசி கண்டுவிட்டால் , மீண்டும் மீண்டும் லஞ்சம் வாங்கவே தோன்றும் . ஆகவே லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவன் ,பணிக்கு வந்தபின்பு , லஞ்சம் வாங்கக் கூடாது என்ற வாதம் சரியானதாக எனக்குப் படவில்லை .

திறமையும் , அறிவும் இருந்தால் , எல்லாம் தானாகவே கிடைக்கும் . லஞ்சம் கொடுப்பது தவறு என்பது ஷோபனா சஹஸ் அவர்களின் வாதம் . திறமையும் , அறிவும் இருந்தால் வேலை தானாகவே கிடைக்கும் என்பது தனியார் துறையில் வேண்டுமானால் சாத்தியமாகலாம் . ஆனால் அரசுத் துறையில் ஒரு வேலை கிடைக்கவேண்டுமானால் , லஞ்சம் கொடுக்காமல் முடியாது என்பது வேதனையான உண்மை . ஒரு ஓட்டுனர் வேலைக்குக் கூட இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்பதே உண்மை .

தாமரைச் செல்வி அவர்களும் " லஞ்சம் தவிர்ப்போம் " என்றே கூறுகிறார் . திறமை உள்ளவர்களையே தனியார் நிறுவனங்கள் தேடுகின்றன .எனவே நாம் திறமையை வளர்த்துக் கொண்டால் வேலை தானாகவே கிடைக்கும் என்பது இவரது வாதம் .

பணத்தை கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை வளர்ந்து கொண்டே வருகிறது. இனி திறமை இருந்தாலும் பணம் கொடுத்தால் மட்டுமே அரசு வேலை.. இந்த நிலை மாறுவது கடினம். அரசு வேலை வேண்டும் என்று நினைப்பவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பணம் கொடுக்க தயாராக இருக்கவேண்டும்..இது வருத்தத்திற்குரிய நடைமுறையில் இருக்கும் உண்மை என்பது திரு . தமிழ்நேசன் அவர்களின் வாதம் .

வறுமையை காரணம் காட்டி, அல்லது வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற காரணம் காட்டி உடலை வைத்து பிழைப்பது சரியா தவறா என்ற கேள்விக்கு என்ன விடை கூற இயலுமோ அதே விடை தான் இதற்கும். பலர் செய்வதால் தவறு சரியெனப் படுகிறது. லஞ்சம் கொடுத்து வேலையைப் பெறுவது என்பது வறுமையைக் காரணமாகக் காட்டி விபசாரம் செய்வதற்குச் சமம் என்று கடுமையாகச் சாடுகிறார் திரு .சதாசிவம் அவர்கள் . "பலர் செய்வதால் ,ஒரு தவறு சரியாகாது " என்ற இவரது கருத்து ஆழ்ந்து சிந்திக்கத் தகுந்தது .

கிருஷ்ணம்மா அவர்களும் சதாசிவம் சொன்ன கருத்தையே ஆதரிக்கிறார் . லஞ்சம் கொடுத்து வேலை வாங்குபவன்  , ஒருவரின் நியாயமான வேலையைத் தட்டிப் பறிக்கிறான்  என்ற இவரது கருத்தும் சிந்திக்கத் தகுந்தது .

அய்யாசாமி ராம் அவர்கள் வாழ்வியல் உதாரணம் ஒன்றைத் தருகிறார் .

-தமிழை படி படி என்று தலைவர்கள் சொன்னதால்தமிழில் புலவர் பட்டம் பெற்ற ஒருவர், 35 வயதுஆகியும் வேலை கிடைக்காமல் தவித்தார்....பின்னர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலைதனியார் பள்ளியில் கடைகோடி தென்மாவட்டத்தில் வாங்கினார்....-ஓரிரு ஆண்டுக்குப்பின்னர், அவர் கேட்ட மாவட்டத்திற்கு மாற்றி கொடுத்தார்கள்...அதன் பின்னரே திருமணத்திற்கு தகுதி பெற்றவரானார்...!!!-ஆகவே இயலாத இடத்து கையூட்டு (அதைவாங்குபவர்கள் அப்படி சொல்வதில்லை)அதாவது நன்கொடை கொடுத்து வேலை வாங்குவதுதவறில்லை...!!! என்றுசொல்கிறார் அய்யாசாமிராம் அவர்கள் .


முடிவுரை :
========
மனிதன் தான் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தவே முயல்கிறான் . ஒருபொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்துபவன் , " ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கின்றனர் " எனவே நான் ஒரு பொய் சொல்வதில் தவறில்லை என்று கூறுகிறான் . கூடவே வள்ளுவரையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறான் . நல்ல செயல் செய்வதற்குப் பொய்  சொல்லலாம் என்று வள்ளுவரே கூறியிருக்கிறார் என்று சொல்கிறான் .

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் . ( வாய்மை -30 )

பொது நலத்திற்காக , ஊர் மக்களின் நன்மைக்காக ஒருவன் பொய் சொல்வதில் தவறில்லை . அந்தப் பொய்யும் உண்மையின் பாற் பட்டதாகும் . என்பதே இக்குறளின் உண்மையான பொருள் .

தன் சுயநலத்திற்காக ஒருவன் பொய்  சொல்லக்கூடாது . பொய்யை வள்ளுவர் என்றுமே சிறப்பித்துக் கூறியதில்லை . " பொய்மையும் "என்ற சொல்லின் இறுதியில் உள்ள " உம் " இழிவு சிறப்பு உம்மையாகும் . ஆகவே எல்லா இடத்திலும் , எல்லா நேரத்திலும் ஒருவன் பொய் சொல்லலாம் என்ற பொருளிலே இக்குறளை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது .

"லஞ்சம் " என்றசொல் திருக்குறளில் இல்லையென்றாலும் , " நடுவிகந்தாம் ஆக்கம்  " என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார் . நடுவிகந்தாம் ஆக்கம் என்றால் " தீய வழியில் வந்த பொருள் " என்பதாகும் .

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். ( நடுவு நிலைமை -113 )

அநீதி செய்து பிறரை வருத்திப் பெற்ற செல்வம் நன்மை செய்யாது ; தீமையே செய்யும் என்பதை விளக்க " நன்றே தரினும் என்றார் "ஆகையால் அநீதியால் வரும் செல்வத்தை வீட்டினுள் நுழைய விடலாகாது என்ற குறிப்புத் தோன்ற " அன்றே ஒழிய விடல் "என்றார் .
பலர் செய்வதால் ஒரு தவறை நியாயப்படுத்த முடியாது . ஒரு ஊரில் 1000 பேர் வசிப்பதாக வைத்துக் கொள்வோம் . அதில் 800 பேர் குடிகாரர்கள் என்றால் , குடிப்பது நல்ல பழக்கம் என்று சொல்லமுடியுமா ? அதுபோலத்தான் லஞ்சம் வாங்குவதும் . பெரும்பாலான அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் ; ஆகவே நாமும் வாங்குவோம் என்ற வாதம் சரியல்ல ! அதேபோல பெரும்பாலான இளைஞர்கள் லஞ்சம் கொடுத்து வேலை வாங்குகிறார்கள் ; ஆகவே நாமும் லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவோம் என்ற வாதமும் தவறானது . தவறான நடைமுறைகள் நியாயப் படுத்தப்பட்டால் , நீதி நூல்களுக்கு வேலை இல்லை; அவற்றை தீயிலிட்டு எரித்துவிடலாம் . நீதி மன்றங்களை இழுத்து மூடிவிடலாம் .

எப்போதும் " உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே " என்ற உண்மையை நாம் மறக்கலாகாது . இதையே வள்ளுவர் " பண்புடையார் பட்டுண்டு உலகம் " என்று கூறுவார் . ஆகவே இந்த உலகம் இயங்குவது நல்லவர்களால் மட்டுமே . லஞ்சப் பேர்வழிகளால் இந்த உலகம் இயங்குவதில்லை . எனவே லஞ்சம் கொடுத்து ஒரு வேலை வாங்குவது , லஞ்சத்தை நாமே ஊக்குவிப்பது போலாகும் . உண்மையான திறமைசாலி ஒருவனுக்குக் கிடைக்கவேண்டிய வேலையைத் தட்டி பறிப்பது போலாகும் . ஆகவே லஞ்சம் வாங்குவதும் தவறு ; லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவதும் தவறு என்று தீர்ப்பளிக்கிறேன் . வணக்கம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 4:05 pm

//நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். ( நடுவு நிலைமை -113 )

அநீதி செய்து பிறரை வருத்திப் பெற்ற செல்வம் நன்மை செய்யாது ; தீமையே செய்யும் என்பதை விளக்க " நன்றே தரினும் என்றார் "ஆகையால் அநீதியால் வரும் செல்வத்தை வீட்டினுள் நுழைய விடலாகாது என்ற குறிப்புத் தோன்ற " அன்றே ஒழிய விடல் "என்றார் .
பலர் செய்வதால் ஒரு தவறை நியாயப்படுத்த முடியாது . ஒரு ஊரில் 1000 பேர் வசிப்பதாக வைத்துக் கொள்வோம் . அதில் 800 பேர் குடிகாரர்கள் என்றால் , குடிப்பது நல்ல பழக்கம் என்று சொல்லமுடியுமா ? அதுபோலத்தான் லஞ்சம் வாங்குவதும் . பெரும்பாலான அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் ; ஆகவே நாமும் வாங்குவோம் என்ற வாதம் சரியல்ல ! அதேபோல பெரும்பாலான இளைஞர்கள் லஞ்சம் கொடுத்து வேலை வாங்குகிறார்கள் ; ஆகவே நாமும் லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவோம் என்ற வாதமும் தவறானது . தவறான நடைமுறைகள் நியாயப் படுத்தப்பட்டால் , நீதி நூல்களுக்கு வேலை இல்லை; அவற்றை தீயிலிட்டு எரித்துவிடலாம் . நீதி மன்றங்களை இழுத்து மூடிவிடலாம் .

எப்போதும் " உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே " என்ற உண்மையை நாம் மறக்கலாகாது . இதையே வள்ளுவர் " பண்புடையார் பட்டுண்டு உலகம் " என்று கூறுவார் . ஆகவே இந்த உலகம் இயங்குவது நல்லவர்களால் மட்டுமே . லஞ்சப் பேர்வழிகளால் இந்த உலகம் இயங்குவதில்லை . எனவே லஞ்சம் கொடுத்து ஒரு வேலை வாங்குவது , லஞ்சத்தை நாமே ஊக்குவிப்பது போலாகும் . உண்மையான திறமைசாலி ஒருவனுக்குக் கிடைக்கவேண்டிய வேலையைத் தட்டி பறிப்பது போலாகும் . ஆகவே லஞ்சம் வாங்குவதும் தவறு ; லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவதும் தவறு என்று தீர்ப்பளிக்கிறேன் . வணக்கம் !//

அருமை அருமை அருமை ஐயா..........நல்ல விளக்கமான உங்கள் தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன் .....நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
வி. பொ. பா. புன்னகை ................................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 27, 2015 4:23 pm

அறிவுசார் அலசல் , ரசிக்கும் படியாக இருந்தது , Jagadeesan நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Tue Jul 28, 2015 11:03 pm

அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி .... லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ? - Page 2 103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 29, 2015 1:49 am

நல்ல தீர்ப்பு அய்யா . வாழ்த்துக்கள் . வி பொ பா ...

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக