புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
56 Posts - 50%
heezulia
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_m10போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸார் செய்யும் களவாணித்தனம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 17, 2015 4:18 pm


திருச்சி: ரயில்வே நிலையத்தில் போலீஸாரே பயணிகளின் செல்போனை திருடுவது தற்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த 14ஆம் தேதி இரவு மதுரையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், தனது வட இந்திய நண்பர் ரஞ்சித் சிங்குடன் சிவகாசி பாரதி நகரைச் சேர்ந்த கணேஷ்பாண்டி திருச்சி வந்திறங்கினார். நள்ளிரவில் பெரம்பலூர் செல்ல பேருந்துகள் இல்லை என்பதால், திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்பறையில் இரவு 1.15 மணிக்கு தனது சாம்சாங் கேலக்ஸி கிராண்ட் 2 மற்றும் இன்னொரு செல்போனையும் சார்ஜ் போட்டுள்ளார். கூடவே அவருடன் வந்த வடநாட்டு இளைஞர் தனது பவர் பேங்கையும் சார்ஜ் போட்டுள்ளார்.

அதன்பிறகு நடந்ததை நம்மிடம் விளக்கிய கணேஷ் பாண்டி, செல்போன்களை சார்ஜ் போட்டபிறகு ரொம்ப அசதியாக இருந்துச்சு. அந்த அறையில் சிசிடிவி கேமரா இருப்பதை கவனிச்சிட்டு, கொஞ்சம் நம்பிக்கையோடு கண்ணசந்தோம். சரியாக 2 மணியிருக்கும் கண்விழித்து பார்த்தபோது எங்க செல்போன், பவர் பேங்க் எதையும் காணவில்லை. என்னுடைய நம்பருக்கு போன் பண்ணி பார்த்தேன். சுவிட் ஆப் என வந்துச்சு. பிறகு பதறியடிச்சிக்கிட்டு ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர்கிட்ட செல்போன் காணாமல் போனதை புகார் செய்தேன். அனைத்தையும் கேட்ட அவர் உடனடியாக திருச்சி ரயில்வே போலீஸில் புகார் கொடுக்க சொன்னார். அதன்படி நானும் புகார் செய்தேன். அங்கிருந்த எஸ்.ஐ சுவாமிநாதன் என்பவர், என்கிட்ட செல்போன் காணாமல் போனது குறித்து விசாரித்தார்.

"அங்க ஏன் தூங்குன...? தூங்கிட்டு அதை காணும் இதைக்காணும்னு கம்ப்ளைன்ட் பண்ணுவீங்க. இதுவே உங்களுக்கு வேலையா போச்சு...ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக்கொடுங்க!" என சொல்லிக்கிட்டே, அந்த போன் எவ்வளவு, எப்ப வாங்கினீங்க என்று என்னிடம் விசாரித்தார். அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் அவர் மீதே எனக்கு சந்தேகத்தை வர வைத்தது. இந்த போலீஸ்காரங்களே எடுத்துக்கிட்டு நாடகம் ஆடுறாங்களான்னு நினைக்க தோணுச்சு.

சுதாரித்துக்கொண்டு உடனே சார்," நான் ஆம் ஆத்மி கட்சியின் பெரம்பலூர் ஒங்கிணைப்பாளராக இருக்கிறேன் அதுமட்டுமல்லாமல் எம்.எஸ்.சி., ஐடி படிச்சிருக்கிறேன். எனக்கு உடனடியாக அந்த அறையில் இருந்த 1.15 முதல் 2 மணிவரை பதிவான சிசிடிவி காட்சிகளை காட்டுங்க. எங்களுடைய செல்போனை திருடியவனுடைய அடையாளம் தெரிந்துகொண்டு நான் கோர்ட்டில் முறைப்படி பார்த்துக்கிறேன். இந்த பிரச்னையை என்ன செய்றதுன்னு தெரியும்" என்றேன். அதுக்கு அந்த எஸ்.ஐ, " அங்க சிசிடிவி எல்லாம் ஒர்க் ஆகல. அப்படி வீடியோ பதிவாகியிருந்தாலும் அதையெல்லாம் உங்ககிட்ட காட்ட முடியாது" ன்னு சொல்லி சமாளித்தார். விடாமல் நான் பிரச்னை பண்ணவே, நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின்னர், இரண்டு பெண் போலீஸை கூப்பிட்டு சிசிடிவி கேமிராவை பார்க்க சொன்னார்.

இது நடந்து கொண்டிருக்கும்போதே, என்னுடைய செல்போன் நம்பருக்கு ரஞ்சித் சிங்கின் நம்பரில் இருந்து போன் செய்தபோது, அதுவரை சுவிட்ச் ஆப்பில் இருந்த என்னுடைய போன் நம்பர், திடீரென ரிங் ஆனது. அதில் பேசிய நபர், "உங்க போன் போலீஸ் ஸ்டேசன்லதான் இருக்கு. வந்து வாங்கிட்டு போங்க!" என்றார்.

உடனே போனை வாங்கிக்கிட்டு, மீண்டும் நான், "என்னுடைய செல்போனை திருடியவர்களை பார்க்கனும் அந்த சிசிடிவி வீடியோவை காட்டுங்கள்" என்றேன். "உங்க போன் கிடைச்சிருச்சி, அப்புறம் ஏன் பிரச்னை பண்ணுறீங்க. போங்க தம்பி..!" என்றார்கள். கடைசிவரை அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை காட்டவே இல்லை.

ஆனால் யூனிபார்மில் இல்லாத போலீஸ்காரர் ஒருவர், அருகிலிருக்கும் சில பேரிடம் "சொல்லாமல் எடுத்தது என் தவறுதான்!" என மன்னிப்பு கேட்டார். அங்கிருந்த காவலர்கள், "உங்க போனை திருடர்கள் எடுத்துக்கிட்டு போயிடக்கூடாதுன்னுதான் நாங்கள் எடுத்து வந்தோம். நீங்கள் கேட்கும்போது தந்துவிடுவோம்!" என்றெல்லாம் பேசி என்னை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள். பிறகு அந்த காத்திருப்பு அறைக்கு போய் அங்கிருந்த பயணிகளிடம், "இங்குள்ள காவலர்களிடம், ஜாக்கிரதையாய் இருங்கள்!" என்று சொல்லிவிட்டு வந்தேன். கடைசி வரை அந்த செல்போனை இவர்கள் எடுத்தார்களா, இல்லை திருடர்கள் துணையுடன் எடுத்தார்களா என தெரியவில்லை.

அங்கிருந்து வரும்போது என் வட இந்திய நண்பன், "கணேஷ்... உங்க ஊர்ல, போலீஸ்காரங்களே திருடுறாங்க. நீ இப்படி சண்டைபோடலைன்னா செல்போன் போயிருக்கும்ல என்றான்" என முடித்தார் காட்டமாக..

இது குறித்து கேட்க காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டோம். போனை எடுக்கவே இல்லை. நேரில் கேட்கபோனோம். சார் வெளியில் போயிருக்கிறார் என்றே பதில் வந்தது.

பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வந்துபோகும் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் போலீஸார் செய்யும் இந்த களவாணித்தனத்திலிருந்து மக்களை காப்பது யாரோ...?

கொஞ்சம் கவனமாக இருங்க மக்களே...!

-சி.ஆனந்தகுமார் @ விகடன்




போலீஸார் செய்யும் களவாணித்தனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 17, 2015 4:32 pm

அநியாயம் அநியாயம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 6:12 pm

என்ன கொடுமை சார் இது.
வேலியே பயிரை மேய்வது இதுதானா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Jun 18, 2015 7:59 am

சார் இந்திய ரயில்வேயில் நடக்கும் பாதிக்கு மேலான கொள்ளைகளும் இந்த ரயில்வே போலிசே நடத்துகிறார்கள் இவர்களின் வாதம் என்ன வென்றால் மத்த போலீசார் கொள்ளையடிக்கும்போது நாங்கள் மட்டும் கையை கட்டி பார்த்துநிற்பதா?நாடு நன்றாக உருப்படும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 18, 2015 10:08 pm

திருடர்கள் கூட்டம் அதிகம் திருச்சியில் .
ஆல் இந்திய லெவலில் பெயர் பெற்றவர்கள் .
கடத்தி வந்த தங்கத்தை , கடத்தி செல்லும் , திருச்சி விமான நிலைய ,சுங்க அதிகாரிகள் .
கட்டு கட்டாக பணத்தை தேர்தல் காலத்தில் ,பஸ்ஸில் கடத்திய அரசியல்வாதிகள் .
திருச்சியில் இவர்கள் அதிகம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக