ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

Go down

அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம்  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Empty அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Tue Jun 16, 2015 4:57 pm

அமிழ்தினும் இனிது!
நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

வனிதா பதிப்பகம் : 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர்,
சென்னை – 600 017. பேச : 044 42070663 விலை : ரூ. 80
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
*****
நூலாசிரியர் கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் அவர்களின் அமிழ்தினும் இனிது நூல் பெயர் பொருத்தம் மிக நன்று. அமிழ்தினும் இனிய கவிதைகளை குழந்தைப் பாடல்களை வடித்துள்ளார். பாராட்டுக்கள். தமிழன்னைக்கு அணி செய்யும் விதமாக படைத்துள்ளார். தமிழே அறியாமல் இன்றைய குழந்தைகள் வளர்ந்து வருகின்றன. தமிழ்மொழி பற்றியும் பண்பாடு பற்றியும் நமது குழந்தைகளுக்கு கற்பிக்க உதவிடும் நூல். ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல். மிக எளிமையாகவும், இனிமையாகவும் பாடல்களை செதுக்கி உள்ளார்கள். படித்ததும் குழந்தைகள் மனதில் பதியும்படியாக செதுக்க உள்ளார்கள்.
முதல் கவிதை புதிய ஆத்திசூடி படித்தால் போதும் வாழ்க்கையில் கடைபிடித்தால் வாழ்க்கை சிறக்கும்.
புதிய ஆத்திச்சூடி!
அனுதினம் பள்ளி செல்
ஆசு நீக்கு
இனிக்கப் பேசு
ஈதல் சிறப்பு
உள்ளம் தூய்மை செய்
ஊக்கம் கொடு
எண்ணித் துணிக
ஏணி போல உதவு
ஐயம் போக்கு
ஒற்றுமையே உயர்வு
ஓதுதல் விலக்கேல்
ஒளவை வழி செல்.
குழந்தகளுக்கு அறிவு புகட்டும் விதமாகவும், சொற்களையும் அதற்குரியனவற்றையும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் பாடல் புனைந்து உள்ளார்கள்.
எறும்பைப் போல ...
கரும்பைப் போல நீயும் / இனித்திட வேணும் பாப்பா
எறும்பைப் போல நீயும் / உழைத்திட வேணும் பாப்பா
மானைப் போல நீயும் / துள்ளிட வேணும் பாப்பா
தேனைப் போல நீயும் / சுவைத்திட வேணும் பாப்பா
இன்றைய குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். பள்ளி முடிந்து வந்து விளையாடுவதற்கு நேரமே இல்லை. தனிப்பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி விடுகின்றனர். இரவாகி விடுகின்றது. உறங்கி விடுகின்றனர். வெளிஉலகமே தெரியாத கிணற்றுத் தவளையாகவே வளர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு விளையாடுக என்று அறிவுறுத்தும் விதமாக வடித்த பாடல் மிக நன்று.
முன்னின்று விளையாட்டை நடத்து!
மாலையில் விளையாடு தம்பி – நீ / மகிழ்வாக ஓடியாடு தம்பி!
வேளையில் பள்ளி செல் தம்பி – உனக்கு / வெறும் படிப்பு போதாது தம்பி காலையில் கடமைகள் தம்பி – நீ / கனிவாகச் செய்திடுவாய் தம்பி
வாழைபோல நன்மைகள் தம்பி – நீ / வளமாக செய்திடுவாய் தம்பி.!
மகாகவி பாரதியார் பற்றி குழந்தைகளுக்கு அறிவிக்கும் விதமாக வடித்த பாடல் ஒன்று மிக நன்று.
பாரதியாரின் கதை கேளு!
எட்டையபுரத்தில் பிறந்தவர் / எளிமை வாழ்வில் சிறந்தவர்
எட்டாவளர்ச்சி கவிதையில்
ஏழு வயதில் பாடினார்.
குழந்தைப்பாடல் இசைத்தவர் / குயிலின் பாட்டில் மகிழ்ந்தவர்
பழகும் பொருளை எல்லாமே / பாட்டில் கொண்டு வந்தவர்.
பாரதியாரின் இயல்பையும், பாடிய வரிகளையும் கண்முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் புலவர் இராம. வேத நாயகம்.
அறிவியல் அறிவும் குழந்தைகளுக்கு அவசியம் தேவை. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால் என்று யோசிக்க வைக்க உதவுவது அறிவியல். எனவே அறிவியல் குறித்தும் பாடியது சிறப்பு.
அறிவியலைப் படி!
அறிவியலைப் படி தம்பி – நீ / ஆற்றலையே பெறு தம்பி!
கருவிகளைப் பயன்படுத்தி – நீ / காரியங்கள் செய் தம்பி!
ஏவுகணை பார் தம்பி – நல் / ஏற்றம் தரும் தம்பி!
பாய்ந்து வரும் அணுகுண்டு / நம் பாரதத்தில் உண்டு தம்பி!
அறுவடைத் திருநாள் உழைப்பைப் போற்றும் திருநாள் இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழர் திருநாள் பொங்கல் பற்றிய பாடல் நன்று.
பொங்கல் நல்ல பொங்கலாம்!
பொங்கல் நல்ல பொங்கலாம் / புதுமையான பொங்கலாம்!
எங்கும் உள்ள தமிழரும் / ஏற்றிப் போற்றும் பொங்கலாம்!
புதிய பானை வைத்தே தான் / புதிய அரிசி போடுவர்!
விதமாய் மஞ்சள் சேர்த்தே தான் / வெற்றி கீதம் பாடுவர்!
ஒரு நூலகம் திறக்கும் போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படும் என்று பொன்மொழி உண்டு. ஊடகங்களின் வருகையின் காரணமாக வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து நூலகத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. குழந்தைகளுக்கு நூலகம் செல்லும் பழக்கத்தை பெற்றோர்கள் பழக்கி விட வேண்டும். நூலகம் பற்றிய கவிதை நன்று.
நூலகமே வழிகாட்டி!
நூலகமே வழிகாட்டி – நல்ல
நூல்களே
நூலகமே மதியூட்டி – நல்ல
நூல்களே கைகாட்டி.
மரபுக்கவிதையின் தனிச்சிறப்பு என்னவென்றால் எதுகை, மோனை, இயைபுடன் ஓசை நயத்துடன் படித்தால் மனதில் பதிந்து விடும். மரபுக் கவிதை விரும்பிகளுக்கு நல்விருந்தாக உள்ளது நூல். தமிழுக்கு அமுதென்று பேர் என்றார் புரட்சிக்கவிஞர் நூலாசிரியர் புலவர் இராம. வேதநாயகம் அவர்கள். அமிழ்தினும் இனிது எம் தமிழ் என்று பறைசாற்றி உள்ளார்.
நாளந்தா பல்கலைக்கழகம் என்பது ‘நாளும் தா’ என்ற தமிழ்சொல்லில் இருந்து வந்தது. காளி கோட்டம் என்ற தமிழ்ச்சொல்லே கல்கத்தா என்றாகி தற்போது கொல்கத்தா ஆனது. பட்டினம் என்ற தமிழ்ச் சொல்லே பாட்னா ஆனது. இப்படி பல தகவல் அடங்கிய ஆங்கில ஒளிக்காட்சி கண்டேன். தமிழன் என்று சொல்லுவோம், தலை நிமிர்ந்து நிற்போம் என்று சொல்லத் தோன்றியது. இந்த நூல் படித்து முடித்த போதும் அந்த உணர்வே தோன்றியது.
குழந்தைப்பாடல்கள் மூலம் குழந்தைகளுக்கு தமிழ்மொழி அறிவையும் பொது அறிவையும் வளர்த்து உள்ளார்.
மிதிவண்டி!
மிதிவண்டி நல்ல மிதிவண்டி / மிதமாய்ச் செல்லும் மிதிவண்டி
புதுவண்டி நல்ல புதுவண்டி / போகும் விரைந்தே புதுவண்டி
சிறுவர்கள் எல்லாம் ஓட்டிடலாம் / சிறுமிகளும் நன்றாய் ஓட்டிடலாம்
பெரியவர்கள் எல்லாம் ஓட்டிடலாம் / புதுமையான மிதி வண்டி.
இந்தப் பாடல் படிக்கும் குழந்தைகளுக்கு மிதிவண்டி பற்றிய அறிவு மனதில் பதிந்து விடும். மிதிவண்டியை மறக்க மாட்டார்கள்.
நூலாசிரியர் கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
*****



--
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» உதிர்த்த முத்துக்கள் ! (லிமரைக்கூ இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum