புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
1 Post - 4%
viyasan
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
21 Posts - 4%
prajai
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_m10விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2015 1:21 am


உங்களை பற்றிய விமர்சனங்களுக்கு பயப்படவேண்டாம். ஏன்என்றால் விமர்சனங்கள் உங்களை வலிமையாக்கும். விவேகமாக்கும். உங்களை நோக்கி வரும் விமர்சனங்கள் உங்களை மன உளைச்சலுக்குள்ளாக்கினாலும் மற்றவர்கள் பார்வையில் நீங்கள் மிக முக்கியமான நபராக மாறிவிட்டீர்கள் என்பதை குறிப்பிடுகிறது.

விமர்சனம் என்பது விமர்சிப்பவரின் இயலாமையை காட்டுகிறது. அவரால் முடியாததை நீங்கள் செய்து முடிக்கும் போது நீங்கள் விமர்சனத்துக்குள்ளாகிறீர்கள். எப்போதுமே பிரபலமானவர்கள் அநாவசியமாக அடுத்தவர்களை விமர்சிப்பதில்லை. அதற்கெல்லாம் அவர் களுக்கு நேரம் இருப்பதில்லை. மற்றவரை விமர்சிப்பவர்கள் மனதளவில் பலவீனமாக இருப்பார்கள்.

உங்களை நோக்கி வரும் விமர்சனத்தை நீங்கள் எதிர்கொள்வதும், ஜீரணித்துக்கொள்வதும், பதிலளிப்பதும் ஒரு கலை.

விமர்சனங்கள் ஒருபோதும் உங்களை காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள் நன்றாக வேலை செய்தாலும் விமர்சனம் வரும். வேலையே செய்யாவிட்டாலும் விமர்சனம் வரும். உங்களை சுற்றி பலர் இருக்கும்போது நீங்கள் விமர்சனங்களில் இருந்து விலகி இருக்க முடியாது. உங்களை பற்றி நான்கு பேர் விமர்சிக்கிறார்கள் என்றால், நாற்பது பேர் கண்களை உங்கள் செயல் உறுத்தியிருக்கிறது என்று அர்த்தம். உங்கள் மீதான எரிச்சலை அவர்கள் குறையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உங்களை விமர்சிப்பதன் மூலம் அவர்களுக்கு ஏதோ ஒருவித மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால் அவர்களது விமர்சனம் உங்களுக்கு விளம்பரத்தை தேடித்தருகிறது. உங்களை விமர்சித்து அவர்கள் உங்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

சிலருடைய விமர்சனம் உங்களை பாதிக்காது என்று விமர்சிப் பவர்களுக்கே தெரியும். ஆனாலும் தொடர்ந்து குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்களை நினைத்து நீங்கள் பரிதாபம்தான் படவேண்டும். ஏன்என்றால் அவர்கள், தங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு உங்களை கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களது குழந்தைகளையும், மனைவியையும் அவர்கள் கட்டாயம் கவனிக்கவேண்டும். ஆனால் அவர்களோ மனைவி, குழந்தைகளை மறந்துவிட்டு உங்களை கவனிக் கிறார்கள். அதனால் அவர்களது குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும். அவர்கள் தினசரி வேலைகளை மறந்துவிட்டு உங்களை கவனிக்கிறார்கள் என்றால், அந்த வேலையில் அவர்களது கவனம் இல்லாமல் போய்விடும். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது அவர்கள் முன்னேற்றத்துக்கு அவர்களே தடையாக இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை! அதனால்தான் அடுத்தவர்களை விமர்சித்துக்கொண்டே இருப்பவர்கள் காலம் முழுக்க விமர்சிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களால் விமர்சிக்கப்படும் நிலைக்கு வாழ்க்கையில் உயர முடியாது. குறை சொல்லியே வாழ்ந்து, குறை சொல்லியே மடிந்துபோவார்கள்.

மற்றவர்களை விமர்சித்துக்கொண்டே இருப்பவர்கள் முன்னேறமாட்டார்கள். மேலும் விமர்சனத்திற்குள்ளாகிறவரின் வளர்ச்சியையும் அவர்களால் தடுக்க முடியாது. நன்றாக பூத்து, காய்க்கும் செடிக்கு உரம் இடுவதைப் போன்றதுதான் விமர்சனமும்! அதை உரமாக எடுத்துக்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இருக்கவேண்டும். வென்னீராக எடுத்துக்கொள்ளும் மனநிலைக்கு சென்றுவிடக்கூடாது.

விமர்சனங்களை நீங்கள் ஒரு கலையாக கருதினால், அதை பற்றிய பயம் உங்களுக்கு போய்விடும். பயம் போய்விடும்போது, யார் விமர்சிக்கிறார்? என்பதை பார்க்காமல், விமர்சிக்கப்படும் கருத்து என்ன? என்பதில் கவனம் செலுத்த தொடங்கிவிடுவீர்கள். அப்போது உண்மையான அக்கறையோடு சொல்லப்படும் விமர்சனமா? அல்லது பொறாமையால் கிளப்பப்படும் குமுறலா? என்பது உங்களுக்கு தெரிந்துவிடும். உண்மையான அக்கறையுடன் சொல்லும் பயனுள்ள விமர்சனங்களை கேட்டு உங்களையே நீங்கள் திருத்திக்கொள்ளவேண்டும். தேவையற்ற விமர்சனங்கள் என்றால் அப்படியே அதை அலட்சியம் செய்திடவேண்டும்.

விமர்சனங்களால் ஒருவருடைய திறமையை யாராலும் அழித்துவிட முடியாது. ஆனால் பல தருணங்களில் விமர்சிக்கிறவர்தான் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறார்.

‘அமெரிக்கன் இன்டர்நேஷனல் கார்பரேஷன்’ அமைப்பின் தலைவர் மேத்யூ சீ ப்ரஷ் சொல்கிறார்:

‘‘என்னை விமர்சனம் செய்ய நினைக்கும் யாராக இருந்தாலும் என் முன்னே வந்து குற்றங்குறைகளை எடுத்து சொல்லட்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்துவிடுவேன். நான் விமர்சனங்களை வரவேற்கிறேன், அவை என் முன்னால் இருந்து வந்தால் மட்டும்! பின்னால் இருந்து வந்தால் அவைகளை நான் கண்டுகொள்ளவே மாட்டேன்..’’ என்கிறார்.

ஒருவர் உங்களை விமர்சிக்கிறார் என்றால், விமர்சிக்கும் நபருக்கு எந்த தகுதியும் தேவையில்லை. ஆனால் விமர்சிக்கப்படும் நீங்கள் தகுதியானவராக இருப்பீர்கள். காய்த்த மரம்தான் கல்லடிபடும். அதனால் விமர்சனங்களை நினைத்து சோர்ந்து போகாமல் அதனை பக்குவமாக கையாளத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவர் உங்களை விமர்சிக்கிறார் என்றால் அவர் கவனிக்கும் அளவுக்கு நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள் என்று அர்த்தம்.

ஒருவர் வாசனை அகர்பத்திகள் விற்பனை செய்து வந்தார். ‘‘இங்கு வாசனை அகர்பத்திகள் விற்கப்படும்’’ என்று பலகை எழுதி வைத்தார். அந்த வழியே வந்த ஒருவர் ‘இங்கு’ என்ற சொல் எதற்கு? தேவையில்லை என்றார். கடைக்காரரும் அந்த சொல்லை மட்டும் அழித்துவிட்டு மீதமுள்ள சொற்களை வைத்திருந்தார். அடுத்து வந்தவர் ‘அகர்பத்திகள்’ என்றாலே வாசனை என்று தானே பொருள். அப்படியானால் ‘வாசனை’ என்ற சொல் எதற்கு? என்றார். உடனே அந்த சொல்லையும் கடைக்காரர் அழித்துவிட்டார்.

இப்படி ஒவ்வொருவர் விமர்சனத்தையும் கேட்டு எல்லாவற்றையும் அழித்து விட்டார் கடைக்காரர். அப்போது அந்த வழியே வந்த ஒருவர் ‘ஏனப்பா.. உன் கடையை எங்கெல்லாம் தேடிக் கொண்டிருக்கிறேன். இங்கு வாசனை அகர்பத்திகள் கிடைக்கும் என்று ஒரு பலகை எழுதி வைத்தால் என்ன? ஏன் இந்த கஞ்சத்தனம்?’ என்று கேட்டார். கடைக்காரர் மண்டையை பிய்த்துக் கொண்டார்.

இப்படி எல்லா விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டால் மண்டையை பிய்த்துக்கொள்ளவேண்டியதுதான். எந்த விமர்சனம் சரியோ அதை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றவைகளை புறந்தள்ளிவிட்டு உங்கள் வேலையை மட்டும் கவனமாக பாருங்கள்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், சொந்த நாட்டிலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் காதுபடவே விமர்சித்தார்கள். எல்லாவற்றுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்தார்.

ஒரு முறை எட்வர்ட் எம் ஸ்டைன் என்பவர் ஆப்ரகாம்லிங்கனை பார்த்து ‘‘மகா முட்டாள்’’ என்று விமர்சித்தார்.

ஆப்ரகாம் லிங்கன் சிறிதும் பதற்றப்படவில்லை. ‘‘என்னை முட்டாள் என்று தெரிந்து வைத்திருக்கும் எட்வர்ட் அதி புத்திசாலி. ஆனால் ஒரு முட்டாள் வந்து தான் தங்களை வழிநடத்த வேண்டும் என்று அமெரிக்க மக்கள் தீர்மானித்து விட்டார்களே, நான் என்ன செய்வது!’’ என்றார்.

அந்த பதிலுக்கு, பதிலடியாக விமர்சனம் செய்ய முடியாமல் எட்வர்ட் தலைகவிழ்ந்தார். பின்பு ஆப்ரகாம் லிங்கனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அப்போதும் லிங்கன் விடவில்லை. ‘‘ஒரு முட்டாளிடம் ஒரு புத்திசாலி மன்னிப்பு கேட்பது அமெரிக்காவில் மட்டும்தான் நடக்கும்’’ என்றார் தமாஷாக!


இப்படி தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை நகைச்சுவையாக்கி, தூக்கிப் போட்டு தூள்தூளாக்க எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

தினத்தந்தி




விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Jun 15, 2015 7:33 am

மிகவும் அருமையான பகிர்வு ... தன்னம்பிக்கை ஊட்டும் மிக சிறந்த கட்டுரை .. விமர்சனங்களை எப்படி எடுத்துகொள வேண்டும் என்ற ஆபிரகாம் லின்கன் அவர்களின் உதாரணம் அருமை .. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்! 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக