புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
56 Posts - 50%
heezulia
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_m10திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திட்டிக் கொண்டே இருக்கிறேன்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 13, 2015 2:37 pm

First topic message reminder :

செந்தமிழ்த்தேனி இரா. மதிவாணன் அவர்கள் பொறுப்பு வகிக்கின்ற எல்லா இலக்கிய அமைப்பிலும் என்னை எதாவது பொறுப்பில் போட்டு வைத்து விடுவார். நானும் பொறுப்பெல்லாம் வேண்டாம். வெளியிலிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொல்வேன். ஆனால் அதெல்லாம் அவர் காதில் விழவே விழாது. அப்படித்தான் அலையன்ஸ் கிளப்பில் என்னை உறுப்பினர் ஆக்கினார். பிறகு சென்னை, தெற்குப் பகுதியின் எக்மோர் கிளையின் பொதுச்செயலாளர் ஆக்கினார்.  நான் ஓரிரு மீட்டிங் மட்டும் கலந்து கொண்டுள்ளேன்.

அன்று அப்படித்தான் “அம்மா அலையன்ஸ் கிளப்பின் இந்த ஆண்டின் முதல் மீட்டிங் திருப்பதியில்.ஒரு நாள்தான் வர முடியுமா?” என்றார். முடியாது என்று சொல்லத்தான் மனம். ஆனால் அப்படி சொல்ல வாய் வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால் வருகிறேன் என்றேன். மே 31 ஞாயிற்றுக்கிழமைதான் என்று சொன்னார். வேறு வழியின்றி சரி என்று கூறிவிட்டேன். மே 27 அன்று ஒரு மின்னஞ்சல். தொடர் வண்டி எண், பெட்டி எண், காலம் எல்லாம் போட்டு. முதல் நாள் இரவு அழைத்தும் சொல்லி விட்டார். காலையில் பேருந்தா தானியா என்று நினைத்துக் கொண்டே சாலிகிராமம் பேருந்து நிலையத்தில் இருந்து முதல் பேருந்தைப் பிடித்தேன். முதல் இருக்கையில் அமர்ந்தேன் சரியாக 5.55க்கு செண்ட்ரல் தொடர் வண்டி நிலையத்தில் அறிவிப்புப் பலகையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மதிவாணன் ஐயாவின் அழைப்பு. நுழைந்து கொண்டே இருக்கிறேன் என்றேன். ஏழாவது தடம் வாருங்கள் என்றார். சென்று அமர்ந்தேன். அப்போது உடன் வர இருந்த மற்ற நால்வரில் ஒருவரும் வரவில்லை. இருக்கையில் அமர்ந்து நலம் விசாரித்து முடிந்ததும் கூறுகின்றார். “உங்களை தென் பகுதி அலையன்ஸ் கிளப்பின் பி.ஆர். ஓவாக போட்டுள்ளேன்!!!” புன்னகைத்துக் கொண்டேன். வேறு என்ன செய்ய?

இப்போது நான் கூற வந்த செய்தி இது அல்ல.

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, பேருந்து வடபழனி வந்தவுடன் ஒரு பெரியவர் என் பேருந்தில் ஏறினார். முதல் இருக்கையாயிற்றே நான் அமர்ந்திருந்தது. அவரது குடை, , ஊன்று கோல், பை எல்லாவற்றையும் வாங்கி ஓரமாக வைத்து விட்டு நன்றாக அமருங்கள் நான் வேறு இருக்கையில் அமர்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்தேன் ஓக்காரும்மா. இங்கயே ஒக்காரும்மா என்று சொல்லி என்னைப் போக விடவில்லை.

சில்லரை பைசாவை வேட்டியின் முடிச்சிலிருந்து 5 ரூபாய் எடும்மா என்று என்னிடம் காட்டினார். எடுத்தேன். கையில் வைத்திருந்தேன். நடத்துநர் வந்தவுடன் கையைக் கையை நீட்டினார். நான் கையில் இருந்த காசைக் கொடுத்து விட்டேன். டிக்கட் வாங்கி விட்டு என்னிடம் ஏன் நீ வாங்கிக் கொடுக்கக் கூடாதா என்று ஒரு மிரட்டல். பின்பு பேச ஆரம்பித்தார்.

92 வயது. மூத்த மகள் சென்னையில் இருக்கிறாள். பார்க்க வந்தேன். மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். எப்ப வந்தாலும் இப்படி வந்து என்னை பஸ் ஏற்றி விட்டுச் செல்வார். (பத்து மணி வண்டிக்கு 5 மணிக்குப் பேருந்தில்)

விருது நகர் அருகில் ஒரு கிராமம். எனக்கு 10 இலட்சம் மதிப்புள்ள பெரிய வீடு. என் இரண்டாவது மகளை நெறைய செலவு பண்ணி எம். ஏ., பி.எட். படிக்க வைத்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தாள். வாத்தியாரா வேலை பாக்கறா. வீட்டை சரியாக் கட்டறேன்னு சொன்னா. கட்டுன்னு சொன்னேன். கட்டிட்டு பத்தரத்துல கையெழுத்துப் போடுன்னு சொன்ன. வேற வழியில்லாம போட்டுக் கொடுத்துட்டேன். என்ன வீட்டை விட்டே வெளியில தொறத்திட்டா.

இப்ப தெருவுல யார் யார் வீட்டு வாசல்லயோ படுத்துக்கறேன். நாலு நாள் தொடர்ந்து படுத்தா ஒனக்குத்தான் வீடு இருக்கே. இங்க ஏன் படுக்கறன்னு ஊர்க்காரங்க படுக்கக் கூட விடமாட்டேங்கறாங்க. ரெண்டு பேரப் பசங்க இருக்காங்க. ஒருத்தனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சி. அவங்க வீட்ல படுக்கவெல்லாம் வசதி இல்ல. இன்னொருத்தன் வேலை தேடிகிட்டு இருக்கான். அவன் ஹாஸ்டல்ல தங்கி இருக்கான். இராத்திரி சாப்பாடு மட்டும் ஒரு வீட்டிலிருந்து வரும். அதைச் சாப்பிட்டுட்டு ஏதாவது கெடச்ச வேலை செய்துகிட்டு இருக்கேன் என்று சொல்லிக் கொண்டே வந்தவர் எக்மோரை கோட்டை விட்டு விட்டார். நான் செண்ட்ரல் செல்ல வேண்டும். அவர் நானும் எக்மோர் என்று நினைத்தாராம்.

பிறகு என்ன செய்ய. அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டோம். இறங்கும் போது திரும்பவும் டிக்கட் எடுக்க என்னிடம் ஐந்து ரூபாய் இல்லையே என்று கூறிக் கொண்டே இறங்கினார். நானோ அவரது உடமைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ரூபாய் எடுத்துக் கொடுக்கும் அவகாசம் எனக்கு இல்லை.

அவர்களும் கூலிக்காரர்கள்தான். என் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரு பெண்மணிகள். தாத்தா தாத்தா என்று அழைத்து ஒரு ஐந்து ரூபாயை அவர் கையில் கொடுக்கும் போது பேருந்து புறப்பட்டு விட்டது. அவரை விட்டை விட்டுத் துறத்திய அவரது மகளையும் அவருக்கு ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து உதவ முடியாத என்னையும் இன்னும் என் மனம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

அந்தப் பெரியவர் யார் என்று பார்க்க வேண்டுமா?
திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 11391474_924469614261907_397047821981780867_n

இவர்தான்....
நானும் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பி சரியாக வரவில்லை. போட்டோவைப் பார்த்து விட்டு அனுப்பி வைப்பியா என்று குழந்தையாக அவர் கேட்டதும் இன்னும் என் மனக்கண்ணில்




திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Empty

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 15, 2015 11:08 am

Aathira wrote:
ராஜா wrote:சோகம் மிகவும் வருத்தமாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1145014
நீங்கல்லாம் இருக்கற தைரியத்துலதான் நானெல்லாம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இருக்கிறேன் ராஜா,
மேற்கோள் செய்த பதிவு: 1145016

என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க புன்னகை , நாங்கல்லாம் போயிட்டோம்னா புல்லு முளைத்து இருந்த இடம் தெரியாமல் ஆயிடுவோம். நீங்க அப்படியா புன்னகை தமிழ் இருக்கும் வரைக்கும் உங்கள் பெயரும் புகழும் இருக்கும் அக்கா.




(நான் நேற்று காலை கொஞ்ச நேரம் தான் ஈகரை வந்திருந்தேன் அலுவலக வேலையாக உடனே வெளியே போயிட்டேன்,இதுக்காக whatsappil மிரட்டுறது நல்லா இல்லை , தம்பி பாவம் அழுதுடுவான்)


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 15, 2015 1:31 pm

இவரை போன்ற பெரியவர்கள்(மனதிலும்) நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களை வாடவிடும் சிறியவர்கள்(மனதிலும்) இதே கொடுமையை அவர்களது பிள்ளைகலால் அனுபவிப்பார்கள் வெகு நிச்சயமாக இது நடக்கும். நடந்து கொண்டுதான் இருக்கிறது. உடம்பில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும் வரை இதை அவர்கள் உணரமாட்டார்கள். உடல் தளரும்போது கை கொடுக்க ஆளிருக்கமாட்டார்கள்..//

ஆம் தமிழ் நேசன். அடுத்தடுத்தும் முதுமைகள் அல்லல் படவேண்டாம்.



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 15, 2015 1:33 pm

பெற்றோரை காப்பாற்றும் காலங்கள் ,90% நம் தலை முறையுடன், முடிந்து விடும் என்ற எண்ணம் தான் மேலோக்கி நிற்கிறது . அதிக எண்ணிக்கையில் ,வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள்
அதற்கு சாக்ஷி .
சுயகாலில் நிற்கும் வரை நின்றுவிட்டு , உடல் நன்றாக இருக்கும் போதே , உயிர் ,பொட்டென, பிரிந்தால் , அதிர்ஷ்டசாலிகள் நாம் .
92 வயது முதியவர் ,ஐயோ பாவம் !
ஆதிரா , எடிட் செய்து , உங்கள் FB இல் போடலாமே !//

முகநூலிலும் போட்டிருக்கிறேன் ரமணியன் சார்



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 15, 2015 1:37 pm

பாவம் பெரியவர். மனதிற்கு கஷ்ட்டமாய் இருக்கிறது. அப்புறம் எப்படி போனாரோ ....

அவர் எதற்கு ஊருக்கு போகணும், அவர் மகள் வீட்டிலேயே தங்கியிருக்கலாமே... அந்த ஒரு ஜீவனுக்கா வீட்டில் இல்லாமல் பிபோய்விட்டது....? அவரின் தாய் மனம் அதை கூட தவறாக நினைக்கவில்லை.....//

ஐந்து ரூபாய் அப்பெண் கொடுத்து விட்டார் விமந்தனி. அவர் சென்று சேர்ந்து இருப்பார்



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 15, 2015 2:19 pm

Aathira wrote:பெற்றோரை காப்பாற்றும் காலங்கள் ,90% நம் தலை முறையுடன், முடிந்து விடும் என்ற எண்ணம் தான் மேலோக்கி நிற்கிறது . அதிக எண்ணிக்கையில் ,வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள்
அதற்கு சாக்ஷி .
சுயகாலில் நிற்கும் வரை நின்றுவிட்டு , உடல் நன்றாக இருக்கும் போதே , உயிர் ,பொட்டென, பிரிந்தால் , அதிர்ஷ்டசாலிகள் நாம் .
92 வயது முதியவர் ,ஐயோ பாவம் !
ஆதிரா , எடிட் செய்து , உங்கள் FB இல் போடலாமே !//

முகநூலிலும் போட்டிருக்கிறேன் ரமணியன் சார்
மேற்கோள் செய்த பதிவு: 1145344
Aathira wrote:பெற்றோரை காப்பாற்றும் காலங்கள் ,90% நம் தலை முறையுடன், முடிந்து விடும் என்ற எண்ணம் தான் மேலோக்கி நிற்கிறது . அதிக எண்ணிக்கையில் ,வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள்
அதற்கு சாக்ஷி .
சுயகாலில் நிற்கும் வரை நின்றுவிட்டு , உடல் நன்றாக இருக்கும் போதே , உயிர் ,பொட்டென, பிரிந்தால் , அதிர்ஷ்டசாலிகள் நாம் .
92 வயது முதியவர் ,ஐயோ பாவம் !
ஆதிரா , எடிட் செய்து , உங்கள் FB இல் போடலாமே !//

முகநூலிலும் போட்டிருக்கிறேன் ரமணியன் சார்
மேற்கோள் செய்த பதிவு: 1145344

நன்றி ,ஆதிரா .
இவர் முகம் , FB இல் உலா வரும் ,இவருடைய உறவுகளுக்கு/ நண்பர்களுக்கும் தெரிய வரும் .அதன் மூலம் பெரியவருக்கு நன்மை வரலாம் என்ற எண்ணத்தில் தான் தங்களை பதிவிட கூறி இருந்தேன் .
நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 15, 2015 8:11 pm

ராஜா wrote:
Aathira wrote:
ராஜா wrote:சோகம் மிகவும் வருத்தமாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1145014
நீங்கல்லாம் இருக்கற தைரியத்துலதான் நானெல்லாம்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ் இருக்கிறேன் ராஜா,
மேற்கோள் செய்த பதிவு: 1145016

என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க புன்னகை , நாங்கல்லாம் போயிட்டோம்னா புல்லு முளைத்து இருந்த இடம் தெரியாமல் ஆயிடுவோம். நீங்க அப்படியா புன்னகை தமிழ் இருக்கும் வரைக்கும் உங்கள் பெயரும் புகழும் இருக்கும் அக்கா.




(நான் நேற்று காலை கொஞ்ச நேரம் தான் ஈகரை வந்திருந்தேன் அலுவலக வேலையாக உடனே வெளியே போயிட்டேன்,இதுக்காக whatsappil மிரட்டுறது நல்லா இல்லை , தம்பி பாவம் அழுதுடுவான்)
மேற்கோள் செய்த பதிவு: 1145311
இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகத் திட்டம்........
அதெல்லாம் முடியாது   நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



திட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Tதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Hதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Iதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Rதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Aதிட்டிக் கொண்டே இருக்கிறேன்  - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக