புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத் தாமரைப் பெண்ணே!


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:23 pm

First topic message reminder :

வாழ்த்துரை

நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.

சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.

ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.

எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.

குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.

இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.

பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.

இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,

அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி


அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை

வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.

இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.

மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.

கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,

இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.

முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.

இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்

அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.


பதிப்புரை

எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.

கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,

எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,

எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.

அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.

கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.

இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,

அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்




 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:53 pm



ஜானி கண்சிமிட்ட, சுஷ்மா வெட்கப்பட, சுரேஷ் புன்னகைக்க, “ரொம்ப நன்றி சுஷ்மா!” என்று அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

போலீஸ் ஸ்டேஷன்.

சுரேஷ் போனபோது விஜய் போனில் மும்முரம். “ஓ.கே. சார்! நான் இப்போ சொல்லிர்றேன்!” என்று குதூகலித்தான்.

போனை வைத்துவிட்டு, “சுரேஷ்! எங்கூட இப்படிக் கொஞ்சம் வாங்க!” என்று உள் அறைக்கு அழைத்துப் போனான்.

டேபிள் மேலிருந்து தணியை விலக்க அங்கே விரைத்துப்போய் இரண்டு குழந்தைகள்! எத்தனையோ மார்ச்சுவரி, அனாடமிகளைப் பார்த்திருந்த அவனுக்கே அக்குழந்தைகளைப் பார்க்க், தூக்கி வாரிப் போட்டது.

“என்ன சார் இது... பொம்மைகளா....?”

“இல்லை... இறந்த பிணங்கள்!”

“மை காட்! இது எப்படி, எங்கிருந்து கிடைச்சது?”

“ஏர்போர்ட்ல! கஸ்டம்ஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு மயக்க மருந்து கடத்தல்!”

“புரியலே... !”

“விளக்கமாகச் சொல்றேன். இரண்டு பெண்கள் அதோ அந்த அறைக்குள் காவலில் இருக்காங்களே அவங்க இவற்றைத் தங்கள் சொந்தக் குழந்தை மாதிரி சேலை தலைப்புல அரவணைச்சு மலேசியா போக முயற்சி பண்ணாங்க, யதேச்சையா குழந்தையை பரிசோதிச்சப்போ இதன் வயித்துல மயக்க மருந்து பொட்டலங்கள்!

ரெண்டு போடு போட்டப்ப அந்தப் பொம்பளைங்க உண்மையை ஒப்புக்கிட்டாங்க. அவங்க பணத்துக்கு ஆசைப்பட்டு குருவியா கிளம்பினவங்க. இவங்களை செலுத்தினவங்க, குழந்தைக்கு போலியா பாஸ்போர்ட் விசா எடுத்துக் கொடுத்திருக்காங்க. மலேசியாவுல இந்தக் குழந்தைகளைக் கொடுத்துட்டு அங்கே கடைகள்ல இவங்களுக்கு வேலைன்னு சொல்லி இந்த ஏற்பாடு நடந்திருக்கு.”

“யாராம்...?”

“தெரியல. இவங்களுக்கு எதுவுமே தெரியாது. அப்பாவிங்க. கடத்தல்கார்கள் கில்லாடிகள். முன்பு ஒருமுறை கர்ப்பிணிப் பெண்களா அனுப்பினாங்க. அடுத்து இப்போ டெலிவரி ஆகிருச்சு! வெவ்வேறு வேஷங்கள்!

இந்தக் குழந்தைங்க எங்கிருந்து....?”

“கண்டுபிடிக்கணும். மோப்ப நாய் ஆராய்ச்சிக்குக் கிளம்பியிருக்கு!”

“இதுல சுஷ்மாவோட அம்மா எங்கே வாராங்க?”

“சொல்றேன். இறந்த உடலை சுத்தப்படுத்த பார்மால்டிஹைட் கெமிக்கல் உள்ளே செலுத்துறது, வெளியே பூசறதுன்னு டாக்டர் மனோகர் சொன்னாரே, அதைப் பரிசோதிக்கத்தான் உங்களை வரச்சொன்னேன்!”

“யெஸ் சார்... ஸ்மெல்லை வச்சுப் பார்க்கும்போது இதுவும் பார்மால்டி ஹைடுன்னுதான் தெரியுது.”

“அதை இன்ஜெக்ட் பண்ண பிரத்யேக உபகரணங்கள் வேணும். வெளியே அவை எளிதாய்க் கிடைக்காது என்னும்போது இந்தக் குழந்தைகளுக்கு பார்மால்டிஹைட் இன்ஜெக்ட் பண்ணினது யார்? எங்கே வைத்து?”

அப்போது செல்போன் அழைத்தது.

அடுத்து பேசின விஜய்யின் முகத்தில் பிரகாசம்.

“அப்படியா! அங்கேயே இருங்க வந்துடறேன்!” என்று உற்சாகமானான்.

“சுரேஷ், குழந்தைங்க எங்கேயிருந்து கிடைச்சுதுன்னு கேட்டீங்களே, கண்டுபிடிச்சாச்சு. நாய் மோப்பம் பிடிச்சு, அந்த நபரை ரவுண்ட் அப் பண்ணினதுல உண்மையை ஒப்புக்கிட்டாராம்.”

“யார்.... யார் சார் அது?”

“அனாதைப் பிள்ளைகள் ஆசிரம நிர்வாகி!”



 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:56 pm

21

ஆசிரமத்தில் போலீஸ்

எதிரே இன்ஸ்பெக்டர் விஜய், டி.எஸ்.பி., சர்க்கிள், கான்ஸ்டபிள்கள் என அணிவகுப்பு. விஜய்யுடன் வந்திருந்த சுரேஷ் நிர்வாகியையே வெறித்துக் கொண்டிடிருந்தான். அவனுடன் சுஷ்மாவும்.

“சார், நீங்க செஞ்சது எத்தனை பெரிய குத்தம்னு தெரியுமா?”ஆசிரம நிர்வாகியை விஜய் கேட்க, “ஸாரி இன்ஸ்பெக்டர். எந்தக் குற்றத்துக்கும் நாங்க துணை போகலே, சந்தர்ப்பச் சூழ்நிலை, இந்த அளவுக்குக் கொண்டுபோய் விடும்னு நாங்க எதிர்பார்க்கலே. ஒரு வருடம், ரெண்டு வருடமில்லை... முப்பது வருடங்கள் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறோம். பணத்திற்காக இல்லை. ஆத்மதிருப்திக்காக. இது மாதிரி எந்த அசம்பாவிதமும் இங்கு நிகழ்ந்ததில்லை.”

“அப்புறம் இப்போது மட்டும் எப்படி?”

“யாரையும் குற்றப்படுத்துனுங்கிறது என் நோக்கமில்லை. அது ஒரு நிர்வாகிக்கு அழகுமல்ல. இருந்தாலும் விஷயம் இந்த அளவுக்கு விபரீதமான பிறகு எதையும் மறைச்சு வச்சு பிரயோஜனமில்லை. தெரிஞ்சோ தெரியாமலோ இந்தப் பிரச்சினைகளுக்கு ஆயா செண்பகத்தம்மாதான் காரணம்.”

“வாட்!” என்று சுஷ்மா பொங்கினாள். “உயிருடன் இல்லைங்கிறதால அவங்க மேல பழி போடறீங்களா?”

“இல்லை, சத்தியமா இல்லை. இவ்ளோ நாளா நாங்க இது பத்தி பேசினோமா? இப்போ பேசவேண்டியதா இருக்கு.”

“எங்கம்மாவை உங்க அஜாக்கிரதையால நான் பறிகொடுத்திட்டு நிக்கறேன். அப்ப நான் கெஞ்சிக்கேட்டப்ப நீங்க அம்மாவை என்கூட அனுப்பியிருந்தீங்கன்னா அவங்களை நான் பிணமா பார்த்திருக்கிற துர்ப்பாக்கிய நிலைமை வந்திருக்காது.”

சுஷ்மா மேலும் பொங்கினாள். சுரேஷ் அவளை அமைதிப்படுத்தினான்.

“சுஷ்மா, அவர் சொல்லி முடிக்கட்டும். யாரும் இடையில் குறுக்கிடக் கூடாது. நீங்க சொல்லுங்க சார்!”

“செண்பகத்தம்மா ரொம்ப பொறுப்பா ஆத்மாத்தமாதான் இருந்தாங்க. மகள் சுஷ்மாவைப் பார்த்த பின்பு அவங்களோட நிம்மதி போச்சு, கவனம் பிசகிச்சு. எப்போதும் புலம்பல், வெறுமை, பைத்தியம் பிடித்த மாதிரி என்ன செய்கிறோம். ஏன் செய்கிறோம்ங்கிறது புரியாம், தெரியாம பலவித குளறுபடிகள்.

அவங்களோட நிலைமை புரிஞ்சு பசங்களுக்குச் சாப்பாடு தயார் பண்றதிலிரந்து விடுவிச்சோம். கொஞ்ச நாளைக்கு ஓய்வா இருக்கட்டும்னு தொட்டில் குழந்தைங்க பகுதிக்கு மாத்தினோம். அங்கே அவ்ளோ வேலை கிடையாது. மொத்தம் பத்து குழந்தைங்க தான். ஒத்தாசைக்கு ஆட்கள் உண்டு.

குழந்தைகளுக்குப் பால், மருந்து மட்டும் கொடுத்தாப்போதும். ஆனா அங்கேயும் இவங்களால முடியலே. எப்படி நடந்தது. என்ன நடந்த்துன்னு தெரியலே ஒருநாள் குழந்தைகளெல்லாம் வாந்தி, மயக்கம். எங்க ஆசிரமத்து டாக்டர்கள் எத்தனையோ முயற்சி பண்ணியும் கூட மூணு குழந்தைகளைக் காப்பாத்த முடியாமப் போச்சு. புட் பாய்சன்ல இறந்து போச்சுங்க.

அந்தக் குழந்தைகளைப் பின்னால் உள்ள மயானத்துல முறைப் படி அடக்கம் பண்ணோம். அதுக்குப் பின்னாடி செண்பகத்தோட நிலைமை இன்னும் மோசமாப் போச்சு. தன்னாலதான் இப்படி ஆயிருச்சுன்னு ஒரே புலம்பல். அவங்களோட பரிதாப நிலைமையைப் பார்த்துட்டு நானே அவங்கக்கிட்ட நீங்க வேணும்ன உங்க மகள் கிட்ட போறீங்களா‘ன்னா கேட்டேன். வெறிச்சுப் பார்த்துட்டு பதில் சொல்லாம இருந்துட்டாங்க. இந்த நிலைமையில தான் திடீர்னு ஒருநாள் அந்தம்மாவைக் காணலை. அதுக்கப்புறம் மருத்துவக் கல்லூரியில அவங்க பாடி கிடக்கிற விஷயம் நீங்க சொல்லித்தான் தெரியும். பாவம் செண்பகம்! இங்கு நிறையவே தொண்டாற்றியிருக்காங்க”!

அவர் முடிக்க, இன்ஸ்பெக்டர் தன் மேலதிகாரிகளைப் பார்த்தார்.

“சார், உங்களோட சேவையைக் கருத்தில் கொண்டு நீங்க சொல்ற விஷயங்களை நம்ப வேண்டியிருக்கு. இருந்தாலும் குழந்தைங்க இறந்ததையோ, செண்பகத்தம்மா காணாமல் போனதையோ ஏன் போலீஸில் தெரிவிக்கலே?”

“இதோ பாருங்க. எதையும் மறைக்கணும்னு செய்யலே. அந்தக் குழந்தைங்களோட இழப்பும், ஆயாவோட நிலைமையம எங்களை பலவீனப்படுத்திடுச்சு, பிறந்தவுடனே தூக்கி எறியப்படற குழந்தைகளை வளர்த்து ஆளாக்கணும்னுதான் இங்கே கொண்டு வரோம். கவனக்குறைவால் பாலில் பிரச்சினை. அதனால குழந்தைகள் இறப்புன்னு இதுவும் ஒரு வகையில் இயற்கை மரணமே. வீடுகள்ல புட்பாய்சன் ஏறப்டறதில்லையா? குழந்தைகள பத்தி புகார் சொன்னா மீடியாக்கள் வரும். ஆசிரமத்துப் பெயர் கெடும். மேற்கொண்டு சேவை செய்யறதுக்குத் தான் பிரச்சினை. அதனால்தான் அமைதி காத்தோம். ஆயாவும் எங்கேயாவது சுத்திட்டு வந்திருவாங்கன்னுதான் நினைச்சோம். ஆனா முறைப்படி புதைத்து குழந்தைங்களைத் தோண்டி எடுத்து இப்படி அநியாயமாய் கடத்தலுக்குப் பயன்படுத்து வாங்கன்னு யாருக்குத் தெரியும்? மனசாட்சியில்லாத கிரிமினல்கள்.”

“குழந்தைகளைப் புதைத்து இடங்களைப் பார்க்கலாமா?”

நிர்வாகி அவர்களை அங்கே அழைத்துச் செல்ல, அவர்களுக்கு முன்பு மோப்ப நாய்கள் ஓடி அந்தக் குழந்தைகள் அடக்கம் பண்ணப் பட்ட இடத்தைப் பிராண்டின, குரைத்தன.



 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:56 pm



அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் பட்டுப்போய்க் கிடக்க, புதர்களும் நாணல்களும் மண்டிக்கிடக்க, மயானம் வெறிச் சோடிக் கிடந்த்து. அங்கே திட்டுத்திட்டாய் புதைக்கப்பட்ட பிணங்கள்.

குழந்தைகள் அடக்கம் பண்ணப்பட்ட மண்மேடுகளை நாய்கள், தங்கள் கால்களால் பிராண்டி, மோப்பம் பிடித்து சங்கிலியை இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தன.

“வாங்க நாமும் அவற்றை பாலோ பண்ணுவோம்.”

நாய்களைப் பிடித்துக்கொண்டு கான்ஸ்டபிள்கள் ஓட, அவர்கள் ஜீப்பில் ஏறிப் பின் தொடர்ந்தனர்.

ஓடி ஓடி மூச்சு வாங்கி அந்த நாய்கள் பங்களா ஒன்றின் பின்பக்கம் போய் குரைத்தன. காம்பவுண்ட் கேட்டை முட்டின.

சுஷ்மா அதற்குள் அரண்டு போயிருந்தாள். “சார், இது எங்க பங்களா!”

“வாட்!”

அதற்குள் பூட்டு உடைக்கப்பட்டு எல்லோரும் உள்ளே பிரவேசித்தனர். நாய் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி வந்து ஒரு மூலையிலிருந்த கதவின் மேல் தாவ...

அதையும் உடைத்து உள்ளே பிரவேசித்தால் அதன் கீழ்த்தளத்தில் அங்கங்கே மரப்பெட்டிகள். பேக்கிங் சாமான்கள். வெள்ளை பாக்கெட்களில் மயக்க மருந்து பவுடர்கள்.

சுஷ்மாவிற்கு அவற்றைப் பார்க்கப் பார்க்க அழுகையாய் வந்தது. பாவிகள் அப்பா கஷ்டப்பட்டு எனக்காக்க் கட்டிய பங்களாவில் கிரிமினல்கள் யார் அது? யார் அந்த அயோக்கியர்கள்?

மறு அறையில் சுரேஷ், “சார் இதுதான் அந்த மெஷின்கள். இதை வைத்துத்தான் பார்மால்டிஹைட் திரவத்தை இறந்த் உடலில் செலுத்துவார்கள். எங்கள் மருத்துவக் கல்லூரி உபகாரணம் இங்கே எப்படி?” என்று அவன் வியந்தபோது.

உள் அறையில் உறக்கத்திலிருந்த கல்லூரி அட்டெண்டரும், சுஷ்மாவின் மாமா விவேக்கும் சுற்றி வளைக்கப்பட்டனர்.

அங்கு எந்த சால்ஜாப்பும் எடுபடாது என்பது புரியவே. உடம்பு புண்ணாகும் முன்பு விவேக் தன் குற்றங்களையெல்லாம் ஒப்புக் கொண்டான்.

“செண்பகத்தம்மாவை மண்டையில் அடித்துக் கொன்று மருத்துவக் கல்லூரிக்கு இந்த அட்டெண்டர் மூலம் அனுப்பினது நான்தான். கொஞ்ச நாட்களாகவே, கஞ்சா, மயக்க மருந்துகளைப் பல வெளிநாடுகளுக்கும் கடத்தி வருகிறேன். கொஞ்ச நாள் முன்பு கர்ப்பிணிப் பெண்கள் போல ஜோடித்து அனுப்பப்பட்டவர்கள் பிடிபட்டு எனக்குப் பெருத்த நஷ்டம். அதைச் சரி பண்ண குழந்தைகள் மூலம் கடத்தலாம் என யோசனை வந்தது.

ஒருநாள் அநத் ஆசிரம மயானம் பக்கம் போனபோது குழந்தைகளைப் புதைப்பது தெரிந்தது. அதைப் பார்த்த பின்பு சட்டென யோசனை. அவற்றைச் சுத்தம் பண்ணி கெமிக்கல் செலுத்தி, உயிருள்ள குழந்தைகளைத் தூக்கிப்போவது போல, பெண்களை ஏற்பாடு பண்ணினேன். அந்தக் குழந்தைகளைச் சுத்தம் பண்ணி கெமிக்கல் செலுத்த இந்த அட்டெண்டர் உதவினாள். குழந்தையின் வயிற்றைக் கிழித்து உள்ளே கஞ்சாப் பொட்டலங்களை வைத்து தைத்து அவர்களுக்கு போலி பாஸ்போர்ட், விசாக்கள் எல்லாம் ரெடி பண்ணியும்கூட என் கெட்ட நேரம் அவர்கள் பிடிபட்டு விட்டார்கள்.!”

“அயோக்கிய ராஸ்கல்! எங்கம்மா உனக்கு என்ன பாவம் பண்ணாங்கன்னு அவங்களைக் கொலை செய்தே?”

சுஷ்மா ஆவேசப்பட, “என்னை மன்னிச்சிரு சுஷ். சத்தியமா அது உங்க அம்மான்னு தெரியாது. அன்று இரவு குழந்தை பிணங்களைத் தோண்டி எடுக்கும்போது இந்தம்மா அந்தப் பக்கம் வந்துட்டாங்க. அவங்க கத்தி கூப்பாடு போட, கையில் கிடைத்த தடியை எடுத்து அவங்க மண்டைல அடி! உடனே தரையில விழுந்து அவங்க மரணம்! அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலே. உடலை அப்புறப்படுத்தலாம்னு வண்டில தூக்கிப் போட்டுக்கிட்டு வந்தப்பதான் இந்த அட்டெண்டர் அனாடமிக்குப் பிணம் வேணும்ன எப்போதோ சொன்னது ஞாபகத்திற்க வந்தது. சரின்னு இவன்கிட்ட ஒப்படைச்சேன்.”

விவேக் சொல்லிவிட்டு போலீஸ்களைப் பார்த்து மிரள....

“அ....ம்...மா., கடைசியில உனக்கு இப்படி ஒரு மரணமா... அம்மா..” என சுஷ்மா விசும்ப... சுரேஷ் அவளை ஆறுதல்படுத்தித் தன் தோளில் அரவணைத்துக் கொண்டான்.

முற்றும்

குறிப்பு: மயக்க மருந்து கடத்தி, குவைத் நாட்டில் குற்றவாளிகள் பிடிபட்ட உண்மைச் சம்பவத்தை வைத்துப் புனையப்பட்டதே இந்தப் புதினம். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் குறிப்புகள் தந்த டாக்டர் மனோகர் மற்றும் டாக்டர் பிஜீ. டாக்டர் தேவிபிரியாவுக்கு நன்றி!


எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ்




 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 12, 2015 2:34 am

ஒரு பத்தி தான் படித்தேன் சிவா, முழுவதும் படிக்கணும்...அருமையான பகிர்வு !..நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 12, 2015 7:05 am

பொறுமையாய் ... ஒரு நாள், முழுதும் படிக்கணும் ...  தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 1:07 pm

shobana sahas wrote:பொறுமையாய் ... ஒரு நாள், முழுதும் படிக்கணும் ...  தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 6 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1144273

ஆமாம் ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக