ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத் தாமரைப் பெண்ணே!

3 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by சிவா Thu Jun 11, 2015 10:23 pm

First topic message reminder :

வாழ்த்துரை

நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.

சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.

ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.

எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.

குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.

இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.

பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.

இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,

அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி


அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை

வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.

இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.

மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.

கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,

இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.

முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.

இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்

அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.


பதிப்புரை

எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.

கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,

எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,

எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.

அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.

கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.

இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,

அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்


 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty Re: தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by சிவா Thu Jun 11, 2015 10:47 pm

16

“சுஷ்மா அப்போ நான் புறப்படட்டுமா?”

முகுந்தன் மனமில்லாமல் கைப் பெட்டியை எடுத்தார்.

“இன்னிக்கே நீங்க போய்த்தான் ஆகணுமாப்பா?”

“ஆமாம்மா... மலேசியாவுல முக்கியமான கான்ட்ராக்ட் பேச்சு வார்த்தை நடக்குது. மந்திரிங்களோட அப்பாயிண்ட்மென்ட், நீ மனசு மாறி பிரியமாய் கூப்பிட்டியேன்னுதான் உடனே விமானத்தைப் பிடிச்சு வந்தேன்.”

சுஷ்மா அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்கினாள்.

“நான் ரொம்பவே உங்களை நோகடிச்சுட்டேனில்லேப்பா.”

“பரவால்லேம்மா... இப்போதாவது நீ கிடைத்தாயே... அது போதும். அம்மாவைப் பார்க்க முடியலேங்கிற வருத்தம்தான். அது கூட சரியாயிரும். சீக்கிரம் அவளும் நம்கூட சேர்ந்திருவா. அதுக்காக்க் கவலைப்பட்டு படிப்பைக் கெடுத்துக்காதே. சித்திக்கும் உன் அன்பைக் கொடு. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்னைக் காப்பாற்றினது அவள்தான். இந்தச் செல்வம், செல்வாக்கு, சம்பாத்தியம் எல்லாம் உன் சித்தி போட்ட பிச்சைன்னு சொல்ல்லாம்.”

மகேஸ்வரி, “என்னங்க, பெரிய பெரிய வார்த்தையாய் பேசிக்கிட்டு மனஸ்தாபம் நீங்கி ஒன்று சேர்ந்த பின்பு எதுக்குப் பழசெல்லாம். நீங்க்க் கவலைப்படாமக் கிளம்புங்க. செண்பகம் அக்காவையும் மனசு மாத்தி அங்கே அழைச்சுட்டு வரேன்.“

“சுஷ், எக்ஸாம் முடிந்த்தும் லீவுக்கு அங்கே வரேயில்லே?”

“ஷ்யூரப்பா! சினிமாவுல பார்த்துப் பார்த்து மலேசியாவை நேர்லயும் சுத்திப் பார்க்கணும்னு ஆசை வந்திருச்சு.”

ரெஸ்டாரென்டின் மங்கிய ஒளியில் மங்கள இசை சன்னமாய் ஒலித்துக்கொண்டிருந்த்து. எதிரெதிரே சுரேஷும், சுஷ்மாவும். அவளது கண்களில் ஓர் ஆர்வம். மஞ்சள் நிலவின் ஒளிப் பிரவாகம். ஒரு குத்து முடி காதோரம் கலாட்டா செய்த்து.

“சார், நீங்க...”

“இந்த சார் ரொம்ப அந்நியப்படுத்துது. கால் மீ சுரேஷ்!”

“சரி சுரேஷ் சார், ஸாரி, சுரேஷ்!” என்று கஷ்டப்பட்டு உச்சரித்து, “நீங்க மலேசியா போயிருக்கீங்களா?”

“இல்லை. அதுக்கான வசதி வாய்ப்புகள் அமையல!”

“அமைந்தால் வருவீங்களா?”

“நிச்சயமாய்.”

“இந்த லீவுக்கு அப்பா அங்கே வரச்சொல்லியிருக்கார். விசா ரெடி. அம்மாவை நினைத்து நினைத்து அப்பாவை இத்தனை வருடங்கள் ஒதுக்கி வைத்துவிட்டேன். அவர் சந்தோஷத்திற்கு மலேசியாவுக்கு வருவதாகச் சொல்லிவிட்டேன். இங்கே இருந்தா அம்மாவைப் போய் பார்க்கத் தோன்றும். அது அவங்களுக்கு எரிச்சல் மூட்டும். எப்படியோ அம்மா உயிரோடு இருப்பது வரை திருப்தி. அவங்களுக்கும் அவகாசம் கொடுப்போம்.”

“நல்ல விஷயம். அவசியம் போய் வா!”

“நீங்களும் வரீங்க... பாஸ்போர்ட் காப்பி கொடுங்க. ஒரே நாள்ல விசா எடுத்திடலாம்.”

“நான் எதுக்கு? உங்கப்பா தப்பா நினைப்பார்?”

“சான்ஸ்ஸே இல்லை. உங்களுக்கும் சேர்த்துத்தான் டிக்கெட் பண்ணியிருக்கார்.”

மலேசியா.

சுரேஷுக்கு வெளிநாடு, அதுவும் விமானப் பயணம் புதுசு. படிக்கிற காலத்தில் வெளிநாட்டு வாழ் இந்திய பசங்களின் நட்பு இருந்த்து. அவர்களின் வசதி, சொகுசு பார்த்து ஏங்கினது உண்டு, நாமும் வெளிநாடு போகணும் , நிறைய சம்பாதிக்கணும், சொகுசாய் இருக்கணும் என ஆசைப்பட்டதுண்டு. அது இப்போது சுஷ்மா மூலம் கைகூடி வந்திருக்கிறது.

சுஷ்மா யார்? எனக்கென்ன வேண்டும்? எதற்காக என் மேல் இத்தனை அன்பு செலுத்துகிறாள்? நான் அவளுக்கு ஆறுதலாம். நான் அவளுக்கா? இல்லை, எனக்கு அவளா? எதேச்சையாக்க் கிடைத்த அறிமுகம். இது எதுவரை நீளும்? நான் அவளது ஆசிரியன். குரு. குரு இப்படி மனம் இளகலாமா? அலையலாமா?

விமானத்தில் அவளது அண்மை சுரேஷிற்கு இனித்த்து. இருக்கைக்கு இடையில் இருந்த கைப்பிடிப்பை நிமிர்த்தி விட்டு சுஷ்மா அவனது கையைக் கோர்த்துக் கொள்ள அவனுக்குள் கதகதப்பு. ஏ.ஸி.யையும் மீறி வியர்த்த்து.

அவள் எதிர்பார்த்த்து போல சுடிதாரின் துப்பாட்டாவை எடுத்து வேர்வையை ஒத்தி எடுத்தாள்.


 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty Re: தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by சிவா Thu Jun 11, 2015 10:48 pm


சாப்பாடு வந்தபோது வேண்டுமென்றே ஒவ்வொரு விதமாய் சொல்லித் தன் தட்டிலிருந்து பாதியை அவனுக்குக் கொடுத்து, அதிலிருந்து பாதியைத் தானும் எடுத்து. ஓரக்கண்ணால் சிரித்தாள். அவன் வீழ்ந்தான்.

பெண்கள் ஒருவித்த்தில் தீவிரவாதிகள். பிடிக்காதவர்களை ஒதுக்குவார்கள். பிடித்தவர், வேண்டியவர்கள் என்கிற நம்பிக்கையைப் பெற்றவிட்டால் போதும் அன்பால் கொல்லுவார்கள். அரவணைப்பால் மூச்சுமுட்ட வைப்பார்கள்.

சுரேஷ வயதிலும் அனுபவத்திலும் மூத்திருந்தாலும் கூட அவளது ஸ்பரிசத்தில் மிரண்டு போனான்.

“என்ன? என்ன அப்படி பார்க்கிறீங்க-”

“ஓன்றுமில்லை!”

“என்னடா சாதுப்போல் இருந்தாளே இப்போ இத்தனை அலைகிறாளேன்னா! நீங்க என் உடைமைன்னு ஆகிட்ட பின் விட்ரமுடியுமா?”

சொன்னவள் கண் சிமிட்டினாள். அவனது நாடித் துடிப்பு அதிகமாயிற்று.

“உங்களுக்கு என்னென்னல்லாம் பிடிக்கும்? குடிப்பீர்களா?”

“இல்லை,” என்று மிடறு விழுங்கினான்.

‘‘உண்மையைச் சொல்லணும்.”

“இல்லை.. வந்து... படிக்கும்போது பசங்களோட சும்மா ஜாலிக்கு. அப்புறம் விட்டுட்டேன்.”

“அப்புறம் புகை?”

“அதுவும் படிக்கும்போது திருட்டுத்தனமாய் புகை மட்டுமில்ல... மயக்கமருந்தும். இப்போது எதுவுமே இல்லை..”

“ரைட். நீங்க எனக்காக எந்தச் சந்தோஷத்தையும் இழக்க வேண்டியதில்லை. அளவோடு குடிக்கலாம். அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் கூடாது. உங்கள் கட்டுப்பாட்டில் அது இருக்கணும். புகை வேண்டாம். கஞ்சா கூடாது. என்ன தெரிஞ்சுதா?”

“சரிங்க டீச்சர்!” என்று அவன் சிரிக்க அப்படியே இழுத்து அவனது கழுத்தைத் தன் மார்போடு சுட்டிக் கொண்டாள்.

புதுப் பயணம், புது மனிதர்கள், புது இடம் என்கிற உணர்வெல்ல்ம் சுஷ்மாவின் அண்மையில் பறந்து போயிற்று.

ஏர்போர்ட்.

இறங்கி ரயில் பிடித்துகி நடந்து இமிகிரேஷனில் கியூ நின்று மலேசிய மற்றும் பெண்களின் நிறத்தை மறைவாய் ரசித்து, வெளியே காத்திருந்த முகுந்தனின் காரில் கோலாலம்பூர் பயணம்.

அவனுக்கு எல்லாம் கனவுபோல் இருந்த்து. சுஷ்மா காரின் முன் சீட்டில் அமர்ந்து கொண்டு அமைதியானாள். மறுபடியும் ரொம்ப சாது.

முகுந்தனின் பங்களா.

சுரேஷிற்குத் தனியறை. பளிங்குத் தரை, பளபளக் கூரை. தடையில்ல் மின்சாரம், தாராளத் தண்ணீர்.

சுஷ்மா அவனை குகை முருகன் கோவிலுக்கு அழைத்துப் போனாள். பிரம்மாண்டமான முருகன் சிலை. அண்ணாந்து பார்த்துவியந்தான். மூச்சு வாங்கினபடி ஏறினால் ஜில்லென குகை மேலேயிருந்து சொட்டும் நீர்த் துளிகள், செடி, கொடிகள், மரங்களின் அடர்த்தி, கே..எல்டவர், லேக் கார்டன்ஸ், ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் எனச் சுற்றினர்.

கென்டிங் ஹைலேண்டிங் ரோப் காரில் இருவரும் சங்கமித்தார்கள். அங்கு நூற்றுக்கணக்கில் இயங்கின சூதாட்டத்தில் பணம் வைத்து ஜாலிக்குத் தோற்றனர். சுஷ்மா சிங்கம், புலியின் தலையில் தலைவைத்து படம் எடுத்துக்கொண்டாள்.

துரியன் பழம். ஹார்ட், நட்ஸ் வாங்கிச் சுவைத்தார்கள். சைனா மார்க்கெட் போய் பொருட்களை அலசினர். பெட்ரோ நார்ஸ் இரட்டைக் கோபுரங்களில் உயர்ந்தனர்.

அந்தச் சந்தோஷமெல்லாம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே நீடித்த்து.


 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty Re: தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by சிவா Thu Jun 11, 2015 10:49 pm

17

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் விருப்பு வெறுப்புகளைக் காலம், நேரம்தான் தீர்மானிக்கிறது. அந்தந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப சில காரியங்கள் பிடிக்கின்றன. சிலது பிடிக்காமல் போகின்றன.

பிடித்து பிடிக்காமல் போவதும், பிடிக்காதது பிடிப்பதும் அதிசய நிகழ்வுகள் அல்ல. காரியம் சிலவற்றை உணர்த்துகிறது, புரிய வைக்கிறது, காயப்படுத்துகிறது, அல்லது ஆற வைக்கிறது, வெற்றி ஊட்டுகிறது, அல்லது தணிக்கிறது, மனிதர்களைப் பிரிக்கிறது அல்லது பிணைக்கிறது சுஷ்மாவும் அதற்கு விதிவிலக்காக இல்லை.

அப்பா, மலேசியா என்றாலே வெறுப்பாய் இருந்தது முன்பு, இப்போதோ இனிக்கிறது.

அப்பாவின் தப்புகள் இப்போது சரியாகப்படுகின்றன, அப்பாவின் இழப்புக்கு அப்பா இப்போது ஆறுதல். அவரது அன்பு அரவணைப்பு, செல்வாக்கு, செல்வம் எல்லாம் அவளை நெகிழ வைத்தன. அத்துடன் சித்தியின் உபசரிப்பும்.

அத்துடன் புதிதாய் சுரேஷின் அண்மை, கல்லூரி ஆரம்பிப்பதால் அவன் இரண்டு நாட்களில் ஊர் திரும்பிவிட்டான்.

பத்து நாட்களில் அவளும் விமானம் ஏறும்போது மனம் கனத்தது. தாயின் இழப்புக்கு அப்பாபடும் வேதனை புர ிந்தது. “அப்பா, ஊருக்குப் போய் அம்மாவைச் சந்தித்து எப்படியும் உங்களோடு சேர்த்து வெச்சுடறேன்பா.” என்ற வாக்குக் கொடுத்திருந்தாள்.

ஹாஸ்டலுக்கு வந்ததும் எதிலும் கவனமில்லை கல்லூரி சிறப்பு மலரின் வேலைகள், ஆர்ட்ஸ் கிளப் என எல்லாம் மேஜையில் கிடந்தன.

“அம்மா, நீ ஏன் இப்படி செய்கிறாய்? அப்பா கஷ்டப்பட்ட போது கூடவே இருந்து எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டிருந்து விட்டு அவர் சவுகர்யமாய் இருக்கும்போது ஒதுங்கியிருப்பதேன்?”

ஊர் உலகத்தில் யாருமே தப்பு செய்யவில்லையா? அதுவும் அவர் சுயநலத்திற்காகச் சித்தியை ஏற்கவில்லையே! நம் குடும்பம் நன்றாக இருக்கணும் என்று சம்பாதிக்க வந்த இடத்தில் சிக்கல், அதிலிருந்து விடுபட சித்தி உதவியிருக்கிறார்கள்.

பழகும்போதுதான் தெரிகிறது, அவர்களும் எவ்வnshnளோ நல்லவர்களென்று, எல்லாமிருந்தும் அவர்களுக்குச் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாத நிலைமை, அது தெரியாமல் அவர்களை நிறையவே நோகடித்திருக்கிறேன்.

“அம்மா, நீ எனக்கு வேணும். அப்பா, சித்தி எல்லோருக்கும் வேணும்.”


 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty Re: தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by சிவா Thu Jun 11, 2015 10:49 pm



இரவு முழுக்க அவளால் தூங்க முடியவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்து வேகமாய் குளியல்!

வெளியே பனிச்சிதறல்கள். மரம், செடி, கொடிகள் குளிருக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டிருக்க, சுஷ்மா வேகமாய் நடந்தாள். காய்கறி, பால், பேப்பர் வண்டி என ஹாஸ்டலில், வாகனங்கள் வரும் போகும் என்பதால் கேட் திறந்து கிடந்தது. அந்த நேரம் கட்டுப்பாடு கிடையாது.

ஆசிரியர்கள் குடியிருப்பு.

சில வீடுகளில் வெளிச்சம், திருப்பாவை, திருவெம்பாவை ஒலி, வாசலில் கோலம், பரங்கிப்பூ என சிங்காரமாமயிருந்தது.

சுரேஷிற்குப் புதிதாய் ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் வெறிச், இலை தழைகள் உதிர்ந்து, அடித்து வரப்படாமல் வாசலில் குப்பை, நமுத்துப் போன இலைகளை மிதித்துக் கதவைத் தட்டினாள். பெல்லடித்து பொறுமையின்றி “சுரேஷ்...சார்...சார்!”

கதவைக் குளிருக்குப் பயந்து திறந்த சுரேஷ் கம்பளி போர்த்தி கொட்டாவி விட்டு கசக்கினாள். யார் என்று யோசிப்பதற்குள் அவள் உள்ளே புகுந்து ஸ்விட்ச் தேடி லைட்டைப் போட்டாள். உள்ளே குப்பென உஷ்ணம்.

“சுஷ்மா! எப்போ வந்தே நீ!”

“நேற்று! அப்போ என் ஞாபகம் இருக்கு! போன் பண்ணலே, நான் எப்படி இருக்கேன் எப்போ வரேன்னு கவலைப்படலே!”

அவன் என்னவோ சொல்ல வர, “தெரியும். நான் போன் பண்ணியிருக்கலாமேன்னு சொல்ல வரீங்க... அதானே! எத்தனையோ தடவை முயற்சி பண்ணேன். செல் ரீச் ஆகலே!“

எங்கள் கிராமத்துல டவர் எடுக்காது சுஷ்! அது போகட்டும், என்ன இத்தனை காலையில...? டீ போடட்டுமா...?”

“வேணாம், நான் அதுக்காக வரலே!”

“பின்னே?”

“உடனே கிளம்புங்க! என் அம்மாவைப் போய்ப் பார்க்கணும்!”

“அவங்கதான் வரமுடியாதுன்னுட்டாங்களே!”

“இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும், எனக்கென்னவோ அந்த நிர்வாகி அம்மாவை நெUYருங்கி விடாம சதி பண்றதா தெரியுது!”

“அவர் ஏன்? அதுல அவருக்கென்ன லாபம்?”

“சும்மா தர்க்கம் பண்ணிக்கிட்டிருக்காம கிளம்புங்க!”

“இன்னிக்கு எனக்கு கிளாஸ் இருக்கு!”

“கட் அடிங்க!”

“நல்ல கதை!” சுரேஷ் சிரித்தான். “நான் என்ன ஸ்டூடண்டா, கட் அடிக்க?”

“அப்போ என்னைவிட உங்களுக்கு கிளாஸ்தான் முக்கியமாகப் போச்சு?”

“அப்படியில்லே, இருந்தாலும் அதுக்காகத்தானே எனக்குச் சம்பளம் தராங்க!”

“எதுவும் பேசக்கூடாது. இந்தாங்க!” என்று டூத் பிரஷ் எடுத்து, பேஸ்ட் வைத்து, துண்டை எடுத்து அவன் தோளில் போட்டு “ம்... சீக்கிரம் எல்லாம் ஆகட்டும்” என்று விரட்டினாள். அவனுக்கு அவளது உரிமையும் அந்தக் கண்டிப்பும் பிடித்திருந்தது.

அவன் ரெடியாகி வருவதற்குள் பைக் ரெடியாக இருந்தது.

“இதிலா? வேணாம்!”

“ஏன்?”

“ஆசிரியர் குடியிருப்பில் சேர்ந்து போவதைப் பார்த்தால் கதாகாலட்சேபமாயிடும். நீ முன்னால் போ. வெளியே ஆட்டோ பிடிச்சுக்கலாம்.”

அனாதைப் பிள்ளைகள் இல்லம்.


 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty Re: தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by சிவா Thu Jun 11, 2015 10:49 pm



சுரேஷையும் சுஷ்மாவையும் பார்த்ததுமே நிர்வாகியின் முகம் சிவந்து போயிற்று. “எங்கே வந்தீர்கள்?“ என்றார் வெறுப்புடன்.

“எங்கம்மா... !”

“அம்...மா.. ! நீங்க அடி எடுத்து வச்சதிலிருந்து இங்கே ஒரே பிரச்சனை! எங்களை நிம்மதியா செயல்பட விடமாட்டீங்களா?”

“என்ன பிரச்சனை... நாங்க என்ன பண்றோம்?”

“அதெல்லாம் உங்களுக்கு ஏன்? ஆதரவற்ற பிள்ளைகள், முதியோர்கள், தொட்டில் குழந்தைகள்னு பராமரிக்கிறதுல, பாதுகாக்கிறதுல உள்ள கஷ்டநஷ்டங்கள் உங்களுக்குத் தெரியாது. சொன்னாலும் புரியாது. எனக்கு நிறைய வேலை இருக்கு.”

அவர் சொல்லிட்டு நடக்க, “சார், உங்கள் சேவைகள் புரியுது. சுயநலமில்லாம உழைப்பது கஷ்டம்தான். ஆனா அதுல நாங்க குறுக்கிட வரலியே... என் அம்மா... அவங்க என்னைப் பெத்தவங்கிறதை நம்பலேன்னா எப்படி?”

“நான் நம்பறேன். எனக்கு எல்லாம் தெரியும். ஆயா சொன்னாங்க...”

“எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுமா என்னை அவாய்ட் பண்றீங்க..?”

“என்ன பண்றது? ஆயா சொல்லும்போது நான் மறுக்க முடியுமா? உங்கப்பா தப்பு பண்ணப்போ ஆரம்பத்துல உங்கம்மாவுக்கும் கோபம். ஆவேசம், அப்புறம் யோசிச்சுப் பார்த்தப்போ, ஆயாவிடம் வளர்வதைவிட...”

“செண்பகம்!”

“யெஸ்...யெஸ்...செண்பகத்திடம் நீ வளர்வதைவிட, உனக்கு மலேசியாவுல சித்திதான் சரி. உன் படிப்பு, எதிர்காலம், வசதி வாய்ப்புகள் அங்கே நல்லாருக்கும்னுதான் செண்பகம் விட்டுக் கொடுத்தாங்க.”

“அதுக்காக? பெத்த மகளை விவரம் புரியாத அந்தச் சின்ன வயசுல விட்டுட்டு ஓடிப் போகணுமா?”

“எல்லாம் காரணமாய்தான். கூட இருந்தா, உனக்குக் கஷ்டம், அம்மாவின் மேல் உள்ள பாசம் அந்தப் பக்கம் வெறுப்பை வளர்க்கும், அப்பாவுடன் நீ போக மறுக்கலாம். சித்திமேல ஈடுபாடு வராம போகலாம். அதனால உன்னை விட்டுப்போயிட்டா, வளர வளர, காலப்போக்கில் நீ அம்மாவை மறக்கலாம். அவங்களையும் ஏத்துக்குவாய்னுதான் ஒதுங்கி வந்துட்டாங்க. அவங்க அவங்க உனக்குச் செய்ய முடியாத பணிவிடைக்குப் பரிகாரம் தேடத்தான். இங்கே இத்தனைக் குழந்தைகளுக்குச் சேவகம் செஞ்சுவராங்க. அந்தத் தியாகத்தை நீ புரிஞ்சுக்கணும்.”

“தியாகம், மண்ணாங்கட்டி, யாருக்கு வேணும் இந்த மாதிரி தியாகம்? சார், எங்கம்மாவைக் கூப்பிடுங்க. நான் உடனே பார்த்தாகணும்.”

“அது முடியாது!”

“முடியாதுன்னா எழுதிக் கொடுங்க... நான் போலீஸுக்குப் போறேன். கேபியஸ்கார்ப் கோர்ட்டுல போட்டு உங்களைக் கூண்டில் ஏத்தறேன்.”

சுஷ்மாவின் ஆவேசத்தில் சுஷ்மாவின் ஆவேசத்தில் சுரேஷ் கூட மிரண்டு போனான். நிர்வாகி அவளை அனுசரணையாய்ப் பார்த்து, “சுஷமா, உன் அன்பும் ஆவேசமும் புரியுது. நான் அவங்களைப் பார்க்க முடியாதுன்னு சொல்லி மறுக்கலே. நிஜமாலுமே நீ அவங்களைப் பார்க்க முடியாது!”

“அதுதான் ஏன்னேன்?”

“செண்பகம் இங்கே இல்லே.”

“எங்க?”

“தெரியாது. யார்ட்டயும் சொல்ல்ம எங்கோ போயிட்டாங்க.”


 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty Re: தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by சிவா Thu Jun 11, 2015 10:50 pm

18

நிர்வாகி பொய் சொல்லுகிறார். தங்களைத் தவிர்க்கப் பார்க்கிறார் என்று தான் சுஷ்மா முதலில் நினைத்தாள். அதை அவர் புரிந்துகொண்டு, “என் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கையில்லேன்னு தோணுது, வேணுமானால் உள்ளே போய் யாரை வேணுமானாலும் விசாரிச்சுப் பாருங்க. அவங்க இல்லாம பசங்க வாடிப் போயிருக்காங்க.“

அது உண்மை என்பது பலரின் வார்த்தைகளிலும் வருத்தங்களிலும் அங்கே வெளிப்பட்டது.

“எவ்ளோ நாளா காணோம்?”

“ரெண்டு வாரம்.”

சுரேஷ், “போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தீங்களா?” என்று விரைத்தான்.

“இல்லை.”

“ஏன்? எங்கம்மா அத்தனைக்கு எளப்பமா போயிட்டாங்களா?”

“அப்படியில்லேம்மா. ஒண்ணு அவங்க திரும்பி வந்திருவாங்கன்னு நினைச்சோம். அடுத்தது போலீசுக்குப் போனால், ஆசிரமத்தின் பெயர் கெட்டிடும். அவங்களுக்கு எந்த ஆபத்தும் வருகிற அளவுக்கு எதிரிங்க யாரும் கிடையாது. நல்லதையே நினைத்து நல்லதையே செய்கிற அவங்களுக்கு எதிரின்னு யாரும் இருக்க முடியாதுன்னு நம்பறேன்.”

“அப்புறம் எப்படி?”

“சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது. செண்பகம் இங்கே இருப்பது உங்களுக்குத் தெரிஞ்சுப் போச்சு. அதனால அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுவீங்கன்னு நினைச்சு தலைமறைவாகியிருக்கலாம்.”

சுஷ்மாவிற்கு அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. அழுகை பொங்கிக் கொண்டுவர,

“சுஷ், வா போகலாம்.” என்று சுரேஷ் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

மருத்துவக் கல்லூரி.

அன்று அனாடமி வகுப்பு.

சென்ற மாதம் இதற்காக இறந்த உடல் கிடைக்காமல், தற்போது கிடைத்து மாணவர்கள் தயாராக இருந்தனர். பொதுப்பிரிவு, பரிவு, பல், கண், காது என அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் முதலாமாண்டில் இந்த அனாடமி பாடம் உண்டு.

அரசாங்கக் கல்லூரிகளுக்குப் பிரச்சினையில்லை. அரசு மருத்துவமனையிலிருந்து உடல்கள் கிடைத்துவிடும். தனியார் கல்லூரிகளுக்கு இது எப்போதும் பிரச்சினை. சாதாரணமாய் எட்டு அல்லது பத்து மாணவர்களுக்கு ஒரு உடல் என ஒதுக்குவார்கள்.

இப்போது...நன்றாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஆங்காங்கே உடல்கள் கிடக்க, அறை ஒன்றிற்குள்...

டாக்டர் பிஜு மாணவ, மாணவிகளுக்கு அனாடமி பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்தார். சுஷ்மாவின் முகம் களையிழந்திருந்தது, சுரேஷ் இந்த வகுப்பு எடுக்க வந்திருக்கலாமே என்று தோன்றிற்று.

டாக்டர் பிஜு சூழ்ந்திருந்தவர்களுக்கு டேபிள்மேல் விரைத்துக் கிடந்த உடலை எப்படியெப்படிக் கீற வேண்டும், என்னென்ன திசுககள், செல்கள், நரம்புகளைப் பிரிக்க வேண்டும், எப்படி வெட்ட வேண்டும் என்று விளக்கிச் சொன்னார்.

“ஹோப் எவ்ரிபடி அன்டர்ஸ்டான் நவ் டேக் யுவர் டூல்ஸ் அன்ட் கிட்ஸ்! குரூப் குரூப்பா அவங்கவங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாடியைப் போய் பரிசோதிக்கலாம்.”

சுஷ்மா தன் குழுமத்துடன் ஒரு அறைக்குள் பிரவேத்தாள். அங்கேயும் உடல் ஒன்று விரைத்து மேஜைமேல் கிடந்தது. ப்ரீஸியரின் பனிப் புகை. தலை மழிக்கப்பட்டு, உச்சி முதல் பாதம் வரை ஒரே நிலைமை.

“சுஷ்மா, நீ ஆரம்பிக்கிறாயா? நாங்க டீ சாப்பிட்டு வந்திடறோம்.”

“யெஸ்” என்று சுவாரஸ்யமில்லாமல் கையுறை எடுத்து மாட்டினாள். முகத்துக்கு மாஸ்க்.

‘அம்மா, நீ எங்கேயிருக்கிறாய்? குளிர் அதிகமாகத் தெரியவே கோட் பொத்தான்களைப் போட்டாள். அம்மா, ஏன் இப்படிப் பண்ணுகிறாய் நீ?’

கிட்ஸ் பெட்டியைத் திறந்து கத்தி, கத்திரிக்கோல், கத்தியை எடுத்து அந்த உடலின் மண்டைப் பகுதிக்குக் கொண்டுபோனவள்...

“அம்மா... !” என்று அலறினாள்.

அந்த அலறல் பிண அறை முழுக்க எதிரொலித்து, டீ குடிக்கப் போனவர்களையும் பிற அறைகளில் இருந்தவர்களையும் மிரள வைத்து, “என்ன, என்ன?” என்று ஓடி வந்தனர்.

“அம்மா!”

“இங்கேயும் ஆரம்பிச்சுட்டாயா? கடவுளே, கடவுளே! உனக்கு அம்மா வேணும்னா சொல்லு. வெளியே கடைல வாங்கித் தறோம். வீணா எங்களை டார்ச்சர் பண்ணாதே!”

“நோ! திஸ் ஈஸ் மை மம்!”

ஆர் யூ மேட்-”

“ப்ளீஸ்... பிலீவ் மீ...இது என் அம்மாதான்!” என்று அந்த உடலின் முகத்தைப் பற்றப் போனவள், மயங்கிக் கீழே சாய்ந்தாள்.

“ஏய், பிடிங்கப்பா. யாரைப் பார்த்தாலும் இவளுக்கு அம்மா நினைப்பு. தூக்குங்க கிளினிக்குக்கு. இன்னிக்கும் அனாடமி... பனாடமிதான்!”

கிளினிக்!

அதே கல்லூரியின் விளிம்பில் பளபளப்பும் பணக்காரத்தனமுமாய் வார்டு முழுக்க நோயாளிகளும் நர்ஸ்களுமாய் நிரம்பிருந்தனர்.


 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty Re: தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by சிவா Thu Jun 11, 2015 10:50 pm


“டாக்டர் சுரேஷ், அம்மா கண் திறந்துட்டாங்க!” என்க, “இதோ வந்துட்டேன்” என்ற செல்போனை நிறுத்தி விட்டு உள்ளே ஓடினான்.

அந்தப் படுக்கைக்குச் சென்று எழ முயன்ற சுஷ்மாவை, “தட்ஸ் ஓக்கே” என்று தலையில் பிடித்து அமர்த்தினான். “ஆர் யு ஆல் ரைட்?”

“யெஸ்” என்று கண்கலங்கினாள்.

“அது நிச்சயமாய் என் அம்மாதான்! சொன்னா யாரும் என்னை நம்பமாட்டேன்றாங்க. பைத்தியக்காரி பட்டம்... சுரேஷ் நீங்களாவது..”

“ஐ பிலீவ்! நீ எதைப் பத்தியும் ஒர்ரி பண்ணிக்காம ரெஸ்ட் எடு!”

“நோ, சும்மா என்னைச் சமாதானப்படுத்தறதுக்காகச் சொல்ல வேணாம். தட்ஸ் மை மம்!”

“சுஷ், வி அக்ரி. விசாரிச்சாச்சு. ஏற்கனவே போலீஸுக்குச் சொல்லி இன்ஸ்பெக்டர் விஜய் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார். உன்கிட்ட பேசணுமாம். வரச் சொல்லட்டா?”

இன்ஸ்பெக்டர் பதவிக்குப் பொருந்தாமல் தொப்பையின்றி நரையின்றி விஜ்ய் இளமையாய்த் தெரிந்தான். அவனது கண்களில் ஆர்வமும் கனிவும் கசிய, அவளது படுக்கையருகே நாற்காலி போட்டு அமர்ந்தான்.

அவள் அவநம்பிக்கையோடு சுரேஷைப் பார்க்க...

“சுஷ்மா, நான் டாக்டர் சுரேஷின் நண்பன்தான். நாங்க எல்லாம் விசாரிச்சுட்டோம். யு ஆர் ரைட். நீ பயந்தது போலவே அது உங்கம்மாதான். அந்த ஆசிரமத்தின் நிர்வாகியும் இங்கே வந்து அதை உறுதிப்படுத்திட்டார்.”.

அதைக் கேட்டதும் சுஷ்மா கண்களை மூடிக்கொண்டு விம்ம ஆரம்பித்தாள்.

“மை மாம். எங்கம்மா... வாட் ஹேப்பன்ட் டு ஹர்...?”

“தெரியல. கண்டுபிடிப்போம். அவங்க ஆசிரமத்தை விட்டுப்போய் இரண்டு வாரத்துககு மேலாச்சாம், நிர்வாகியும் அங்கு பணிபுரிபவர்களும் சொன்னாங்க. அதற்குப் பிறகு அவங்க எங்கே போனாங்க? என்னாச்சு... எப்படி இங்கே வந்தாங்கன்னு விசாரிக்கணும்?”

“அதோட...எப்படி இறந்தாங்கன்னும் கூட தெரிஞ்சாகணும் சார்?”

“சுஷ்மா என்ன சொல்ற நீ?”

“யெஸ். ப்யூர்லி இட்ஸ் எ மர்டர்?”

“வாட் ஆர் யு டாக்கிங். வயசானவங்க. அவங்களைப் போய் யார் கொலை? என்ன மோட்டிவ்?”

“அது எனக்குத் தெரியாது. ஆனா அவங்க நார்மலா சாகலே. அது மட்டும் உறுதி!”

“எதை வச்சு சொல்கிறாய்?”

“அவங்க மண்டைல அடிபட்ட தழும்பு இருந்தது. நான் பார்த்தேன்.”

“தழும்பு? இறந்து பதப்படுத்தப்பட்ட உடலின் மண்டையில் தழும்பு? ஈஸ்ட் பாஸிபிள்?”

“விஜய் சுரேஷைக் கேட்க, அங்கே ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்த டாக்டர் ஒருவர், “சார், நான் என் அபிப்பிராயத்தைச் சொல்லலாமா?” என்றார்.

விஜய் அவரை வேண்டாதவராய்ப் பார்க்க, “ஐம் டாக்டர் மனோகரன். இங்கே சீனியர்,” என்று கை கொடுத்தார். “உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, என் அறைக்கு வந்தால் எல்லாத்தையும் உங்களுக்கு நான் விளக்கமாகச் சொல்ல முடியும்.”

“வித் ப்ளஷர்” என்று விஜ்ய் அவரைப் பின் தொடர்ந்தான்.


 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty Re: தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by சிவா Thu Jun 11, 2015 10:52 pm

19

டாக்டர் மனோகரன் தன் அறையில் ஏ.ஸி.யை ஆன் பண்ணிவிட்டு, “ப்ளீஸ், டேக் யுவர் சீட்!” என்றார். “சுரேஷ் நீயும்தான்!” அவன் தயங்க, “ஜூனியர்னா என்ன... பரவாயில்லே உட்கார்” என்று அழைப்பு மணியை அழுத்தினார்.

பளிச்சென, பளபளப்பாய் எட்டிப் பார்த்த மலையாள நர்சிடம். “கொஞ்ச நேரத்திற்கு நோ பேஷன்ட்ஸ் ப்ளீஸ்!”

“ஓ.கே. டாக்டர்!”

“இன்ஸ்பெக்டர் என்ன யோசனை? உங்க சந்தேகம் தழும்புதானே?”

“யெஸ் டாக்டர். கெமிக்கல் போட்டு பதப்படுத்திதானே பாடி அனாடமிக்கு வரும்? அப்புறம் தழும்பு எப்படி?”

“கெமிக்கல் அதாவது பார்மால்ஹைட் திரவம் குறிப்பிட்ட அடர்த்தியில் சில பிரத் யேக்க் கருவிகளை வெச்சு உடம்புல இன்ஜெக்ட் பண்ணுவாங்க அது எதுக்குன்னா, இறந்துபோன உடல்ல இருக்கிற இன்டர்னல் ஆர்கன்ஸ் கெடாமல் இருப்பதற்கு. அது இல்லேன்னா ரத்தத்துல இருக்கிற பாக்டீரியா சிதைஞ்சு நாத்தம் எடுக்க ஆரம்பிச்சிரும். இந்த கெமிக்கல் ரத்த நாளங்களில் பரவி ரத்தம் சிதையாம பார்த்துக்கும்.

அதனால் அடிபட்ட ரத்தம் வந்திருந்தாலும்கூட ரத்தம் வெளியே இப்போ வராது. ஆனால் அடிபட்ட தழும்பு வெளிப்புறத்தல அப்படியேதானிருக்கும். இந்த மாதிரி கெமிக்கல் இன்ஜெக்ட் பண்றதை எம்பால்மிங்னு சொல்லுவாங்க. இதை வெளியே அவ்வளவு எளிதாய் செஞ்சுட முடியாது.”

“இந்த பார்மால்டிஹைட் கெமிக்கல் உள்ளே கொடுக்க மட்டும் தானா டாக்டர்...?”

“இல்லை. கொஞ்சம் கான்ஸன்ட்ரேஷன் குறைச்சு இறந்து போன உடம்புல வெளியேயும் தடவுவதுண்டு, இதன் மூலம் தோல் கெடாமல் இருப்பதுடன் நாற்றமடிக்காமலும் பாதுகாக்கப்படுது.”

“அனாடமிக்கு இந்த மாதிரி உடல்கள் எங்கிருந்து கிடைக்குது டாக்டர்?”

“பெரும்பாலும் ஜி.எச்.சில் இருந்து சப்ளையாகும். விபதுல இறந்தவங்க, அனாதைங்க பிணத்தை வாங்கிக் ஆள் இல்லாம இருந்தா அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிச்சிடுவாங்க. அப்புறம் ரத்ததானம், கண்தானம் போல உடல் தானம் செய்றவங்களும் உண்டு.”

“இந்தச் செண்பகத்தம்மாவோட உடல் எப்படி? ஜி.எச்.சில் இருந்துதான் வந்ததா...?”

“தெரியல. விசாரிக்கணும். பெரும்பாலும் அரசாங்க மருத்துவமனைகளில் இறந்த உடல்களுக்குப் பிரச்சினையிருக்காது. எங்களை மாதிரி தனியார் கல்லூரிகளில்தான் பிரச்சினை. டிமாண்ட் அதிகம். பாடி சப்ளை பண்ணுவதுக்குன்னு மீடியேட்டர்கள், புரோக்கர்கள் இருக்கிறார்கள். சமயத்தில் மாணவர்களே கூட அவர்களுடைய முயற்சியில் ஏற்பாடு செய்வதுண்டு. இப்போ இந்தம்மாவின் மண்டையில் அடிபட்ட தழும்பு இருக்கும்பட்சத்தில் அது கொலைதான்னு எப்படி எடுத்துக்க முடியும்? தவறிக் கீழே விழுந்து மண்டையில் அடிபடவும் வாய்ப் பிருக்கில்லே?”

“இருக்கு. போஸ்ட்மார்ட்டம் செஞ்சு பார்த்திருப்பாங்களே!”

ஒரு வாரம் மாணவர்களிடையே பரபரப்பாயும் திரில்லாகவும் ஓடிப் போயிருந்தது. போஸ்ட்மார்ட்டம் செண்பகத்தின் மண்டையில் தாக்கப்பட்டு அவள் மூர்ச்சையாகி விழுந்து இறந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என வானிலை அறிக்கைபோல குழப்பிற்று.

அந்த உடல் அரசு மருத்துவமனையிலிருந்து பெறப்பட வில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

பிறகு எப்படி?

விஜய், அனாடமி அசிஸ்டென்ட்டை குடைய, “இது ஒரு வாரம் முன்புதான் சார் எங்களுக்குக் கிடைத்தது” என்றார்.

“எப்படி?”

“அட்டெண்டருக்குத்தான் அந்த விவரம் தெரியும்.”

“அட்டெண்டர் எங்கே?”

“அவர் லீவு சார்!”

“எப்போதிருந்து?”

சுஷ்மா மயங்கி விழுந்து விஷயம் வெளியான நாளுக்கு மறுதினத்தில் இருந்து அவர் எமர்ஜென்ஸி விடுப்பில் சென்றிருப்பதும் தெரிந்தது.

“அட்டெண்டரோட வீட்டு விலாசம் தர முடியுமா?”



 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty Re: தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by சிவா Thu Jun 11, 2015 10:52 pm

தந்தார்கள். ஆனால் இன்ஸ்பெக்டர் விஜய்க்கு அங்கே ஏமாற்றமே மிச்சம். அவர் குடும்பத்துடன் ஊருக்குப் போய் விட்டதாய் அக்கம் பக்க வீட்டினர் தெரிவித்து, “என்ன விஷயம் சார்?” என்று ஊர் வம்பிற்கு அலைந்தனர்.

இந்த ரூட் இனி சரிப்படாது. வேறு மார்க்கத்தில் விசாரணையைத் தொடரவேண்டும். எங்கே ஆரம்பிப்பது? எப்படி கொண்டு போவது?

சுஷ்மா ஒரு வாரமாய் மிகவும் உடைந்து போயிருந்தாள். எதிலும் சிரத்தையில்லாமல் வகுப்பிலும் கவனமல்லாமல் இருந்தவளைப் பார்க்க சுரேஷிற்குக் கஷ்டமாயிற்று.

‘அம்மா, அம்மா’ என்று உருகுகிறாள். அம்மாவைப் பார்த்துவிட்ட சந்தோஷத்தில் மிதந்தாள். கைக் கொட்டியது வாய்க்கெட்டாமல் போயிற்று. இதற்கு அவளைப் பார்க்காமலே இருந்திருக்கலாம்.

மலேசியாவிலுள்ள முகுந்தனுக்குத் தகவல் போய் அவர் அடுத்த விமானத்தைப் பிடித்து வந்திருந்தார். செண்பகத்தின் உடலைப் பார்த்துப் பொங்கி அவர் அழுத்து சங்கடமாயிற்று.

பெரியவர், பணக்காரர், பிசினஸ்மேன், எவ்வளவோ பேர்களுக்கு வேலை கொடுப்பவர், இத்தனை சாதுவா என வியப்பு.

“சுரேஷ், என்ன இதெல்லாம்? நீங்க இருக்கீங்கங்கிற தெம்பில் இருந்தேன். எப்படி? என் மனைவிக்கு இப்படி?”

“தெரியல சார். போலீஸ் தீவிரமாய் விசாரிச்சுக்கிட்டிருக்கு.”

“இல்லை. போலீசை மட்டும் நம்பி பிரயோஜனமில்லை. நீங்களும் களத்தில் இறங்கணும். எனக்கு மனைவி இல்லேங்கிறது ஏற்கனவே முடிவாகிப் போச்சு. நான் கவலைப்படறதெல்லாம் சுஷ்மாவுக்காகத்தான். அவளோட கண்ணீர் என்னைக் கலக்குது. கரைக்குது. மீண்டும் அவளை நான் புத்துணர்வோட பார்க்கணும்.”

அன்று மாலை.

சுரேஷ், சுஷ்மாவைத் தன் குவார்ட்டர்ஸிற்கு அழைத்திருந்தான். முன்பெல்லாம் அவள் வந்தால் யாராவது பார்த்தால் தப்பாய் பேசுவார்கள் என்கிற பயமிருக்கும்.

இப்போது அதில்லை. யாருக்குப் பயப்படணும்? அவளது தந்தையே அவளை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்.

வீட்டுக்கு வந்ததும் சுஷ்மா சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏய், என்ன இது? இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி?”

அவள் பதில் சொல்லவில்லை.

“காலேஜ் மேகஸின் வேலையெல்லாம் அப்படியே இருக்காமே... பிரன்சிபால் ரொம்ப வருத்தப்பட்டார்”

“சுரேஷ்... என் அம்மா...”

“சின்னக் குழந்தையா நீ? தோ பார், நீ அழுதா நல்லாயில்லே. உனக்கு ஆண்டவன் அழகைக் கொடுத்திருக்கான். அறிவைக் கொடுத்திருக்கான். அதைக் காப்பாத்திக்கணும். எப்போதும் மலர்ச்சியா இருக்கணும். அதைவிட முக்கியமா நான் நினைக்கிறது உன் திறமை! பாட்டு, எழுத்து, நடனம், பேச்சு, ஓவியம்னு உங்கிட்ட உள்ள திறமைகள் தானே வந்த்ததில்லை. நீயே கஷ்டப்பட்டு, ஆர்வப்பட்டு முயற்சி பண்ணி உருவாக்கினது. உன் அழகைவிட ஐ அட்மையர் யுவர் டேலன்ட்ஸ். அது எக்காரணம் கொண்டும் பாழாகிடக் கூடாது.”

சுரேஷ் அவளிடம் ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் அலறிற்று. எதிர்முனையில் இன்ஸ்பெக்டர் விஜய், “டாக்டர், அந்தம்மா கேஸில் ஒரு புது திருப்பம்” என்றார்.


 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty Re: தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by சிவா Thu Jun 11, 2015 10:52 pm

20

“சுரேஷ் ஆவல் தாங்காமல், “என்ன... என்ன அது திருப்பம்?” என்றான்.

மறுமுனையில் இன்ஸ்பெக்டர் விஜய் சிரித்தபடி, “புதுத் தகவல் கிடைச்சிருக்கு... எனக்கென்னவோ நம் விசாரணைக்கு இது பயன்படும்னு தோணுது!”

“என்ன அதுன்னு இன்னும் நீங்க சொல்லலே!”

“அவசரமா நான் வெளியே கிளம்பிக்கிட்டிருக்கேன். நேரில் பேசுவோமே!” அவர் வைத்துவிட. சுரேஷிற்கு ஏமாற்றம்.

சுஷ்மா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்குக் கூசிற்று.

அந்தப் பார்வையில் ஒரு வீச்சு இருந்த்து. இவன் என்னவன், எனக்குரியவன். இவனிடம் என்னையே தரலாம். ‘தரலாமா...’ என்று கேட்கிற பாவம்.

பார்வை, பார்வை, கொல்கிறாள். இவர்களுக்கு இநத் வசீகரம் எங்கிருந்து வருகிறது? யார் சொல்லித் தருகிறார்கள்? எங்கே பயிற்சி பெறுகிறார்கள்?

சுரேஷ் பேச்சை மாற்ற வேண்டி, “சுஷ், உடங்கம்மாவின் மரணம் இயற்கையானதில்லை. கொலை எனும் பட்சத்தில் அதைச் செய்தவர்களைக் கண்டுபிடிப்பதில் உனக்கும் ஆர்வம்தானே!”

“ஷ்யூர்... இதென்ன கேள்வி?”

“அதுக்கு உன் உதவியும் தேவைப்படுது.”

“என்ன செய்யணும் சொல்லுங்க?” என்று அவனை உரசிக்கொண்டு எழுந்தாள்.

“அன்னிக்கு ஒருநாள் பசங்க காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து... அவர்களை நான் பிடித்து... அவர்கள் என்னைத் தாக்கி ஆஸ்பத்திரி.... ஞாபகமிருக்கா? நீ கூட அவர்களை அழைத்து வந்து ஸாரி சொல்ல வைத்தாயே!” என்று தன் நெற்றியைத் தடவிக்கொண்டு புன்னகைத் தான்.

“யெஸ்ஸ்.... ஸ்....” என்று நாணினாள். “அன்னிக்கு என்னையு மறியாமல் ஒரு உந்துதல். பசங்க அப்புறமாய் நிறைய கிண்டல் பண்ணாங்க. அதுக்கென்ன இப்போ?”

“காம்பவுண்ட் தாண்டினதுக்கு அன்று அவர்கள் சொன்ன காரணம். அனாடமிக்காகப் பிணம் தேடப் போனோம் என்பது.”

“யெஸ்.... யெஸ்... ஐ ரிமம்பர்! அதுனால?”

“போன மாதம் விடுமுறைக்கு முன்வரை அனாடமிக்கு பாடி இல்லை. அதுக்குப் பிறகு இரண்டு வாரத்தில் கிடைச்சிருக்கு. உங்கம்மா காணாமல் போயும் இரண்டு வாரங்கள். எனக் கென்னவோ. அந்தப் பசங்களை விசாரிச்சா....”

“சேச்சே, பசங்கள கொலை வரை போவாங்கன்னு நான் நினைக்கலே. எங்கம்மாவைக் கொலை செய்ய அவங்களுக்கு என்ன மோட்டிவ்?”

“பல சமயங்களில் மோட்டிவ் இல்லாமலேயே குற்றங்கள் நடக்கின்றன. எதிர்பாரா நிகழ்வு. அவர்களைக் கொஞ்சம் வரச் சொல்றியா? பேசுவோம்!”

“நீங்கள் கூப்பிடலாமே!”

“இல்லை, வேணாம். பசங்க பதுங்க அல்லது தயங்கக்கூடும். நீயே சும்மா காபி ஷாப்புக்குக் கூப்பிடு.”

அன்று மாலை.

ஜானி, கணேஷ் தன் நண்பர்களுடன் காபி ஷாப்பில் ஆஜர். சுஷ்மா அங்கே வரவேற்க, “என்ன விசேஷம்? உனக்குப் பிறந்த நாளா?”

“இல்லை, எனக்கு!” என்று சுரேஷ் மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் கணேஷ் பதறின மாதிரி, பயந்த மாதிரி தெரிந்த்து. அதை மறைத்துக் கொண்டு, “மெனி, மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் த டே சார்!” என்றான்.

“ரொம்ப நன்றி. வாழ்த்தோட நிறுத்திக்காம அப்படியே இவங்கம்மாவோட பாடி எங்கே கிடைச்சதுன்னும் சொல்லிட்டா இன்னும் அதிக நன்றி உடையவனா இருப்பேன்.”

“சார், பாடியா?” என்று மிரண்டார்கள். “சத்தியமா எங்களுக்கு எதுவும் தெரியாது.”

அவர்கள் ‘காபியும் வேணாம், ஒண்ணும் வேணாம்’ என்று கிளம்ப முயல, “ஏய், வெயிட்... வெயிட். அனாவசியமா காம்பஸுக்குள்ளே போலீஸைக் கொண்டுவர வேணாம்னு பார்த்தேன்!”

போலீஸ் என்றதும் அவர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாய் வியர்த்தது. “சார்! நீங்க எங்க மேல சந்தேகப்படறீங்கன்னு புரியுது. அன்னைக்கு ‘பாடி’ தேடப் போனோம்னு நாங்க சொன்னது பொய். வெளியே கிளப்புக்குப் போயிட்டு வந்தப்போதான் உங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோம்! ஏற்கனவே உங்களைத் தாக்கியாச்சு. அதோட ரெண்டாவது குற்றமா கிளப்பும் சேர்க்கப்படும்னு தான் மறைச்சோம்! சுஷ்மா! இதுதான் உண்மை! சாருக்கு எடுத்துச் சொல்லு. நீ சொன்னா கேட்பார்!”


 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கத் தாமரைப் பெண்ணே! - Page 5 Empty Re: தங்கத் தாமரைப் பெண்ணே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum