புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத் தாமரைப் பெண்ணே!
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
வாழ்த்துரை
நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.
சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.
ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.
எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.
குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.
இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.
பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.
இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,
அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி
அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.
இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.
மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.
கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,
இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.
முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.
இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்
அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.
பதிப்புரை
எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.
கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,
எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,
எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.
அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.
கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.
இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,
அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்
வாழ்த்துரை
நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.
சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.
ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.
எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.
குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.
இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.
பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.
இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,
அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி
அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.
இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.
மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.
கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,
இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.
முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.
இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்
அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.
பதிப்புரை
எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.
கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,
எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,
எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.
அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.
கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.
இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,
அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“அதுக்கு ஒரு வாரமாகும். இப்போ நாங்க வந்தது ஆயாவை... ஸாரி, சுஷ்மாவின் தாயைப் பார்க்க...”
“டாக்டர் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க! நேத்து இந்தப் பெண் நடத்துன கூத்தில் ஆயா அப்செட் அந்தம்மாவுக்கு இதில் ஆர்வம் இல்லேங்கிறபோது எதுக்காக நிர்ப்பந்திக்கணும்?”
“நிர்ப்பந்திக்கலை! ஒரே ஒரு முறை மட்டும் பார்த்துட்டுப் போகிறோம்... ப்ளீஸ்... அவங்களைக் கூப்பிட முடியுமா?”
“அவங்க இங்கே இல்லை.... !”
“அப்புறம்?”
“பக்கத்து பில்டிங்கில் இதேபோல தொட்டில் குழந்தைகளைப் பராமரிக்கிறோம். தெருவில் ரோடில் அல்லது மருத்துவமனையில் அனாதையாக விடப்படும் குழந்தைகளைப் பாதுகாக்கும் இடம் அது. அங்கே போயிருக்கிறார்கள்.”
சுரேஷிற்கு அவர் பேரில் மதிப்பு தோன்றிற்று. அவரவர் தனக்குத் தன் குடும்பம், தன் பிள்ளைகள் என பேணும்போது இவர்கள் பிறருக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். சகிப்புத்தன்மையுடன் கூடிய சேவை!
“இப் யூ டோன்ட் மைன்ட். ஒரு அஞ்சு நிமிஷம்”
“சரி வாங்க.”
அடுத்த கட்டடம் சமீபத்தில் கட்டப்பட்டு ஈர சுவாசம் இன்னமும் மிச்சமிருந்தது. ஹாலில் ஆங்காங்கே சங்கிலியில் தொட்டில்கள், அதற்குமேல் வண்ண பலூன்கள், கிலுகிலுப்பை, தலையாட்டிக் கண்சிமிட்டும் பொம்மைகள், பால் புட்டிகள்...
பணிப்பெண்கள் குழந்தைகளைத் தூக்கிப் பால் கொடுப்பதும், குளிப்பாட்டி, உடை மாற்றி தொட்டிலில் கிடத்துவதுமாய் இருந்தனர். தகவல் கொடுத்ததும் ஆயா ஈரம் பட்ட புடவையைச் சரிபண்ணிக் கொண்டு வந்தாள்.
அவளது கண்கள் சிவந்து, கன்னம் வீங்கி, ராத்திரி முழுக்க அவளும் தூக்கமில்லாமல் அழுதிருக்க வேண்டும்... புரிந்தது.
“ஆயா, இந்தப் பொண்ணு மறுபடியும் மறுபடியும் வந்து தொந்தரவு பண்ணுது. இன்னைக்குப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.”
“டாக்டர் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க! நேத்து இந்தப் பெண் நடத்துன கூத்தில் ஆயா அப்செட் அந்தம்மாவுக்கு இதில் ஆர்வம் இல்லேங்கிறபோது எதுக்காக நிர்ப்பந்திக்கணும்?”
“நிர்ப்பந்திக்கலை! ஒரே ஒரு முறை மட்டும் பார்த்துட்டுப் போகிறோம்... ப்ளீஸ்... அவங்களைக் கூப்பிட முடியுமா?”
“அவங்க இங்கே இல்லை.... !”
“அப்புறம்?”
“பக்கத்து பில்டிங்கில் இதேபோல தொட்டில் குழந்தைகளைப் பராமரிக்கிறோம். தெருவில் ரோடில் அல்லது மருத்துவமனையில் அனாதையாக விடப்படும் குழந்தைகளைப் பாதுகாக்கும் இடம் அது. அங்கே போயிருக்கிறார்கள்.”
சுரேஷிற்கு அவர் பேரில் மதிப்பு தோன்றிற்று. அவரவர் தனக்குத் தன் குடும்பம், தன் பிள்ளைகள் என பேணும்போது இவர்கள் பிறருக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். சகிப்புத்தன்மையுடன் கூடிய சேவை!
“இப் யூ டோன்ட் மைன்ட். ஒரு அஞ்சு நிமிஷம்”
“சரி வாங்க.”
அடுத்த கட்டடம் சமீபத்தில் கட்டப்பட்டு ஈர சுவாசம் இன்னமும் மிச்சமிருந்தது. ஹாலில் ஆங்காங்கே சங்கிலியில் தொட்டில்கள், அதற்குமேல் வண்ண பலூன்கள், கிலுகிலுப்பை, தலையாட்டிக் கண்சிமிட்டும் பொம்மைகள், பால் புட்டிகள்...
பணிப்பெண்கள் குழந்தைகளைத் தூக்கிப் பால் கொடுப்பதும், குளிப்பாட்டி, உடை மாற்றி தொட்டிலில் கிடத்துவதுமாய் இருந்தனர். தகவல் கொடுத்ததும் ஆயா ஈரம் பட்ட புடவையைச் சரிபண்ணிக் கொண்டு வந்தாள்.
அவளது கண்கள் சிவந்து, கன்னம் வீங்கி, ராத்திரி முழுக்க அவளும் தூக்கமில்லாமல் அழுதிருக்க வேண்டும்... புரிந்தது.
“ஆயா, இந்தப் பொண்ணு மறுபடியும் மறுபடியும் வந்து தொந்தரவு பண்ணுது. இன்னைக்குப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிர்வாகி சுஷ்மாவை ஆயாவிடம் விட்டுவிட்டு சுரேஷை அழைத்துக்கொண்டு வேளியே வந்தார்.
அவர்களின் கண்களிலிருந்து மறைந்ததும் சுஷ்மா, “அம்மா, எம்மேல உனக்குக் கொஞ்சம்கூட இரக்கமே இல்லையா?” என்று நா தழுதழுத்தாள்.
“என்னை எல்லோரும் பைத்தியம்ங்கிறாங்க. உளர்றேன்னு ஏசுறாங்க.”
ஆயா எதிர்பாராதவிதமாய், “என்னை மன்னிச்சுடு.” என்று சுஷ்மாவின் காலில் விழ, அவளுக்கு வெலவெலத்துப் போயிற்று.
“அம்மா, என்ன இது? எழுந்திரு.” என்று பிடித்துத் தூக்கித் தன் தோளில் தாங்கிக்கொண்டு அவளது கண்ணீரைத் துடைத்து விட்டாள்.
“அம்மா... அம்மா... உனக்கேன் இந்தக் கொடுமை?”
“எல்லாம் என் தலையெழுத்து.”
‘தலையெழுத்தில்லை. திமிர், புத்தியின்மை, லூசுத்தனம்’ என்று வாய் வரை வந்த வார்த்தைகளை சுஷ்மா அடக்கிக்கொண்டாள். வேண்டாம். ஏற்கனவே இவள் நிறைய அனுபவித்துவிட்டாள். நாம் வேறு அதைத் குத்திக்காட்டக் கூடாது.
“அம்மா, அப்பா நல்ல நிலையில இருக்கார். எனக்காகத் தனி பங்களாவே கட்டிவைச்சிருக்கார். உன்னை எப்போதுமே விசாரிச்சு உன் நினைப்பாகவே இருக்காரும்மா சித்தி கூட இங்கே வந்தாங்க!”
சுஷ்மா படபடவெனப் பேச, செண்பகம் அவளை அப்படியே வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“அம்மா, நீ கஷ்டப்பட்டதெல்லாம் போதும்மா! எங்க்கூட வந்திரும்மா. அப்பா பண்ணது தப்புதான். உனக்குத் துரோகம்தான். ஆனா, எதுவுமே திட்டமிட்டு இல்லியே! நம் வசதியைப் பெருக்கணும், நம்மை நல்லா வச்சுக்கணும்தானே... சித்தி குறுக்கே வந்தது ஒரு விபத்து. அதுல அவரைக் குற்றம் சொல்ல ஏதுமில்லைம்மா!”
“ஆம்மா! குற்றம் எல்லாம் என் பேரில்தான். ஏதோ ஒரு வேகத்துல புத்தி மழுங்கி உன்னை விட்டுட்டு வந்துட்டேன். யோசிக்கலே. ஆவேசம். நம்பிக்கைத் துரோகம்னு ஏமாற்றத்துல ரயில்ல விழுந்து சாகப்போன என்னைக் காப்பாத்தி இங்கே கொண்டு வந்துட்டாங்க. அப்புறம் கைக்குழந்தைங்க, அனாதைப் பசங்கன்னு பார்த்த பிறகு உன்னை விட்டுட்டு வந்த பாவத்தை இந்தப் பிள்ளைங்களுக்குச் சேவை செஞ்சு தீர்த்துக்கறேன்.”
“போனதெல்லாம் போகட்டும். இப்போதாவது உண்மையை ஒப்புக்கிட்டியே அது போதும். வாம்மா, எங்கூட வந்திரு. பழசையெல்லாம் மறந்திட்டு நாம் புதுவாழ்க்கையை ஆரம்பிப்போம். அப்பாவையும் அழைச்சுக்கலாம். அவரும் மலேசியாவை விட்டுட்டு இங்கே வரத் தயாரா இருக்கார். நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம் நிர்வாகிக்கிட்ட நான் பேசறேன். அப்பாட்ட சொல்லி இந்த ஆசிரமத்திற்கு நிறைய பணம் தரலாம். வாம்மா, எங்கூட வந்திரு.”
சுஷ்மா உருக, செண்பகம் சட்டென அவளிடமிருந்து விலகி, “இல்லை. நான் வர்றதா இல்லை, நீ போகலாம்.” என்றாள் உறுதியாய்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
13
சுஷ்மா செண்பகத்தின் கையைப் பிடித்துக்கொண்டு, “ப்ளீஸ்ம்மா ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள்.
“இவ்ளோ நாள் அனாதை போல நான் வெறியோட, வைராக்கியத்தோட இருந்துட்டேன். இனியும் அப்படி முடியாதும்மா. தெய்வமா பார்த்து உன்னை என் கையில் காட்டியிருக்கு. வந்திரும்மா நீ. அப்பாக்கூட சேராட்டியும் பரவாயில்லை. நாம தனியா இருப்போம். நான் உன்னைக் காப்பாத்துறேன்”
செண்பனம் அவளது வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கத் தயாரில்லாத்து போல விரைப்பாய் நின்றிருந்தாள்.
“அம்மா, அம்மா...”
“ஷ்ஷ்ஷ்... இனி ஒரு வார்த்தை பேசக்கூடாது. என்னைப் பார்க்கவும் வரக்கூடாது. அப்படி வந்தால் அப்புறம் என்னை உயிரோடப் பார்க்கமுடியாது, ஆமா, சொல்லிட்டேன்.”
அவள் சொல்லிவிட்டு விருட்டென்று நடக்க, அதுவரை இருந்த சந்தோஷமெல்லாம் வந்துபோக, சுஷ்மா பிடித்துவைத்த்து போல நின்றிருந்தாள்.
சுரேஷைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த சோகமெல்லாம் மடைதிறந்து கண்ணீராய்க் கசிந்த்து.
“சார், நான் துரதிர்ஷ்டக்கட்டை, ராசியில்லாதவ, இந்த அனாதைப் பிள்ளைகளுக்காவது பரவாயில்லை, ஆசிரம்ம் இருக்க, ஆதரவு தெரிவிக்க அறக்கட்டளை இருக்க, எல்லாம் இருந்தும் எனக்க யாருமில்லை.”
சுஷ்மா அழ ஆரம்பிக்க, சுரேஷ் அவளை அரவணைத்து, “எல்லாம் சரியாகும், வா போகலாம்..” என்றான்.
“எனக்கு அந்த நம்பிக்கையில்லை. அம்மாவுக்க ஏன் என் மேல் அவ்வளவு வெறுப்புன்னு புரியலை.”
“சேச்சே, வெறுப்பெல்லாம் இல்லை. ஷாக். பதற்றத்துல அவங்களுக்குப் பேச்சு வரலே. பெத்த பெண்ணை விட்டுட்டு வந்துட்டோமே என்கிற குற்ற உணர்வு. கொஞ்சம் அவகாசம் கொடு. அவங்களும் உன் பிரிவை உணர்வார்கள். அப்போ உன்னைத் தேடி வருவார்கள்.”
மருத்துவக் கல்லூரி.
அனாடமி வகுப்பு.
மூத்த லெக்சார் ஒரு மருத்துவ விடுப்பில் போயிருக்க சுரேஷிற்கு முழுநேர அஸிஸ்டென்ட் லெக்ச்ர்ராக நியமனம் கிடைத்திருந்த்து.
அனாடமி என்றாலே அவனுக்க அலர்ஜி. இன்று நேற்றல்ல, படிக்கம்போது முதல் முதலில் பிணத்தைப் பார்த்த்திலிருந்து.
பொது மருத்துவம் என்றாலும் சரி, பல், கண், காது, மூக்கு என்று எந்தப் பிரிவானாலும் சரி அனாடமி உண்டு.
அனாடமிக்குப் பிணங்கள் கிடைப்பது அரிது. இதற்காகப் பல புரோக்கர்கள் உண்டு. விபத்து அல்லது அனாதைப் பிணங்களை ரசாயனக் கரைசலில் ஊறவைத்து ரத்தம் கண்டின பின் விரைப்புடன் குளிர் அறையில் பதப்படுத்தி வைப்பார்கள்.
சுஷ்மா செண்பகத்தின் கையைப் பிடித்துக்கொண்டு, “ப்ளீஸ்ம்மா ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள்.
“இவ்ளோ நாள் அனாதை போல நான் வெறியோட, வைராக்கியத்தோட இருந்துட்டேன். இனியும் அப்படி முடியாதும்மா. தெய்வமா பார்த்து உன்னை என் கையில் காட்டியிருக்கு. வந்திரும்மா நீ. அப்பாக்கூட சேராட்டியும் பரவாயில்லை. நாம தனியா இருப்போம். நான் உன்னைக் காப்பாத்துறேன்”
செண்பனம் அவளது வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கத் தயாரில்லாத்து போல விரைப்பாய் நின்றிருந்தாள்.
“அம்மா, அம்மா...”
“ஷ்ஷ்ஷ்... இனி ஒரு வார்த்தை பேசக்கூடாது. என்னைப் பார்க்கவும் வரக்கூடாது. அப்படி வந்தால் அப்புறம் என்னை உயிரோடப் பார்க்கமுடியாது, ஆமா, சொல்லிட்டேன்.”
அவள் சொல்லிவிட்டு விருட்டென்று நடக்க, அதுவரை இருந்த சந்தோஷமெல்லாம் வந்துபோக, சுஷ்மா பிடித்துவைத்த்து போல நின்றிருந்தாள்.
சுரேஷைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த சோகமெல்லாம் மடைதிறந்து கண்ணீராய்க் கசிந்த்து.
“சார், நான் துரதிர்ஷ்டக்கட்டை, ராசியில்லாதவ, இந்த அனாதைப் பிள்ளைகளுக்காவது பரவாயில்லை, ஆசிரம்ம் இருக்க, ஆதரவு தெரிவிக்க அறக்கட்டளை இருக்க, எல்லாம் இருந்தும் எனக்க யாருமில்லை.”
சுஷ்மா அழ ஆரம்பிக்க, சுரேஷ் அவளை அரவணைத்து, “எல்லாம் சரியாகும், வா போகலாம்..” என்றான்.
“எனக்கு அந்த நம்பிக்கையில்லை. அம்மாவுக்க ஏன் என் மேல் அவ்வளவு வெறுப்புன்னு புரியலை.”
“சேச்சே, வெறுப்பெல்லாம் இல்லை. ஷாக். பதற்றத்துல அவங்களுக்குப் பேச்சு வரலே. பெத்த பெண்ணை விட்டுட்டு வந்துட்டோமே என்கிற குற்ற உணர்வு. கொஞ்சம் அவகாசம் கொடு. அவங்களும் உன் பிரிவை உணர்வார்கள். அப்போ உன்னைத் தேடி வருவார்கள்.”
மருத்துவக் கல்லூரி.
அனாடமி வகுப்பு.
மூத்த லெக்சார் ஒரு மருத்துவ விடுப்பில் போயிருக்க சுரேஷிற்கு முழுநேர அஸிஸ்டென்ட் லெக்ச்ர்ராக நியமனம் கிடைத்திருந்த்து.
அனாடமி என்றாலே அவனுக்க அலர்ஜி. இன்று நேற்றல்ல, படிக்கம்போது முதல் முதலில் பிணத்தைப் பார்த்த்திலிருந்து.
பொது மருத்துவம் என்றாலும் சரி, பல், கண், காது, மூக்கு என்று எந்தப் பிரிவானாலும் சரி அனாடமி உண்டு.
அனாடமிக்குப் பிணங்கள் கிடைப்பது அரிது. இதற்காகப் பல புரோக்கர்கள் உண்டு. விபத்து அல்லது அனாதைப் பிணங்களை ரசாயனக் கரைசலில் ஊறவைத்து ரத்தம் கண்டின பின் விரைப்புடன் குளிர் அறையில் பதப்படுத்தி வைப்பார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனிதனுக்கு உயிரோடு இருக்கும்போது ’மதிப்பு’ இருக்கிறதோ இல்லையோ பிணத்திற்கு ஏக கிராக்கி. பசங்களுக்குள் அடிதடி நடக்கும், மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் பிணத்திற்குப் படாதபாடுபடும், மாணவர்களிடம் இதற்காகப் பணம் கறந்தாலும்கூட பத்து மாணவர்களை ஒன்று சேர்த்து ஒரே உடலைக் கூறு போடச் சொல்லுவார்கள்.
இன்று அந்தப் பத்தில் சுஷ்மாவும் இருந்த்து இவனுக்க உற்சாகம் தந்த்து. அதே சமயத்தில் சங்கடமும், அவளின் அறிமுகம் இல்லாத போது எதுவும் தெரியவில்லை. இப்போது எங்கு நோக்கினும் அவள்.
சுஷ்மாவுடன் நெருங்கிப் பழகவும் அவளுக்க ஆறுதலாக இருக்கும்படியும் சம்பவங்கள் அவனைத் தேடி வருவதாகவே பட்டது. அவள் வகுப்பில் இருந்தாலே பூரிப்பு. ஆனால் அனாடமி என்றதும் சுரேஷுக்கு லேசாய் வியர்த்த்து. சரியாய் சொல்லித்தர வேண்டுமே என்கிற பதட்டம்.
படிக்கிற நாளில் முதன்முதலில் உடலைப் பார்த்துப் பரிதவித்த்து இன்னும் அவனது மனதில் நிழலாடியது.
ஏ.ஸி. ஹால், ஆங்காங்கே போர்த்தி வைத்தி பிணங்கள், நாற்றம், கையில் உறையிட்டு லெக்சரர் பசங்களைச் சுற்றி நிறத்தி வினாவினார்.
சுரேஷுக்கு உதறல்,
அவர் சொல்லிக்கொடுத்த போது எல்லாம் தெளிவாய் இருந்த்து. கத்தியைக் கொடுத்து. “பிணத்திற்கு உயிர் கொடுங்கள்.“ என்றபோது கூட வெடவெட, உள்ளுக்குள் ஜுரம், வயிறு கலங்கி குமட்டல், போர்த்தியிருந்த துணியை விலக்கினதுமே அவனுக்குக் கைகளில் நடுக்கம்.
“என்ன தயக்கம்? ம்...ஆரம்பி. தலையிலிருந்து கால் கீறி தசைகளையும் நரம்புகளையும் அலசவேண்டும்.”
அவன் அந்த உடலின் தலையில் கத்தியை வைத்து அழுத்த கத்தி எகிறிக்கொண்டு விழுந்த்து. சுற்றியிருந்த மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் சிரிக்க, அவனுக்கு அவமானமாயிற்று, அதில் பதற்றம் அதிகமாயிற்று, ஆவேசத்தில் தன் முழு சக்தியையும் கைக்குள் கொண் கொண்டு போய் மண்டையிலிருந்து ஆரம்பித்து உடலில் அழுத்த...
உடல் அப்படியே விறகு பிளப்பதுபோல பிளந்து, ‘இப்போ என்ன சொல்றீங்க?‘ என்று இறுமாப்புடன் பார்த்தபோது லெக்சரர், “சே, நாஷ்தி பண்ணிட்டியே” என்று அவனது முதுகில் அறைந்தார்.
தட்டிக்கொடுப்பார் என்று பார்த்தால் இப்படி தட்டுகிறாரே, என்று வந்த கோபத்தை அடக்கிக் கொண்டான். வெட்கங்கெட்ட கோபம்.
“‘ஏய், என்ன இது?”
“நீங்கதானே சார்...”
நான் வெட்டவா சொன்னேன். சொல்லித்தரும் போது கவனம் எங்கே போச்சு? மாணவிகளிடம் ஜொள். இப்போ என் கழுத்தை அறு. மெல்லிக்கீறி பகுதிப் பகுதியாய், செதில் செதிலாய் எடுத்துப் பாகங்களைக் குறிப்பெடுக்கச் சொன்னால் என்ன பண்ணித் தொலைத்தாய்?”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அவனுக்குத் திரும்பவும் மாணவிகளின் முன்னில் அசிங்கமாயிற்று, மனிதர் தனியாய் அழைத்துப்போய் நாலு மிதி மிதித்திருந்தாலும் கூட வலிக்காது. இங்கே இவர்களை வைத்துக்கொண்டு,கொடுமைடா!
“ஏய், முட்டாள் நான் அரும்பாடுபட்டு நிர்வாகத்திடம் ஏற்பாடு செஞ்ச உடலை இப்படிப் பண்ணிட்டியே! இனி மற்ற ஸ்டூடண்ட்ஸ் என்ன பண்றதாம்?”
அவர் கத்த அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. பிறகு அறைக்குப் போனதும் காய்ச்சல், நான்கு நாட்கள் எழவில்லை.
அப்படி எதுவும் இப்போது நடந்துவிடக் கூடாது என்று பிரார்த்தனை பண்ணிக்கொண்டான். இன்று சுஷ்மா வேறு இருக்கிறாள். எங்குப் போனாலும் அவள் பிரதானமாய்த் தொடர்கிறாள்...ஏன்? அவளை நினைத்தாலே நெஞ்சுக்குள் பஞ்சு பறக்கிறது. தூக்கம் மறுக்கிறது. எப்போதும் ஒரு மிதப்பு.
மாணவர்கள் தயாராகியிருக்க, அனாடமி ஹாலுக்குள் பிரவேசிக்கும்போதே அட்டெண்டர் அவசரமாய் வந்து வழியை மறித்தார். “இன்னிக்கு அனாடமி கிளாஸ் இருக்குன்னு யாருமே சொல்ல்லையே சார்!“
“அதனால் என்ன! இப்போ சொல்றேன் கிளாஸ் இருக்கு.”
“இன்னொரு நாள் வச்சுக்கலாமே!”
“ஏன்?”
“பாடி ரெடியாயில்லையே!”
“அதான் ஏன்னேன்?”
“என்ன பண்றது சார்! கசாப்புக்கடையில வேலையில செஞ்சமாதிரி ஆளாளுக்கு வெட்டிக் கூறுபோட்டா எங்கே போறதாம்.” என்க. சுரேஷுக்க அவனைத் திட்டுகிற மாதிரி இருந்த்து.
“என்னப்பா கடைசி நேரத்துல இப்படிச் சொல்றே?” என்றவன் விஜய்யைப் பார்த்து, “என்னப்பா, அன்னைக்கு இதுக்காகத்தானே காம்பவுண்டை தாண்டினீங்க!”
“ஆமாம் சார், ஆனா எதுவும் கிடைக்கலியே!” என்று அவன் தலையைச் சொரிந்தான்.
“அட்டெண்டர், பாடி எப்போ கிடைக்கும்? அடுத்த வாரம் செமஸ்டர் வருது. பிறகு லீவு வேற...”
“லீவு முடியறதுக்குள்ள ஏற்பாடு பண்ணிறலாம் சார்!” என்றான். அந்த ஏற்பாடு எந்த ஏற்பாடு எந்த மாதிரி விபரீதத்தில் கொண்டுபோய் விடப் போகிறது என்பதை அறியாதவனாய்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
14
சுஷ்மா தற்போதெல்லாம் தெளிவாகியிருந்தாள். அதற்குக் காரணம் சுரேஷ், அவளது அண்மை, அவன் தரும் தெம்பு, அவர்கள் இருவரின் நெருக்கம் மாணவர்கள் அளவில் தெரிந்தாலும் அவன் அடக்கி வாசித்தான்.
மாணவர்கள் தங்கள் வழிசலை, காதலை, கல்லூரிக் காம்பவுண்டுக்குள்ளேயே புல்வெளி, மைதானம், காதல் மரம், கேண்டீன், லைப்ரரி, லேப் என்ற பரிமாறிக் கொள்ள முடியும். யாரும் வித்தியாசமாய் பார்க்கமாட்டார்கள்.
ஆனால் அவனுக்கு அப்படியில்லை. வகுப்பைத் தவிர வேறு எஙகும் பேசிவிட முடியாது. செல்போன்தான் அவர்களுக்கு உற்ற நண்பன்.
ஒரு சமயம், “சார், நான் இன்னைக்குச் சந்தோஷமாய் இருக்கேன்.” என்ற குழந்தைபோலக் குதூகலித்தாள் சுஷ்மா.
“மெனி மெனி ஹாப்பி ரிட்டர்ன்ஸ் அப் த டே!”
“என்னதிது?”
“பிறந்த நாள் வாழ்த்து!”
“சீ... அதில்லை. இன்னைக்கு எங்கம்மாட்ட போனில் பேசினேன். நல்லா பேசினாங்க.”
“மகிழ்ச்சி. பார்த்தியா... நான் அன்னைக்கே சொல்ல்லே? சீக்கிரம் உன்னைத்தேடி வந்திருவாங்கன்னு!”
“தாங்க்ஸ் சார்!”
“வெறும் தாங்க்ஸ் தானா...டிரீட்டெல்லாம் கிடையாதா...?”
“கிடைக்கும். என்ன வேணும்னு சொல்லுங்க! இந்த டி.ஏ.பி.ஏ.எஸ்.. டி.ஏ.பி.ஏ.எஸ்.னு சொல்றாங்களே... அது என்ன? பசங்களெல்லாம் போறாங்க.”
சுரேஷ் படிக்கும் நாட்களில் நண்பர்களுடன் அந்த மாதிரி இடங்களுக்குச் சென்றிருக்கிறான். குடி, ஆட்டம், பாட்டம் என அது ஒரு வகை மயக்கம்.
“சுஷ்மா! நமக்கு அது சரிப்படாது. உங்க பங்களாவிற்கு அழைச்சுப்போய் விருந்து கொடுத்தால் வரேன்!”
“நிச்சயமாய்... எங்கப்பா வரும்போது!”
“உங்கப்பா வர்றாரா... மலேசியாவிலிருந்தா? எப்போ? ராசியாயிட்டியா நீ...? அப்பா மேல இருந்த கோபம் போயே போயிருச்சா...?
“போயிருச்சு, நான் பேசவும் அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம், அவர் வரும்போது அம்மாட்ட அழைச்சுப்போய் சர்ப்ரைஸ் கொடுக்கணும். சார்! உங்கள் சந்திப்புக்குப் பிறகு இழந்த ஒவ்வொண்ணா எனக்குத் திரும்பக் கிடைச்சிட்டிருக்கு!”
“கடவுளே! கடவுளே! இதுல என் பங்கு எதுவுமில்லேப்பா! எல்லாமே தானாகவே நடக்குது. உன் கவலைகள் எல்லாம் தீர்ந்து கலகலப்பா பார்க்கணும்னு நான் பிரார்த்தனை பண்ணினதென்னவோ உண்மைதான்!”
“அது! அதுதான் சார்! நல்லவர்கள், நலம் விரும்பிகள் நம்மோட இருக்கும்போது எல்லாம் நல்லதாகவே நடக்கும்!” சுஷ்மா எந்த அளவிற்குச் சந்தோஷமாய் இருந்தாளோ... அதைவிடப் பல மடங்கு கடுப்பு மகேஸ்வரிக்கு, அவளைவிட அதிகமாய் விவேக் கொதித்துப் போயிருந்தான்.
சுஷ்மா தனக்குப் பிடிகொடுப்பதில்லை என்கிற வருத்தம்.
சுஷ்மாவின் பங்களா அவனது பொறுப்பிலிருந்த்து. அவன் அங்கேயே தனது அலுவலகம், பிசினஸ் சமாச்சாரங்களை நடத்தி வந்தான். சுஷ்மா வெறுப்பாய் இருப்பதால் முகுந்தன் இந்தியாவிற்கும் வருவதில்லை.
இப்போது வருகிறார். வந்தால் நான் இங்கிருந்து ‘கெட் அவுட்‘ ஆக வேண்டி வருமோ? சுஷ்மாவும் என்னைவிட்டுப் போய் விடுவாளோ? ஏற்கனவே அவள் சுரேஷ் எனும் லெக்சர்ருடன் இணக்கமாய் இருப்பதை உளவு பார்த்து அறிந்திருந்தான்.
மகேஸ்வரி, “ஏய்... ! நீ ஏர்போர்ட்டுக்குப் போய் மாமாவை அழைச்சு வந்திரு” என்றாள்.
“அதைப் பார்த்தால் முடியுமா...கிளம்பு...”
சுஷ்மா தற்போதெல்லாம் தெளிவாகியிருந்தாள். அதற்குக் காரணம் சுரேஷ், அவளது அண்மை, அவன் தரும் தெம்பு, அவர்கள் இருவரின் நெருக்கம் மாணவர்கள் அளவில் தெரிந்தாலும் அவன் அடக்கி வாசித்தான்.
மாணவர்கள் தங்கள் வழிசலை, காதலை, கல்லூரிக் காம்பவுண்டுக்குள்ளேயே புல்வெளி, மைதானம், காதல் மரம், கேண்டீன், லைப்ரரி, லேப் என்ற பரிமாறிக் கொள்ள முடியும். யாரும் வித்தியாசமாய் பார்க்கமாட்டார்கள்.
ஆனால் அவனுக்கு அப்படியில்லை. வகுப்பைத் தவிர வேறு எஙகும் பேசிவிட முடியாது. செல்போன்தான் அவர்களுக்கு உற்ற நண்பன்.
ஒரு சமயம், “சார், நான் இன்னைக்குச் சந்தோஷமாய் இருக்கேன்.” என்ற குழந்தைபோலக் குதூகலித்தாள் சுஷ்மா.
“மெனி மெனி ஹாப்பி ரிட்டர்ன்ஸ் அப் த டே!”
“என்னதிது?”
“பிறந்த நாள் வாழ்த்து!”
“சீ... அதில்லை. இன்னைக்கு எங்கம்மாட்ட போனில் பேசினேன். நல்லா பேசினாங்க.”
“மகிழ்ச்சி. பார்த்தியா... நான் அன்னைக்கே சொல்ல்லே? சீக்கிரம் உன்னைத்தேடி வந்திருவாங்கன்னு!”
“தாங்க்ஸ் சார்!”
“வெறும் தாங்க்ஸ் தானா...டிரீட்டெல்லாம் கிடையாதா...?”
“கிடைக்கும். என்ன வேணும்னு சொல்லுங்க! இந்த டி.ஏ.பி.ஏ.எஸ்.. டி.ஏ.பி.ஏ.எஸ்.னு சொல்றாங்களே... அது என்ன? பசங்களெல்லாம் போறாங்க.”
சுரேஷ் படிக்கும் நாட்களில் நண்பர்களுடன் அந்த மாதிரி இடங்களுக்குச் சென்றிருக்கிறான். குடி, ஆட்டம், பாட்டம் என அது ஒரு வகை மயக்கம்.
“சுஷ்மா! நமக்கு அது சரிப்படாது. உங்க பங்களாவிற்கு அழைச்சுப்போய் விருந்து கொடுத்தால் வரேன்!”
“நிச்சயமாய்... எங்கப்பா வரும்போது!”
“உங்கப்பா வர்றாரா... மலேசியாவிலிருந்தா? எப்போ? ராசியாயிட்டியா நீ...? அப்பா மேல இருந்த கோபம் போயே போயிருச்சா...?
“போயிருச்சு, நான் பேசவும் அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம், அவர் வரும்போது அம்மாட்ட அழைச்சுப்போய் சர்ப்ரைஸ் கொடுக்கணும். சார்! உங்கள் சந்திப்புக்குப் பிறகு இழந்த ஒவ்வொண்ணா எனக்குத் திரும்பக் கிடைச்சிட்டிருக்கு!”
“கடவுளே! கடவுளே! இதுல என் பங்கு எதுவுமில்லேப்பா! எல்லாமே தானாகவே நடக்குது. உன் கவலைகள் எல்லாம் தீர்ந்து கலகலப்பா பார்க்கணும்னு நான் பிரார்த்தனை பண்ணினதென்னவோ உண்மைதான்!”
“அது! அதுதான் சார்! நல்லவர்கள், நலம் விரும்பிகள் நம்மோட இருக்கும்போது எல்லாம் நல்லதாகவே நடக்கும்!” சுஷ்மா எந்த அளவிற்குச் சந்தோஷமாய் இருந்தாளோ... அதைவிடப் பல மடங்கு கடுப்பு மகேஸ்வரிக்கு, அவளைவிட அதிகமாய் விவேக் கொதித்துப் போயிருந்தான்.
சுஷ்மா தனக்குப் பிடிகொடுப்பதில்லை என்கிற வருத்தம்.
சுஷ்மாவின் பங்களா அவனது பொறுப்பிலிருந்த்து. அவன் அங்கேயே தனது அலுவலகம், பிசினஸ் சமாச்சாரங்களை நடத்தி வந்தான். சுஷ்மா வெறுப்பாய் இருப்பதால் முகுந்தன் இந்தியாவிற்கும் வருவதில்லை.
இப்போது வருகிறார். வந்தால் நான் இங்கிருந்து ‘கெட் அவுட்‘ ஆக வேண்டி வருமோ? சுஷ்மாவும் என்னைவிட்டுப் போய் விடுவாளோ? ஏற்கனவே அவள் சுரேஷ் எனும் லெக்சர்ருடன் இணக்கமாய் இருப்பதை உளவு பார்த்து அறிந்திருந்தான்.
மகேஸ்வரி, “ஏய்... ! நீ ஏர்போர்ட்டுக்குப் போய் மாமாவை அழைச்சு வந்திரு” என்றாள்.
“அதைப் பார்த்தால் முடியுமா...கிளம்பு...”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சென்னை பன்னாட்டு விமான நிலையம்.
வியர்த்தும் வெதும்பியும் பயணிகள் டாக்ஸியிலும் ஆட்டோ, கார்களிலும் வந்து இறங்கினர். டிராலி தள்ளினர். சுற்றுப்புறப் புகை மூச்சு முட்டிற்று.
விவேக் காரை நிறுத்தி விட்டு இறங்கினபோது செல்போன் அலறிற்று, எதிர்ப்பக்க்க் குரலில் பதற்றம், பயம் தெரிந்த்து.
“விவேக், நம்ம திட்டமெல்லாம் பாழ்! போலீஸ் எப்படியோ மோப்பம் பிடிச்சிருச்சு. கஸ்டம்ஸ்ல சிக்கல்!”
“என்னடா சொல்றே! கஸ்டம்ஸ்ல தான் நம்ம ஆள் இருக்கானே அவனைப் போய் பார்!”
“பிரயோஜனமில்லை. அவனுக்கு மேல விஷயம் போயிருச்சு... இப்போ என்ன பண்ண்ணும்னு சொல்லு?”
“எல்லோருமே மாட்டிக்கிட்டாங்களா?”
“இல்லை. ரெண்டு பேர் மட்டும். மத்தவங்களை உள்ளேயே அனுப்பலே.“
“நல்லது. அந்த ரெண்டு சனியன்களும் நம் பெயரைச் சொல்லாம பார்த்துக்க! நான் ஆபிசர்களைப் பார்க்கிறேன். இனி ரூட்டை மாத்தணும்!”
விவேக் வந்த வேகத்திலேயே காரைத் திரும்பிக் கொண்டு பறந்தான். இன்னும் பத்து நிமிடத்தில், ஜெட் ஏர்வேஸ் வந்து நிலம் தொடும். அரைமணி நேரத்தில் மாமா வந்து விடுவார். அதற்குள்... அதற்குள்... சிக்கலை அவிழ்த்துவிட வேண்டும. செல்லில் பலரையும் முயன்றான்.
தாய் மண்ணில் கால் பதிப்பதென்றால் முகுந்தனுக்கு எப்போதுமே சந்தோஷம் துள்ளும். அதுவும் இந்தப் பயணத்தில் பல சந்தோஷங்கள்! சுஷ்மா மனம் மாறிப் பேசினது... வரச் சொன்னது... சில நாட்களுக்கு பிசினஸ் டென்ஷனிலிருந்து விடுதலை!
சுஷ்மாவிற்கென்று பார்த்துப் பார்த்து உடைகள், நகை, செருப்பு என வாங்கி வந்திருந்தார். எப்போதும் கைப்பெட்டியுடன் பயணிப்பவருக்கு இம்முறை பெட்டி கனத்த்து.
பதினோரு மணிக்கு விமானம் சென்னையைத் தொட்டதும் உற்சாகமாய் வெளியே வந்தார். இமிகிரேஷன் வேகமாய் நடந்து மாடி இறங்கி லக்கேஜ்களை எடுக்க கன்வேயரிடம் வண்டியோடு நின்றார்.
பெட்டிகள் ஆடி ஆடி வந்தன. யார் யாரோ எடுத்தார்கள். கிளம்பினார்கள். ஏன் என் பெட்டி தாமதமாகிறது? இது எப்போதும் உங்க நிகழ்வுதான். நாம் எவ்வளவுக்கெவ்வளவு அவசரப்படுகிறோமோ, அவ்வளவுக்குக் குறுக்கீடுகள் வரும். தடைகள் வரும.
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்! சுஷ்மா நீ எப்படியிருப்பாய்? இ மெயிலில் உன் படம் பார்த்தேன். க்யூட் கேர்ள்! நீ ஏர்போர்ட்டிற்கு வந்திருப்பாயா?
அவர், மணி பார்த்தபோது கஸ்டம்ஸ் அதிகாரிகள் இங்கு மங்கும் ஓடுவது தெரிந்த்து.
அவர்களிடம் ஆவேசம், பரபரப்பு. அவர்களுக்குப் பின்னால் இரண்டு மூன்று பெண்கள், வாயும் வயிறுமாயிருந்த அந்தப் பெண்களை அவர்கள் ஏறக்குறைய இழுத்துக்கொண்டு ஓடாத குறை. அவர்களும் நடக்க முடியாமல் கண்களைக் கசக்கினர். மூச்சு வாங்கினர்.
அதிகாரிகள் அப்பெண்களை அறைக்குள் தள்ளி காணாமல் போயினர். அங்கு என்ன நடக்கிறது... என்ன விஷயம் என்று அறிய எல்லோருக்கும் ஆவல். சுவாரஸ்யம்.
பாவிக்ள்! கர்ப்ப ஸ்திரீகளை இப்படியா அலைக்கழிப்பார்கள்! முகுந்தனுக்குக் கோபம் வந்த்து. மூக்குச் சிவந்த்து. சட்டப்படி நடக்க வேண்டியதுதான்! அதற்காக இப்படியா...? மனிதாபிமானம் வேண்டாம்?
கோடி கோடியாய் கொள்ளையடிப்பவர்களை விட்டுவிடுவார்கள். அவர்கள் வாய்தா மேல் வாய்தா வாங்கி ஓட்டு வாங்கி ஜெயித்து, கேஸ்களை ஒன்றுமில்லாமல் செய்து கொள்வார்கள். சட்டம் என்பது பாவப்பட்டவர்களுக்கு மட்டும்தானா?
அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது அதிகாரியின் அறைக்கதவு திறக்கப்பட்டது. உள்ளே போன அந்தப் பெண்கள் வெளியே வந்தபோது அவர்களின் வயிறு மெலிந்து காணப்பட்டது. அதற்குள் நார்மல் டெலிவரி ஆகிவிட்டதோ? அப்போ அவர்கள் கர்ப்பம் இல்லை? அவர்களின் வயிற்றில் இருந்த்து கடத்த்ல் பொருட்களா? கடவுளே... இங்கே யாரையுமே நம்ம முடியவில்லையே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
15
முகுந்தனின் விருந்தினர் இல்லம்.
முகுந்தன் ஹாலில் அமர்ந்திருக்க, வாட்ச்மேன், வேலை ஆட்கள் என எல்லோரும் வந்து நமஸ்கரித்தனர். முகுந்தன் அவர்களுக்கு வேட்டி, சேலை கொடுங்க, “இன்னிக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். அதுக்குக் காரணம் என் பொண்ணு சுஷ்மா! உங்க எல்லோருக்கும் இன்னைக்கு விருந்து ஏற்பாடாகுது. என்ஜாய்!”
“ரொம்ப நன்றிங்கய்யா!”
மகேஸ்வரி குறுக்கே வந்து, “எல்லோரும் போய் வேலையைக் கவனிங்க” என்று அதட்டினாள். “நீங்க குளிச்சுட்டு வாங்க, சாப்பிடலாம்!”
“உன் தம்பி எங்கே? ஆளையே காணோம்? ஏர்போர்ட்டுக்கு வருவான்னே?”
“வழியில் கார்ல ஏதோ பிரச்சனையாம். அதனால லேட்டாயிருச்சாம்!”
“ஆமாம் மாமா. சாரி!” என்று விவேக் அவருக்கு முன்னால் நிற்க முடியாமல் தலை சொரிந்தான்.
“அதெல்லாம் போகட்டும். என்னவோ எக்ஸ்போர்ட் பிசினஸ்னு சொன்னியே... எப்படி போகுது?”
“பிக்அப் ஆயிருச்சு மாமா!”
அப்போது வாசலில் டாக்ஸி வந்து நின்றது. சுஷ்மாவும் அவளுடன் சுரேஷும் இறங்க, விவேக்கின் முக்ம் இருண்டது.
சுஷ்மா, “அப்பா” என்று ஓடி வந்து கட்டிக்கொள்ள, முகுந்தன் நனைந்த்ன.
“சுஷ், எப்படியிருக்கே! எவ்ளோ வளர்ந்துட்டே நீ. மை டார்லிங்.”
மகேஸ்வரி, “ஆள் மட்டுமா வளர்ந்திருக்கா, நம்ம பேர்ல வெறுப்பும் கூடத்தான்!” என்று கழுத்தைச் சொடுக்கினாள்.
“இல்லே சித்தி, இல்லேப்பா, இனி உங்களை நான் வெறுக்க மாட்டேன். இனி நமக்கு வசந்த் காலம்.”
முகுந்தன் சுரேஷ் பக்கம் திரும்பி பார்க்க, “ஓ... ஸாரிப்பா. அறிமுகப்படுத்த மறந்துட்டேன். நான் பேர்ன்ல சொன்னேனேப்பா சுரேஷ், லெக்சரர். என்னோட ஒரே ஆறுதல் இவர்தான். கட்டுப்பெட்டியா, யார்ட்டேயும் பழகாம, பேசாம, இறுக்கமா இருந்த என்னைக் கலகலப்பாக்கினது இவர்தான்.”
“ரொம்ப நன்றி தம்பி. ஏன் நிக்கிறீங்க? விவேக், சாருக்கு நாற்காலி கொண்டு வந்து போடு!”
சுஷ்மாவிற்குக் குதூகலம் பிடிப்படவில்லை. ‘அப்பா அப்பா’ என்று அவரிடம் அப்படி ஒட்டிக்கொண்டாள். சாப்பிடும் போதும் அவரை ஒட்டிக்கொண்டு கண்கள் கலங்க்க் கலங்கச் சிரித்தாள்.
சுரேஷிற்கு அவளைப் பார்க்க விநோதமாக இருந்த்து. புத்திசாலிப் பெண். படிப்பிலும், இதர கலைகளிலும் வல்லவள். இங்கே எந்த இறுமாப்புமில்லாமல் குழந்தை போல கொண்டாடுகிறாள். பாவம், இத்தனைக் காலம் பொத்தி வைத்திருந்த பாசமெல்லாம் இப்போது கொட்டுகிறது.
“அப்பா, சாப்பிட்டதும் உங்களை ஒரு இடத்துக்கு அழைச்சுப் போகப்போறேன்...”
முகுந்தனின் விருந்தினர் இல்லம்.
முகுந்தன் ஹாலில் அமர்ந்திருக்க, வாட்ச்மேன், வேலை ஆட்கள் என எல்லோரும் வந்து நமஸ்கரித்தனர். முகுந்தன் அவர்களுக்கு வேட்டி, சேலை கொடுங்க, “இன்னிக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். அதுக்குக் காரணம் என் பொண்ணு சுஷ்மா! உங்க எல்லோருக்கும் இன்னைக்கு விருந்து ஏற்பாடாகுது. என்ஜாய்!”
“ரொம்ப நன்றிங்கய்யா!”
மகேஸ்வரி குறுக்கே வந்து, “எல்லோரும் போய் வேலையைக் கவனிங்க” என்று அதட்டினாள். “நீங்க குளிச்சுட்டு வாங்க, சாப்பிடலாம்!”
“உன் தம்பி எங்கே? ஆளையே காணோம்? ஏர்போர்ட்டுக்கு வருவான்னே?”
“வழியில் கார்ல ஏதோ பிரச்சனையாம். அதனால லேட்டாயிருச்சாம்!”
“ஆமாம் மாமா. சாரி!” என்று விவேக் அவருக்கு முன்னால் நிற்க முடியாமல் தலை சொரிந்தான்.
“அதெல்லாம் போகட்டும். என்னவோ எக்ஸ்போர்ட் பிசினஸ்னு சொன்னியே... எப்படி போகுது?”
“பிக்அப் ஆயிருச்சு மாமா!”
அப்போது வாசலில் டாக்ஸி வந்து நின்றது. சுஷ்மாவும் அவளுடன் சுரேஷும் இறங்க, விவேக்கின் முக்ம் இருண்டது.
சுஷ்மா, “அப்பா” என்று ஓடி வந்து கட்டிக்கொள்ள, முகுந்தன் நனைந்த்ன.
“சுஷ், எப்படியிருக்கே! எவ்ளோ வளர்ந்துட்டே நீ. மை டார்லிங்.”
மகேஸ்வரி, “ஆள் மட்டுமா வளர்ந்திருக்கா, நம்ம பேர்ல வெறுப்பும் கூடத்தான்!” என்று கழுத்தைச் சொடுக்கினாள்.
“இல்லே சித்தி, இல்லேப்பா, இனி உங்களை நான் வெறுக்க மாட்டேன். இனி நமக்கு வசந்த் காலம்.”
முகுந்தன் சுரேஷ் பக்கம் திரும்பி பார்க்க, “ஓ... ஸாரிப்பா. அறிமுகப்படுத்த மறந்துட்டேன். நான் பேர்ன்ல சொன்னேனேப்பா சுரேஷ், லெக்சரர். என்னோட ஒரே ஆறுதல் இவர்தான். கட்டுப்பெட்டியா, யார்ட்டேயும் பழகாம, பேசாம, இறுக்கமா இருந்த என்னைக் கலகலப்பாக்கினது இவர்தான்.”
“ரொம்ப நன்றி தம்பி. ஏன் நிக்கிறீங்க? விவேக், சாருக்கு நாற்காலி கொண்டு வந்து போடு!”
சுஷ்மாவிற்குக் குதூகலம் பிடிப்படவில்லை. ‘அப்பா அப்பா’ என்று அவரிடம் அப்படி ஒட்டிக்கொண்டாள். சாப்பிடும் போதும் அவரை ஒட்டிக்கொண்டு கண்கள் கலங்க்க் கலங்கச் சிரித்தாள்.
சுரேஷிற்கு அவளைப் பார்க்க விநோதமாக இருந்த்து. புத்திசாலிப் பெண். படிப்பிலும், இதர கலைகளிலும் வல்லவள். இங்கே எந்த இறுமாப்புமில்லாமல் குழந்தை போல கொண்டாடுகிறாள். பாவம், இத்தனைக் காலம் பொத்தி வைத்திருந்த பாசமெல்லாம் இப்போது கொட்டுகிறது.
“அப்பா, சாப்பிட்டதும் உங்களை ஒரு இடத்துக்கு அழைச்சுப் போகப்போறேன்...”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“எங்கே?”
“சஸ்பென்ஸ், உங்களுக்கு ஒரு கிப்ட். நீங்க அதைப் பார்த்த்தும் ஷாக்காகி அப்படியே பேச்சு மூச்சில்லாமல் போகப் போறீங்க.”
“செத்துப் போவேன்றியா?”
“அப்பா“ என்று அவரை வாயைப் பொத்திக்,
“என்ன இது அபசகுனமாட்டம்?”
“எனக்கு வயசாகுதும்மா. பிரஷர். சஸ்பென்ஸெல்லாம் என்னால் தாங்க முடியாது. சீக்கிரம் சொல்லிரு.”
சுஷ்மா சொல்ல, அவருக்கு நம்ப முடியவில்லை. அவள் சொன்னபடியே பேச்சு வரவில்லை. ஸ்தம்பித்து அமர்ந்திருந்தார்.
“செண்பகமா? நீ பார்த்தியா?”
“பார்த்தேன்பா... ஒரு அனாதைப் பள்ளியிலே...”
“ரொம்ப சந்தோஷம்மா” என்ற மூக்குக் கண்ணாடியை ஒதுக்கி கண்களைத் துடைத்துக் கொண்டார்.
கிளம்பும்போது முகுந்தன், “மகேஸ்வரி, நீயும் வா போகலாம்” என்றார்.
“வேணாம்...நீங்க போயிட்டு வாங்க”
“செண்பகத்தைப் பார்க்கணும்னு உனக்கு ஆவலில்லையா? இல்லை, அவளை போட்டியா நினைக்கிறாயா?”
“போட்டியா... நல்ல கதை. யாருக்கு யார் போட்டி? நான்தான் இடைச்செருகல், புத்தியில்லாம குறுக்கே வந்து மாட்டிக்கிட்டு எல்லோருடைய வெறுப்பையும் சாபத்தையும் அனுபவிக்க முடியாதவள்.”
“சித்தி, பழசையெல்லாம் மறந்திருங்க. அம்மாவையும் அழைச்சு வந்து புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம். வாங்க.”
“வேணாம்மா. நீ இத்தனை அன்பா சித்தின்னு வாய் கொள்ளாம கூப்பிடறதே எனக்குப் போதும். நான் வந்தா ஒருவேளை அவங்க கோபப்படக் கூடும். பேசி சமாதானப்படுத்தி இங்கே அழைச்சி வாங்க.”
காரில் சுஷ்மா, முகுந்தனின் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவரது தோளில் சரிந்தபடி அமர்ந்திருந்தாள்.
அதிலே அவளுக்குப் பெருமிதம் அவருக்கும் ஆனந்தம்.
“அப்பா, நான் ரேங்க் ஹோல்டர் தெரியுமா உங்களுக்கு? காலேஜ் மேகஸின் எடிட்டர், பாட்டு, மியூசிக்கின்னு எல்லாத்திலையும் மெடல்ஸ் வாங்கியிருக்கேன். அப்புறம் ஸ்போர்ட்ஸ்ல கூட.”
“ரொம்ப சந்தோஷம்.”
ஆசிரம்ம்.
வண்டி உள்ளே நுழைந்த்துமே யாரோ ஓடி வந்து மறித்தார்கள்.
“யார் நீங்க? என்னவேண்டும்? யாரைப் பார்க்கணும்?” என்று ஏகப்பட்ட கேள்விகள்.
“நிர்வாகி.“‘
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“அவர் ரொம்ப பிஸி. பார்க்கமுடியாது,”
“சும்மா இரண்டு நிமிஷம்... மெடிக்கல் ரிப்போர்ட் கொண்டுவந்திருக்கேன். கொடுக்கணும்.’‘
“கேட்டிலயே கொடுத்திருங்க. நாங்க சேர்ந்திடறோம்.”
“இல்லை. அப்படியெல்லாம் தரமுடியாது. மருத்துவ முகாம் மூலம் நடந்த லேப் ரிப்போர்ட். கான்பிடன்ட். நான் அவரைப் பார்த்துத் தான் கொடுக்கணும். கூப்பிடுங்க.”
சுரேஷ் அதட்டவும் செக்யூரிட்டி போனில் பேசி, “சரி, போங்க” என்று நகர்ந்தான்.
“சார், என்னதிது...திடீர் கெடுபிடி!”
“தெரியல. அனாதைப் பிள்ளைகள் இல்லம். பாதுகாப்பா இருக்கிறது நல்லதுதானே!”
பள்ளியின் சுற்றுப் பக்கம் முழுக்க அமைதி. எங்கும் ஆரவாரமில்லை. பசங்களின் நடமாட்டமே தெரியவில்லை. என்னாயிற்று? பள்ளிக்கு விடுமுறையோ?
வேலை பார்த்தவர்கள், புல் வெட்டினவர்கள் முகங்களில் கூட புன்னகையில்லை. வெறுமை, வரவேற்பறையில் நீண்ட காத்திருப்பிற்குப் பின்பு நிர்வாகி வந்தார்.
சுரேஷ் தன் கையில் கொண்டு வந்திருந்த ரிப்போர்ட் கவரைக் கொடுத்து, “இது மிஸ்டர் முகுந்தன். சுஷ்மாவின் அப்பா. மலேசியாவிலிருந்து வந்திருக்கார்” என்று அறிமுகப்படுத்தினான்.
“வணக்கம் சார்!”
“இன்னிக்கு ஸ்கூல் லீவா?”
“இல்லை...வந்து, ஆமா?”
“ஏதும் விசேஷமா”
“அப்படியெல்லாம் எதுவுமில்லை. கிளாஸ் ரூம்கள்ல மராமத்து நடக்குது. ஓடெல்லாம் ஒழுகுது. பெயிண்டிங், சுண்ணாம்புன்னு ஒரு வாரம் இழுத்திருக்கும் போல அதான்.”
“சார். நாங்க செண்பகத்தம்மாவைப் பார்க்கணும். கொஞ்சம் வரச் சொல்றீங்களா?”
அவரது முகம் உடன் கறுத்த மாதிரி இருந்த்து. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், என்ன விஷயம்?” என்றார்.
“இது என் அப்பா. அம்மாவை நாங்க பார்க்கறதுக்குப் புதுசா எதுவும் விணயம் வேணுமா? கூப்பிடுங்க சார்.”
“ஸாரி...ஒரு நிமிஷம்” என்று அவர் உள்ளே போனார்.
செண்பகம் எப்படியிருப்பாள்? எந்த மாதிரி வரவேற்பாள்? என முகுந்தன் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தார்.
பத்து நிமிடம் கழித்து வந்த நிர்வாகி, “ஸாரி சார்! உங்களை யாரையும் பார்க்க விருப்பமில்லேன்னும், இனி அவங்களைப் பார்க்க வரவேணாம்னும், அப்பட வந்தா இந்த ஊரைவிட்டே போயிருவேன்னும் செண்பகம் உங்கள்ட்ட சொல்லச் சொன்னாங்க,” என்றார் கடுமையாய்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|