புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத் தாமரைப் பெண்ணே!
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
வாழ்த்துரை
நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.
சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.
ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.
எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.
குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.
இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.
பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.
இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,
அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி
அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.
இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.
மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.
கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,
இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.
முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.
இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்
அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.
பதிப்புரை
எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.
கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,
எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,
எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.
அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.
கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.
இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,
அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்
வாழ்த்துரை
நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.
சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.
ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.
எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.
குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.
இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.
பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.
இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,
அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி
அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.
இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.
மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.
கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,
இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.
முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.
இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்
அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.
பதிப்புரை
எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.
கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,
எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,
எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.
அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.
கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.
இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,
அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“மலேசியாவுல நீ படிக்கலாம். மலேசியாவுக்கு வரணும்னு நீயும் ஆசைப்பட்டாயே!”
“இல்லேப்பா.... அம்மாவுக்கில்லாத சந்தோஷம் எனக்கு எதுவும் வேணாம். நான் வரணும்னா அம்மாவும் வேணும்”.
“எப்படிம்மா? அவளை எங்கேன்னு போய்த் தேடறது? அவள் இருக்காளா, இல்லை...”
“அப்போ, நானும் செத்துட்டேன்னு நினைச்சுக்குங்க...”
காலம் காயத்தை ஆற்றும், ரணம் குறையும். இப்போதே போட்டுக் கீற வேண்டாம் என்று கிளம்பினான்.
சுஷ்மா, பாட்டியின் கிராமத்திலிருநது படித்தாள். பிறகு பாட்டி அவள் மனதைத் தேற்றி மலேசியாவுக்கு அனுப்பி வைத்தாள்.
ஆனால் அங்கும் சுஷ்மாவுக்கு நிம்மதி இல்லை. மகேஸ்வரியைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பு, கோபம் பொங்கிற்று. அவளது அழகும் வனப்பும் கடுப்பேற்றிற்று.
இந்த அழகுதானே எங்கப்பாவை வசீகரித்தது? இத இல்லாமல் பண்ணிவிட்டால் என்ன? என்று ஒருநாள் குரூரமாகச் சிந்தித்தாள்.
ஒரு இரவில் முகுந்தன் வெளியூர் போயிருக்க, மகேஸ்வரி தனியாய் படுத்திருக்க, சுஷ்மா பள்ளிக்கூடத்திலிருந்து கந்தக அமிலம் எடுத்து வைத்திருந்தாள்.
எல்லோரும் உறங்கினதம், மெல்ல மெல்ல சித்தியின் அறைக்கு நடந்து... படுக்கையில் உடல் முழுக்க போர்வை போர்த்தி முகம் மட்டும் காட்டிப் படுத்திருந்த அவளின் அருகில் போய்... அமிலத்தை ஊற்ற...
திடுக்கென விழிப்பு வந்து ஓசை கேட்டு எழுந்த மகேஸ்வரியின் கழுத்தில் அமிலம் பட்டு வெந்து போயிற்று.
“ஏய், சுஷ்டா... சனியனே, பிசாசே!” என மகேஸ்வரி அலற, உடன் ஆஸ்பத்திரி. அவள் தோள் வெந்த்துடன் பெரிய பாதிப்பில்லாமல் அன்று தப்பித்தாள்.
அதுவரை சஷ்மாவின் மேல் அன்பையும் பாசத்தையும் பொழிந்தவள் அதன் பிறகு வெறுப்பைக் கொட்ட.. இனியும் இவர்களை ஒன்றாக வைத்திருக்க முடியாத என முகுந்தன் சுஷ்மாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி படிப்பைத் தொடர வைத்தான்.
என்றைக்காவது ஒரு நாள் சுஷ்மாவின் மனது மாறும், அப்பாவை ஏற்றுக் கொள்வாள் என்கிற அவரது எதிர்பார்ப்பு பொய்த்து விரக்தியின் எல்லையிலிருந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
9
மருத்துவக் கல்லூரி விடுதி.
தூரத்தில் ரயில் அதிர்வு குறைந்து, மரங்களும் அயர்ந்து, பனி பூசினி இரவு. முன்பெல்லாம் தேர்வு சமயத்தில் மட்டும் அறைகளில் விளக்குகள் கண் விழித்திருக்கும். இப்போது, சதாசர்வமும் தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டர்!
எப்போதும் மெஸ்ஸில் முதல் நபராகச் சாப்பிட்டு ஒன்பதுக்கெல்லாம் படுக்கையாகி விடுகிற சுஷ்மாவிற்கு அன்று தூக்கம் விலகிற்று. கொசுவலைக்கு வெளியே அமர்ந்திருந்த கொசுக்களை உற்றக் கவனித்தாள்.
ஒரு வகையில் நானும் அவையும் ஒன்றோ? அவை பசிக்காக அலைகின்றன. நான் அன்புக்காக! அவை வலைக்கு வெளியே சுதந்திரம் பெற்றிருக்கின்றன. நான் வலைக் குள்!
சட்டென தாய் நினைவு வந்து, ‘ஏம்மா? ஏம்மா என்னை விட்டுட்டுப் போனே?‘ என்று விசும்ப ஆரம்பித்தாள். ‘போனால் போகிறது... தூங்கத் தொலைக்கலாம். மறுநாள் வகுப்பு உள்ளதே‘ என்று அப்போதுதான் படுத்திருந்த தோழி பார்கவியை அந்த விசும்பல் உசுப்பிற்று.
சட்டென விளக்குப் போட்டு. “ஏய், சுஷ்! என்னாச்சு?”
“அம்மா...ம்...மா!”
அவள் எழுந்து வந்து, “ஏய், என்ன இது... சின்னக் குழந்தை யாட்டம்?” என்று அவளது கழுத்தைத் தூக்கி அணைத்துக் கொண்டாள்.
“பார்கவி, நான் என் அம்மாவைப் பார்ப்பேனா? அவங்க திரும்பக் கிடைப்பாங்களா?”
“அதெல்லாம் கிடைப்பாங்க. பேசாம படு. உன் சித்தி வந்துட்டுப் போனாலே இதுதான் பிரச்சினை” என்று அவளது முகதைத் துடைத்துவிட்டாள்.
“தூங்கு.... இல்லே... பாத்ரூமுல போய் அழு! எனக்குத் தூக்கம் வருது.”
பார்கவி கடுப்படித்து நகர்ந்தாள். அவள் சொன்னபடியே சுஷ்மா பாத்ரூமிற்கு நகர்ந்தாள். முகம் கழுவி கண்ணாடியில் பார்க்க அவளுக்கே விகாரமாய்த் தெரிந்த்து. ஜன்னல் திரையை விலக்க, தென்றல் முகத்தில் பரவி புத்துணர்ச்சி வந்தது.
கீழே புல்வெளியில் நாய்கள் தவளையைத் துரத்தி சாகசம். நீரூற்றில் வெளிச்சம் பட்டு நிறப்பிரிகை! வாட்ச்மேன் தன் கூண்டுக்குள் அமர்ந்து ‘தான் தூங்கவில்லை‘ என்பதைத் தெரிவிக்க இடையிடையே காலாட்டல்! செருமல் புகை!
எழுந்து நடந்தான். நாய் அவனது காலை நக்கி, விசுவாசம் காட்டி குனிந்து, நெட்டி முறித்து, உடலை உதறி எதற்கோ ஓட்டம் என்னைத் தவிர வெளியே எல்லோருமே சந்தோஷமாயிருக்கிறார்கள். நான் மட்டும் ஏன்? எதற்காக வருத்திக்கணும்? வருந்தணும்?
இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்க்க மாணவர்கள் விடுதி தெரிந்த்து. அங்கே கட்டிடத்தின் பின்பகுதியில் இருளில் சில உருவங்கள். கசமுசாக்கள்! தலையில் முண்டாசும், வாரிச் சுருட்டின லுங்கியுமாய் அதுகள் காம்பவுண்ட் ஏறி வெளியே குதிப்பது தெரிந்தது.
அடப்பாவிகளா! இந்த நேரத்தில் எங்கே போகிறார்கள்? இங்கே பெண்கள் விடுதிக்கு வருவார்களோ? யாரைப் பார்க்க? அதுவும் கூட்டமாய்....
அவளது ஆர்வம் அதிமாயிற்று. ஜன்னலை நன்றாகத் திறந்து கவனித்தாள். அவர்கள் கொஞ்சம் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த காரிலி ஏறினர். அது ஓசை குறைத்து விளக்கின்றி நகர்ந்தது.
பாவி பசங்க! தூங்கவே மாட்டாணுங்களா? அந்த வண்டி கண்ணிலிருநது மறைந்ததும் ஜன்னலை மூடிவிட்டு படுக்கைக்குத் திரும்பினாள்.
செல்போன் காதை தூக்க, ‘யார்ரா இந்த நேரத்தில்‘ என்று முனகிக்கொண்டு சுரேஷ் எடுத்தான். ஹாஸ்டல் வாட்ச்மேன்!
“என்னப்பா?”
“சார், நாலு பசங்க.... காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிச்சு காரில் போறாணுங்க! நீங்க வந்தீங்கன்னா கையும் களவுமா பிடிக்கலாம்.”
“போன பின்னாடி எப்படி பிடிக்கிறதாம்!”
மருத்துவக் கல்லூரி விடுதி.
தூரத்தில் ரயில் அதிர்வு குறைந்து, மரங்களும் அயர்ந்து, பனி பூசினி இரவு. முன்பெல்லாம் தேர்வு சமயத்தில் மட்டும் அறைகளில் விளக்குகள் கண் விழித்திருக்கும். இப்போது, சதாசர்வமும் தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டர்!
எப்போதும் மெஸ்ஸில் முதல் நபராகச் சாப்பிட்டு ஒன்பதுக்கெல்லாம் படுக்கையாகி விடுகிற சுஷ்மாவிற்கு அன்று தூக்கம் விலகிற்று. கொசுவலைக்கு வெளியே அமர்ந்திருந்த கொசுக்களை உற்றக் கவனித்தாள்.
ஒரு வகையில் நானும் அவையும் ஒன்றோ? அவை பசிக்காக அலைகின்றன. நான் அன்புக்காக! அவை வலைக்கு வெளியே சுதந்திரம் பெற்றிருக்கின்றன. நான் வலைக் குள்!
சட்டென தாய் நினைவு வந்து, ‘ஏம்மா? ஏம்மா என்னை விட்டுட்டுப் போனே?‘ என்று விசும்ப ஆரம்பித்தாள். ‘போனால் போகிறது... தூங்கத் தொலைக்கலாம். மறுநாள் வகுப்பு உள்ளதே‘ என்று அப்போதுதான் படுத்திருந்த தோழி பார்கவியை அந்த விசும்பல் உசுப்பிற்று.
சட்டென விளக்குப் போட்டு. “ஏய், சுஷ்! என்னாச்சு?”
“அம்மா...ம்...மா!”
அவள் எழுந்து வந்து, “ஏய், என்ன இது... சின்னக் குழந்தை யாட்டம்?” என்று அவளது கழுத்தைத் தூக்கி அணைத்துக் கொண்டாள்.
“பார்கவி, நான் என் அம்மாவைப் பார்ப்பேனா? அவங்க திரும்பக் கிடைப்பாங்களா?”
“அதெல்லாம் கிடைப்பாங்க. பேசாம படு. உன் சித்தி வந்துட்டுப் போனாலே இதுதான் பிரச்சினை” என்று அவளது முகதைத் துடைத்துவிட்டாள்.
“தூங்கு.... இல்லே... பாத்ரூமுல போய் அழு! எனக்குத் தூக்கம் வருது.”
பார்கவி கடுப்படித்து நகர்ந்தாள். அவள் சொன்னபடியே சுஷ்மா பாத்ரூமிற்கு நகர்ந்தாள். முகம் கழுவி கண்ணாடியில் பார்க்க அவளுக்கே விகாரமாய்த் தெரிந்த்து. ஜன்னல் திரையை விலக்க, தென்றல் முகத்தில் பரவி புத்துணர்ச்சி வந்தது.
கீழே புல்வெளியில் நாய்கள் தவளையைத் துரத்தி சாகசம். நீரூற்றில் வெளிச்சம் பட்டு நிறப்பிரிகை! வாட்ச்மேன் தன் கூண்டுக்குள் அமர்ந்து ‘தான் தூங்கவில்லை‘ என்பதைத் தெரிவிக்க இடையிடையே காலாட்டல்! செருமல் புகை!
எழுந்து நடந்தான். நாய் அவனது காலை நக்கி, விசுவாசம் காட்டி குனிந்து, நெட்டி முறித்து, உடலை உதறி எதற்கோ ஓட்டம் என்னைத் தவிர வெளியே எல்லோருமே சந்தோஷமாயிருக்கிறார்கள். நான் மட்டும் ஏன்? எதற்காக வருத்திக்கணும்? வருந்தணும்?
இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்க்க மாணவர்கள் விடுதி தெரிந்த்து. அங்கே கட்டிடத்தின் பின்பகுதியில் இருளில் சில உருவங்கள். கசமுசாக்கள்! தலையில் முண்டாசும், வாரிச் சுருட்டின லுங்கியுமாய் அதுகள் காம்பவுண்ட் ஏறி வெளியே குதிப்பது தெரிந்தது.
அடப்பாவிகளா! இந்த நேரத்தில் எங்கே போகிறார்கள்? இங்கே பெண்கள் விடுதிக்கு வருவார்களோ? யாரைப் பார்க்க? அதுவும் கூட்டமாய்....
அவளது ஆர்வம் அதிமாயிற்று. ஜன்னலை நன்றாகத் திறந்து கவனித்தாள். அவர்கள் கொஞ்சம் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த காரிலி ஏறினர். அது ஓசை குறைத்து விளக்கின்றி நகர்ந்தது.
பாவி பசங்க! தூங்கவே மாட்டாணுங்களா? அந்த வண்டி கண்ணிலிருநது மறைந்ததும் ஜன்னலை மூடிவிட்டு படுக்கைக்குத் திரும்பினாள்.
செல்போன் காதை தூக்க, ‘யார்ரா இந்த நேரத்தில்‘ என்று முனகிக்கொண்டு சுரேஷ் எடுத்தான். ஹாஸ்டல் வாட்ச்மேன்!
“என்னப்பா?”
“சார், நாலு பசங்க.... காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிச்சு காரில் போறாணுங்க! நீங்க வந்தீங்கன்னா கையும் களவுமா பிடிக்கலாம்.”
“போன பின்னாடி எப்படி பிடிக்கிறதாம்!”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“திரும்ப வருவானுங்க, அதே மாதிரி காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதிக்கும்போது அமுக்கிறலாம்.”
“சரி, இதோ வரேன்.” என்று சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்தான். ‘எல்லாம் தலையெழுத்து! இந்த வார்டன் வேலையிலிருநத் எப்போது விடுதலையோ தெரியலை!‘
வாட்ச்மேன் புகை நாற்றத்துடன், “சார், நீங்க இந்தக் கூண்டுல உட்காருங்க” என்று எங்கேயிருந்தோ பொறுக்கிக் கொண்டு வந்திருந்த கார் சீட்டை காட்டினான். “நீங்க தூங்குங்க. அவனுங்க வரும்போது நான் எழுப்பறேன்!”
அவன் சொல்லிவிட்டு கைபேசி மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டு உலாத்த ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் வெளியே கார் தெரிய, “சார், வந்துட்டானுங்க. வாங்க!” என்று கிசுகிசுத்தான்.
சுரேஷ் திருடனைப் பிடிக்கப்போகும் மகா திரில்லுடன் வாட்ச்மேனைத் தொடர்ந்தான்.
காம்பவுண்டோரம் புல்வெளியில் பதுங்க, நாயும் அவனுடன் பதுங்கிற்று.
காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் லேசாய் ஓசை, கிசுகிசுப்பு கேட்டது. எப்படித்தான் இத்தனை பெரிய சுவரில் ஏறுகிறான்களோ குரங்க்கு வாக்கப்பட்டவர்கள்!
இதோ, நெருங்கிவிட்டார்கள். இதோ, ஏறுகிறார்கள். இதோ, அக்கம் பக்கம் பார்க்கிறார்கள்.
இதோ, குதிக்கப் போகிறார்கள். ஒரே அழுக்காய் அழுக்கு, விடாதே தயாராகு! தொடர்ந்து நான்கு உருவங்கள் பொத் பொத் தொனப் புல்வெளியில் குதிக்க, சுரேஷ் அவர்களின் மேல் பாய, ஒருவன் திமிறிக்கொண்டு எழுநது கையில் கிடைத்த தடியை சுரேஷின் மண்டையில் இறக்க, அவன் “அம்மா...” என்று அலறிக்கொண்டு புல்வெளியில் மலர்ந்தான்.
எழுந்து பார்த்துபோது ஆஸ்பத்திரியின் மணம். வரிசையாய் படுக்கைகளில் முனகல்கள், டெட்டால், குளுகோஸ் பைட், ஊசி, அதிகாரம் பண்ணும் நர்ஸ்கள், ஆரஞ்சுத் தோல் வாசம்.
அவனுக்குத் தலையில் விண்விண்ணென்று வலித்தது. தனக்கு என்ன நேர்ந்தது. ஏது நேர்ந்த்து என்று யூகிக்கக் கொஞ்சநேரம் பிடித்த்து. வேண்டாத வேலை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பசங்கள் எப்படிப் போனால் என்ன என்று தூங்குவதை விட்டுவிட்டு திருடன்போல பிடிக்கப் போனதற்குத் தண்டனை. சிறுபிள்ளைத்தனம்!
படிக்கும்போது நான் செய்யாத சேஷ்டைகளா? கஞ்சா, தண்ணி என அனைத்தையும் டெஸ்ட்டும், டேஸ்ட்டும் செய்து மயங்கி, வாந்தி எடுத்து, இனி உருப்படப் போவதில்லை என வருந்தி அப்பா கஷ்டப்பட்டு அனுப்பும் பணம் இப்படி போகிறதே என உறுத்தல் எடுத்து செத்துப் போக முயன்றது கூட உண்டு.
இதெல்லாம் அந்தந்த வயசுக்கும் சூழலுக்கும் சகஜம். கண்டுகொள்ளக் கூடாது. அல்லது வார்டன் தொழிலை விட்டுடணும்.
அவன் ஒரு முடிவுக்கு வந்தபோது அறைக்கு வெளியே கிசுகிசுப்பு கேட்டது.
“போ! நீ போ! முழிச்சுட்டார். இல்லை நீ போ! நான் போனால் சரிப்படாது.”
“அட, இங்கே என்ன கலாட்டா... பார்க்கணும்னா சீக்கிரம் பார்த்துட்டு கிளம்புங்க!” நர்ஸ் விரட்டினாள் உடன் முதலில் தெரிந்தது சுஷ்மா! பிறகு கவிதா, ரோஷ்னி, வினிதா, அனிதா எனப் பெண்கள் படை!
“ஸாரி சார்!” என்று அனிதா முகத்தை வருத்தத்தின் எல்லைக்குக் கொண்டுபோய் துக்கம் காட்ட, சுஷ்மாவைப் பார்த்து, “தட்ஸ் ஓ.கே!” என்று முனகினான்.
சுஷ்மாவைப் பார்த்ததும் உற்சாகம். அவள் வருவாள் என்றால் இப்படி அடிக்கடி அட்மிட்டாகலாம். வேதனைக்கிடையிலும் வட பைத்தியக்காரத்தனச் சிந்தனை.
“ஸாரி சார் உங்களுக்கு இப்படி ஆயிருச்சன்னு தெரிஞ்சதும் துடிச்சுப் போயிட்டோம். பசங்கள் கூட ரொம்ப பீல் பண்றாங்க.”
“எதுக்கு? அரைகுறையாய் விட்டதற்கா”
“இல்லே சார். உண்மையில் அவங்க வேற எந்த்த் தப்புத் தண்டாவுக்கும் போகலே. லேப்ஸ் அனாடமிக்காக வைத்திருந்த டெட் பாடி சேதமாகிவிட வேறு ஏற்பாடு செய்தாகணும்னு புரபசர் உத்தரவு. அதற்காக்க் கல்லறைக்குப் பிணம் தோண்டப் போனார்களாம். வேறு எதுவுமில்லையாம் சார்..”
“வெறும் தோண்டல் தானா இல்லை, யாரையாவது கொலை செய்து...? ம்..மா” என்று சுரேஷ் தலையைப் பிடித்துக்கொண்டு முனகினான். சுஷ்மா சட்டென அவனை நெருங்கி அவனது தலைக்கட்டை அழுத்திப்பிடித்தாள், சுற்றியிருந்தவர்களின் கண்கள் விரிய, சுரேஷ் வலி மறந்து மெய் வாய் கண் எல்லாம் மறந்தான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
10
“எல்லோரும் ஏறியாச்சா? வண்டி புறப்படலாமா?”
பிரின்சிபால் கேட்க, “இன்னும் பிஜீ வரலே சார்!”
“இன்னும் என்ன பண்றான்?” என்று அவர் கடுப்படிக்க, “இதோ வந்துட்டேன் சார்!” என்று கையில் வெள்ளைக் கோட்டையும் ஸ்டெதாஸ்கோப்பையும் ஏந்திக்கொண்டு பிஜீ ஒடிவந்தான். கூலிங்கிளாஸ், தலையில் தொப்பி, தோளில் காமிர.
“ஏய், என்னப்பா மெடிக்கல் கேம்ப் பிற்கா இல்லை பிக்னிக் போறீங்களா?”
“ரெண்டுந்தான்!” என்று பஸ்ஸிலிருந்து பதில் வந்தது.
“ஒருநாள் உங்களிடமிருந்து விடுதலை!” உடன் பஸ் முழுக்க சிரிப்பு.
பிரின்சிபால் அதை எதிர்கொள்ள முடியாமல், “சுரேஷ், ஆர் யூ.ஒ.கே? காயம் ஆறிடுச்சுல்லே?” என்று பேச்சை மாற்றினார்.
“பாத்ரூம்ல இனி எச்சிரிக்கையா குளி! வார்டனே இப்படி வழுக்கி விழுந்தா எப்படி? சரி சரி, கிளம்புங்க!”
மருத்துவக் கல்லூரி முகாம் என முகத்தில் பேனர் கட்டப்பட்டிருந்த பஸ், டயர்கள், எலுமிச்சம்பழம் நசுக்கி, சூடம் காட்டப்பட்டுக் கிளம்பிற்று.
அது காம்பவுண்ட் கடக்கிறவரைதான் மவுனம். பிரதான சாலையைத் தொட்டதும், “ஏய், கலகலப்பா இருங்கப்பா.” ஜானி சொல்ல, பின்பக்கமிருந்து, “லக லக லக...” எனக் கலவரம் ஆரம்பித்தது.
சுரேஷிற்குத் தலையில் கட்டுப் பிரித்திருந்தாலும்கூட வலி இன்னும் மிச்சமிருந்தது. நெற்றியில் கிண்ணென்று பாரம்.
பிரின்சிபால் அவனுக்கு முடியவில்லை என்றால் வேறு யாரையாவது அனுப்புகிறேன் என்றார். அவன்தான் பிடிவாதமாய்க் கிளம்பியிருந்தான்.
அதற்கு இரண்டு உந்துதல்கள். ஒன்று இந்தக் காம்ப்பை வெற்றிகரமாய் முடித்தால் முழுநேர லெக்சர்ராக்குவதாய் பிரின்சிபால் கொடுத்த வாக்குறுதி. அடுத்தது சுஷ்மா!
என்னவோ தெரியவில்லை.... அவனையுமறியாமல் மனது அவளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருந்தது. அதற்குக் காரணம் அவளது அழகா, வனப்பா, திறமையா, அமைதியா, கண்களில் எப்போதும் தேக்கி வைத்திருக்கும் சோகமா, இல்லை எல்லாமுமா எனத் தெரியவில்லை.
அவளது கைப்பட்ட தலைக்கட்ட அன்று இனித்தகித்தது. அவளது அண்மை வேண்டும் வேண்டும் என்று மனது துடித்தது.
இப்போதும் பசங்கள் பாடி, ஆடி, மவுத்ஆர்கன் வாசித்து அமளி பண்ண சுரேஷின் பார்வை சுஷ்மாவின் பக்க்ம் எதேச்சையாய்த் திரும்புவதுபோலப் பாவித்தது.
அதுவரை அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த சுஷ்மா, சட்டென மின்சாரத்தைத் தொட்டதுபோல் சாலைப் பக்கம் திரும்பி நாக்கைக் கடித்தாள். முகம் சிவந்த, நெற்றியில் இல்லாத வியர்வையைத் துடைத்துக்கொண்டாள்.
அவனது வருகை அவளுள்ளும் பூரிப்பு தந்திருந்தது. அது ஏனென்று சுஷ்மாவிற்கும் புரியவில்லை. அதுவைரை அப்பா, அம்மா, சித்தி, பொறுக்கி விவேக் என கனத்த மனது, சுரேஷை நினைக்கம் போது இளகுவதை அவளாலும் உணர முடிந்தது.
“எல்லோரும் ஏறியாச்சா? வண்டி புறப்படலாமா?”
பிரின்சிபால் கேட்க, “இன்னும் பிஜீ வரலே சார்!”
“இன்னும் என்ன பண்றான்?” என்று அவர் கடுப்படிக்க, “இதோ வந்துட்டேன் சார்!” என்று கையில் வெள்ளைக் கோட்டையும் ஸ்டெதாஸ்கோப்பையும் ஏந்திக்கொண்டு பிஜீ ஒடிவந்தான். கூலிங்கிளாஸ், தலையில் தொப்பி, தோளில் காமிர.
“ஏய், என்னப்பா மெடிக்கல் கேம்ப் பிற்கா இல்லை பிக்னிக் போறீங்களா?”
“ரெண்டுந்தான்!” என்று பஸ்ஸிலிருந்து பதில் வந்தது.
“ஒருநாள் உங்களிடமிருந்து விடுதலை!” உடன் பஸ் முழுக்க சிரிப்பு.
பிரின்சிபால் அதை எதிர்கொள்ள முடியாமல், “சுரேஷ், ஆர் யூ.ஒ.கே? காயம் ஆறிடுச்சுல்லே?” என்று பேச்சை மாற்றினார்.
“பாத்ரூம்ல இனி எச்சிரிக்கையா குளி! வார்டனே இப்படி வழுக்கி விழுந்தா எப்படி? சரி சரி, கிளம்புங்க!”
மருத்துவக் கல்லூரி முகாம் என முகத்தில் பேனர் கட்டப்பட்டிருந்த பஸ், டயர்கள், எலுமிச்சம்பழம் நசுக்கி, சூடம் காட்டப்பட்டுக் கிளம்பிற்று.
அது காம்பவுண்ட் கடக்கிறவரைதான் மவுனம். பிரதான சாலையைத் தொட்டதும், “ஏய், கலகலப்பா இருங்கப்பா.” ஜானி சொல்ல, பின்பக்கமிருந்து, “லக லக லக...” எனக் கலவரம் ஆரம்பித்தது.
சுரேஷிற்குத் தலையில் கட்டுப் பிரித்திருந்தாலும்கூட வலி இன்னும் மிச்சமிருந்தது. நெற்றியில் கிண்ணென்று பாரம்.
பிரின்சிபால் அவனுக்கு முடியவில்லை என்றால் வேறு யாரையாவது அனுப்புகிறேன் என்றார். அவன்தான் பிடிவாதமாய்க் கிளம்பியிருந்தான்.
அதற்கு இரண்டு உந்துதல்கள். ஒன்று இந்தக் காம்ப்பை வெற்றிகரமாய் முடித்தால் முழுநேர லெக்சர்ராக்குவதாய் பிரின்சிபால் கொடுத்த வாக்குறுதி. அடுத்தது சுஷ்மா!
என்னவோ தெரியவில்லை.... அவனையுமறியாமல் மனது அவளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருந்தது. அதற்குக் காரணம் அவளது அழகா, வனப்பா, திறமையா, அமைதியா, கண்களில் எப்போதும் தேக்கி வைத்திருக்கும் சோகமா, இல்லை எல்லாமுமா எனத் தெரியவில்லை.
அவளது கைப்பட்ட தலைக்கட்ட அன்று இனித்தகித்தது. அவளது அண்மை வேண்டும் வேண்டும் என்று மனது துடித்தது.
இப்போதும் பசங்கள் பாடி, ஆடி, மவுத்ஆர்கன் வாசித்து அமளி பண்ண சுரேஷின் பார்வை சுஷ்மாவின் பக்க்ம் எதேச்சையாய்த் திரும்புவதுபோலப் பாவித்தது.
அதுவரை அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த சுஷ்மா, சட்டென மின்சாரத்தைத் தொட்டதுபோல் சாலைப் பக்கம் திரும்பி நாக்கைக் கடித்தாள். முகம் சிவந்த, நெற்றியில் இல்லாத வியர்வையைத் துடைத்துக்கொண்டாள்.
அவனது வருகை அவளுள்ளும் பூரிப்பு தந்திருந்தது. அது ஏனென்று சுஷ்மாவிற்கும் புரியவில்லை. அதுவைரை அப்பா, அம்மா, சித்தி, பொறுக்கி விவேக் என கனத்த மனது, சுரேஷை நினைக்கம் போது இளகுவதை அவளாலும் உணர முடிந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தனக்குள் என்ன நிகழ்கிறது, எந்த ரசாயனம் வேலை செய்கிறது என்பதில் சுஷ்மாவிற்கும் குழப்பமிருந்தது. மருத்துவ மனையில் அத்தனை பேர் இருக்கும்போது எந்த சக்தி தன்னை உந்தி அவனது தலையைப் பிடிக்கச் செய்தது?
எனக்கென்ன உரிமை அவனிடம்? என் அத்தனை ஈர்ப்பு? எனத மனக்காயங்களுக்கு சுரேஷ் மருந்தாக இருக்கிறாரோ? எப்போதிருந்து இந்த அவஸ்தை?
அன்ற பிரின்சிபால் அறையில் அறிமுகப்படுத்தும்போதே வைரஸ் வந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். அது உள்ளுக்குள் படாய்ப்படுத்துகிறது.
அதற்கு முன்பும் சுரேஷ் வகுப்பிற்கு வந்திருந்தாலும்கூட அது பெரிதாய் தெரியவில்லை. அந்தச் சந்திப்புக்குப் பின்பு எந்த லெக்சரராவது லீவு எடுத்து அவன் வருவான்.
லைப்ரரிக்குப் போவாள். அங்க சுரேஷ் தலைதெரிகிறதா என்று அவளையுமறியமல் கண்கள் தேடும். சொல்லி வைத்த மாதிரி அவன் உள்ளே நுழைவான். அப்புறம் கேண்டீன், வெளியே கடைவீதி, கோவில் என பல எதிர்பாரா சந்திப்புகளில் கண்உரசல்.
அன்று பசங்கள் காம்பவுண்ட் தாண்டிக் குதித்து, ‘மாட்டினோம் தண்டனை உறுதி. பேசாமல் எமர்ஜென்ஸி விடுமுறை எடுக்கலாமா‘ என அவர்கள் டென்ஷனில் இருப்பதைப் பார்க்க சுஷ்மாவிற்கப் பரிதாபமாயிருந்தது. மருத்துவமனையிலிருந்த சுரேஷ் இவர்கள் பெயரில் புகார் கொடுக்காதவரை பிரச்சினையில்லை.
“பேசாமல் அவர் காலில் போய் விழுந்துடுவோமா?” என்று அவர்கள் யோசித்தனர்.
“வேணாம். ஒருவேளை அவர் நம்மை அடையாளம் கண்டிருக்காத பட்சத்தில் நாமே ஏன் போய் மாட்டிக்கொள்ள வேண்டும்?”
“சுஷ்மா, நான் வேணுமானால் அவரிடம் பேசிப் பார்க்கட்டுமா?”
“என்னன்னு?”
“பசங்க பாவம்.. விட்டிருங்கன்னு.”
“சும்மா சொன்னா விட்டிருவாரா? ஏற்கனவே மண்டையில் ஹெல்மெட்!”
“எதுக்க காம்பவுண்ட் கடக்கணும்னு கேட்டால்?”
“அனாடமிக்குப் பிணம், அது, இதுன்னு அளக்கறதுதான்!”
சுஷ்மா பொதுவாகவே பேசுவத கம்மி. அழுத்தக்காரி. ‘அவளுண்டு.... அவள் வேலை உண்டு‘ என்றிருப்பவள். அவளே சுரேஷிற்குத் தூது போகிறேன் என முன்வரும்போது, ‘போய்தான் பார்க்கட்டுமே‘ என்று அனுப்பினர்.
அந்தத் தூதுக்கு சுரேஷிடம் நல்ல பலனிருக்கவே, பசங்களிடம் அவளைப் பற்றி ‘பக்தி‘க் கொண்டது. அவள் நம்மைக் காப்பாற்றினாள். பிரச்சினை வராமல் தப்பித்தோம் என்று சந்தோஷப்படுவதற்கிடையில், ‘இவளக்கென்ன நம் மேல் அக்கறை? அக்கறை நம் மேலா? இல்லை? இந்தச் சாக்கில் வார்டனைப் போய்ப் பார்க்கலாம் என்று கிளம்பினாளா?
சுஷ்மா விண்ணப்பிக்கிறாள்... சுரேஷ் கேட்டுக கொள்கிறான் என்றால் என்ன அர்த்தம்?
மருத்துவக் கல்லூரியில் ஒட்டு உறவு என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மாணவ, மாணவிகளிடம் இது சகஜம். தோழி காதலி, டைம்பாஸ், கடன் தோழி, சினிமா தோழி, பிக்னிக் தோழமை எல்லாமே மறைக்கப்படாத லூட்டிகள்.
ஆனால் வார்டன் மேலேயே ‘லுக்‘ என்பத அங்கு ரகசியமாயும் விவாதிக்கப்பட்டு அதன்பின் சுஷ்மா புலிப்படை, பூனைப்படை. யானைப்படை என அனைத்து வழிகளிலும் கவனிக்கப்பட்டாள்.
பஸ் குலுங்க, ரொம்ப சாதுபோல சுஷ்மா அவன் பக்கம் திரும்பினாள். அவனிடம், ‘வலி பரவாயில்லையா? எனக் கண்களால் ‘பரவாயில்லை. நீ மறுபடியும் பிடித்துவிட்டால் தேவலாம்!‘ என்று புன்னைகத்தான்.
அவள் ஓரக்கண்களால் அதற்கப் பதிலிட்டாள். ‘இனி ராத்திரி உளவுக்குப் போகாம ஒழுங்கா தூங்கணும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
‘சரி மேடம்!‘
அதற்குள் இரண்டு பேர், “கண்கள் இரண்டால் சுஷ்மா கண்கள் இரண்டால்” என்று அவளைப் பார்த்து உரக்கப் பாட, பஸ்ஸில் கொல்லெனச் சிரிப்பு. சுஷ்மா சட்டென கன்னம் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள்.
அனாதை பிள்ளைகள் ஆசிரமம்.
பஸ் அங்கே நுழைந்த்தும் ஆட்டம், பாட்டம், புகை, பாடல், கலாட்டாக்கள் சட்டென அடங்கி வருங்கால மருத்துவர்கள் மிக நாகரீகமாகவும் அடக்கமாகவும் பொறுப்போடும் இறங்கினர்.
ஆசிரமத் தலைவர், பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியைகள் வரவேற்று மருத்துவப் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைகளுக்கு அவர்களை அழைத்துப் போயினர்.
உபசரிப்பு.
சற்று நேரத்தில் பிள்ளைகளுக்கெல்லாம் பரிசோதனை. அடுத்து ஆசிரியர்கள். பிறகு அலுவலர்கள், வாட்ச்மேன், டிரைவர், கூலி ஆட்கள் என முடிந்ததும் சுரேஷ், “சார், உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. நாங்க கிளம்பலாமா?” என்றான்.
“இருங்க, சாப்பிட்டுட்டுப் போகலாம்.”
“நன்றி. நாங்க ஹாஸ்டலுக்குப் போய் சாப்பிட்டுக்கிறோம்.” என்று பரிசோதனை உபகரணங்களை எடுத்து வைக்கும்போது கொஞ்சமிருங்க. இன்னொருத்தர் பாக்கி!” என்று சொல்லிவிட்டு தலைமையாசிரியர் மெஸ்ஸிற்கு ஒடினார்.
கொஞ்ச நேரத்தில் மெலிந்து கண்கள் சொருகி, வெளுத்து, சாயம்போய் சுருங்கின சேலையும் குருவிக் குடுமியுமாயிருந்த ஆயாவை அழைத்து வந்து, “இவங்களையும் பார்த்திருங்க” என்றார்.
“இப்படி வந்து உட்காருங்க!” என்று சொல்லி நிமிர்ந்து பார்த்த சுஷ்மா, “அம்மா, நீயா?” என்று விசுக்கென எழுந்தாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
11
சுஷ்மா ஆயாவைப் பிடித்துக்கொண்டு, “அம்மா, என்னை உனக்கு அடையாளம் தெரியலா? நா உன் சுஷ்ம்மா! உன் செல்ல மகள்.”
அவள் அதற்குப் பதில் சொல்லாமல் வெறித்து வெறித்துப் பார்த்தாள்.
“அம்மா, அப்போ நான் குட்டைப் பாவாடை, ஒல்லியாய் பல் தெரிய இருப்பேன். இப்போ வளர்ந்துட்டதால அடையாளம் தெரியலியா? இங்கே பாரும்மா. என் கண்களைப் பார் கன்னத்தைப் பார்! பெத்த மகளையே மறநது போகிற அளவுக்கு உனக்கு என்ன வந்தது? சொல்லும்மா?”
அதற்கம் ஆயாவிடமிருந்து பதிலில்லா மல் போகவே, “ஏம்மா, இப்படிப பண்ணே? ஏன் என்னை விட்டுட்டுப் போனே? அப்பா, பாட்டி, நானெல்லாம் உன்னை எங்கேயெல்லாம் தேடினோம் தெரியுமா? அம்மா, பேசும்மா! ஏதாச்சும் பேசு!” என்று சுஷ்மா அவளைப் பிடித்து உலுக்கினாள்.
சுற்றியிருந்தவர்களுக்கு அவளது அழுகையும் விசும்பலும் வினோதமாய்த் தெரிந்தது. மாணவர்களைப் பொறுத்தவரை அவள் அழகுக்கிளி. அமைதிப் புறா. எல்லாத் திறமையும் பெற்று நிறையகுடமாய் இருப்பவள். எந்தச் சபலத்திற்கும் இடம்தராதவன். அவள் இப்படி வெம்புகிறாள், உருகுகிறாள் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏற்கெனவே பாதி பேர் பஸ்ஸில் ஏறி அமர்ந்திருக்க, சுரேஷும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தான்.
“சுஷ்மா, கன்ட்ரோல் யுவர் செல்ப்!”
“சார், இது என் அம்மா சார்! என்னை பெத்தவ. இத்தனை காலமா நான் தேடிக்கிட்டிருந்தவங்க!”
ஆசிரம நிர்வாகி இரைச்சல் கேட்டு ஓடிவந்து. “ என்ன சார் இங்கே ஏதும் பிரச்சினையா?”
“சார், நீங்களே சொல்லுங்க. இது என் தாய். இவங்க பெயர் செண்பகம்தானே!”
“செண்பகமா?” என்று அவர் ஆயாவை ஏறிட்டார். அப்போதும் அவளிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. “சீக்கிரம் டெஸ்ட்களை முடிச்சா நான் போய் வேலையைக் கவனிக்க வசதியாயிருக்கும்.” என்றான் ஹீனமாய்.
“வேலையை அப்புறம் கவனிக்கலாம். முதல்ல இவங்களுக்குப் பதில் சொல்லச் சொல்லுங்க!” சுரேஷ் சுஷ்மாவிற்கு வக்காலத்திற்கு வந்தான்.
“என்ன டாக்டர் நீங்களுமா? இந்தப் பொண்ணுக்கு ஏதும் கோளாறா? ஏன் கொஞ்ச முன்னாடி வரை நல்லதானே இருந்த்து!”
“சார், என்னதிது! மரியாதை குறையறது.”
“அப்புறம் என்ன டாக்டர்? செண்பகம்ங்கிறா. அம்மாங்கிறா. இவங்க பேரு ராஜலஷ்மி. ரொம்ப நாளா இங்கேதான் இருக்காங்க. இப்போ திடீருன்னு மகள் புதுசா எங்கிருந்து முளைத்தாள்?”
“சார், இங்கே பாருங்க! ஐ ஆம் ஆல் ரைட்! எனக்கு எநத் மனவியாதியுமில்லை. இவங்க சத்தியமா என் அம்மாதான். ரொம்ப வருஷமா பிரிந்திருந்ததாலும் நான் பெரிசா வளர்ந்துட்டதாலயும் இவங்களுக்கு என்னை அடையாளம் தெரியாம இருக்கலாம். நீங்களே கேளுங்க.”
அதற்குள் அவளது அறை தோழி பார்கவி ஒடிவநது கூட்டத்தை விலக்கிக்கொணடு உள்ளே வர, “பார்கவி, இங்கே பாருடி! இவங்கதான் என் அம்மா!” என்று உருகினாள்.
“நான் சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க!”
மற்ற புரபசர்கள் பொறுமையிழந்து, “இது என்ன கலாட்டா? அம்மான்றே! அவங்க வாயே திறக்கமாட்டேன்றாங்க, உங்க அம்மா பொண்ணு விளையாட்டை பிறகு வெச்சுக்கலாம். நேரமாகுது. சீக்கிரம் புறப்படுங்க!” என்றனர்.
“சுரேஷ், ஏன் வேடிக்கை! எல்லோரும் வண்டில ஏறுங்க.”
அதற்குள் ஆயா கூட்டத்தை விலக்கிக்கொண்டு மெஸ்ஸை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சுஷ்மா பின்னாடியே ஓடி, “அம், என்மேல உனக்கு கருணையேயில்லையா? இங்கே எத்தனையோ அனாதைப் பிள்ளைகளுக்குச் சோறு ஆக்கிப் போடுகிறாய் என்றார்கள். ஆயா என்கிறார்கள். பெத்த மகளை அனாதையாக்கினதேன்? நான் என்ன பாவம் பண்ணேன்!”
அவள் கேட்டுக்கொண்டே பின்னால் நடக்க, ஆயா சட்டென ஸ்டோர் ரூமிற்குள் நுழைந்து கதவை உள்ளே தாழிட்டுக் கொண்டாள்.
“அம்மா, அம்மா.... என்னதிது?” சுஷ்மா கதவைத் தட்டி குழந்தைபோல அமர்ந்து விசம்ப, யாருக்கும் எதுவும் விளங்க வில்லை. சுரேஷிற்கும் குழப்பம். இவள் சொல்வது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இதுதான் இவளது இத்தனை நாள் விரக்திக்குக் காரணமோ? தாயைக் கண்டதும் மடைதிறக்கிறாள். தன்நிலை மறக்கிறாள்.
ஒருவித்ததில் இவளுக்கு இந்த மருத்துவ முகாம் மூலம் பெற்றத் தாயைச் சந்திக்க முடிந்த்தே என்கிற சந்தோஷம் எழுந்தாலும் அதை அந்தம்மாள் உதாசீனப்படுத்துவதில் வருத்தம்.
“சுஷ்மா, கூல்... கூல்... அமைதியா இரு.”
சுஷ்மா ஆயாவைப் பிடித்துக்கொண்டு, “அம்மா, என்னை உனக்கு அடையாளம் தெரியலா? நா உன் சுஷ்ம்மா! உன் செல்ல மகள்.”
அவள் அதற்குப் பதில் சொல்லாமல் வெறித்து வெறித்துப் பார்த்தாள்.
“அம்மா, அப்போ நான் குட்டைப் பாவாடை, ஒல்லியாய் பல் தெரிய இருப்பேன். இப்போ வளர்ந்துட்டதால அடையாளம் தெரியலியா? இங்கே பாரும்மா. என் கண்களைப் பார் கன்னத்தைப் பார்! பெத்த மகளையே மறநது போகிற அளவுக்கு உனக்கு என்ன வந்தது? சொல்லும்மா?”
அதற்கம் ஆயாவிடமிருந்து பதிலில்லா மல் போகவே, “ஏம்மா, இப்படிப பண்ணே? ஏன் என்னை விட்டுட்டுப் போனே? அப்பா, பாட்டி, நானெல்லாம் உன்னை எங்கேயெல்லாம் தேடினோம் தெரியுமா? அம்மா, பேசும்மா! ஏதாச்சும் பேசு!” என்று சுஷ்மா அவளைப் பிடித்து உலுக்கினாள்.
சுற்றியிருந்தவர்களுக்கு அவளது அழுகையும் விசும்பலும் வினோதமாய்த் தெரிந்தது. மாணவர்களைப் பொறுத்தவரை அவள் அழகுக்கிளி. அமைதிப் புறா. எல்லாத் திறமையும் பெற்று நிறையகுடமாய் இருப்பவள். எந்தச் சபலத்திற்கும் இடம்தராதவன். அவள் இப்படி வெம்புகிறாள், உருகுகிறாள் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏற்கெனவே பாதி பேர் பஸ்ஸில் ஏறி அமர்ந்திருக்க, சுரேஷும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தான்.
“சுஷ்மா, கன்ட்ரோல் யுவர் செல்ப்!”
“சார், இது என் அம்மா சார்! என்னை பெத்தவ. இத்தனை காலமா நான் தேடிக்கிட்டிருந்தவங்க!”
ஆசிரம நிர்வாகி இரைச்சல் கேட்டு ஓடிவந்து. “ என்ன சார் இங்கே ஏதும் பிரச்சினையா?”
“சார், நீங்களே சொல்லுங்க. இது என் தாய். இவங்க பெயர் செண்பகம்தானே!”
“செண்பகமா?” என்று அவர் ஆயாவை ஏறிட்டார். அப்போதும் அவளிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. “சீக்கிரம் டெஸ்ட்களை முடிச்சா நான் போய் வேலையைக் கவனிக்க வசதியாயிருக்கும்.” என்றான் ஹீனமாய்.
“வேலையை அப்புறம் கவனிக்கலாம். முதல்ல இவங்களுக்குப் பதில் சொல்லச் சொல்லுங்க!” சுரேஷ் சுஷ்மாவிற்கு வக்காலத்திற்கு வந்தான்.
“என்ன டாக்டர் நீங்களுமா? இந்தப் பொண்ணுக்கு ஏதும் கோளாறா? ஏன் கொஞ்ச முன்னாடி வரை நல்லதானே இருந்த்து!”
“சார், என்னதிது! மரியாதை குறையறது.”
“அப்புறம் என்ன டாக்டர்? செண்பகம்ங்கிறா. அம்மாங்கிறா. இவங்க பேரு ராஜலஷ்மி. ரொம்ப நாளா இங்கேதான் இருக்காங்க. இப்போ திடீருன்னு மகள் புதுசா எங்கிருந்து முளைத்தாள்?”
“சார், இங்கே பாருங்க! ஐ ஆம் ஆல் ரைட்! எனக்கு எநத் மனவியாதியுமில்லை. இவங்க சத்தியமா என் அம்மாதான். ரொம்ப வருஷமா பிரிந்திருந்ததாலும் நான் பெரிசா வளர்ந்துட்டதாலயும் இவங்களுக்கு என்னை அடையாளம் தெரியாம இருக்கலாம். நீங்களே கேளுங்க.”
அதற்குள் அவளது அறை தோழி பார்கவி ஒடிவநது கூட்டத்தை விலக்கிக்கொணடு உள்ளே வர, “பார்கவி, இங்கே பாருடி! இவங்கதான் என் அம்மா!” என்று உருகினாள்.
“நான் சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க!”
மற்ற புரபசர்கள் பொறுமையிழந்து, “இது என்ன கலாட்டா? அம்மான்றே! அவங்க வாயே திறக்கமாட்டேன்றாங்க, உங்க அம்மா பொண்ணு விளையாட்டை பிறகு வெச்சுக்கலாம். நேரமாகுது. சீக்கிரம் புறப்படுங்க!” என்றனர்.
“சுரேஷ், ஏன் வேடிக்கை! எல்லோரும் வண்டில ஏறுங்க.”
அதற்குள் ஆயா கூட்டத்தை விலக்கிக்கொண்டு மெஸ்ஸை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சுஷ்மா பின்னாடியே ஓடி, “அம், என்மேல உனக்கு கருணையேயில்லையா? இங்கே எத்தனையோ அனாதைப் பிள்ளைகளுக்குச் சோறு ஆக்கிப் போடுகிறாய் என்றார்கள். ஆயா என்கிறார்கள். பெத்த மகளை அனாதையாக்கினதேன்? நான் என்ன பாவம் பண்ணேன்!”
அவள் கேட்டுக்கொண்டே பின்னால் நடக்க, ஆயா சட்டென ஸ்டோர் ரூமிற்குள் நுழைந்து கதவை உள்ளே தாழிட்டுக் கொண்டாள்.
“அம்மா, அம்மா.... என்னதிது?” சுஷ்மா கதவைத் தட்டி குழந்தைபோல அமர்ந்து விசம்ப, யாருக்கும் எதுவும் விளங்க வில்லை. சுரேஷிற்கும் குழப்பம். இவள் சொல்வது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இதுதான் இவளது இத்தனை நாள் விரக்திக்குக் காரணமோ? தாயைக் கண்டதும் மடைதிறக்கிறாள். தன்நிலை மறக்கிறாள்.
ஒருவித்ததில் இவளுக்கு இந்த மருத்துவ முகாம் மூலம் பெற்றத் தாயைச் சந்திக்க முடிந்த்தே என்கிற சந்தோஷம் எழுந்தாலும் அதை அந்தம்மாள் உதாசீனப்படுத்துவதில் வருத்தம்.
“சுஷ்மா, கூல்... கூல்... அமைதியா இரு.”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“சார், இது என் அம்மா!”
“ஓக்கே... ஓக்கே! நான் நம்பறேன். அம்மாவைப் பார்த்ததும் உனக்கு உற்சாகம். ஆனால் இவங்களுக்கு இந்தச் சந்திப்பு அதிர்ச்சியைத் தந்திருக்கலாம். எதுக்கும் கொஞ்சம் அவகாசம் கொடு. இவங்க இருக்கிற இடம்தான் தெரிஞ்சிருச்சில்ல. இனி, எப்போ வேணுமானாலும் வந்த பார்க்கலாமே! கிளம்பு!”
“இல்லை. நான் வரலே, நீங்க போங்க!”
“சுஷ்! இங்க பார். இந்த முகாமுக்கு நான் பொறுப்பாளின்னு உனக்குத் தெரியும். ஆளாளக்கு ஒவ்வொரு பக்கம் பிச்சக்கிட்டு நின்னா அப்புறம் பிரின்சிபால்கிட்ட எனக்குத்தான் கெட்ட பெயர். பிளீஸ்!”
“பிரின்சிபால்கிட்ட நான் பேசறேன் சார்!” என்று உடன் செல்லில் அவரது நம்பரை அவசர அவசரமாய் முயற்சித்து அந்தப பக்கம் கிடைக்காமல் போகவே “ஷிட்!” என்று முனகினாள்.
“சார், நீங்களாவது என்னைப் புரிஞ்சுக்குங்க. எத்தனை வருடக் கனவு! எத்தனை வருடத் தவிப்பு! அம்மாவுக்காகத்தானே அப்பா, சொத்து, சுகம் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கியிருந்தேன். இனி நான் அனாதையில்லே சார்!”
ஆசிரமத்தில் மணி சப்தம் கேட்டது. உடன் பிள்ளைகள் பிரார்த்தனைக் கூடத்தை நோக்கி வரிசை பிடித்தனர். வாசலில் பஸ் பொறுமையின்றி ஹாரனடித்தது.
“சுஷ்மா, வா போகலாம்.” என்று சுரேஷ் அவளது கையைப் பற்ற, அவள் எதிர்க்கவில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்துபடி அவனுடன் நடந்தாள்.
பஸ்ஸில் சுஷ்மா செலுத்தப்பட்டதுபோல ஏறினாள். பிடித்து வைத்தது போல அமர்ந்தாள். வண்டி கிளம்பி ரொம்ப தூரம் வந்துபின்பும் கூட போகும்போது இருந்து ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் அப்போது இல்லை.
மருந்துவ பரிசோதனை செய்த களைப்பு ஒரு புறம், சுஷ்மாவின் சோகம் மறுபக்கம் என மாணவர்களையும் அமைதி காக்க வைத்தது.
ஹாஸ்டலுக்கு அவர்கள் திரும்பினபோது இரவு பன்னிரண்டாயிற்று. அதன்பிறகு சாப்பிடப் பிடிக்காமல், அவரவர் தங்கள் அறையை நோக்கி நடக்க, சுரேண் சுஷ்மாவின் கையை உரிமையோடு பற்றி, “என் மேல கோபமா?” என்றான்.
அவள் அதற்குப் பதில் சொல்லாமல் வெறுமையாய் பார்த்தாள். அந்தப் பார்வையில் வழக்கமான ஒளி இல்லை. மேற்கொண்டும் அங்கே நின்றிருந்தால் அழுகை முட்டும் போலிருக்கவே, “குட் நைட்!” என்று தன் விடுதியை நோக்கி நடந்தான்.
படுக்கைக்கு வந்தும்கூட சுரேஷிற்க சமாதாமில்லை. இத்தகை நாட்கள் வாழ்க்கை ஏதோ எதற்கோ என்று ஓடிற்று. கொள்கை, கோட்பாடு, லட்சியம் என எதுவுமில்லா சுதந்திர மனிதன்!.
ஆனால் இப்போது காரணமில்லாமல் ஒரு பிடிப்பு. மகிழ்ச்சி அன்றைய நிகழ்வுகள், சுஷ்மாவின் அண்மை, அவளது பார்வை, பசங்களின் கலாட்டாக்கள், அவளது வெறுமை எல்லாம் அவனைப் பாதித்தது. தூக்கம் பிடிக்கவில்லை.
விளக்குப் போட்டு, மேஜை மேலிருந்து மருத்துவ முகாம் பைல்களைச் சரி பண்ணினான். அங்கு எடுத்த ரத்தம் மற்றும் இதர வஸ்துகளை லேபுக்கு அனுப்பணும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
சுஷ்மா!
அவள் என்னைத் தொல்லை பண்ணுகிறாள். அதிலே ஒரு சுகம் வேண்டப்பட்டவர்கள் கொடுக்கும் தொந்தரவுகள் கூட சந்தோஷம் தருகின்றன. பிடித்தவர்கள் என்ன செய்தாலும் பிடிக்கிறது! நான் காயம்பட்டபோது அவள் எனக்கு மருந்தாக வந்தாள்.
இப்போது அவளுக்கு நான். ஆறுதலாக, பக்கபலமாக, துணையாக இருக்க வேண்டும். சுண்மாவை, தன்னிடம் இணைத்து வைக்க தன்னைத் தாக்கின மாணவர்களுக்கு அவன் மனம் நன்றி சொல்லிற்று. அந்த நேரம் செல்போன் சிணுங்க எடுத்தான். எதிர்முனையில் சுஷ்டாவின் தோழி பார்கவி. “சார், இங்கே உடனே வரமுடியுமா?” என்று பதறினாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
12
சுஷ்மாவின் அறை.
அலறலும் இரைச்சலும் கேட்டு ஏற்கனவே அங்கே மாணவிகள் மொய்த் திருந்தனர். இன்னமும் அறையை நோக்கி வெராண்டாவில் பாய்ந்து கொண்டிருந்தனர்.
குளியலறைக் கதவு திறந்திருந்தது. பார்கவி இரவு உடையின் பளபளப்பில் முடி பிசிறி மிரண்டு போயிருந்தாள்.
சுரேஷ் மாணவிகளை விலக்கிக் கொண்டு பிரவேசிக்க, “சார், இங்கே பாருங்க.” என்று பார்கவி குளியலறையில் மூலையில் சரித்து அமர வைத்திருந்து சுஷ்மாவைக் காட்டினாள்.
சுஷ்மா தலைக்கவிழ்ந்து, உடை நனைந்து, தரை முழுக்க ரத்தம் சிதறியிருந்தாள். அவளது விரலில் கட்டுப் போடப் பட்டு இன்னமும் ரத்தம் ஊறிக் கொண்டிருந்தது. வேண்டுமென்றே விரல் வெட்டி... குரூரம்!
“சுஷ்மா! என்ன இது?”
“அம்மா, என் அம்மா!” என்று தளர்வாய் அவள் முனகினாள்.
“அதுக்காக இப்படியா?” என்று முறைத்துவிட்டு ஆம்புலன்ஸிற்கு அழைப்பு விடுத்தான். “ஏன் இங்கே கூட்டம்? கேர்ன்ஸ் கோ டு யுவர் ரூம்ஸ்!”
பார்கவி சுஷ்மாவை அரவணைத்து எழுப்பி, நாற்காலியில் அமர வைத்தாள்.
“இந்தா, இந்த ஜூஸை சாப்பிடு!”
“சுஷ்மா, உன்னை ஸ்மார்ட் கேர்ள்னு நினைச்சேன், படிச்ச புத்திசாலிப் பெண் இப்படியா... ஷேம்!”
ஜூஸை பாதியில் நிறுத்தினவள், “ ஆமாம் சார். படித்த இந்தப் புத்திசாலிப் பெண் சொன்னதை யாரும் நம்பலியே! எங்கம்மாவை அடையாளம் காட்டினப்போ பைத்தியக்காரி பட்டம், மூளை அடையாளம் காட்டினப்போ பைத்தியக்காரி பட்டம், மூளை பிசகினவள் என ஏளனம்! பாருங்க சார்! சின்ன வயசல நான் அம்மாகூட எடுத்துக்கிட்ட படம்! இப்போதாவது நம்பறீங்களா?”
“அதை அப்புறம் பார்த்துக்கலாம். ஆம்புலன்ஸ் கீழே வந்திடுச்சு. நீ கிளம்பு!”
“இல்லை. வரலை” என்றாள் கடுமையாய்.
போட்டோவில் சுஷ்மா மெலிந்து அரைப் பாவாடை, பனியனுடன் நிற்க அருகே உடல் மெலிந்திருந்தாலும் கூட முகம் பிரகாசமாய் அவளது தாய். நீ ரொம்பவும் உருவகப்படுத்திப் பார்த்தால் அந்த ஆயாவுடன் லேசாய் ஒப்புமை தெரிந்தது.
“இப்போவாவது நம்பறீங்களா சார்?”
“சுஷ்மா, என் நம்பிக்கை இப்போ முக்கியமல்ல. இப்ப முக்கியம் உன் உடல்நலம்! அவ்ளோ ரத்தம் சேதாரமாயிருக்கு. ஒரு டாக்டர் ஸ்டூடண்ட் இப்படியா?”
“சார், என்மேல உங்களுக்கு நிஜமாலுமே அக்கறை இருந்தா என்னை மறுபடியும் அங்கே அழைச்சுப் போங்க, எங்கம்மாவை நான் பார்க்கணும்.”
“நீ அவங்க பொண்ணுன்னு அவங்க ஒத்துக்கலியே!”
“ஒத்துக்க வைக்கிறேன்.”
மறுநாள்.
அனாதை ஆசிரமாம். நிர்வாகி வேண்டாவெறுப்பாகத்தான் அவர்களை வரவேற்றார். “வாங்க, டாக்டர். அதுக்குள்ளே டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்திருச்சா?”
சுஷ்மாவின் அறை.
அலறலும் இரைச்சலும் கேட்டு ஏற்கனவே அங்கே மாணவிகள் மொய்த் திருந்தனர். இன்னமும் அறையை நோக்கி வெராண்டாவில் பாய்ந்து கொண்டிருந்தனர்.
குளியலறைக் கதவு திறந்திருந்தது. பார்கவி இரவு உடையின் பளபளப்பில் முடி பிசிறி மிரண்டு போயிருந்தாள்.
சுரேஷ் மாணவிகளை விலக்கிக் கொண்டு பிரவேசிக்க, “சார், இங்கே பாருங்க.” என்று பார்கவி குளியலறையில் மூலையில் சரித்து அமர வைத்திருந்து சுஷ்மாவைக் காட்டினாள்.
சுஷ்மா தலைக்கவிழ்ந்து, உடை நனைந்து, தரை முழுக்க ரத்தம் சிதறியிருந்தாள். அவளது விரலில் கட்டுப் போடப் பட்டு இன்னமும் ரத்தம் ஊறிக் கொண்டிருந்தது. வேண்டுமென்றே விரல் வெட்டி... குரூரம்!
“சுஷ்மா! என்ன இது?”
“அம்மா, என் அம்மா!” என்று தளர்வாய் அவள் முனகினாள்.
“அதுக்காக இப்படியா?” என்று முறைத்துவிட்டு ஆம்புலன்ஸிற்கு அழைப்பு விடுத்தான். “ஏன் இங்கே கூட்டம்? கேர்ன்ஸ் கோ டு யுவர் ரூம்ஸ்!”
பார்கவி சுஷ்மாவை அரவணைத்து எழுப்பி, நாற்காலியில் அமர வைத்தாள்.
“இந்தா, இந்த ஜூஸை சாப்பிடு!”
“சுஷ்மா, உன்னை ஸ்மார்ட் கேர்ள்னு நினைச்சேன், படிச்ச புத்திசாலிப் பெண் இப்படியா... ஷேம்!”
ஜூஸை பாதியில் நிறுத்தினவள், “ ஆமாம் சார். படித்த இந்தப் புத்திசாலிப் பெண் சொன்னதை யாரும் நம்பலியே! எங்கம்மாவை அடையாளம் காட்டினப்போ பைத்தியக்காரி பட்டம், மூளை அடையாளம் காட்டினப்போ பைத்தியக்காரி பட்டம், மூளை பிசகினவள் என ஏளனம்! பாருங்க சார்! சின்ன வயசல நான் அம்மாகூட எடுத்துக்கிட்ட படம்! இப்போதாவது நம்பறீங்களா?”
“அதை அப்புறம் பார்த்துக்கலாம். ஆம்புலன்ஸ் கீழே வந்திடுச்சு. நீ கிளம்பு!”
“இல்லை. வரலை” என்றாள் கடுமையாய்.
போட்டோவில் சுஷ்மா மெலிந்து அரைப் பாவாடை, பனியனுடன் நிற்க அருகே உடல் மெலிந்திருந்தாலும் கூட முகம் பிரகாசமாய் அவளது தாய். நீ ரொம்பவும் உருவகப்படுத்திப் பார்த்தால் அந்த ஆயாவுடன் லேசாய் ஒப்புமை தெரிந்தது.
“இப்போவாவது நம்பறீங்களா சார்?”
“சுஷ்மா, என் நம்பிக்கை இப்போ முக்கியமல்ல. இப்ப முக்கியம் உன் உடல்நலம்! அவ்ளோ ரத்தம் சேதாரமாயிருக்கு. ஒரு டாக்டர் ஸ்டூடண்ட் இப்படியா?”
“சார், என்மேல உங்களுக்கு நிஜமாலுமே அக்கறை இருந்தா என்னை மறுபடியும் அங்கே அழைச்சுப் போங்க, எங்கம்மாவை நான் பார்க்கணும்.”
“நீ அவங்க பொண்ணுன்னு அவங்க ஒத்துக்கலியே!”
“ஒத்துக்க வைக்கிறேன்.”
மறுநாள்.
அனாதை ஆசிரமாம். நிர்வாகி வேண்டாவெறுப்பாகத்தான் அவர்களை வரவேற்றார். “வாங்க, டாக்டர். அதுக்குள்ளே டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்திருச்சா?”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|