புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத் தாமரைப் பெண்ணே!
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
வாழ்த்துரை
நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.
சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.
ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.
எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.
குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.
இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.
பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.
இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,
அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி
அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.
இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.
மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.
கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,
இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.
முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.
இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்
அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.
பதிப்புரை
எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.
கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,
எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,
எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.
அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.
கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.
இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,
அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்
வாழ்த்துரை
நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.
சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.
ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.
எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.
குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.
இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.
பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.
இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,
அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி
அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.
இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.
மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.
கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,
இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.
முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.
இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்
அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.
பதிப்புரை
எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.
கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,
எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,
எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.
அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.
கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.
இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,
அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அங்குதான், அன்று முதல்தான் அவர்களுக்குச் சனி பிடிக்க ஆரம்பித்தது.
தேவைக்கு முயற்சிப்பது ஆசை. அதுவே மெல்ல மெல்ல வளர்ந்து பேராசையாகிவிடுகிறது. பேராசை நிலைக்கும்போது தேவைகளும் அதிகமாகி பணம், பதவி, புகழ் என வெறியாகிறது.
முகுந்தனும் கூடி அப்படித்தான் ஆகிப்போனான். குடும்பத்தை முன்னேற்றணும், வசதிகளைப் பெருக்கணும் என்கிற நியாயமான ஆசையில் ஆரம்பித்வனின் முழுக்க அதிலேயே இருந்தது.
மாலையில் கடை வேலைக்குப் போனவன், அதைவிட அதிக வருமானம் என வேலை வாய்ப்பு ஏஜென்ஸிக்கு மாறினான். அதன் காரணமாய் வீட்டுக்குத் தாமதமாக வருவான்.
அவன் வரும்போது சுஷ்மா உறங்கிவிடுவாள். காலையில அவன் எழுவதற்குள் அவள் பள்ளிக்குக் கிளம்பிவிடுவாள். கைநிறைய பொருட்களும். வசதியான சாமான்களும் கிடைத்தாலும் கூட செண்பகத்திற்கும் சுஷ்மாவிற்கும் வெறுமையாயிற்று.
“அம்மா, அப்பா எதுக்காக இப்படி ராத்திரி பகலாய் கஷ்டப்படணும்?”
“எல்லாம் உனக்ககாத்தான். உன் எதிர்காலத்துக்காக.”
“வேணாம். அப்பாவை வருத்தி கிடைக்கப் போகிற எதிர்காலம் எனக்கு வேணாம். அவர்ட்ட சொல்லும்மா.”
செண்பகம் சொல்லியும் முகுந்தன் கேட்கவில்லை.
“ஏங்க. இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த ஓட்டம்?”
“இன்னும் கொஞ்சநாள்தான்.”
“அப்புறம்?”
“அப்புறம் மலேசியா போயிரலாம். நான் வேலை பார்க்கிற ஏஜன்ஸி மூலம் பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்தாச்சு. நம்ம கஷ்டமெல்லாம் கூடிய சீக்கிரம் தீரப்போகுது.”
சுஷ்மா குதூகலித்து, “ஐ, நானும் விமானத்துல பறக்கப் போறேன். என்யும் அங்கே அழைச்சுப் போவீங்கதானேப்பா!”
“நிச்சயமாய். நீ இல்லாமல் எங்களுக்குச் சந்தோஷம் ஏது?”
சுஷ்மாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பள்ளியில் தோழிகளிடம் ஆரம்பித்து மரமி. மட்டை. சுற்றுச்சுவர் என எல்லாவற்றிடமும் மலேசியா புராணம் படிக்க ஆரம்பத்தாள். வானத்தில் மிதந்தாள்.
“ஏய், நீ அங்கேயே படிக்கப் போயிருவியா?”
“ஆமா, படிப்பு மட்டுமில்லே அங்கேயே வேலை பார்த்து செட்டிலாகிருவேன்.”
“அங்கே போயிட்டா எங்களையெல்லாம் மறந்துடாதடீ.”
“முயற்சி பண்றேன்.”
அந்தப் பக்குவமில்லா வயதில் மலேசியா மோகம் உள்ளூரைக் கசக்க வைத்தது. அந்தப் பள்ளி, வீடு, பஸ், படிப்பு எல்லாவற்றின் மேலும் இளப்பம் தோன்றிற்று.
ஒருநாள் இரவு இரண்டு மணியாகியும் கூட முகுந்தன் வீடு திரும்பவில்லை.
தேவைக்கு முயற்சிப்பது ஆசை. அதுவே மெல்ல மெல்ல வளர்ந்து பேராசையாகிவிடுகிறது. பேராசை நிலைக்கும்போது தேவைகளும் அதிகமாகி பணம், பதவி, புகழ் என வெறியாகிறது.
முகுந்தனும் கூடி அப்படித்தான் ஆகிப்போனான். குடும்பத்தை முன்னேற்றணும், வசதிகளைப் பெருக்கணும் என்கிற நியாயமான ஆசையில் ஆரம்பித்வனின் முழுக்க அதிலேயே இருந்தது.
மாலையில் கடை வேலைக்குப் போனவன், அதைவிட அதிக வருமானம் என வேலை வாய்ப்பு ஏஜென்ஸிக்கு மாறினான். அதன் காரணமாய் வீட்டுக்குத் தாமதமாக வருவான்.
அவன் வரும்போது சுஷ்மா உறங்கிவிடுவாள். காலையில அவன் எழுவதற்குள் அவள் பள்ளிக்குக் கிளம்பிவிடுவாள். கைநிறைய பொருட்களும். வசதியான சாமான்களும் கிடைத்தாலும் கூட செண்பகத்திற்கும் சுஷ்மாவிற்கும் வெறுமையாயிற்று.
“அம்மா, அப்பா எதுக்காக இப்படி ராத்திரி பகலாய் கஷ்டப்படணும்?”
“எல்லாம் உனக்ககாத்தான். உன் எதிர்காலத்துக்காக.”
“வேணாம். அப்பாவை வருத்தி கிடைக்கப் போகிற எதிர்காலம் எனக்கு வேணாம். அவர்ட்ட சொல்லும்மா.”
செண்பகம் சொல்லியும் முகுந்தன் கேட்கவில்லை.
“ஏங்க. இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த ஓட்டம்?”
“இன்னும் கொஞ்சநாள்தான்.”
“அப்புறம்?”
“அப்புறம் மலேசியா போயிரலாம். நான் வேலை பார்க்கிற ஏஜன்ஸி மூலம் பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்தாச்சு. நம்ம கஷ்டமெல்லாம் கூடிய சீக்கிரம் தீரப்போகுது.”
சுஷ்மா குதூகலித்து, “ஐ, நானும் விமானத்துல பறக்கப் போறேன். என்யும் அங்கே அழைச்சுப் போவீங்கதானேப்பா!”
“நிச்சயமாய். நீ இல்லாமல் எங்களுக்குச் சந்தோஷம் ஏது?”
சுஷ்மாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பள்ளியில் தோழிகளிடம் ஆரம்பித்து மரமி. மட்டை. சுற்றுச்சுவர் என எல்லாவற்றிடமும் மலேசியா புராணம் படிக்க ஆரம்பத்தாள். வானத்தில் மிதந்தாள்.
“ஏய், நீ அங்கேயே படிக்கப் போயிருவியா?”
“ஆமா, படிப்பு மட்டுமில்லே அங்கேயே வேலை பார்த்து செட்டிலாகிருவேன்.”
“அங்கே போயிட்டா எங்களையெல்லாம் மறந்துடாதடீ.”
“முயற்சி பண்றேன்.”
அந்தப் பக்குவமில்லா வயதில் மலேசியா மோகம் உள்ளூரைக் கசக்க வைத்தது. அந்தப் பள்ளி, வீடு, பஸ், படிப்பு எல்லாவற்றின் மேலும் இளப்பம் தோன்றிற்று.
ஒருநாள் இரவு இரண்டு மணியாகியும் கூட முகுந்தன் வீடு திரும்பவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
7
இரவு இரண்டு மணியாகியும் முகுந்தன் வீடு திரும்பாததால் செண்பகத்திற்குள் பயமாயிற்று. தூக்கமில்லாமல் வாசலுக்கும், சாலைக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.ஒருவேளை தாமதமாகிறது என்று அங்கேயே தூங்கி காலையில் எழுந்து வந்துவிடுவார் என சமாதானப்படுத்திக் கொண்டாள். மறுநாளும் ஆளைக் காணோம் என்றதும். அந்த அலுவலகத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்க பூட்டு!விசாரித்த்தில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றி விட்டார்கள் என அவர்கள் மேல் புகார்! போலீஸ் வர, அவர்கள் ஓட்டம் தலை மறைவு!முகுந்தனும் போலீஸிற்குப் பயந்து பதுங்கியிருந்தான். அவளுக்குப் பயமாயிற்று. கடவுளே! என்ன இது சோதனை அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது. எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம். என் பேராசைதான்.இயல்பாய் இருந்தவரை உசுப்பிவிட்டு இப்போது உள்ளதும் போயிற்று. எனக்குப் பணம், காசு, வசதி எதுவும் வேணாம். அவர் மட்டும் போதும்.செண்பகத்திற்கு என்ன சொல்வதென்று தெரிவில்லை. விஷயம் கசிந்து அக்கம் பக்கத்தில் அவமானம். சுஷ்மாவும் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. தோழிகள் ‘”மலேசிய மகாராணி வரா!‘ எனக் கிண்டல்! அவளால் அதை எதிர்கொள்ள முடிய வில்லை.
“அம்மா, இனி நான் ஸ்கூலுக்குப் போகலே!” என்று நான்கு நாள் முடங்கிக் கிடந்தாள். வீட்டில் அம்மாவின் அழுமூஞ்சியைப் பார்ப்பதற்குப் பள்ளியே தேவலாம் என்று பிறகு மனது தேறிற்று. இறுகிற்று.ஒரு வாரம் கழித்து முகுந்தனிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. “செண்பகம், நான் நம்பி ஏமாந்துட்டேன். அது போலி ஏஜென்ஸி. பல பேர் அதுல பணம் கொடுத்து ஏமாந்துட்டாங்க. நான் எந்த தப்பும் பண்ணலே. ஆனாலும் அங்கு வேலை பார்த்ததால நானும் உடந்தைன்னு போலீஸ் தேடுது. நீங்க யாரும் கவலைப்பட வேணாம். நான் மலேசியாவுக்கு இன்னிக்கு ராத்திரிப் புறப்படறேன். அங்கே போய் வேலை தேடிக்கிட்டு உன்னையும் கூப்பிட்டுக்கிறேன். அதுவரைக்கும் சுஷ்மாவும் நீயும் பத்திரமா இருங்க!”
கணவன் அருகில் இல்லாவிட்டலும் பரவாயில்லை. எங்காவது நல்லா இருந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு. கொஞ்சநாள் அவர் தள்ளியிருப்பதுதான் நல்லது. பிறகு எல்லாம் நீர்த்துவிடும். அதன் பிறகு போலீஸில் சரண்டராகி எல்லா விவரமும் சொல்லிக் கொள்ளலாம்.
தற்காலிகமாய் மனதில் சமாதானம் ஏற்பட்டாலும் கூட அவளது மனதில், ‘எல்லாத்துக்கும் காரணம் நான்தானே என் பேராசைதானே‘ என்கிற உறுத்தல் குத்திக்கொண்டேயிருந்தது. மலேசியா சென்று விட்டாலும் கூட முகுந்தனுக்கு வேலை ஏதுவும் எளிதில் கிடைக்கவில்லை. அங்குமிங்கும் அலைந்து கடைசியில் தமிழ்நாட்டுக்கார் நடத்தும் ‘மெட்ராஸ் கபே‘யில் தஞ்சம் புகுந்தான். அது கோலாலம்பூரின் மையத்தில் பிரபலம் அங்கு கல்லா கணக்கு எழுதல், அடுக்களை, சர்வர் என எல்லாமும் செய்தான். அங்கு வைத்துதான் மகேஸ்வரியும் அவனது குடும்பமும் முகுந்தனுக்கு அறிமுகமானார்கள்.
மகேஸ்வரியின் தந்தை அவன் பேரில் இரக்கப்பட்டு, “என்ன படிச்சிருக்கே?” என்றார்.
“டிகிரி சார்.”
“அப்புறம் ஏன் ஹோட்டல்?”
“வேறு வேலை அமையல சார்.”
இரவு இரண்டு மணியாகியும் முகுந்தன் வீடு திரும்பாததால் செண்பகத்திற்குள் பயமாயிற்று. தூக்கமில்லாமல் வாசலுக்கும், சாலைக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.ஒருவேளை தாமதமாகிறது என்று அங்கேயே தூங்கி காலையில் எழுந்து வந்துவிடுவார் என சமாதானப்படுத்திக் கொண்டாள். மறுநாளும் ஆளைக் காணோம் என்றதும். அந்த அலுவலகத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்க பூட்டு!விசாரித்த்தில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றி விட்டார்கள் என அவர்கள் மேல் புகார்! போலீஸ் வர, அவர்கள் ஓட்டம் தலை மறைவு!முகுந்தனும் போலீஸிற்குப் பயந்து பதுங்கியிருந்தான். அவளுக்குப் பயமாயிற்று. கடவுளே! என்ன இது சோதனை அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது. எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம். என் பேராசைதான்.இயல்பாய் இருந்தவரை உசுப்பிவிட்டு இப்போது உள்ளதும் போயிற்று. எனக்குப் பணம், காசு, வசதி எதுவும் வேணாம். அவர் மட்டும் போதும்.செண்பகத்திற்கு என்ன சொல்வதென்று தெரிவில்லை. விஷயம் கசிந்து அக்கம் பக்கத்தில் அவமானம். சுஷ்மாவும் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. தோழிகள் ‘”மலேசிய மகாராணி வரா!‘ எனக் கிண்டல்! அவளால் அதை எதிர்கொள்ள முடிய வில்லை.
“அம்மா, இனி நான் ஸ்கூலுக்குப் போகலே!” என்று நான்கு நாள் முடங்கிக் கிடந்தாள். வீட்டில் அம்மாவின் அழுமூஞ்சியைப் பார்ப்பதற்குப் பள்ளியே தேவலாம் என்று பிறகு மனது தேறிற்று. இறுகிற்று.ஒரு வாரம் கழித்து முகுந்தனிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. “செண்பகம், நான் நம்பி ஏமாந்துட்டேன். அது போலி ஏஜென்ஸி. பல பேர் அதுல பணம் கொடுத்து ஏமாந்துட்டாங்க. நான் எந்த தப்பும் பண்ணலே. ஆனாலும் அங்கு வேலை பார்த்ததால நானும் உடந்தைன்னு போலீஸ் தேடுது. நீங்க யாரும் கவலைப்பட வேணாம். நான் மலேசியாவுக்கு இன்னிக்கு ராத்திரிப் புறப்படறேன். அங்கே போய் வேலை தேடிக்கிட்டு உன்னையும் கூப்பிட்டுக்கிறேன். அதுவரைக்கும் சுஷ்மாவும் நீயும் பத்திரமா இருங்க!”
கணவன் அருகில் இல்லாவிட்டலும் பரவாயில்லை. எங்காவது நல்லா இருந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு. கொஞ்சநாள் அவர் தள்ளியிருப்பதுதான் நல்லது. பிறகு எல்லாம் நீர்த்துவிடும். அதன் பிறகு போலீஸில் சரண்டராகி எல்லா விவரமும் சொல்லிக் கொள்ளலாம்.
தற்காலிகமாய் மனதில் சமாதானம் ஏற்பட்டாலும் கூட அவளது மனதில், ‘எல்லாத்துக்கும் காரணம் நான்தானே என் பேராசைதானே‘ என்கிற உறுத்தல் குத்திக்கொண்டேயிருந்தது. மலேசியா சென்று விட்டாலும் கூட முகுந்தனுக்கு வேலை ஏதுவும் எளிதில் கிடைக்கவில்லை. அங்குமிங்கும் அலைந்து கடைசியில் தமிழ்நாட்டுக்கார் நடத்தும் ‘மெட்ராஸ் கபே‘யில் தஞ்சம் புகுந்தான். அது கோலாலம்பூரின் மையத்தில் பிரபலம் அங்கு கல்லா கணக்கு எழுதல், அடுக்களை, சர்வர் என எல்லாமும் செய்தான். அங்கு வைத்துதான் மகேஸ்வரியும் அவனது குடும்பமும் முகுந்தனுக்கு அறிமுகமானார்கள்.
மகேஸ்வரியின் தந்தை அவன் பேரில் இரக்கப்பட்டு, “என்ன படிச்சிருக்கே?” என்றார்.
“டிகிரி சார்.”
“அப்புறம் ஏன் ஹோட்டல்?”
“வேறு வேலை அமையல சார்.”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“என் கம்பெனியில வேலை தரேன் வா” என அவர் அவளை அழைத்துக் கொண்டார். அவனுக்குச் சந்தோஷமாயிற்று. கடவுள் நம்மைக் கைவிடவில்லை.
ஊருக்கு அந்தச் சந்தோஷத்தை அறிவிக்கலாம் என மளிகைக் கடைக்குப் போன் போட்டபோது. “முகுந்தா, இங்கேயெல்லாம் இனி கூப்பிடாதே” என்று பயந்தார்கள்.
“ஏன்?”
“போலீஸ் டார்ச்சர்ப்பா. தினம் தினம் உன் பெண்டாட்டி புள்ளைய போலீஸ் விரட்டுவது. பணம் கொடுத்து ஏமாந்த பசங்களும் வந்து விரட்டறானுங்க.”
“செண்பகமும் சுஷ்மாவும் எப்படியிருக்காங்க? நான் அவங்கக்கூட பேசலாமா?”
“பேசினா இன்னமும் வம்பு. போனை வச்சிடு.”
“நல்ல வேலை. நல்ல சம்பளம். நல்ல மனிதர்கள் என்கிற சந்தோஷம் அந்த நேரத்தில் அவனிடமிருந்து பறிபோயிற்று. எது கிடைத்து என்ன.... நிம்மதியில்லையே! ஊரில் மனைவி, மகளை கஷ்டப்படுத்திக் கொண்டு எனக்கு மட்டும் இநத் சொகுசு தேவையா?
அவனுக்கு அங்கு இருப்புக்கொள்ளவில்லை. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மகேஸ்வரியின் தந்தையிடம், “முதலாளி, நான் ஒருமுறை ஊருக்குப் போய் வந்துடுறேன். லீவு வேணும்” என்றான்.
சுறுசுறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் வேலை பார்க்கும் அவனை இழக்க அவருக்கு விருப்பமில்லை.
“அங்கு போனால் போலீஸ் புடுச்சுக்குமேப்பா!”
“பரவாயில்லை சார். நானே சரண்டாகிடறேன். என்னால என் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. நான் கிளம்பறேன்.”
வைராக்கியத்துடன் பெட்டி கட்டிக்கொண்டு, டிக்கட் வாங்கிக்கொண்டு ஏர்போர்ட் போனவனை வரவேற்க அங்கே மலேசிய போலீஸ் தயாராயிருந்தது.
ஏர்போர்ட்டில் போலீஸ் தன்னை மறிக்கும் என்று முகுந்தன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
மனதில் சந்தேசத்துடனும் செண்பகத்தையும் சுஷ்மாவையும் பார்க்கப் போகும் உற்சாகத்துடனும் வரிசையில் நின்றிருந்தான். போர்டிங் போட வண்டியில் கனமாயிருந்த பெட்டிகளுடன் நகர்ந்தான்.
செண்பகம், இதோ வந்துட்டேன். உனக்கு நீ விரும்பின பட்டுப்புடவை, செயின், சுஷ்மாவுக்கு நெக்லெஸ்.
கவுண்டரை நெருங்கினபோது போலீஸ் ஓரங்கட்ட அவனுக்கு வியர்த்துப் போயிற்று. “உன் பெயரில் டிராவல் பேன் இருக்கு எங்களுடன் வா!”
“சார், நான் எந்த்த் தப்பும் பண்ணலே?”
“அதெல்லாம் ஸ்டேஷன்ஸ் போய் பேசிக்கலாம் வா!”
அவரது கனவுகள் சிதைந்து தகர்ந்தன. ஏற்கெனவே ஊரில் குடும்பம் சீரழிந்திருக்கிறது. இப்போது இங்க நானும் சிறையில். கடவுளே. எனக்கு ஏன் இந்தச் சோதனை! என்னை ஏன் இவர்கள்? இந்திய போலீஸ் சொல்லியிருக்குமா? அவனுக்குப் புரியவில்லை.
“சார், என் முதலாளிக்குப் போன் பண்ணலாமா?”
“ஓ... ஷ்யூர்.”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“ஒரு மணி நேரத்தில் மகேஸ்வரியும் அவர் தந்தையும் வந்து சேர்ந்தார்கள். முகுந்தனை ஜாமீனில் எடுத்தனர்.
“சார், ரொம்ப நன்றி, நான் எப்படியும் ஊருக்குப் போயாகணும்!”
“பயணத் தடை இருக்கே!”
“அதை அகற்ற என்ன வழி...?”
“யோசிப்போம்!”
ஒரு வாரம் போலீஸில் கையெழுத்துப் போட்டு வந்து, முகுந்தன் நொந்து பேயிருந்தான்.
“மகேஸ், இதிலிருந்து நான் தப்பிக்கவே முடியாதா?”
“வழியிருக்கு. ஆனா நானோ, அப்பாவோ ரொம்ப தலையிட முடியலே. ரத்தபந்தம் அல்லது நெருங்கிய உறவு பொறுப்பேத்துக் கிட்டா பயணத் தடையை விலக்க முடியும்ங்கிறாங்க.”
“எனக்கு இங்கே ரத்தபந்தம் யார் இருக்கா? நெருங்கிய உறவுக்கு நான் எங்கே போவேன்?”
“நான் ஒரு யோசனை சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!”
“சொல்லு.”
“நீங்க வெளியே போகணும்னா உங்களுக்கு உரிமையான யாராவத இங்கே இருக்கணும். நான் வேனுமானா அப்படி இருந்துடறேனே!”
அவன் அதிர்ந்து போனான்
“நீ எப்படி?”
“உங்க மனைவியாக!”
“மகேஸ்.. என்ன சொல்றே நீ? பைத்தியம் போல பேசாதே!”
“இல்லை. நல்லா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ரிஜிஸ்தர் பண்ணிரலாம். உங்களுக்கும் எனக்கும் திருமணம்.”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
8
“உளறாதே! உன் வயசென்... என் வயசென்ன... ஏற்கெனவே உங்களுக்குக் கடன்பட்டிருக்கேன். இதுவேறயா? என்னால உன் வாழ்வு கெடவேணாம். அதுவுமில்லாம எனக்கு ஊரில் மனைவி- மகள் இருக்கிறார்கள்” முகுந்தன் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினான்.
“அவர்கள் அங்கே இருக்கட்டும். நான் இங்கே. உங்களைப் பார்த்த நாள் முதலே என் மனதில் மின்னல்... அப்புறம் உங்கள வேகம், விவேகம், செயல்பாடுகள் எல்லாமே என்னை மயக்கிடுச்சு” மகேஸ்வரி தன் பங்குக்குப் பிடிவாதமாக இருந்தாள்.
“உங்கப்பா சம்மதிக்கணும்?” கொஞ்சம் இறங்கி வந்தான் முகுந்தன்.
“அவருக்கு ஏற்கனவே உங்க பேர்ல உயிர். நிச்சயம் சம்மதிப்பார். என் விருப்பத்துக்கு அவர் ஒருநாளும் மறுத்ததில்லை. தவிர, அவரது பிசினஸை உங்களைப் போல நல்லவர், திறமையானவர் ஒருவர்கிட்ட கொடுத்திட்டு ஒதுங்கணும்னு சொல்லிக்கிட்டிருக்கார்.”
நீண்ட யோசனைக்குப் பின், வேண்டாவெறுப்பாக முகுந்தன் சம்மதித்தான். அதுவும் செண்பகத்தையும் சுஷ்மாவையும் கரைசேர்க்க என்கிற சமாதானத்துடன்.
‘ஊர் உலகத்தில் இரண்டு பொண்டாட்டிக்கார்கள் இல்லையா என்ன? வேறு வழி இல்லாமல்தானே...‘ என்று மனதைத் தேற்றித் கொண்டான்.
இதில் செண்பகத்தை ஒதுக்கப்போவதில்லை, அவளையும் சுண்மாவையும் சொகுசாய் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் விரும்பினபடி மலேசியாவுக்கும் அழைத்து வந்துவிடலாம்.
செண்பகம் எதிர்க்கமாட்டாள். என் நிலைமையைப் புரிந்து கொள்வாள். சமாதானம் சொல்ல்லாம் என்று பயணத் தடை நீக்கி ஊருக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி.
அங்கு அவள் இல்லை.
“நீங்கள் இப்படி துரோகம் பண்ணுவீர்கள் என்று எதிர்பார்க்க வில்லை. மலேசயிவிலிருந்து உங்கள் இரண்டாம் மனைவி போன் பண்ணினாள். எங்களை ஒதுக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உங்களுக்காக, உங்களால் எவ்வளவோ கஷ்டங்கள், சங்கடங்கள், வேதனைகளைத் தாங்கிக் கொண்ட என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். நிஜமான பாசம் இருக்குமானால் மகளையாவது கரை சேருங்கள்.”
அன்று இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனாள் செண்பகம்.
அக்கம்பக்கம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. புரியவில்லை. சுஷ்மாவுக்கு எதுவும் விளங்கவில்லை. அப்பாவைப் பார்த்து சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. அப்படியே பிடித்து வைத்திருந்தது போல சிலையாய் அமர்ந்திருந்தாள்.
முகுந்தனுக்குத் தன் மேலேயே வெறுப்பாய் வந்தது. இவள் இப்படி எதுவும் செய்து வைத்துவிடக கூடாத என்றுதான் அவளிடம் எந்த விவரமும் சொல்லாமலிருந்த்தான். ஆனால் மகேஸ்வரி விஷயத்தைப் போன் வழியே செண்பகத்தின் காதில் போட்டு காரியத்தைக் கெடுத்துவிட்டாள்.
போலீஸ் பிரச்சினையால் ஊரில் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கமுடியவில்லை.
“சுஷ்மா, நீயும் எங்கூட வந்திரு.”
“எதுக்கு?”
“உளறாதே! உன் வயசென்... என் வயசென்ன... ஏற்கெனவே உங்களுக்குக் கடன்பட்டிருக்கேன். இதுவேறயா? என்னால உன் வாழ்வு கெடவேணாம். அதுவுமில்லாம எனக்கு ஊரில் மனைவி- மகள் இருக்கிறார்கள்” முகுந்தன் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினான்.
“அவர்கள் அங்கே இருக்கட்டும். நான் இங்கே. உங்களைப் பார்த்த நாள் முதலே என் மனதில் மின்னல்... அப்புறம் உங்கள வேகம், விவேகம், செயல்பாடுகள் எல்லாமே என்னை மயக்கிடுச்சு” மகேஸ்வரி தன் பங்குக்குப் பிடிவாதமாக இருந்தாள்.
“உங்கப்பா சம்மதிக்கணும்?” கொஞ்சம் இறங்கி வந்தான் முகுந்தன்.
“அவருக்கு ஏற்கனவே உங்க பேர்ல உயிர். நிச்சயம் சம்மதிப்பார். என் விருப்பத்துக்கு அவர் ஒருநாளும் மறுத்ததில்லை. தவிர, அவரது பிசினஸை உங்களைப் போல நல்லவர், திறமையானவர் ஒருவர்கிட்ட கொடுத்திட்டு ஒதுங்கணும்னு சொல்லிக்கிட்டிருக்கார்.”
நீண்ட யோசனைக்குப் பின், வேண்டாவெறுப்பாக முகுந்தன் சம்மதித்தான். அதுவும் செண்பகத்தையும் சுஷ்மாவையும் கரைசேர்க்க என்கிற சமாதானத்துடன்.
‘ஊர் உலகத்தில் இரண்டு பொண்டாட்டிக்கார்கள் இல்லையா என்ன? வேறு வழி இல்லாமல்தானே...‘ என்று மனதைத் தேற்றித் கொண்டான்.
இதில் செண்பகத்தை ஒதுக்கப்போவதில்லை, அவளையும் சுண்மாவையும் சொகுசாய் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் விரும்பினபடி மலேசியாவுக்கும் அழைத்து வந்துவிடலாம்.
செண்பகம் எதிர்க்கமாட்டாள். என் நிலைமையைப் புரிந்து கொள்வாள். சமாதானம் சொல்ல்லாம் என்று பயணத் தடை நீக்கி ஊருக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி.
அங்கு அவள் இல்லை.
“நீங்கள் இப்படி துரோகம் பண்ணுவீர்கள் என்று எதிர்பார்க்க வில்லை. மலேசயிவிலிருந்து உங்கள் இரண்டாம் மனைவி போன் பண்ணினாள். எங்களை ஒதுக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உங்களுக்காக, உங்களால் எவ்வளவோ கஷ்டங்கள், சங்கடங்கள், வேதனைகளைத் தாங்கிக் கொண்ட என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். நிஜமான பாசம் இருக்குமானால் மகளையாவது கரை சேருங்கள்.”
அன்று இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனாள் செண்பகம்.
அக்கம்பக்கம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. புரியவில்லை. சுஷ்மாவுக்கு எதுவும் விளங்கவில்லை. அப்பாவைப் பார்த்து சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. அப்படியே பிடித்து வைத்திருந்தது போல சிலையாய் அமர்ந்திருந்தாள்.
முகுந்தனுக்குத் தன் மேலேயே வெறுப்பாய் வந்தது. இவள் இப்படி எதுவும் செய்து வைத்துவிடக கூடாத என்றுதான் அவளிடம் எந்த விவரமும் சொல்லாமலிருந்த்தான். ஆனால் மகேஸ்வரி விஷயத்தைப் போன் வழியே செண்பகத்தின் காதில் போட்டு காரியத்தைக் கெடுத்துவிட்டாள்.
போலீஸ் பிரச்சினையால் ஊரில் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கமுடியவில்லை.
“சுஷ்மா, நீயும் எங்கூட வந்திரு.”
“எதுக்கு?”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“மலேசியாவுல நீ படிக்கலாம். மலேசியாவுக்கு வரணும்னு நீயும் ஆசைப்பட்டாயே!”
“இல்லேப்பா.... அம்மாவுக்கில்லாத சந்தோஷம் எனக்கு எதுவும் வேணாம். நான் வரணும்னா அம்மாவும் வேணும்”.
“எப்படிம்மா? அவளை எங்கேன்னு போய்த் தேடறது? அவள் இருக்காளா, இல்லை...”
“அப்போ, நானும் செத்துட்டேன்னு நினைச்சுக்குங்க...”
காலம் காயத்தை ஆற்றும், ரணம் குறையும். இப்போதே போட்டுக் கீற வேண்டாம் என்று கிளம்பினான்.
சுஷ்மா, பாட்டியின் கிராமத்திலிருநது படித்தாள். பிறகு பாட்டி அவள் மனதைத் தேற்றி மலேசியாவுக்கு அனுப்பி வைத்தாள்.
ஆனால் அங்கும் சுஷ்மாவுக்கு நிம்மதி இல்லை. மகேஸ்வரியைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பு, கோபம் பொங்கிற்று. அவளது அழகும் வனப்பும் கடுப்பேற்றிற்று.
இந்த அழகுதானே எங்கப்பாவை வசீகரித்தது? இத இல்லாமல் பண்ணிவிட்டால் என்ன? என்று ஒருநாள் குரூரமாகச் சிந்தித்தாள்.
ஒரு இரவில் முகுந்தன் வெளியூர் போயிருக்க, மகேஸ்வரி தனியாய் படுத்திருக்க, சுஷ்மா பள்ளிக்கூடத்திலிருந்து கந்தக அமிலம் எடுத்து வைத்திருந்தாள்.
எல்லோரும் உறங்கினதம், மெல்ல மெல்ல சித்தியின் அறைக்கு நடந்து... படுக்கையில் உடல் முழுக்க போர்வை போர்த்தி முகம் மட்டும் காட்டிப் படுத்திருந்த அவளின் அருகில் போய்... அமிலத்தை ஊற்ற...
திடுக்கென விழிப்பு வந்து ஓசை கேட்டு எழுந்த மகேஸ்வரியின் கழுத்தில் அமிலம் பட்டு வெந்து போயிற்று.
“ஏய், சுஷ்டா... சனியனே, பிசாசே!” என மகேஸ்வரி அலற, உடன் ஆஸ்பத்திரி. அவள் தோள் வெந்த்துடன் பெரிய பாதிப்பில்லாமல் அன்று தப்பித்தாள்.
அதுவரை சஷ்மாவின் மேல் அன்பையும் பாசத்தையும் பொழிந்தவள் அதன் பிறகு வெறுப்பைக் கொட்ட.. இனியும் இவர்களை ஒன்றாக வைத்திருக்க முடியாத என முகுந்தன் சுஷ்மாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி படிப்பைத் தொடர வைத்தான்.
என்றைக்காவது ஒரு நாள் சுஷ்மாவின் மனது மாறும், அப்பாவை ஏற்றுக் கொள்வாள் என்கிற அவரது எதிர்பார்ப்பு பொய்த்து விரக்தியின் எல்லையிலிருந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
9
மருத்துவக் கல்லூரி விடுதி.
தூரத்தில் ரயில் அதிர்வு குறைந்து, மரங்களும் அயர்ந்து, பனி பூசினி இரவு. முன்பெல்லாம் தேர்வு சமயத்தில் மட்டும் அறைகளில் விளக்குகள் கண் விழித்திருக்கும். இப்போது, சதாசர்வமும் தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டர்!
எப்போதும் மெஸ்ஸில் முதல் நபராகச் சாப்பிட்டு ஒன்பதுக்கெல்லாம் படுக்கையாகி விடுகிற சுஷ்மாவிற்கு அன்று தூக்கம் விலகிற்று. கொசுவலைக்கு வெளியே அமர்ந்திருந்த கொசுக்களை உற்றக் கவனித்தாள்.
ஒரு வகையில் நானும் அவையும் ஒன்றோ? அவை பசிக்காக அலைகின்றன. நான் அன்புக்காக! அவை வலைக்கு வெளியே சுதந்திரம் பெற்றிருக்கின்றன. நான் வலைக் குள்!
சட்டென தாய் நினைவு வந்து, ‘ஏம்மா? ஏம்மா என்னை விட்டுட்டுப் போனே?‘ என்று விசும்ப ஆரம்பித்தாள். ‘போனால் போகிறது... தூங்கத் தொலைக்கலாம். மறுநாள் வகுப்பு உள்ளதே‘ என்று அப்போதுதான் படுத்திருந்த தோழி பார்கவியை அந்த விசும்பல் உசுப்பிற்று.
சட்டென விளக்குப் போட்டு. “ஏய், சுஷ்! என்னாச்சு?”
“அம்மா...ம்...மா!”
அவள் எழுந்து வந்து, “ஏய், என்ன இது... சின்னக் குழந்தை யாட்டம்?” என்று அவளது கழுத்தைத் தூக்கி அணைத்துக் கொண்டாள்.
“பார்கவி, நான் என் அம்மாவைப் பார்ப்பேனா? அவங்க திரும்பக் கிடைப்பாங்களா?”
“அதெல்லாம் கிடைப்பாங்க. பேசாம படு. உன் சித்தி வந்துட்டுப் போனாலே இதுதான் பிரச்சினை” என்று அவளது முகதைத் துடைத்துவிட்டாள்.
“தூங்கு.... இல்லே... பாத்ரூமுல போய் அழு! எனக்குத் தூக்கம் வருது.”
பார்கவி கடுப்படித்து நகர்ந்தாள். அவள் சொன்னபடியே சுஷ்மா பாத்ரூமிற்கு நகர்ந்தாள். முகம் கழுவி கண்ணாடியில் பார்க்க அவளுக்கே விகாரமாய்த் தெரிந்த்து. ஜன்னல் திரையை விலக்க, தென்றல் முகத்தில் பரவி புத்துணர்ச்சி வந்தது.
கீழே புல்வெளியில் நாய்கள் தவளையைத் துரத்தி சாகசம். நீரூற்றில் வெளிச்சம் பட்டு நிறப்பிரிகை! வாட்ச்மேன் தன் கூண்டுக்குள் அமர்ந்து ‘தான் தூங்கவில்லை‘ என்பதைத் தெரிவிக்க இடையிடையே காலாட்டல்! செருமல் புகை!
எழுந்து நடந்தான். நாய் அவனது காலை நக்கி, விசுவாசம் காட்டி குனிந்து, நெட்டி முறித்து, உடலை உதறி எதற்கோ ஓட்டம் என்னைத் தவிர வெளியே எல்லோருமே சந்தோஷமாயிருக்கிறார்கள். நான் மட்டும் ஏன்? எதற்காக வருத்திக்கணும்? வருந்தணும்?
இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்க்க மாணவர்கள் விடுதி தெரிந்த்து. அங்கே கட்டிடத்தின் பின்பகுதியில் இருளில் சில உருவங்கள். கசமுசாக்கள்! தலையில் முண்டாசும், வாரிச் சுருட்டின லுங்கியுமாய் அதுகள் காம்பவுண்ட் ஏறி வெளியே குதிப்பது தெரிந்தது.
அடப்பாவிகளா! இந்த நேரத்தில் எங்கே போகிறார்கள்? இங்கே பெண்கள் விடுதிக்கு வருவார்களோ? யாரைப் பார்க்க? அதுவும் கூட்டமாய்....
அவளது ஆர்வம் அதிமாயிற்று. ஜன்னலை நன்றாகத் திறந்து கவனித்தாள். அவர்கள் கொஞ்சம் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த காரிலி ஏறினர். அது ஓசை குறைத்து விளக்கின்றி நகர்ந்தது.
பாவி பசங்க! தூங்கவே மாட்டாணுங்களா? அந்த வண்டி கண்ணிலிருநது மறைந்ததும் ஜன்னலை மூடிவிட்டு படுக்கைக்குத் திரும்பினாள்.
செல்போன் காதை தூக்க, ‘யார்ரா இந்த நேரத்தில்‘ என்று முனகிக்கொண்டு சுரேஷ் எடுத்தான். ஹாஸ்டல் வாட்ச்மேன்!
“என்னப்பா?”
“சார், நாலு பசங்க.... காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிச்சு காரில் போறாணுங்க! நீங்க வந்தீங்கன்னா கையும் களவுமா பிடிக்கலாம்.”
“போன பின்னாடி எப்படி பிடிக்கிறதாம்!”
மருத்துவக் கல்லூரி விடுதி.
தூரத்தில் ரயில் அதிர்வு குறைந்து, மரங்களும் அயர்ந்து, பனி பூசினி இரவு. முன்பெல்லாம் தேர்வு சமயத்தில் மட்டும் அறைகளில் விளக்குகள் கண் விழித்திருக்கும். இப்போது, சதாசர்வமும் தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டர்!
எப்போதும் மெஸ்ஸில் முதல் நபராகச் சாப்பிட்டு ஒன்பதுக்கெல்லாம் படுக்கையாகி விடுகிற சுஷ்மாவிற்கு அன்று தூக்கம் விலகிற்று. கொசுவலைக்கு வெளியே அமர்ந்திருந்த கொசுக்களை உற்றக் கவனித்தாள்.
ஒரு வகையில் நானும் அவையும் ஒன்றோ? அவை பசிக்காக அலைகின்றன. நான் அன்புக்காக! அவை வலைக்கு வெளியே சுதந்திரம் பெற்றிருக்கின்றன. நான் வலைக் குள்!
சட்டென தாய் நினைவு வந்து, ‘ஏம்மா? ஏம்மா என்னை விட்டுட்டுப் போனே?‘ என்று விசும்ப ஆரம்பித்தாள். ‘போனால் போகிறது... தூங்கத் தொலைக்கலாம். மறுநாள் வகுப்பு உள்ளதே‘ என்று அப்போதுதான் படுத்திருந்த தோழி பார்கவியை அந்த விசும்பல் உசுப்பிற்று.
சட்டென விளக்குப் போட்டு. “ஏய், சுஷ்! என்னாச்சு?”
“அம்மா...ம்...மா!”
அவள் எழுந்து வந்து, “ஏய், என்ன இது... சின்னக் குழந்தை யாட்டம்?” என்று அவளது கழுத்தைத் தூக்கி அணைத்துக் கொண்டாள்.
“பார்கவி, நான் என் அம்மாவைப் பார்ப்பேனா? அவங்க திரும்பக் கிடைப்பாங்களா?”
“அதெல்லாம் கிடைப்பாங்க. பேசாம படு. உன் சித்தி வந்துட்டுப் போனாலே இதுதான் பிரச்சினை” என்று அவளது முகதைத் துடைத்துவிட்டாள்.
“தூங்கு.... இல்லே... பாத்ரூமுல போய் அழு! எனக்குத் தூக்கம் வருது.”
பார்கவி கடுப்படித்து நகர்ந்தாள். அவள் சொன்னபடியே சுஷ்மா பாத்ரூமிற்கு நகர்ந்தாள். முகம் கழுவி கண்ணாடியில் பார்க்க அவளுக்கே விகாரமாய்த் தெரிந்த்து. ஜன்னல் திரையை விலக்க, தென்றல் முகத்தில் பரவி புத்துணர்ச்சி வந்தது.
கீழே புல்வெளியில் நாய்கள் தவளையைத் துரத்தி சாகசம். நீரூற்றில் வெளிச்சம் பட்டு நிறப்பிரிகை! வாட்ச்மேன் தன் கூண்டுக்குள் அமர்ந்து ‘தான் தூங்கவில்லை‘ என்பதைத் தெரிவிக்க இடையிடையே காலாட்டல்! செருமல் புகை!
எழுந்து நடந்தான். நாய் அவனது காலை நக்கி, விசுவாசம் காட்டி குனிந்து, நெட்டி முறித்து, உடலை உதறி எதற்கோ ஓட்டம் என்னைத் தவிர வெளியே எல்லோருமே சந்தோஷமாயிருக்கிறார்கள். நான் மட்டும் ஏன்? எதற்காக வருத்திக்கணும்? வருந்தணும்?
இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்க்க மாணவர்கள் விடுதி தெரிந்த்து. அங்கே கட்டிடத்தின் பின்பகுதியில் இருளில் சில உருவங்கள். கசமுசாக்கள்! தலையில் முண்டாசும், வாரிச் சுருட்டின லுங்கியுமாய் அதுகள் காம்பவுண்ட் ஏறி வெளியே குதிப்பது தெரிந்தது.
அடப்பாவிகளா! இந்த நேரத்தில் எங்கே போகிறார்கள்? இங்கே பெண்கள் விடுதிக்கு வருவார்களோ? யாரைப் பார்க்க? அதுவும் கூட்டமாய்....
அவளது ஆர்வம் அதிமாயிற்று. ஜன்னலை நன்றாகத் திறந்து கவனித்தாள். அவர்கள் கொஞ்சம் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த காரிலி ஏறினர். அது ஓசை குறைத்து விளக்கின்றி நகர்ந்தது.
பாவி பசங்க! தூங்கவே மாட்டாணுங்களா? அந்த வண்டி கண்ணிலிருநது மறைந்ததும் ஜன்னலை மூடிவிட்டு படுக்கைக்குத் திரும்பினாள்.
செல்போன் காதை தூக்க, ‘யார்ரா இந்த நேரத்தில்‘ என்று முனகிக்கொண்டு சுரேஷ் எடுத்தான். ஹாஸ்டல் வாட்ச்மேன்!
“என்னப்பா?”
“சார், நாலு பசங்க.... காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிச்சு காரில் போறாணுங்க! நீங்க வந்தீங்கன்னா கையும் களவுமா பிடிக்கலாம்.”
“போன பின்னாடி எப்படி பிடிக்கிறதாம்!”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“திரும்ப வருவானுங்க, அதே மாதிரி காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதிக்கும்போது அமுக்கிறலாம்.”
“சரி, இதோ வரேன்.” என்று சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்தான். ‘எல்லாம் தலையெழுத்து! இந்த வார்டன் வேலையிலிருநத் எப்போது விடுதலையோ தெரியலை!‘
வாட்ச்மேன் புகை நாற்றத்துடன், “சார், நீங்க இந்தக் கூண்டுல உட்காருங்க” என்று எங்கேயிருந்தோ பொறுக்கிக் கொண்டு வந்திருந்த கார் சீட்டை காட்டினான். “நீங்க தூங்குங்க. அவனுங்க வரும்போது நான் எழுப்பறேன்!”
அவன் சொல்லிவிட்டு கைபேசி மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டு உலாத்த ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் வெளியே கார் தெரிய, “சார், வந்துட்டானுங்க. வாங்க!” என்று கிசுகிசுத்தான்.
சுரேஷ் திருடனைப் பிடிக்கப்போகும் மகா திரில்லுடன் வாட்ச்மேனைத் தொடர்ந்தான்.
காம்பவுண்டோரம் புல்வெளியில் பதுங்க, நாயும் அவனுடன் பதுங்கிற்று.
காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் லேசாய் ஓசை, கிசுகிசுப்பு கேட்டது. எப்படித்தான் இத்தனை பெரிய சுவரில் ஏறுகிறான்களோ குரங்க்கு வாக்கப்பட்டவர்கள்!
இதோ, நெருங்கிவிட்டார்கள். இதோ, ஏறுகிறார்கள். இதோ, அக்கம் பக்கம் பார்க்கிறார்கள்.
இதோ, குதிக்கப் போகிறார்கள். ஒரே அழுக்காய் அழுக்கு, விடாதே தயாராகு! தொடர்ந்து நான்கு உருவங்கள் பொத் பொத் தொனப் புல்வெளியில் குதிக்க, சுரேஷ் அவர்களின் மேல் பாய, ஒருவன் திமிறிக்கொண்டு எழுநது கையில் கிடைத்த தடியை சுரேஷின் மண்டையில் இறக்க, அவன் “அம்மா...” என்று அலறிக்கொண்டு புல்வெளியில் மலர்ந்தான்.
எழுந்து பார்த்துபோது ஆஸ்பத்திரியின் மணம். வரிசையாய் படுக்கைகளில் முனகல்கள், டெட்டால், குளுகோஸ் பைட், ஊசி, அதிகாரம் பண்ணும் நர்ஸ்கள், ஆரஞ்சுத் தோல் வாசம்.
அவனுக்குத் தலையில் விண்விண்ணென்று வலித்தது. தனக்கு என்ன நேர்ந்தது. ஏது நேர்ந்த்து என்று யூகிக்கக் கொஞ்சநேரம் பிடித்த்து. வேண்டாத வேலை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பசங்கள் எப்படிப் போனால் என்ன என்று தூங்குவதை விட்டுவிட்டு திருடன்போல பிடிக்கப் போனதற்குத் தண்டனை. சிறுபிள்ளைத்தனம்!
படிக்கும்போது நான் செய்யாத சேஷ்டைகளா? கஞ்சா, தண்ணி என அனைத்தையும் டெஸ்ட்டும், டேஸ்ட்டும் செய்து மயங்கி, வாந்தி எடுத்து, இனி உருப்படப் போவதில்லை என வருந்தி அப்பா கஷ்டப்பட்டு அனுப்பும் பணம் இப்படி போகிறதே என உறுத்தல் எடுத்து செத்துப் போக முயன்றது கூட உண்டு.
இதெல்லாம் அந்தந்த வயசுக்கும் சூழலுக்கும் சகஜம். கண்டுகொள்ளக் கூடாது. அல்லது வார்டன் தொழிலை விட்டுடணும்.
அவன் ஒரு முடிவுக்கு வந்தபோது அறைக்கு வெளியே கிசுகிசுப்பு கேட்டது.
“போ! நீ போ! முழிச்சுட்டார். இல்லை நீ போ! நான் போனால் சரிப்படாது.”
“அட, இங்கே என்ன கலாட்டா... பார்க்கணும்னா சீக்கிரம் பார்த்துட்டு கிளம்புங்க!” நர்ஸ் விரட்டினாள் உடன் முதலில் தெரிந்தது சுஷ்மா! பிறகு கவிதா, ரோஷ்னி, வினிதா, அனிதா எனப் பெண்கள் படை!
“ஸாரி சார்!” என்று அனிதா முகத்தை வருத்தத்தின் எல்லைக்குக் கொண்டுபோய் துக்கம் காட்ட, சுஷ்மாவைப் பார்த்து, “தட்ஸ் ஓ.கே!” என்று முனகினான்.
சுஷ்மாவைப் பார்த்ததும் உற்சாகம். அவள் வருவாள் என்றால் இப்படி அடிக்கடி அட்மிட்டாகலாம். வேதனைக்கிடையிலும் வட பைத்தியக்காரத்தனச் சிந்தனை.
“ஸாரி சார் உங்களுக்கு இப்படி ஆயிருச்சன்னு தெரிஞ்சதும் துடிச்சுப் போயிட்டோம். பசங்கள் கூட ரொம்ப பீல் பண்றாங்க.”
“எதுக்கு? அரைகுறையாய் விட்டதற்கா”
“இல்லே சார். உண்மையில் அவங்க வேற எந்த்த் தப்புத் தண்டாவுக்கும் போகலே. லேப்ஸ் அனாடமிக்காக வைத்திருந்த டெட் பாடி சேதமாகிவிட வேறு ஏற்பாடு செய்தாகணும்னு புரபசர் உத்தரவு. அதற்காக்க் கல்லறைக்குப் பிணம் தோண்டப் போனார்களாம். வேறு எதுவுமில்லையாம் சார்..”
“வெறும் தோண்டல் தானா இல்லை, யாரையாவது கொலை செய்து...? ம்..மா” என்று சுரேஷ் தலையைப் பிடித்துக்கொண்டு முனகினான். சுஷ்மா சட்டென அவனை நெருங்கி அவனது தலைக்கட்டை அழுத்திப்பிடித்தாள், சுற்றியிருந்தவர்களின் கண்கள் விரிய, சுரேஷ் வலி மறந்து மெய் வாய் கண் எல்லாம் மறந்தான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
10
“எல்லோரும் ஏறியாச்சா? வண்டி புறப்படலாமா?”
பிரின்சிபால் கேட்க, “இன்னும் பிஜீ வரலே சார்!”
“இன்னும் என்ன பண்றான்?” என்று அவர் கடுப்படிக்க, “இதோ வந்துட்டேன் சார்!” என்று கையில் வெள்ளைக் கோட்டையும் ஸ்டெதாஸ்கோப்பையும் ஏந்திக்கொண்டு பிஜீ ஒடிவந்தான். கூலிங்கிளாஸ், தலையில் தொப்பி, தோளில் காமிர.
“ஏய், என்னப்பா மெடிக்கல் கேம்ப் பிற்கா இல்லை பிக்னிக் போறீங்களா?”
“ரெண்டுந்தான்!” என்று பஸ்ஸிலிருந்து பதில் வந்தது.
“ஒருநாள் உங்களிடமிருந்து விடுதலை!” உடன் பஸ் முழுக்க சிரிப்பு.
பிரின்சிபால் அதை எதிர்கொள்ள முடியாமல், “சுரேஷ், ஆர் யூ.ஒ.கே? காயம் ஆறிடுச்சுல்லே?” என்று பேச்சை மாற்றினார்.
“பாத்ரூம்ல இனி எச்சிரிக்கையா குளி! வார்டனே இப்படி வழுக்கி விழுந்தா எப்படி? சரி சரி, கிளம்புங்க!”
மருத்துவக் கல்லூரி முகாம் என முகத்தில் பேனர் கட்டப்பட்டிருந்த பஸ், டயர்கள், எலுமிச்சம்பழம் நசுக்கி, சூடம் காட்டப்பட்டுக் கிளம்பிற்று.
அது காம்பவுண்ட் கடக்கிறவரைதான் மவுனம். பிரதான சாலையைத் தொட்டதும், “ஏய், கலகலப்பா இருங்கப்பா.” ஜானி சொல்ல, பின்பக்கமிருந்து, “லக லக லக...” எனக் கலவரம் ஆரம்பித்தது.
சுரேஷிற்குத் தலையில் கட்டுப் பிரித்திருந்தாலும்கூட வலி இன்னும் மிச்சமிருந்தது. நெற்றியில் கிண்ணென்று பாரம்.
பிரின்சிபால் அவனுக்கு முடியவில்லை என்றால் வேறு யாரையாவது அனுப்புகிறேன் என்றார். அவன்தான் பிடிவாதமாய்க் கிளம்பியிருந்தான்.
அதற்கு இரண்டு உந்துதல்கள். ஒன்று இந்தக் காம்ப்பை வெற்றிகரமாய் முடித்தால் முழுநேர லெக்சர்ராக்குவதாய் பிரின்சிபால் கொடுத்த வாக்குறுதி. அடுத்தது சுஷ்மா!
என்னவோ தெரியவில்லை.... அவனையுமறியாமல் மனது அவளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருந்தது. அதற்குக் காரணம் அவளது அழகா, வனப்பா, திறமையா, அமைதியா, கண்களில் எப்போதும் தேக்கி வைத்திருக்கும் சோகமா, இல்லை எல்லாமுமா எனத் தெரியவில்லை.
அவளது கைப்பட்ட தலைக்கட்ட அன்று இனித்தகித்தது. அவளது அண்மை வேண்டும் வேண்டும் என்று மனது துடித்தது.
இப்போதும் பசங்கள் பாடி, ஆடி, மவுத்ஆர்கன் வாசித்து அமளி பண்ண சுரேஷின் பார்வை சுஷ்மாவின் பக்க்ம் எதேச்சையாய்த் திரும்புவதுபோலப் பாவித்தது.
அதுவரை அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த சுஷ்மா, சட்டென மின்சாரத்தைத் தொட்டதுபோல் சாலைப் பக்கம் திரும்பி நாக்கைக் கடித்தாள். முகம் சிவந்த, நெற்றியில் இல்லாத வியர்வையைத் துடைத்துக்கொண்டாள்.
அவனது வருகை அவளுள்ளும் பூரிப்பு தந்திருந்தது. அது ஏனென்று சுஷ்மாவிற்கும் புரியவில்லை. அதுவைரை அப்பா, அம்மா, சித்தி, பொறுக்கி விவேக் என கனத்த மனது, சுரேஷை நினைக்கம் போது இளகுவதை அவளாலும் உணர முடிந்தது.
“எல்லோரும் ஏறியாச்சா? வண்டி புறப்படலாமா?”
பிரின்சிபால் கேட்க, “இன்னும் பிஜீ வரலே சார்!”
“இன்னும் என்ன பண்றான்?” என்று அவர் கடுப்படிக்க, “இதோ வந்துட்டேன் சார்!” என்று கையில் வெள்ளைக் கோட்டையும் ஸ்டெதாஸ்கோப்பையும் ஏந்திக்கொண்டு பிஜீ ஒடிவந்தான். கூலிங்கிளாஸ், தலையில் தொப்பி, தோளில் காமிர.
“ஏய், என்னப்பா மெடிக்கல் கேம்ப் பிற்கா இல்லை பிக்னிக் போறீங்களா?”
“ரெண்டுந்தான்!” என்று பஸ்ஸிலிருந்து பதில் வந்தது.
“ஒருநாள் உங்களிடமிருந்து விடுதலை!” உடன் பஸ் முழுக்க சிரிப்பு.
பிரின்சிபால் அதை எதிர்கொள்ள முடியாமல், “சுரேஷ், ஆர் யூ.ஒ.கே? காயம் ஆறிடுச்சுல்லே?” என்று பேச்சை மாற்றினார்.
“பாத்ரூம்ல இனி எச்சிரிக்கையா குளி! வார்டனே இப்படி வழுக்கி விழுந்தா எப்படி? சரி சரி, கிளம்புங்க!”
மருத்துவக் கல்லூரி முகாம் என முகத்தில் பேனர் கட்டப்பட்டிருந்த பஸ், டயர்கள், எலுமிச்சம்பழம் நசுக்கி, சூடம் காட்டப்பட்டுக் கிளம்பிற்று.
அது காம்பவுண்ட் கடக்கிறவரைதான் மவுனம். பிரதான சாலையைத் தொட்டதும், “ஏய், கலகலப்பா இருங்கப்பா.” ஜானி சொல்ல, பின்பக்கமிருந்து, “லக லக லக...” எனக் கலவரம் ஆரம்பித்தது.
சுரேஷிற்குத் தலையில் கட்டுப் பிரித்திருந்தாலும்கூட வலி இன்னும் மிச்சமிருந்தது. நெற்றியில் கிண்ணென்று பாரம்.
பிரின்சிபால் அவனுக்கு முடியவில்லை என்றால் வேறு யாரையாவது அனுப்புகிறேன் என்றார். அவன்தான் பிடிவாதமாய்க் கிளம்பியிருந்தான்.
அதற்கு இரண்டு உந்துதல்கள். ஒன்று இந்தக் காம்ப்பை வெற்றிகரமாய் முடித்தால் முழுநேர லெக்சர்ராக்குவதாய் பிரின்சிபால் கொடுத்த வாக்குறுதி. அடுத்தது சுஷ்மா!
என்னவோ தெரியவில்லை.... அவனையுமறியாமல் மனது அவளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருந்தது. அதற்குக் காரணம் அவளது அழகா, வனப்பா, திறமையா, அமைதியா, கண்களில் எப்போதும் தேக்கி வைத்திருக்கும் சோகமா, இல்லை எல்லாமுமா எனத் தெரியவில்லை.
அவளது கைப்பட்ட தலைக்கட்ட அன்று இனித்தகித்தது. அவளது அண்மை வேண்டும் வேண்டும் என்று மனது துடித்தது.
இப்போதும் பசங்கள் பாடி, ஆடி, மவுத்ஆர்கன் வாசித்து அமளி பண்ண சுரேஷின் பார்வை சுஷ்மாவின் பக்க்ம் எதேச்சையாய்த் திரும்புவதுபோலப் பாவித்தது.
அதுவரை அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த சுஷ்மா, சட்டென மின்சாரத்தைத் தொட்டதுபோல் சாலைப் பக்கம் திரும்பி நாக்கைக் கடித்தாள். முகம் சிவந்த, நெற்றியில் இல்லாத வியர்வையைத் துடைத்துக்கொண்டாள்.
அவனது வருகை அவளுள்ளும் பூரிப்பு தந்திருந்தது. அது ஏனென்று சுஷ்மாவிற்கும் புரியவில்லை. அதுவைரை அப்பா, அம்மா, சித்தி, பொறுக்கி விவேக் என கனத்த மனது, சுரேஷை நினைக்கம் போது இளகுவதை அவளாலும் உணர முடிந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|