Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத் தாமரைப் பெண்ணே!
3 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தங்கத் தாமரைப் பெண்ணே!
First topic message reminder :
வாழ்த்துரை
நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.
சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.
ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.
எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.
குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.
இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.
பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.
இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,
அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி
அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.
இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.
மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.
கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,
இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.
முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.
இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்
அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.
பதிப்புரை
எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.
கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,
எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,
எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.
அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.
கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.
இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,
அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்
வாழ்த்துரை
நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.
சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.
ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.
எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.
குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.
இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.
பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.
இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,
அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி
அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.
இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.
மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.
கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,
இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.
முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.
இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்
அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.
பதிப்புரை
எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.
கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,
எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,
எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.
அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.
கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.
இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,
அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கத் தாமரைப் பெண்ணே!
அவள் மியூசிக், கவிதை, டான்ஸ், பாட்டு, பேச்சுப்போட்டி என எல்லாவற்றிலும் பிரகாசிப்பாள் என்று பிரின்சிபால் சொல்லியிருந்தார். ஆனால் அவற்றையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிமை. பகட்டின்மை. எல்லாமிருந்தாலும் கூட ஏதோ ஒன்று அவளை அடக்கி ஆண்டுகொண்டிருக்கிறது. என்ன அது?
அதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அவனுக்கு எழுந்த்து. “வார்டன் சார்! எங்க கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்ல்லே!”
அவன் சட்டென சுதாரித்து, “ஆங்... என்ன கேட்டீங்க...! இங்கே ஏன் வேலைன்னுதானே... வெல்! நான் ஒழுங்கா படிக்கலை. படிக்கிற காலத்துல ஊர் சுத்தினதால மார்க் பத்தல, அதான்.”
“அப்படிப்போடு!”
“சரியா படிக்கலேன்னா உங்களுக்குக் கூட இதே நிலைமை தான் வரும்!”
சுரேஷ் சொல்ல, இப்போது மாணவர்கள் அவனுக்கு ஆதரவாகச் சிரித்தனர். அதைச் சகிக்கமுடியாமல் கணேசும் ஜானியும் பழிப்புக் காட்டிப் பின்பக்கத்தைக் ஆட்டிவிட்டு நடந்தனர்.
பாடம் நடத்த அறிவும் ஆர்வமும் திறமையும் மட்டும் இருந்தால் போதாது. சாமர்த்தியமும் வேண்டும். பசங்களை வசீசரித்து பாடத்திற்குள் கொண்டுவந்து அவர்களைக் கட்டிப்போடவேண்டும்.
சுரேஷ் மெல்ல மெல்ல அந்தக் கலையில் தேர்ச்சிப் பெற்றுக் கொண்டிருந்தான். அவன் மீண்டும் பாடத்திற்குள் நுழைந்தபோது வாசலில் அட்டெண்டர்.
“என்ன...”
அவன் கொண்டுவந்த ஒரு சீட்டை நீட்டினான்.
“சுஷ்மா, உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க, யு கான் கோ!”
அவள் அதற்கு மதிப்பளிக்காமல் அமர்ந்திருக்க, “ஐ ஸே, யு கேன் கோ!” என்றான் அழுத்தம் கொடுத்து.
கிளாஸ் எடுக்கவிடாமல் இதுமாதிரி இடைஞ்சல்கள்.
“ஏம்ப்பா, கிளாஸ் முடிஞ்சு இதைக் கொண்டு வரலாமில்லே!”
“வைஸ்பிரின்சிபால்தான் சார் அனுப்பச்சார்!”
சுஷ்மா வேண்டாவெறுப்பாய் வெளியே வந்தாள். அட்டெண்டரிடம், “யார்?” முறைத்தாள்.
“தெரியலம்மா! அதோ அங்கே மரத்தடியில நிக்கிறாங்க!” என்று அவர் கைகாட்ட, அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் அவளத முகம் சிவக்க ஆரம்பித்தது. கண்களில் கானல். அவர்களை அலட்சியப்படுத்தி வேறு பக்கம் நடக்க ஆரம்பித்தாள் சுஷ்மா. முகம் கொடுக்காமல் எதிர் திசையில் நடக்க, “ஏய், சுஷ்... நில்லு. நில்லு” என்று விவேக் பின்னால் ஓடிவந்தான்.
அவள் அவனைப் பொருட்படுத்தாமல் நடக்க, அவளைக் கடந்துபோய் மறித்துக் கொண்டு, “எங்கே போற?” என்றான்.
“வழியைவிடு.”
“எங்கேன்னு சொல்லு. என்மேல் என்ன கோபம்?”
“விவேக், அனாவசியமா என்னை டிஸ்டர்ப் பண்ணாதே. கிளாஸ் நேரத்துல தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு ஏற்கெனவே பலமுறை சொல்லி யிருக்கேன்.”
“சுஷ்.. சொல்றதைக் கேள், நான் எனக்காக வரலை. உன் சித்தி மகேஸ்வரிக்காக.”
“சித்தி...” என்று சுஷ்மா பற்களைக் கடித்தாள்.
மரத்தடியில் இருந்தும் மாடி வராண்டாவில் இருந்தும் மாணவர்கள் கவனிப்பது தெரிய, அவளக்குச் சங்கடமாயிற்று. “இப்போ என்ன வேணும் உனக்கு?”
“சித்தி பேசணுமா வா! காருக்குப் போவோம்.”
அதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அவனுக்கு எழுந்த்து. “வார்டன் சார்! எங்க கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்ல்லே!”
அவன் சட்டென சுதாரித்து, “ஆங்... என்ன கேட்டீங்க...! இங்கே ஏன் வேலைன்னுதானே... வெல்! நான் ஒழுங்கா படிக்கலை. படிக்கிற காலத்துல ஊர் சுத்தினதால மார்க் பத்தல, அதான்.”
“அப்படிப்போடு!”
“சரியா படிக்கலேன்னா உங்களுக்குக் கூட இதே நிலைமை தான் வரும்!”
சுரேஷ் சொல்ல, இப்போது மாணவர்கள் அவனுக்கு ஆதரவாகச் சிரித்தனர். அதைச் சகிக்கமுடியாமல் கணேசும் ஜானியும் பழிப்புக் காட்டிப் பின்பக்கத்தைக் ஆட்டிவிட்டு நடந்தனர்.
பாடம் நடத்த அறிவும் ஆர்வமும் திறமையும் மட்டும் இருந்தால் போதாது. சாமர்த்தியமும் வேண்டும். பசங்களை வசீசரித்து பாடத்திற்குள் கொண்டுவந்து அவர்களைக் கட்டிப்போடவேண்டும்.
சுரேஷ் மெல்ல மெல்ல அந்தக் கலையில் தேர்ச்சிப் பெற்றுக் கொண்டிருந்தான். அவன் மீண்டும் பாடத்திற்குள் நுழைந்தபோது வாசலில் அட்டெண்டர்.
“என்ன...”
அவன் கொண்டுவந்த ஒரு சீட்டை நீட்டினான்.
“சுஷ்மா, உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க, யு கான் கோ!”
அவள் அதற்கு மதிப்பளிக்காமல் அமர்ந்திருக்க, “ஐ ஸே, யு கேன் கோ!” என்றான் அழுத்தம் கொடுத்து.
கிளாஸ் எடுக்கவிடாமல் இதுமாதிரி இடைஞ்சல்கள்.
“ஏம்ப்பா, கிளாஸ் முடிஞ்சு இதைக் கொண்டு வரலாமில்லே!”
“வைஸ்பிரின்சிபால்தான் சார் அனுப்பச்சார்!”
சுஷ்மா வேண்டாவெறுப்பாய் வெளியே வந்தாள். அட்டெண்டரிடம், “யார்?” முறைத்தாள்.
“தெரியலம்மா! அதோ அங்கே மரத்தடியில நிக்கிறாங்க!” என்று அவர் கைகாட்ட, அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் அவளத முகம் சிவக்க ஆரம்பித்தது. கண்களில் கானல். அவர்களை அலட்சியப்படுத்தி வேறு பக்கம் நடக்க ஆரம்பித்தாள் சுஷ்மா. முகம் கொடுக்காமல் எதிர் திசையில் நடக்க, “ஏய், சுஷ்... நில்லு. நில்லு” என்று விவேக் பின்னால் ஓடிவந்தான்.
அவள் அவனைப் பொருட்படுத்தாமல் நடக்க, அவளைக் கடந்துபோய் மறித்துக் கொண்டு, “எங்கே போற?” என்றான்.
“வழியைவிடு.”
“எங்கேன்னு சொல்லு. என்மேல் என்ன கோபம்?”
“விவேக், அனாவசியமா என்னை டிஸ்டர்ப் பண்ணாதே. கிளாஸ் நேரத்துல தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு ஏற்கெனவே பலமுறை சொல்லி யிருக்கேன்.”
“சுஷ்.. சொல்றதைக் கேள், நான் எனக்காக வரலை. உன் சித்தி மகேஸ்வரிக்காக.”
“சித்தி...” என்று சுஷ்மா பற்களைக் கடித்தாள்.
மரத்தடியில் இருந்தும் மாடி வராண்டாவில் இருந்தும் மாணவர்கள் கவனிப்பது தெரிய, அவளக்குச் சங்கடமாயிற்று. “இப்போ என்ன வேணும் உனக்கு?”
“சித்தி பேசணுமா வா! காருக்குப் போவோம்.”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கத் தாமரைப் பெண்ணே!
சுஷ்மா அருகில் வந்த்தும் மகேஸ்வரி தன் தங்கமுலாம் பூசின கண்ணாடியைச் சரிபார்த்துக் கொண்டு, “வாம்மா, உன்னைப் பார்த்து எத்தனை நாளாச்சு?” என்று பாசம் பொங்கினாள்.
அப்படியே அவளைக் கட்டிக்கொள்ள வந்தவளை ஒதுக்கி, “என்ன விஷயம்?” என்றாள் கறாராய்.
“உன் கூட நிறைய பேசணும். போகலாமா? வா!”
“எங்க?”
“நம்ம வீட்டுக்கு...”
“நம்ம வீடா?”
“ஆமாம். எதுக்கு தண்டச்செலவுன்னு சொல்லிக்கூட கேட்காம உனக்குத் தானே உங்கப்பா இங்கே பங்களா கட்டிப்போட்டிருக்கார். ஆனா நீ அங்கே திரும்பிக்கூடப் பார்க்கிறதில்லே. அதெல்லாம் போகட்டும். எப்படி இருக்கே நீ?”
“இருக்கேன்...” என்று பதில் அளித்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டு கடந்து போன தோழிக்க விரல்களால் ‘பை’ சொன்னாள்.
“ஏன் விரக்தி? நீ சந்தோஷமாய் இருக்கணும். சௌகரியமாய் இருக்கணும்னுதானே அப்பா....”
“நான் எப்படிப்போனா என்ன? விஷயத்துக்கு வாங்க. நேரமாகுது.”
“சுஷ்மா, நான் உனக்கு என்ன கெடுதல் பண்ணேன்? ஏன் என்மேல் வெறுப்பைக் கொட்டுகிறாய்? அப்பாவுக்கு மட்டுமல்ல, எனக்கும்கூட நீ ஒரே பெண். உன்மேல் நாங்க உயிரையே வைச்சிருக்கோம்.”
“இதைக் கேட்டுப் புளிச்சுப்போச்சு.”
அதற்குள் வகுப்பு முடிஞ்சு மாணவர்கள் சலசலப்புடன் வெவ்வேறு அறைக்கு இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.
சுரேஷ் அந்தப் பக்கம் வந்தவன் சுஷ்மாவைப் பார்த்ததும் தயங்கி நின்றான்.
‘””””இவர்கள் யார்?’ சுஷ்மா வேண்டாவெறுப்புடன் நிற்பதாகத் தெரிகிறது. ஏன், என்ன விஷயம்? அவளது முகத்தில் கூட ஆர்வமில்லை.
அவள் அருகில் தயக்கத்துடன் வந்து. “சுஷ்மா. யு நீட் எனி ஹெல்ப் பர்ம் மீ” என்று அவர்களைப் பார்த்தான். “இவங்க யாரு?”
மகேஸ்வரி முந்திக் கொண்டு, “நான் இவ சித்தி. இவன் என் தம்பி விவேக். சுஷ்மாவை எங்கக்கூட அழைச்சுப்போகணும்.”
“எங்க?”
“எங்க வீட்டுக்கு...”
சுரேண் சுஷ்மாவின் முகத்தை ஏறிட்டு அங்கு வெளிப்பட்ட அதிருப்தியை உணர்ந்து. “நான் ஹாஸ்டலுக்குத் தான் வார்டன். கிளாஸ் நேரத்துல பர்மிஷன் தர எனக்கு உரிமை இல்லை.”
“நாங்க பிரின்சிபால்கிட்ட பேசிட்டோம். ஒரு முக்கியமான குடும்ப விஷயம்... அதான்... சுஷ்மா வண்டியில் ஏறு.”
அங்கே ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்று சுஷ்மா காரில் ஏறினாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கத் தாமரைப் பெண்ணே!
5
“பங்களா, தள்ளியிருந்து பார்க்கும் போதே பளபளத்த்து. காரின் ஓசையைக் கேட்டதும் வாட்ச்மேன் ஓடிவந்து இரும்பு கேட்டைத் திறந்து கும்பிட்டான். புள்ளிவெளியில் நீர் தெளித்துக்கொண்டிருந்தவர்கள் எழுந்து, “வணக்கம்மா”என்று கைக்கூப்பிவிட்டு உடன் வேலையைத் தொடர்ந்தனர்.
மகஸ்வரி இறங்கி கம்பீரத்துடன் நடந்தாள். விவேக், “வா சுஷ்... ஏன் தயக்கம்? இது நம் கெஸ்ட்ஹவுஸ்தானே!” என்று வழிந்தான்.
ஹாலில் மகேஸ்வரி அமர்ந்து டி.வி.யை ஆன் பண்ண. பிரம்மாண்டமாய் படம் ஓடிற்று.
“என்ன சாப்பிடுறை?”
“என்ன பேசணும்னு இங்கே அழைச்சுட்டு வந்தீங்க?”
“சுஷ்மா, என்னை உனக்குப் பிடிக்காம போகலாம். நான் இடையில் வந்தவ. விடு. உங்கப்பர் என்ன பண்ணாரு! எதுக்காக நீ அவரை அவாய்ட் பண்ணணும்? இந்தச் சொத்து, சுகம், வசதிகள் எல்லாம் உனக்காகத்தானே கார், ஆட்கள எல்லோரும் இருக்கும் போது எதுக்காக நீ ஹாஸ்டல்ல தங்கணும்?”
அவள் கண்கலங்கிய நேரத்தில் விவேக் ஜூஸ் கொண்டுவந்து நீட்டினாள்.
“அக்கா, இதுக்குத்தான், இப்படி அழுவேன்னுதான் நீ வரவேணாம்னு சொன்னேன். கேட்டாதானே!”
“நீ சும்மா இருடா! சுஷ்மா ஏத்துக்கிட்டாலும் இல்லைன்னாலும் இவ எனக்கும் பொண்ணுதான். என் மகள்தான். இவைளை நான் எதிரியாய் நினைக்கலை. என்னை மதிக்கலை. என் மேல அன்பு காட்டலைன்னாலும் கூட கவலைப்படலை. இவங்கம்மா ஓடிப போனதுக்கு நான்தான் காரணம்னு சொல்லறதைத்தான் என்னால ஜீரணிக்கமுடியலை.”
“என் அம்மா ஓடிப்போகலை. ஓடிப்போக வச்சீங்க நீங்களும் என் அப்பாவும் சேர்ந்து.”
“சரி உங்க அப்பாதான் தப்புப் பண்ணார். அவரை நீ மன்னிக்கவோ. ஏத்துக்கவோ மனசில்லே. நீ என்ன பண்ணினாலும் உன்னைப் பத்தி நினைப்பிருந்தா வந்திருக்கணும். வநது பார்த்திருக்கணும். உன் அம்மா ஏன் வரலை?”
சுஷ்மா இதற்குப் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்தாள். ஒரு வகையில் அம்மாவின் மேலும் கோபம் திரும்பிற்று. சித்தி கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. பெற்ற மகள் நான் என்ன குத்தம் பண்ணினேன். ரெண்டும் கெட்டான் வயது. என்னை அம்போன்னு விட்டுட்டுப் போக அவளுக்கு எப்படி மனது வந்தது. எங்கே போனாள்? என்னவானாள்? என் மேல் பாசமிருந்தால் இத்தனை வருடங்கள் திரும்பிப் பார்க்காமல் இருப்பாளா?
“சுஷ்மா, இப்போ சொல். நான் உனக்காக எல்லாம் செய்யத் தயாராக இருந்தேன. உனக்குப் பாசம் ஊட்டி உன் தேவைகளை ஒரு தாயாய் கவனிக்கத் தயாராய் இருந்தேன். மலேசியாவுக்கு என் கூட வந்திரு. அங்கு ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்கிறோம்னு எவ்வளவோ சொல்லியும் நீ கேட்கவில்லை. எங்களுடன் வரமறுத்து விட்டு உன் பாட்டி வீட்டுக்குப் போய்விட்டாய். அங்கிருந்து படித்தாய். லீவில் விசா எடுத்து அனுப்பினாலும் நீ வருவதில்லை. நாங்கள் பார்க்க வந்தாலும் நீ முகம் கொடுப்பதில்லை. இருந்தாலும் உன் செலவுக்கு பணம் அனுப்பி வைக்கிறோம். உன் பேரில் இந்த பங்களா பேங்க்கில் டெபாசிட். நீ விரும்பினபடி பல் மருத்துவ படிப்புன்னு எதிலாவது குறைவைத்தோமா? செல்.”
“பங்களா, தள்ளியிருந்து பார்க்கும் போதே பளபளத்த்து. காரின் ஓசையைக் கேட்டதும் வாட்ச்மேன் ஓடிவந்து இரும்பு கேட்டைத் திறந்து கும்பிட்டான். புள்ளிவெளியில் நீர் தெளித்துக்கொண்டிருந்தவர்கள் எழுந்து, “வணக்கம்மா”என்று கைக்கூப்பிவிட்டு உடன் வேலையைத் தொடர்ந்தனர்.
மகஸ்வரி இறங்கி கம்பீரத்துடன் நடந்தாள். விவேக், “வா சுஷ்... ஏன் தயக்கம்? இது நம் கெஸ்ட்ஹவுஸ்தானே!” என்று வழிந்தான்.
ஹாலில் மகேஸ்வரி அமர்ந்து டி.வி.யை ஆன் பண்ண. பிரம்மாண்டமாய் படம் ஓடிற்று.
“என்ன சாப்பிடுறை?”
“என்ன பேசணும்னு இங்கே அழைச்சுட்டு வந்தீங்க?”
“சுஷ்மா, என்னை உனக்குப் பிடிக்காம போகலாம். நான் இடையில் வந்தவ. விடு. உங்கப்பர் என்ன பண்ணாரு! எதுக்காக நீ அவரை அவாய்ட் பண்ணணும்? இந்தச் சொத்து, சுகம், வசதிகள் எல்லாம் உனக்காகத்தானே கார், ஆட்கள எல்லோரும் இருக்கும் போது எதுக்காக நீ ஹாஸ்டல்ல தங்கணும்?”
அவள் கண்கலங்கிய நேரத்தில் விவேக் ஜூஸ் கொண்டுவந்து நீட்டினாள்.
“அக்கா, இதுக்குத்தான், இப்படி அழுவேன்னுதான் நீ வரவேணாம்னு சொன்னேன். கேட்டாதானே!”
“நீ சும்மா இருடா! சுஷ்மா ஏத்துக்கிட்டாலும் இல்லைன்னாலும் இவ எனக்கும் பொண்ணுதான். என் மகள்தான். இவைளை நான் எதிரியாய் நினைக்கலை. என்னை மதிக்கலை. என் மேல அன்பு காட்டலைன்னாலும் கூட கவலைப்படலை. இவங்கம்மா ஓடிப போனதுக்கு நான்தான் காரணம்னு சொல்லறதைத்தான் என்னால ஜீரணிக்கமுடியலை.”
“என் அம்மா ஓடிப்போகலை. ஓடிப்போக வச்சீங்க நீங்களும் என் அப்பாவும் சேர்ந்து.”
“சரி உங்க அப்பாதான் தப்புப் பண்ணார். அவரை நீ மன்னிக்கவோ. ஏத்துக்கவோ மனசில்லே. நீ என்ன பண்ணினாலும் உன்னைப் பத்தி நினைப்பிருந்தா வந்திருக்கணும். வநது பார்த்திருக்கணும். உன் அம்மா ஏன் வரலை?”
சுஷ்மா இதற்குப் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்தாள். ஒரு வகையில் அம்மாவின் மேலும் கோபம் திரும்பிற்று. சித்தி கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. பெற்ற மகள் நான் என்ன குத்தம் பண்ணினேன். ரெண்டும் கெட்டான் வயது. என்னை அம்போன்னு விட்டுட்டுப் போக அவளுக்கு எப்படி மனது வந்தது. எங்கே போனாள்? என்னவானாள்? என் மேல் பாசமிருந்தால் இத்தனை வருடங்கள் திரும்பிப் பார்க்காமல் இருப்பாளா?
“சுஷ்மா, இப்போ சொல். நான் உனக்காக எல்லாம் செய்யத் தயாராக இருந்தேன. உனக்குப் பாசம் ஊட்டி உன் தேவைகளை ஒரு தாயாய் கவனிக்கத் தயாராய் இருந்தேன். மலேசியாவுக்கு என் கூட வந்திரு. அங்கு ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்கிறோம்னு எவ்வளவோ சொல்லியும் நீ கேட்கவில்லை. எங்களுடன் வரமறுத்து விட்டு உன் பாட்டி வீட்டுக்குப் போய்விட்டாய். அங்கிருந்து படித்தாய். லீவில் விசா எடுத்து அனுப்பினாலும் நீ வருவதில்லை. நாங்கள் பார்க்க வந்தாலும் நீ முகம் கொடுப்பதில்லை. இருந்தாலும் உன் செலவுக்கு பணம் அனுப்பி வைக்கிறோம். உன் பேரில் இந்த பங்களா பேங்க்கில் டெபாசிட். நீ விரும்பினபடி பல் மருத்துவ படிப்புன்னு எதிலாவது குறைவைத்தோமா? செல்.”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கத் தாமரைப் பெண்ணே!
சித்தியின் கேள்விகள் அவளைத் துளைத்தெடுத்தன. ஊசியாய் குத்தின.
“யோசித்துப் பார்! உங்க அம்மாவிற்கு வீம்பு, வைராக்கியம்னா உனக்கு அதுக்கு மேல இருக்கு. வளரவேண்டிய பெண், நன்றாக வா வேண்டிய பெண்.... நீ ஏன் உன்னை அழித்துக் கொள்ளணும்? உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? குழந்தை பிறந்தால் எங்கே உன் பேரில் பாசம் இல்லாமல் போய்விடுமோ, வேறுபாடு வந்து விடுமோன்னு உங்கப்பாவும் நானும் முடிவு பண்ணி நான் குழந்தையே பெத்துக்கலே தெரியுமா? இப்போ சொல் என் மேல் என்ன குத்தம்? நான் என்ன பாவம் பண்ணேன்? நான் செஞ்ச தப்பு என்ன? என்னவோ பாசக்கார அம்மான்னியே... அவங்க இப்போ எங்கே? பாசம் இருந்திருந்தா ஏன் உன்னைத் தேடி வரலே?”
“எப்படி வருவாங்க?” சுஷ்மா அவள் பக்கம் திரும்பி நெருப்பைக் கக்கினாள்.
“என்னைக்காவது மனசு மாறி திரும்பி வந்துட்டா என்ன பணற்துன்னு திட்டம் போட்டுத்தான் கொலை பண்ணிட்டீங்களே!”
சுஷ்மா வெடிக்க, மகேஸ்வரியின் முகம் இருண்டு போயிற்று. மகேஸ்வரி மவுனம் காக்க, சுஷ்மா விருட்டென்று அங்கிருந்து ஹாஸ்டலுக்குக் கிளம்பினாள்.
பசுமையும் இதமான சீதோஷ்ணமும் தங்குதடையில்லா தண்ணீரும் மின்சாரமும் செழுமையான மலேசியா, சீன மக்களும் நிரம்பிய கோலாலம்பூர்.
மாடி ரயில் இரண்டே இரண்டு பெட்டிகளுடன் மேலே ஊர்ந்து கொண்டிருக்க, கீழே சாலையில் டிராபிக்! பால்ம் மரங்களும் புல் வெளிகளும் குளுமை பரப்பிக் கொண்டிருந்தன.
வான் பார்த்த் கட்டிடங்கள், ஹோட்டல்கள்! இன்னமும் வளர்ந்து கொண்டிருந்த கட்டிடம் ஒன்றின் முப்பதாவது தளத்தில் முகுந்தனின் அலுவலகம் இருந்தது.
அங்கிருந்து பார்க்க கோலாலம்பூரின் வளமை தெரிந்த்து. கண்ணாடி, ஜன்னல் வழி கைக்கெட்டும் தூரத்தில் பெட்ரோநாஸ் இரட்டை கோபுரங்கள் மலேசியாவின் சின்னம்! ஸ்டீல் மற்றும் கண்ணாடியில் உருவாக்கப்பட்டு பளபளக்கும் உலகின் முதல்தர கோபுரங்கள். வாசலில் வரவேற்கும் நீர் அருவிகள்.
எப்போதும் சலசலக்கும் சுற்றுப்புறங்களில் மினுமினுப்புடன் அரை நிஜாருட்ன் தோள்பட்டை தெரிய உடுத்தி நடக்கும் சீனக் குயில்கள்.
மேஜையில் பைல்கள் குவிந்திருக்க, ஏ.ஸி.யையும் மீறி உடல் உஷ்ணத்திலிருந்த முகுந்தன், செல் ஒலிக்கவே எடுத்து. “மகேஷ், ஹவ் ஆர் யூ! போன விஷயம் என்னாச்சு?” என்றார்.
“ஸாரி, பிரயோஜனமில்லை!”
“சுஷ்மா இருக்காளா... என்ன சொல்றா?”
“இன்னமும் அவளிடம் அதே சூடு அதே கோபம்!”
போனை வைத்துவிட்டு மேஜைமேல் வைத்திருந்த செண்பகத்தின் படத்தை முகுந்தன் ஏறிட்டார்.
செண்பகம் அருகே பாவாடை ரவிக்கையில் சிரித்த முகத்துடன் சுஷ்மா குட்டி தேவதை!
‘சுஷ்டா, நீ எப்படியிருக்கிறாய்? இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட என்மேல் உள்ள கோபம் அடங்கலியா? எப்படி யிருந்தாலும் நீ என் ரத்தம். உன் வளர்ச்சியிலும் வாழ்விலும் எனக்கு அக்கறையில்லையா?’
அவர் கண் கலங்க...
எதிரே அமர்ந்திருந்த கலை டிரான்ஸ்போர்ட்டின் உரிமையாளர் கலையரசன், “போனில் ஏதும் வருத்தமான செய்தியா சார்?” என்றார்.
“நான் உங்களின் வியாபாரக் கூட்டாளிதான் இருந்தாலும் கூட உங்கள் கஷ்டங்களைப் பங்கு போட்டுக கொள்ளலாம். ஆனால் என் மகளை? அந்த ரணத்தை எப்படி...?”
“பேசினது யாரு... சுண்மாவா?”
“இல்லை... மகேஷ்.” என்று முகுந்தன் அவர் பக்கம் போட்டோ ஸ்டேண்டைத் திருப்பினார். “என் செல்லக்கிளி!”
“உங்க மக பல் மருத்துவம் படிக்கிறாள்னுதானே சொன்னீங்க. அப்போ வயசு இருபது இருக்காது? இருபதுன்னா பெரிய பெண்! இன்னும் குழந்தை போட்டோவையே வெச்சிருக்கீங்க..!”
“யோசித்துப் பார்! உங்க அம்மாவிற்கு வீம்பு, வைராக்கியம்னா உனக்கு அதுக்கு மேல இருக்கு. வளரவேண்டிய பெண், நன்றாக வா வேண்டிய பெண்.... நீ ஏன் உன்னை அழித்துக் கொள்ளணும்? உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? குழந்தை பிறந்தால் எங்கே உன் பேரில் பாசம் இல்லாமல் போய்விடுமோ, வேறுபாடு வந்து விடுமோன்னு உங்கப்பாவும் நானும் முடிவு பண்ணி நான் குழந்தையே பெத்துக்கலே தெரியுமா? இப்போ சொல் என் மேல் என்ன குத்தம்? நான் என்ன பாவம் பண்ணேன்? நான் செஞ்ச தப்பு என்ன? என்னவோ பாசக்கார அம்மான்னியே... அவங்க இப்போ எங்கே? பாசம் இருந்திருந்தா ஏன் உன்னைத் தேடி வரலே?”
“எப்படி வருவாங்க?” சுஷ்மா அவள் பக்கம் திரும்பி நெருப்பைக் கக்கினாள்.
“என்னைக்காவது மனசு மாறி திரும்பி வந்துட்டா என்ன பணற்துன்னு திட்டம் போட்டுத்தான் கொலை பண்ணிட்டீங்களே!”
சுஷ்மா வெடிக்க, மகேஸ்வரியின் முகம் இருண்டு போயிற்று. மகேஸ்வரி மவுனம் காக்க, சுஷ்மா விருட்டென்று அங்கிருந்து ஹாஸ்டலுக்குக் கிளம்பினாள்.
பசுமையும் இதமான சீதோஷ்ணமும் தங்குதடையில்லா தண்ணீரும் மின்சாரமும் செழுமையான மலேசியா, சீன மக்களும் நிரம்பிய கோலாலம்பூர்.
மாடி ரயில் இரண்டே இரண்டு பெட்டிகளுடன் மேலே ஊர்ந்து கொண்டிருக்க, கீழே சாலையில் டிராபிக்! பால்ம் மரங்களும் புல் வெளிகளும் குளுமை பரப்பிக் கொண்டிருந்தன.
வான் பார்த்த் கட்டிடங்கள், ஹோட்டல்கள்! இன்னமும் வளர்ந்து கொண்டிருந்த கட்டிடம் ஒன்றின் முப்பதாவது தளத்தில் முகுந்தனின் அலுவலகம் இருந்தது.
அங்கிருந்து பார்க்க கோலாலம்பூரின் வளமை தெரிந்த்து. கண்ணாடி, ஜன்னல் வழி கைக்கெட்டும் தூரத்தில் பெட்ரோநாஸ் இரட்டை கோபுரங்கள் மலேசியாவின் சின்னம்! ஸ்டீல் மற்றும் கண்ணாடியில் உருவாக்கப்பட்டு பளபளக்கும் உலகின் முதல்தர கோபுரங்கள். வாசலில் வரவேற்கும் நீர் அருவிகள்.
எப்போதும் சலசலக்கும் சுற்றுப்புறங்களில் மினுமினுப்புடன் அரை நிஜாருட்ன் தோள்பட்டை தெரிய உடுத்தி நடக்கும் சீனக் குயில்கள்.
மேஜையில் பைல்கள் குவிந்திருக்க, ஏ.ஸி.யையும் மீறி உடல் உஷ்ணத்திலிருந்த முகுந்தன், செல் ஒலிக்கவே எடுத்து. “மகேஷ், ஹவ் ஆர் யூ! போன விஷயம் என்னாச்சு?” என்றார்.
“ஸாரி, பிரயோஜனமில்லை!”
“சுஷ்மா இருக்காளா... என்ன சொல்றா?”
“இன்னமும் அவளிடம் அதே சூடு அதே கோபம்!”
போனை வைத்துவிட்டு மேஜைமேல் வைத்திருந்த செண்பகத்தின் படத்தை முகுந்தன் ஏறிட்டார்.
செண்பகம் அருகே பாவாடை ரவிக்கையில் சிரித்த முகத்துடன் சுஷ்மா குட்டி தேவதை!
‘சுஷ்டா, நீ எப்படியிருக்கிறாய்? இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட என்மேல் உள்ள கோபம் அடங்கலியா? எப்படி யிருந்தாலும் நீ என் ரத்தம். உன் வளர்ச்சியிலும் வாழ்விலும் எனக்கு அக்கறையில்லையா?’
அவர் கண் கலங்க...
எதிரே அமர்ந்திருந்த கலை டிரான்ஸ்போர்ட்டின் உரிமையாளர் கலையரசன், “போனில் ஏதும் வருத்தமான செய்தியா சார்?” என்றார்.
“நான் உங்களின் வியாபாரக் கூட்டாளிதான் இருந்தாலும் கூட உங்கள் கஷ்டங்களைப் பங்கு போட்டுக கொள்ளலாம். ஆனால் என் மகளை? அந்த ரணத்தை எப்படி...?”
“பேசினது யாரு... சுண்மாவா?”
“இல்லை... மகேஷ்.” என்று முகுந்தன் அவர் பக்கம் போட்டோ ஸ்டேண்டைத் திருப்பினார். “என் செல்லக்கிளி!”
“உங்க மக பல் மருத்துவம் படிக்கிறாள்னுதானே சொன்னீங்க. அப்போ வயசு இருபது இருக்காது? இருபதுன்னா பெரிய பெண்! இன்னும் குழந்தை போட்டோவையே வெச்சிருக்கீங்க..!”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கத் தாமரைப் பெண்ணே!
6
முகுந்தன் கண்கலங்கினார்.
“என்ன பண்றது, எங்கிட்ட உள்ளது இதுதான். அவள் என்னைப் பார்க்க அனுமதிப்பதுமில்லை, அவளோட படத்தைக் கூட எனக்கு அனுப்புவதில்லை.”
சொல்லும்போதே வார்த்தைகள் வாய்க்குள் தடுமாற, சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைக்க வேண்டி கலை, “லஞ்ச்டயமாயிருச்சே. வாங்க பசியாறிட்டு வரலாம்” என்று எழுந்தார் நண்பர்.
“தாங்க்ஸ். நீங்க கிளம்புங்க. எனக்குப் பசியில்லை” என்று அந்தப் புகைப்படத்தை அப்படியே உற்று நோக்க ஆரம்பித்தார். அவருடைய எண்ணங்கள் பின்னோக்கி நகர ஆரம்பித்தன.
அப்போத அவர்கள் சுமாரான வீட்டில்தான் இருந்தனா. ஹால், அடுக்களை, பாத்ரூம், அறை என எல்லாமே நெருக்கடி, அடுக்குமாடிக் குடியிருப்பில் அதற்குமேல் வாடகை தரமுடியாத அளவிற்கு குறைவான சேமிப்பு.
முகுந்தனுக்குத் தினமும் 12 மணி நேர வேலை. அலுவலகத்திற்கு காலை எட்டு மணிக்குக் கிளம்பினால் வீடு திரும்ப இரவு எட்டாகிவிடும். அதன் பிறகு செண்பகமே கதி எனக்கிடப்பார்.
விடுமுறையிலும்கூட அவளைவிட்டு நகர்வதில்லை. எப்போதிலும் எதிலும் செண்பகம்.
அடுப்படியில் அவள் காய் வெட்டினாலும் போய் உரசிக்கொண்டு நிற்பார்.
“என்ன இது?”
“என் பெண்டாட்டியின் முந்தானை...”
“பெண்டாட்டிங்கிறதுக்காக எப்போதும் முந்தானை பின்னாடியே திரியணுமா?”
“வேற என்ன பண்ணலாம். ஆபீஸ்ல பென்டை எடுக்கிறாங்க. அங்குதான் அடக்குமுறைன்னா இங்குமா?”
“அடக்குமுறையில்லேன்னா அடங்குவீங்களா? ஏற்கெனவே சுஷ்மா படுத்தறா. அவளுக்கு டிரஸ், ஸ்கூல் பீஸ்னு பட்ஜெட் உதைக்குது. இதிலே இன்னும் வேறயா...”
“என்னால சும்மாயிருக்க முடியலே...”
“அப்போ இந்தக் காயை வெட்டிக் கொடுங்க. நான் அதுக்குள்ளே துணி துவைச்சுட்டு வந்துடறேன்.”
“துணிக்கு இப்போ என் அவசரம்?”
“தண்ணி நின்னு போகும். அதுக்கு முன்னாடி நான் குளிச்சு முடிக்கணும். இங்கே என்ன கிரைண்டர், வாஷிங்மிஷினா இருக்கு எல்லாம் நானேதானே செய்யணும்.”
“வாஷிங் மெஷின்தானே... வாங்கிரலாம்”
“எப்போ?”
“அடுத்த மாசம்.”
“எப்படி? போனஸ் எதுவும் வருதா?”
“இல்லை. லோன் தவணை...”
“அதுதானே பார்த்தேன். லோன் கிடைக்குதுன்னா பொண்டாட்டியைக்கூட அடகு வைப்பீங்களே!”
உடன அவர் அறைக்குள் போய் முடங்கிக் கொள்வான். செண்பகம் அவனை மார்போடு அணைத்துக்கொண்டு, “என் ராசாவுக்குக் கோபமா?”
அவன் பேசமாட்டான். அவனுக்குத் தெரியும். பேசாதவரை அவளது அரவணைப்பு இருக்கும். கதகதப்பு, அந்தச் சுகம் அவனுக்கு வேணும்.
அப்படியே பிகு பண்ணிப் பண்ணி புன்னகைப்பான். கண் சிமிட்டுவான். அவள் மயங்குவாள். உருகுவாள். விரதமும் வைராக்கியமும் அங்கு கலையும்.
மறுநாள் கிளம்புவான், ஒதுங்குவாள்.
ஒருசமயம் சுஷ்மா பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வர, செண்பகத்துக்குச் சங்கடமாயிற்று. “ஏண்டி. என்னாச்சு?”
“டீச்சர் அடிச்சுட்டாங்க.”
“ஏன்?”
“புது யூனிபார்ம், புது டை, போடலேன்னு. அம்மா இனி நான் ஸ்கூலுக்குப் போகலே” என்று சிணுங்கினாள்.
“சுஷ், இங்கே பார். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கோ. அப்பா சம்பளம் வந்ததும்...”
“போன மாசமும் அப்படித்தான் சொன்னே. அப்புறம் சம்பளம் மளிகை, கரண்ட், பால்னு போயிருச்சு. அம்மா எனக்கு அந்த ஸ்கூல் வேணாம். முடியலேன்னா கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சேர்த்துவிடு. மத்த பிள்ளைங்களெல்லாம் நல்லா டிரஸ் போட்டுட்டு வருது. நான் மட்டும்தான் இதுக்காக மிஸ் கிட்ட திட்டுவாங்கறேன்.”
“ஆனா படிப்புல நீ உசத்தியாச்சே புத்திசாலிப் பெண். சமத்துப் பெண்!”
“இல்லை. இந்தப் புகழ்ச்சியெல்லாம் வேணாம்.”
முகுந்தன் அவளைக் கட்டிக்கொண்டு, “சுஷ்மா, நாளைக்கு உனக்கு எல்லாம் புதுசா வாங்கித்தரேன்.” என்றான்.
செண்பகம் அவனிடம் தனிமையில், “எப்படிங்க?”
“நான் ராத்திரி ஏஜென்ஸி ஒன்றில் வேலைக்கு வரதாச் சொல்லி அட்வான்ஸ் வாங்கியிருக்கேன்” என்றான்.
முகுந்தன் கண்கலங்கினார்.
“என்ன பண்றது, எங்கிட்ட உள்ளது இதுதான். அவள் என்னைப் பார்க்க அனுமதிப்பதுமில்லை, அவளோட படத்தைக் கூட எனக்கு அனுப்புவதில்லை.”
சொல்லும்போதே வார்த்தைகள் வாய்க்குள் தடுமாற, சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைக்க வேண்டி கலை, “லஞ்ச்டயமாயிருச்சே. வாங்க பசியாறிட்டு வரலாம்” என்று எழுந்தார் நண்பர்.
“தாங்க்ஸ். நீங்க கிளம்புங்க. எனக்குப் பசியில்லை” என்று அந்தப் புகைப்படத்தை அப்படியே உற்று நோக்க ஆரம்பித்தார். அவருடைய எண்ணங்கள் பின்னோக்கி நகர ஆரம்பித்தன.
அப்போத அவர்கள் சுமாரான வீட்டில்தான் இருந்தனா. ஹால், அடுக்களை, பாத்ரூம், அறை என எல்லாமே நெருக்கடி, அடுக்குமாடிக் குடியிருப்பில் அதற்குமேல் வாடகை தரமுடியாத அளவிற்கு குறைவான சேமிப்பு.
முகுந்தனுக்குத் தினமும் 12 மணி நேர வேலை. அலுவலகத்திற்கு காலை எட்டு மணிக்குக் கிளம்பினால் வீடு திரும்ப இரவு எட்டாகிவிடும். அதன் பிறகு செண்பகமே கதி எனக்கிடப்பார்.
விடுமுறையிலும்கூட அவளைவிட்டு நகர்வதில்லை. எப்போதிலும் எதிலும் செண்பகம்.
அடுப்படியில் அவள் காய் வெட்டினாலும் போய் உரசிக்கொண்டு நிற்பார்.
“என்ன இது?”
“என் பெண்டாட்டியின் முந்தானை...”
“பெண்டாட்டிங்கிறதுக்காக எப்போதும் முந்தானை பின்னாடியே திரியணுமா?”
“வேற என்ன பண்ணலாம். ஆபீஸ்ல பென்டை எடுக்கிறாங்க. அங்குதான் அடக்குமுறைன்னா இங்குமா?”
“அடக்குமுறையில்லேன்னா அடங்குவீங்களா? ஏற்கெனவே சுஷ்மா படுத்தறா. அவளுக்கு டிரஸ், ஸ்கூல் பீஸ்னு பட்ஜெட் உதைக்குது. இதிலே இன்னும் வேறயா...”
“என்னால சும்மாயிருக்க முடியலே...”
“அப்போ இந்தக் காயை வெட்டிக் கொடுங்க. நான் அதுக்குள்ளே துணி துவைச்சுட்டு வந்துடறேன்.”
“துணிக்கு இப்போ என் அவசரம்?”
“தண்ணி நின்னு போகும். அதுக்கு முன்னாடி நான் குளிச்சு முடிக்கணும். இங்கே என்ன கிரைண்டர், வாஷிங்மிஷினா இருக்கு எல்லாம் நானேதானே செய்யணும்.”
“வாஷிங் மெஷின்தானே... வாங்கிரலாம்”
“எப்போ?”
“அடுத்த மாசம்.”
“எப்படி? போனஸ் எதுவும் வருதா?”
“இல்லை. லோன் தவணை...”
“அதுதானே பார்த்தேன். லோன் கிடைக்குதுன்னா பொண்டாட்டியைக்கூட அடகு வைப்பீங்களே!”
உடன அவர் அறைக்குள் போய் முடங்கிக் கொள்வான். செண்பகம் அவனை மார்போடு அணைத்துக்கொண்டு, “என் ராசாவுக்குக் கோபமா?”
அவன் பேசமாட்டான். அவனுக்குத் தெரியும். பேசாதவரை அவளது அரவணைப்பு இருக்கும். கதகதப்பு, அந்தச் சுகம் அவனுக்கு வேணும்.
அப்படியே பிகு பண்ணிப் பண்ணி புன்னகைப்பான். கண் சிமிட்டுவான். அவள் மயங்குவாள். உருகுவாள். விரதமும் வைராக்கியமும் அங்கு கலையும்.
மறுநாள் கிளம்புவான், ஒதுங்குவாள்.
ஒருசமயம் சுஷ்மா பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வர, செண்பகத்துக்குச் சங்கடமாயிற்று. “ஏண்டி. என்னாச்சு?”
“டீச்சர் அடிச்சுட்டாங்க.”
“ஏன்?”
“புது யூனிபார்ம், புது டை, போடலேன்னு. அம்மா இனி நான் ஸ்கூலுக்குப் போகலே” என்று சிணுங்கினாள்.
“சுஷ், இங்கே பார். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கோ. அப்பா சம்பளம் வந்ததும்...”
“போன மாசமும் அப்படித்தான் சொன்னே. அப்புறம் சம்பளம் மளிகை, கரண்ட், பால்னு போயிருச்சு. அம்மா எனக்கு அந்த ஸ்கூல் வேணாம். முடியலேன்னா கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சேர்த்துவிடு. மத்த பிள்ளைங்களெல்லாம் நல்லா டிரஸ் போட்டுட்டு வருது. நான் மட்டும்தான் இதுக்காக மிஸ் கிட்ட திட்டுவாங்கறேன்.”
“ஆனா படிப்புல நீ உசத்தியாச்சே புத்திசாலிப் பெண். சமத்துப் பெண்!”
“இல்லை. இந்தப் புகழ்ச்சியெல்லாம் வேணாம்.”
முகுந்தன் அவளைக் கட்டிக்கொண்டு, “சுஷ்மா, நாளைக்கு உனக்கு எல்லாம் புதுசா வாங்கித்தரேன்.” என்றான்.
செண்பகம் அவனிடம் தனிமையில், “எப்படிங்க?”
“நான் ராத்திரி ஏஜென்ஸி ஒன்றில் வேலைக்கு வரதாச் சொல்லி அட்வான்ஸ் வாங்கியிருக்கேன்” என்றான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கத் தாமரைப் பெண்ணே!
அங்குதான், அன்று முதல்தான் அவர்களுக்குச் சனி பிடிக்க ஆரம்பித்தது.
தேவைக்கு முயற்சிப்பது ஆசை. அதுவே மெல்ல மெல்ல வளர்ந்து பேராசையாகிவிடுகிறது. பேராசை நிலைக்கும்போது தேவைகளும் அதிகமாகி பணம், பதவி, புகழ் என வெறியாகிறது.
முகுந்தனும் கூடி அப்படித்தான் ஆகிப்போனான். குடும்பத்தை முன்னேற்றணும், வசதிகளைப் பெருக்கணும் என்கிற நியாயமான ஆசையில் ஆரம்பித்வனின் முழுக்க அதிலேயே இருந்தது.
மாலையில் கடை வேலைக்குப் போனவன், அதைவிட அதிக வருமானம் என வேலை வாய்ப்பு ஏஜென்ஸிக்கு மாறினான். அதன் காரணமாய் வீட்டுக்குத் தாமதமாக வருவான்.
அவன் வரும்போது சுஷ்மா உறங்கிவிடுவாள். காலையில அவன் எழுவதற்குள் அவள் பள்ளிக்குக் கிளம்பிவிடுவாள். கைநிறைய பொருட்களும். வசதியான சாமான்களும் கிடைத்தாலும் கூட செண்பகத்திற்கும் சுஷ்மாவிற்கும் வெறுமையாயிற்று.
“அம்மா, அப்பா எதுக்காக இப்படி ராத்திரி பகலாய் கஷ்டப்படணும்?”
“எல்லாம் உனக்ககாத்தான். உன் எதிர்காலத்துக்காக.”
“வேணாம். அப்பாவை வருத்தி கிடைக்கப் போகிற எதிர்காலம் எனக்கு வேணாம். அவர்ட்ட சொல்லும்மா.”
செண்பகம் சொல்லியும் முகுந்தன் கேட்கவில்லை.
“ஏங்க. இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த ஓட்டம்?”
“இன்னும் கொஞ்சநாள்தான்.”
“அப்புறம்?”
“அப்புறம் மலேசியா போயிரலாம். நான் வேலை பார்க்கிற ஏஜன்ஸி மூலம் பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்தாச்சு. நம்ம கஷ்டமெல்லாம் கூடிய சீக்கிரம் தீரப்போகுது.”
சுஷ்மா குதூகலித்து, “ஐ, நானும் விமானத்துல பறக்கப் போறேன். என்யும் அங்கே அழைச்சுப் போவீங்கதானேப்பா!”
“நிச்சயமாய். நீ இல்லாமல் எங்களுக்குச் சந்தோஷம் ஏது?”
சுஷ்மாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பள்ளியில் தோழிகளிடம் ஆரம்பித்து மரமி. மட்டை. சுற்றுச்சுவர் என எல்லாவற்றிடமும் மலேசியா புராணம் படிக்க ஆரம்பத்தாள். வானத்தில் மிதந்தாள்.
“ஏய், நீ அங்கேயே படிக்கப் போயிருவியா?”
“ஆமா, படிப்பு மட்டுமில்லே அங்கேயே வேலை பார்த்து செட்டிலாகிருவேன்.”
“அங்கே போயிட்டா எங்களையெல்லாம் மறந்துடாதடீ.”
“முயற்சி பண்றேன்.”
அந்தப் பக்குவமில்லா வயதில் மலேசியா மோகம் உள்ளூரைக் கசக்க வைத்தது. அந்தப் பள்ளி, வீடு, பஸ், படிப்பு எல்லாவற்றின் மேலும் இளப்பம் தோன்றிற்று.
ஒருநாள் இரவு இரண்டு மணியாகியும் கூட முகுந்தன் வீடு திரும்பவில்லை.
தேவைக்கு முயற்சிப்பது ஆசை. அதுவே மெல்ல மெல்ல வளர்ந்து பேராசையாகிவிடுகிறது. பேராசை நிலைக்கும்போது தேவைகளும் அதிகமாகி பணம், பதவி, புகழ் என வெறியாகிறது.
முகுந்தனும் கூடி அப்படித்தான் ஆகிப்போனான். குடும்பத்தை முன்னேற்றணும், வசதிகளைப் பெருக்கணும் என்கிற நியாயமான ஆசையில் ஆரம்பித்வனின் முழுக்க அதிலேயே இருந்தது.
மாலையில் கடை வேலைக்குப் போனவன், அதைவிட அதிக வருமானம் என வேலை வாய்ப்பு ஏஜென்ஸிக்கு மாறினான். அதன் காரணமாய் வீட்டுக்குத் தாமதமாக வருவான்.
அவன் வரும்போது சுஷ்மா உறங்கிவிடுவாள். காலையில அவன் எழுவதற்குள் அவள் பள்ளிக்குக் கிளம்பிவிடுவாள். கைநிறைய பொருட்களும். வசதியான சாமான்களும் கிடைத்தாலும் கூட செண்பகத்திற்கும் சுஷ்மாவிற்கும் வெறுமையாயிற்று.
“அம்மா, அப்பா எதுக்காக இப்படி ராத்திரி பகலாய் கஷ்டப்படணும்?”
“எல்லாம் உனக்ககாத்தான். உன் எதிர்காலத்துக்காக.”
“வேணாம். அப்பாவை வருத்தி கிடைக்கப் போகிற எதிர்காலம் எனக்கு வேணாம். அவர்ட்ட சொல்லும்மா.”
செண்பகம் சொல்லியும் முகுந்தன் கேட்கவில்லை.
“ஏங்க. இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த ஓட்டம்?”
“இன்னும் கொஞ்சநாள்தான்.”
“அப்புறம்?”
“அப்புறம் மலேசியா போயிரலாம். நான் வேலை பார்க்கிற ஏஜன்ஸி மூலம் பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்தாச்சு. நம்ம கஷ்டமெல்லாம் கூடிய சீக்கிரம் தீரப்போகுது.”
சுஷ்மா குதூகலித்து, “ஐ, நானும் விமானத்துல பறக்கப் போறேன். என்யும் அங்கே அழைச்சுப் போவீங்கதானேப்பா!”
“நிச்சயமாய். நீ இல்லாமல் எங்களுக்குச் சந்தோஷம் ஏது?”
சுஷ்மாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பள்ளியில் தோழிகளிடம் ஆரம்பித்து மரமி. மட்டை. சுற்றுச்சுவர் என எல்லாவற்றிடமும் மலேசியா புராணம் படிக்க ஆரம்பத்தாள். வானத்தில் மிதந்தாள்.
“ஏய், நீ அங்கேயே படிக்கப் போயிருவியா?”
“ஆமா, படிப்பு மட்டுமில்லே அங்கேயே வேலை பார்த்து செட்டிலாகிருவேன்.”
“அங்கே போயிட்டா எங்களையெல்லாம் மறந்துடாதடீ.”
“முயற்சி பண்றேன்.”
அந்தப் பக்குவமில்லா வயதில் மலேசியா மோகம் உள்ளூரைக் கசக்க வைத்தது. அந்தப் பள்ளி, வீடு, பஸ், படிப்பு எல்லாவற்றின் மேலும் இளப்பம் தோன்றிற்று.
ஒருநாள் இரவு இரண்டு மணியாகியும் கூட முகுந்தன் வீடு திரும்பவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கத் தாமரைப் பெண்ணே!
7
இரவு இரண்டு மணியாகியும் முகுந்தன் வீடு திரும்பாததால் செண்பகத்திற்குள் பயமாயிற்று. தூக்கமில்லாமல் வாசலுக்கும், சாலைக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.ஒருவேளை தாமதமாகிறது என்று அங்கேயே தூங்கி காலையில் எழுந்து வந்துவிடுவார் என சமாதானப்படுத்திக் கொண்டாள். மறுநாளும் ஆளைக் காணோம் என்றதும். அந்த அலுவலகத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்க பூட்டு!விசாரித்த்தில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றி விட்டார்கள் என அவர்கள் மேல் புகார்! போலீஸ் வர, அவர்கள் ஓட்டம் தலை மறைவு!முகுந்தனும் போலீஸிற்குப் பயந்து பதுங்கியிருந்தான். அவளுக்குப் பயமாயிற்று. கடவுளே! என்ன இது சோதனை அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது. எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம். என் பேராசைதான்.இயல்பாய் இருந்தவரை உசுப்பிவிட்டு இப்போது உள்ளதும் போயிற்று. எனக்குப் பணம், காசு, வசதி எதுவும் வேணாம். அவர் மட்டும் போதும்.செண்பகத்திற்கு என்ன சொல்வதென்று தெரிவில்லை. விஷயம் கசிந்து அக்கம் பக்கத்தில் அவமானம். சுஷ்மாவும் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. தோழிகள் ‘”மலேசிய மகாராணி வரா!‘ எனக் கிண்டல்! அவளால் அதை எதிர்கொள்ள முடிய வில்லை.
“அம்மா, இனி நான் ஸ்கூலுக்குப் போகலே!” என்று நான்கு நாள் முடங்கிக் கிடந்தாள். வீட்டில் அம்மாவின் அழுமூஞ்சியைப் பார்ப்பதற்குப் பள்ளியே தேவலாம் என்று பிறகு மனது தேறிற்று. இறுகிற்று.ஒரு வாரம் கழித்து முகுந்தனிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. “செண்பகம், நான் நம்பி ஏமாந்துட்டேன். அது போலி ஏஜென்ஸி. பல பேர் அதுல பணம் கொடுத்து ஏமாந்துட்டாங்க. நான் எந்த தப்பும் பண்ணலே. ஆனாலும் அங்கு வேலை பார்த்ததால நானும் உடந்தைன்னு போலீஸ் தேடுது. நீங்க யாரும் கவலைப்பட வேணாம். நான் மலேசியாவுக்கு இன்னிக்கு ராத்திரிப் புறப்படறேன். அங்கே போய் வேலை தேடிக்கிட்டு உன்னையும் கூப்பிட்டுக்கிறேன். அதுவரைக்கும் சுஷ்மாவும் நீயும் பத்திரமா இருங்க!”
கணவன் அருகில் இல்லாவிட்டலும் பரவாயில்லை. எங்காவது நல்லா இருந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு. கொஞ்சநாள் அவர் தள்ளியிருப்பதுதான் நல்லது. பிறகு எல்லாம் நீர்த்துவிடும். அதன் பிறகு போலீஸில் சரண்டராகி எல்லா விவரமும் சொல்லிக் கொள்ளலாம்.
தற்காலிகமாய் மனதில் சமாதானம் ஏற்பட்டாலும் கூட அவளது மனதில், ‘எல்லாத்துக்கும் காரணம் நான்தானே என் பேராசைதானே‘ என்கிற உறுத்தல் குத்திக்கொண்டேயிருந்தது. மலேசியா சென்று விட்டாலும் கூட முகுந்தனுக்கு வேலை ஏதுவும் எளிதில் கிடைக்கவில்லை. அங்குமிங்கும் அலைந்து கடைசியில் தமிழ்நாட்டுக்கார் நடத்தும் ‘மெட்ராஸ் கபே‘யில் தஞ்சம் புகுந்தான். அது கோலாலம்பூரின் மையத்தில் பிரபலம் அங்கு கல்லா கணக்கு எழுதல், அடுக்களை, சர்வர் என எல்லாமும் செய்தான். அங்கு வைத்துதான் மகேஸ்வரியும் அவனது குடும்பமும் முகுந்தனுக்கு அறிமுகமானார்கள்.
மகேஸ்வரியின் தந்தை அவன் பேரில் இரக்கப்பட்டு, “என்ன படிச்சிருக்கே?” என்றார்.
“டிகிரி சார்.”
“அப்புறம் ஏன் ஹோட்டல்?”
“வேறு வேலை அமையல சார்.”
இரவு இரண்டு மணியாகியும் முகுந்தன் வீடு திரும்பாததால் செண்பகத்திற்குள் பயமாயிற்று. தூக்கமில்லாமல் வாசலுக்கும், சாலைக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.ஒருவேளை தாமதமாகிறது என்று அங்கேயே தூங்கி காலையில் எழுந்து வந்துவிடுவார் என சமாதானப்படுத்திக் கொண்டாள். மறுநாளும் ஆளைக் காணோம் என்றதும். அந்த அலுவலகத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்க பூட்டு!விசாரித்த்தில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றி விட்டார்கள் என அவர்கள் மேல் புகார்! போலீஸ் வர, அவர்கள் ஓட்டம் தலை மறைவு!முகுந்தனும் போலீஸிற்குப் பயந்து பதுங்கியிருந்தான். அவளுக்குப் பயமாயிற்று. கடவுளே! என்ன இது சோதனை அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது. எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம். என் பேராசைதான்.இயல்பாய் இருந்தவரை உசுப்பிவிட்டு இப்போது உள்ளதும் போயிற்று. எனக்குப் பணம், காசு, வசதி எதுவும் வேணாம். அவர் மட்டும் போதும்.செண்பகத்திற்கு என்ன சொல்வதென்று தெரிவில்லை. விஷயம் கசிந்து அக்கம் பக்கத்தில் அவமானம். சுஷ்மாவும் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. தோழிகள் ‘”மலேசிய மகாராணி வரா!‘ எனக் கிண்டல்! அவளால் அதை எதிர்கொள்ள முடிய வில்லை.
“அம்மா, இனி நான் ஸ்கூலுக்குப் போகலே!” என்று நான்கு நாள் முடங்கிக் கிடந்தாள். வீட்டில் அம்மாவின் அழுமூஞ்சியைப் பார்ப்பதற்குப் பள்ளியே தேவலாம் என்று பிறகு மனது தேறிற்று. இறுகிற்று.ஒரு வாரம் கழித்து முகுந்தனிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. “செண்பகம், நான் நம்பி ஏமாந்துட்டேன். அது போலி ஏஜென்ஸி. பல பேர் அதுல பணம் கொடுத்து ஏமாந்துட்டாங்க. நான் எந்த தப்பும் பண்ணலே. ஆனாலும் அங்கு வேலை பார்த்ததால நானும் உடந்தைன்னு போலீஸ் தேடுது. நீங்க யாரும் கவலைப்பட வேணாம். நான் மலேசியாவுக்கு இன்னிக்கு ராத்திரிப் புறப்படறேன். அங்கே போய் வேலை தேடிக்கிட்டு உன்னையும் கூப்பிட்டுக்கிறேன். அதுவரைக்கும் சுஷ்மாவும் நீயும் பத்திரமா இருங்க!”
கணவன் அருகில் இல்லாவிட்டலும் பரவாயில்லை. எங்காவது நல்லா இருந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு. கொஞ்சநாள் அவர் தள்ளியிருப்பதுதான் நல்லது. பிறகு எல்லாம் நீர்த்துவிடும். அதன் பிறகு போலீஸில் சரண்டராகி எல்லா விவரமும் சொல்லிக் கொள்ளலாம்.
தற்காலிகமாய் மனதில் சமாதானம் ஏற்பட்டாலும் கூட அவளது மனதில், ‘எல்லாத்துக்கும் காரணம் நான்தானே என் பேராசைதானே‘ என்கிற உறுத்தல் குத்திக்கொண்டேயிருந்தது. மலேசியா சென்று விட்டாலும் கூட முகுந்தனுக்கு வேலை ஏதுவும் எளிதில் கிடைக்கவில்லை. அங்குமிங்கும் அலைந்து கடைசியில் தமிழ்நாட்டுக்கார் நடத்தும் ‘மெட்ராஸ் கபே‘யில் தஞ்சம் புகுந்தான். அது கோலாலம்பூரின் மையத்தில் பிரபலம் அங்கு கல்லா கணக்கு எழுதல், அடுக்களை, சர்வர் என எல்லாமும் செய்தான். அங்கு வைத்துதான் மகேஸ்வரியும் அவனது குடும்பமும் முகுந்தனுக்கு அறிமுகமானார்கள்.
மகேஸ்வரியின் தந்தை அவன் பேரில் இரக்கப்பட்டு, “என்ன படிச்சிருக்கே?” என்றார்.
“டிகிரி சார்.”
“அப்புறம் ஏன் ஹோட்டல்?”
“வேறு வேலை அமையல சார்.”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கத் தாமரைப் பெண்ணே!
“என் கம்பெனியில வேலை தரேன் வா” என அவர் அவளை அழைத்துக் கொண்டார். அவனுக்குச் சந்தோஷமாயிற்று. கடவுள் நம்மைக் கைவிடவில்லை.
ஊருக்கு அந்தச் சந்தோஷத்தை அறிவிக்கலாம் என மளிகைக் கடைக்குப் போன் போட்டபோது. “முகுந்தா, இங்கேயெல்லாம் இனி கூப்பிடாதே” என்று பயந்தார்கள்.
“ஏன்?”
“போலீஸ் டார்ச்சர்ப்பா. தினம் தினம் உன் பெண்டாட்டி புள்ளைய போலீஸ் விரட்டுவது. பணம் கொடுத்து ஏமாந்த பசங்களும் வந்து விரட்டறானுங்க.”
“செண்பகமும் சுஷ்மாவும் எப்படியிருக்காங்க? நான் அவங்கக்கூட பேசலாமா?”
“பேசினா இன்னமும் வம்பு. போனை வச்சிடு.”
“நல்ல வேலை. நல்ல சம்பளம். நல்ல மனிதர்கள் என்கிற சந்தோஷம் அந்த நேரத்தில் அவனிடமிருந்து பறிபோயிற்று. எது கிடைத்து என்ன.... நிம்மதியில்லையே! ஊரில் மனைவி, மகளை கஷ்டப்படுத்திக் கொண்டு எனக்கு மட்டும் இநத் சொகுசு தேவையா?
அவனுக்கு அங்கு இருப்புக்கொள்ளவில்லை. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மகேஸ்வரியின் தந்தையிடம், “முதலாளி, நான் ஒருமுறை ஊருக்குப் போய் வந்துடுறேன். லீவு வேணும்” என்றான்.
சுறுசுறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் வேலை பார்க்கும் அவனை இழக்க அவருக்கு விருப்பமில்லை.
“அங்கு போனால் போலீஸ் புடுச்சுக்குமேப்பா!”
“பரவாயில்லை சார். நானே சரண்டாகிடறேன். என்னால என் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. நான் கிளம்பறேன்.”
வைராக்கியத்துடன் பெட்டி கட்டிக்கொண்டு, டிக்கட் வாங்கிக்கொண்டு ஏர்போர்ட் போனவனை வரவேற்க அங்கே மலேசிய போலீஸ் தயாராயிருந்தது.
ஏர்போர்ட்டில் போலீஸ் தன்னை மறிக்கும் என்று முகுந்தன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
மனதில் சந்தேசத்துடனும் செண்பகத்தையும் சுஷ்மாவையும் பார்க்கப் போகும் உற்சாகத்துடனும் வரிசையில் நின்றிருந்தான். போர்டிங் போட வண்டியில் கனமாயிருந்த பெட்டிகளுடன் நகர்ந்தான்.
செண்பகம், இதோ வந்துட்டேன். உனக்கு நீ விரும்பின பட்டுப்புடவை, செயின், சுஷ்மாவுக்கு நெக்லெஸ்.
கவுண்டரை நெருங்கினபோது போலீஸ் ஓரங்கட்ட அவனுக்கு வியர்த்துப் போயிற்று. “உன் பெயரில் டிராவல் பேன் இருக்கு எங்களுடன் வா!”
“சார், நான் எந்த்த் தப்பும் பண்ணலே?”
“அதெல்லாம் ஸ்டேஷன்ஸ் போய் பேசிக்கலாம் வா!”
அவரது கனவுகள் சிதைந்து தகர்ந்தன. ஏற்கெனவே ஊரில் குடும்பம் சீரழிந்திருக்கிறது. இப்போது இங்க நானும் சிறையில். கடவுளே. எனக்கு ஏன் இந்தச் சோதனை! என்னை ஏன் இவர்கள்? இந்திய போலீஸ் சொல்லியிருக்குமா? அவனுக்குப் புரியவில்லை.
“சார், என் முதலாளிக்குப் போன் பண்ணலாமா?”
“ஓ... ஷ்யூர்.”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கத் தாமரைப் பெண்ணே!
“ஒரு மணி நேரத்தில் மகேஸ்வரியும் அவர் தந்தையும் வந்து சேர்ந்தார்கள். முகுந்தனை ஜாமீனில் எடுத்தனர்.
“சார், ரொம்ப நன்றி, நான் எப்படியும் ஊருக்குப் போயாகணும்!”
“பயணத் தடை இருக்கே!”
“அதை அகற்ற என்ன வழி...?”
“யோசிப்போம்!”
ஒரு வாரம் போலீஸில் கையெழுத்துப் போட்டு வந்து, முகுந்தன் நொந்து பேயிருந்தான்.
“மகேஸ், இதிலிருந்து நான் தப்பிக்கவே முடியாதா?”
“வழியிருக்கு. ஆனா நானோ, அப்பாவோ ரொம்ப தலையிட முடியலே. ரத்தபந்தம் அல்லது நெருங்கிய உறவு பொறுப்பேத்துக் கிட்டா பயணத் தடையை விலக்க முடியும்ங்கிறாங்க.”
“எனக்கு இங்கே ரத்தபந்தம் யார் இருக்கா? நெருங்கிய உறவுக்கு நான் எங்கே போவேன்?”
“நான் ஒரு யோசனை சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!”
“சொல்லு.”
“நீங்க வெளியே போகணும்னா உங்களுக்கு உரிமையான யாராவத இங்கே இருக்கணும். நான் வேனுமானா அப்படி இருந்துடறேனே!”
அவன் அதிர்ந்து போனான்
“நீ எப்படி?”
“உங்க மனைவியாக!”
“மகேஸ்.. என்ன சொல்றே நீ? பைத்தியம் போல பேசாதே!”
“இல்லை. நல்லா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ரிஜிஸ்தர் பண்ணிரலாம். உங்களுக்கும் எனக்கும் திருமணம்.”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தங்கத் தாமரைப் பெண்ணே!
8
“உளறாதே! உன் வயசென்... என் வயசென்ன... ஏற்கெனவே உங்களுக்குக் கடன்பட்டிருக்கேன். இதுவேறயா? என்னால உன் வாழ்வு கெடவேணாம். அதுவுமில்லாம எனக்கு ஊரில் மனைவி- மகள் இருக்கிறார்கள்” முகுந்தன் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினான்.
“அவர்கள் அங்கே இருக்கட்டும். நான் இங்கே. உங்களைப் பார்த்த நாள் முதலே என் மனதில் மின்னல்... அப்புறம் உங்கள வேகம், விவேகம், செயல்பாடுகள் எல்லாமே என்னை மயக்கிடுச்சு” மகேஸ்வரி தன் பங்குக்குப் பிடிவாதமாக இருந்தாள்.
“உங்கப்பா சம்மதிக்கணும்?” கொஞ்சம் இறங்கி வந்தான் முகுந்தன்.
“அவருக்கு ஏற்கனவே உங்க பேர்ல உயிர். நிச்சயம் சம்மதிப்பார். என் விருப்பத்துக்கு அவர் ஒருநாளும் மறுத்ததில்லை. தவிர, அவரது பிசினஸை உங்களைப் போல நல்லவர், திறமையானவர் ஒருவர்கிட்ட கொடுத்திட்டு ஒதுங்கணும்னு சொல்லிக்கிட்டிருக்கார்.”
நீண்ட யோசனைக்குப் பின், வேண்டாவெறுப்பாக முகுந்தன் சம்மதித்தான். அதுவும் செண்பகத்தையும் சுஷ்மாவையும் கரைசேர்க்க என்கிற சமாதானத்துடன்.
‘ஊர் உலகத்தில் இரண்டு பொண்டாட்டிக்கார்கள் இல்லையா என்ன? வேறு வழி இல்லாமல்தானே...‘ என்று மனதைத் தேற்றித் கொண்டான்.
இதில் செண்பகத்தை ஒதுக்கப்போவதில்லை, அவளையும் சுண்மாவையும் சொகுசாய் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் விரும்பினபடி மலேசியாவுக்கும் அழைத்து வந்துவிடலாம்.
செண்பகம் எதிர்க்கமாட்டாள். என் நிலைமையைப் புரிந்து கொள்வாள். சமாதானம் சொல்ல்லாம் என்று பயணத் தடை நீக்கி ஊருக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி.
அங்கு அவள் இல்லை.
“நீங்கள் இப்படி துரோகம் பண்ணுவீர்கள் என்று எதிர்பார்க்க வில்லை. மலேசயிவிலிருந்து உங்கள் இரண்டாம் மனைவி போன் பண்ணினாள். எங்களை ஒதுக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உங்களுக்காக, உங்களால் எவ்வளவோ கஷ்டங்கள், சங்கடங்கள், வேதனைகளைத் தாங்கிக் கொண்ட என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். நிஜமான பாசம் இருக்குமானால் மகளையாவது கரை சேருங்கள்.”
அன்று இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனாள் செண்பகம்.
அக்கம்பக்கம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. புரியவில்லை. சுஷ்மாவுக்கு எதுவும் விளங்கவில்லை. அப்பாவைப் பார்த்து சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. அப்படியே பிடித்து வைத்திருந்தது போல சிலையாய் அமர்ந்திருந்தாள்.
முகுந்தனுக்குத் தன் மேலேயே வெறுப்பாய் வந்தது. இவள் இப்படி எதுவும் செய்து வைத்துவிடக கூடாத என்றுதான் அவளிடம் எந்த விவரமும் சொல்லாமலிருந்த்தான். ஆனால் மகேஸ்வரி விஷயத்தைப் போன் வழியே செண்பகத்தின் காதில் போட்டு காரியத்தைக் கெடுத்துவிட்டாள்.
போலீஸ் பிரச்சினையால் ஊரில் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கமுடியவில்லை.
“சுஷ்மா, நீயும் எங்கூட வந்திரு.”
“எதுக்கு?”
“உளறாதே! உன் வயசென்... என் வயசென்ன... ஏற்கெனவே உங்களுக்குக் கடன்பட்டிருக்கேன். இதுவேறயா? என்னால உன் வாழ்வு கெடவேணாம். அதுவுமில்லாம எனக்கு ஊரில் மனைவி- மகள் இருக்கிறார்கள்” முகுந்தன் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினான்.
“அவர்கள் அங்கே இருக்கட்டும். நான் இங்கே. உங்களைப் பார்த்த நாள் முதலே என் மனதில் மின்னல்... அப்புறம் உங்கள வேகம், விவேகம், செயல்பாடுகள் எல்லாமே என்னை மயக்கிடுச்சு” மகேஸ்வரி தன் பங்குக்குப் பிடிவாதமாக இருந்தாள்.
“உங்கப்பா சம்மதிக்கணும்?” கொஞ்சம் இறங்கி வந்தான் முகுந்தன்.
“அவருக்கு ஏற்கனவே உங்க பேர்ல உயிர். நிச்சயம் சம்மதிப்பார். என் விருப்பத்துக்கு அவர் ஒருநாளும் மறுத்ததில்லை. தவிர, அவரது பிசினஸை உங்களைப் போல நல்லவர், திறமையானவர் ஒருவர்கிட்ட கொடுத்திட்டு ஒதுங்கணும்னு சொல்லிக்கிட்டிருக்கார்.”
நீண்ட யோசனைக்குப் பின், வேண்டாவெறுப்பாக முகுந்தன் சம்மதித்தான். அதுவும் செண்பகத்தையும் சுஷ்மாவையும் கரைசேர்க்க என்கிற சமாதானத்துடன்.
‘ஊர் உலகத்தில் இரண்டு பொண்டாட்டிக்கார்கள் இல்லையா என்ன? வேறு வழி இல்லாமல்தானே...‘ என்று மனதைத் தேற்றித் கொண்டான்.
இதில் செண்பகத்தை ஒதுக்கப்போவதில்லை, அவளையும் சுண்மாவையும் சொகுசாய் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் விரும்பினபடி மலேசியாவுக்கும் அழைத்து வந்துவிடலாம்.
செண்பகம் எதிர்க்கமாட்டாள். என் நிலைமையைப் புரிந்து கொள்வாள். சமாதானம் சொல்ல்லாம் என்று பயணத் தடை நீக்கி ஊருக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி.
அங்கு அவள் இல்லை.
“நீங்கள் இப்படி துரோகம் பண்ணுவீர்கள் என்று எதிர்பார்க்க வில்லை. மலேசயிவிலிருந்து உங்கள் இரண்டாம் மனைவி போன் பண்ணினாள். எங்களை ஒதுக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உங்களுக்காக, உங்களால் எவ்வளவோ கஷ்டங்கள், சங்கடங்கள், வேதனைகளைத் தாங்கிக் கொண்ட என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். நிஜமான பாசம் இருக்குமானால் மகளையாவது கரை சேருங்கள்.”
அன்று இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனாள் செண்பகம்.
அக்கம்பக்கம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. புரியவில்லை. சுஷ்மாவுக்கு எதுவும் விளங்கவில்லை. அப்பாவைப் பார்த்து சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. அப்படியே பிடித்து வைத்திருந்தது போல சிலையாய் அமர்ந்திருந்தாள்.
முகுந்தனுக்குத் தன் மேலேயே வெறுப்பாய் வந்தது. இவள் இப்படி எதுவும் செய்து வைத்துவிடக கூடாத என்றுதான் அவளிடம் எந்த விவரமும் சொல்லாமலிருந்த்தான். ஆனால் மகேஸ்வரி விஷயத்தைப் போன் வழியே செண்பகத்தின் காதில் போட்டு காரியத்தைக் கெடுத்துவிட்டாள்.
போலீஸ் பிரச்சினையால் ஊரில் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கமுடியவில்லை.
“சுஷ்மா, நீயும் எங்கூட வந்திரு.”
“எதுக்கு?”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஒரு தாமரைப் பூ... ஒரு குளம் - வண்ணதாசன்
» தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்
» மகாகவி பாரதி பாடல்கள்...
» நீதிக்கதை – தங்கத் தூண்டில்
» தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
» தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்
» மகாகவி பாரதி பாடல்கள்...
» நீதிக்கதை – தங்கத் தூண்டில்
» தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|