புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_lcap தங்கத் தாமரைப் பெண்ணே! I_voting_bar தங்கத் தாமரைப் பெண்ணே! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத் தாமரைப் பெண்ணே!


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:23 pm

வாழ்த்துரை

நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.

சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.

ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.

எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.

குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.

இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.

பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.

இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,

அன்புடன்
(ஏ.நடராஜன்)
முன்னாள் இயக்குநர்
சென்னைத் தொலைக்காட்சி


அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை

வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.

இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.

மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.

கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,

இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.

முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.

இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்

அன்புடன்
ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா
பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.


பதிப்புரை

எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.

கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,

எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,

எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.

அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.

கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.

இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,

அன்புடன்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்




 தங்கத் தாமரைப் பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:24 pm

தங்கத் தாமரைப் பெண்ணே! - 1

விடுமுறையின் சோம்பல் ஹாஸ்டல் மரங்களில் பனித்துளியாய் சொட்டிற்று. காக்கை, குருவிகள் சன்னமாய் படபடக்க, கட்டிடங்களின் ஒவ்வொரு பிரிவும் வெறிச்... அமைதிப் பூங்கா!

தோட்டப் பையன் நீருற்றுத் தொட்டியில் வாளியைக் கவிழ்த்து கோரி எடுக்க, வாட்ச்மேன் தன் கூண்டிலிருந்து எழுந்து ஓடிவந்து. “ஏய், ஒனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இங்கே கூடாது. போய் பைப்ல புடிச்சுக்கோ,” என்று விரட்டினான்.

அதற்குள் வாசலில் வேன் உறுமி ஒலி எழுப்ப, “இருப்பா வர்றேன்” என்று ஓடிப்போய்த் திறந்தான்.

“என்ன லோடு? பால் மட்டும் தானா?”

“இல்லை, வெண்ணெய், மோர், தயிர், நெய் என அத்தனையும் உண்டு. வேணுமா?” என்று டிரைவர் மறுபடியும் ஒலி எழுப்பி உள்ளே பாய்ந்தார்.

‘ஹும்...! வாட்ச்மேன்னா எல்லாத்துக்கும் எளப்பமா போச்சு! கேட்டா இவனுங்களுக்குக் கோபம், கேட்காட்டி ‘என்ன தூங்கறியான்னு’ பிரின்ஸ்பால் குரைப்பார்’ முணுமுணுத்தபடி அவன் கதவை மூடினான்.

பெண்கள் விடுதி.

இரண்டாம் பிரிவு கட்டிடம்,அறைக்குள் பார்கவி அரை நிஜாருடன், கொசுவலைக்குள் சுருண்டுக் கிடக்க, குளியல் அறையில் தண்ணீரின் சலசலப்பு. கதவு திறந்து திடீரென அந்தச் சலசலப்பு அதிகமாக – “ஏய்... சுஷ்மா என்னடி இழவு பண்றே...?” என்று பார்கவி முனகினாள். “உன்னோட பெரிய ரோதனை”

“குளியல்” என்று தலை துவட்டினாள். முதுகிலிருந்த ஈர முத்துக்களை ஒத்திஎடுத்து அந்தப் பக்கம் திரும்பி அலமாரியிலிருந்து தாவணி எடுத்தாள்.

“காலங்கார்த்தால் – லீவுல கூட விடமாட்டியோ!”

“வந்து... பிரின்ஸ்பால்கிட்ட காலேஜ் மேகஸின் புரூப்பை கொடுக்கணும்”

“ஹயோ எப்போ பார் படிப்பு எழுத்து என்ன பிறப்போ போ நீ!”

“ரொம்பா சலிச்சுக்காத ராத்திரி முழுக்க படம் பார்க்கறது எவனோடயாவது சாட்டிங் அப்புறம் பகல்ல பீடை மாதிரி தூக்கம் சரி சரி முறைக்காதே இதோ ஆச்சு!”

சுஷ்மா தலையை வாரிக்கொண்டு கதவை மூடிவிட்டு வெளியேறினாள்.

சுரேஷ். பாத்ரூமிலிருநது தலையைத் துவட்டிக்கொண்டு வெளியே வந்தபோது செல்போன் ஒருமுறை அலறி நின்று போயிற்று. எடுத்துப் பார்த்தான் பிரின்ஸ்பால் மிஸ்ட்கால்! அவர் எப்போதுமே அப்படித்தான்.

சிக்கனம் – கச்சிதம். சுரேஷிற்கு அந்தக் கல்லூரியும், ஹாஸ்டலும் புதிதல்ல. அங்கு அவன் அடிக்காத லூட்டியில்லை. அங்கே பி.டி.எஸ்! பிறகு வேறு கல்லூரியில் தட்டுத்தடுமாறி இடம் கிடைத்து எம்.டி.எஸ்! சில காரணங்களால் கிளீனிக் வைக்க முடியவில்லை. அந்த முயற்சி தோல்வி.

வேறு வழியில்லாமல் இங்கே வேகன்ஸி இருப்பது அறிந்து அணுக. பிரின்ஸ்பால் அவனை விடவில்லை. ஹாஸ்டலிலும் வார்டன் பொறுப்பு ஏற்றுக் கொண்டால்தான் வேலை என்று கிடுக்கிப்பிடி பிடித்தார்.

அவன் படித்தபோதிருந்த அதே பிரின்ஸ்பால் மறுக்க முடியவில்லை. கல்லூரியில் லெக்ச்சரர் என்று மரியாதையான பதவி. பசங்கள் வகுப்புகளில் வாலாட்டினாலும் லேப். இன்டர்னல் அசெஸ்மெண்ட் என அவர்களின் கடிவாளம் இவர்கள் கையில் ரொம்ப எகிறமாட்டார்கள்.



 தங்கத் தாமரைப் பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:24 pm

ஹாஸ்டல் அப்படியில்லை. வகுப்பறையில் கட்டுண்டுக் கிடப்பவர்கள் இங்கு எகத்தாளம்! நான்கு பிளாக்குகள். ஒவ்வொன்றிலும் ஆறு ப்ளோர்கள்! ப்ளோருக்கு இருபது அறைகள்!

அறைகளில் இரண்டு பேர் அல்லது சீனியர் என்றால் ஒருவர் மட்டும்!

எல்லோரையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. தவறுகள். தப்புகள் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வரை பிரச்சினை யில்லை. மீறினால் கவனிக்கணும்.

ஆனால் கண்டிக்க முடியாது. கல்லூரி, அதனால் மருத்துவ மாணவர்களை ஓரளவுக்குமேல் கட்டுப்பாடு விதித்தால் வைராக்கியம் எழும். சட்ட திட்டங்களை வேண்டுமென்றே உடைக்கப் பார்ப்பார்கள், மீறுவார்கள். அதனால் எச்சரிக்கையுடன் மாணவர்களை அணுக வேண்டும்.

என்னதான் பொறுமை காத்தாலும்கூட ‘மயிலே மயிலே’ என்றால் இறகு போடுவதில்லை. சமயத்தில் தண்டிக்கவும் வேண்டியுள்ளது. அதனால் வார்டன்களுக்கு என்றுமே ஹாஸ்டல் மாணவர்களிடம் நல்ல பெயர் இருந்ததில்லை. இது ஒரு சாபம்! ஹ

வார்டனும் மனிதர்தான் – அவரும் மாணவப் பருவம் கடந்து வந்தவர். ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக வார்டனாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று யாரும் உணருவதில்லை.

எகத்தாளம்! கேலி! கிண்டல்! மெஸ். பாத்ரூம் எல்லா இடங்களிலும் வார்டனைப் பற்றின கார்ட்டூன்! சுரேஷுக்கும் இந்த அனுபவங்கள் உண்டு. அவன் எதையும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை.

சுரேஷ் உடையை மாற்றுவதற்குள் மறுபடியும் மிஸ்ட்கால். பிரின்ஸ்பால் விடமாட்டார்.

சட்டென உடையை மாற்றிக்கொண்டு கிளம்பினான். அவன் வார்டன் மட்டுமின்றி கல்லூரியில் அவ்வப்போது வகுப்பு எடுப்பவன் என்பதால் அங்கேயே அவனுக்குத் தங்கவதற்க அறை ஒதுக்கியிருந்தனர்.

பிரின்ஸ்பாலின் அறை, பிரின்ஸ்பாலிடம் எந்த மாற்றமுமில்லை. சரியான முசுடு. அதே கண்டிப்பு, அதே படபடப்பு, வேகம். வேகம் செயலில் மட்டுமில்லை, அடுத்தவர்களின் மேல் பாய்ச்சலிலும்.

மனிதர் ஒரு நிமிடம சும்மா இருக்கமாட்டார். பிரின்ஸ்பால் தனி அறையில் அமர்ந்து போன். மொபைல் மூலம் ஆட்டிப் படைக்கலாம. ஈமெயிலில் உத்தரவு கொடுக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்வதில்லை.

கல்லூரி, விடுதி என உலாத்திக்கொண்டே இருப்பார். இரவிலும் கூட மனிதர் அயர்வதில்லை. அறைக்குள் விளக்கு எரியும், மின் விசிறி சுழலும். பசங்கள் அவர் உள்ளே இருக்கிறார் என்று தெரிந்தால் இரவில் அறையை வெளிப்பக்கம் தாழிட்டுவிட்டு காம்பவுண்ட் தாண்டுவார்கள்.

பூந்தோட்டத்தில் அமர்ந்து கஞ்சா அடிப்பார்கள். அவர்கள் மதி மயங்கி இருக்கும்போது வந்து பின்னால் நிற்பார். அவர்களுக்கு வெலவெலத்துப் போகும்.

பிசாசு இங்கே எப்படி வந்தது?

ஓட்டம் பிடிப்பார்கள். மறுநாள் ஓலை வரும் – பிசாசு கூப்பிட்டுக் கண்டிக்கும் – தண்டிக்கும் என்று பசங்கள் காய்ச்சல் கண்டிருப்பார்கள். பயபக்தியோடு சாமி கும்பிடுவார்கள். சர்ச்சில் மண்யிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அத கரையும் வரை உருக்கமாகப் பிரார்த்தனை.

பிரின்ஸ் – இன்னும் ஏன் வளர்த்துகிறது? உடனே கூப்பிட்டு கடித்து, குதறி எத்தனை அபராதம் எனத் தெரிவித்தால் – சக தோழிகளின் கை, கால் பிடித்துக் கடன் வாங்கிக் கட்டலாம். ஆனால் படுத்தல்.

ஏன் அழைக்கவில்லை? ஒருவேளை வீட்டிற்க்க கடுதாசி...?

தொலைந்தோம்... என்று பசங்கள் தகிப்பார்கள். அந்த மாதிரிச் சம்பவம் எதுவுமே நடக்காது. எதுவுமே நடக்காத மாதிரி அவர் அவர்களிடம் பேசுவார்.

பிசாசு - அப்போ நம்மைக் கவனிக்கலையோ? இருட்டுல அதுக்குக் கண்ணு தெரிஞ்சிருக்காது. நாம்தான் வீணாய்.... பயந்து ஒரு வாரமாய் பக்திப் பழமாயிட்டோம்.

அவர் அப்படித்தான் மலையைவிட்டு விடுவார். மயிலிறகுக்குக் கத்தி ஆர்ப்பாட்டம். சின்னச் சின்ன காரியங்களிலும் நேர்த்தி பார்ப்பார் எதிர்பார்ப்பார்.

நம்மால் முடிந்ததைத்தான் ஒப்புக் கொள்ளணும். ஒப்புக் கொண்டால் சரியாய் முடித்தாக வேண்டும்.

இப்போது என்னை எதற்காக வரச் சொல்லியிருக்கிறாரோ... என்னத்தைத் தலையில் தூக்கிப் போடப் போகிறாரோ... பயத்துடன் நின்றிருந்தான்.

பிரின்ஸ், அவன் படிக்கும் அந்த நாட்களிலேயே ஸ்பை வைத்திருப்பார். எப்படி, யார் மூலம் என்று தெரியாது. கல்லூரி மெஸ், மைதானம், நூலகம், பாத்ரூம் என எல்லா விஷயங்களும் அவருக்கு எட்டிவிடும்.

சிலவற்றைக் கண்டும் காணாத மாதிரி விட்டுவிடுவார். சில விஷயங்கள் தன் காதுக்கு வந்துவிட்டது என்பதைப் பசங்களுக்கு உணர்த்தி உணர்த்தியே மிரள வைப்பார்.

சுரேஷிற்கு அவர் மீது இப்போதும் கூட பயம். படிக்கிற நாட்களில் வீட்டில் கொடுத்த ஹாஸ்டல் பீஸ், சினிமா, தண்ணிக்குப் பாய்ந்துவிடும். இங்கே கட்டவில்லையென்றால் மெஸ் கட். அப்புறம் பரீட்சை எழுத விடமாட்டார்கள்.




 தங்கத் தாமரைப் பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:25 pm


இந்த மனுஷனுக்குக் கருணையே கிடையாதா என்று தோன்றும். அப்போது அவர் பெயரில் வெறுப்பு. துவேஷம். ஆவேசம் எழும்.

ஆனால் அந்தக் கண்டிப்பு இல்லாவிட்டால். கெட்டுப்போவது எனக் கிளம்பிவிட்ட பசங்களைத் திருத்த முடியாமல் போய்விடும் என்பது இப்போது அவனுக்கு விளங்குகிறது.

காலம் கடந்த ஞான்னோதயம். இன்றைய பசங்களும் பின்னாளில் உணருவர். இது வழிவழியாய் வரும் சுற்று.

“ஏன்யா.... மசமசன்னு நிக்கறே... உட்கார். என்ன யோசனை...?” அறைக்குள் நுழைந்தவனைக் கேட்டார் பிரின்ஸ்பால்.

“ஒண்ணுமில்லை சார்!” என்று சட்டென நாற்காலியை நகர்த்தி அமர்ந்தான்.

“சுரேஷ், ஏன் இந்த நரகத்திற்கு வந்தோம்னு தோணுதா?”

“அப்படியெல்லாமில்லே சார் பசங்கதானே... !”

“எம்.டி.எஸ். பண்ணிட்டு எதுக்கு நீ வாதியாரா வரணும்? ஒரு கிளினிக் வெச்சு....!”

“கிளினிக் வச்சதாலதான் சார் பிரச்னையே நண்பர்களை நம்பி பெரிதாய் கடன் வாங்கி கிளினிக் ஆரம்பிச்சு சரியாய் வரலே. இழுத்து மூடிட்டேன். நம்பிக்கை துரோகம்!”

“பேசாம கவர்ன்மென்ட் கிளினிக்குக்குப் போயிருக்கலாமே!”

“போகலாம் சார்... எட்டாயிரம் ரூபாய்க்கு கிராமத்துல போய் லோல் படணும். அது போகட்டும் சார், என்னை எதுக்கு வரச் சொன்னீங்கன்னு...”

“சொல்றேன்...” என்றவர் வாசலில் சலனம் தெரிய மணியடித்து, ”’ “பியூன், அந்தப் பொண்ணை வரச் சொல்!” என்றார். இவருக்கு ஆயிரம் கண்கள்.

உடன் நளினமாய் தாவணி ஒன்று தென்றலடித்து, “குட்மார்னிங் சார்!” என்று சுரேஷ் அமேர்ந்திருந்த பக்கம் திரும்ப, அவனுக்கு மின்னல் வெட்டிற்று. தங்கத்தாமரை!

“சுரேஷ், இவளை உனக்குத் தெரியாது.... ! சுஷ்மா...”

அவன் யோசிக்க, அவள், “சார், எங்களுக்கும் கிளாஸ் எடுத்திருக்கார்.” என்றாள் பணிவோடு.

“சுரேஷ், இவள் படிப்புல மட்டுமில்லை. ஸ்போர்ட்ஸ். ஆர்ட்ஸ். பாட்டு. நடனம். ஓவியம்னு எல்லாத்துலயும் டேலண்ட். போன மாதம் கஷ்மா கொடுத்த பிரசன்டேஷனுக்கு ஏகப்பட்ட பாராட்டு! நம் கல்லூரி மேகஸினுக்கு எடிட்டர்கூட இவதான்! நல்லா எழுதவும் செய்வா!”

அவர்பாட்டுக்குப் பாராட்டிக்கொண்டே போக கஷ்மாவிற்குக் கூசிற்று. சுரேஷிற்கு உள்ளுக்குள் இனம் புரியா தகிப்பு.

“சுஷ்மா, இந்தா!” என்று பிரின்சிபால் கவர் ஒன்றை நீட்டினார்.

“என்ன சார்?”

“பிரிச்சுப் பார்! உன் பிரன்டேஷனுக்காக மெடிக்கல் கம்பெனி கொடுத்த சன்மானம்.”

கவரை வாங்கிக் கொண்டவள் முகத்தில் எந்தச் சலனமுமில்லை. ஆரவாரமுமில்லை. அமைதி, அடக்கம். உற்று நோக்க... அனைத்து திறமைகளையும் கடந்து அவளது கண்களில் இழையோடும் விரக்தியை அவனால் ஸ்பரிசிக்க முடிந்த்து. ‘இவளுக்குள ஏதோ ஒன்று உரைக்கிறது. உரைத்து உரைத்து ஊனப்படுத்துகிறது. என்ன அது...?’

அவன் யோசித்து முடிப்பதற்குள், ”’“தாங்க்ஸ் சார்! நான்வரேன்.” என்று கிளம்பினாள். அதற்குள் ஏன் போனாள் என்றிருந்த்து அவனுக்கு.

“சுரேஷ், பசங்க எப்படி? வெறுப்பேத்தறாங்காள?”

“இல்லே சார். பழகிருச்சு. நானும்கூட அப்படியிருந்தவன் தானே!”

“நான் இப்போ எதுக்கு வரச் சொன்னேன்னா... அடுத்த வாரத்துல மருத்துவ கேம்ப் வருது. அருகில் ஒரு அனாதைகளுக்கான ஆசிரமத்துல ஏற்பாடு. அதுக்கு நீதான் பொறுப்பு. பசங்களை அழைச்சுப்போய் சிறப்பா முடிச்சுட்டுவரணும். பி-ஸீரியஸ்! மீடியா கவரேஜ் கூட இருக்கு. இதைச் சிறப்பா முடி. அப்புறம் முழு நேர லெக்சர்ராக்கிடறேன்.”

“தாங்க்ஸ் சார்!” என்றானே தவிர அவனது நெஞ்சு முழுக்க அவள்... தங்கத்தாமரை! யாரவள்? எந்த பிளாக்கில். எந்த அறையில் இருக்கிறாள் என்று சிந்தனை ஓட ஆரம்பித்தது.



 தங்கத் தாமரைப் பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:25 pm

2

அனாதைப் பிள்ளைகள் ஆசிரமம்.

பூக்கள். கீரைத் தோட்டம், பழ மரங்கள் என தென்றல் குடிகொண்ட பிரதேசம்.

மரங்களும் செடி, கொடிகளும் பசுமை பரப்பியிருந்தன. மைதானத்தில் பிள்ளைகள் உடைகளையும் உடலையும் அழுக்காக்கிக் கொண்டிருந்தனர்.

வானம் வறண்டு செம்மைப் படர்ந்து இருள் பரவினபோது கோயில் மணி டிங் டாங்!

உடன் பசங்கள் பின்பக்கம் தட்டி விட்டுக் கொண்டு, மண்டபத்தை நோக்கி ஓடினர். வரிசையாய் நின்று தண்ணீர் பைப்புகளில் அவசர கழுகல்.

அடுத்த மணி அடிக்கும் முன்பு எல்லோரும் கோயிலில் ஆஜர்.

அங்கு அமர்ந்து பிரார்த்தனை. அது முடிந்ததும் தலைமை ஆசிரியர் மைக் பிடித்தார்.

“மை சன்ஸ், நீங்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். அடுத்த மாதத்தில் பரீட்சை வருகிறது. எல்லோரும் நன்றாகப் படிக்கணும். எப்போதும் விளையாட்டுச் சிந்தனை கூடாது. நமக்கென்று ஒரு லட்சியம் வேண்டும். படித்து பெரியாள்களாக வரணும். வளரணும். இங்கு உங்களுக்கு நல்ல மனம் படைத்த யார் யாரோ உதவுவது போல நீங்களும் பிறருக்கு உதவணும் செய்வீர்களா?”



“செய்வோம் சார்!” என கோரஸ்.

“குட். இப்போது நீங்கள் சாப்பிடப் போகலாம்.”

“நன்றி சார்!” பசங்கள் மறுபடி கிறு பிடித்தனர். ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அவர்களை ஒழுங்குபடுத்த...

“பாய்ஸ், வெயிட்... வெயிட்... ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்...” என்க... எல்லோரும் அப்படியே நின்றனர்.

“வருகிற ஞாயிற்றுக்கிழமை பக்கத்து மருத்துவமனையிலிருந்து இலவச மருத்துவ முகாம் நடத்த இருக்கிறார்கள். எல்லோரும் தவறாமல் பிரசன்ட் ஆகணும்.”

டைனிங் ஹால்.

அங்கே பசங்கள் கியூ பிடித்து நின்றனர். பெரிய பெரிய பாத்திரங்களில் சாப்பாடு, சாம்பார், ரசம் ஆவி பறந்தது. ஆயா பரிமாற, “ஆயா, இன்னிக்கும் சாப்பாடுதானா? டிபன் இல்லியா?” என்று முணுமுணுத்தனர்.

“நாளைக்குப் பூரி மசால். போதுமா?”

“தேக்ஸ் ஆயா!” என்று வாண்டு ஒன்று அவளை அணைத்து முத்தமிட ஆயா தெற்றுப்பல் தெரிய சிரித்தாள். அவள்தான் அங்கு மெஸ் பொறுப்பாளி. இருந்தாலும் கூட சாப்பாட்டுக்கு இல்லாதவள் போல மெலிந்திருந்தாள். கண்கள் ஒட்டி, கருவளையம். முடிவிசிறி கூன் விழா குறை.

தலைமை ஆசிரியர்கூட அவளைத் திட்டுவார். “ஏன் இப்படி இருக்கே? ஒழுங்கா சாப்பிடு.”

“நிறையதான் சாப்பிடறேன்”

“அப்போ எல்லாம் எங்கே போகுது?”

“உனக்கு ஒரு செக்கப் பண்ணணும். டவுனுக்குப் போயிட்டு வரியா?”

“வேணாம். அதான் மருத்துவ முகாம் வருதே பார்த்துக்கலாம்!”

பளபளவென விடியும் நேரம். பல் மருத்துவக் கல்லூரியின் ஜூனியர் மாணவர்களின் விடுதிப் பிரிவில் தடதடவென சப்தம்.

பசங்கள் பெர்முடாலும் பனியனுமாய் அறை அறையாய் தட்டி...

அங்கே பயத்துடன் எண்ணெய் வழிந்து படுக்கையுடன் லுங்கியையும் வாரிச் சுருட்டி எழுந்தவர்களை அள்ளிக்கொண்டு ஜிம்மிற்கு வந்தனர்.

தூரத்தில் ரயிலின் தடக் தடக் கட்டிடத்தில் எதிரொலித்த்து. மெஸ்ஸிலிருந்து பொங்கல் வாசம். ஜிம்மில் சதைப் பிடித்தவர்களும் சதையைப் பிடிக்காதவர்களும் சாகசம். மைதானத்தில் பசங்களின் ஜாக்கிங். அங்கிருந்து பெண்கள் விடுதிக்குக் கண் தூது.

நம்மாளு வர்றாளா... தென்படறாளா...

சுந்தர் பைக்கின் மேல் அமர்ந்துகொண்டு மீசை துளிர்த்த துவண்ட், மிரண்ட புதியவர்களை. ” “ஏய், கண்ணுங்களா வரிசையாய் நில்லுங்க.” என்று அன்பொழுக விரட்டினான்.

அவர்களுக்கு ஏற்கெனவே காலை நேரத்து வயிறு கலக்கல். அத்துடன் ‘ராகிங்’ என்பதும் புரிய... இவர்கள் நம்மை என்ன செய்யப் போகிறார்கள்...? மருத்துவமே வேணாம் என ஓடிரலாமா? என்கிற அச்சத்தில் அவர்களுக்கு மூ... முட்டியது.

அதிகாலையிலேயே வியர்ப்பு... இவர்கள் என்ன செய்வார்கள்? அடிப்பார்களா? விரவில் ஊசி? பேப்பர்களில் படித்திருக்கிறோமே. நிர்வாணமாய் ஓடவிடுவார்களா? தரையில் நீச்சடிக்கச் சொல்வார்களா? சீனியர் பெண்களிடம் போய் ஜ லவ் யூ சொல்லச் சொல்வார்களா? துணி துவைத்து. இஸ்திரி போடனுமா?

“ஏய், இவங்களை என்ன பண்ணச் சொல்லலாம்? ” ஜானி கோட்டான்.

“போடா ஒன்பது! தம்பிகளுக்கு வித்யாசமாய் புதுமையாய் ஒரு பயிற்சி.”

“பயிற்சியா...?”




 தங்கத் தாமரைப் பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:26 pm


“ஆமாம். விடலைப்பசங்கள். வெறும் படிப்பு படிப்புன்னு புத்தகப் புழுவாய் இருந்தால் எப்படி? வெளி உலகம் தெரிய வேணாம்? நாளைக்கு அப்புறம் எப்படி வெளியே வேலைக்குப் போறது, குடும்பம் நடத்தறது? எங்கே போனாலும் முன் அனுபவம் கேட்பாங்களே... கல்யாணத்துக்கம்! ஹா..ஹா...”

பசங்கள் எதுவும் விளங்காமல் ஒருவரை ஒருவர் பாத்துக் கொண்டனர். இந்தக் காலேஜிலும், ஹாஸ்டலிலும் ராக்கிங் கிடையாதுன்னு சொன்னாங்களே! அதை நம்பித்தானே இங்கே சேர்ந்தோம்?

இந்த வார்டன் எங்கே போய் ஒழிந்தான்?

ஜானி அருகில் கிடந்த குப்பையைக் காட்டி, “கூட்டுங்கடா!” என்றான்.

ஆஹா! இவ்ளோதானா... என்று சந்தோஷத்துடன் அவர்கள் குனிந்து கைகளால் அவற்றைச் சேர்த்துக் குவித்தனர்.

“ஆச்சா?”

“ஆச்சுண்ணா!”

“ஏய்... நான் என்ன சொன்னேன்... நீ என்ன பண்ணியிருக்காய்...ம்?”

“கூட்டி”

“இதான் கூட்டின லட்சணமா?” என்று ஒருவனுக்குப் பிடரியில் விழுந்த்து. அவன் மிடறு விழுங்க. “ஒண்ணு... ரெண்டு... மூணுன்னு மொத்த பேப்பரையும் கூட்டிச் சொல்றா!”

அவன் வெறுப்புடன் கூட்டி... “இருப்பது நாலு சார்!” என்று மிடறு விழுங்கினான்.

“அய்.... அய் சார்ன்னா விட்டிருவோமா! இதுக்கே அசந்துப்போனா எப்படி? சரி விமலுக்கு அஞ்சு மார்க். ஏய் பசங்களா! இதிலிருந்து என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க?”

அவன்கள் விழிக்க....

“எண்ணத் தெரிஞ்சுக்கிட்டீங்கள்ல... அதுக்காகச் சந்தோஷப்படுங்க. அப்புறம் வேறு என்ன கத்துக்கிட்டீங்க.”

“ஏதுவுமே எங்களுக்குப் புரியலே!”

“ஆங்! அது புரியாதது... தெரியாத்து... விளங்காத்து... வினையானதுன்னு எல்லாத்தையும் விளங்க வைக்கத்தான் இந்த ப்ரேடு! இந்தச் சம்பவம் மூலம் உங்களுக்கு ஒரு கருத்துச் சொல்லனும்!”

“அடச்சீ! அனத்தாம சொல்லுடா!” பயில்வான் கணேஷ் பிளிறினான்.

“நமக்குச் சுற்றுப்புறச் சுகாதாரம் முக்கியம். டிசிப்லின் முக்கியம். கண்ட கண்ட இடங்கள்ல காகிதங்களையும். உபரிகளையும் போடலாமா? அத்துக்குன்னு அங்கங்கே வெச்சிருக்கிற குப்பைக் கூடைகளில் போடணும் புரிஞ்சுதா?”

“ஓ... நல்லா புரிஞ்சுது.”

“அதனால இப்போ என்ன பணறீங்க...?”

“அதை எடுத்து குப்பைக் கூடையில...” தினேஷ் குனிய. “ஏய். அதிகப் பிரசங்கி. ஒங்கிட்டச் சொன்னோமே... இன்னும் தலைவர் முடிக்கவேயில்லே.... அதுக்குள்ளே இன்னாடா அவசரம்? குறமாசத்துல பொறந்தவனா நீ...”



 தங்கத் தாமரைப் பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:26 pm

3

“ஸாரி, என்ன செய்யணும்... சொல்லுங்க!”

பசங்க கொஞ்சம் பயத்துடன் கேட்க, “குட்பாய்!” என்று தீப்பெட்டி ஒன்றை தீட்டினான். “வேஸ்ட்களால கிருமிகள் உருவாகும். அவைகள் கோடிக்கணக்கான உயிர்களை பலி வாங்கிடும். தசாவதாரம் பார்க்கலே நீங்க?”

“பார்த்தேங்க...”

“நல்லது. பத்தவை...”

அவன் குனிந்து தீக்குச்சி எடுத்து உரசி உரசிப் பார்க்க வழுவிற்று.

நமுத்த பெட்டி, பயத்துடனும் படபடப்புடனும் குச்சிகளை ஒவ்வொன்றாய் கொளுத்திப் பார்த்து மூக்குக் கீழ் வியர்த்தான்.

“பச்! பொருளாதார நஷ்டம் போகட்டும்! இந்தா லைட்டர் பத்தவை”

“அவன் தயங்க, “சிகரெட் படிப்பியா நீ?”

“ம்கூம்...”

“பிடிக்கலேன்னா கீழே விழுந்திருமேடா... ஹா...ஹா ம்... நடக்கட்டும்!”

அவன் அசௌகர்யத்துடனும் அவநம்பிக்கையுடனும் கிளிக் குப்பை பற்றிக் கொண்டது. குப்பை கொழுந்துவிட்டு எரிய...

“என்னடா இது?”

“எது”

“எரியுதே இது!”

“வந்து... தீ, பயர்!”

“கரெக்ட் பயர் வந்தா என்ன பண்ண்ணும்?”

“அணைக்கணும் சார்...”

“எப்படி?”

“மணல் போடலாம்...”

“இங்கே மணல் இல்லையே அப்புறம்?”

“தண்ணி ஊத்தலாம்!”

“ஹாஸ்டல்ல ரொம்ப தண்ணிப் பஞ்சம்! அப்புறம்?”

“அப்புறம்... அப்புறம்...” என்று அவர்கள் தலை சொறிந்தனர். இனிமே ஞாயிற்றுக்கிழமை இங்கே இருக்கக் கூடாதுப்பா, ஊருக்கு ஓடிரணும். இந்த வார்டன் எங்கே போய் ஒழிந்தார்? ”

“ஏய், சீக்கிரம் யோசிங்கடா, குப்பைல வைரஸ் கீது. அது எரியுது. அந்த காத்து பரவினா நமக்குல்லாம் ஆபத்து நமக்குன்னு இல்ல... இந்த கத்து பக்கமே காலியாயிடும் இப்போ உடனே இதை அணைச்சாகணும். க்விக்... க்விக்... என்ன செய்வீங்க!”

“தெரியல சார்!”

“என்னடா தெரியல... ம்? தசாவதாரம் பார்த்தேன்னு சொன்னியே, அதுல கிருமியை அழிக்க என்ன பண்ணாங்க?”

“வந்து, ஸோடியம் குளோரைடு!”

“தம்பி, நீ கரீக்ட்டு கம் ஆன். க்விக். ஆகஷன்!”

“சோடியம் குளோரைடு. எங்கிட்ட இல்லியே... போய் மெல்ல எடுத்து வரட்டா?”

“அதுக்குள்ளே கிருமி பரவிரும்!”

“அப்போ என்ன செய்யறத?”

“ஏண்டா கைல வெண்ணெயை வச்சுக்கிட்டு எவனாவது நெய்க்கு அலைவானா... தசாவதாரத்துல கிருமி எப்படி அழிஞ்சது?”

“சுனாமி, கடல் தண்ணி. ஆனா இங்கே கடல் எது?”

“மடையா, மடையா... குடம் குடமா உங்கக்கிட்டேயே இருக்கேடா!”

“எங்கக்கிட்டயா...யூ மீன் யூரின்?”

“யெஸ்.. யெஸ்... ம்... சீக்கிரம்!”

“அய்யோ... ஓப்பனாவா?”

“பயர் ஓப்பன்லதானே! ஓப்பனாதான் அணைக்கணும்!”

அதற்குள் பின்பகுதியில்...“வார்டன்” என்று கிசுகிசுப்பு கேட்டது.

சீனியர்கள் பிரஷ்சும் பற்சையுமாய் பாத்ரூமிற்குள் நழுவ, அங்கே, ஜானி, கணேஷ் மட்டும் பாக்கியிருந்தனர்.

“என்னடா திங்கிங்? அதிகாலைதானே டேங்க் புல்லாதானே இருக்கும். பைப்பைத் திறந்து பீச்சுங்கடா! ஏய், யார்றாது என் தோள்ல கை போடறது?”

சுந்தர் திரும்பிப் பார்த்து, “ஓ... வார்டனா?”

“ஆமாம். போதும் விடுங்கப்பா! பசங்க ரொம்பவே மிரண்டுட்டானுங்க!” சுரேஷ் சொல்ல...





 தங்கத் தாமரைப் பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:27 pm

ஜானி அவனது கையைத் தட்டிவிட்டு, “த பாரு... நீ புதுசு. உன்னை வார்டனாக யாரும் இன்னும் ஏத்துக்கவே இல்லை. பார்த்தா படிக்கிற பையன் மாதிரி இருக்கே. அப்புறம் எப்படி நாங்க!”

“பரவாயில்லே. நானும் சீனியர்னு நினைச்சுக்கோ. பாவம், அவனுங்களை விட்டிரு. பசங்களா, நீங்க போங்க!”

“சரி அவங்க போகட்டும். நீ இதை அணைச்சிரு!”

“ஓயெஸ்” என்று சுரேஷ் தன் செருப்பால் அந்தத் தீயை நசக்க.. காகிதக் கறுப்புத் துகள்கள் காற்றில் பறந்தன.

சுந்தருக்க பசங்கள் தப்பிவிட்ட ஆத்திரம். அவர்கள் முன்னில் அவமானமாயிற்று. பற்களை வேகவேகமாய் பிரஷ் செய்தபடி நகர்ந்தான். இந்தாளுக்கு இருக்கு ஆப்பு! எப்படி எங்கே கவிழ்க்கலாம் என அவனது மனது சிந்திக்க ஆரம்பித்தது. சுரேஷ் முன்பு படிக்கிற நாட்களில் ரொம்ப சுமார் ரகம்.

ஒல்லிப்பிச்சான்! அப்பாவி தோற்றம். கல்லூரிக்கு நுழைந்த புதிதில் ராக்கிங்குக்குப் பயந்து ஹோட்டலில் தங்கி அப்பாவிற்குத் தண்டச் செலவு வைத்த்தை அவன் இன்னும் மறக்கவில்லை.

ஒரு மாதம் ராக்கிங் சீசன் முடிந்ததும் ஹாஸ்டலில் போராடி இடம் பிடித்து ஒட்டிக் கொண்டான். ராக்கிங் என்பது பொழுதுபோக்காக இருந்து விட்டால் பரவாயில்லை. சித்ரவதையாகும் போது லேசான மனது படைத்தவர்கள், கிராமத்திலிருந்து படித்து முதன்முதலில் நகரம் பார்ப்பவர்களுக்கு அது நரகம்.

மெடிக்கலே ணோம் என்று ஓடுபவர்கள் உண்டு. பயத்தில் நெஞ்சு துடிப்பு நிற்பவர்கள், மனம் வெறுத்து தற்கொலைக்குச் செல்பவர்கள் என பல ரகம் உண்டு. அந்த மாதிரி எதுவும் இங்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் சுரேஷ் உறுதியாயிருந்தான். அதில் ஜூனியர்களுக்கு அவன் பேரில் மரியாதை என்றாலும் வட, சீனியர்களுக்குக் கொலை வெறி! எங்கே மாட்டுவான் என்று காத்திருந்தனர்.

ஹாஸ்டலிலிருந்து கிளம்பினால் பசங்கள் நேராய் வகுப்புகளுக்குச் செல்வதில்லை.

அறையிலிருந்து ரொம்ப நேரத்திலேயே கிளம்பி மைதானம். அங்கே புல்வெளி, காதல் மரம் எனக் காத்திருத்தல்.

பிடித்த மாணவிக்கு சிக்னல். அவள் வேண்டுமென்றே சிக்னலை கிராஸ் பண்ணுவாள். உடன் அவளைக் கவர வழிசல்கள்!

“உனக்கு இந்த்த் தாவணி நல்லாருக்கு!” கண்டுக் மாட்டார்கள். “இந்த ஹேர் ஸ்டைல் பிரமாதம். பின்னிட்ட போ!”

“கீதா, நீ எங்கே அழகிப் போட்டிக்குக் கிளம்பிட்டியா?”

“ஏய், போதும், போதும் என்ன வேணும் இப்போ?”

“அப்பா, மடைதிறந்தாயே அதுவே போதும்.”

“அது போதுமில்லே... ஆளை விடு!”

“இல்லை டியர்... வந்து...” அவனுக்குத் தலை அரிக்கும். அவளக்குப் புரியும். திரும்பிக்கொண்டு புன்சிரிப்பாள். புத்தகத்தை இறுக்கிக் கொண்டு வாட்ச்சை பார்ப்பாள்.

“கிளாஸ்க்கு இன்னும் டையமிருக்கு!”

“நான் லைப்ர்ரி போகணும்!” என்று பாதம் மாறுவாள்.

“நல்ல பழக்கம். நாங்கூட அங்கேதான்!”

“ஈக்கு என்ன வேலை கொல்லம்பட்டரையில?”

“ஹா...ஹா...”

அவளுக்குப் புரியும். எதற்கு அவன் வழிகிறான் என்று. ஆனாலும் கூட அலைய வைக்க மனது அலையும். போய்த் தொலைகிறான் என்று விடுவதில்லை.

“நான் ஊருக்குப் போன் பண்ணிட்டு அப்புறம்தான் லைப்ர்ரி.”

“போனா... அதுக்கு எதுக்கு காம்பவுண்ட் கடக்கணும்? இந்தா என் செல்லில்....”



 தங்கத் தாமரைப் பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:27 pm

அவள் முறைப்பாள்.

அவன் “ஸாரி.... ஸாரி... மொபைல்ல காசில்லை. ரீசார்ஜ் செய் மறந்துட்டேன்!” என்று தலையில் தட்டிக்கொள்வான்.

அவளுக்கு நன்றாகத் தெரியும் எங்கே வருகிறான் என்று! ஆனாலும் கூட கழுக்கம். அதில் ஒரு சந்தோஷம் அவர்களுக்கு.

“காசில்லா செல் எதுக்காம்?”

‘எல்லாம் ஒங்களாலதாண்டி... மிஸ்டு கால் கொடுத்துக் கொடுத்தே எங்களைச் செல்லாக் காசாக்கிடறீங்களே’ என்று சொல்ல நினைத்து ஹி...ஹி.. என்பான்.

“இப்போ என்னதான் வேணும்.... சொல்லேன்!”

“வேறு என்ன... கைமாத்து ஐநூறு ரூபா!”

“முன்னே ஐநூறு கொடுத்த்து?”

“எதுக்குச் சில்லரை மொத்தமா ரவுண்ட் பண்ணி ஆயிரமாக்கிடலாமே!”

“ஒரு பொம்பளைகிட்ட கைநீட்டறதுல வெட்கம். மானம்...?”

“சூடு, சொரணை.... அய்ய்ய்யே... அதெல்லாம் நமக்கெதுக்கு?”

“இப்போ எதுக்கு இத்தனை வழிசல்?”

“பணம்!”

“அதான் எதுக்குன்னேன்? தண்ணிக்கா இல்லை தம்மா?”

“சேச்சே... அதுக்குத்தான் தோழினி இருக்காளே! இது செல் ரீசார்ஜ்க்கு!”

“நான் பண்ணிர்றேன். நம்பர் கொடு!”

“உங்ககிட்ட இருக்குமே. நீ மிஸ்ட் கால் பார்ட்டியில்லியே! இந்தா குறிச்சிக்கோ. ஆனாலும்கூட நீ மோசம்.”

“ஏன்? கேட்டவுடனே காசு தர்றதினாலயா?”

“எங்கே கொடுத்தாய்? என்மேல நம்பிக்கையில்லாம ரீசார்ஜ் பண்றேன்கிறாய். கையில காசு கொடுத்தா என்னவாம்?”

“எனக்குத் தெரியும். நீ ரீசார்ஜ் பண்ணக் கிளப்புக்கு போவாய்னு. அங்கே சீட்டு ஆட்டம். பாட்டம்”

“சீச்சீ... அங்கே மனுஷன் போவானா டார்லிங்! உனக்கு என் பேர்ல கொஞ்சங்கூட கருணை இல்லை.”

வார்த்தைகளில் கெஞ்சல் கொஞ்சும்.



 தங்கத் தாமரைப் பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:28 pm

4

“நீயெல்லாம் படிச்சு டாக்டராகி எவனெவன் உயிரை எடுக்கப் போறியோ தெரியல!” கலா அவனிடம் பொய்க்கோபம் காட்டினாள்.

“அப்போ குடுத்திடு.. மறக்காம கணக்கு வச்சுக்க!”

“இங்க பணமில்லை. ஹாஸ்டலுகு சாயந்திரம் வா!”

‘அதான் தெரியுமேங்கடி.. அங்க வந்து லோ லோன்னு நாங்க காவல் காக்கணும். நீங்க ஆடி அசைஞ்சு வந்து தருவீங்க. எல்லாம் திமிருடி!’

“ஏய், என்ன முறைக்கிறே! காசு வேணாமா?”

“வேணும் வேணும். பைக்கோட பொழுது சாய வந்துடறேன்.”

“பைக் எதுக்காம்?”

“சினிமா... உனக்கும் லிப்ட்...”

“உதைப்படுவே...”

இதெல்லாம் நிரந்தர... காட்சிகள். காலம் மாறினாலும் கோலங்கள் மாறவில்லை. பெண்களும் அதே... அதே... மாணவர்களும் அப்படியப்படியே!

வழியில் நின்று சைடாய் ஜொள் விடும், கடலைப் போடும். ஸ்டைல் பண்ணும், பைக் உறுமவிடும் மாணவர்களை சுரேஷ் கண்டுகொள்வதில்லை.

அதில் ஒரு சந்தோஷம், த்ரில்! சந்தோஷிக்கட்டுமே!

சுரேஷ் என்னத்தான் ஆத்மார்த்தமாய் சிரத்தையுடன் வகுப்புகள் எடுத்தாலும் கூட மாணவர்களின் கண்ணோட்டத்தில் அவன் வார்டன. சந்தோஷத்துக்கு துரோகி. இடைஞ்சல் பேர்வழி.

அவன் புதிது என்பதாலும் ஹாஸ்டலில் பொறுப்பு இருப்பதாலும் அதிகமாய் அசைன்மெண்ட் கொடுக்கப்படவில்லை. சீனியர்கள் வராமல் போகும்போது அழைப்பார்கள்.

கண்டிப்பும் கறார்த்தனமும் பல காரியங்களில் தேவையாய் இருக்கின்றன. பசங்கள் விஷயத்திலும் கூட அப்படித்தான். இல்லாவிட்டால் பிரித்து மேய்ந்துவிடுவர்.

கல்லூரி நாட்களும் அந்தப் பருவமும் இன்னும் நினைவில் மிச்சம் இருப்பதால் சுரேஷ் அவர்களை அதிகமாய் துன்புறுத்துவ தில்லை. மாணவப் பருவம் சிறப்பான எதிர்காலத்திற்குப் பயிரடப்படும் தருணம் இது. குசும்பும் விளையாட்டும் அளவோடு இருந்தால் ரிசிக்கலாம். அதிகமாகிவிடும்போது வெறுப்பாகிவிடும்.

“இங்கே கற்றல்தான் பிரதானம். அப்படி ஒரு மனநிலை இல்லாதவர்கள் படிப்பு வேண்டாம் என்பவர்களை நாம் வற்புறுத்த விரும்பவில்லை. இங்கே வந்திருப்பது அட்டென்டென்ஸிற்காகத் தான் என்றால் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். ப்ராக்ஸி இல்லாமலே நானே ஃபுல் அட்டென்டென்ஸ் கொடுத்து விடுகிறேன். மார்க் போகும் எனப் பயப்பட வேண்டியதில்லை. படிக்க விருப்ப்ப்படுபவர்களுக்கு இடைஞ்சல் பண்ணாமல் வெளி போய் உலாத்தலாம்” என்பான்.

இப்போது அவன் சொல்லி வாய் மூடும் முன்பு கணேகம் ஜானியும் எழுத்து. “ரொம்ப தாங்க்ஸ் வார்டன்!” என்று புத்தகத்தைப் உருட்டிக் கொண்டு நடந்தனர்.

வாசல்வரை போன ஜானி திரும்பி வந்து. “எம்.டி.எஸ். படிச்சுட்டு எதுக்காக சார் வாத்தியார் வேலை? பேசாம கிளினிக் வைக்கப் பிழைச்சுக்கக் கூடாதா?” என்றான்.

உடன் வகுப்பிற்குள் சிரிப்பு அதிர்ந்தது. இந்தக் கேள்வி, கேலி, கிண்டல் எல்லாம் பழகிவிட்டதால் அவனுக்குக் கோபம் வரவில்லை. அத்தனை பேரும் மகிழ்ந்து. பிறகு சுரேஷ் பார்க்கிறானே என்று குனிந்துகொள்ள, அவர்களுக்கிடையே அப்போது எந்தச் சலனமுமில்லாமல் இருந்த சுஷ்மா அவனத கவனத்தை ஈர்த்தாள்.

அவளைக் கவனித்த பின்பு பசங்களின் கலாட்டாக்கள் அவனுக்குப் பெரிதாய் தெரியவில்லை. மின்னும் பொன்னாகி. ஒளிரும் நட்சத்திரமாக ஜொலிக்கும் வைரமாயிருப்பவளின் முகத்தில் மட்டும் ஏன் அத்தனை சோகம்?



 தங்கத் தாமரைப் பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக