புதிய பதிவுகள்
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
297 Posts - 42%
heezulia
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
உறவுப் பாலம்! Poll_c10உறவுப் பாலம்! Poll_m10உறவுப் பாலம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுப் பாலம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 12:53 am

ஓட்டமாய் ஓடுவது தான், இன்றைய வாழ்க்கை முறையா...' என்று ஜகதீஷ் கேட்டது, அருணுக்கு மறுபடி நினைவுக்கு வந்தது.

'எல்லாரும் தான் வெற்றியை நோக்கி ஓடுகிறோம்; எல்லா பாடத்திலும் நூற்றுக்கு நூறு, ஆசைப்பட்ட தொழிற்கல்வி, வேலை, காதல், வீடு, கல்யாணம் என்று, ஏதோ ஒன்று நம்மை ஓட வைக்கிறது. ஆனால், அந்த ஓட்டத்தை நேர்மையாக, ரசனைக்குரியதாக நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். முடிந்தவரை பொய் சொல்லாமல், நல்லெண்ணங்களுடன், பெருந்தன்மையுடன் இருப்பது என்று, நம்மை நாமே மதிப்புடன் வைத்துக் கொள்ள முடியும்...' என்ற போது, ஜகதீஷ் நம்பவில்லை.
இன்று அவனே தேடி வந்தான்.

''அருண்... நிஜமாகவே நீ கிரேட் தான்...'' என்றான் புருவம் உயர்த்தி!
''என்னப்பா திடீர் கண்டுபிடிப்பு...'' என்று சிரித்தான் அருண்.

''நம் கம்பெனியோட டிரஸ்ட் வேலைகளை நீ தான் பாக்குறே...தினந்தினம் உதவி கேட்டு, எவ்வளவோ, மனுக்கள் வருது. அதுல நீ செலக்ட் செய்து சிபாரிசு செய்கிறவங்களுக்குத் தான், கம்பெனி கண்ணை மூடிக்கிட்டு, 'செக்' கொடுக்குது,'' என்றான்.

''இப்ப என்ன சொல்ல வர்றே...'' என்று கேட்டு, மறுபடியும் சிரித்தான் அருண்.

''அட.... ஒரு விஷயம் தெரிய வந்ததுப்பா... போன வாரம் ரெண்டு இளம் பெண்கள், சுயதொழில் செய்ற ஆர்வத்துல உதவி கேட்டு வந்திருக்காங்க. ஒருத்தி ரொம்ப அழகா, ஸ்மார்ட்டா இருந்தா.

இன்னொருத்தி அப்படி இல்ல; ரொம்ப குள்ளமா, அம்மைத் தழும்பு முகத்தோட சாதாரணமா இருந்தா. ரெண்டு பேரோட பிராஜக்ட்டும், 'பப்பாளி பார்மிங்' தான். அதனால, அழகான பெண்ணுக்குத் தான் அருண் சிபாரிசு செய்வார்ன்னு ஆபீஸ் முழுக்க பேச்சா இருந்தது...''

''அட... நெஜமாவா... இதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா,'' என்று, ஆச்சரியபட்டான்.
''ஆனா, நீ அந்த குள்ளமான பெண்ணுக்கு சிபாரிசு செஞ்சு, 'செக்' வாங்கிக் கொடுத்திருக்கே... அதனால, 'அழகுக்கு மயங்காத, அழகு வாலிபன் அருண்'ன்னு பேசிக்கிறாங்கப்பா,''என்றான்.
''ஆபீஸ்ல இன்னும் வேற என்னெல்லாம் பேசுறாங்க,''என்றான்.

''அதை அப்புறம் சொல்றேன்... ஏன் அந்த அழகான பெண்ணுக்கு சிபாரிசு செய்யல?'' என்று கேட்டான்.

''இது ரொம்ப சிம்பிள்... அழகான பெண் செய்யப் போற, 'பப்பாளி பார்மிங்' அழகு கிரீம் தயாரிக்கறதுக்கு! குள்ளமான பெண்ணோ, பெண்கள் சம்பந்தப்பட்ட உடல் வலிகளுக்கான மருந்து தயாரிக்கும் பாரம்பரிய மருந்து கம்பெனிகளுக்கு விவசாயம் செய்ய! ஆவணங்கள் எல்லாம் தெளிவா இருந்தது. அழகை விட ஆரோக்கியம் தான் முக்கியம். அதனால, பப்பாளி மருந்துக்கே, சிபாரிசு செய்தேன்,'' என்றான்.
வீட்டிற்குள் நுழைந்ததும், காத்திரு
ந்தவர் போல் அப்பா, ''அருண்... உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்,''என்றார்.

...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 12:54 am

''என்னப்பா?''
''உன் கல்யாண விஷயம் தாம்பா...''
''தெரியுமே... சொல்லுங்க,'' என்று காலுறையை கழற்றியபடி முறுவலித்தான்.

''இந்த முறை தரகரே பொறுமை இழந்துட்டார். '27 வயசு பையனுக்கு கல்யாணத்துக்கு வரன் பாக்கணும்... வாங்கன்னு கூப்பிட்டிங்க; வந்தேன். ஒரு ஆண்டு ஓடிப் போச்சு, இன்னும் நான் கொடுத்த வரன்களோட புகைப்படத்தைக் கூட பாக்கலே. இனி நான் வர மாட்டேன்; நீங்களே ஒரு முடிவுக்கு வந்த பின் கூப்பிடுங்க'ன்னு கோபமா சொல்லிட்டு போய்ட்டார். நீ ஏன் எந்த பதிலும் சொல்ல மாட்டேங்குறே... உன் மனசுல எந்தப் பெண்ணையாவது நெனச்சுக்கிட்டிருக்கியா?''என்று கேட்டார்.

'அப்படியெல்லாம் இல்லப்பா. இந்த மாசத்துக்குள்ள கண்டிப்பா சொல்லிடறேன்,''என்றான்.
அவர் ஏதோ முணுமுணுத்தபடி நகர்ந்ததும், அங்கே வந்த அம்மா, ''என்னப்பா... அப்பா என்ன சொல்லிட்டு போறார்,'' என்றாள்.

''கல்யாண விஷயத்த... தள்ளிப் போடறேன்னு அப்பாவுக்கு கோபம்மா,''என்றான்.
''நீ ஏன் கல்யாணத்த தள்ளிப் போடுறே... உன் கூட படிச்சவங்களுக்கு எல்லாம் குழந்தையே இருக்குது,'' என்றாள் அம்மா ஆற்றாமையுடன்!

''சரிம்மா இனிமே தள்ளிப் போடற வேலையே இல்ல. நீ போய் எனக்கு சுக்குக் காபி கொண்டு வா,'' என்று அவளை அனுப்பி, குளியலறைக்கு சென்றான்.

இரவு 7:00 மணி... மென்மையான காற்றும், தண்ணீரும் உடலின் வெம்மைக்கு இதமாக இருந்தது. சின்னக் கீற்றாக நிலவின் வருகை மனதை ஆசுவாசப்படுத்தியது.
குளித்து முடித்து, சுக்குக் காபி பருக தயாரானபோது, அம்மா போனில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

''என்ன சொல்றே கோகிலா... அப்படியா செய்றா உன் மருமக... மூணு மாசம் கூட ஆகலியே கல்யாணம் முடிஞ்சு... உன் வேலைய பாத்துட்டுப் போங்கன்னா சொல்றா... மூஞ்சில அடிக்கிற மாதிரி பேசுறாளா... அடடா நீ ரொம்ப சாதுவாச்சே...உன் மனசு தாங்காதே...''
அவன் அம்மா பேசுவதை நிதானமாக கவனித்தான்.

''அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் சமைச்சுக்குவாளாமா? நீயும், உங்க வீட்டுக்காரரும் தனியா சமைச்சுக்கணும்ன்னு சொல்றாளா... உன் முகத்தைப் பாத்து பேசறதில்லையா... பாத்தாலும் கடுகடுன்னு வெச்சுக்கறாளா...''

இதைக் கேட்ட போது, அவன் மனதில் கவலை சூழ்ந்தது.
''கண்ணன் - ராதா பேர் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டியே...''

அதற்கு மேல் கேட்க முடியாமல், அவன் பெருமூச்சு விட்டான். அம்மாவுக்கும், வரப் போகும் பெண்ணுக்கும் ஒத்துப் போவதை விட, ஒத்துப் போகாமல் இருப்பதற்குத் தான், ஆயிரம் காரணங்கள் உள்ளன. இரண்டு பேரும் எடுத்ததெற்கெல்லாம் கட்சி கட்டி நின்றால், அவன் நிலைமை என்னவாகும்? மனசுக்குள் இருக்கும் இந்த அச்சம் தான், அவனை திருமண பந்தத்தைத் தள்ளி வைக்கச் சொல்கிறதோ!

மாக்ஸ்முல்லர் பவனில் நடக்க இருக்கிற புத்தக வெளியீட்டு விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அம்மாவின் கணீர் குரல் சத்தமாகக் கேட்டது.

''வாம்மா ராதா... வா வா... அட கல்யாணத்துல பாத்ததை விட, இன்னும் அழகா ஆயிட்டேயே...'' கோகிலாம்மாவின் மருமகள் ராதாவை அம்மா வரவேற்றுக் கொண்டிருந்தாள்.
''என்னம்மா சாப்பிடற... பழங்கள் சாப்பிடுறீயா இல்ல சத்துபானம் தரட்டுமா,'' என்று அம்மாவின் குரலில் அன்பு ததும்பியது.

''அதெல்லாம் வேணாம் ஆன்ட்டி... உங்க வீட்டை கடந்து போகும் போதெல்லாம் தோட்டத்துல ஒரு மரத்துல மஞ்சள் பூ கிளையெல்லாம் பூத்திருப்பதை பாப்பேன். விதை இருந்தா, எடுத்து வைங்க; இத சொல்லிட்டுப் போகலாம்ன்னு தான் வந்தேன்,''என்றாள்.

''கட்டாயம் எடுத்து வெக்கிறேன்மா. நீ சாண்ட்விச் தோசை, குடை மிளகாய், பசலைக்கீரை போண்டான்னு, ரொம்ப ருசியா சமைக்கிறயாமே... கோகிலா சொன்னா. இப்படி புதுமையா சமைக்கிற பெண்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்,''என்றாள்.

''ஓ தாங்க்ஸ் ஆன்ட்டி.''
''உன் ரூம் அவ்வளவு அழகா, ஓவியங்கள், செடிகள்ன்னு இருக்காம்... நீ போடற உடைகள் கச்சிதமா, அம்சமா இருக்காம். கோகிலாகிட்ட சிரிச்ச முகமா இருக்கியாம்... அக்கறையா பேசறியாம், 'இப்படி ஒரு மருமக கிடைச்சது என் பாக்கியம்'ன்னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டா கோகிலா,''என்றாள்.

அந்தப் பெண், முகத்தில் ஏதேதோ உணர்வுகள் நிழலாடி போயின.
'' மாமியார், மருமகள்ன்னா எலியும், பூனையும் மாதிரின்னு சொல்வாங்க. அத, அம்மா - பெண் உறவு மாதிரி நினைக்கிற உன் மாதிரி இளம் பெண்கள நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு,'' என்று அவள் கை பற்றி சொன்னாள் அம்மா.

''எனக்கும் ஏதோ புரியற மாதிரி இருக்கு ஆன்ட்டி... அத்தை கிட்ட இனிமே இங்கிதமா, அன்பா நடந்துக்கணும்ன்னு தோணுது. ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி,'' என்று தழுதழுத்த குரலில் சொல்லி அகன்றாள் ராதா.

வியப்புடன் அம்மாவிடம் சென்ற அருண், ''என்னம்மா இது... அன்னிக்கு கோகிலாம்மாகிட்ட நீ பேசினத கேட்டேன். இந்த ராதா மீது ஒரே புகார் பட்டியல் வாசிச்சார் அவர் மாமியார். நீயும், 'என்கரேஜ்' செய்து பேசின. இப்ப என்னடான்னா இந்தப் பொண்ணுகிட்ட இப்படி அன்பைப் பொழியறே... என்னம்மா மேஜிக் இது...''என்றான்.
அம்மா பொறுமையாக அவன் முகம் பார்த்து புன்னகையுடன், சொன்னாள்...

''முடிஞ்ச வரைக்கும் நல்லதை மட்டும் பகிரலாம்ன்னு ஒரு எண்ணம்தாம்பா. எனக்கும் ஐம்பது வயசு ஆகுது; நல்லதை எப்படி உண்டாக்கலாம், கெட்டதை எப்படி குறைக்கலாம்ங்கிற அடிப்படை அறிவு இருக்காதா... கோகிலாவோட உடைஞ்ச மனசுக்கு வேண்டிய ஆறுதலை, அன்னிக்கு கொடுத்தேன். இன்னிக்கு, இந்தப் பெண்ணை தாராளமாவே பாராட்டி, மாமியார் மேல் மதிப்பை உண்டாக்கினேன்.

''வீட்டுல தான் என்ன செய்கிறோம்ன்னு அந்தப் பெண்ணுக்கு தெரியும். அது எவ்வளவு தப்புங்கிறதும் இப்ப புரிஞ்சிருக்கும். பெண்கள் பேசறது வெறும் புரளி, வம்பு மட்டும் இல்லப்பா. பாலம் கட்டுற பணியும் அதுல இருக்கு,'' என்று சொல்லி நிறுத்தி, ''உன் வேலைல, கடமை தாண்டிய ஒரு சமுதாய உணர்வும் இருக்குன்னு, நீ அடிக்கடி சொல்லுவ... உன்னைப் பெத்த அம்மாவுக்கு, அதுல கொஞ்சமாவது இருக்க வேண்டாமா கண்ணா...'' என்றாள் கனிவுடன்!

''ஓ.கே., மா.''
''எதுக்கு?''
''என் கல்யாணத்துக்கு,'' என்றான், அவன் மனநிறைவுடன்.

உ.சிவரஞ்சனி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 1:24 am

அருமையான கதை இது புன்னகை ..................... அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 14, 2015 6:05 pm

சூப்பருங்க நல்ல கதை.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



உறவுப் பாலம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉறவுப் பாலம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உறவுப் பாலம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக