Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
+8
ராஜா
mbalasaravanan
சதாசிவம்
சரவணன்
M.Jagadeesan
T.N.Balasubramanian
shobana sahas
சிவா
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
First topic message reminder :
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
வழக்கு விசாரணையின் முடிவில், ''ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தரவேண்டும். ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம். ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை போன்ற இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்'' என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திடீர் அதிரடி உத்தரவின் பின்னணி:
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர் என்.குமார் (30), கடந்த 2011 மே 2-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேன் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். அவரது வாரிசுதாரர்களுக்கு ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 100-ஐ நஷ்ட ஈடாக வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. கூடுதல் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரி குமாரின் மனைவி மல்லிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விபத்து நடந்தபோது குமார் ஹெல்மெட் அணியாததால் பலத்த தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்று காப்பீட்டு நிறுவனம் தனது பதில் மனுவில் தெரிவித்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
சாலை விபத்தில் குமார் உயிரிழந்ததால் அவரது குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவரது குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.20 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும்.
ஹெல்மெட் அணிவது எவ்வளவு அவசியம் என்பதை இவ்வழக்கு உணர்த்துகிறது. செய்த தர்மம் தலைதாக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்று தமிழில் சொல்லப்படுகிறது. தர்மம் தலையைக் காக்கிறதோ, இல்லையோ, ஹெல்மெட் அணிந்தால் அது நிச்சயம் தலையைக் காக்கும். ஆனால், பலரும் ஹெல்மெட் அணியாததால் விலைமதிப்பில்லா உயிரை இழக்கின்றனர்.
நகர சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வோரை தினமும் சர்வசாதாரணமாக காணமுடிகிறது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 6,419 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி பார்த்தால், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தமிழகத்தில் மட்டும் தினமும் 17 பேர் இறக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் 1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன. எனவே, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களும் தங்களை மட்டுமல்லாமல், அவரவர் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் செல்வோரிடம், வெறுமனே அபராதம் மட்டும் விதிப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அதனால், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமாகும்.
இந்த உத்தரவை காவல்துறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. இருசக்கர வாகன ஓட்டிகளை காவல்துறையினர் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதாகவோ அல்லது ஊழல் செய்வதாகவோ புகார் வந்தால், அதுகுறித்து உயர் காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 206-ன்படி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் முடக்கப்படும். பின்னர், ஐஎஸ்ஐ முத்திரையிட்ட ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை காட்டிய பிறகு ஆவணங்கள் திருப்பித் தரப்படும் என்று வரும் 18-ம் தேதிக்குள் ஊடகங்கள் வாயிலாக உள்துறை முதன்மை செயலாளரும், காவல்துறை தலைவரும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு விளம்பரம் செய்யாவிட்டால், உள்துறை செயலாளரும், காவல்துறை தலைவரும் வரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மோட்டார் வாகன சட்டப்பிரிவு 129-ஐ மீறுவதாக இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம்.
முக்கிய சாலை சந்திப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வோரைக் கண்காணித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
துண்டுப்பிரசுரம், குறும்படம்
ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை துண்டுப் பிரசுரங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை வரும் 19-ம் தேதி அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
வழக்கு விசாரணையின் முடிவில், ''ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தரவேண்டும். ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம். ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை போன்ற இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்'' என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திடீர் அதிரடி உத்தரவின் பின்னணி:
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர் என்.குமார் (30), கடந்த 2011 மே 2-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேன் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். அவரது வாரிசுதாரர்களுக்கு ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 100-ஐ நஷ்ட ஈடாக வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. கூடுதல் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரி குமாரின் மனைவி மல்லிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விபத்து நடந்தபோது குமார் ஹெல்மெட் அணியாததால் பலத்த தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்று காப்பீட்டு நிறுவனம் தனது பதில் மனுவில் தெரிவித்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
சாலை விபத்தில் குமார் உயிரிழந்ததால் அவரது குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவரது குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.20 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும்.
ஹெல்மெட் அணிவது எவ்வளவு அவசியம் என்பதை இவ்வழக்கு உணர்த்துகிறது. செய்த தர்மம் தலைதாக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்று தமிழில் சொல்லப்படுகிறது. தர்மம் தலையைக் காக்கிறதோ, இல்லையோ, ஹெல்மெட் அணிந்தால் அது நிச்சயம் தலையைக் காக்கும். ஆனால், பலரும் ஹெல்மெட் அணியாததால் விலைமதிப்பில்லா உயிரை இழக்கின்றனர்.
நகர சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வோரை தினமும் சர்வசாதாரணமாக காணமுடிகிறது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 6,419 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி பார்த்தால், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தமிழகத்தில் மட்டும் தினமும் 17 பேர் இறக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் 1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன. எனவே, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களும் தங்களை மட்டுமல்லாமல், அவரவர் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் செல்வோரிடம், வெறுமனே அபராதம் மட்டும் விதிப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அதனால், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமாகும்.
இந்த உத்தரவை காவல்துறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. இருசக்கர வாகன ஓட்டிகளை காவல்துறையினர் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதாகவோ அல்லது ஊழல் செய்வதாகவோ புகார் வந்தால், அதுகுறித்து உயர் காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 206-ன்படி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் முடக்கப்படும். பின்னர், ஐஎஸ்ஐ முத்திரையிட்ட ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை காட்டிய பிறகு ஆவணங்கள் திருப்பித் தரப்படும் என்று வரும் 18-ம் தேதிக்குள் ஊடகங்கள் வாயிலாக உள்துறை முதன்மை செயலாளரும், காவல்துறை தலைவரும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு விளம்பரம் செய்யாவிட்டால், உள்துறை செயலாளரும், காவல்துறை தலைவரும் வரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மோட்டார் வாகன சட்டப்பிரிவு 129-ஐ மீறுவதாக இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால், விசாரணைக்குப் பிறகு ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம்.
முக்கிய சாலை சந்திப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வோரைக் கண்காணித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணைக்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
துண்டுப்பிரசுரம், குறும்படம்
ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை துண்டுப் பிரசுரங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை வரும் 19-ம் தேதி அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் விற்பனையாகும் ஹெல்மெட் அணிவதே ஆபத்தானது என்று நினைக்கிறேன்! ஹெல்மெட்டை கையாலே வளைத்து ஒடித்து விடலாம் பொலிருக்கிறது. அதன் தரம் அவ்வளவு கேவலமாக உள்ளது. இவ்வாறான ஹெல்மெட் அணிந்த ஒருவர் கீழே விழுந்தால் அந்த உடைந்து மண்டையைக் கிழித்துவிடும்.
மேலும் காவல்துறையினர் பிரத்யேக வருமானத்திற்கும் இந்த உத்தரவு வழிவகை செய்துள்ளது!
மேலும் காவல்துறையினர் பிரத்யேக வருமானத்திற்கும் இந்த உத்தரவு வழிவகை செய்துள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
இது ஓரளவிற்கு உண்மை போல தெரியுது...embedded.kannan wrote:இந்த ஆண்டு ஹெல்மெட் விற்பனை இலக்கை அடைந்தவுடன் ஹெல்மெட்
சட்டம் கண்டிப்பாக அணியும் தூங்கி விடும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1143030embedded.kannan wrote:இந்த ஆண்டு ஹெல்மெட் விற்பனை இலக்கை அடைந்தவுடன் ஹெல்மெட்
சட்டம் கண்டிப்பாக அணியும் தூங்கி விடும்.
இது தான் உண்மை ஆனால் நெல்லையில் ஹெல்மெட் கட்டாயம் ஆனால் எல்லோரும் 200 ரூபாய்க்கு தரம் குறைந்த ஹெல்மெட் வாங்கி அணிகிறார்கள், இதுவே ஒரு பாதுகாப்பற்ற தன்மை தான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
இதுல யார் ஹெல்மெட் போடணும்?......எதிரே வரவங்களா?............... ...
.
.
.
இந்தியாவில் போடும் எந்த ரூலும், மக்களை நல்வழிப்படுத்த அல்ல.............யாரையோ திருப்த்தி படுத்த ..........கசப்பான உண்மை
.
.
.
உட்கார்ந்திருக்கும் கும்பல் போறாது என்று bag க்குள் கூட ஒரு குழந்தை.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1143129krishnaamma wrote:
இதுல யார் ஹெல்மெட் போடணும்?......எதிரே வரவங்களா?............... ...
.
.
.
இந்தியாவில் போடும் எந்த ரூலும், மக்களை நல்வழிப்படுத்த அல்ல.............யாரையோ திருப்த்தி படுத்த ..........கசப்பான உண்மை
.
.
.
உட்கார்ந்திருக்கும் கும்பல் போறாது என்று bag க்குள் கூட ஒரு குழந்தை.................
இவ்வளோ குழப்பதிலும் ஒருத்தர் அவர் பாட்டுக்கு வண்டி ஒற்றர் ..எப்படி தான் முடியுமோ தெரியல .......
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1143366shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143129krishnaamma wrote:
இதுல யார் ஹெல்மெட் போடணும்?......எதிரே வரவங்களா?............... ...
.
.
.
இந்தியாவில் போடும் எந்த ரூலும், மக்களை நல்வழிப்படுத்த அல்ல.............யாரையோ திருப்த்தி படுத்த ..........கசப்பான உண்மை
.
.
.
உட்கார்ந்திருக்கும் கும்பல் போறாது என்று bag க்குள் கூட ஒரு குழந்தை.................
இவ்வளோ குழப்பதிலும் ஒருத்தர் அவர் பாட்டுக்கு வண்டி ஒற்றர் ..எப்படி தான் முடியுமோ தெரியல .......
எதிரே வருபவர்கள் தான் பயப்படனும்.... .....டிராபிக் கான்ஸ்டபிள்கள் என்ன தான் செய்ய றாங்களோ தெரியலை................முதலில் இந்த மாதிரி குடும்பத்துக்கிட்டே (?) இருந்து லைசென்ஸ் , வண்டி எல்லாத்தையும் பிடுங்கணும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்..
ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மை மற்றும் பாதிப்பு குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழகம் மற்றும் புதுவையில் பொதுமக்கள் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அவசியம் குறித்து பதிவு செய்துள்ளனர். அதேசமயம் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பாதகம் குறித்தும் ஒருசிலரே கருத்து தெரிவித்துள்ளனர்.
வி.பவானி, இல்லத்தரசி, சிந்தாதிரிப்பேட்டை.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கணவர் வெளியே செல்லும் போதெல்லாம், ஒருவித பய உணர்வு ஏற்படும். போலீஸாரும் அபராதம் வசூலிக்க வேண்டுமே என்ற மனநிலையில் இல்லாமல் ஹெல்மெட் அணிவதையும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். மேலும் குடித்துவிட்டு ஓட்டுபவர்களால் விபத்துகளே நடக்கின்றன. எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், ரேஸ் விடுபவர்களை கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.ராஜா, புகைப்படக் கலைஞர், அயனாவரம்.
ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. அதே சமயம் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகள் ஹெல்மெட் அணிந்து தப்பிச் செல்வதால் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாமல் போய்விடுகிறது. ஹெல்மெட் அணிவதால் கழுத்து வலி, முதுகுவலி ஏற்படுகிறது.
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ரூ.150-க்கு விற்ற ஹெல்மெட்டுகள் ரூ.2500 வரை விலை ஏற வாய்ப்பு உள்ளது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். மொத்தத்தில் ஹெல்மெட் அணிவது 60% பாதுகாப்பானது. 40% பிரச்சினைக்குரியது.
டி.இந்துமதி, வியாபாரம், மவுண்ட் ரோடு.
ஹெல்மெட் அணிவது நம்முடைய உயிருக்குப் பாதுகாப்பானது. இன்று மரணம் ஏற்படுவதற்கு தலையில் ஏற்படும் காயம்தான் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, அரசாங்கம் சொல்லித்தான் இதை அணிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒவ்வொருவரும் தானாகவே முன்வந்து ஹெல்மெட் அணிய வேண்டும்.
எஸ். சுபாஷ், பொறியாளர், பாளையங்கோட்டை.
நீண்ட தூரத்துக்கு செல்லும்போது வேண்டுமானால் ஹெல்மெட் அணியலாம். ஆனால் பக்கத்து தெருவுக்கோ, அருகிலுள்ள கடைகளுக்கோ செல்வதற்கு ஹெல்மெட் அணிவது சிரமமாக உள்ளது. ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தக் கூடாது. வேண்டும்போது நாங்கள் அணிந்துகொள்வோம்.
என். வெள்ளத்துரை, தண்ணீர் கேன் விற்பனையாளர், நெல்லை.
ஹெல்மெட் அணிவது நல்ல விஷயம்தான். ஆனால் அதை கட்டாயப்படுத்தக் கூடாது. என்னை போன்ற தண்ணீர் கேன் விற்பனை செய்வோர் ஹெல்மெட் அணிந்து செல்லும்போது அருகில் வாகனங்கள் வரும்போது பக்கவாட்டில் மறைப்பதால் சிறுசிறு விபத்துகள் நேர்கின்றன. அலுவலகங்களுக்கு செல்வோர் ஹெல்மெட் அணிந்து சென்று அலுவலகத்தில் கழற்றி வைத்துவிடலாம். ஆனால், என்னைப் போன்றவர்கள் எப்போதும் அதை பாதுகாப்புடன் வைத்துக்கொண்டு அலைய முடியாது. இதுவரை நான் 3 ஹெல்மெட்டுகளை தொலைத்துள்ளேன். ஹெல்மெட் திருடர்களும் அதிகமாகிவிட்டார்கள். அடிக்கடி ஹெல்மெட் வாங்க முடியுமா?
ராஜசேகர், ஓய்வுபெற்ற ஊழியர், புதுச்சேரி.
புதுச்சேரியில் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளன. இவற்றை சரிசெய்யாமல் ஹெல்மெட் கட்டாயம் என்றால் என்ன செய்வது. முதலில் சாலையில் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்க நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.
ரமேஷ், மெக்கானிக், புதுச்சேரி.
ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டால் திருட்டு, கொலை, கொள்ளைதான் புதுச்சேரியில் அதிகமாகும். ஹெல்மெட் இல்லாமல் நடைபெறும் திருட்டு, வழிப்பறியை பிடிப்பதற்கே சிரமமாக உள்ளது. தற்போது ஹெல்மெட் அவசியம் என்றால் நிச்சயம் பாதிப்புதான். புதுச்சேரிக்கு கட்டாயம் தேவையில்லை.
லெனின், தேவதானம்பேட்டை, விழுப்புரம்
இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. நகரங்களில் இந்த உத்தரவின்மூலம் அனைவரையும் ஹெல்மெட் அணியவைக்கலாம், கிராமப்புறங்களில் ஓட்டுநர் உரிமமே இல்லாமல் உள்ளனர். முதலில் ஓட்டுநர் உரிமத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும் என் றார்.
ராஜா, ராணுவ வீரர், வேலூர்.
ஹெல்மெட் அணிவது நல்லதுதான். பயணத்தின்போது கண்ணில் தூசு, பூச்சிகள் விழாமல் இருக்கும். கண் துடைக்கும் நேரத்தில் விபத்து நேரும். ஹெல்மெட் அணிவது பாதுகாப்பானது. இதை போக்குவரத்து போலீஸார் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது.
சரவணகுமார், பொறியாளர், ராணிப்பேட்டை.
நீ்திமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. 2006-ம் ஆண்டு முதல் தவறாமல் ஹெல்மெட் பயன்படுத்துகிறேன். இரண்டு முறை விபத்தில் சிக்கினேன். அப்போதெல்லாம் ஹெல்மெட்தான் எனது உயிரை காப்பாற்றியது. எனவே ஆண், பெண் வித்தியாசமில்லாமல் இரு சக்கர வாகனம் பயன்படுத்துவோர் அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம்.
வேத தயாளநாதன், ஆசிரியர், வேலூர்.
ஹெல்மெட் அணியாமல் சென்றவர் விபத்தில் இறந்ததை நேரில் பார்த்ததுமுதல் நான் ஹெல்மெட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். ஹெல்மெட் அணிவதால் அசௌகரியமாக இருப்பதாக நினைத்தாலும், ஏதேனும் விபத்தில் சிக்கும்போதோ, வாகனத்திலிருந்து கீழே விழும்போதோ தலையைக் காப்பது ஹெல்மெட்தானே. எனவே ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்.
சுதர்சன், காளவாசல், மதுரை.
விபத்துகளின்போது நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது. போலீஸார் கட்டாயப்படுத்தித்தான் அதை அணிய வேண்டும் என்றில்லை. நாமாகவே முன்வந்து ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக, ஹெல்மெட் அணியாமல் நான் பைக் ஓட்டுவதில்லை. இப்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு மூலம், மற்றவர்களும் அணிய வேண்டிய ஒரு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். அதேசமயம் போலீஸார் இந்த உத்தரவை தவறாக அணுகக்கூடாது. ஹெல்மெட் அணியவில்லையென்றால் முதலில் எச்சரித்தும், இரண்டாவது முறை என்றால் அபராதம் விதிப்பதும் என்ற நடைமுறையை போலீஸார் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.
பிரவீண், காமராஜர்புரம், மதுரை.
ஹெல்மெட் அணிந்தால், பின்புறம் பக்கவாட்டில் வரும் வாகனங்களை எளிதில் பார்க்க முடியாது. இருந்தாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறேன். விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க இது உதவும்.
சசிப்பிரியா, அண்ணாநகர், மதுரை.
இது நல்ல உத்தரவு. ஹெல்மெட் அணிவதால் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. ஹெல்மெட் அணியும்போது உருவாகும் வியர்வை காரணமாக தலைவலி ஏற்படும். பின்னால் வரும் வாகனங்களின் ஹாரன் சத்தமும் கேட்க முடியாது. ஆனாலும் அதைவிட உயிரின் மதிப்பு பெரிது என்பதால், இதை வரவேற்கிறேன். அதேசமயம் போலீஸார் இந்த உத்தரவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது.
கார்த்திக், கல்லூரி மாணவர், திருச்சி.
மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணியவேண்டும் என்பதை வரவேற்கிறேன். ஹெல்மெட் போடவில்லையென்றால் போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். இது சரியான நடைமுறைதான். ஆனால், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது.
டி.ஆனந்த சுப்பிரமணியன், குருக்கள், தஞ்சாவூர்.
நான் கோயில் குருக்கள் என்பதால், அதற்கு ஏற்றபடிதான் தலைமுடி வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஹெல்மெட் அணியும்போது, ஒவ்வொரு முறையும் முடியை அவிழ்த்துப்போட்டுச் செல்வது சிரமம். ஆனால், வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது உயிருக்குப் பாதுகாப்பு என்பதால், சிரமம் இருந்தாலும் இச்சட்டத்தை நான் வரவேற்கிறேன்.
விஜய் மித்ரா, ஆங்கில மொழிப் பயிற்றுநர், தஞ்சாவூர்.
ஹெல்மெட் அணிவது அவசியம் என்பதை வரவேற்கிறேன். சில நேரங்களில் ஹெல்மெட்டுகளே விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன. ஹெல்மெட்டுகளில் ஹாரன் ஒலியைத் தடுக்கும் காது பகுதியும், கண் பார்வையைத் தடுக்கும் பக்கவாட்டுப் பகுதியும் மறு வடிவமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியம்.
கா.சுரேஷ்குமார், திருப்பூர்.
ஜூலை 1 முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற நீதிமன்ற உத்தரவை, வரவேற்கிறோம். இதை நாடு முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ள சூழ்நிலையை, எந்தளவுக்கு வரவேற்கிறோமோ, அதேயளவு அரசின் மதுபானக் கடைகளை மூடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தி ஹிந்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
அதில் ரசித்த பினூட்டங்கல் :
1. Tknithi
தன்னை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களாகவே உணர்ந்திருக்க வேண்டும்.அதுதான் 6 வது அறிவின் தன்மை.தீப் பொறி ஆறுமுகம் அவர்கள்," கைத்தடி வைத்திருக்கும் காந்தியடிகளின் சிலையில் காக்கை அவரின் கைகளில் உள்ள கைத்தடிக்கு அஞ்சி, அதில் எச்சம் போடாது.ஆனால் இந்த ஆறறிவு படைத்த மனிதனுக்கு, அதுவும் குறிப்பாகத் தமிழனுக்கு தனக்கு எது நல்லது எது கேட்டது என்பதைக் கூட அறியும் அறிவில்லை." என்று பொது மேடைகளில் பேசுவார். ஆனால் தன் பாதுகாப்புக்குக் கூட சட்டம் இயற்றவேண்டும் என்ற 6 வது அறிவற்ற நிலையுள்ளது. அது மட்டுமல்ல,இதில் படித்த கூட்டத்தின் பாராட்டுகள் வேறு.
இப்படிப்பட்ட 6 வது அறிவற்ற கூட்டம்தான் இந்த அரசுகளைத் தேர்ந்தெடுக்கிறது. அப்படியானால் இந்த அரசு எப்படிப் பட்டதாக இருக்கும்? காக்கையைக் காட்டிலும் அறிவற்றவர்களா மக்கள்? மது விலக்கும் இத்தகையதே.
1. Tknithi
தன்னை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களாகவே உணர்ந்திருக்க வேண்டும்.அதுதான் 6 வது அறிவின் தன்மை.தீப் பொறி ஆறுமுகம் அவர்கள்," கைத்தடி வைத்திருக்கும் காந்தியடிகளின் சிலையில் காக்கை அவரின் கைகளில் உள்ள கைத்தடிக்கு அஞ்சி, அதில் எச்சம் போடாது.ஆனால் இந்த ஆறறிவு படைத்த மனிதனுக்கு, அதுவும் குறிப்பாகத் தமிழனுக்கு தனக்கு எது நல்லது எது கேட்டது என்பதைக் கூட அறியும் அறிவில்லை." என்று பொது மேடைகளில் பேசுவார். ஆனால் தன் பாதுகாப்புக்குக் கூட சட்டம் இயற்றவேண்டும் என்ற 6 வது அறிவற்ற நிலையுள்ளது. அது மட்டுமல்ல,இதில் படித்த கூட்டத்தின் பாராட்டுகள் வேறு.
இப்படிப்பட்ட 6 வது அறிவற்ற கூட்டம்தான் இந்த அரசுகளைத் தேர்ந்தெடுக்கிறது. அப்படியானால் இந்த அரசு எப்படிப் பட்டதாக இருக்கும்? காக்கையைக் காட்டிலும் அறிவற்றவர்களா மக்கள்? மது விலக்கும் இத்தகையதே.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
2. Jey
நல்ல தீர்ப்பு . மக்கள் நலன் கருதும் தீர்ப்பு. ஹெல்மெட் போடாம போயி விபத்து ஏற்பட்டா தலையில் அடிபடும் , அது மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதனால் வரவேற்கவேண்டிய தீர்ப்பு . அதே நேரம் , சாலைகளை சரியாக பராமரிக்கவும் இதே நீதிமன்றம் உத்தரவிடலாமே , அது வருமுன் காப்பதாக இருக்குமே ..
நல்ல தீர்ப்பு . மக்கள் நலன் கருதும் தீர்ப்பு. ஹெல்மெட் போடாம போயி விபத்து ஏற்பட்டா தலையில் அடிபடும் , அது மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதனால் வரவேற்கவேண்டிய தீர்ப்பு . அதே நேரம் , சாலைகளை சரியாக பராமரிக்கவும் இதே நீதிமன்றம் உத்தரவிடலாமே , அது வருமுன் காப்பதாக இருக்குமே ..
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
3.ஆர். வரதராஜன்
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துகளுக்கு காரணமாக உள்ள பிற விஷயங்களை அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை கண்டு கொள்வதில்லை என்பதில்தான் பல ஐயப்பாடுகள் எழுகின்றன.
எ-கா:
1. இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லுதல்
2. 15 வயதுக்கும் குறைவாக உள்ள சிறுவர்கள் வாகனங்கள் ஒட்டுவது.
3. வாகனத்தை ஓட்டிக் கொண்டே செல்ஃபோனில் பேசுவது.
4. ஒரே வாகனத்தில் நால்வர், ஐவர் என ஒரு குடும்பமே பயணிப்பது - அதுவும் அசுர வேகத்தில்
5. மது போதையுடன் வாகனம் ஓட்டுவது
6. சாலை திருப்பங்களில் கை சைகை, ஒலி எழுப்புதல் என எதுவும் இல்லாமை
7. சிக்னல்களை கருதாது சந்திப்புகளைக் கடந்து செல்வது
8. சந்திப்புகளில் வாகன நிறுத்த எல்லைக் கோட்டையும் கடந்து நிற்பது.
இந்த எட்டு விஷயஙளும் காவல்துறையில் கவனதிற்கு எட்டினாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத நிலை இருக்கும்வரை வெறும் ஹெல்மெட் பற்றி மட்டுமே பேசுவது அவ்வப்போது ஏதோ ஒரு பின்னணியுடன் அரங்கேற்றமாகும் நாடகம் என்றே படுகிறது..
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துகளுக்கு காரணமாக உள்ள பிற விஷயங்களை அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை கண்டு கொள்வதில்லை என்பதில்தான் பல ஐயப்பாடுகள் எழுகின்றன.
எ-கா:
1. இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லுதல்
2. 15 வயதுக்கும் குறைவாக உள்ள சிறுவர்கள் வாகனங்கள் ஒட்டுவது.
3. வாகனத்தை ஓட்டிக் கொண்டே செல்ஃபோனில் பேசுவது.
4. ஒரே வாகனத்தில் நால்வர், ஐவர் என ஒரு குடும்பமே பயணிப்பது - அதுவும் அசுர வேகத்தில்
5. மது போதையுடன் வாகனம் ஓட்டுவது
6. சாலை திருப்பங்களில் கை சைகை, ஒலி எழுப்புதல் என எதுவும் இல்லாமை
7. சிக்னல்களை கருதாது சந்திப்புகளைக் கடந்து செல்வது
8. சந்திப்புகளில் வாகன நிறுத்த எல்லைக் கோட்டையும் கடந்து நிற்பது.
இந்த எட்டு விஷயஙளும் காவல்துறையில் கவனதிற்கு எட்டினாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத நிலை இருக்கும்வரை வெறும் ஹெல்மெட் பற்றி மட்டுமே பேசுவது அவ்வப்போது ஏதோ ஒரு பின்னணியுடன் அரங்கேற்றமாகும் நாடகம் என்றே படுகிறது..
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1143458krishnaamma wrote:3.ஆர். வரதராஜன்
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துகளுக்கு காரணமாக உள்ள பிற விஷயங்களை அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை கண்டு கொள்வதில்லை என்பதில்தான் பல ஐயப்பாடுகள் எழுகின்றன.
எ-கா:
1. இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லுதல்
2. 15 வயதுக்கும் குறைவாக உள்ள சிறுவர்கள் வாகனங்கள் ஒட்டுவது.
3. வாகனத்தை ஓட்டிக் கொண்டே செல்ஃபோனில் பேசுவது.
4. ஒரே வாகனத்தில் நால்வர், ஐவர் என ஒரு குடும்பமே பயணிப்பது - அதுவும் அசுர வேகத்தில்
5. மது போதையுடன் வாகனம் ஓட்டுவது
6. சாலை திருப்பங்களில் கை சைகை, ஒலி எழுப்புதல் என எதுவும் இல்லாமை
7. சிக்னல்களை கருதாது சந்திப்புகளைக் கடந்து செல்வது
8. சந்திப்புகளில் வாகன நிறுத்த எல்லைக் கோட்டையும் கடந்து நிற்பது.
இந்த எட்டு விஷயஙளும் காவல்துறையில் கவனதிற்கு எட்டினாலும் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத நிலை இருக்கும்வரை வெறும் ஹெல்மெட் பற்றி மட்டுமே பேசுவது அவ்வப்போது ஏதோ ஒரு பின்னணியுடன் அரங்கேற்றமாகும் நாடகம் என்றே படுகிறது..
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மதுரை: ஏப்.,1 முதல் ஹெல்மெட் கட்டாயம் : போலீஸ் கமிஷனர்
» புதுச்சேரியில் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் : மீறினால் கடும் நடவடிக்கை
» "ஹெல்மெட்' அணிவது கட்டாயம் : வரும் 16ம் தேதி முதல் தீவிர அமல்
» 'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம்
» ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 118 ஆதார் மையங்கள் திறப்பு!
» புதுச்சேரியில் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் : மீறினால் கடும் நடவடிக்கை
» "ஹெல்மெட்' அணிவது கட்டாயம் : வரும் 16ம் தேதி முதல் தீவிர அமல்
» 'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம்
» ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 118 ஆதார் மையங்கள் திறப்பு!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|