புதிய பதிவுகள்
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
13 Posts - 48%
heezulia
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
13 Posts - 48%
cordiac
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
264 Posts - 52%
heezulia
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
160 Posts - 32%
Dr.S.Soundarapandian
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
18 Posts - 4%
prajai
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
5 Posts - 1%
Barushree
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
2 Posts - 0%
cordiac
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சேதுவின் வரலாறு! Poll_c10சேதுவின் வரலாறு! Poll_m10சேதுவின் வரலாறு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேதுவின் வரலாறு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 10:24 pm

அப்படியே வேகமாகப் போய் சுவேலம் என்ற குன்றின் மேல் ஏறி அங்கிருந்து லங்கையைப் பார்த்தார்கள். அப்பொழுது சூரியன் அஸ்தமித்து விட்டார். அன்றிரவு பூர்ண சந்திரன் இருப்பது போல பிரகாசமாயிருந்தது.

சேதுவின் வரலாறு தொன்மையானது. ஆதிகவி என்று வர்ணிக்கப்படும் வால்மீகி முனிவர் சேதுவின் வரலாறை ராமாயணத்தில் முதல் முதலாகப் பதிவு செய்து விட்டார். இந்த வரலாறு திரிக்கப்பட்டதில்லை; மாற்றப்பட்டதில்லை. இது மாற்றப்பட முடியாத ஒன்று என்பதை தமிழில் ராமாயணம் பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் அறுதியிட்டு உறுதி கூறுகிறான்.

"வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்
தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்"


நான்கு பாதங்கள் கொண்ட செய்யுளில் வால்மீகியின் காவியத்தில் ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது; இடைச் செருகல் செய்ய முடியாது என்பது மகாகவியின் வாக்கு.


இந்த அடிப்படையில் வால்மீகியின் காவியத்தை ஆராய்ந்து ராமாயணம் பற்றிக் கால விமர்சனம் செய்துள்ள ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதியுள்ள ஸ்ரீ வால்மீகி ஹ்ருதயம் என்ற நூலில் சேது பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்:

"பிறகு, ஸமுத்திரத்தை எப்படித் தரணம் செய்வதென்று ஆலோசிக்கையில், ஸமுத்திர ராஜனை உபாஸிப்பதே நல்லதென்று விபீஷணர் சொன்னார். உடனே ராமர் ஸமுத்திரக் கரையில் வலது கையில் சிரஸை வைத்துக் கொண்டு தர்பாஸனத்தில் மூன்று நாட்கள் சயனம் செய்து கொண்டு நியமத்துடன் இருந்தார். (வால்மீகி ராமாயணம் - யுத்தகாண்டம் -21 -9,10)

இவ்விதம் மூன்று இரவுகள் சென்றும் ஸமுத்திர ராஜன் அனுக்கிரஹம் செய்யாததனால் ராமர் கோபம் கொண்டு வில்லேந்தி ஸமுத்திரத்தில் பாணம் போட ஆரம்பித்தார். ஸமுத்திரம் கலங்கி அல்லோலகல்லோலப் பட்டது. உடனே ஸமுத்திர ராஜனே நேரில் வந்து, "ஜலஸ்வரூபனான என்னை விலகி நில் என்றால் எப்படி முடியும்? வேண்டுமானால் என்னைத் தாண்டிப் போவதற்கு வழி சொல்லுகிறேன்" என்று சொல்லி நளனைக் கொண்டு அணை கட்டும்படி சொன்னார். அப்படியே நளனும் ஏற்றுக் கொண்டு அப்பொழுதே அணை கட்ட ஆரம்பிக்கலாம் என்று சொன்னான்.

அன்றைக்கே ஆரம்பித்து மரங்களை வெட்டிப் போட்டு கற்களால் நிரப்பி முதல் நாள் 14 யோஜனை, 2வது நாள் 20, 3வது நாள் 21, 4வது நாள் 22, 5வது நாள் 23 ஆக 100 யோஜனை தூரமும் அணை கட்டி விட்டார்கள். (வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம் 22 - 68 -73)

அணை கட்டி முடிந்தவுடனேயே சுக்ரீவன் சொன்னதன் பேரில் ராமர் ஹனுமார் பேரிலும், லக்ஷ்மணன் அங்கதன் பேரிலும் ஏறிக் கொண்டு ஸைன்யத்துடன் அணை வழியாக ஸமுத்திரத்தைக் கடந்து தென்கரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சில நிமித்தங்களைக் கொண்டு அன்றைக்கே லங்கைக்கு சமீபம் போய் விட வேண்டுமென்று ராமர் ஆக்ஞை செய்தார். அப்படியே வேகமாகப் போய் சுவேலம் என்ற குன்றின் மேல் ஏறி அங்கிருந்து லங்கையைப் பார்த்தார்கள். அப்பொழுது சூரியன் அஸ்தமித்து விட்டார். அன்றிரவு பூர்ண சந்திரன் இருப்பது போல பிரகாசமாயிருந்தது." (ஸ்ரீ வால்மீகி ஹ்ருதயம் பக்கங்கள் 397,398)

மேலே வால்மீகி முனிவர் கூறியதுதான் சேதுவின் ஆதாரபூர்வமான வரலாறு.

திரிக்கப்படாதது; மாற்ற முடியாதது!

இதையொட்டி கம்பன் சேது கட்டியது பற்றி சேது பந்தனப் படலம் என்ற தனிப் படலத்தில் 72 பாடல்களில் விரிவாக விளக்குகிறான்.

சேதுவின் தோற்றம் பற்றிய கம்பனின் பாடல்கள் அற்புதமான பாடல்கள்:

"நாடுகின்றது என், வேறு ஒன்று? - நாயகன்
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான்,
'ஓடும்' என் முதுகிட்டு என, ஓங்கிய
சேடன் என்னப் பொலிந்தது, சேதுவே!

மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகன்
பொய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது,
ஐயன் ஈட்டிய சேனை கண்டு, அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்

கான யாறு பரந்த கருங் கடல்
ஞான நாயகன் சேனை நடத்தலால்
ஏனை யாறு, இனி, யான் அலது ஆர்" என
வான யாறு, இம்பர் வந்தது மானுமால்,

கல் கிடந்து ஒளிர் காசு இனம் காத்தலால்,
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை,
எல் கடந்த இருளிடை, இந்திர
வில் கிடந்தது என்ன விளங்குமால்.

சேதுவின் தோற்றம் சேடன் போலப் பொலிந்தது; வான ஆறு இங்கு வந்து அமைந்தது போலச் சேது இருந்தது; இந்திர வில் போல - இருளை நீக்கிய ஒளி போல - சேது ஒளிர்ந்தது என்று கம்பன் இப்படி சேதுவைப் புகழ்ந்து வர்ணிக்கிறான்.

அது மட்டுமின்றி, தன்னை ஆதரித்த வள்ளல் சடையனுக்கு நன்றி தெரிவிக்க கம்பன் தேர்ந்தெடுத்த இடங்களுள் ஒன்று சேது பந்தனப் படலம்.

பெரிய குரங்கு மலையை அப்படியே தூக்கி எறிய அதை நளன் சடக்கெனப் பிடித்துத் தாங்கினான் - எப்படித் தாங்கினான்? தஞ்சம் என்று வந்தோரை சடையன் தாங்குவது போலத் தாங்கினான்!

"மஞ்சினில் திகழ் தரும் மலையை, மாக்குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே, நளன்
விஞ்சையில் தாங்கினன் - சடையன் வெண்ணெயில்
‘தஞ்சம்!' என்றோர்களைத் தாங்கும் தன்மை போல்"


கம்பன் எவ்வளவு முக்கியத்துவத்தைத் சேது பந்தனத்திற்குத் தந்துள்ளான் என்பதை அவனது நன்றிப் பாட்டு ஒன்றே விளக்குகிறது.

வால்மீகியின் அடிப்படையில் துளஸிதாஸரும், வேறு பல புராணங்களும் சேது கட்டப்பட்டதை இன்னும் விரிவாக விளக்குகின்றன.

(ந‎ன்றி : ஆதிப்பிரான்)
- ச.நாகராஜன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:23 pm

சேதுவின் வரலாறு! 103459460 சேதுவின் வரலாறு! 103459460 சேதுவின் வரலாறு! 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 10:57 am

சேதுவின் வரலாறு! 103459460 சேதுவின் வரலாறு! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 12:16 pm

கம்பரின் நன்றி மறவாமைக்கு
எடுத்துக்காட்டு
சேதுபந்தன பாட்டு* .(கவிதை* )

பகிர்வுக்கு நன்றி

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Sat Jun 20, 2015 10:10 pm

சேதுவின் வரலாறு என்றவுடன் எதோ கலைஞர் TR பாலு விஷயம் என நினைத்தேன். வால்மீகியும் கம்பரும் பற்றி எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். கம்பனின் பாடல்களை சிலாகித்து சிலாகித்து எழுதலாம். வால்மிகியின் சேது பந்தனம் ஸ்லோகங்கள் அசாத்திய கற்பனைகள். இதைபற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் நண்பர்கள் என்னை பற்றி தவறாக நினைப்பார்கள் so ரசிக்கிறேன்.

சிவம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக