புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
1 Post - 25%
viyasan
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
21 Posts - 4%
prajai
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10கோழி எழுப்பும் கேள்வி… Poll_m10கோழி எழுப்பும் கேள்வி… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழி எழுப்பும் கேள்வி…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 08, 2015 6:24 am

அமெரிக்கக் கோழிக் கறி இறக்குமதிக்கு இந்தியா விதித்த தடை செல்லாது என்று உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ.) மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளதால், அடுத்த 12-18 மாதங்களுக்குள் அமெரிக்கக் கோழிக் கறியை அனுமதித்தாக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை விசாரித்து அறிந்தபோது பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.


பறவைக் காய்ச்சல் பீதி பரவலாக நிலவியபோது இந்தியா இந்தத் தடையை விதித்தது. இதை எதிர்த்து அமெரிக்கா தொடுத்த வழக்கில் சென்ற ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு அமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்ததால், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் இந்தியா முறையிட்டது. இருப்பினும், அங்கேயும், இந்தியாவின் தடை அறிவியல்பூர்வமற்றது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.


இந்தியா தொடர்ந்து மேல்முறையீட்டுக்குச் சென்றதன் நோக்கம் பறவைக் காய்ச்சல் பீதி அல்ல. உள்நாட்டில் கோழிக் கறி வணிகம் பாதிக்கப்படும் என்பதால்தான். பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதோடு, கோழி வளர்ப்பின் மூலம் துணை வருவாய் காணும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையால்தான் இந்தியா மேல்முறையீட்டுக்குச் சென்றிருந்தது.


இந்தியா, அமெரிக்காவுக்கான மிகப் பெரிய கோழிக் கறி சந்தை. இந்தியாவில் கோழிக் கறி உண்போர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு வளர்ந்து கொண்டே போகிறது. கோழிக் கறியின் அளவும் கூடிக் கொண்டே போகிறது. 2014-ஆம் ஆண்டு கோழிக் கறி விற்பனை 37.2 லட்சம் டன்! அதற்கு முந்தைய ஆண்டில் கோழிக் கறி விற்பனை 34.5 லட்சம் டன்! அதாவது ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் டன் கோழிக் கறி விற்பனை கூடுகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கோழிக் கறிக் கடைகள், சில்லி சிக்கன் தள்ளுவண்டிக் கடைகள் மிகமிகக் குறைவு. ஆனால், இப்போது ஒவ்வொரு தெருமுனையிலும் சில்லி சிக்கன் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.


அமெரிக்கா தனது கோழிக் கறியைக் கொண்டு வந்து இந்தியாவில் திணித்தால், இந்தியாவின் உள்ளூர் கோழிக் கறி வர்த்தகம் 40% பாதிக்கப்படும் என்று கணிக்கிறார்கள். இந்தியாவில் தற்போது சராசரியாக ஆண்டுக்கு ரூ.50,000 கோடி கோழிக் கறி வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிக அளவு கோழிக் கறி உற்பத்தி செய்யும் மாநிலங்கள் ஆந்திரமும், தெலங்கானாவும்தான். இங்கே விவசாயத்தின் ஒரு பகுதியாக கோழிப் பண்ணையும் பராமரிக்கப்படுகிறது.


அமெரிக்கர்களைப் பொருத்தவரை கோழிக் கால் என்பது தேவையற்ற மாமிசப் பகுதி. அவர்கள் விரும்பிச் சாப்பிடுவது மார்புக் கறி (பிரெஸ்ட் பீஸ்) மட்டுமே. ஆனால், இந்தியாவில் “லெக் பீஸ்’ என்கிற கோழிக் கால் விலை அதிகம். அமெரிக்காவில் அது வெறும் மாமிசக் கழிவு. ஆகவே, இந்தியாவில் என்னதான் வரி விதிப்பு இருந்தாலும், “லெக் பீஸ்’ அனைத்தையும் இந்தியாவில் கொண்டு வந்து தள்ளுவதென்பது அமெரிக்காவைப் பொருத்தவரை, குப்பையில் கொட்டுவதை இந்தியாவில் கொட்டிக் காசாக்குவோம் என்பதுதான். இந்தியாவில் கோழிக் கால் மட்டுமே கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டால், அதே கோழிக் கால் கறியை கிலோ ரூ.50 அளவுக்கு இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்காவால் முடியும்.
கறிக் கோழி உற்பத்தியாளர்கள் வெளியில் சொல்ல முடியாமல் உள்ளேயே நினைத்து மருகும் விவகாரம்- அமெரிக்கக் கோழிக் காலுடன் இந்தியக் கோழிக் கால் போட்டி போட முடியாது என்பதுதான். அதற்கு வெறும் விலை மட்டுமே காரணம் அல்ல.


அமெரிக்காவில் கோழி வளர்ப்பு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கண்காணிப்பில் இருக்கிறது. இந்தியாவில், அப்படியல்ல. கறிக் கோழி சீக்கிரமே எடை கூட வேண்டும் என்பதற்காக ஹார்மோன்களை ஊசி மூலமும், தீவனத்தில் கலந்தும் கொடுப்பது இங்கே பரவலான நடைமுறை. இதனால், உயர் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் அனைவரும் அமெரிக்க “லெக் பீஸ்’ சாப்பிடவே விரும்புவார்கள். அதற்கு அவர்கள் விலை அதிகம் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்.


இப்போதே சங்கிலித் தொடர் சில்லறை விற்பனைக் கூடங்கள் அனைத்தும் அமெரிக்காவின் லெக் பீஸýக்கு தயாராகிவிட்டன. இந்திய கறிக் கோழி விற்பனையாளர்கள் தங்கள் சந்தையை நடுத்தர மற்றும் ஏழைகளின் பக்கம் திருப்பியாக வேண்டும். இங்கே அதிக விலை, அதிக லாபம் சாத்தியமில்லை.
இந்தியாவுக்கு முழுக் கோழியை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அமெரிக்காவுக்கு நிபந்தனை போடலாம். வெட்டப்பட்ட கோழிக் கறி என்றால் (அதாவது லெக் பீஸ்) அதற்கு இரட்டிப்பு வரி போடுங்கள், திணிப்புக்கு எதிரான (ஆன்ட்டி டம்பிங்) வரி விதிப்பு முறைகளைக் கையாளுங்கள் என்று அரசுக்கு இந்திய கோழிக் கறி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். உலக வர்த்தக விதிப்படி, ஆறு மாதங்களுக்கு மேலாக குளிர்பதன அறையில் இருந்த மாமிசங்களை இந்தியாவில் திணிக்கக் கூடாது என்று இந்தியா தடை விதிக்க முடியும்.



ஆனால், இவை ஆறு மாதங்களாகக் குளிர்பதன அறையில் இருந்தவை என்பதை நிரூபிப்பது மிகவும் அரிது. இந்தக் கோரிக்கைகளில் எது சாத்தியமாகும், அமெரிக்கா தனது வர்த்தக உத்தியை எவ்வாறு தகவமைக்கும் என்பது இன்னும் வெளிப்படையாகத் தெரியவில்லை.


உலக வர்த்தக அமைப்பில் அங்கம் வகிப்பதாலும், இந்தியா- அமெரிக்கா இடையே பரஸ்பர வணிக ஒப்பந்தங்கள் இருப்பதாலும், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா கட்டுப்பட்டே நடக்க வேண்டும். அதேவேளையில், இந்திய கோழிக் கறி உற்பத்தியாளர்களின் நலனையும், விவசாயிகள் நலனையும் பாதுகாக்கவும் வேண்டும். என்ன செய்யப் போகிறோம் நாம்?


By ஆசிரியர்

தினமணி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 08, 2015 7:38 pm

இந்தியா இறக்கமதியை கண்டிப்பாக ஒரு குறுப்பிட்ட அளவாவது செய்தாக வேண்டும் என்று கட்டாயம் உள்ளதா? இதை தடுக்க வேறு என்னதான் வழி?




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 08, 2015 10:42 pm

அடாடா................... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக