ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

4 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Empty மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by சரவணன் Tue Jun 02, 2015 5:11 pm

இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா?


உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!

அதிகாலையில் வாசலில் கோலமிடும்
தாவணிப் பெண்களை காணவில்லை.
அவர்களின் வெட்கம் காணவில்லை.

வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை
தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை

மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை
மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை

மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை
மரங்களையும் காடுகளையும் காணவில்லை

மாட்டு வண்டிகளை காணவில்லை
சாலையில் விளையாடும் சிறுவர்களை காணவில்லை

மாறிப் போன மனிதை மட்டுமே பார்க்க முடிகிறது!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Empty தமிழர்களின் கைவண்ணம்! - பனை ஓலை பொருட்கள்

Post by சரவணன் Tue Jun 02, 2015 5:13 pm

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் 1975129_852479858165687_7264290128285851158_n
உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமல் காத்த நாகரீகத்தில் அழிந்த நம் பனை ஓலை பெட்டிகள்..!

பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.

இதனால் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது.

மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் வரத்தொடங்கின. இவை மிகவும் எளிதாக கையாளக்கூடியதாக இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கினார்கள். ஆகையால் பனை ஓலை பெட்டிகள் உள்ளிட்ட பனைப் பொருட்களின் தேவை குறைந்து விட்டது.

பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப்பெட்டிகளின் வருகையால் பனை ஓலைப்பெட்டிகள் காணாமல் போய் விட்டன. அந்த தொழிலும் நலிவடைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் ஒரு காலத்தில் பனை ஓலையினால் செய்யப்படும் பொருட்களின் உற்பத்தியானது மிகவும் சிறந்து விளங்கியது.

குறிப்பாக மிட்டாய் வைக்க பயன்படுத்தும் பனை ஓலைப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. ஏனென்றால் இப்பகுதியானது பனை மரங்கள் நிறைந்த பகுதியாகும். ஆகவே பனை ஓலையினால் செய்யக்கூடிய பொருட்களான முறம், கல்யாண சீர்வரிசைப் பெட்டி, வீட்டின் சுவற்றை சுற்றி அமைக்கப்படும் வேலி, மேலும் இனிப்பு வகைகளை வைக்க பயன்படும் ஓலைப்பெட்டி போன்றவைகளும் தயாரிக்கப்படுகின்றன.

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தின்பண்டங்களின் உற்பத்தியானது அதிக அளவில் இருப்பதால், அத்தகைய தின்பண்டங்களை பார்சல் செய்வதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலைப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற் கேற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும்.


முன்பெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கான பனை ஓலைப்பெட்டிகள் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. மேலும் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் போது இங்கிருந்து சுமார் 80,000 முதல் ஒரு லட்சம் வரை பெட்டிகள் அனுப்பப்பட்டு வந்தது.

திருவிழாக் காலங்களில் உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள் என்பதால் அனைத்து இனிப்பு வகைளிலுமே பனை ஓலைப் பெட்டிகளில் வைத்தே பண்டங்களை வைத்திருப்பார்கள்.
Untitled.png
நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளின் வருகையை தொடர்ந்து ஓலைப் பெட்டிகளின் பயன்பாடானது குறையத் தொடங்கியது. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில் தற்பொழுது ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால் அதில் சூடான தின்பண்டங்களை பார்சல் செய்யும்பொழுது வேதிப்பொருட்கள் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது.பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் உணவு பண்டங்களானது விரைவில் கெட்டுப் போய்விடும். மேலும் உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதால் அவை கெட்டுப் போகாமல் இருக்கலாம். ஆனால் அப்பொருட்களின் இயற்கைத்தன்மையை இழந்து விடுவது மட்டுமின்றி, அவற்றை உட்கொள்வதால் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுகின்றது.

ஆனால் பனை ஓலைப்பெட்டிகளில் வைக்கப்படும் திண்பண்டங்கள் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. உணவுப்பொருளுக்கு புதிய மணமும், உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது. ஆகவே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பனை ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அனைவரும் உடல் நலத்தை காக்கலாம்.

மேலும் நலிவடைந்து வரும் பனைப்பொருட்கள் தொழிலுக்கு புத்துயிர் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையினால் செய்யப்படும் படின ஓலைபெட்டிகளை பொதுமக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

நன்றி: facebook


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by krishnaamma Tue Jun 02, 2015 5:50 pm

அருமை சரவணன்........என்ன ஒரே சூப்பர் திரிகளா போடறீங்க புன்னகை............. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by balakarthik Tue Jun 02, 2015 5:55 pm

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் 3838410834 மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் 3838410834 மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் 3838410834 மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் 3838410834 மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் 3838410834


ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by krishnaamma Tue Jun 02, 2015 5:55 pm

1. பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.

நிஜம், நான் வெற்றிலை வைத்துக்கொள்வேன். நிறைய நாள் வாடாமல் இருக்கும். ஹைதராபாத்தில், வெயில் அதிகம் அப்போ பிரிட்ஜ் இல்லை எங்களிடம், 1986 இல் கிருஷ்ணா குழந்தை, அவனுக்கு பால் தரும் வரை நான் வெத்திலை போட்டுக்கணும் என்று மாமியார்/பாட்டி சொல்லி இருந்தார்கள். எனவே, வெயிலில் வாடாமல் நிறைய நாள் வைத்துக்கொள்ள ஓலைப்பெட்டி தான் பெஸ்ட் என்றும் சொன்னார்கள் , எனவே , வாரத்துக்கு ஒருமுறை 'மோண்டா மார்க்கெட்' போய் வாங்கி வருவோம், துணி இல் சுத்தி ஓலைப்பெட்டி இல் வைத்து வாடாமல் உபயோகித்தேன். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by balakarthik Tue Jun 02, 2015 5:57 pm

பனை ஓலை கூடைல புளி அடைத்துவைத்திருப்பர்கள் எங்கள் வீட்டில் இப்ப அதெல்லாம் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by சரவணன் Tue Jun 02, 2015 6:00 pm

அருமையான தகவல் கிரிஷ்மா! & பலா கார்த்தி.

நான் பனை ஓலை கொண்டு செய்யும் சின்ன பெட்டி செய்வதை கற்றுக்கொண்டேன். பெரிய அளவிலான பெட்டிகள் செய்ய தெரியாது...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by balakarthik Tue Jun 02, 2015 6:03 pm

சரவணன் wrote:அருமையான தகவல் கிரிஷ்மா! & பலா கார்த்தி.

நான் பனை ஓலை கொண்டு செய்யும் சின்ன பெட்டி செய்வதை கற்றுக்கொண்டேன். பெரிய அளவிலான பெட்டிகள் செய்ய தெரியாது...

கிலுகிலுப்பை கூட பனை ஓலைல செய்வாங்களே தாம்பரம் பக்கத்துல எங்க வீட்டுக்கு போற வழியில விப்பாங்க பார்த்திருக்கேன் இதுபோன்ற பனைஓலை சமாசாரங்களை


ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by krishnaamma Tue Jun 02, 2015 6:08 pm

2. கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது.

நான் சின்ன வயதில் சாப்பிட்டது சரவணன், எப்பவோ எட்டயபுரம்  சென்றபோது எங்க அப்பா வாங்கினார், அந்த இடம் கோவில் பட்டியா என்று எனக்கு தெரியலை . அந்த இனிப்பு 'ஜீரா' போல இருந்தது , முறுக்கு போலவும் இருந்தது, ஓலை வாசனை நிரம்பி இருந்தது............அது என்ன என்று எனக்கு தெரியலை. என்றாலும் அதன் சுவை எனக்கு இந்தும் நினைவில் இருக்கு ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by சரவணன் Tue Jun 02, 2015 6:11 pm

krishnaamma wrote:
நான் சின்ன வயதில் சாப்பிட்டது சரவணன், எப்பவோ எட்டயபுரம்  சென்றபோது எங்க அப்பா வாங்கினார், அந்த இடம் கோவில் பட்டியா என்று எனக்கு தெரியலை . அந்த இனிப்பு 'ஜீரா' போல இருந்தது , முறுக்கு போலவும் இருந்தது, ஓலை வாசனை நிரம்பி இருந்தது............அது என்ன என்று எனக்கு தெரியலை. என்றாலும் அதன் சுவை எனக்கு இந்தும் நினைவில் இருக்கு ஜாலி
நான் பார்த்ததில்லை..நாங்கள் படிக்கும் போது கடைகளில் கண்ணாடி பாட்டில் தான்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum