புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_lcapகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_voting_barகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_lcapகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_voting_barகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_lcapகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_voting_barகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_lcapகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_voting_barகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_lcapகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_voting_barகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_lcapகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_voting_barகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_lcapகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_voting_barகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_lcapகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_voting_barகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_lcapகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_voting_barகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_lcapகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_voting_barகாவல் துறையா... காசு பார்க்கும் துறையா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவல் துறையா... காசு பார்க்கும் துறையா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 3:40 am

காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Police%20leftவெளிநாடு சென்ற பிரதமரை மறந்திருக்கலாம், தொகுதிப்பக்கம் வராத எம்.எல்.ஏக்கள், எம்பிக்களை மறந்திருக்கலாம்.

ஆனால் போலீசார் பற்றி மறக்க முடியாதபடி தினமும் எதாவது ஒரு பரபரப்புச் செய்தி வாராத நாட்களை விரல் விட்டு என்னும் அளவிற்கு காவலர்களின் " கட்டுப்பாடு" கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டது. யாரை மறந்தாலும் தமிழக போலிசை மறக்க முடியாதபடி தினந்தோறும் லஞ்சம், கைகலப்பு, கலகலப்புச் செய்திகளோடு மக்களின் நீங்கா நினைவில் இடம் பிடித்திருப்பது தமிழக போலீசார் மட்டுமே

தமிழக போலீஸ் 150 வருட வரலாறு கொண்டது. காவலர்கள் எண்ணிக்கையில் இந்தியாவில் 5 வது இடத்தில உள்ளது. அரசுத் துறைகளில் பாலியல் புகாரில் முதலிடத்தில் காவல் துறை உள்ளதாக மக்கள் கணிப்பில் உள்ளது. 2001 முதல் 2010 வரை காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தில், தமிழக மக்களின் பணம் 1150 கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கல் மூலம் பல கோடி செலவிட்டும், காவல்துறையில் நவீனமாக லஞ்சம் வாங்கும் திறனும், நவீன தொழில் நுட்ப காதல் பேச்சுகளும், மனிதாபிமானமற்ற கொலைகளும், லட்டுக்கு சண்டையும் அரங்கேறி பல கோடி செலவழித்த மக்களின் வரிப்பணம் காணாமல் போய் விட்டதாகவே தோன்றுகிறது.

தேசிய குற்றப் புலனாய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் மகாராஷ்டிரா போலீஸ்தான் தாதாக்களுடன் தொடர்பு, கற்பழிப்பு, போதைக்கும்பலுடன் தொடர்பு என குற்றப் பின்னணி கொண்ட போலீசார் அதிகம். இதற்கு அடுத்தபடியாக ம.பி, உ.பி, டெல்லி, பஞ்சாப் போலீசார் வருகின்றனர். அந்த வகையில் தமிழக போலீஸ் சேர்ந்து கொள்ளுமோ என அஞ்சும் நிலை உள்ளது. என்னதான் உயர் அதிகாரிகள் திறமையாக, நேரமையாக இருந்தாலும், கீழ் மட்டத்தில் உள்ளவர்களால் போலீஸ் என்றால் மக்கள் எரிச்சலாக பார்க்கும் நிலையே வருகிறது.

பாலியல், கடத்தல், லஞ்சம், பொய் வழக்கு புகாரில் தினமும் ஒரு போலீசார் சிக்குவது சட்டம் ஒழுங்கை எப்படி இவர்கள் பாதுகாப்பார்கள் என கேள்வி கேட்கும் நிலை உள்ளது. திருமணமான பெண் காவலரிடம் உயர் அதிகாரி கொண்ட வாட்ஸ்-அப் "பாசத்திற்கு" கடும் கண்டனம் வந்த நிலையில் "வழக்கம் போல" இட மாறுதல் கொடுத்து பிரச்னைக்கு ஒய்வு கொடுத்து விட்டார்கள் உயர் அதிகாரிகள்.

ஒரு கைதியை, கை விலங்குடன் சக போலீஸ் இன்ஸ்பெக்டர் இலவச காபி, சமோசா, பாப் கார்னுடன் படம் பார்த்து, பக்கத்தில் அமர்ந்தவர்களை சினிமா பார்க்க முடியாமல் "பயமுறுத்திய பெருமை" விழுப்புரம் மாவட்ட போலீசுக்கு மட்டுமே சொந்தம். இனி வரும்காலத்தில் கைதிகள் சினிமா செல்ல காவலர்களை அழைத்தாலும் ஆச்சர்யப்படத் தேவை இல்லை. திருடனைப்பிடிக்க கட்டிபுரண்டு சண்டை போட்ட காலமெல்லாம் கடந்து, இலவசமாக கிடைத்த லட்டுக்காக விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் நடந்த சண்டை, லட்டை இனி சாப்பிட வேண்டுமா என விழுப்புரம் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு செய்துவிட்டது.

'லட்டுக்கே இப்படி சண்டை போடுகிறார்களே... லஞ்சப்பணத்தை எப்படித்தான் சண்டை இல்லாமல் பிரித்துக் கொள்கிறார்களோ? ' என மற்ற பகுதி காவலர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு, சண்டை லட்டுக்குத்தானா என சந்தேகமாக பார்க்கின்றனர். மதுவே இந்த நாட்டை விட்டு ஒழிய வேண்டும் என நினைக்கும் வேளையில், மதுபான விடுதி மேல் வழக்கு போட்டு, லஞ்சப்பணம் வாங்கிய சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், மதுவால் அரசை விட போலீசுக்குத் தான் லாபம் என்று சொன்னதை நிருபித்து விட்டார்.

லஞ்சத்தில் சிக்கியது "எலி" தான் என்றும், சிக்காத பல போலீஸ் "லஞ்சப்புலிகள்" தைரியமாக மக்களை வேட்டையாடி வருகிறது என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. இந்த நாட்டில் லஞ்சம் ஒழிய நேர்மையாக செயல்பட வேண்டிய போலீசாரே, லஞ்சத்திற்கு காவலாக இருக்கும் பொது லஞ்சம் தலை நிமிர்ந்து வாழ்கிறது.

காவல் நிலையத்தில் கால் வைக்க கொடுக்க வேண்டிய அனுமதிக்கட்டணம் ரூ100-,. ஏட்டையா உங்களிடம் என்ன பிரச்னை? என்று கேட்க கொடுக்க வேண்டிய அன்பளிப்பு ரூ.200-, உங்கள் புகாரை படிக்க அல்லது புகரை எழுத தர வேண்டிய மொய் பணம் ரூ.500 -. உங்கள் புகாரை விசாரிக்க எதிர் தரப்பை விசாரிக்க கொடுக்க வேண்டிய அபராதம். ரூ.1000, வழக்கு எண் பதிவு செய்ய சம்பந்தப்பட்டவரை கைது செய்ய 5000-, ஒருவேளை பணம் அவர் கூடுதலாக கொடுத்தால் பொய் வழக்கு உங்கள் மீதே பாயும். இப்படி ஒரு நிலை எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.

இதையெல்லாம் தாண்டி ரூ.35,000 லஞ்சம் கேட்கும் அளவிற்கு மதுபான விடுதிகள் போலீசாருக்கும் "பண மயக்கத்தை "கொடுக்கின்றது. 2000 ஆண்டு முதல் 2014 வரை 260 போலீசார் மட்டுமே லஞ்ச,ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்கள். உலகின் லஞ்ச போலீசான ஹைதி தீவு ,மெக்ஸிகோ கென்யா வரிசையில் இந்தியப் போலீசும் குறிப்பாக தமிழக போலீஸ் சேரும் அளவிற்கு நிலை மோசமாக உள்ளதை லஞ்ச ஒழிப்பு போலீசார் தடுக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

இந்தியாவில் லஞ்ச ஊழல் மிக்க நகரங்கள் பட்டியலில் பெங்களூருக்கு அடுத்தபடியாக சென்னை உள்ளது. அதிலும் போலீசார் மீதான லஞ்சப் புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரப்படுத்தினால் பல ஆயிரம் காவலர்கள் சிறை செல்வது உறுதி என்ற அளவிற்கு தமிழக காவலர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

மற்றவர்கள் லஞ்சம் வாங்குவதற்கும், போலீஸ் லஞ்சம் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு, குற்ற சதவிகிதம் கூடிவிடாது. ஆனால் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது அடிப்படையான சட்ட மீறலும், குற்றம் செய்யத் துணிவும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும், நாட்டை அழிக்கும் தீவிரவாத செயல்களும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

ஆண்டுக்கு ஒரு முறை போலீசார் சொத்துக்கள், பணம், நகை இருப்பு பற்றிய விபரத்தை அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தாக்கல் செய்ய சட்டத் திருத்தும் தேவை.

வருவாய்த் துறை கிராம அதிகாரி ரூ.100 லஞ்சம் வாங்கினாலும் கைது செய்து சிறைக்கு அனுப்பும் லஞ்ச ஒழிப்பு பொலீஸார் சக போலீஸ் பிரிவினர் கட்டு கட்டாக லஞ்சம் வாங்குவதை வேடிக்கை பார்த்தும், கைநீட்டி சாலையில் லஞ்ச வருமானம் பார்ப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என பொது மக்கள் லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஆதங்கத்தில் உள்ளனர்.

ஒருவேளை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஏதாவது லஞ்சம் தரவேண்டுமா?

புகார் வந்தால் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் களமிறங்கு வதற்கு பதிலாக மக்களுடன் மக்களாக சோதனைச் சாவடியில், மாதம் ஒரு காவல் நிலையத்தில் உண்மை நிலவரம் குறித்து அறிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காவல்துறை கண்ணியமானவர்கள் இருக்கும் துறையாகவும், குற்றச் செயல்கள் குறைந்து சட்டத்திற்கு மக்கள் பயப்படும் நிலை உருவாகும் என்பதே உண்மை.

பொதுமக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அரசு உணரவேண்டும்!

- எஸ். அசோக் @ விகடன்




காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue Jun 02, 2015 8:42 am

சிவா அவர்களே ,

உங்கள் கனவு உண்மையாகட்டும் வாழ்த்துக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக