Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணியில் என் கட்டுரை
2 posters
Page 1 of 1
தினமணியில் என் கட்டுரை
கூழுக்குக் கவி பாடிய கூனக்கிழவி
By -முனைவர் ப. பானுமதி
First Published : 03 August 2014 01:30 AM IST
புகைப்படங்கள்
ஆடி மாதம் என்றால் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் திருவிழா நினைவுக்கு வருவது போலவே கூழுக்குக் கவிதைகள் ஊற்றிய அம்மனும் நினைவுக்கு வருவார். ஒளவையார் கோயில்கள் நாஞ்சில் நாட்டு நாவல் மர சோலைகள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றுள் தாடகை மலையடிவாரத்தில் (தோவாளை பகுதியில்) காணப்படும் தாழக்குடி ஒளவையாரம்மன் கோயிலும் அழகிய பாண்டிபுரம் பகுதியில் ஐந்துகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலும் சிறப்பு வாய்ந்தவை. ஆடிச் செவ்வாய்களில் ஒளவையாரம்மன் கோயில்கள் விழாக்கோலம் பெறுகின்றன. கூழும் கொழுக்கட்டைகளும் படைக்கப்படுகின்றன.
முன்பொரு காலத்தில் குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலில் இப்பகுதி வாழ் மக்கள் தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு எட்டு நாள்ளுக்கு முன்பு வந்து ஒளவையாருக்கு வழிபாடு நடத்துவார்களாம். வழிபாடு முடித்துச் சென்ற பின்பு மீண்டும் சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்ப்பார்களாம். அப்போது ஆபரணங்களும் அணிகலன்களும் நிறைந்திருக்கும் தங்கத் தாம்பாளாம் ஒன்று அங்கு இருக்குமாம். அதைக் கொண்டுபோய் மணமக்களுக்கு அணிவித்து திருமணம் நடத்துவார்களாம். திருமணம் முடிந்து எட்டு நாள் கழித்து மீண்டும் வந்து அர்ச்சனை செய்து அந்தத் தாம்பாளத்தை அக்கோவிலில் வைத்துவிட்டு திரும்புவார்களாம். அப்போது "எடுத்தேன்' என்று ஓர் அசரீரி கேட்குமாம். இது வழக்கமாக நடைபெற்று வந்ததாம். ஆனால், ஒருமுறை அப்படி "எடுத்தேன்' என்று அசரீரி ஒலித்தபோது, அந்த ஊர்வாசி ஒருவன் "பார்த்தேன்' என்று பதில் கொடுத்தானாம். "அடைத்தேன்' என்று பதில் கூறிய அசரீரி அன்று முதல் இவ்வழக்கத்தை நிறுத்திக் கொண்டது என்ற சுவையான கதையும் இக்கோயில் வரலாற்றுக்குள் உண்டு. இப்போதும் திருமணமாகாத பெண்களும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களும் ஒளவையாரம்மனை வேண்டிக்கொள்வதும் நோன்பு இருப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தெய்வமாகவே மாறி கூழையும் கொழுக்கட்டைகளையும் படையலாக ஏற்றுக் கொள்ளும் ஒளவையாரைக் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என்று சொல்லிதான் வணங்குகின்றனராம். ஒளவையார் தாம் வாழும் காலத்தில் கூழுக்குக் கவி பாடிய கதைகளும் உண்டே!
சோழ நாடு சென்றடையும் ஒüவை வழியில், ஒரு குறத்திப்பெண் அழுது கொண்டிருப்பதைக் கண்டு, ""ஏனம்மா அழுகிறாய்?'' என்கிறார்.
""என் கணவன் ஆசையாக வளர்த்து வந்த பலாமரத்தை மூத்த மனைவியாகிய என்னிடம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியூர் சென்றார். கணவன் என்மீது அன்பாக இருப்பதைக் கண்டு பொறுக்காத என் சககிழத்தி(சக்களத்தி), என் மீது பழி சுமத்துவதற்காக அம்மரத்தை வெட்டி விட்டாள். என் கணவன் வந்து கேட்டால் நான் என்ன செய்வேன்?''
என்று கூறி அழுதாள். இதைக் கேட்ட ஒளவையார் ஒரு பாடல் பாட, உடனே அம்மரம் மீண்டும் தழைத்து நின்றது.
அதைக் கண்டு மகிழ்ந்த அக்குறத்தி, ஒüவைக்கு தன்னிடமிருந்த தினையில் நான்கு உழக்கு அள்ளித் தருகிறாள். அந்த அன்புப் பரிசினைத் தாம் கையில் வைத்திருக்கும் துணியில் மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு ஒüவை, சோழன் அரண்மனைக்குள் நுழைகிறார்.
ஒளவையின் கையில் இருந்த மூட்டையை உற்றுப் பார்த்து விட்டு, ""தமிழ்க் கவியே! அந்த மூட்டையில் என்ன இருக்கிறது?'' என்று கேட்கிறான் சோழன். அவையில் கம்பரும் இருக்கிறார். சோழன் அவ்வப்போது கம்பரைப் பாராட்டிப் பேசுவதும் ஒளவையைச் சரியாக மதிக்காது இருப்பதுமாக இருப்பவன். கம்பரை வைத்துக்கொண்டு மன்னன் இக்கேள்வியைக் கேட்டது ஒளவைக்குத் தம்மை ஏளனப்படுத்துவதாகத் தோன்றியது.
உடனே ஒளவை, பலா மரம் தழைக்கத் தாம் பாடியதையும் குறத்தி அதற்குப் பரிசாக தினையைக் கொடுத்ததையும் கூறி, ""ஏழைகள் மனம் களிக்கப் பாடும் என்னிடம் என்ன இருக்கும்? அந்த ஏழைகள் கொடுத்த எளிய பரிசுப் பொருள்களான தினைதான் உள்ளது. சோழா! கேட்டுக்கொள். நான் மற்றவரைப் போல பொன்னுக்கும் மண்ணுக்கும் மட்டும் கவி படைப்பவள் இல்லை. உப்பு, புளி என்று ஏழைகள் அன்பாகக் கொடுக்கும் எதற்கும் கவி பாடுபவள்'' என்கிறார்.
கூழைப் பலாத் தழைக்கப் பாடக் குறமகளும்
மூழாக்குழக்குத் தினை தந்தாள் - சோழாகேள்
உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் எந்தன் உளம்.
நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லி, இப்பதிலின் மூலம் பொன்னுக்குப் பாடும் கம்பருக்கும் புத்திமதி புகட்டிவிடுகிறார். இப்படி ஏழைகளுக்காகவே பாடி, ஏழைகளுள் ஒருத்தியாக வாழ்ந்த ஒளவைக்கு ஏழைகள் கோயில் அமைத்து ஆடிச் செவ்வாய் தோறும் வழிபடுவது பொருத்தம்தானே!
நன்றி தினமணி
http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2014/08/03/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article2361743.எசே
இதெல்லாம் எப்ப போட்டாங்கன்னே தெரியல
By -முனைவர் ப. பானுமதி
First Published : 03 August 2014 01:30 AM IST
புகைப்படங்கள்
ஆடி மாதம் என்றால் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் திருவிழா நினைவுக்கு வருவது போலவே கூழுக்குக் கவிதைகள் ஊற்றிய அம்மனும் நினைவுக்கு வருவார். ஒளவையார் கோயில்கள் நாஞ்சில் நாட்டு நாவல் மர சோலைகள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றுள் தாடகை மலையடிவாரத்தில் (தோவாளை பகுதியில்) காணப்படும் தாழக்குடி ஒளவையாரம்மன் கோயிலும் அழகிய பாண்டிபுரம் பகுதியில் ஐந்துகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலும் சிறப்பு வாய்ந்தவை. ஆடிச் செவ்வாய்களில் ஒளவையாரம்மன் கோயில்கள் விழாக்கோலம் பெறுகின்றன. கூழும் கொழுக்கட்டைகளும் படைக்கப்படுகின்றன.
முன்பொரு காலத்தில் குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலில் இப்பகுதி வாழ் மக்கள் தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு எட்டு நாள்ளுக்கு முன்பு வந்து ஒளவையாருக்கு வழிபாடு நடத்துவார்களாம். வழிபாடு முடித்துச் சென்ற பின்பு மீண்டும் சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்ப்பார்களாம். அப்போது ஆபரணங்களும் அணிகலன்களும் நிறைந்திருக்கும் தங்கத் தாம்பாளாம் ஒன்று அங்கு இருக்குமாம். அதைக் கொண்டுபோய் மணமக்களுக்கு அணிவித்து திருமணம் நடத்துவார்களாம். திருமணம் முடிந்து எட்டு நாள் கழித்து மீண்டும் வந்து அர்ச்சனை செய்து அந்தத் தாம்பாளத்தை அக்கோவிலில் வைத்துவிட்டு திரும்புவார்களாம். அப்போது "எடுத்தேன்' என்று ஓர் அசரீரி கேட்குமாம். இது வழக்கமாக நடைபெற்று வந்ததாம். ஆனால், ஒருமுறை அப்படி "எடுத்தேன்' என்று அசரீரி ஒலித்தபோது, அந்த ஊர்வாசி ஒருவன் "பார்த்தேன்' என்று பதில் கொடுத்தானாம். "அடைத்தேன்' என்று பதில் கூறிய அசரீரி அன்று முதல் இவ்வழக்கத்தை நிறுத்திக் கொண்டது என்ற சுவையான கதையும் இக்கோயில் வரலாற்றுக்குள் உண்டு. இப்போதும் திருமணமாகாத பெண்களும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களும் ஒளவையாரம்மனை வேண்டிக்கொள்வதும் நோன்பு இருப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தெய்வமாகவே மாறி கூழையும் கொழுக்கட்டைகளையும் படையலாக ஏற்றுக் கொள்ளும் ஒளவையாரைக் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என்று சொல்லிதான் வணங்குகின்றனராம். ஒளவையார் தாம் வாழும் காலத்தில் கூழுக்குக் கவி பாடிய கதைகளும் உண்டே!
சோழ நாடு சென்றடையும் ஒüவை வழியில், ஒரு குறத்திப்பெண் அழுது கொண்டிருப்பதைக் கண்டு, ""ஏனம்மா அழுகிறாய்?'' என்கிறார்.
""என் கணவன் ஆசையாக வளர்த்து வந்த பலாமரத்தை மூத்த மனைவியாகிய என்னிடம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியூர் சென்றார். கணவன் என்மீது அன்பாக இருப்பதைக் கண்டு பொறுக்காத என் சககிழத்தி(சக்களத்தி), என் மீது பழி சுமத்துவதற்காக அம்மரத்தை வெட்டி விட்டாள். என் கணவன் வந்து கேட்டால் நான் என்ன செய்வேன்?''
என்று கூறி அழுதாள். இதைக் கேட்ட ஒளவையார் ஒரு பாடல் பாட, உடனே அம்மரம் மீண்டும் தழைத்து நின்றது.
அதைக் கண்டு மகிழ்ந்த அக்குறத்தி, ஒüவைக்கு தன்னிடமிருந்த தினையில் நான்கு உழக்கு அள்ளித் தருகிறாள். அந்த அன்புப் பரிசினைத் தாம் கையில் வைத்திருக்கும் துணியில் மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு ஒüவை, சோழன் அரண்மனைக்குள் நுழைகிறார்.
ஒளவையின் கையில் இருந்த மூட்டையை உற்றுப் பார்த்து விட்டு, ""தமிழ்க் கவியே! அந்த மூட்டையில் என்ன இருக்கிறது?'' என்று கேட்கிறான் சோழன். அவையில் கம்பரும் இருக்கிறார். சோழன் அவ்வப்போது கம்பரைப் பாராட்டிப் பேசுவதும் ஒளவையைச் சரியாக மதிக்காது இருப்பதுமாக இருப்பவன். கம்பரை வைத்துக்கொண்டு மன்னன் இக்கேள்வியைக் கேட்டது ஒளவைக்குத் தம்மை ஏளனப்படுத்துவதாகத் தோன்றியது.
உடனே ஒளவை, பலா மரம் தழைக்கத் தாம் பாடியதையும் குறத்தி அதற்குப் பரிசாக தினையைக் கொடுத்ததையும் கூறி, ""ஏழைகள் மனம் களிக்கப் பாடும் என்னிடம் என்ன இருக்கும்? அந்த ஏழைகள் கொடுத்த எளிய பரிசுப் பொருள்களான தினைதான் உள்ளது. சோழா! கேட்டுக்கொள். நான் மற்றவரைப் போல பொன்னுக்கும் மண்ணுக்கும் மட்டும் கவி படைப்பவள் இல்லை. உப்பு, புளி என்று ஏழைகள் அன்பாகக் கொடுக்கும் எதற்கும் கவி பாடுபவள்'' என்கிறார்.
கூழைப் பலாத் தழைக்கப் பாடக் குறமகளும்
மூழாக்குழக்குத் தினை தந்தாள் - சோழாகேள்
உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் எந்தன் உளம்.
நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லி, இப்பதிலின் மூலம் பொன்னுக்குப் பாடும் கம்பருக்கும் புத்திமதி புகட்டிவிடுகிறார். இப்படி ஏழைகளுக்காகவே பாடி, ஏழைகளுள் ஒருத்தியாக வாழ்ந்த ஒளவைக்கு ஏழைகள் கோயில் அமைத்து ஆடிச் செவ்வாய் தோறும் வழிபடுவது பொருத்தம்தானே!
நன்றி தினமணி
http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2014/08/03/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article2361743.எசே
இதெல்லாம் எப்ப போட்டாங்கன்னே தெரியல
Re: தினமணியில் என் கட்டுரை
எப்போ போட்டா என்னக்கா...? எங்களுக்கு தெரியவேண்டிய நேரத்துல தெரிஞ்சுடுச்சே.... கட்டுரை அருமை. ஒவ்வை யை பற்றி அறியா தகவல்கள். அக்கா!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தினமணியில் என் கட்டுரை
மேற்கோள் செய்த பதிவு: 1139752விமந்தனி wrote:எப்போ போட்டா என்னக்கா...? எங்களுக்கு தெரியவேண்டிய நேரத்துல தெரிஞ்சுடுச்சே.... கட்டுரை அருமை. ஒவ்வை யை பற்றி அறியா தகவல்கள். அக்கா!
இல்லை விமந்தனி. அவர்கள் எனக்குத் தெரியப் படுத்தவில்லை. நான் எதையோ தேட இது கிடைத்தது. அதனால் சொன்னேன். நன்றி விமந்தனி.
Similar topics
» தினமணியில் - ஆதிரா
» முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்)
» காதல் கட்டுரை
» தாயே−கட்டுரை
» குமுதம் கட்டுரை
» முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்)
» காதல் கட்டுரை
» தாயே−கட்டுரை
» குமுதம் கட்டுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|