Latest topics
» கருத்துப்படம் 03/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் மமதையை விட்டொழி !
4 posters
Page 1 of 1
உன் மமதையை விட்டொழி !
இறைவன் ஒருவன் தான்
இதிலெனக்கு
ஐயமில்லை !
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!
இருக்கும் ஒருவனை
பல்லுருவமாக்கிய
மாக்களில்
தன் வசதிக்கவன்
வார்த்தைகளை
வளைத்து
விதி செய்த
மக்களில்
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!
உருவத்தை!
அருவத்தை!
கல்லை !
மரத்தை!
பெயர் மாற்றி
உரு மாற்றி
முறை மாற்றி
எவரெதை
வணங்கினும்
அவனொருவனுக்கே
வந்தனையெல்லாம்
எனும்போது
வீண்
நிந்தனை எதற்கு
அடுத்தவன் முறைக்கு
மதம் தன்னில்
மதம் கொண்டு
அதம் செய்து
வதம் செய்து
அடுத்தவன்
மதமழித்து
மமதை
கொண்டாடி
மண்ணுக்குப்
போனபின் நீ
மதமல்ல
மண் தான்
உன்னடையாளம்
மூடா!
மறுபடி பிறந்து
நீயுன்னை
மாற்றிக் கொள்ள
முடியாது!
எவனெவனுக்கு
எது சரியோ
அவனவனை
அது படி விடு
உனக்கு நீ சரி
எனக்கு நான் சரி
இதில் யார் சரி
தீர்மானிக்க
நாம் யார்!?
மண்ணுக்குள்
மொழிக்குள்
கலாசாரத்துக்குள்
அவனவன்
தன் வசதிக்கு
கடவுளைத்தேடி
வாழட்டும் விடு !
அவன் முறை
பிழை
என்றால்
அதை அவன்
தேடும்
கடவுளே
பார்த்துக் கொள்ளட்டும்!
அவனையடக்கி
அழித்து
எண்ணிக்கையில்
தன்மதம்
தொடர்வோர்
கூட்ட எப்போதுன்
கடவுள்
கட்டளை
இட்டான்!
மூடா!
எண்ணிக்கையில்
இல்லை
உன் இறைவனின்
மாண்பு !
வாழும்
மனிதத்துவத்தில்
உள்ளது
இறையவன்
பேரொளி!
நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !
-தமிழினியன்-
இதிலெனக்கு
ஐயமில்லை !
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!
இருக்கும் ஒருவனை
பல்லுருவமாக்கிய
மாக்களில்
தன் வசதிக்கவன்
வார்த்தைகளை
வளைத்து
விதி செய்த
மக்களில்
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!
உருவத்தை!
அருவத்தை!
கல்லை !
மரத்தை!
பெயர் மாற்றி
உரு மாற்றி
முறை மாற்றி
எவரெதை
வணங்கினும்
அவனொருவனுக்கே
வந்தனையெல்லாம்
எனும்போது
வீண்
நிந்தனை எதற்கு
அடுத்தவன் முறைக்கு
மதம் தன்னில்
மதம் கொண்டு
அதம் செய்து
வதம் செய்து
அடுத்தவன்
மதமழித்து
மமதை
கொண்டாடி
மண்ணுக்குப்
போனபின் நீ
மதமல்ல
மண் தான்
உன்னடையாளம்
மூடா!
மறுபடி பிறந்து
நீயுன்னை
மாற்றிக் கொள்ள
முடியாது!
எவனெவனுக்கு
எது சரியோ
அவனவனை
அது படி விடு
உனக்கு நீ சரி
எனக்கு நான் சரி
இதில் யார் சரி
தீர்மானிக்க
நாம் யார்!?
மண்ணுக்குள்
மொழிக்குள்
கலாசாரத்துக்குள்
அவனவன்
தன் வசதிக்கு
கடவுளைத்தேடி
வாழட்டும் விடு !
அவன் முறை
பிழை
என்றால்
அதை அவன்
தேடும்
கடவுளே
பார்த்துக் கொள்ளட்டும்!
அவனையடக்கி
அழித்து
எண்ணிக்கையில்
தன்மதம்
தொடர்வோர்
கூட்ட எப்போதுன்
கடவுள்
கட்டளை
இட்டான்!
மூடா!
எண்ணிக்கையில்
இல்லை
உன் இறைவனின்
மாண்பு !
வாழும்
மனிதத்துவத்தில்
உள்ளது
இறையவன்
பேரொளி!
நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !
-தமிழினியன்-
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
Re: உன் மமதையை விட்டொழி !
கவிதை நன்று
சிறு சந்தேகம்
நான் என்பதே மமதை தானே
சிறு சந்தேகம்
நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !
நான் என்பதே மமதை தானே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உன் மமதையை விட்டொழி !
அருமையான கவிதை ஐயா!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: உன் மமதையை விட்டொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1139329balakarthik wrote:கவிதை நன்று
சிறு சந்தேகம்நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !
நான் என்பதே மமதை தானே
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.
இறைவனென்
நாவில்
உரைப்பதைக்
கேட்டுன்
மமதையை
விட்டொழி !
என்று மாற்றினால்
சரி தானே ?
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
Re: உன் மமதையை விட்டொழி !
அற்புதம் தமிழினியன் . சிறந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: உன் மமதையை விட்டொழி !
மேற்கோள் செய்த பதிவு: 1139467shobana sahas wrote:அற்புதம் தமிழினியன் . சிறந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.
நன்றி நண்பரே உங்கள் ரசனைக்கு! முடிந்தால் என் பழைய பதிவுகளையும் வாசித்து கருத்திடுங்கள்
என்னை வளமாக்க அவை உதவலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1139411[quote="தமிழினியன்"]தமிழினியன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139329balakarthik wrote:கவிதை நன்று
சிறு சந்தேகம்நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !
நான் என்பதே மமதை தானே
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.
இறைவனென்
நாவில்
உரைப்பதைக்
கேட்டுன்
மமதையை
விட்டொழி !
என்று மாற்றினால்
சரி தானே ?
மேற்கோள் செய்த பதிவு: 1139329balakarthik wrote:கவிதை நன்று
சிறு சந்தேகம்நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !
நான் என்பதே மமதை தானே
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.
இறைவனென்
நாவில் நின்று
உரைப்பதைக்
கேட்டுன்
மத மமதையை
விட்டொழி !
என மாற்றி வாசியுங்கள் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் !
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|