ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

+9
ஜாஹீதாபானு
balakarthik
krishnaamma
Aathira
விமந்தனி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
Preethika Chandrakumar
சரவணன்
13 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by சரவணன் Thu May 28, 2015 11:41 am

First topic message reminder :

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 10403035_768289289936304_2655953809870067144_n

வேம்பு, ஆலமரம், அரசமரம், புங்கை, அத்தி ஆகிய மரங்கள் நம் மண் சார்ந்த மரங்கள். இவை மழையை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. குளிர்ச்சியை உண்டுபண்ணுவதில் இந்த மரங்கள் முதன்மையானவை. ஆகவே இந்த மரங்க நட்டு மழை அளவை அதிகரிக்கசெய்யலாம். இந்த மரங்களை பற்றி மேலதிக தகவல்களை படிக்கும் முன்னர் சற்றே மண் சாரா மரங்களை பற்றி பார்த்துவிடுவோம்.

மழையை குறைக்கும், நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டல நீரை அதிக அளவு உருஞ்சும் மண் சாரா மரங்கள் இந்த சீமக
கருவேலம் மற்றும் யூகலிப்டஸ் என்று சொல்லப்படும் தைல மரம். இந்த தைல மரத்தை பற்றி தெரிந்தும் அரசே இதை வளர்ப்பதும், இதை வளர்ப்பதற்கு மானியம் தந்து ஊக்குவிப்பதும் வேதனையிலும் வேதனை.

இந்த மரங்கள் பூமியின் என்பது அடி ஆழத்திற்கும் மேல் சென்று நீரை உருஞ்சிவிடும். பொதுவாக இந்த மரங்கள் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு செல்லும் போது இந்த விதைகளை தூவி சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது நமது விவசாயத்தையும், இயற்கை வளங்களையும் சீரிழிக்க அவர்கள் செய்த சதி என்று சொல்லப்படுகிறது.
சீம கருவேலம் அதிக அளவு வளிமண்டல பிராண வாயுவை உறிஞ்சும் தன்மை கொண்டது, மேலும் அதிக அளவு கார்பன்டை ஆஹ்சைடுவையும் வெளியிடுகிறது. இது விறகுக்காக பயன்படுவதை தவிர வேறொரு பயனும் இல்லை.

நிலவுக்கும், செவ்வாய்க்கும் ஆள் அனுப்ப முடியும் என்று சொல்லும் நம் விஞ்ஞானிகளால் இதை அழிக்க களைகொல்லிகள் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது அதற்கு மனமில்லையா என்று தெரியவில்லை..

மழை தரும் மண் சார்ந்த மரங்கள்:

ஆலமரம்:- மிகச்சிறிய விதை ஆனால் மிகப்பெரிய மரம். நல்ல உடல் பலத்தையும் ஆண்மையையும் கொடுக்கும் பழம் ஆலம் பழம். தந்தை மகன் உறவு பற்றி சொல்லும் போது இந்த ஆல மரத்தை ஒப்பிடுவார்கள். விழுது மரத்திற்கு துணையாவது போல தந்தையை மகன் காக்க வேண்டும் என்று சொல் வழக்கமும் உண்டு நம் நாட்டில்.

அரசமரம்:- தேவ விருட்சம் என்று சொல்லப்படும் இந்த மரமும் மனிதனுக்கு பல வகைகளில் பயனுள்ள மரம். பெண்களில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த மரம் நல்ல தீர்வு. குழந்தை இல்லாத பெண்கள் அரச மரத்தை சுற்றுவது வழக்கம் அரச மரத்தின் காற்று கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது. மேலும் அரசம் பழம், அரச மர பட்டை இவை அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிட்டது என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. இது குழைத்தை பெற பெண்கள் அரச மரத்தை சுற்றி வருவதை பற்றி சொல்லும் வழக்கம்.  

வேம்பு: இதை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. மிகவும் முக்கிய மருந்து பொருளாகவே இந்த மரம் விளங்குகிறது.  விவசாயத்திற்கும், கால்நடைகளும், மனிதனுக்கும் மிகவும் பயனுள்ள மரங்களில் முதன்மையானது வேம்பு தான். அம்மை நோய் என்று சொன்னவுடன் சட்டெண்ட நினைவிற்கு வருவது இந்த வேம்பு தான். மேலதிக தகவல்களை தனிப் பதிவில் பாப்போம்.

அத்தி மரம்: சிம்லா அத்தி, பேயத்தி என்று அத்தி மரத்தில் சில வகைகள் உள்ளன. நம் ஊர்களில் வயல் வெளிகளில் அதிகம் காணப்படும் பேயத்தி தோல் நோய்களை குணப்படுத்த, தேக ரணங்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகிறது. அத்தி பழம் ஆண்மை பலத்தை அதிகரிக்க நல்ல மருந்து.

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Images?q=tbn:ANd9GcQrgj7wmIrLJQ-z6tPS_9JGedqKW1MfyCDlJ1hAOsduOmVrL1Mk

புங்கை மரம்: வீட்டு வாசலில் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். வேர் அதிக பலம் இல்லாததால் வீட்டின் அருகில் இதை வளர்க்கலாம். கோடை காலங்களில் இந்த மரத்தின் கீழ் அமர்ந்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த மரங்கள் அனைத்தும் மழைதருவதிலும், வெயிலின் தாக்கத்தை குறைப்பதிலும் முக்க  பங்காற்றுகிறது.


நான் நிறைய புங்கை, வேம்பு, பனை மரங்களை எங்கள் ஊரில் நட்டு வைத்திருக்கிறேன்.


Last edited by சரவணன் on Sat May 30, 2015 4:20 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty Re: மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by krishnaamma Thu Jun 04, 2015 1:33 pm

சரவணன் wrote:கண்டிப்பாக அம்மா. இது நாட்டுக்கு மிகவும் தேவையான தகவல்...
எனக்கு தெரிந்தது அவ்வளவுதான். இன்னும் தகவல் கிடைக்குமா என காத்திருக்கிறேன்..........
மேற்கோள் செய்த பதிவு: 1141926

எனக்கு பிடித்த, என்றாவது ஒருநாள் நான் வளர்க்கணும் என்று ஆசைப்படும் மரங்களை போடுகிறேன் இங்கு புன்னகை

முதலில் பன்னீர் மரம்........ஆஹா!. என்ன வாசனையாய் இருக்கும் தெரியுமா இந்த பூக்கள், பறிக்கும் முன் வாடிவிடும்.............எனக்காக எங்கள் மன்னி இன் அம்மா பறித்து கொட்டங்குச்சியில் வைத்திருப்பார்.............கிண்ணி இல் வைத்தால் கூட துவண்டுவிடும் என்று....அவ்வளவு மென்மையான மலர்......
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 ZTxuop2TMG0GNsgwOHqg+220px-Guettardia2
"மோப்க்குழையும் அனிச்சம்" என்று இதத்தான் சொன்னார்களோ என்று கூட எனக்குத்தோன்றும்.........நாங்கள் செங்கல்பட்டில் இருந்தபோது, பக்கத்து வீட்டில் இருந்தது ஆனால் பூ மொத்தமும் எங்கள் மொட்டை மாடிக்குத்தன் ஜாலி ஜாலி ஜாலி.....வாசனையும் தான் புன்னகை

ரொம்ப பெரிசாய் இருக்கும், நிறைய நிழல் தரும்.

இந்த விவரம் விக்கி லிருந்து : பன்னீர் மரம் (Guettarda speciosa) என்பது ஒருவகை மரம். இம்மரம் அகன்ற கொத்தான இலைகளையும், வெண்ணிற நீண்ட மணமுள்ள பூக்களையும் உடைய படர்ந்து வளரும் மரம். பூக்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty Re: மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by krishnaamma Thu Jun 04, 2015 1:38 pm

அடுத்தது சண்பக மரம் :.....இப்போ பெங்களூரில் நிறைய இருக்கு ரோடு ஓரங்களில், வாசனைக்கு பாம்பு வந்து விடும் என்று எங்கள் காம்பௌண்டுக்குள் வைக்க கூடாது என்று சொல்லி விட்டார்கள்.

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 R4gzrYsJTJGh7EmFRxmc+gsv-champak-tree-0009

இந்த விவரம் விக்கி லிருந்து :சண்பகம் என்பது மிகுந்த நறுமணத்தைக் கொண்ட ஓர் அரிய தாவரம். அதனாலேயே இது பெருமளவிற் பயன்படுத்தப்படுவதில்லை. தலையிற் சூடப்படும் போது இதன் தனியொரு பூவே சூடப்படுகிறது. சில வேளைகளிலேயே இது சிறிய கொத்தாகச் சூடப்படும். மிக அரிதாகவே இதனாற் செய்யப்பட்ட மாலைகள் அணியப்படுகின்றன.

மணவறைக் கட்டில்களை அலங்கரிப்பதில் மல்லிகையும் உரோசாவும் போன்றே இதுவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் கொண்ட நீர்ப் பாத்திரங்கள் அறைகளில் வைக்கப்படுகின்றன. அழகு மிகுந்த இதனால், நறுமணத் தன்மை குறைந்த ஏனைய பூக்களுடன் சேர்த்து அலங்கரிக்கப்படுகிறது."

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 1pI9RtLuQWtfdTCB6y4v+200px-Magnolia_champaca2

சண்பகப் பூவின் நறுமணத்தின் காரணமாக இது 'களிப்புறு நறுமண மரம்' என்றும் அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் பல இல்ல நறுமணத் தயாரிப்பாளர்கள் சண்பகப் பூவைக் கொண்டு நறுமணப் பொருட்களைத் தயாரிக்கின்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty Re: மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by krishnaamma Thu Jun 04, 2015 1:49 pm

மகிழ மரம்..............இந்த பூக்களும் மணம் மிக்கவை...பூ வாட வாட மணம் அதிகரிக்கும்............மிகபெரிய மரங்களாக வளரும்................கோடை இல் தான் பூக்கும், நாங்கள் சின்ன வயதில் கோடை விடுமுறை இன் போது, எங்கள் வீட்டருகே இருந்த போஸ்ட் ஆபீஸ் இல் இந்த மாரம் இருக்கும், அங்கு போய் கிழே உதிர்ந்த புக்களை போருக்கு மாலை கோர்ப்போம்.....இன்றும் நீங்கள் திருப்பதி உத்சவருக்கு பல சரங்களாய் கோர்த்து நல்ல தடிமனாய் 'தாம்பு கயறு' போல போட்டிருப்பதை காணலாம் புன்னகை

எங்கள் வீட்டு வாசலில் வைத்திருக்கோம் இந்த மரத்தை புன்னகை.......இப்போ கொஞ்ச மாதங்கள் முன்பு நாமக்கல் நரசிம்ஹர் கோவிலில் மிகப்பெரிய மகிழ மரம் பார்த்தோம்.

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 1SkmOVFTfyzrwOo2rB60+IMG_5094

இந்த விவரங்கள் முலிகை ப்ளாக் லிருந்து எடுத்தேன் : பண்டைய தமிழ் மக்கள் பாரிய கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கும்போது மகிழமரக் கன்று ஒன்றை நட்டு மகிழ்ந்தார்கள். மகிழ மரமும் அதன் மலரின் மணமும் வித்தும் பலத்த விருத்தழயையும் பல ரோகங்களை நீக்கும் சக்தியையும் கொண்டவை.

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 LUvDNOyQtuw4tyGhjZMj+mahilam6

மகிழமரம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. மேற்குத் தோடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. இதற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. இதன் பூர்வீகம் வட ஆசியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் வட ஆஸ்திரேலியா. இதன் உயரம் 20 முதல் 50 அடி உயரம் வளரக்கூடியது. அடர்த்தியான இலைகளையுடைய பசுமை மரம். நல்ல நிழல் தரும் மரம். மனதைக் கவரும் இனிய மணமுடைய கொத்தான வெள்ளைப் பூக்களையும் மஞ்சள் நிற சாப்பிடக் கூடிய பழங்களையும் உடைய மரம்.

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 XS7wva8sRZGYz6A2s1sj+2

பூவின் மணத்திற்காக நகரங்களில் பூங்காவிலும் கோயில் களிலும், வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இதன் மணம் மனதை மகிழவைக்கும். மகிழமரம் விதை நாற்றுக்கள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 KH7SCubETN6lAeIqHkQw+IMG_5094

மகிழ மரத்தின் மலர்கள் சக்கர வடிவத்தில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும். பழந்தமிழ் இலக்கியமான சீவகசிந்தாமணியில் “ஓடுதேர்க்கான் வகுளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கனிகள் முட்டை வடிவில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty Re: மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by சரவணன் Thu Jun 04, 2015 1:53 pm

ஆவாரம் பூ மரம் எப்படி இருக்கும் என்றும் அதன் பயன்களையும் சொல்லுங்கள் அம்மா.
இணையத்தில் ஒரே மாதிரி இரண்டு மூன்று மரங்களின் படத்தை கொடுத்துள்ளனர்.. குழம்பி போயிருக்கிறேன்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty Re: மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by krishnaamma Thu Jun 04, 2015 1:58 pm

விக்கி இலிருந்து : மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை) இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பூ வருடத்திற்கு இரு முறை பூக்கும். மலர்கள் மிகுந்த வாசனையை கொண்டது. இப்பூவைக் கொண்டு மாலைகளும், மலர் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 3c01WOTQmO8y1HMmJ6Br+2vcg7js

மரமல்லி சங்கநூல் குறிப்புகள்:

குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.
குடியிருப்பு மனைகளில் இதனை நட்டு வளர்ப்பர்.
இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும்.
ஊர் ஓரப் பள்ளங்களில் இது வளர்க்கப்படும்.
மல்லிகை, மௌவல், சண்பகம் ஆகியவை வெவ்வேறு மலர்கள்.
மகளிர் சிரிப்பது போலப் பூக்கும்.
சில பெண்களின் பற்களை இக்காலத்தில் ‘அரிசிப்பல்’ எனப் பாராட்டுவர். இதனைச் சங்கப்பாடல்கள் மௌவலோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.
நொச்சிச் செடி ஆற்றங்கரைகளில் வளரும். இது ஆற்று நொச்சி. வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலை ‘மனைநொச்சி’ எனவும் வழங்கினர்.

எங்கள் வீட்டில் இது நிறைய இருக்கு. Exit டிரைவ் ரோடு பூரவும் இவைதான்........மாடி லிருந்து பார்க்க ரொம்ப அழகாய் இருக்கும் . அதே போல பெங்களூர் ஏர்போர்ட் வரும் வழி இல் ஒரு 200 - 300 மீட்டருக்கு இரண்டு புறமும் இதேமரங்கள் பூத்து குலுங்கும் அழகே அழகு ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty Re: மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by krishnaamma Thu Jun 04, 2015 2:04 pm

இதோ இது தான் ஆவாரம் பூ சரவணன்... ரோட்டு ஓரங்களில் பார்க்கலாம், மிகவும் அழகான அழுத்தமான மஞ்சள் பூக்களுடையது ...............

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 SLmkUSYbQ767nqy7nX3M+download

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 SbHIBEiTVO21mEiwQvyT+Aavaram


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty Re: மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by krishnaamma Thu Jun 04, 2015 2:09 pm

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 RXXN2axQhaZ5dBBtDmfX+10945585_788457754563111_4784549572978760518_n

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு .  இதுதான் ஆவாரம் பூ. “நீரிழிவு” நோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு சூப்பர் மருந்து.  ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம்.

இதனால தோல் நமைச்சல் தீரும்.  ஆவாரையின் இலை, பட்டை, பூ, வேர், பிசின் இப்படி எல்லாத்திலயும் மருத்துவ குணம் இருக்கு.” தொடர்ந்து ஆவாரம் பூ பற்றி பார்க்கலாம். ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

ஆவாரம்பூ என்பது தங்கச் சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது . சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின் விலையும் அதிகம் . சரியாக முடியாத தங்க பற்பம் சிறுநீரகத்தைப் பாதிக்கும் . ஆனால் ஆவாரம்பூ என்பது இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பஸ்பம். .

அதே சமயம் ஆவாரம்பூ மிக எளிதாக , விலையில்லாமல் அங்கங்கே பூத்துக் கிடக்கிறது . ஒரு முறை மூலிகை ஆராய்ச்சி செய்ய கொல்லி மலைக்குச் சென்ற மாணவர்கள் அங்கே ஒரு சித்தரைக் கண்டார்கள் . அவர் உடல் ஒளி வீசும் பொன்னிறமாக இருந்தது . அவரிடம் அந்த மாணவர்கள் கேட்டார்கள் உங்கள் ஒளி வீசும் பொன்னிற உடலுக்கு காரணம் என்ன என்று கேட்டார்கள் . அதற்கு அவர் சொன்னார் ” ஆவாரம்பூ என்ற இந்த பொன் மூலிகைதான் எனது இந்த பொன்னிற ஒளி வீசும் உடலுக்கு காரணம் “என்றார் .

“ஆவாரம்பூ காலையில் ஒரு கைப்பிடி , மாலையில் ஒரு கைப்பிடி பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறேன் ” என்றார் . “அதன் விளைவாக ஆவாரம்பூவில் உள்ள தங்கச் சத்து எமது உடலில் ஊறி உடல் இப்படி மாறியது ” என்றார் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த மூலிகை இந்த ஆவாரம்பூ .

இணையத்திலிருந்து புன்னகை

Avaram flower. "Dreaded" disease may avaram Flower. Diabetics Foot potentially irritating, , arthritis, excessive thirst, nerve damage, kidney avaram to all of the flower (brew) drinking a super drug. greengram avaram mixed on sick tinged bath. Impossible to heal skin itch. Awaara the leaf, bark, flower, root, adhesive medicinal aspects of it. "Keep watch over avaram flower.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty Re: மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by krishnaamma Thu Jun 04, 2015 2:14 pm

சரக் கொன்றை மலரின் அழகை யாராவது பார்த்து இருக்கிறீர்களா ? ஆண்டில் சித்திரை மாதத்தில் மட்டுமே பூக்க கூடிய பூ இது. மஞ்சள் நிறத்தில் மரம் முழுவதும் தங்கத்தால் பூசி மெழுகியது போல அத்துனை பொலிவாக காணப்படும். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மலர் இது.

எங்கள் பள்ளி இல் இருந்தது, கொத்து கொத்தாய் பூக்கும், நிறைய முறை அப்படியே
பறித்துவைத்துக்கொண்டு இருந்திருக்கிறேன் + 2 படிக்கும் போது புன்னகை

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 FIRNIXnzQUKgTmQ0P7IV+kondrai

எத்தனை அழகு, எத்தனை பொலிவு. மரத்தில் இருக்கும் மலர்களை பார்த்து கொண்தே இருக்கலாம் போல இருக்கும்.....மெல்லிய  மணம் இருக்கும்.............. இலைகளே தெரியாத அளவுக்கு பூக்கள் வரும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty Re: மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by krishnaamma Thu Jun 04, 2015 2:19 pm

இதிலேயே 'புலி நகக் கொன்றை' வகை ஒன்று இருப்பதாக எங்க அப்பா சொல்லி இருக்கிறார், வெகு நாட்டகள் அந்த விதைகளை பத்திரமாய் வைத்திருந்தேன், பூக்கள் புலி நகங்கள் போல இருக்குமாம் புன்னகை

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 HiNXg54FSUC988l7MhTf+desikan_17_1_big

இதோ இந்த பூ தான் அது, நன்றி : தமிழ் studio


Last edited by krishnaamma on Thu Jun 04, 2015 2:23 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty Re: மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by balakarthik Thu Jun 04, 2015 2:22 pm

சில வகைகளை இப்போதான் கேள்வியேபடுகிறேன் அறிய தகவல்கள் நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 3 Empty Re: மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum