ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு - உடலும் மனமும் சார்ந்தது !

4 posters

Go down

உணவு - உடலும் மனமும் சார்ந்தது ! Empty உணவு - உடலும் மனமும் சார்ந்தது !

Post by krishnaamma Tue May 26, 2015 3:56 pm

உணவு - உடலும் மனமும் சார்ந்தது ! KZt5Ab6xTEyz6eQSYMM2+krishna

ஆஹார சுத்தெள ஸத்வ சுத்தி'' - "ஒருவனது ஆஹாரமானது தூய்மையானதாக இருந்தால் அவனது ஸத்வம் (உடலும் உள்ளமும்) தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. உணவு சமைப்பவரின் மனநிலையும், உணர்வுகளும் உணவைப் பாதிக்கும். அசுத்தமான பழக்க வழங்கங்களையும் அசுத்தமான தீய உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் மனநிலை கொண்டோரால், தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும் பக்தர்கள், சமைப்பவரின் மனநிலையால் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களது பாவகரமான கர்மாக்களில் (தீவினைகள்) பங்கெடுத்துக் கொள்ள நேரிடும்' என்கிறார் சுவாமி பிரபுபாதா. அதனால், ஆன்மிக வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மிகவும் அவசியமாகிறது.

உணவும் மனமும் நம் மனதிற்கும் நாம் உண்ணும் உணவிற்கும் தொடர்புண்டு என்கின்றன நம் சமய நூல்கள். ஒருவர் உண்ணும் உணவு உடல் (வலிமை), மனம், மலம் (கழிவுப் பொருள்) ஆகிய மூன்று கூறாக ஆகும் என்பதை திருமூலர் ஒரு பாடலில் கூறியுள்ளார்.

அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்

பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்

திருந்தும் உடன்மல மாம்கூறு சேர்ந்திட்டு

இருந்தன முன்னாள் இரதம தாகுமே!

இப்பாடலின் கருத்தை அடியொற்றி, ""ஒருகூறு மலமாகும் ஒருகூறு உடம்பாகும் ஒருகூறு மனமாகும் உண்டற்ற அன்னம்'' என்கிறது "சசிவன்னபோதம்' என்கிற நூல். ஒருவர் உண்ணும் உணவு தூல உடம்பிற்கு வலிமையைத் தரும் என்பதையும், கழிவுப் பொருளாகிய மலமாகும் என்பதையும் எல்லோரும் அறிவர். ஆனால், உண்ணும் உணவின் ஒருகூறு மனமாகுமா? என்பது பலருடைய கேள்வி.

இதற்குத் தகுந்த உதாரணம், மது, அபின், கஞ்சா போன்ற போதை மருந்துகளைக் குறிப்பிடலாம். இவற்றைப் பருகியவுடன் பருகியவருக்கு மயக்கம் உண்டாகிறது. இதனால், உடலுக்குள் சென்ற ஒன்று அதன் குணத்திற்குத் தக்கவாறு அவரது உடம்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, உணவிற்கும் மனதிற்கும் தொடர்புண்டு என்கின்றனர் அருளாளர்கள்.

உணவும் முக்குணமும்: ஒவ்வொருவரின் மனமும் சாத்துவிகம் அல்லது சத்துவம், இராசதம் (இராஜதம்), தாமதம் (தாமஸம்) ஆகிய மூன்று குணங்களுக்கு இடமாகத் திகழ்கிறது.

பகவத்கீதை, குணத்ரய விபாக யோகம் (14) என்ற அத்தியாயத்தில், மக்கள் உண்ணும் உணவினை வைத்து, சத்துவ குணத்தார் உணவு, இராசத குணத்தார் உணவு, தாமச குணத்தார் உணவு என்று மூன்றாக வகைப்படுத்திக் கூறுகிறது. அம் மூவகை உணவுகள் வருமாறு:

சத்துவகுணத்தார் உணவு: ஆயுள், அறிவு, வலிமை, உடல்நலம், இன்பம், விழுப்பம் ஆகிய இவை உண்டாக்குபவை. இன்பச்சுவையை விளைவிப்பவையும், பசையுள்ளவையும் ஆகிய இவையெல்லாம் சத்துவகுண உணவாகும்.

இராசத குணத்தார் உணவு: கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிகச்சூடானது, காரம், வறட்சி, எரிச்சல் இவற்றை உண்டாக்குபவை. காமம், சினம் முதலானவற்றை உண்டாக்குவன இவ்வுணவின் தன்மை.

தாமச குணத்தார் உணவு: காலம் கழிந்தது, சுவையற்றது, கெட்ட நாற்றத்தை உடையது, மிகப் பழைமையானது, தூய்மையற்றது, வேகாதது முதலானவை இவ்வுணவின் தன்மை. புலால், கள், சாராயம் முதலானவை இதில் அடங்கும்.

சத்துவம், ராசதம், தாமசம் என்னும் பிரகிருதியிலிருந்து உண்டாகும் குணங்கள், அழிவில்லாத தேகியான ஜீவனை (அழிகின்ற) தேகத்தோடு பிணைத்து வைக்கின்றன (கீதை-5). அவற்றில் சத்வ குணமானது

மாசற்றதும், ஒளிபொருந்தியதும், துன்பமற்றதும் ஆகும். எனவே, அது ஜீவனை சுகத்தாலும் ஞானத்தாலும் பந்தப்படுத்துகிறது (6). ரஜோகுணம் இச்சை வடிவானது. ஆசையையும் பற்றுதலையும்

உண்டாக்குவது. அது தேஹியை (ஜீவனை) கர்மப் பற்றால் பந்தப்படுத்துகிறது (7). தமோ குணமானது அறியாமையில் பிறந்ததென்றும், அது எல்லா உயிர்களுக்கும் மயக்கத்தை உண்டாக்குவது என்றும்

அறிவாய். அது கவனமின்மை, சோம்பல், உறக்கம் இவற்றால் பந்தப்பட்டது(8). எப்போது இத்தேகத்தின் எல்லா புலன்களின் வழியாக ஞானம் பிரகாசிக்கிறதோ, அப்பொழுது சத்வ குணம் பெருகியுள்ளது.

என்று அறிந்துகொள்வாய்(9). சத்வ குணத்தார் மேல்நோக்கிப் போகிறார்கள். ராசத குணத்தார் மத்தியில் நிற்கிறார்கள், கீழோனான தாமச குணத்தோர் கீழ்நோக்கிப் போகிறார்கள்(18). தேகத்தால் உண்டாகும்.

இம்மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு, துக்கம் இவைகளிலிருந்து விடுபட்ட ஜீவன் மரணமற்றப் பெருவாழ்வை அடைகிறான்(20) என்கிறது பகவத்கீதை.

இம்மூவகைக் குணங்களுள் சத்துவகுணம் மேலிட்டால் சன்மார்க்கமான தெய்வகுணம் உண்டாகும் என்றும், இராசத குணம் மேலிட்டால் உலக வாசனை (உலகப்பற்று), தேகவாசனை முதலான எண்ணங்கள் உண்டாகும் என்றும், தாமசகுணம் மேலிட்டால் துன்மார்க்கமான (தீய) எண்ணங்கள் உண்டாகும் என்றும் தாண்டவராய சுவாமிகள் இயற்றிய "கைவல்ய நவநீதம்' என்னும் வேதாந்த நூல் குறிப்பிடுகிறது (கைவல்ய நவநீதம், சந்தேகம் தெளிதற்படலம், செ.16).

நாம் உண்ணும் உணவிலிருந்து அவ்வுணவின் பண்பாக மன உணர்வு தோன்றுகிறது. அம் மனவுணர்வு நல்ல உணர்வு, தீய உணர்வு என்று இருவகைப்படும். ஆகையால் தீய உணர்வுகளைத் தரும் உணவுப் பொருள்களை விலகிவிட்டு, நல்ல உணர்வுகளைத் தரும் இயற்கை உணவுகளை- தாவர உணவுகளை மட்டுமே உட்கொண்டு நல்லுணர்வை வளர்த்துக்கொண்டு மனிதருள் தெய்வமாக உயர வேண்டும்.

இத்தகைய தெய்வ மாற்றம் நிகழ வேண்டுமானால், "எவ்வுயிரையும் தம் உயிர்போல் கருதி அன்பு செய்து வாழும் ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும். அவ்வாறு ஜீவகாருண்யத்தோடு வாழ்வோர் உள்ளத்தில் மட்டுமே இறைவன் உறைவான் என்கிறது அன்பு நெறியாகிய சைவநெறி.

தினமணி - இடைமருதூர் கி.மஞ்சுளா.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவு - உடலும் மனமும் சார்ந்தது ! Empty Re: உணவு - உடலும் மனமும் சார்ந்தது !

Post by Preethika Chandrakumar Tue May 26, 2015 7:20 pm

உணவு - உடலும் மனமும் சார்ந்தது ! 3838410834 உணவு - உடலும் மனமும் சார்ந்தது ! 103459460 உணவு - உடலும் மனமும் சார்ந்தது ! 1571444738
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

உணவு - உடலும் மனமும் சார்ந்தது ! Empty Re: உணவு - உடலும் மனமும் சார்ந்தது !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 7:26 pm

நன்று
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உணவு - உடலும் மனமும் சார்ந்தது ! Empty Re: உணவு - உடலும் மனமும் சார்ந்தது !

Post by shobana sahas Tue May 26, 2015 7:57 pm

நல்ல பதிவு சகோதரி க்ரிஷ்ணாம்மா. மகிழ்ச்சி சூப்பருங்க உணவு - உடலும் மனமும் சார்ந்தது ! 3838410834 உணவு - உடலும் மனமும் சார்ந்தது ! 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

உணவு - உடலும் மனமும் சார்ந்தது ! Empty Re: உணவு - உடலும் மனமும் சார்ந்தது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum