புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
284 Posts - 45%
heezulia
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
20 Posts - 3%
prajai
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
7 Posts - 1%
mruthun
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_m10GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

GST என்ற பொருட்கள் சேவைகள் வரி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 25, 2015 9:05 pm

GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Gst_2417182f

வரி விதிப்பது ஓர் அரசின் முக்கிய அதிகாரங்களில் ஒன்று. வரி விதிக்காத அரசு, அரசாக இருக்கவும் முடியாது. வரி என்பதே நாம் கட்டாயமாக அரசுக்கு செலுத்த வேண்டியத் தொகை, அதே நேரத்தில் ஒவ்வொருவரும் செலுத்திய வரிக்கு ஏற்ப தனக்கு அரசு சேவைக் கொடுக்கவேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால் குடி உரிமை பெற்ற ஒவ்வொருவருக்கும் அரசின் சேவை களைக் கேட்கும் உரிமை உண்டு.

எதற்கு பொருட்கள் சேவைகள் மீது வரி?

ஒவ்வொருவரும் அவரின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப வரி செலுத்தவேண்டும் என்பது ஒரு கோட்பாடு. வரி செலுத்தும் திறனை அறிய ஆண்டு வருமானம் ஒரு சிறந்த குறியீடு, எனவே வருமான வரி முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால், ஒருவரின் வரிசெலுத்தும் திறன் முழுவதையும் வரியாக அரசு எடுத்துக்கொண்டால் அவர் மேலும் உழைப்பதற்கான ஊக்கத்தை இழக்கக்கூடும், அல்லது வரி செலுத்துவதைத் தவிர்க்கக் கூடும். வருமான வரி விகிதத்தை அதிகமாக வைக்கக்கூடாது என்பது ஒரு கருத்து.

பலரின் ஆண்டு வருமானத்தைக் கண்டறிந்து கணக்கிடுவது கடினம், ஆகையால் அவர்கள் குறைவான வருமான வரி செலுத்தலாம். இப்படி பல காரணத்தால், அரசுக்கு வருமான வரியில் இருந்து போதிய வரி வருவாய் கிடைப்பதில்லை; அரசு வேறு வரி ஆதாரங்களைத் தேடவேண்டியுள்ளது.

சொத்து வரி, (wealth tax) பரிசு வரி (gift tax) சொத்துகள் பரிமாற்றத்தின் மீது முத்திரைத் தாள் வரி (stamp duty) எல்லாமே இவ்வாறான வரி கோட்பாட்டின் அடிப்படையில் உருவானதுதான். இவையும் போதிய வரி வருவாயை பெற்றுத்தரவில்லை. இவை எல்லாமே நேர்முக வரிகள்தான், ஏனெனில், யார் வருமானம்/சொத்து பெறுகிறாரோ அவரே நேரடியாக அரசுக்கு வரியைச் செலுத்துவதால் இவை நேர்முக வரிகள்.

ஒருவரின் வரி செலுத்தும் திறனின் அடுத்த குறியீடு அவர் வாங்கும் பொருட்களின் மதிப்பு; பொருட்களின் மேல் வரி விதிப்பது அடுத்த முக்கியமான வரியாக மாறியது. பொருட்கள் கடைசி நுகர்வுக்கு வரும்போது அந்த இடத்தில் வரி விதிப்பதுதான் உத்தமம். அப்படியானால் கடைசி சில்லரை வாணிபத்தில் (retail sales tax) மட்டுமே வரி விதிக்கப்படவேண்டும்.

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சில்லரை வியாபாரம் என்பது மிகச் சிறிய அளவில் பலகோடி வியாபாரிகளால் செய்யப்படுவது, எனவே சில்லரை வியாபார வரியை மட்டுமே விதித்து நமக்குத் தேவையான வரி வருவாயைப் பெறமுடியாது. உற்பத்தி முதல் சில்லரை வியாபாரம் வரை எல்லா நிலைகளிலும் வரி விதிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

பொருட்கள், பணிகள் வரி

பொருட்கள் மீது வரிவிதிக்கும் அதிகாரத்தை மத்திய மாநில அரசுகள் பிரித்துக்கொண்டன. இறக்குமதி மீது சுங்கவரி (customs duty) விதிப்பதை, பொருள் உற்பத்தி மீது உற்பத்தி வரி (excise duty) விதிப்பதை மத்திய அரசும், பொருள் விற்பனை மீது விற்பனை வரி (sales tax) விதிப்பதை மாநில அரசும் எடுத்துக்கொண்டன.

ஒரு மாநிலத்துக்குள்ளேயே விற்பனை நடக்கும் போது அம்மாநில அரசு விற்பனை வரி வசூலிப்பது ஏற்புடையது. ஒரு மாநில வியாபாரி மற்றொரு மாநில வியாபாரிக்கு பொருள் விற்கும் போது எந்த மாநிலம் அந்த விற்பனை மீது வரி விதிப்பது என்ற சிக்கல் எழுந்தது.

இதற்காக மத்திய விற்பனை வரி (Central Sales Tax - cst) ஒன்றை மத்திய அரசு உருவாக்கி, அதன்படி எந்த மாநிலத்தில் வியாபாரம் உருவாகிறதோ அந்த மாநில அரசுக்கு 4% வரை விற்பனை வரி செலுத்தவேண்டும் என்றது, இப்போது CST வரிவிகிதம் 2% ஆக குறைந்துள்ளது. இதுமட்டு மல்லாமல் சில மாநில அரசும் octroi, entry tax போன்ற நுழைவு வரிகளும் விதிக்கின்றன.

1990 களுக்குப் பிறகு பல சேவைகளை வரி விதிப்புக்கு உட்படுத்தவேண்டும் என்ற யோசனை உருவானது. இந்திய அரசியல் சட்டத்தில் எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருப்பதால் அதனைப் பயன்படுத்தி மத்திய அரசு எல்லா சேவைகள் மீதும் சேவை வரி விதித்தது. சேவை வரி இன்று மத்திய அரசின் முக்கிய வரி ஆதாரங்களில் ஒன்று.




GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 25, 2015 9:06 pm

மறைமுக வரிகள்

பொருட்கள், சேவைகள் மீது வரி விதித்து அதனை வியாபாரிகள்தான் செலுத்தவேண்டும் என்ற சட்டம் இருந்தாலும், அந்த வரிகளைச் செலுத்துவது நுகர்வோர்தான். ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது அதன் மீதான வரி விற்பனை சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். நுகர்வோர் செலுத்தும் வரியை வாங்கி வியாபாரி அரசுக்குக் கொடுக்கிறார்.

விற்பனை வரியை அரசுக்கு நேரடியாக நுகர்வோர் செலுத்தாமல், மறைமுகமாக வியாபாரி மூலம் செலுத்துகிறார். இந்த வகையில் வியாபாரி ஒரு வரி வசூலிப்பவர்தான், அவர் தன்னுடைய பணத்தை வரியாகச் செலுத்துவதில்லை. இந்த வரியை வசூலித்து கொடுக்கும் சேவைக்கு ஆகும் செலவை அவர் நுகர்வோரிடமிருந்து விலை மூலம் பெறவேண்டும்.

இந்த வகை வரி வசூலிக்கும் முறை வரி வசூலிக்கும் செலவைக் குறைக்கும். நாட்டின் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மாதம் தோறும் தாங்கள் வாங்கும் எல்லா பொருட்களையும் கணக்கு வைத்து அரசுக்கு வரி செலுத்தவேண்டும் என்றால், அரசு அதிகாரி எவ்வளவு கணக்குகளை சரிபார்க்கவேண்டும்.

பொருட்கள், சேவைகள் மீது வரி விதித்து அதனை வியாபாரிகள்தான் செலுத்தவேண்டும் என்ற சட்டம் இருந்தாலும், அந்த வரிகளைச் செலுத்துவது நுகர்வோர்தான். ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது அதன் மீதான வரி விற்பனை சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். நுகர்வோர் செலுத்தும் வரியை வாங்கி வியாபாரி அரசுக்குக் கொடுக்கிறார்.

பொருட்களின் இறக்குமதி மீது சுங்க வரி, பொருட்களின் உற்பத்தி மீதான கலால் வரி, சேவைகள் மீதான சேவை வரி ஆகியவற்றை மத்திய அரசும், மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனை மீதான விற்பனை வரியை மாநில அரசும் விதிக்கின்றன.

இதுமட்டுமல்லாமல், மாநிலங்களுக்கிடையே நடைபெறும் விற்பனைகளுக்கு மத்திய அரசு 4% வரை மத்திய விற்பனை வரியை (CST) நிர்ணயித்து, அதனை அந்தந்த மாநிலமே வசூலிக்கிறது. பொருட்கள் மீதான கலால் (உற்பத்தி வரி) மற்றும் விற்பனை வரிகளில் பல சிக்கல்கள் உள்ளன.

விழுத்தொடர் விளைவு (cascading effect)

இந்த பிரச்சினைகளில் பிரதானமானது விழுத்தொடர் விளைவு. கலால் மற்றும் விற்பனை வரிகள் யாவும் உற்பத்தி அல்லது விற்பனையின் எல்லா நிலை களிலும் விதிக்கப்படும். கீழ் உள்ள அட்டவணை இந்த விழுத்தொடர் விளைவை விளக்க உதவும். இந்த அட்டவணை கலால் வரி (உற்பத்தி வரி) விதிப்புக்கானது என்று வைத்துக் கொள்வோம்.

அட்டவணை 1: விழுத்தொடர் விளைவு

இதில் ரொட்டியின் உற்பத்தியில் உள்ள இரண்டு நிலைகளில் கலால் வரி விதிக்கப்படுகிறது. இரண்டிலும் 10% தான் வரி விகிதம். எனவே, இறுதி பொருளின் அடிப்படை மதிப்பில் 10% தான் வரி செலுத்தியிருக்கவேண்டும். இறுதி பொருளின் மதிப்பு ரூ.130 ஆனால் செலுத்தப்பட்ட வரி ரூ 26.20. உண்மையில் ரூ.13 (130X10% = 13) தான் வரியாக செலுத்தவேண்டும். எதனால் இந்த வேறுபாடு?

முதல் நிலையில் செலுத்தப்பட்ட ரூ.13 சேர்த்து இரண்டாம் நிலையின் உள்ளீட்டு பொருளின் விலையாக ரூ.132 என்று எடுத்துக்கொண்டதால், அந்த வரிக்கும் சேர்த்து மீண்டும் 10% வரியை இரண்டாம் நிலையில் விதித்துள்ளோம். இந்த வரி மேல் வரி விதிப்பால் விழுத்தொடர் விளைவு ஏற்படுகிறது. இந்த விழுத்தொடர் விளைவை தடுக்க மதிப்பு கூட்டல் வரி விதிப்பு தேவை. VAT என்ற மதிப்பு கூட்டல் வரி அமைப்பு எப்படி விழுத்தொடர் விளைவை கட்டுபடுத்துகிறது என்பதை பார்ப்போம்.
GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Gst_2_2417187a




GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 25, 2015 9:07 pm


அட்டவணை 2: மதிப்பு கூட்டல் வரி முறை

VAT வரி அமைப்பில் விழுத்தொடர் விளைவு குறைந்து வரியும் குறைந்து விலையும் குறைகிறது. இதற்கு காரணம் அட்டவணை 2-ல் உள்ள கடைசி நெடுவரிசையில் உள்ள வரி வசூலிக்கும் முறை. இதில் ஒரு அடுமனை நிறுவனம் வரி செலுத்தி பொருள் வாங்குகிறது அதாவது ரூ.12 வரி செலுத்தி ரூ.120 மதிப்புள்ள உள்ளீட்டு பொருளை வாங்குகிறது. அதனுடன் ரூ.10 அளவுக்கு மதிப்பைக் கூட்டி ரூ.130 மதிப்புள்ள ரொட்டியை விற்கும் போது ரூ.13 வரியாக பெறப்பட்டு அதில் ரூ.12 ஏற்கெனவே செலுத்தப்பட்ட வரியை கழித்து மீதமுள்ள ரூ.1 அரசுக்கு செலுத்துகிறது.

இதில் எவ்வாறு மதிப்பு கூட்டல் வரி வருகிறது? அடுமனை நிறுவனம் கூட்டிய மதிப்பின் அளவு ரூ.10; அதன் மீது உள்ள வரி 10% அதாவது ரூ.1. அந்த ரூ.1 தான் அடுமனை நிறுவனம் வரியாக செலுத்துவதால் இதற்கு மதிப்பு கூட்டு வரி என்று பெயர். இதில் ரொட்டியின் இறுதி மதிப்பு ரூ.130; அதன் மீதான 10% வரி ரூ.13. இது தான் வெளிப்படையான மதிப்பு கூட்டல் வரி முறை.

VAT என்ற வரி முறை விழுத்தொடர் விளைவை நீக்குவதால் அதனை பொருள் மற்றும் சேவை வரிகளில் பயன்படுத்தவேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் முடிவு செய்தன. இதில் மத்திய அரசு 1987யில் MODVAT என்ற மதிப்பு கூட்டல் வரியை ஒரு சில பொருட்களின் உற்பத்தி மீதான கலால் வரியில் புகுத்தியது. அதனை தொடர்ந்து, மற்ற பொருட்கள், சேவைகள் மீதான கலால் வரிகளுக்கு சிறிது சிறிதாக இந்த VAT முறையை மத்திய அரசு விரிவாக்கியது. இறுதியாக 2001யில் CENVAT என்று எல்லா பொருட்கள் சேவைகளுக்கும் VAT வரியை முழுமையாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது.

இதே போன்று மாநில அரசுகளும் 2006 தொடங்கி விற்பனை வரியில் மதிப்பு கூட்டு வரி (வாட்) அமைப்பை புகுத்தின. இருந்த போதிலும் CST என்ற மாநிலங்களுக்கிடையே உள்ள விற்பனை மீதான வாட் வரி அமைப்புக்குள் வரவில்லை. ஆனால் இதனை முழுவதும் நீக்கவேண்டும் என்று எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்டாலும், அதனை நீக்குவதால் ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்யமுடியாது என்று கூறின.

எனவே, மத்திய அரசு CST வரி விகிதத்தை 4% இருந்து 2%ஆக குறைத்து அதனால் ஏற்படும் வரி இழப்பை மூன்று வருடங்களுக்கு ஈடு செய்தது. அதே நேரத்தில் GST நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்தது. GST இன்று வரை நடைமுறைக்கு வராததால், தொடர்ந்து CST வரி விகித குறைப்பினால் மாநிலங்கள் வரி வருவாய் இழப்பை சந்திக்கின்றன. GST வந்தால் CST முழுவதும் நீக்குவது, அதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்வது மத்திய அரசின் கடமை.

இராம.சீனுவாசன் @ தி இந்து



GST என்ற பொருட்கள் சேவைகள் வரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக