புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமியார் கழுதையான கதை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளத்தூர் என்ற ஊரில் திவாகர் என்பவன் இருந்தான். அவன் மனைவி சொல்லுக்கு மறு பேச்சு பேச மாட்டான்.
அவன் மனைவி எப்போதும் மாமியாருடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள். இதனால், மாமியாரைத் தொலைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள் அவள்.
""உங்கம்மா தொல்லை தாங்க முடிய வில்லை. அவள் செத்தால்தான் நாம் மகிழ்ச்சி யாக இருக்க முடியும்,'' என்று புலம்பினாள்.
அப்போதும் கூட அவளை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான் திவாகர்.
""என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?'' என்று கேட்டான் திவாகர்.
""நாளை உங்கள் அம்மாவை அழைத்துக் கொண்டு காட்டிற்குச் செல்லுங் கள். நடுக்காட்டில் அவளை விட்டுவிட்டு வந்து விடுங்கள். கொடிய விலங்கு கள் அவளைக் கொன்றுவிடும். நம் மேல் எந்தப் பழியும் வராது,'' என்றாள் அவள்.
""அப்படியே செய்கிறேன்,'' என்றான் சிறிது கூட மனசாட்சி இல்லாமல்.
மறுநாள் பொழுது விடிந்தது-
அம்மாவிடம் அவன், ""நாம் வெளியூர் சென்றுவிட்டு வரலாம். உனக்கும் ஒரு மாற்றமாக இருக்கும்,'' என்றான்.
அவன் தாயார் மிகவும் அப்பாவி. மகனை மிகவும் நேசித்தாள். அவனுடன் உடனே புறப்பட்டாள்.
மனைவி அவனுக்குப் பால் சோறும், மாமியாருக்குக் களிமண் சோறும் வைத்திருந்தாள்.
இருவரிடமும் சோற்று மூட்டையைத் தந்தாள்.
""பால் சோறு உள்ளது. சாப்பிடுங்கள்,'' என்றாள்.
அம்மாவை அழைத்துக் கொண்டு காட்டில் நெடுந்தொலைவு சென்றான் அவன். இனி அவளால் வழி கண்டுபிடித்து வீடு திரும்ப முடியாது என்று நினைத்தான்.
""அம்மா! களைப்பாக உள்ளது. இந்த மரத்தில் நிழலில் படுத்துத் தூங்குவோம்,'' என்றான்.
இருவரும் அங்கே படுத்தனர்.
அம்மா தூங்கி விட்டதை அறிந்த அவன் மெல்ல எழுந்தான். தவறுதலாக அம்மாவின் கட்டுச் சோற்று மூட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
சிறிது நேரம் சென்று விழித்தாள் அவள். மகனைக் காணாது திகைத்தாள்.
""நடுக்காட்டில் தவிக்கிறேனே... என்ன செய்வேன்...'' என்று அழுது புலம்பினாள்.
அவள் அழுகுரலைக் கேட்டு ஒரு தேவதை அங்கே வந்தாள்.
""பாட்டி! ஏன் அழுகிறாய்?'' என்று அன்புடன் கேட்டாள்.
""நானும் என் மகனும் வந்தோம். மகனைக் காணவில்லை. நடுக் காட்டில் தவிக்கிறேனே,'' என்றாள்.
அப்போது கூட அவளால் தன் மகன் தன்னை விட்டு, விட்டு போயிருப்பான் என்பதை நம்ப முடியவில்லை.
அங்கே இருந்த மூட்டையைப் பார்த்த தேவதை, ""பாட்டி! அது என்ன மூட்டை?'' என்று கேட்டாள்.
""அதில் பால் சோறு உள்ளது. நாம் இருவரும் சாப்பிடலாம்?'' என்றாள் அவள்.
மூட்டையில் இருந்த பால் சோற்றை இருவரும் சாப்பிட்டனர்.
மகிழ்ந்த தேவதை அவளை இளம் பெண்ணாக மாற்றினாள். பட்டாடைகளையும் விலை உயர்ந்த நகைகளையும் தந்தாள்.
அவற்றை அணிந்து கொண்ட அவன் வீட்டிற்கு வந்தாள்.
விலை உயர்ந்த நகைகளுடன் இளமையாக அம்மா வந்ததைப் பார்த்த திவாகர் திடுக் கிட்டான்.
""அம்மா! இளமையும், இவ்வளவு செல்வமும் உனக்கு எப்படிக் கிடைத்தது?'' என்று ஆர்வத்துடன் கேட்டான்.
நடந்ததை எல்லாம் சொன்னாள் அவள்.
அங்கிருந்த அவன் மனைவி அதைக் கேட்டு பொறாமையால் துடித்தாள்.
மாமியாரைப் போலத் தன் அம்மாவும் இளம் பெண்ணாக வேண்டும். நிறைய செல்வத் துடன் வர வேண்டும் என்று நினைத்தாள்.
அம்மாவை அங்கே வரவழைத்தாள்.
களிமண் சோற்று மூட்டையை அம்மாவிடம் தந்தாள். பால் சோற்று மூட்டையைக் கணவனிடம் தந்தாள்.
""உங்கம்மாவைக் காட்டில் எங்கே விட்டீர்களோ அங்கேயே என் அம்மாவையும் விடுங்கள். அருகில் ஒளிந்து இருந்து என்ன நடக்கிறது என்று பாருங்கள். தேவதையின் அருள் பெற்றதும், என் அம்மாவை அழைத்து வாருங்கள்,'' என்றாள்.
""அப்படியே செய்கிறேன்,'' என்ற அவன் மாமியாருடன் புறப்பட்டான்.
அதே மரத்தின் நிழலில் அவளைப் படுக்க வைத்தான்.
பால் சோற்று மூட்டையை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த புதரில் ஒளிந்து கொண்டான்.
அங்கே என்ன நடக்கிறது என்று கவனித்தான் திவாகர்.
மகள் சொன்னது போல அவள் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.
அங்கே வந்த தேவதை அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.
""மூட்டைக்குள் என்ன உள்ளது?'' என்று கேட்டாள்.
""பால் சோறு உள்ளது. இருவரும் சாப்பிடு வோம். சாப்பிட்டு முடித்ததும் எனக்குப் பட்டாடையும் நகைகளும் தர வேண்டும். நேற்று அவளுக்குத் தந்ததை விட அதிகம் தர வேண்டும்,'' என்று அவள் மூட்டையைப் பிரித்தாள்.
உள்ளே களிமண் இருந்தது.
கோபம் கொண்ட தேவதை, ""என்னை ஏமாற்றக் களிமண்ணுடன் வந்திருக்கிறாயா? நீ வீடு போய்ச் சேர்வதற்குள் கழுதையாகி விடு வாய்,'' என்று சாபம் தந்துவிட்டு மறைந்தாள்.
"இப்படிச் சாபம் பெற்று விட்டேனே...' என்று வருந்தினாள் அவள். மகள் வீட்டை நோக்கி நடந்தாள்.
நடந்ததை எல்லாம் பார்த்த திவாகர் திகைத்தான். அவளைப் பின்தொடர்ந்தான்.
அவள் கால்களிலும், கைகளிலும் கழுதை களுக்கு இருப்பது போலக் குளம்பு உண்டா யிற்று. அவள் வடிவமும் கழுதையாகிக் கொண்டே வந்தது.
வீட்டை நெருங்கியதும் அவள் முழுக் கழுதையாக ஆனாள்.
வீட்டின் முன் நின்று, ""காள்! காள்!'' என்று கத்தினாள்.
குரல் கேட்டு வெளியே வந்தாள் மகள். கழுதை ஒன்று கத்துவதை பார்த்துத் திகைத் தாள்.
அங்கே வந்த கணவனிடம், ""எங்கம்மா எங்கே? இந்தக் கழுதை ஏன் நம் வீட்டின் முன் கத்துகிறது?'' என்று கேட்டான்.
""வர வர மாமியார் கழுதை போல ஆனாள். இந்தக் கழுதைதான் உன் அம்மா,'' என்றான் அவன்.
அதிர்ச்சி அடைந்த அவள், ""என்னங்க சொல்றீங்க?'' என்று அலறினாள்.
நடந்தை எல்லாம் சொன்னான் திவாகர்.
"தன் பேராசையால், அம்மா இப்படி கழுதை யாகி விட்டாளே...' என்று அழுது புலம்பினாள்.
சிறுவர் மலர்
அவன் மனைவி எப்போதும் மாமியாருடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள். இதனால், மாமியாரைத் தொலைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள் அவள்.
""உங்கம்மா தொல்லை தாங்க முடிய வில்லை. அவள் செத்தால்தான் நாம் மகிழ்ச்சி யாக இருக்க முடியும்,'' என்று புலம்பினாள்.
அப்போதும் கூட அவளை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான் திவாகர்.
""என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?'' என்று கேட்டான் திவாகர்.
""நாளை உங்கள் அம்மாவை அழைத்துக் கொண்டு காட்டிற்குச் செல்லுங் கள். நடுக்காட்டில் அவளை விட்டுவிட்டு வந்து விடுங்கள். கொடிய விலங்கு கள் அவளைக் கொன்றுவிடும். நம் மேல் எந்தப் பழியும் வராது,'' என்றாள் அவள்.
""அப்படியே செய்கிறேன்,'' என்றான் சிறிது கூட மனசாட்சி இல்லாமல்.
மறுநாள் பொழுது விடிந்தது-
அம்மாவிடம் அவன், ""நாம் வெளியூர் சென்றுவிட்டு வரலாம். உனக்கும் ஒரு மாற்றமாக இருக்கும்,'' என்றான்.
அவன் தாயார் மிகவும் அப்பாவி. மகனை மிகவும் நேசித்தாள். அவனுடன் உடனே புறப்பட்டாள்.
மனைவி அவனுக்குப் பால் சோறும், மாமியாருக்குக் களிமண் சோறும் வைத்திருந்தாள்.
இருவரிடமும் சோற்று மூட்டையைத் தந்தாள்.
""பால் சோறு உள்ளது. சாப்பிடுங்கள்,'' என்றாள்.
அம்மாவை அழைத்துக் கொண்டு காட்டில் நெடுந்தொலைவு சென்றான் அவன். இனி அவளால் வழி கண்டுபிடித்து வீடு திரும்ப முடியாது என்று நினைத்தான்.
""அம்மா! களைப்பாக உள்ளது. இந்த மரத்தில் நிழலில் படுத்துத் தூங்குவோம்,'' என்றான்.
இருவரும் அங்கே படுத்தனர்.
அம்மா தூங்கி விட்டதை அறிந்த அவன் மெல்ல எழுந்தான். தவறுதலாக அம்மாவின் கட்டுச் சோற்று மூட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
சிறிது நேரம் சென்று விழித்தாள் அவள். மகனைக் காணாது திகைத்தாள்.
""நடுக்காட்டில் தவிக்கிறேனே... என்ன செய்வேன்...'' என்று அழுது புலம்பினாள்.
அவள் அழுகுரலைக் கேட்டு ஒரு தேவதை அங்கே வந்தாள்.
""பாட்டி! ஏன் அழுகிறாய்?'' என்று அன்புடன் கேட்டாள்.
""நானும் என் மகனும் வந்தோம். மகனைக் காணவில்லை. நடுக் காட்டில் தவிக்கிறேனே,'' என்றாள்.
அப்போது கூட அவளால் தன் மகன் தன்னை விட்டு, விட்டு போயிருப்பான் என்பதை நம்ப முடியவில்லை.
அங்கே இருந்த மூட்டையைப் பார்த்த தேவதை, ""பாட்டி! அது என்ன மூட்டை?'' என்று கேட்டாள்.
""அதில் பால் சோறு உள்ளது. நாம் இருவரும் சாப்பிடலாம்?'' என்றாள் அவள்.
மூட்டையில் இருந்த பால் சோற்றை இருவரும் சாப்பிட்டனர்.
மகிழ்ந்த தேவதை அவளை இளம் பெண்ணாக மாற்றினாள். பட்டாடைகளையும் விலை உயர்ந்த நகைகளையும் தந்தாள்.
அவற்றை அணிந்து கொண்ட அவன் வீட்டிற்கு வந்தாள்.
விலை உயர்ந்த நகைகளுடன் இளமையாக அம்மா வந்ததைப் பார்த்த திவாகர் திடுக் கிட்டான்.
""அம்மா! இளமையும், இவ்வளவு செல்வமும் உனக்கு எப்படிக் கிடைத்தது?'' என்று ஆர்வத்துடன் கேட்டான்.
நடந்ததை எல்லாம் சொன்னாள் அவள்.
அங்கிருந்த அவன் மனைவி அதைக் கேட்டு பொறாமையால் துடித்தாள்.
மாமியாரைப் போலத் தன் அம்மாவும் இளம் பெண்ணாக வேண்டும். நிறைய செல்வத் துடன் வர வேண்டும் என்று நினைத்தாள்.
அம்மாவை அங்கே வரவழைத்தாள்.
களிமண் சோற்று மூட்டையை அம்மாவிடம் தந்தாள். பால் சோற்று மூட்டையைக் கணவனிடம் தந்தாள்.
""உங்கம்மாவைக் காட்டில் எங்கே விட்டீர்களோ அங்கேயே என் அம்மாவையும் விடுங்கள். அருகில் ஒளிந்து இருந்து என்ன நடக்கிறது என்று பாருங்கள். தேவதையின் அருள் பெற்றதும், என் அம்மாவை அழைத்து வாருங்கள்,'' என்றாள்.
""அப்படியே செய்கிறேன்,'' என்ற அவன் மாமியாருடன் புறப்பட்டான்.
அதே மரத்தின் நிழலில் அவளைப் படுக்க வைத்தான்.
பால் சோற்று மூட்டையை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த புதரில் ஒளிந்து கொண்டான்.
அங்கே என்ன நடக்கிறது என்று கவனித்தான் திவாகர்.
மகள் சொன்னது போல அவள் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.
அங்கே வந்த தேவதை அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.
""மூட்டைக்குள் என்ன உள்ளது?'' என்று கேட்டாள்.
""பால் சோறு உள்ளது. இருவரும் சாப்பிடு வோம். சாப்பிட்டு முடித்ததும் எனக்குப் பட்டாடையும் நகைகளும் தர வேண்டும். நேற்று அவளுக்குத் தந்ததை விட அதிகம் தர வேண்டும்,'' என்று அவள் மூட்டையைப் பிரித்தாள்.
உள்ளே களிமண் இருந்தது.
கோபம் கொண்ட தேவதை, ""என்னை ஏமாற்றக் களிமண்ணுடன் வந்திருக்கிறாயா? நீ வீடு போய்ச் சேர்வதற்குள் கழுதையாகி விடு வாய்,'' என்று சாபம் தந்துவிட்டு மறைந்தாள்.
"இப்படிச் சாபம் பெற்று விட்டேனே...' என்று வருந்தினாள் அவள். மகள் வீட்டை நோக்கி நடந்தாள்.
நடந்ததை எல்லாம் பார்த்த திவாகர் திகைத்தான். அவளைப் பின்தொடர்ந்தான்.
அவள் கால்களிலும், கைகளிலும் கழுதை களுக்கு இருப்பது போலக் குளம்பு உண்டா யிற்று. அவள் வடிவமும் கழுதையாகிக் கொண்டே வந்தது.
வீட்டை நெருங்கியதும் அவள் முழுக் கழுதையாக ஆனாள்.
வீட்டின் முன் நின்று, ""காள்! காள்!'' என்று கத்தினாள்.
குரல் கேட்டு வெளியே வந்தாள் மகள். கழுதை ஒன்று கத்துவதை பார்த்துத் திகைத் தாள்.
அங்கே வந்த கணவனிடம், ""எங்கம்மா எங்கே? இந்தக் கழுதை ஏன் நம் வீட்டின் முன் கத்துகிறது?'' என்று கேட்டான்.
""வர வர மாமியார் கழுதை போல ஆனாள். இந்தக் கழுதைதான் உன் அம்மா,'' என்றான் அவன்.
அதிர்ச்சி அடைந்த அவள், ""என்னங்க சொல்றீங்க?'' என்று அலறினாள்.
நடந்தை எல்லாம் சொன்னான் திவாகர்.
"தன் பேராசையால், அம்மா இப்படி கழுதை யாகி விட்டாளே...' என்று அழுது புலம்பினாள்.
சிறுவர் மலர்
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மாமியார் கழுதையான கதை இப்போ தன தெரிஞ்சது அம்மா.
கதை அருமை!சூப்பர்!!!
கதை அருமை!சூப்பர்!!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Preethika Chandrakumar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138598Preethika Chandrakumar wrote:மாமியார் கழுதையான கதை இப்போ தன தெரிஞ்சது அம்மா.
கதை அருமை!சூப்பர்!!!
ஹா....ஹா....ஹா.... இது தான் சரியான கதையா என்று எனக்கு தெரியலை............சிறுவர் மலரில் போட்டிருந்தார்கள் ...எனக்கும் இது புதிய தகவல் தான் ப்ரீதிகா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஓ அப்படியா சமாச்சாரம் !?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ... இதுதான் கதையா....? இதுவரை அர்த்தம் தெரியாது இருந்தேன் .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|