புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
62 Posts - 41%
heezulia
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
6 Posts - 4%
prajai
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
3 Posts - 2%
mruthun
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
21 Posts - 5%
prajai
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
7 Posts - 2%
mruthun
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியமுதம் - நூல் விமர்சனம்


   
   
Gopinath Salem
Gopinath Salem
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 20/05/2015
http://www.kavivanam.blogspot.com

PostGopinath Salem Thu May 21, 2015 11:29 am

நூல் விமர்சனம்

கவியமுதம்
கவிஞர் இரா.இரவி, மதுரை
வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை
விலை ரூ. 100/-

சாதிக்கத் துடிக்கும் மனிதர்களுக்கு உழைப்பும் சுறுசுறுப்பும் தெளிந்த சிந்தனையும் இன்றியமையாத தேவை. சுறுசுறுப்பு, உழைப்பு, தெளிந்த சிந்தனை ஆகியவை ஒருங்கே அமைந்த சாதனை மனிதராய் கவிதை, கட்டுரை, நூலாய்வு போன்ற தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார் கவிஞர் இரா.இரவி.

ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கவிஞர், வாசகர்களுக்கு தன் புதுக்கவிதைகளை வாசிக்க பரிமாறியிருக்கும் நூலே கவியமுதம். நூலின் அட்டைப்படமும் கட்டமைப்பும் வாசகர்களை வாசிக்கத் தூண்டுகிறது.

நம்பிக்கைச் சிறகுகள், தமிழ் – தமிழர் நலம், சான்றோர் திறம், காதல் செவ்வி, பெண்ணின் பெருமை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நாளும் நகரமும், சமூக சித்திரிப்பு, உணர்ச்சி ஊர்வலம் என பல பிரிவுகளின் கீழ் தன் கவிதையை வகைப்பிரித்து வாசகர்களுக்கு கவிவிருந்து படைத்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் சாதிக்க இன்றியமையாத தேவை தன்னம்பிக்கை. அத்தகைய தன்னம்பிக்கையே மனிதனை சாதிக்கத் தூண்டும் என்பதை,

“என்னால் முடியாது
என்றே நினைத்தால்
முயன்றது முடியாது!

யாரை நீ நம்பாவிட்டாலும்
உன்னை நீ நம்பு!
நினைத்தது கிட்டும்!”
என நம்பிக்கைத் தெம்பூட்டுகிறார்.

தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழர்களின் பெருமைகளையும் பறைசாற்றும் தமிழ் – தமிழர் நலம் பிரிவில் தமிழின் பெருமைகளை மிடுக்கோடு கூறும் கவிஞர் “தமிழன் அன்றும் இன்றும்” எனும் கவிதையில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பேகன், பாரி, மனுநீதிச் சோழன், சிபிச் சக்கரவர்த்தி, திருவள்ளுவர், கரிகாலன், இராஜராஜ சோழன் போன்றவர்களை பட்டியலிட்டு பெருமைப்படுத்துகிறார்.

தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா என சாதனையாளர்களின் சரித்திரம் பேசும் சான்றோர் திறத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் செயல்பாடுகளை,
“விதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை
வீணாக்கும் என்றார் யாரும் கேட்கவில்லை!

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை
நாட்டை ஆள்வோரை கவனிக்கச் சொன்னார்!”
என பெருமைபட பட்டியலிடுகிறார்.

“ஒரே ஒரு புன்னகை செய்தாள்
ஓராயிரம் சக்தி என்னுள் பிறந்தது!”
என காதல் உணர்வை கவிதையின் வழி நம்முள் கடத்துகிறார் கவிஞர்.

மாறிவரும் பருவநிலை, புவி வெப்பமயமாதல், தண்ணீருக்கான போராட்டம் என மனிதர்கள் வாழும் பூமியை தங்கள் சுயநலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வாழத்தகுதியற்றதாக மாற்றி வருகின்றனர். மனிதர்கள் மரங்கள் நடுவதை கடமையாக ஏற்று செய்ய வேண்டும் என கட்டளையிடும் கவிஞர்,

“பூ தந்தேன்!
காய் தந்தேன்!

கனி தந்தேன்!
நிழல் தந்தேன்!

காற்று தந்தேன்!
மனிதன் பரிசாக தந்தது கோடரியை!”
என மரங்களின் வேதனையை மனிதர்கள் உணரச் செய்கிறார்.

“சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா” என்ற திரைப்பாடலைப் போல மண்ணின் மைந்தரான கவிஞர் மதுரையின் சிறப்பை,
“ஈடு இணையற்ற எங்கள் மதுரை!
நாடு போற்றும் நல்ல மதுரை!”
என மதுரையின் சிறப்புகளை பட்டியலிட்டு பெருமை கொள்கிறார்.

ஹைக்கூ, நூல் விமர்சனம், கட்டுரை என எல்லா தளங்களிலும் முத்திரை பதித்தவர் கவிஞர் இரா.இரவி என்பதற்கு இந்த நூலும் ஒரு சான்று. அவரின் படைப்புலக மகுடத்தை அலங்கரிக்கும் மற்றுமொரு மாணிக்கமாகத் திகழும் இந்நூல் வாசகர்களுக்கு தமிழமுதத்தை கவியமுதமாய் பரிமாறியிருக்கிறது.

நூல் விமர்சனம்
கவிஞர் ச. கோபிநாத்
சேலம்
9790231240


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக