புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_m10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_m10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_m10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_m10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_m10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_m10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_m10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_m10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_m10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_m10சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 1:04 am


சித்தார்த்தனும், கோவிந்தனும் இணைபிரியா நண்பர்கள். சித்தார்த்தன் சிறுவயதிலேயே தத்துவங்களில் பலமை பெற்று, விவாதங்களிலும் ஈடுபட ஆரம்பித்தான். கோவிந்தனும் அவனை போலவே சிந்திக்கவும், தியானங்கள் செய்யவும் பழகிக்கொண்டான். சித்தார்த்தனின் நிழலாய் அவனை பின்தொடரவும் செய்தான்.

அறிவில் சிறந்து விளங்கிய தன் மகனை பார்த்து சித்தார்த்தனின் தந்தை அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். ஒருநாள் சமணத்துறவிகள் மூன்று பேர் தன்னை கடந்து போவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்தன். உடனே அவனுக்கு சமணத்துறவியாகும் விருப்பம் வந்துவிட்டது. இதை கேட்டு கோவிந்தன் அதிர்ச்சியடைந் தான்.

சித்தார்த்தனின் முடிவுக்கு அவன் தந்தை உடனடியாக அனுமதி அளிக்கவில்லை. மகனின் உறுதியை பார்த்து தவிர்க்க முடியாமல் தன் கலங்கிய கண்களுடன் விடைகொடுத்தார்.

சித்தார்த்தன் மகிழ்ச்சியோடு விடைபெற்றான். அவனது உயிர் நண்பனான கோவிந்தனும் அவன்கூடவே சென்றான். இருவரும் சமண மதத்தில் இளந்துறவிகளாக சேர்த்து கொள்ளப் பட்டனர். பசியை அடக்கி சித்தார்த்தன் தியானம் செய்வதை பார்த்த சமணத்துறவிகள் அவனை பாராட்டினர். ஆனால் அவனுக்கோ தியானத்திலும் மனநிறைவு கிடைக்கவில்லை. அவனுக்குள் வாழ்க்கையை பற்றி தீராத கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன. அந்த கேள்விகளுக்கு சமணத்துறவிகளால் பதிலளிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவன் இழந்துவிட்டான்.

இந்நிலையில் சித்தார்த்தனும், கோவிந்தனும் கௌதம புத்தரை பற்றி கேள்விப்பட்டார்கள். (புத்தரின் இயற்பெயரும்கூட சித்தார்த்தன்தான். அவர் வேறு, இவன் வேறு) அறிவுப்பசிக்கு அவரிடம் சரியான தீனி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரை பார்க்க இருவரும் கிளம்பினர். துறவிகளின் கூட்டத்தில் புத்தரும் இருந்தார். மற்ற துறவிகளை போலவே அவரும் பிச்சை எடுத்துதான் உண்டார். அவரது உபதேசங்களை கேட்ட கோவிந்தன் புத்த மதத்தில் இணைந்தான். ஆனால் சித்தார்த்தனுக்கு புத்தரின் உபதேசங்களில் மனம் லயிக்கவில்லை. அவரோடும் விவாதங்கள் புரிந்தான். 'நான்' என்ற அகந்தையில் இருந்து அவனால் விடுபட முடியவில்லை.

பிறகு கோவிந்தனுக்கு வாழ்த்து கூறிவிட்டு அங்கிருந்தும் கிளம்பினான்.

மனம்போன போக்கில் அலைந்து திரிந்தான். பயணத்தின் நடுவே அவன் ஒரு ஆற்றினை கடக்கவேண்டி இருந்தது. தோணியில் ஏறி மறுகரையை அடைந்தான். ஆனால் தோணிக்கு கூலி கொடுக்க சித்தார்த்தனிடம் எதுவுமே இல்லை.

தோணிக்காரனோ, ''இப்போது வேண்டாம். என்றைக்காவது ஒருநாள் எனக்கு கொடுப்பீர்கள்'' என்று புன்னகை செய்தான். சித்தார்த்தனுக்கு தோணிக்காரனின் பேச்சு ஆச்சர்யமாக இருந்தது. புதிர் விலகாமலே நகரை நோக்கி நடந்தான்.

நகரில் அலைந்து திரிந்த சித்தார்த்தனுக்கு துறவு வாழ்க்கை கசந்துபோய், செல்வந்தராகும் ஆசை வந்தது. ஒரு வணிகனிடம் உதவியாளனாய் சேர்ந்தான். அவனது திறமைகளின் காரணமாக, விரைவிலேயே ஒரு பெரும் வணிகனாக உயர்ந்தான். குவிந்த பணத்தை இஷ்டத்துக்கும் செலவழித்தான். அருந்தக்கூடாத பானங்களை அருந்தினான். சூதாட்டங்களில் கலந்துகொண்டு பணத்தை அள்ளி இறைத்தான். கொண்டாடி கூத்தாடி வாழ்ந்த வாழ்க்கை இறுதியாக வறுமையில் முடிந்தது. மீண்டும் அவன் துறவியாக அலைய ஆரம்பித்தான்.

முன்பு ஒரு தடவை அவன் கடந்துபோன நதியை இப்போதும் கடக்கவேண்டியிருந்தது. முதல் தடவையை போலவே இந்த தடவையும் தோணிக்காரனுக்கு கொடுப்பதற்கு அவனிடம் ஒன்றுமில்லை.

சித்தார்த்தனை பார்த்த தோணிக்காரன் அவனை அடையாளம் கண்டுகொண்டான். சித்தார்த்தனை விருந்தாளியாக தன் குடிசைக்குஅழைத்துப் போனான்.அந்தஆற்றங்கரையும், தோணிப்பயணமும் சித்தார்த்தனுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. அவன் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டான். இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த தோணிக்காரன் எந்த குழப்பங்களும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். மனித வாழ்க்கையை பற்றிய எல்லா கேள்விகளுக்கும் அவனால் தெளிவாக பதில் சொல்ல முடிந்தது. உடனே சித்தார்த்தன் தோணிக்காரனின் சீடனாகிவிட்டான்.

ஆனால் தோணிக்காரனோ, ''என்னிடம் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை ஆறுதான் இதையெல்லாம் எனக்குச் சொல்லிக்கொடுத்தது. நீ அதனிடமே கற்றுக்கொள்'' என்றான்.

சித்தார்த்தனும், தோணிக்காரனோடு இணைந்து பயணிகளை அக்கரைக்கும், இக்கரைக்கும் கொண்டு சென்றான். ஒருநாள் தோணிக்காரன் சித்தார்த்தனிடம் விடைபெற்று விட்டு காட்டிற்குள் சென்றுவிட்டான்.

இப்போது சித்தார்த்தனே தோணிக்காரன்.

அவனின் அமைதி தவழ்ந்த முகத்தையும், அர்த்தம் நிறைந்த பேச்சுக்களையும் கேட்ட பயணிகள் தங்கள் குறைகளை சொல்லி அவனிடம் முறையிட்டனர். சித்தார்த்தன் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினான். சித்தார்த்தனின் புகழ் எங்கும் பரவ ஆரம்பித்தது.

ஒருநாள் அவனைத்தேடி புத்த துறவி ஒருவர் வந்தார். அவர் வேறு யாருமல்ல. சித்தார்த்தனின் நண்பன் கோவிந்தன்தான்.

ஞானி என்று மக்களால் அழைக்கப்படும் தோணிக்காரன், தனது நண்பன் சித்தார்த்தன் என்று தெரிந்து கொண்டு கோவிந்தன் மகிழ்ச்சியடைந்தார். கோவிந்தன் ஒரு துறவியாக வாழ்ந்தாலும் இன்னமும் அவரிடம் பதில் கிடைக்காத பல கேள்விகள் இருந்தன. அந்த கேள்விகள் அத்தனைக்கும் சித்தார்த்தனிடம் இப்போது பதில் இருக்கிறது. அதை நதியிடமிருந்து அவன் கற்றுக் கொண்டான். தோணிக்காரன்தான் சித்தார்த்தனின் அகந்தையை அகற்றி அவனது அறிவுக்கண்ணை திறந்துவிட்டான்.

புத்தருக்கும் செவி சாய்க்காத அவன் மனம் ஒரு தோணிக்காரனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டது. மகான்கள் எவ்வளவு உபதேசம் செய்தாலும் மனிதமனம் அவர்களை பின்பற்ற தயங்குகிறது அல்லது தட்டிக் கழிக்கிறது. துன்ப துயரங்களை அனுபவித்த பிறகு எங்கேயும், யாரிடமும் பாடம் கற்றுக்கொள்கிறது.

'சித்தார்த்தன்' என்கிற இந்நாவலை எழுதியவர் ஜெர்மன் எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸே. இந்நாவலுக்கு 1946-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


விகடன்



சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 6:00 pm

சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! 103459460 சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 20, 2015 6:55 pm

திரிலோக சீதாராம் அவர்களால் காவியச்சாயல்
கொண்ட நடையில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த
நூலின் முதல் பதிப்பு தமிழில் 1957ல் வெளிவந்தது
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 20, 2015 7:00 pm

சித்தார்த்தன்! - நோபல் பரிசு பெற்ற கதை! VdsZyOqjTSuU229ieTQq+sitharthan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக