Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !
3 posters
Page 1 of 1
'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !
சாமான்ய மக்கள் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தில் அடிப்படை உரிமைகளோடு புழங்க ஏற்படுத்தப்பட்டவையே சட்டமும் அதனை செயல்படுத்தும் நீதிமன்றமும். சில தனிமனிதர்களின் அதிகார துஷ்பிரயோகத்தால் சமீப காலங்களாக சாதாரண குடிமகன்களுக்கு ஆபத்து உருவாகியுள்ள நிலையில், சட்டத்தை செயல்படுத்துகின்ற நீதிமன்றங்களின் அவசியம் அதிகரித்திருக்கிறது.
சட்டத்தால் வழங்கப்பட்ட ஒரு விதிவிலக்கை கையில்கொண்டு அதை அரிதாகவும், நியாயமாகவும் பயன்படுத்தாமல், தமிழக காவல்நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்ற பல வழக்குகளில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, குற்றவாளிகளை தப்பிக்க வைத்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கா மலும் செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மதுரையில் செயல்படும் எவிடென்ஸ் அமைப்பு ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் எவிடென்ஸ் கதிர், ‘’கடந்த ஜனவரி 2௦1௦ முதல், மார்ச் 2௦13 வரை தமிழகத்திலுள்ள 19௦ காவல்நிலையங்களில் மொத்த வழக்குகள் எவ்வளவு பதிவு செய்யப்பட்டன, இவற்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? இதில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு முன், உண்மைக்கு மாறாக பதிவு செய்யப்பட்டதாக (mistake of fact), சட்டத்திற்கு மாறாக (mistake of law) என்ற விதியின் பேரிலும், கண்டறிய முடியவில்லை (undetected) என்றும், மேல்நடவடிக்கை எடுக்க தேவையில்லை (action dropped) என்ற அடிப்படையில் காவல்நிலையங் களிலேயே முடித்துக்கொண்ட வழக்கு விவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றோம்.
மேலே சொன்ன விதிகளை உண்மையான வழக்குகளில் காட்டாமல், தங்களுக்கு தேவையான வழக்குக ளில் பயன்படுத்தி காவல்துறையினர் ஆதாயம் அடைந்ததோடு மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் செய்திருக்கிறார்கள். அதாவது முப்பது சதவீத வழக்குகளை நீதிமன்றம் செல்வதற்கு முன்பே தள்ளுபடி செய்துள்ளனர். சுருக்கமாக சொன்னால், காவல்நிலையங்களிலேயே கட்டப் பஞ்சாயத்து செய்து முடித்துள்ளனர் என்று சொல்லலாம்.
தொடர்ந்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பு, காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்களிடமும் பேசி விவ ரம் சேகரித்தோம். 2௦1௦ ஜனவரி முதல், 2௦13 மார்ச் வரை, 19௦ காவல்நிலையங்களில் 3,௦1,936 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2௦1௦ ஆம் ஆண்டில் மட்டும் 96,௦75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 1621 வழக்குகள் உண்மைக்கு மாறாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், 38 வழக்குகள் சட்டத்திற்கு மாறாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், 997 வழக்குகள் கண்டறிய முடியவில்லை என்றும், 16,836 வழக்குகள் மேல் நடவடிக்கை தேவையில்லை என்றும் நீதிமன்றம் போகாமலேயே வழக்குகளை முடித்துள்ளனர்.
இதுபோல், 2௦11 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட 93, 971 வழக்குகளில் 2௦,6௦8 வழக்குகளையும், 2௦12 ஆம் ஆண்டில் பதிவு சய்யப்பட்ட 86,214 வழக்குகளில் 21,818 வழக்குகளையும், 2௦13 ஆம் ஆண்டில் மூன்று மாதத்தில் 25,676 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 6,991 வழக்குகள் காவல்நிலையங்களிலேயே முடித்து வைக்கப்பட்டுள்ளன.
இப்படி காவல்நிலையங்களிலேயே உண்மைக்கு மாறாக என்கிற அடிப்படையில் போலீஸ்காரர்களே வழக் கினை முடிக்கிறார்களென்றால் சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் அதுகுறித்த விளக்கத்தை கொடுக்க வேண் டும். எங்களது ஆய்வில் 9௦ சதவீதத்திற்கு மேற்பட்ட புகார்தாரரிடம் இந்த சட்ட வழிமுறையை போலீஸார் கடைபிடிக்கவில்லை.
அரசியல் அழுத்தம், அதிகார வர்க்கத்தினரின் குறுக்கீடு, வலுவான சக்திகொண்ட எதிர் தரப்பினரின் பண பலம், போன்ற காரணங்களுக்காக போலீஸார் இதுபோன்று வழக்கினை முடித்துக்கொள்கின்றனர் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பொலிஸாரின் விசாரணையில் குற்றத்தை நிரூபிக்கின்ற அளவிற்கு தரமான விசாரணை மேற்கொள்ளாததால் வழக்கினை முடித்துக் கொள்கின்றனர். பல சம்பவங்களில் வழக்கினை முடிக்க வேண்டுமென் கின்ற அடிப்படையில் வாக்கு முலத்தை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்படுகிறது.
எங்கள் ஆய்வில், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிற வழக்குகளில், முப்பது சதவீதத் தை போலிஸாரே முடித்து வைக்கிறார்கள், இதில் பட்டியல் சாதியினர் மற்றும், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் சராசரியாக நாற்பது சதவீதமும், பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தில் 35 சதவீதம் என போலீஸாரே உண்மைக்கு மாறான வழக்கு என்று முடித்து வைக்கின்றனர்.
சில நேரங்களில் குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர், கடுமையான நெருக்கடி கொடுப்பதினால், பாதிக்கப்பட்ட தரப்பினர் அச்சத்துடன் தாங்கள் கொடுத்த புகாரினை திரும்ப பெறுகின்றனர். சாதாரண ஏழை எளிய மக்கள் புகார்களை திரும்ப பெறுவது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொள்வது கிடையாது. சமயங்களில் இதன் பின்னணியில் காவல்துறையினரே இருப்பதும் உண்டு. . இதுபோன்று காவல்நிலையங்கள் வழக்கு களை முடித்துவிடுவதால், பல உண்மைகள் சமூகத்திற்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.
நாங்கள் இதற்கு தீர்வாக சொல்வது, உண்மைக்கு மாறாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று காரணம் கூறி, போலீஸாரே தள்ளுபடி செய்கிற வழக்கின் விவரங்களை புகார்தாரரிடம் முறைப்படி தெரிவிக்க வேண்டும். அதில் ஆட்சேபனை செய்யும் புகார்தாரருக்கு மறுவிசாரணை கேட்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். என்ன காரணத்திற்காக தள்ளுபடி செய்யப்படுகிறது, தள்ளுபடி செய்வதற்கான வலுவான ஆதாரங்கள் என்ன போன்றவற்றை புகார்தாரருக்கு எழுத்துபூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும்.
உண்மைக்கு மாறான வழக்குகளை அரசு குற்ற வழக்கறிஞர் மற்றும் போலீஸார் தள்ளுபடி செய்யாமல், அதற்கென்று சிறப்பு சட்ட வல்லுநர் குழுவினை ஏற்படுத்தி அந்த குழுவினர் முன்பு புகார்தாரர் நேரடியாக வருகை தந்து விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்’’ என்றார்.
பொதுவாகவே காவல்துறை வழக்குகளை நடத்தும் முறைகளில் பல குற்றச்சாட்டுகள் உண்டு. இது இன் னும் தொடர்வது பாரம்பரியம் மிக்க காவல்துறைக்கு அழகாய் இராது. காவல்துறை துஷ்பிரயோகம் என்ற பூனைக்கு மணி கட்டவேண்டியது நீதித்துறையின் கையில் உள்ளது.
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மூளை ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !
» அதிசய ‘’ மரண வெளி ‘’ - அதிர்ச்சி ரிப்போர்ட்..!
» பிராய்லர் கோழி : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
» இணையம் (Internet) ஒரு வசியக்காரன்! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
» " ரீஃபைண்ட் ஆயில் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!
» அதிசய ‘’ மரண வெளி ‘’ - அதிர்ச்சி ரிப்போர்ட்..!
» பிராய்லர் கோழி : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
» இணையம் (Internet) ஒரு வசியக்காரன்! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
» " ரீஃபைண்ட் ஆயில் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|