Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது கதைகள் --
+4
Preethika Chandrakumar
விமந்தனி
krishnaamma
M.Jagadeesan
8 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
எனது கதைகள் --
First topic message reminder :
ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,
"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.
" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "
" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "
" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"
" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )
" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "
" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "
" அது என்ன வழி ? "
" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )
அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."
" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"
உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "
" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "
" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "
ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.
" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "
நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.
ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,
"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.
" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "
" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "
" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"
" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )
" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "
" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "
" அது என்ன வழி ? "
" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )
அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."
" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"
உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "
" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "
" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "
ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.
" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "
நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கதைகள் --
கோதண்டராமன்
=============
கோதண்டராமன் படுத்த படுக்கையாகக் கிடந்தார். பத்து நாட்களாக அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல், உடம்பு துரும்பாக மெலிந்து விட்டது.அன்றைய தினம் நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டது.
நாடித்துடிப்பு மெல்ல, மெல்ல அடங்கிக்கொண்டே வந்தது. கால் பாதங்கள் ஜில்லிடத் தொடங்கின. கருவிழிகள் ஆடவில்லை. டாக்டர், நாடித்துடிப்பைத் தொட்டுப் பார்த்தார். அவருக்கு நம்பிக்கையில்லை. உறவினர்களை அழைத்து," சொல்ல வேண்டியவர் களுக்கு சொல்லி அனுப்பிவிடுங்கள். இன்று இரவு வரைக்கும் கூடத்தாங்காது" என்று சொன்னார். உறவினர்கள் எல்லோருக்கும் சொல்லி அனுப்பினார்கள்.
தான் சொன்னபடியே டாக்டர் கோதண்டராமன் அன்று இரவு 8 மணிக்குக் காலமானார்.
=============
கோதண்டராமன் படுத்த படுக்கையாகக் கிடந்தார். பத்து நாட்களாக அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல், உடம்பு துரும்பாக மெலிந்து விட்டது.அன்றைய தினம் நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டது.
நாடித்துடிப்பு மெல்ல, மெல்ல அடங்கிக்கொண்டே வந்தது. கால் பாதங்கள் ஜில்லிடத் தொடங்கின. கருவிழிகள் ஆடவில்லை. டாக்டர், நாடித்துடிப்பைத் தொட்டுப் பார்த்தார். அவருக்கு நம்பிக்கையில்லை. உறவினர்களை அழைத்து," சொல்ல வேண்டியவர் களுக்கு சொல்லி அனுப்பிவிடுங்கள். இன்று இரவு வரைக்கும் கூடத்தாங்காது" என்று சொன்னார். உறவினர்கள் எல்லோருக்கும் சொல்லி அனுப்பினார்கள்.
தான் சொன்னபடியே டாக்டர் கோதண்டராமன் அன்று இரவு 8 மணிக்குக் காலமானார்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கதைகள் --
M.Jagadeesan wrote:சோமுவும், ராமுவும் ஒரே ஊரினர் ; ஒரே வயதினர்; நெருங்கிய நண்பர்கள். நீண்டகாலம் அரசுப் பணியிலிருந்து, தற்போது ஓய்வுபெற்று வீட்டில் இருக்கின்றனர். இருவருக்கும் வயது 65 ஆகிறது. இதுநாள்வரையில் அவர்களுடைய கால்கள் தமிழ்நாட்டைத் தாண்டியதில்லை. வடஇந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளையும், கோவில்களையும் பார்த்து வரவேண்டும் என்று ஆவல் கொண்டனர். எனவே சுற்றுலா நிறுவனம் ஒன்றில் தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர்.
இன்றிரவு பத்து மணிக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வண்டி புறப்படுகிறது. பக்கத்துத் தெருவிலிருக்கும் தன் நண்பர் ராமுவைப் பார்த்துவர , சோமு புறப்பட்டார். சோமுவைப் பார்த்தவுடன், ராமு
' வா! சோமு! நானே வரலாம்னு நினச்சுகிட்டு இருந்தேன்; நல்லவேளை நீயே வந்துட்டே! இப்படி உட்காரு! காபி சாப்பிடறயா?"
" ஒரு கப் சூடா கொண்டு வரச் சொல்லு!"
" அம்மா! மாலதி! சோமு வந்திருக்கார்! காபி கொண்டு வாம்மா!"
" இதோ கொண்டுவரேன் அப்பா !"
மாலதி , ராமுவின் ஒரே மகள். மாலதி கொண்டுவந்த காபியைப் பருகிக் கொண்டே சோமு பேசத் தொடங்கினார்.
" என்னப்பா! ராமு! மாலதிக்கு வரன் ஏதும் பாக்கலியா? "
" இல்ல சோமு , அவளுக்கு வயசு இருபத்தஞ்சு தானே ஆகுது! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்; அவ கல்யாணத்துக்கு முன்னாடி வீட்ட இடிச்சிக் கட்டனும்;வீடு கட்றதுக்காக லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தேன் ; பத்து லட்சம் சாங்க்ஷன் ஆகியிருக்கு! பத்து வருஷத்துல லோனைக் கட்டி முடிக்கணும். மாலதிக்குக் கல்யாணம் முடிஞ்ச கையோட கார் ஒன்னு வாங்கலாம்னு இருக்கேன்; நாலு இடத்த சுத்திப் பாக்க வசதியா இருக்கும்ல? நீ என்ன சொல்றே?"
" ராமு! நீ சொல்றதப் பாத்தா, நீ புறப்படத் தயாரா இல்ல போலிருக்கே?"
" என்னப்பா சோமு அப்படிச் சொல்லிட்டே? இத பாரு ! இந்த சூட்கேசுல எல்லாம் எடுத்து வச்சிட்டேன்; பத்து நாள் பயணத்துக்குத்
தேவையான துணிமணிகள், ஸ்வெட்டர், சோப்பு, சீப்பு, பவுடர், கண்ணாடி,மருந்து மாத்திரைகள், ATM கார்டு , ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காபி எல்லாம் எடுத்து வச்சிட்டேன் ! அது சரி ! நீ எப்படி? Are you ready for the journey ?"
" ராமு! என்னோட ஒரே பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டேன்;ரெண்டு மகன்களுக்கும் சொத்தைப் பாகம் பிரிச்சு எழுதி ரிஜிஸ்தர் பண்ணிட்டேன்; எனக்கு ஒரு பைசாக் கடன் கிடையாது; என்னோட இறுதிச் சடங்குச் செலவுக்குக் கூட ஐம்பதாயிரம் ரூபாய வீட்ல ரெடியா வச்சி இருக்கேன்;எது எப்படி செய்யனும்னு பசங்களுக்கு சொல்லிக் கொடுத்திட்டேன்."
" என்னப்பா சோமு! நான் ஒன்னு கேட்டா ; நீ ஒன்னு பதில் சொல்றே?"
" இல்ல ராமு! நான் எந்தப் பயணத்துக்கும் ரெடின்னு சொல்ல வந்தேன்."
ரொம்ப அருமை ஐயா......இது ரொம்ப முக்கியம் ! ........உங்களின் எல்லா கதைகளுமே அருமையாக இருக்கு ! பகிர்வுக்கு நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எனது கதைகள் --
கிருஷ்ணம்மாவின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கதைகள் --
ஹ... ஹா.. ஹா... சரியான ட்விஸ்ட்..... கதை அருமை." மாமி! மணி ஐஞ்சு ஆறது. நான் ஆபீஸுக்குப் போய் கிருஷ்ணாவை அழச்சுண்டு வரணும்.அப்படியே ஸ்கூலுக்குப் போய் பசங்களையும் அழச்சுண்டு வரணும்."
" சரி ஜானு! நான் ஆத்துக்குப் போறேன்" என்று சொல்லிவிட்டுப் பங்கஜம் மாமி போய் விட்டாள்.
" அவசர அவசரமாக சட்டையையும், பேண்டையும் அணிந்துகொண்டு, தன் மனைவி கிருஷ்ணவேணியையும், குழந்தைகளையும் அழைத்து வருவதற்காக ஜானகிராமன் டூவீலரில் கிளம்பினான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எனது கதைகள் --
எதிர்பாராத க்ளைமாக்ஸ் கதைகளாக இருக்கே...! தொடருங்கள்தான் சொன்னபடியே டாக்டர் கோதண்டராமன் அன்று இரவு 8 மணிக்குக் காலமானார்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எனது கதைகள் --
ரமணியன் ,கிருஷ்ணம்மா ,விமந்தனி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கதைகள் --
மேற்கோள் செய்த பதிவு: 1154248விமந்தனி wrote:ஹ... ஹா.. ஹா... சரியான ட்விஸ்ட்..... கதை அருமை." மாமி! மணி ஐஞ்சு ஆறது. நான் ஆபீஸுக்குப் போய் கிருஷ்ணாவை அழச்சுண்டு வரணும்.அப்படியே ஸ்கூலுக்குப் போய் பசங்களையும் அழச்சுண்டு வரணும்."
" சரி ஜானு! நான் ஆத்துக்குப் போறேன்" என்று சொல்லிவிட்டுப் பங்கஜம் மாமி போய் விட்டாள்.
" அவசர அவசரமாக சட்டையையும், பேண்டையும் அணிந்துகொண்டு, தன் மனைவி கிருஷ்ணவேணியையும், குழந்தைகளையும் அழைத்து வருவதற்காக ஜானகிராமன் டூவீலரில் கிளம்பினான்.
ஆமாம் விமந்தினி.மேலும் இந்த IT இல் யாருக்கு, எப்போ, எதுக்காக வேலை போகும் என்று தெரியலையே........இப்படி அட்ஜஸ்ட் பண்ணி இருப்பது தான் குடும்பத்துக்கு நல்லது................அது தான் கிருஷ்ணா , ஜானுக்கு செயின் வாங்கி தந்திருக்கா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எனது கதைகள் --
காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கம்
=================================
காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கத்தின் வீட்டின் முன்பாக பல கார்கள் நின்றிருந்தன. ஊட்டியில் அவருக்கு நிறைய காபித் தோட்டங்கள் இருந்தன.அவருடைய ஒரேமகள் சாந்தி. B.Sc..பட்டதாரி.மேற்கொண்டு படிப்பதற்கு சாந்தி விரும்பாததால் அவளுக்கு வரன் தேடும் முயற்சியில் கனகலிங்கம் ஈடுபட்டார்.
காரில் வந்த பெரிய மனிதர்கள் வரவேற்பறையில் சோபாவில் அமர்ந்திருந்தனர். கனகலிங்கம் பரபரப்புடன் காணப்பட்டார்.சமையலறையிலிருந்த மனைவியிடம் ஓடிவந்து," காபி ரெடியாயிடுச்சா?எல்லாரும் வந்துட்டாங்க!சீக்கிரம் காபியை சாந்திகிட்ட கொடுத்தனுப்பு" என்று சொல்லிவிட்டு வரவேற்பறைக்கு ஓடினார்.
மணப்பெண் போல அலங்காரம் செய்துகொண்டு சாந்தி, ஒரு தட்டில் காபி டம்ளர்களை வைத்து எடுத்துக்கொண்டு வந்தாள்.வந்திருந்த பெரிய மனிதர்கள் ஆளுக்கொரு காபி டம்ளரை எடுத்துக்கொண்டனர்.
" இவள்தான் என்மகள் சாந்தி " என்று கூறி எல்லோருக்கும் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தார் கனகலிங்கம்.சாந்தி எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள்.
காபியை ருசித்தபடியே எல்லோரும் சாந்தியைக் கவனித்தனர்.காபி குடித்து முடித்த பிறகு வந்திருந்த பெரிய மனிதர்கள் தங்களுக்குள் கூடிப் பேசினர். பிறகு கனகலிங்கத்தைப் பார்த்து," மிஸ்டர் கனகலிங்கம்! எங்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. ஒரு நல்ல நாள் பார்த்து மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம்" என்று கூறிவிட்டு அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.
கனகலிங்கம் மனைவியிடம் ஓடிவந்தார். அவருடைய மனைவி அவரைப் பார்த்து,"என்னங்க! என்ன சொன்னாங்க? அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களா?"
" நம்ம காபி எஸ்டேட்டின் புதிய கண்டுபிடிப்பான காபிக்கொட்டை பீபரி 32 வோட டேஸ்டும்,பிளேவரும் ரொம்ப பிரமாதம்னு சொன்னாங்க! அந்த காபிக்கொட்டையில நீ போட்ட காபி A1..அப்படின்னு சொல்லிட்டாங்க! ஒரு நல்ல நாள் பார்த்து ஏஜென்ஸி அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்க!"என்று சொன்னார் கனகலிங்கம்.
=================================
காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கத்தின் வீட்டின் முன்பாக பல கார்கள் நின்றிருந்தன. ஊட்டியில் அவருக்கு நிறைய காபித் தோட்டங்கள் இருந்தன.அவருடைய ஒரேமகள் சாந்தி. B.Sc..பட்டதாரி.மேற்கொண்டு படிப்பதற்கு சாந்தி விரும்பாததால் அவளுக்கு வரன் தேடும் முயற்சியில் கனகலிங்கம் ஈடுபட்டார்.
காரில் வந்த பெரிய மனிதர்கள் வரவேற்பறையில் சோபாவில் அமர்ந்திருந்தனர். கனகலிங்கம் பரபரப்புடன் காணப்பட்டார்.சமையலறையிலிருந்த மனைவியிடம் ஓடிவந்து," காபி ரெடியாயிடுச்சா?எல்லாரும் வந்துட்டாங்க!சீக்கிரம் காபியை சாந்திகிட்ட கொடுத்தனுப்பு" என்று சொல்லிவிட்டு வரவேற்பறைக்கு ஓடினார்.
மணப்பெண் போல அலங்காரம் செய்துகொண்டு சாந்தி, ஒரு தட்டில் காபி டம்ளர்களை வைத்து எடுத்துக்கொண்டு வந்தாள்.வந்திருந்த பெரிய மனிதர்கள் ஆளுக்கொரு காபி டம்ளரை எடுத்துக்கொண்டனர்.
" இவள்தான் என்மகள் சாந்தி " என்று கூறி எல்லோருக்கும் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தார் கனகலிங்கம்.சாந்தி எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள்.
காபியை ருசித்தபடியே எல்லோரும் சாந்தியைக் கவனித்தனர்.காபி குடித்து முடித்த பிறகு வந்திருந்த பெரிய மனிதர்கள் தங்களுக்குள் கூடிப் பேசினர். பிறகு கனகலிங்கத்தைப் பார்த்து," மிஸ்டர் கனகலிங்கம்! எங்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. ஒரு நல்ல நாள் பார்த்து மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம்" என்று கூறிவிட்டு அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.
கனகலிங்கம் மனைவியிடம் ஓடிவந்தார். அவருடைய மனைவி அவரைப் பார்த்து,"என்னங்க! என்ன சொன்னாங்க? அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களா?"
" நம்ம காபி எஸ்டேட்டின் புதிய கண்டுபிடிப்பான காபிக்கொட்டை பீபரி 32 வோட டேஸ்டும்,பிளேவரும் ரொம்ப பிரமாதம்னு சொன்னாங்க! அந்த காபிக்கொட்டையில நீ போட்ட காபி A1..அப்படின்னு சொல்லிட்டாங்க! ஒரு நல்ல நாள் பார்த்து ஏஜென்ஸி அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்க!"என்று சொன்னார் கனகலிங்கம்.
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது கதைகள் --
// நம்ம காபி எஸ்டேட்டின் புதிய கண்டுபிடிப்பான காபிக்கொட்டை பீபரி 32 வோட டேஸ்டும்,பிளேவரும் ரொம்ப பிரமாதம்னு சொன்னாங்க! அந்த காபிக்கொட்டையில நீ போட்ட காபி A1..அப்படின்னு சொல்லிட்டாங்க! ஒரு நல்ல நாள் பார்த்து ஏஜென்ஸி அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்க!"என்று சொன்னார் கனகலிங்கம்//
இப்படித்தான் முடிவு இருக்கும் என்று நான் நினைத்தேன் ...........சூப்பர்
இப்படித்தான் முடிவு இருக்கும் என்று நான் நினைத்தேன் ...........சூப்பர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எனது கதைகள் --
அய்யா ,நான் நினைத்தபடியே ,முடிவு இருந்தது .
twist மாற்றவேண்டிய தருணம் என நினைக்கிறேன்
ரமணியன்
twist மாற்றவேண்டிய தருணம் என நினைக்கிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» கார்டூன் கதைகள் - Part 1 - (முல்லா கதைகள்)
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
» கார்டூன் கதைகள் - Part 1 - (முல்லா கதைகள்)
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
Page 6 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|