புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
81 Posts - 67%
heezulia
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
1 Post - 1%
viyasan
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
273 Posts - 45%
heezulia
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
18 Posts - 3%
prajai
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது கதைகள் -- Poll_c10எனது கதைகள் -- Poll_m10எனது கதைகள் -- Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கதைகள் --


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 8:55 am

ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,

"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.

" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "

" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "

" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"

" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )

" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "

" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "

" அது என்ன வழி ? "

" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )

அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."

" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"

உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "

" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "

" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "

ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.

" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "

நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 17, 2015 9:50 am

இது  கதை போல இல்லையே உங்களின் சொந்த அனுபவம் போல இருக்கே...................என்றாலும் பயங்கரமான அனுபவம் தான் புன்னகை.....நல்லபடி பிழைத்தீர்களே ! கடவுளுக்கு நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
இது சொந்த அனுபவமாக இருப்பதால், அதற்கான திரி இல் போடலாமே ஜெகதீசன்புன்னகை.........சொல்லுங்கள் மாற்றிவிடுகிறேன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 10:12 am

இல்லை ! இல்லை ! இது கற்பனைக் கதைதான் ! என்னுடைய திருக்குறள் கதைகளில் இதுவும் ஒன்று !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 17, 2015 10:14 am

M.Jagadeesan wrote:இல்லை ! இல்லை ! இது கற்பனைக் கதைதான் ! என்னுடைய திருக்குறள் கதைகளில் இதுவும் ஒன்று !
மேற்கோள் செய்த பதிவு: 1137024

நல்லது...........அப்படியென்றால் இது இங்கேயே இருக்கட்டும் புன்னகை ...................கதை அருமை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 19, 2015 3:07 pm

நாய் விற்ற காசு.
============
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி , வேதாளத்தை இறக்கித் தன் தோளின்மீது சுமந்துகொண்டு நடக்கலானான்.அவனது விடாமுயற்சியைக் கண்டு வியந்த வேதாளம் பலமாக சிரித்தது. அது விக்கிரமனைப் பார்த்து,
" மன்னா! உனக்கு வழிநடைக் களைப்புத் தெரியாமல் இருக்க ஒரு கதை சொல்கிறேன் கேள்! கதையின் முடிவில் நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கூறவேண்டும்; இல்லையென்றால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகச் சிதறிவிடும்." என்று எச்சரித்தது.

" சரி! வேதாளமே ! கதையைச் சொல்!" என்றான் விக்கிரமன்.

முன்னொருகாலத்தில் காட்டூர் என்னும் கிராமத்தில் பூதபாண்டியன் என்ற வணிகன் வாழ்ந்து வந்தான். பெயருக்கு ஏற்றார்போல பருத்த உடலும், பெருத்த வயிறும் கொண்டிருந்தான். அவன் ஒரு பெரிய மளிகைக்கடை ஒன்றை நடத்திவந்தான். அவன் ஒரு பேராசைக்காரன். பொருட்களில் கலப்படம் செய்தல், போலியான எடைக் கற்களைப் பயன்படுத்துதல், அதிக விலைக்கு விற்றல் போன்ற குறுக்கு வழிகளைக் கையாண்டு, மிகவும் குறுகிய காலத்தில் பெரிய செல்வந்தன் ஆனான்.


ஒருநாள் அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் வந்தார். அவர் ஒரு ஜடாமகுட தாரி. நீண்ட முடியைச் சடையாகப் பின்னித் தலையில் மகுடம்போலக் கட்டியிருந்தார். அவர் ஒரு தபஸ்வி ; திரிகால ஞானி. நெற்றியில் திருநீறு அணிந்திருந்தார். காவி உடை தரித்துக் கையில் கமண்டலம் ஏந்தியிருந்தார்.. மக்கள் அவரை " ஜடை முனி " என்று அழைப்பார்கள். காட்டூரில் அவருடைய கால் பட்டவுடனேயே மழை " சோ " வென்று பெய்தது. செடியிலுள்ள பூக்கள் அசைந்தாடி அவரை வரவேற்றன. பறவைகள் சந்தோஷ மிகுதியால் கிரீச்சிட்டன. கன்றுக்குட்டிகள் துள்ளிக் குதித்தன. மக்கள் எதிர்சென்று அவருடைய குலாவு பாதம் விளக்கி மலர்தூவி அவரை வணங்கினர். முனிவரும் அவர்களுக்கு ஆசிகூறி திருநீறு வழங்கினார்.


ஜடைமுனி வந்திருப்பதைக் கேள்விப்பட்ட பூதபாண்டியன், அவரைத் தன் இல்லத்திற்கு அழைத்துவர விரும்பினான். அவருடைய பாதங்கள் தன் வீட்டில் பட்டால் செல்வம் கொழிக்கும் என்று நம்பினான். முனிவரைக் கண்டு அவரது காலில் விழுந்து வணங்கினான்.முனிவர் கொடுத்த திருநீறைத் தன் நெற்றியில் பூசிக்கொண்டான். பிறகு முனிவரைப் பார்த்து,

" ஐயா! தாங்கள் அடியேனுடைய இல்லத்திற்கு வரவேண்டும்." என்று கேட்டுக் கொண்டான்.

" தம்பி! நான் யாருடைய வீட்டிற்கும் போவதில்லை என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். எனவே உன்னுடைய வீட்டிற்கு என்னால் வர இயலாது."

" ஐயா! தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது; வயதான என் அன்னையார் நோயுற்றுப் படுத்த படுக்கையாக கிடக்கின்றார்கள். அவரால் இங்கு வர இயலாது.தாங்கள் என் இல்லம் ஏகி என் அன்னையாரை ஆசீர்வதித்தால் அவர் குணம்பெற வாய்ப்புண்டு. ஆகவே மறுக்காமல் தாங்கள் என் இல்லத்திற்கு வரவேண்டும் " என்று பூதபாண்டியன் கேட்டுக் கொண்டான்.

" சரி வருகிறேன்" என்று சொல்லி முனிவர் பூதபாண்டியனைப் பின் தொடர்ந்தார்.

பூதபாண்டியன் இல்லத்தில் முனிவருடைய கால்பட்ட உடனேயே சில துர்ச்சகுனங்கள் தோன்றின. பூனை ஒன்று குறுக்கே ஓடியது; முனிவருடைய கால்விரலை கல் ஒன்று தடுக்கியது. வெள்ளைப் புடவை அணிந்த பெண்ணொருத்தி எதிரே வந்தாள். இவற்றை எல்லாம் பார்த்தவாறே முனிவர் பூதபாண்டியன் வீட்டினுள் நுழைந்தார். பூதபாண்டியன் , அவனுடைய அன்னை இருக்கும் அறைக்கு முனிவரை அழைத்துச் சென்றான். வயதான அந்த மூதாட்டி பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தார். முனிவரைக் கண்டதும் அந்த மூதாட்டி எழுந்து உட்கார முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. உடனே ஜடைமுனி

" அம்மா ! தாங்கள் எழுந்திருக்க வேண்டாம்.சற்றே வாயைத் திறந்தால் போதும் " என்று சொன்னார்.

அந்த மூதாட்டி வாயைத் திறந்தவுடன் , முனிவர் கொஞ்சம் திருநீற்றை வாயில் போட்டார். சில நிமிடங்களில் அந்த அற்புதம் நடந்தது. மூதாட்டி பேசத் தொடங்கினார். எழுந்துநின்று முனிவரின் காலில் விழுந்து வணங்கினார். இதைக்கண்ட பூத பாண்டியன் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தான். முனிவரின் காலில் விழுந்து வணங்கினான். சிறிதுநேரம் அவனுடன் அளவளாவிய முனிவர் விடை பெற்றுக் கொள்வதாகச் சொன்னார். அப்பொழுது வேலைக்காரப் பெண் இரண்டு குவளைகளில் பாலைக் கொண்டு வந்தாள்.

" ஐயா! பாலை அருந்துங்கள்! " என்று சொல்லி ஒரு குவளையை பூதபாண்டியன் முனிவரிடம் கொடுத்தான். மற்றொரு குவளையில் இருந்த பாலை பூதபாண்டியன் அருந்தினான்.

முனிவர் பாலை அருந்த முற்படும் சமயத்தில் , சுவரில் இருந்த பல்லி கத்தியது. அதைக்கேட்ட முனிவர் ,

" பாவிகள் வீட்டில் நான் பால் அருந்துவதில்லை! " என்று சொல்லிவிட்டுப் பால் குவளையைக் கீழே வைத்தார்.

இதைக்கேட்ட பூதபாண்டியன் அதிர்ச்சியடைந்தான்.

" ஐயா! நான் பாவியா? " என்று கேட்டான்.

" ஆம் ! நீ பாவிதான். கௌளி சாஸ்திரம் அறிந்தவன் நான்." என்று சொல்லி எதிர் சுவரில் இருந்த பல்லியைக் காட்டினார்.

" ஐயா! பால் அருந்தாவிட்டால் பரவாயில்லை; இந்த பணமுடிப்பையாவது எடுத்துக் கொள்ளுங்கள்! உங்கள் வழிநடைச் செலவுக்கு உதவும். " என்று சொல்லி சிறிய பண மூட்டையை அவர்முன் நீட்டினான் பூதபாண்டியன்.

" இது பணமூட்டையல்ல! பாவத்தின் மூட்டை! இதை என் கையால் தொடுவதும் பாவம் ! " என்று சொல்லி அதை வாங்க முனிவர் மறுத்துவிட்டார்.

" பாவம் செய்து நான் ஈட்டிய பொருள் என்றாலும் , அந்த பணத்திற்கு மதிப்பு உண்டு. " நாய் விற்ற காசு குரைக்காது; மீன் விற்ற காசு நாறாது ! என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா? ஆகவே என்னுடைய பாவம் தங்களுக்குச் சேராது. " என்று வாதிட்டான் பூதபாண்டியன்.

" ஓ ! அப்படியா ! என்று சொன்ன முனிவர் , அங்கிருந்த பணிப்பெண்ணைப் பார்த்து மண்ணெண்ணையில் எரியும் ஒரு சிம்னி விளக்கைக் கொண்டுவரச் சொன்னார். அவ்வாறே அவள் கொண்டுவந்தாள். தனக்குக் கொடுத்த பாலை , முனிவர் அந்த சிம்னி விளக்கில் சிறிதுநேரம் சூடுபடுத்தினார். பிறகு அந்தப் பாலை பூதபாண்டியனிடம் கொடுத்து அருந்தச் சொன்னார்.

அந்தப் பாலை அருந்திய பூதபாண்டியன் முகம் சுளித்தான். பாலை அருந்தாமல் , குவளையைக் கீழே வைத்துவிட்டான்.

" ஏனப்பா ! பாலைக் குடிக்கவில்லையா? "

" ஐயா ! பாலில் மண்ணெண்ணெய் வாடை வீசுகிறது. அதனால் குடிக்க முடியவில்லை ."

" தம்பி ! விறகு அடுப்பில் காய்ச்சிய பால் சுவையாக உள்ளது; ஆனால் மண்ணெண்ணெய் விளக்கில் சூடுபடுத்திய பால் வாடை வீசுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? தீயின் பொதுவான குணம் எரிப்பதுதான் என்றாலும், எரிபொருளின் தன்மைக்கு ஏற்றவாறு தீயின் குணம் மாறுபடுகிறது.இதேபோல செல்வத்தின் பொதுவான குணம் துய்க்கப் பயன்படுவது என்றாலும், அது வந்த வழியின் தன்மைக்கு ஏற்ப பாவ, புண்ணியங்கள் நம்மைச் சேருகின்றன. நல்வழியில் ஈட்டிய பொருள் நன்மை தரும்; தீயவழியில் ஈட்டிய பொருள் பாவத்தைச் சேர்க்கும்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

என்பது குறள். நன்மையே செய்தாலும் தீய வழியில் வந்த செல்வத்தை விரும்பாதே என்பது அய்யன் வள்ளுவன் எனக்கிட்ட ஆணை. ஆகவே இந்தப் பணம் எனக்கு வேண்டாம். " என்று சொல்லிவிட்டு முனிவர் வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

அப்போது பூதபாண்டியன் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரன் ஒருவன் , முனிவரின் காலில் விழுந்து வணங்கினான். முனிவரும் அவனுக்கு ஆசிகூறி திருநீறு வழங்கினார். அப்போது அந்த வேலைக்காரன் தன் கையிலிருந்த காசு ஒன்றை முனிவரிடம் கொடுத்து

" ஐயா ! இந்த ஏழையின் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் ! " என்று சொன்னான். முனிவரும் அவன் கொடுத்த காசை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்.

கதையை சொல்லிமுடித்த வேதாளாம் விக்கிரமனைப் பார்த்து, " மன்னா! பூதபாண்டியன் கொடுத்த பணமுடிப்பை வாங்க மறுத்த முனிவர், அவனிடம் வேலைபார்க்கும் வேலையாள் கொடுத்த காசை ஏன் பெற்றுக்கொண்டார் ? அதுவும் பூதபாண்டியன் பணம்தானே? இந்தக் கேள்விக்குச் சரியான பதிலை நீ சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும்!" என்று சொன்னது.

" வேதாளமே ! பூதபாண்டியன் முனிவருக்குக் கொடுத்த பணம் தீயவழியில் வந்தது. எனவே முனிவர் அதைப்பெற மறுத்துவிட்டார். ஆனால் வேலையாள் முனிவருக்குக் கொடுத்த காசு, அது பூதபாண்டியன் பணம் என்றாலும் , வேலையாளின் உழைபபிற்காகக் கொடுக்கப்பட்ட ஊதியம். நேர்வழியில் வந்தது. எனவே முனிவர் அதைப் பெற்றுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை." என்றான் விக்கிரமன்.

விக்கிரமனின் இந்தச் சரியான பதிலால் வேதாளம் திருப்தி அடைந்தது. மீண்டும் அவனைவிட்டு நீங்கி முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 20, 2015 8:38 am

ஊழின் விளையாட்டு.
===============
அடையா நெடுங்கதவு என்பார்களே, அதுபோல பொன்னம்பலச் செட்டியாரின் வீட்டுக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அவருடைய வீட்டில் அடுப்பு 24 மணிநேரமும் எரிந்துகொண்டே இருக்கும்.உள்ளூரிலிருந்தும், வெளியூரிலிருந்தும் விருந்தாளிகள் வருவதும், போவதுமாயிருப்பர். கோவில் திருவிழாக்களுக்கு நன்கொடை கேட்டு வருவோரும், அநாதை இல்லங்கள் மற்றும் முதியோர் காப்பகங்களுக்காக பொருளுதவி கேட்டு வருவோரும், குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக உதவி கேட்டு வருவோரும், தங்களுடைய அருமை மகளின் திருமணச் செலவுக்காகப் பொருளுதவி கேட்டு வருவோரும், பிரசவச் செலவுக்காகப் பொருளுதவி கேட்டு வருவோரும், மருத்துவ மனையில் நடக்க இருக்கின்ற அறுவை சிகிச்சைக்காகப் பொருளுதவி கேட்டு வருவோருமாகப் பொன்னம்பலத்தின் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். எல்லோருடைய குறைகளையும் பொறுமையாகக் கேட்டறிந்து , அவர்களுக்குத் தக்க உதவிகளை செய்து அனுப்புவார் பொன்னம்பலம்.

இதுதவிர வீட்டுக்கு அருகிலேயே மிகப்பெரிய கீற்றுக் கொட்டகை அமைத்துத் தினமும் 100 ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வந்தார். அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் இருந்தன. அவருக்குச் சொந்தமான வீடுகளில் இருந்து வாடகைப் பணமும், வியாபார நிறுவனங்களிலிருந்து வருவாயும் வந்துகொண்டே இருந்தன. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல, அவர் செலவு செய்ய செய்ய , வருவாய் குவிந்துகொண்டே இருந்தது. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ என்பதுபோல , அவரது கழனிகள் , விதைக்காமலே விளைச்சலைத் தந்துகொண்டிருந்தன.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எதிர்வீட்டு ஏகாம்பரம் பொறாமையினால் புழுங்கித் தவித்தார். பொன்னம்பலம் காசைக் கண்டபடி செலவு செய்கிறானே என்று எண்ணி மனம் குமைந்தார். காசின் அருமை தெரியாதவன் என்று பொன்னம்பலத்தை ஏசுவார்.ஏகாம்பரம் சிக்கனவாதி என்று சொல்வதைக் காட்டிலும் , " கருமி " என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.எச்சில் கையால் காக்கையை மட்டுமல்ல; ஒரு குருவியைக் கூட ஓட்டமாட்டார். இரும்புப் பெட்டி நிறைய தான் சேர்த்துவைத்த ரொக்கத்தை தினமும் எண்ணிப்பார்த்து மகிழ்வார். தங்க நகைகளைத் தன் மனைவிக்கு சூட்டி அழகு பார்ப்பார். பிறகு பத்திரமாக பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டுவார். தன் கணவனுக்கு ஏற்ற பதிவிரதையாக , ஏகாம்பரத்தின் மனைவியும் சிக்கனச் செல்வியாக வாழ்ந்துவந்தாள். வீட்டைவிட்டு எங்கும் போகமாட்டார் ஏகாம்பரம். ஏதேனும் விசேஷத்துக்கு செல்வதாக இருந்தால்கூட , கணவன், மனைவி இருவரில், ஒருவர் மட்டுமே செல்வர்; மற்றவர் இரும்புப் பெட்டிக்கு அருகிலிருந்து களவு போகாமல் காவல் காப்பர்.

ஒருநாள் ஏகாம்பரம் வீட்டிற்கு சாம்பிராணி புகை போடுபவன் ஒருவன் வந்தான். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீடு வீடாகச் சென்று சாம்பிராணி புகை போட்டு காசு வாங்குவது அவனுடைய வழக்கம். அவனை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை ஏகாம்பரம்.

" ஐயாவுக்கு நல்ல காலம் வரப்போகுது; இந்த வீட்டுக்குள் சில கெட்ட ஆவிகளின் நடமாட்டம் உள்ளது; அவற்றையெல்லாம் ஓட்டிவிட்டால் ஐஸ்வரியம் கொட்டோகொட்டென்று கொட்டப் போகிறது. "என்று சொன்னான். இதைக்கேட்ட ஏகாம்பரம்," அப்படியா! " என்று ஆச்சரியப்பட்டார்.

" ஆமாம் சாமி! கெட்ட ஆவி, ஏவல், பில்லி சூன்யம் எல்லாத்தையும் புகை போட்டே நான் விரட்டிடுவேன். அப்புறம் இந்த ஊருக்கே நீங்கதான் ராஜா! " என்று சொல்லி ஆசைகாட்டினான் சாம்பிராணி ஆசாமி!

" அப்படின்னா உள்ள வா! எல்லா ரூமுக்கும் நல்லா புகை போடு; கெட்ட ஆவிகள் எல்லாம் போகட்டும்; நிறைய சொத்துபத்து சேரட்டும். " என்று சொல்லி அவனை வீட்டுக்குள் அனுமதித்தார்.

உள்ளே வந்த சாம்பிராணிக்காரன் நெருப்பில் சாம்பிராணி தூவி புகை போட ஆரம்பித்தான். ஒவ்வொரு அறையாகப் போட்டுக்கொண்டே வந்தான். இரும்புப்பெட்டி இருந்த அறைக்குள் வந்தான். இரும்புப் பெட்டிக்கு புகை போடுமாறு ஏகாம்பரம் அவனைக் கேட்டார். அறை முழுவதும் புகை மெல்ல மெல்ல மண்டியது. ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதவாறு புகையின் அடர்த்தி அதிகமாகியது. திடீரென்று சாம்பிராணிக்காரன் மயக்கப் பொடியை நெருப்பில் தூவி ஏகாம்பரம் தம்பதியினர் முகத்தில் படுமாறு நன்றாக விசிறி விட்டான்.அவ்வளவுதான் தம்பதியினர் இருவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டனர்.

ஒருமணி நேரம் கழிந்திருக்கும். ஏகாம்பரம் தம்பதியினர் கண் விழித்தனர். லபோதிபோ என்று அடித்துக்கொண்டு , எழுந்துசென்று இரும்புப் பெட்டியைப் பார்த்தனர். இரும்புப்பெட்டி திறந்து கிடந்தது; ரொக்கமும், தங்க நகைகளும் திருட்டு போயிருந்ததைக் கண்டு அதிர்ந்தனர். குருவிபோல சேர்த்த பணமும், நகையும் போயிற்றே! என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதனர்; கீழே விழுந்து புரண்டனர்.


குறள்;
=====

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. ( ஊழ் -376 )

பொருள்:
========
ஒருவனுக்கு நல்ல காலம் வந்தால் , அவனிடம் சேர்ந்த செல்வம் அவனைவிட்டு எளிதில் போகாது; கடலிலே போய்க் கொட்டினாலும் செல்வமானது குறைவுபடாமல் பெருகிக்கொண்டே இருக்கும். ஆனால் ஊழ்வினை காரணமாக ஒருவனுக்குக் கெட்ட காலம் வந்தால், எவ்வளவுதான் கட்டிக் காத்தாலும் , அவனிடம் உள்ள செல்வமானது , சொல்லாமல், கொள்ளாமல் அவனைவிட்டுப் போய்விடும்.

பால்= ஊழின் பல பெயர்களுள் இதுவும் ஒன்று.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 21, 2015 12:49 pm

சினம் காப்பான் யார்?
===============
மேலாளர் ருத்திரமூர்த்தி , தன் பெயருக்கு ஏற்றவாறு ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார்.

சப்த நாடியும் ஒடுங்கிப்போய் , கைகட்டி, வாய்பொத்தி சரவணன் , அவருக்கு முன்பாக நின்றுகொண்டு இருந்தான்.

" ஹெட் ஆபீசுக்கு அனுப்பவேண்டி , ஒரு லெட்டர் டைப் பண்ணச் சொன்னால் இத்தனை தப்பா?
எவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக்! Dear Sir ன்னு அடிக்கிறதுக்குப் பதிலா Deer sir ன்னு அடிச்சிருக்கீங்க!
ஏய்யா! ஒரு amount ஐ Figur லேயும் Wordings லேயும் காட்டும்போது இரண்டும் ஒன்னா இருக்கணும்ன விஷயம் கூடவா உனக்குத் தெரியாது?
figur ல Rs 2450000 ம்னு காட்டிட்டு Wordings ல ( Rupees Twenty four lakhs fifteen thousand only ) ன்னு அடிச்சிருக்கீங்க? மீதி முப்பத்தைந்தாயிரம் உன் பாக்கெட்டிலிருந்து குடுப்பியா?
லெட்டர் டைப் பண்ணவுடனே அதை ஒரு தடைவைக்கு நாலு தடவை திருப்பிப் படிச்சிப் பாக்க வேண்டாமா? ஏய்யா! பத்தாம் கிளாஸ் படிக்கிற பையன் கூட பரீட்சை எழுதி முடிச்ச உடனே ஆன்சர் பேப்பரை நாலுதரம் திருப்பிப் படிச்ச பின்னாடிதானே கொடுக்கிறான் ? அந்த அறிவு உனக்கு ஏன் இல்லாம போச்சு?
ஒன்பது மணி ஆபீசுக்குப் பத்து மணிக்கு வர்றீங்க! ஏன் லேட்டுன்னு கேட்டா ? யாதாச்சும் நொண்டிச் சாக்கு சொல்லவேண்டியது! ஆபீசுக்கு லேட்டா வந்தாலும் ஒழுங்கா வேலை பாக்குறது இல்ல! இங்க வந்துதான் வீட்டுக் கதை, ஊர்கதை, டி.வி. சீரியல் கதைன்னு பேசி அரட்டை அடிக்கவேண்டியது. 11 மணி ஆன உடனே பஜ்ஜி, காபி சாப்பிட கேண்டீனுக்கு ஓடவேண்டியது! ஏய்யா! நான் தெரியாமத்தான் கேட்கிறேன்: நீ பண்ற தப்புக்கெல்லாம் சேர்த்து உன் சம்பளத்துல ஒரு நூறு ரூபா குறைச்சுக் கொடுத்தா வாங்கிக்குவியா? வாங்கமாட்டெல்ல! அதே மாதிரிதான் நீ வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை பார்க்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன்! இது கடைசி தடவையா இருக்கட்டும்; இனிமே இதுமாதிரி தப்பு செஞ்சா நான் மெமோ issue பண்ணி Explanation call for பண்ணி , ஒரு increment கட் பண்ணிடுவேன். Be Careful . இந்த லெட்டரை இப்படியே நான் அனுப்புனா ஹெட் ஆபீசுல என் மூஞ்சிமேல காரித் துப்புவான். இத ஒழுங்கா டைப் பண்ணிக் கொண்டுவா ! " என்று சொல்லி அந்த லெட்டரை சரவணன் முகத்தில் விட்டெறிந்தார் ருத்திரமூர்த்தி.

சரவணன் நிலைமை, நாய் குதறிய கந்தல் துணிபோல ஆகிவிட்டது.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வீடு வந்து சேர்ந்தான்.

சரவணனைப் பார்த்தவுடன் அவன் மனைவி மீனாட்சி, " ஏங்க இவ்வளவு லேட்டு? இன்னிக்கி சினிமாவுக்குப் போலாம்னு சொன்னீங்களே! கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா? " என்று கேட்டாள்.

" சினிமாவும் வேண்டாம்; ஒரு மண்ணும் வேண்டாம்; போய் காபி கொண்டு வா!" - மனைவியிடம் எரிந்து விழுந்தான் சரவணன்.

" என்ன ஆயிற்று இவருக்கு? காலையில ஆபீசுக்குப் போகும்போது நல்லாத்தான இருந்தாரு ! " என்று எண்ணியவாறு சமையற் கட்டுக்குள் நுழைந்தாள். காபியைக் கலந்து எடுத்துக்கொண்டு வந்து சரவணனிடம் கொடுத்தாள்.

காபியைக் குடித்த சரவணன் , " தூ! " என்று துப்பினான். " காபியா இது? இத மனுஷன் குடிப்பானா? கழனித் தண்ணி மாதிரி இருக்கு; கொண்டுபோய் மாட்டுக்கு ஊத்து! " என்று சொல்லி காபி டம்ளரைக் கடாசி எறிந்தான்.

வெலவெலத்துப் போனாள் மீனாட்சி. கண்களைக் கசக்கிக் கொண்டே படுக்கை அறைக்கு உள்ளே சென்று படுத்துக் கொண்டாள்.

தெருவிலே சரவணன் ,மீனாட்சி தம்பதியினரின் ஐந்து வயதுக் குழந்தை விஜயா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது தெருவிலே பஞ்சு மிட்டாய் விற்பவன் வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த குழந்தை விஜயா , " அம்மா! அம்மா! எனக்குப் பஞ்சு மிட்டாய் வாங்கிக் குடும்மா! " என்று கேட்டுக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

" சனியனே! பிரிட்ஜுல பிஸ்கட், சாக்லேட் எல்லாம் இருக்கு! அத எடுத்து சாப்பிடு! "

" இல்லம்மா! எனக்குப் பஞ்சு மிட்டாய்தான் வேணும் ! வாங்கிக் குடு! " குழந்தை அடம் பிடித்தாள்.

வேகமாக எழுந்து வந்த மீனாட்சி , குழந்தையின் முதுகில் ஓங்கி அறைந்தாள். " ஒரு தடவ சொன்னா கேட்கணும். போ! வீட்ல இருக்குறத சாப்பிடு! அடம் பிடிக்காதே ! " என்று சொன்னாள்.

குழந்தை விஜயா அழுதுகொண்டே வெளியே வந்தாள். அவளது செல்ல நாய்க்குட்டி ஜுஜுபி , தன் எஜமானி அழுதுகொண்டே வருவதைப் பார்த்துக் கலக்கம் அடைந்தது. வாலை ஆட்டிக்கொண்டே அவள் அருகில் சென்று , எம்பி அவளது முகத்தை நக்கியது.

' சீ போ ! " என்று சொல்லியவாறே விஜயா , ஜுஜுபியின் வயிற்றில் எட்டி உதைத்தாள்.

" வீல் " என்று கத்தியவாறே ஜுஜுபி ஓடிச்சென்று ஒரு மூலையில் முடங்கிப் படுத்துக் கொண்டது.

" பாவம் ஜுஜுபி ! தன் கோபத்தை யார்மீதும் காட்ட அதற்குத் தெரியவில்லை!

குறள்:
=======
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கில்என் காவாக்கால் என்.

கருத்துரை: தன் கோபம் எங்கே செல்லுபடி ஆகிறதோ, அங்கே காட்டாமல் அடக்கிக் கொள்பவனே சினம் காப்பவன் ஆவான்; அதைவிடுத்து செல்லுபடி ஆகாத இடத்தில் கோபத்தைக் காட்டினால் என்ன காட்டாவிட்டால் என்ன!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 22, 2015 8:06 am

இரப்பவனுக்குக் கோபம் எதற்கு?
========================
"அம்மா! தாயீ! பிச்சை போடுங்கம்மா!" வாசலில் பிச்சைக்காரன் கத்திக்கொண்டிருந்தான்.

கல்யாணி தன்மகள் செல்வியிடம் ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்துப் பிச்சைக்காரனுக்குப் போட்டு வரச் சொன்னாள்.

செல்வி, போன வேகத்திலேயே திரும்பிவந்து," அம்மா! பிச்சைக்காரன் ஒரு ரூபாய் வாங்கமாட்டானாம்" என்று சொன்னாள்.

கல்யாணிக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. செல்வியிடமிருந்து ஒரு ரூபாயை வாங்கிக்கொண்டு விறுவிறுவென்று பிச்சைக்காரனிடம் சென்றாள்.

" என்னப்பா? ஒரு ரூவா கொடுத்தா வாங்கமாட்டியா?"

" என்னம்மா! எந்தக் காலத்துல இருக்கீங்க! ஒரு ரூபாய வச்சிகிட்டு என்ன செய்யமுடியும்? ஹோட்டல்ல ஒரு தோசை இருவது ரூவா; ஒரு காபி பத்து ரூவான்னு விக்கிது. எவ்வளவு காலத்துக்கும்மா ஒரு ரூவாயே பிச்சை போட்டுகிட்டு இருப்பீங்க? நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க! உங்க வீட்டுக்காரர் ஒவ்வொரு வருஷமும் இன்கிரிமெண்ட்வாங்குறாரு.ஆறுமாசத்துக்குஒருதபாபஞ்சப்படிஏத்திக்கொடுக்குறாங்க.கொத்தனாரு,தச்சரு,டெய்லரு,நகைவேலைசெய்றவங்க,முடிவெட்டுறவங்க இவங்கல்லாம் வருஷா வருஷம் கூலிய உசத்திகிட்டே போறாங்க! அதையெல்லாம் ஏன்னு கேக்குறிங்களா? நாங்க ஒரு ரெண்டு ரூபா கேட்டா மட்டும் கணக்கு பாக்குறிங்களே?"

" நீ ஜாஸ்தியா பேசறே! அவங்களும் நீயும் ஒன்னா? அவங்களால எங்களுக்குக் காரியம் ஆகுது. உன்னால எங்களுக்கு செலவுதானே?"

" அம்மா நீங்க தப்பா பேசறீங்க! எங்கள மாதிரி இருக்குற ஏழை பாழைங்களுக்கு உதவுனா உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்; புண்ணியத்தை சேத்தாத்தானே போற இடத்துல நல்லகதி கிடைக்கும்? அம்மா! நாங்கல்லாம் " நடமாடும் தெய்வம்"னு சொல்லுவாங்க! எங்களுக்கு உதவி செஞ்சா அது அந்த ஆண்டவனுக்கே செஞ்சமாதிரி. திருமூலர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

" படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
..நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
..நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
,,படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே."

அப்படின்னு பாடியிருக்கார்.

" சும்மா வளவளன்னு பேசாதே! இந்த ஒரு ரூபா வேணுமா வேணாமா?

" நீயே வச்சுக்கம்மா! எனக்கு வேணாம். திருப்பதி உண்டியல்ல ஆயிரம் ஆயிரமா கொண்டுபோய்க் கொட்டுவீங்க! நாங்க ஒரு ரூவா சேத்துக் கேட்டாமட்டும் கொடுக்கமாட்டீங்க!"என்று சொல்லிவிட்டுப் பிச்சைக்காரன் நடையைக் கட்டினான்.

" எடுக்குறது பிச்சை! இதுல திமிர்ப்பேச்சு வேற!" என்று சொல்லிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் கல்யாணி.

" என்ன கல்யாணி? யாரத் திட்டுறே?" என்று கேட்டான் கல்யாணியின் கணவன் பிரபு.

" அந்தப் பிச்சைக்காரன் கெட்டகேட்டுக்கு ஒரு ரூபா வாங்கமாட்டானாம். கோவிச்சுகிட்டுப் போயிட்டானுங்க!"

" விட்டுத் தள்ளு. அவன் கோபம் உன்ன என்னப் பண்ணப் போவுது? ஆனானப்பட்ட கொங்கண முனியோட கோபமே வாசுகி அம்மையார்கிட்ட செல்லுபடி ஆகலையே!"

" அது யாருங்க கொங்கண முனி? வாசுகி?"

" கொங்கண முனி ரொம்பவும் கோபக்கார முனிவர். பிச்சை எடுத்து சாப்பிடுவதுதான் அவரோட தொழில். ஒருசமயம் தெருவழியே போய்க்கிட்டு இருந்தார். அப்போது வானத்துல பறந்துகிட்டு இருந்த ஒரு கொக்கு அவர்மேல எச்சம் போட்டது. முனிவருக்குக் கடுங்கோபம் வந்திருச்சி! அந்தக் கொக்கை முறைச்சுப் பாத்தார்; அவ்வளவுதான்; கொக்கு நடுவானத்துலேயே பஸ்பமாயிடுச்சி! அந்தக் கோபத்தோட அவர் வள்ளுவர் வீட்டுக்குப் பிச்சையெடுக்கப் போனார். வாசலில் நின்றுகொண்டு பிச்சை கேட்டார். அந்த சமயத்துல வாசுகி அம்மையார் கணவருக்குப் பணிவிடை செய்துகிட்டு இருந்தாங்க. உடனடியா வந்து பிச்சை போட முடியல. கொஞ்ச நேரம் கழிச்சி பிச்சைபோட வாசலுக்கு வந்தார். அந்தக் கொஞ்ச நேரத்தைக்கூட கொங்கண முனிவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாசுகி அம்மையாரை எரித்துவிடும் நோக்கத்தில் கண்களில் கனல்தெறிக்கப் பார்த்தார்.வழியில் நடந்ததைத் தன் கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் முனிவரை நோக்கி,

" கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார். இதைக்கேட்ட முனிவர் திடுக்கிட்டார். அம்மையாரை வணங்கி அவர் இட்ட பிச்சை ஏற்றுக்கொண்டார்.

ஆகையால் அந்தப் பிச்சைக்காரன் கோபம் உன்னை ஒன்றும் செய்யாது. உன் வேலையைப் பார்"

" இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
..தானேயும் சாலும் கரி.

கருத்து: இரந்துண்பவர்கள் பொறுமை காக்கவேண்டும். சினம் கொள்ளக்கூடாது. இரக்கும் பொழுது தரமாட்டார்கள் என்பதற்கு அவனுடைய வறுமையே சான்றாக அமையும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 23, 2015 7:55 am

தோல்வி x தோல்வி = வெற்றி.
======================
கணிதம் ஒரு கடினமான பாடம். மாணவர்கள் அதிகமாகத் தோல்வி அடைவதும் இந்தப் பாடத்தில்தான். சில ஆசிரியர்கள் தம்முடைய கற்பித்தல் திறமையின் மூலமாக , கடினமான கணித பாடத்தைக் கற்கண்டாக இனிக்கச் செய்வர். அப்படிப்பட்ட ஆசிரியர்களுள் கணேசனும் ஒருவர்.எளிய கதைகள் மூலமாக , கணிதக் கருத்துக்களைக் கற்பிப்பார். இலக்கியங்கள் மூலமாக எடுத்துக்காட்டுகள் தருவார். மாணவர்கள் மனதில் கணிதக் கருத்துக்களைப் பசுமரத்தாணிபோல் பதிய வைப்பார்.

ஏற்றக் கோணம், இறக்கக் கோணம் ஆகிய கோண வகைகளைக் கற்பிக்கும் போது, ஒருவன் தரையிலிருந்து மலையின் உச்சியைப் பார்த்தால் அது ஏற்றக் கோணம் என்றும், மலை உச்சியிலிருந்து தரையைப் பார்த்தால் அது இறக்கக் கோணம் என்றும் பெரும்பாலான கணித ஆசிரியர்கள் கற்பிப்பர். ஆனால் கணேசனின் கற்பிக்கும் முறையே வேறு. இராமாயணத்தில் உள்ள ஒரு காட்சியின் மூலமாக இக்கருத்தை விளக்குவார்.

இராமாயணத்தில் , மிதிலை நகரின் தெருக்களில் , விஸ்வாமித்திர முனிவருடன் இராமனும், லட்சுமணனும் நடந்து செல்கின்றனர். அப்போது தன் தோழிகளுடன் உப்பரிகையின் மீதிருந்த சீதை , இராமனைப் பார்க்கிறாள்; இராமனும் சீதையைப் பார்க்கிறான். இக்காட்சியைக் கம்பர்,

" அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்." என்று கூறுகின்றார்.

இதில் அண்ணலின் நோக்கு , " ஏற்றக் கோணம் " அவளின் நோக்கு ," இறக்கக் கோணம் " என்று கணேசன் விளக்குவார்.


ஒரு சமயம் ஒரு மாணவன் , " முடிவிலி " அதாவது INFINITY என்றால் என்ன என்று கேட்டான்.அதற்கு ஆசிரியர் ஆதியும் , அந்தமும் இல்லாத எல்லாமே முடிவிலி என்று அழைக்கப்படுகின்றன. நாம் வணங்கும் இறைவன் ஆதியும், அந்தமும் இல்லாதவன்;பிரபஞ்சம் என்று சொல்லப்படுகின்ற இந்த அண்டம் ஆதியும் அந்தமும் இல்லாதது. கணிதத்தில் எண்கள் ஆதியும், அந்தமும் இல்லாதது. எனவே இவையெல்லாம் , " முடிவிலி " என்று அழைக்கப்படுகின்றன. திருவள்ளுவர் கூட முடிவிலியைப் பற்றி பேசியுள்ளார்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.


நாம் ஒருவருக்கு எந்த உதவியும் செய்யாதபோது, அவர் நமக்கு ஓர் உதவி செய்வாரேயானால், அந்த உதவிக்கு இந்த உலகம் மட்டுமல்ல; எல்லையில்லாத வானமும் ஈடாகாது என்பதே இக்குறளின் பொருள்.

இக்குறளில் ஒருவர் நமக்குச் செய்த உதவியை 1 என வைத்துக் கொள்வோம். நாம் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை; எனவே அதை பூஜ்ஜியம் அதாவது 0 என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது 1 ஐ 0 ஆல் வகுத்தால் கிடைக்கும் மதிப்பு இந்த வானத்தைப்போல முடிவில்லாத ஒன்றாகும். கணிதத்தில் எந்த ஒரு எண்ணையும் பூஜ்ஜியத்தால் வகுத்தால் விடை முடிவிலியாகும்.

இவ்வாறு ஆசிரியர் சொன்னவுடன் மாணவர்கள், " முடிவிலி " என்ற சொல்லின் பொருளை எளிதில் புரிந்து கொண்டனர்.

"Algibra is a cobra ' என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. கொடிய நாகத்தைப் போல துன்புறுத்தும் அல்ஜிப்ராவைக்கூட , மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் ஆசிரியர் கணேசன் கற்பிப்பார். அல்ஜிப்ராவின் அடிப்படை விதிகளான

( + ) X ( + ) = +

( - ) x ( - ) = +

( + ) x ( - ) = -

( - ) x ( + ) = -

என்ற விதிகளைக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

வெற்றியை ( + ) என்று வைத்துக் கொள்வோம்; தோல்வியை ( - ) என்று வைத்துக் கொள்வோம். இப்போது சொல்லுங்கள்! இரண்டு வெற்றிகள் சந்தித்தால் என்ன ஆகும்?

மாணவர்கள் அனைவரும் " பெரு வெற்றிக் கிடைக்கும் ஐயா! ' என்றனர்.

" இரண்டு தோல்விகள் சந்தித்தால் என்ன ஆகும் ?"

" பெருந்தோல்வி ஐயா! " என்றனர்.

உடனே ஆசிரியர், " தவறு ! இரண்டு தோல்விகள் சந்தித்தால் பெரு வெற்றி கிடைக்கவும் வாய்ப்புண்டு. அது நம்கையில்தான் உள்ளது."

'ஐயா! தாங்கள் கூறுவது எங்களுக்கு விளங்கவில்லை; விளக்கிச் சொல்லுங்கள்."

இக்கருத்தை ஒரு கதையின் மூலம் விளக்குகிறேன். ஒருவன் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்தான்; அவளும் தன்னை அவ்வாறே காதலிப்பதாக எண்ணினான். ஒருநாள் அவன் தனியாகக் கடற்கரைக்குச் சென்றிருந்தான். அங்கிருந்த ஒரு படகின் அருகில் ஓய்வாக அமர்ந்திருந்தான். அந்தப் படகின் மறுபுறத்திலிருந்து ஓர் இனிய பாடல் கேட்டது.

" மடிமீது தலைவைத்து
விடியும்வரை தூங்குவோம் "

என்று அந்தப்பெண் பாடிக்கொண்டு இருந்தாள். அந்தக் குரல் ஏற்கனவே அவனுக்குப் பழக்கமான குரல். அது யாரென்று தெரிந்துகொள்ள படகின் மறுபுறம் சென்று பார்த்தான். பார்த்த காட்சி , அவனைத் தூக்கிவாரிப் போட்டது. ஆம்! எந்தப்பெண்ணை அவன் உயிருக்கு உயிராகக் காதலித்தானோ, அந்தப்பெண், வேறு ஒரு ஆடவனுடைய மடியில் தலைவைத்துப் படுத்திருந்தாள். அண்ட சராசரங்களும் இடிந்து அவன் தலை மீது விழுந்தது போன்ற உணர்வு! தன்னை அவள் ஏமாற்றிவிட்டதை அறிந்தான். அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான். கடலில் மூழ்கி தன் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணினான். கடலை நோக்கி விரைந்தான்.

அங்கே அவனுக்கு முன்னே ஒரு பெண் கடலை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தாள். அந்தப் பெண்ணின் ஓட்டம் அவனுள் ஓர் ஐயத்தை ஏற்படுத்தியது. அவன் , அவளைத் தடுத்து நிறுத்தி

" நில்! பெண்ணே! எங்கே ஓடுகிறாய்?"

" இந்த உலகத்தில் உள்ள ஆண்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் ! ஆண்களை நம்பக்கூடாது; ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ளத்தான் கடலை நோக்கி ஓடுகிறேன்; என்னைத் தடுத்து நிறுத்தாதே!"

" யார் உன்னை ஏமாற்றினார்கள்? விவரமாகச் சொல்"

"நான் ஒருவனை உயிருக்கு உயிராகக் காதலித்தேன்; அவனும் என்னைக் காதலித்தான்; ஆனால் என்னைவிட வசதியும் ,அழகும் நிரம்பிய ஒரு பெண்ணை மணந்துகொண்டு என்னைக் கைகழுவி விட்டான். இனி நான் வாழ்ந்து என்ன பயன்? என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத்தான் கடலை நோக்கி ஓடுகிறேன்."

உடனே அவனுடைய வாய் அவனையும் அறியாமல்

" நீயும் நானும் ஒன்று
ஒருநிலையில் பார்த்தால் இன்று "

என்ற பாடலை முணுமுணுத்தது.அதைக்கேட்ட அவள் ," என்ன முணுமுணுக்கிறாய்?" என்று கேட்டாள்.

" ஒன்றுமில்லை! என் கதையும் , உன் கதையும் ஒன்றுதான்; என்னைக் காதலிப்பதாகச் சொல்லி ஒரு பெண் என்னை ஏமாற்றிவிட்டாள். எனவே நானும் தற்கொலை செய்துகொள்ள கடலை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தபோதுதான் உன்னைப் பார்த்தேன்; நாம் இருவரும் ஒன்றாகத் தற்கொலை செய்துகொள்வோம் ; வா" என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கடலை நோக்கி ஓடினான்.

பாதி தூரம் அவனுடன் ஓடிய அந்தப் பெண் திடீரென்று நின்றாள். பிறகு அவனை நோக்கி, " நாம் இருவரும் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? நம்மை ஏமாற்றியவர்களுக்குப் பாடம் கற்பித்தால் என்ன?" என்று கேட்டாள்.

" நீ என்ன சொல்கிறாய்?" புரியாமல் கேட்டான் அவன்.

" நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு நம்மை ஏமாற்றியவர்கள் முகத்தில் கரியைப் பூசுவோம் என்று சொல்கிறேன்."

சிறிதுநேரம் அவன் யோசித்தான். அவளுடைய யோசனை சரி என்று படவே திருமணத்திற்குச் சம்மதித்தான்.இருவரும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை விட்டுவிட்டு கடலை விட்டு அகன்றனர். சுண்டல் விற்கும் பையனிடம் கடலை வாங்கிக் கொறித்துக்கொண்டே திருமணம் பதிவு செய்யும் அலுவலகம் நோக்கி நடந்தனர்.

இப்பொழுது சொல்லுங்கள் மாணவர்களே! இரண்டு தோல்விகள் சேர்ந்து ஒரு வெற்றியை உண்டாக்கும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா?"

" புரிந்து கொண்டோம் ஐயா!

இதுதான் இரண்டாம் விதி. அதாவது (- ) X ( - ) = + என்பது.

" ஆகவே எந்தத் தோல்வியையும் வெற்றியாக மாற்றுவது நம் கையில்தான் உள்ளது." என்று சொல்லிப் பாடத்தை ஆசிரியர் முடித்தார்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 23, 2015 11:44 am

அனைத்தும் அருமை. அதிலும் அல்ஜீப்ரா கதை சூப்பருங்க சூப்பருங்க



எனது கதைகள் -- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது கதைகள் -- L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது கதைகள் -- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக