ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !

+9
balakarthik
shobana sahas
விமந்தனி
Preethika Chandrakumar
Achudhan
ayyasamy ram
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
M.Jagadeesan
13 posters

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

Go down

எனது கவிதைகள் ! - Page 13 Empty எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


எனது கவிதைகள் ! - Page 13 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Fri Jun 19, 2015 10:39 am

நன்றி ரமணியன் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 13 Empty Re: எனது கவிதைகள் !

Post by ஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 5:22 pm

சில்லரை கேட்டுத் தொந்தரவு செய்பவன்
பிச்சைக்காரன் மட்டுமல்ல
கண்டக்டரும்தான் ! எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 13 Empty Re: எனது கவிதைகள் !

Post by சரவணன் Sat Jun 20, 2015 5:41 pm

ஈகரைச்செல்வி wrote:சில்லரை கேட்டுத் தொந்தரவு செய்பவன்
பிச்சைக்காரன் மட்டுமல்ல
கண்டக்டரும்தான் ! எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834
எனது கவிதைகள் ! - Page 13 3838410834


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 13 Empty Re: எனது கவிதைகள் !

Post by T.N.Balasubramanian Sun Jun 21, 2015 9:21 am

ஈகரைச்செல்வி wrote:சில்லரை கேட்டுத் தொந்தரவு செய்பவன்
பிச்சைக்காரன் மட்டுமல்ல
கண்டக்டரும்தான் ! எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834 எனது கவிதைகள் ! - Page 13 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1146378

அருமை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 13 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Mon Jun 22, 2015 12:52 pm

கடன்
=======
கடன் இருப்பதால் எனைமணக்க
உடன்பாடு இல்லையென
உரைக்கும் காதலியே!

கதிரவனிடம் இருந்து கடன் வாங்கித்தானே
வெண்ணிலவு தண்ஒளியைத் தருகிறது!

மேகத்திடம் இருந்து கடன் வாங்கித்தானே நம்முடைய
தாகம் தணிக்கத் தண்ணீரைத் தருகிறது பூமி!

கடன் வாங்கும் கலையை பள்ளியிலே ஆசிரியர்கள்
கடன் வாங்கிக் கழித்தலில் கற்றுக் கொடுக்கவில்லையா?

காப்பிப்பொடியும் சர்க்கரையும் பக்கத்து வீட்டினிலே
கடன்வாங்கி அத்துடன் மிதமாகப் பால்சேர்த்து
சாப்பிடும் காப்பியிலே சுவையே அலாதி!

இந்தியத் திருநாடு இயங்குவதே கடனால்தான்
சிந்தித்து செயல்படுவாய் சிறியேனின் கடன் பொறுத்து
ஆட்கொண்டு என்னை அரவணைத்தல் உன் கடனே!


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 13 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Mon Jun 22, 2015 1:20 pm

சுருட்டல் !
===========
நேபாளத்தை சுருட்டிய பூகம்பமே !
இந்தியாவை உன்னால் எதுவும்
செய்ய முடியாது !

இந்திய அரசியல் வாதிகள்
நாங்கள் இருக்கும் வரையில்
இந்தியாவை யாராலும்
சுருட்ட முடியாது !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 13 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Wed Jun 24, 2015 8:14 pm

ஆண்டவன் சொன்ன " அவுட் "
==============================
எம்பி எகிறி வந்த பந்து
...எழுந்து வந்து நெற்றிப் பொட்டில்
தம்பி ஹியூசின் தலையைத் தாக்க
...தளர்ந்து அவனும் களத்தில் வீழ
அம்பயர் ஏதும் சொல்லும் முன்னே
...ஆண்டவன் சொன்னான் " அவுட் " என்று
பம்மி அழுதனர் உலக மாந்தர்
...பறந்து போன உயிரைக் கண்டு.




இந்தத் துயரம் ஓயும் முன்னே
...இஸ்ரேல் நாட்டின் ஆஷ்டாட் நகரில்
பந்து ஒன்று பறந்து வந்து
...பலமாய் அம்பயர் கழுத்தைத் தாக்க
நொந்து வலியின் வேதனை மீதுற
...நொடியில் விட்டனன் உயிரை ஆங்கே
சிந்திய கண்ணீர் காயும் முன்னே
...சிரித்துக் களித்தனன் எமனும் ஆங்கே.




விதிவந்து ஒருவன் நோயில் வீழ்ந்து
...விண்ணுல கடைதல் ஏற்புடைத் தாகும்
அதுவன்றி இதுபோல் அடிபட்டு ஒருவன்
...அகால மரணம் அடைதல் தகுமோ ?
மதியுடை மாந்தர் சிந்திப் பீரே ?
...மனித உயிரென்ன ஈயா ? கொசுவா ?
புதிதாய் விதிகள் வகுத்திடல் வேண்டும்
...புனித உயிர்களைக் காத்திடல் வேண்டும்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 13 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Wed Jun 24, 2015 8:17 pm

சந்தை மனிதர்கள் !
===================
கண்கள் பெரிதானால் முட்டைக்கண் என்பார்கள்
மண்பார்த்து நடந்தால் கோழை என்பார்கள்
மூக்கு பெரிதானால் குடைமிளகாய் என்பார்கள்
நாக்கு பெரிதானால் வாயாடி என்பார்கள்
கறுப்பு நிறமென்றால் கருப்பாயி என்பார்கள்
மறுத்துப் பேசினால் திமிர்பிடித்தவள் என்பார்கள்
படிப்பு அதிகமெனில் கர்வி என்பார்கள்
படிப்பு இல்லையெனில் கைநாட்டு என்பார்கள்
குள்ளமாய் இருந்தாலோ " குள்ளி " என்பார்கள்
மெல்ல நடந்தாலோ " நொண்டி " என்பார்கள்
இந்தக் குறையெல்லாம் திருமணச் சந்தையிலே
வந்தவழி போகுமடா கோடிகள் கொடுத்தாலே!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 13 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Wed Jun 24, 2015 8:20 pm

ஆடிப்பெருக்கு
================
ஆடிப் பெருக்கினிலே ஓடிவரும் தாயேஉன்
......அழகைக் காண்பதற்கே ஆயிரம் கண்வேண்டும்
வாடிய தமிழகத்தில் வளம்சேர்க்க வந்தவளே
......வழிபட்டு நிற்போர்க்கு வரந்தந்து காப்பவளே
கூடியே உன்கரையில் கொண்டாட வந்திட்டோம்
.....குலம்காக்க வந்தவளே கொண்டானின் நலம்காக்க
நாடியே வந்துன்னை வேண்டி நிற்கின்றோம்
......நாங்கள் சுமங்கலியாய் இருந்திட அருள்வாயே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 13 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Wed Jun 24, 2015 8:24 pm

காக்கையும் செத்த எலியும்.
============================
காக்கையொன்று இரைதேடி கானகத்தின் மரத்திலே
யாக்கையெங்கும் வாடியே எதிலும் நாட்டமின்றியே
உண்பதற்கு ஏற்றதோர் உறுபொருள் தேடியே
நண்பகல் வேளையில் நாப்புலற அக்காக்கை
கத்திகத்தி ஓய்ந்தது கானகத்தின் நடுவிலே
செத்தஎலி பார்த்தது;ஜென்மம் கடைத்தேறிய
மகிழ்ச்சியினால் துள்ளியே மரத்தினின்று இறங்கியே
பகிர்ந்துண்ணும் எண்ணத்தில் பக்கத்தில் சென்றதே !
அழுகிவிட்ட எலியதனை அலகினால் கவ்வியே
நழுவாமல் அக்காக்கை நடுவானில் பறக்கையிலே

கழுகுஒன்று கண்டதே! கண்டவுடன் வாயிலே  
ஒழுகுகின்ற எச்சிலும் ஓயாமல் வந்ததே!
காக்கைவாய் எலியதனைக் கவர்ந்துண்ணும் எண்ணத்தில்
தூக்கியஇரு காலுடனே துரத்தியே சென்றதே!
தாக்கவரும் கழுகதனைத் தன்னுடைய கண்களால்
காக்கையும் கண்டதே கண்ணில்பயம் கொண்டதே!
மூச்சுமுட்டப் பறந்ததே முடியவில்லை காக்கையால்
"போச்சுஇன்று என்னுயிர் போதுமிந்த வாழ்க்கை " என
நலிவுற்ற உடலிலே நடுக்கமும் தோன்றவே
எலியைவிட்ட காக்கை ஏமாற்றம் கொண்டதே!

விழுந்துவிட்ட எலியினை விரைவாகக் கால்களால்
கழுகுகொத்திச் சென்றதால் காக்கையும் தப்பியதே!

ஆசையென்னும் எலியினை அக்காக்கை நாடியதால்
துன்பமென்னும் கழுகு துரத்தியே வந்ததுவே!
எலியைவிட்டக் காக்கைக்கு ஏமாற்றம் வந்தாலும்
பலியினின்று தப்பியதே!பதட்டமும் குறைந்ததே!

ஆசையென்னும் பேயினுக்கு அடிமையாகும் போதிலே
மாசுவந்து சேருமே மனதுதடு மாறுமே!
ஐயன்திரு வள்ளுவனும் போதிமரப் புத்தனும்
அன்றுசொன்ன வார்த்தையை நெஞ்சிலே நிறுத்தினால்
குன்றைஒத்த துன்பமும் உன்னைவிட்டு நீங்குமே!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 13 Empty Re: எனது கவிதைகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum