புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது கவிதைகள் !
Page 11 of 16 •
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்
காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.
நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.
நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.
அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.
மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.
மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்
காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.
நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.
நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.
அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.
மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உயிர்
========
கண்ணுக்குத் தெரியாத உயிரே!
நீ பிரிந்தால்
விண்ணுக்குச் செல்கிறாயா? அல்லது
வேறெங்கும் செல்கிறாயா?
பேதைகளை இயக்குவதும் நீதான்
மேதைகளை இயக்குவதும் நீதான்
பேதையும் மேதையும் நீ
பிரிந்த பின்னால்
"பிணம்" என்ற சொல்லால்
பெயர் மாற்றம் பெறுகின்றார்.
தற்கொலை செய்து கொள்பவர்கள்
"போ" என்று சொன்னால்
உடனே போகின்றாய்!
ஆனால்
இறந்து போனவர் உடலில்
"வா" என்று சொன்னால்
வர மறுப்பது சரிதானா?
உன்னோடு விளையாடுவது
மருத்துவர்கள் சிலருக்குப்
பொழுதுபோக்கு! அவர்கள்தாம்
எமனின் வேலையை எளிதாக்கி
அவனுக்கு
ஏவல் செய்யும் வேலைக்காரர்கள்!
உடலைப் பிரிந்து
ஊர்சுற்றும் உயிரே!
இனியாவது
நல்லவர்கள் உடலில் புகுந்து
எமக்கு ஒரு
வள்ளுவனையும், கம்பனையும்
தெள்ளுதமிழ் இளங்கோவையும்
மீண்டும் தருவாயா?
========
கண்ணுக்குத் தெரியாத உயிரே!
நீ பிரிந்தால்
விண்ணுக்குச் செல்கிறாயா? அல்லது
வேறெங்கும் செல்கிறாயா?
பேதைகளை இயக்குவதும் நீதான்
மேதைகளை இயக்குவதும் நீதான்
பேதையும் மேதையும் நீ
பிரிந்த பின்னால்
"பிணம்" என்ற சொல்லால்
பெயர் மாற்றம் பெறுகின்றார்.
தற்கொலை செய்து கொள்பவர்கள்
"போ" என்று சொன்னால்
உடனே போகின்றாய்!
ஆனால்
இறந்து போனவர் உடலில்
"வா" என்று சொன்னால்
வர மறுப்பது சரிதானா?
உன்னோடு விளையாடுவது
மருத்துவர்கள் சிலருக்குப்
பொழுதுபோக்கு! அவர்கள்தாம்
எமனின் வேலையை எளிதாக்கி
அவனுக்கு
ஏவல் செய்யும் வேலைக்காரர்கள்!
உடலைப் பிரிந்து
ஊர்சுற்றும் உயிரே!
இனியாவது
நல்லவர்கள் உடலில் புகுந்து
எமக்கு ஒரு
வள்ளுவனையும், கம்பனையும்
தெள்ளுதமிழ் இளங்கோவையும்
மீண்டும் தருவாயா?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மை
=====
"மை"கள் எத்தனை "மை"களடி! அந்த
"மை"களின் கதையைக் கேளடி நீ!
கண்ணுக்கு அழகு கண்மை ஆகும்
பெண்ணுக்கு அழகு தாய்மை ஆகும்
மண்ணுக்கு அழகு வளமை ஆகும்
விண்ணுக்கு அழகு வெறுமை ஆகும்.
உலகிலுள்ள "மை"களில் சிறந்தது
உண்மை என்கிற மெய்மை ஆகும்
உள்ளம் என்னும் இல்லம் தினமும்
உண்மை பேசத் தூய்மை ஆகும்.
"மை"களில் கொடியது வறுமை என்று
ஒளவைக் கிழவி அன்றே சொன்னாள்
வறுமை என்னும் பேய்தனை ஓட்ட
வாழ்க்கையில் உழைப்பு அவசியம் தேவை.
ஆமையும் முயலும் ஓடிய போதில்
ஆமை தோற்கும் என்றே எண்ண
முயலும் தோற்று ஆமை வெல்ல
முயலின் முயலாமை காரணம் ஆகும்.
கண்டவர் வெறுக்கும் கருமை நிறமே
கண்ணன் கொண்ட தனிநிறம் ஆகும்
கறுத்தவர் எல்லாம் வெறுப்பவர் அல்ல
சிவந்தவர் எல்லாம் சிறந்தவர் அல்ல.
நன்மை தீமை என்பன எல்லாம்
நம்மை நாடி வருவன அல்ல
நன்மை செய்தால் நன்மை வருமே
புன்மை செய்தால் தீமை வருமே
பெண்மையும் ஆண்மையும் சமமெனப் பேசிடு
பெண்மையும் தெய்வமும் ஒன்றெனப் பேசிடு
உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் இருந்தால்
உயர்வுகள் யாவும் உன்னிடம் சேரும்!
=====
"மை"கள் எத்தனை "மை"களடி! அந்த
"மை"களின் கதையைக் கேளடி நீ!
கண்ணுக்கு அழகு கண்மை ஆகும்
பெண்ணுக்கு அழகு தாய்மை ஆகும்
மண்ணுக்கு அழகு வளமை ஆகும்
விண்ணுக்கு அழகு வெறுமை ஆகும்.
உலகிலுள்ள "மை"களில் சிறந்தது
உண்மை என்கிற மெய்மை ஆகும்
உள்ளம் என்னும் இல்லம் தினமும்
உண்மை பேசத் தூய்மை ஆகும்.
"மை"களில் கொடியது வறுமை என்று
ஒளவைக் கிழவி அன்றே சொன்னாள்
வறுமை என்னும் பேய்தனை ஓட்ட
வாழ்க்கையில் உழைப்பு அவசியம் தேவை.
ஆமையும் முயலும் ஓடிய போதில்
ஆமை தோற்கும் என்றே எண்ண
முயலும் தோற்று ஆமை வெல்ல
முயலின் முயலாமை காரணம் ஆகும்.
கண்டவர் வெறுக்கும் கருமை நிறமே
கண்ணன் கொண்ட தனிநிறம் ஆகும்
கறுத்தவர் எல்லாம் வெறுப்பவர் அல்ல
சிவந்தவர் எல்லாம் சிறந்தவர் அல்ல.
நன்மை தீமை என்பன எல்லாம்
நம்மை நாடி வருவன அல்ல
நன்மை செய்தால் நன்மை வருமே
புன்மை செய்தால் தீமை வருமே
பெண்மையும் ஆண்மையும் சமமெனப் பேசிடு
பெண்மையும் தெய்வமும் ஒன்றெனப் பேசிடு
உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் இருந்தால்
உயர்வுகள் யாவும் உன்னிடம் சேரும்!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சூரியனுக்கும், கொசுவுக்கும் சிலேடை.
========================================
ஊசிபோல் தைப்பான் உறக்கத்தைப் போக்கிடுவான்
காசினியில் இல்லாத ஊரில்லை-மாசில்
விசும்பின் விளக்காய் ஒளிவீசும் வெய்யோன்
கொசுவுக்கு நேரென்று கூறு.
========================================
ஊசிபோல் தைப்பான் உறக்கத்தைப் போக்கிடுவான்
காசினியில் இல்லாத ஊரில்லை-மாசில்
விசும்பின் விளக்காய் ஒளிவீசும் வெய்யோன்
கொசுவுக்கு நேரென்று கூறு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இட்டலியும் சாம்பாரும்
=======================
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.
=======================
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144800M.Jagadeesan wrote:மை
=====
"மை"கள் எத்தனை "மை"களடி! அந்த
"மை"களின் கதையைக் கேளடி நீ!
கண்ணுக்கு அழகு கண்மை ஆகும்
பெண்ணுக்கு அழகு தாய்மை ஆகும்
மண்ணுக்கு அழகு வளமை ஆகும்
விண்ணுக்கு அழகு வெறுமை ஆகும்.
உலகிலுள்ள "மை"களில் சிறந்தது
உண்மை என்கிற மெய்மை ஆகும்
உள்ளம் என்னும் இல்லம் தினமும்
உண்மை பேசத் தூய்மை ஆகும்.
"மை"களில் கொடியது வறுமை என்று
ஒளவைக் கிழவி அன்றே சொன்னாள்
வறுமை என்னும் பேய்தனை ஓட்ட
வாழ்க்கையில் உழைப்பு அவசியம் தேவை.
ஆமையும் முயலும் ஓடிய போதில்
ஆமை தோற்கும் என்றே எண்ண
முயலும் தோற்று ஆமை வெல்ல
முயலின் முயலாமை காரணம் ஆகும்.
கண்டவர் வெறுக்கும் கருமை நிறமே
கண்ணன் கொண்ட தனிநிறம் ஆகும்
கறுத்தவர் எல்லாம் வெறுப்பவர் அல்ல
சிவந்தவர் எல்லாம் சிறந்தவர் அல்ல.
நன்மை தீமை என்பன எல்லாம்
நம்மை நாடி வருவன அல்ல
நன்மை செய்தால் நன்மை வருமே
புன்மை செய்தால் தீமை வருமே
பெண்மையும் ஆண்மையும் சமமெனப் பேசிடு
பெண்மையும் தெய்வமும் ஒன்றெனப் பேசிடு
உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் இருந்தால்
உயர்வுகள் யாவும் உன்னிடம் சேரும்!
மைகளை
ஒருமை படுத்திய
பெருமை உமக்கே
பொறுமை மிக்க உம்செயலில்
மையல் கொண்டேன் ,ஜகதீசரே ,
அருமையிலும் அருமை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரமணியன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருந்தா முண்டம்
===================
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
மதுரை மாநகரில்
தலையற்ற முண்டம் ஒன்று
தனியே நடந்து வரக்கண்டு
குலைநடுங்கிய மனத்தினராய் மக்கள்
சிதறி ஓடினர் திசைக்கு ஒருவராய்.
அவருள்ளும்
மாடலன் என்னும் பெயர்கொண்ட
மறையோன் ஒருவன் முண்டத்தை அணுகி
"கண்டவர் நடுங்க மதுரை வீதியில்
தண்டமாய் அலையும் முண்டமே! யார் நீ?"
எனக்கேட்க
நீர்வார் கண்ணும் நிமிர்ந்த நடையும்
கார்குழல் விரித்து கண்டவர் நடுங்க
மதுரை வீதியில் முன்னம் ஓர்நாள்
அதிர நடந்து அவைக்களம் ஏகி
காவலன் முன்னே காற்சிலம்பு உடைத்து
கணவன் கொண்ட பழிச்சொல் துடைத்த
கண்ணகி கேள்வன் கோவலன் யானே!
ஆவியை நீத்த அற்றை நாள்முதல்
அமைதி இழந்து தவிக்கின்றேன் யான்
பாவி எந்தன் தலையைக் கொணர்ந்து
பத்திரமாய் என் கைத்தலம் தந்தால்
முண்டம் நீங்கி முழுஉரு பெற்று
கண்டோர் மயங்கும் காளை ஆவேன்
இதைக்கேட்டு
கொலைக்களம் சென்ற மாடல மறையோன்
கோவலன் தலையைத் தேடி எடுத்து
கொண்டுவந்து முண்டத்தின் கைதர
தலையை வாங்கிப் பொருத்திய கோவலன்
நிலைக் கண்ணாடிமுன் தன்உரு கண்டு
பெருகிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து
தெருவில் இறங்கி ஓடத் தொடங்கினான்.
அதுகண்டு மாடல மறையோன்
" கண்ணகியைக் காண இத்தனை விரைவா?"
எனக்கேட்க
" இல்லை இல்லை! மாதவி!" என்று உரைத்தது
முண்டம்.
===================
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
மதுரை மாநகரில்
தலையற்ற முண்டம் ஒன்று
தனியே நடந்து வரக்கண்டு
குலைநடுங்கிய மனத்தினராய் மக்கள்
சிதறி ஓடினர் திசைக்கு ஒருவராய்.
அவருள்ளும்
மாடலன் என்னும் பெயர்கொண்ட
மறையோன் ஒருவன் முண்டத்தை அணுகி
"கண்டவர் நடுங்க மதுரை வீதியில்
தண்டமாய் அலையும் முண்டமே! யார் நீ?"
எனக்கேட்க
நீர்வார் கண்ணும் நிமிர்ந்த நடையும்
கார்குழல் விரித்து கண்டவர் நடுங்க
மதுரை வீதியில் முன்னம் ஓர்நாள்
அதிர நடந்து அவைக்களம் ஏகி
காவலன் முன்னே காற்சிலம்பு உடைத்து
கணவன் கொண்ட பழிச்சொல் துடைத்த
கண்ணகி கேள்வன் கோவலன் யானே!
ஆவியை நீத்த அற்றை நாள்முதல்
அமைதி இழந்து தவிக்கின்றேன் யான்
பாவி எந்தன் தலையைக் கொணர்ந்து
பத்திரமாய் என் கைத்தலம் தந்தால்
முண்டம் நீங்கி முழுஉரு பெற்று
கண்டோர் மயங்கும் காளை ஆவேன்
இதைக்கேட்டு
கொலைக்களம் சென்ற மாடல மறையோன்
கோவலன் தலையைத் தேடி எடுத்து
கொண்டுவந்து முண்டத்தின் கைதர
தலையை வாங்கிப் பொருத்திய கோவலன்
நிலைக் கண்ணாடிமுன் தன்உரு கண்டு
பெருகிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து
தெருவில் இறங்கி ஓடத் தொடங்கினான்.
அதுகண்டு மாடல மறையோன்
" கண்ணகியைக் காண இத்தனை விரைவா?"
எனக்கேட்க
" இல்லை இல்லை! மாதவி!" என்று உரைத்தது
முண்டம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அற்ப ஆசைகள்
=================
வண்ணக் காட்சிகளைக் கண்டு மகிழவும்
தின்னும் வெற்றிலை எச்சில் துப்பவும்
இன்னல் ஏதும் இருக்காது என்பதால்
ஜன்னல் ஓரத்தைப் பேருந்துகளில் விரும்புவர்.
அட்சய திருதியையில் நகையை வாங்கினால்
லட்சுமி வீட்டில் வாசம் செய்வாளென
லட்ச லட்சமாய் பணத்தைக் கொட்டி
இச்சைக்கு இனிய நகைகளை வாங்குவர்.
குங்குமப்பூ தின்றால் கொழுகொழு குழந்தை
மங்கையர் வயிற்றில் நாளும் வளர்ந்து
செங்குருதி நிறத்தில் செக்கச் செவேலென
மங்கள முகத்துடன் பிறக்கும் என்பர்.
பூஜை பண்டிகையில் சரஸ்வதி முன்னே
மேஜையின் மீது புத்தகங்கள் அடுக்கி
அள்ளி சந்தனத்தை அதன்மீது தெளித்தால்
கல்வி வருமெனக் கடவுளை வணங்குவர்.
வாஸ்து முறைப்படி கட்டடம் கட்டினால்
ஆஸ்தி பெருகுமென்று யாரோ சொல்ல
மாசுமறு இல்லாமல் கட்டிய வீட்டைக்
காசுபல செலவிட்டு இடித்துத் தள்ளுவர்.
அற்ப ஆசைகள் மனதில் நுழைந்தால்
அறிவுக்கு அங்கே என்ன வேலை?
எப்பொருள் யார்யார் வாய் கேட்டாலும்
மெய்ப்பொருள் காண்பதே அறிவின் வேலை.
=================
வண்ணக் காட்சிகளைக் கண்டு மகிழவும்
தின்னும் வெற்றிலை எச்சில் துப்பவும்
இன்னல் ஏதும் இருக்காது என்பதால்
ஜன்னல் ஓரத்தைப் பேருந்துகளில் விரும்புவர்.
அட்சய திருதியையில் நகையை வாங்கினால்
லட்சுமி வீட்டில் வாசம் செய்வாளென
லட்ச லட்சமாய் பணத்தைக் கொட்டி
இச்சைக்கு இனிய நகைகளை வாங்குவர்.
குங்குமப்பூ தின்றால் கொழுகொழு குழந்தை
மங்கையர் வயிற்றில் நாளும் வளர்ந்து
செங்குருதி நிறத்தில் செக்கச் செவேலென
மங்கள முகத்துடன் பிறக்கும் என்பர்.
பூஜை பண்டிகையில் சரஸ்வதி முன்னே
மேஜையின் மீது புத்தகங்கள் அடுக்கி
அள்ளி சந்தனத்தை அதன்மீது தெளித்தால்
கல்வி வருமெனக் கடவுளை வணங்குவர்.
வாஸ்து முறைப்படி கட்டடம் கட்டினால்
ஆஸ்தி பெருகுமென்று யாரோ சொல்ல
மாசுமறு இல்லாமல் கட்டிய வீட்டைக்
காசுபல செலவிட்டு இடித்துத் தள்ளுவர்.
அற்ப ஆசைகள் மனதில் நுழைந்தால்
அறிவுக்கு அங்கே என்ன வேலை?
எப்பொருள் யார்யார் வாய் கேட்டாலும்
மெய்ப்பொருள் காண்பதே அறிவின் வேலை.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நிற்பவை எல்லாம் நிற்பவையல்ல
===================================
நிற்பவை எல்லாம் நிற்பவை அல்ல
நீடித்த புகழே நிற்பவை ஆகும்.
கற்பவை எல்லாம் கல்வியல்ல -சொந்தக்
காலில் நிற்கச் செய்வதே கல்வியாகும்.
வாழ்வது எல்லாம் வாழ்க்கையல்ல -பகுத்துண்டு
வாழும் வாழ்க்கையே வாழ்க்கையாகும்.
வீழ்வது எல்லாம் வீழ்ச்சியல்ல என்றும்
வீழ்ந்து கிடப்பதே வீழ்ச்சியாகும்.
உண்மை எல்லாம் உண்மையல்ல மற்றவர்க்கு
நன்மை செய்வதே உண்மையாகும்.
திண்மை எல்லாம் திண்மையல்ல தோல்வியை
ஏற்றுக் கொள்வதே திண்மையாகும்.
வெற்றி எல்லாம் வெற்றியல்ல நல்வழியில்
பெற்றவை மட்டுமே வெற்றியாகும்.
தோல்வி எல்லாம் தோல்வியல்ல அதைத்
தொடர விடுவதே தோல்வியாகும்.
சுற்றம் எல்லாம் சுற்றமல்ல துன்பத்தில்
பங்கு கொள்வதே சுற்ற மாகும்.
குற்றம் எல்லாம் குற்றமல்ல மீண்டும்
திரும்பச் செய்வதே குற்றமாகும்.
கற்றவர் எல்லாம் கற்றோர் அல்லர்-கற்றவழி
நிற்பவர் தாமே கற்றோர் ஆவார்.
பெற்றவை எல்லாம் பிள்ளைகளல்ல-பெற்றோர்க்கு
பெருமை சேர்ப்பவரே பிள்ளைகளாகும்.
===================================
நிற்பவை எல்லாம் நிற்பவை அல்ல
நீடித்த புகழே நிற்பவை ஆகும்.
கற்பவை எல்லாம் கல்வியல்ல -சொந்தக்
காலில் நிற்கச் செய்வதே கல்வியாகும்.
வாழ்வது எல்லாம் வாழ்க்கையல்ல -பகுத்துண்டு
வாழும் வாழ்க்கையே வாழ்க்கையாகும்.
வீழ்வது எல்லாம் வீழ்ச்சியல்ல என்றும்
வீழ்ந்து கிடப்பதே வீழ்ச்சியாகும்.
உண்மை எல்லாம் உண்மையல்ல மற்றவர்க்கு
நன்மை செய்வதே உண்மையாகும்.
திண்மை எல்லாம் திண்மையல்ல தோல்வியை
ஏற்றுக் கொள்வதே திண்மையாகும்.
வெற்றி எல்லாம் வெற்றியல்ல நல்வழியில்
பெற்றவை மட்டுமே வெற்றியாகும்.
தோல்வி எல்லாம் தோல்வியல்ல அதைத்
தொடர விடுவதே தோல்வியாகும்.
சுற்றம் எல்லாம் சுற்றமல்ல துன்பத்தில்
பங்கு கொள்வதே சுற்ற மாகும்.
குற்றம் எல்லாம் குற்றமல்ல மீண்டும்
திரும்பச் செய்வதே குற்றமாகும்.
கற்றவர் எல்லாம் கற்றோர் அல்லர்-கற்றவழி
நிற்பவர் தாமே கற்றோர் ஆவார்.
பெற்றவை எல்லாம் பிள்ளைகளல்ல-பெற்றோர்க்கு
பெருமை சேர்ப்பவரே பிள்ளைகளாகும்.
- Sponsored content
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 16
|
|