ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !

+9
balakarthik
shobana sahas
விமந்தனி
Preethika Chandrakumar
Achudhan
ayyasamy ram
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
M.Jagadeesan
13 posters

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

Go down

எனது கவிதைகள் ! - Page 11 Empty எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


எனது கவிதைகள் ! - Page 11 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Sat Jun 13, 2015 5:47 pm

உயிர்
========
கண்ணுக்குத் தெரியாத உயிரே!
நீ பிரிந்தால்
விண்ணுக்குச் செல்கிறாயா? அல்லது
வேறெங்கும் செல்கிறாயா?

பேதைகளை இயக்குவதும் நீதான்
மேதைகளை இயக்குவதும் நீதான்
பேதையும் மேதையும் நீ
பிரிந்த பின்னால்
"பிணம்" என்ற சொல்லால்
பெயர் மாற்றம் பெறுகின்றார்.

தற்கொலை செய்து கொள்பவர்கள்
"போ" என்று சொன்னால்
உடனே போகின்றாய்!
ஆனால்
இறந்து போனவர் உடலில்
"வா" என்று சொன்னால்
வர மறுப்பது சரிதானா?

உன்னோடு விளையாடுவது
மருத்துவர்கள் சிலருக்குப்
பொழுதுபோக்கு! அவர்கள்தாம்
எமனின் வேலையை எளிதாக்கி
அவனுக்கு
ஏவல் செய்யும் வேலைக்காரர்கள்!

உடலைப் பிரிந்து
ஊர்சுற்றும் உயிரே!
இனியாவது
நல்லவர்கள் உடலில் புகுந்து
எமக்கு ஒரு
வள்ளுவனையும், கம்பனையும்
தெள்ளுதமிழ் இளங்கோவையும்
மீண்டும் தருவாயா?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 11 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Sat Jun 13, 2015 5:52 pm

மை
=====
"மை"கள் எத்தனை "மை"களடி! அந்த
"மை"களின் கதையைக் கேளடி நீ!

கண்ணுக்கு அழகு கண்மை ஆகும்
பெண்ணுக்கு அழகு தாய்மை ஆகும்
மண்ணுக்கு அழகு வளமை ஆகும்
விண்ணுக்கு அழகு வெறுமை ஆகும்.

உலகிலுள்ள "மை"களில் சிறந்தது
உண்மை என்கிற மெய்மை ஆகும்
உள்ளம் என்னும் இல்லம் தினமும்
உண்மை பேசத் தூய்மை ஆகும்.

"மை"களில் கொடியது வறுமை என்று
ஒளவைக் கிழவி அன்றே சொன்னாள்
வறுமை என்னும் பேய்தனை ஓட்ட
வாழ்க்கையில் உழைப்பு அவசியம் தேவை.

ஆமையும் முயலும் ஓடிய போதில்
ஆமை தோற்கும் என்றே எண்ண
முயலும் தோற்று ஆமை வெல்ல
முயலின் முயலாமை காரணம் ஆகும்.

கண்டவர் வெறுக்கும் கருமை நிறமே
கண்ணன் கொண்ட தனிநிறம் ஆகும்
கறுத்தவர் எல்லாம் வெறுப்பவர் அல்ல
சிவந்தவர் எல்லாம் சிறந்தவர் அல்ல.

நன்மை தீமை என்பன எல்லாம்
நம்மை நாடி வருவன அல்ல
நன்மை செய்தால் நன்மை வருமே
புன்மை செய்தால் தீமை வருமே

பெண்மையும் ஆண்மையும் சமமெனப் பேசிடு
பெண்மையும் தெய்வமும் ஒன்றெனப் பேசிடு
உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் இருந்தால்
உயர்வுகள் யாவும் உன்னிடம் சேரும்!


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 11 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Sat Jun 13, 2015 5:59 pm

சூரியனுக்கும், கொசுவுக்கும் சிலேடை.
========================================
ஊசிபோல் தைப்பான் உறக்கத்தைப் போக்கிடுவான்
காசினியில் இல்லாத ஊரில்லை-மாசில்
விசும்பின் விளக்காய் ஒளிவீசும் வெய்யோன்
கொசுவுக்கு நேரென்று கூறு.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 11 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Sat Jun 13, 2015 6:01 pm

இட்டலியும் சாம்பாரும்
=======================
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 11 Empty Re: எனது கவிதைகள் !

Post by Preethika Chandrakumar Sat Jun 13, 2015 6:42 pm

சூப்பருங்க
எனது கவிதைகள் ! - Page 11 3838410834 எனது கவிதைகள் ! - Page 11 3838410834
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 11 Empty Re: எனது கவிதைகள் !

Post by T.N.Balasubramanian Sat Jun 13, 2015 6:55 pm

M.Jagadeesan wrote:மை
=====
"மை"கள் எத்தனை "மை"களடி! அந்த
"மை"களின் கதையைக் கேளடி நீ!

கண்ணுக்கு அழகு கண்மை ஆகும்
பெண்ணுக்கு அழகு தாய்மை ஆகும்
மண்ணுக்கு அழகு வளமை ஆகும்
விண்ணுக்கு அழகு வெறுமை ஆகும்.

உலகிலுள்ள "மை"களில் சிறந்தது
உண்மை என்கிற மெய்மை ஆகும்
உள்ளம் என்னும் இல்லம் தினமும்
உண்மை பேசத் தூய்மை ஆகும்.

"மை"களில் கொடியது வறுமை என்று
ஒளவைக் கிழவி அன்றே சொன்னாள்
வறுமை என்னும் பேய்தனை ஓட்ட
வாழ்க்கையில் உழைப்பு அவசியம் தேவை.

ஆமையும் முயலும் ஓடிய போதில்
ஆமை தோற்கும் என்றே எண்ண
முயலும் தோற்று ஆமை வெல்ல
முயலின் முயலாமை காரணம் ஆகும்.

கண்டவர் வெறுக்கும் கருமை நிறமே
கண்ணன் கொண்ட தனிநிறம் ஆகும்
கறுத்தவர் எல்லாம் வெறுப்பவர் அல்ல
சிவந்தவர் எல்லாம் சிறந்தவர் அல்ல.

நன்மை தீமை என்பன எல்லாம்
நம்மை நாடி வருவன அல்ல
நன்மை செய்தால் நன்மை வருமே
புன்மை செய்தால் தீமை வருமே

பெண்மையும் ஆண்மையும் சமமெனப் பேசிடு
பெண்மையும் தெய்வமும் ஒன்றெனப் பேசிடு
உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் இருந்தால்
உயர்வுகள் யாவும் உன்னிடம் சேரும்!
மேற்கோள் செய்த பதிவு: 1144800

மைகளை
ஒருமை படுத்திய
பெருமை உமக்கே
பொறுமை மிக்க உம்செயலில்
மையல் கொண்டேன் ,ஜகதீசரே ,
அருமையிலும் அருமை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 11 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Sat Jun 13, 2015 7:22 pm

ரமணியன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 11 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Mon Jun 15, 2015 5:27 pm

திருந்தா முண்டம்
===================
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
மதுரை மாநகரில்
தலையற்ற முண்டம் ஒன்று
தனியே நடந்து வரக்கண்டு
குலைநடுங்கிய மனத்தினராய் மக்கள்
சிதறி ஓடினர் திசைக்கு ஒருவராய்.

அவருள்ளும்
மாடலன் என்னும் பெயர்கொண்ட
மறையோன் ஒருவன் முண்டத்தை அணுகி

"கண்டவர் நடுங்க மதுரை வீதியில்
தண்டமாய் அலையும் முண்டமே! யார் நீ?"
எனக்கேட்க

நீர்வார் கண்ணும் நிமிர்ந்த நடையும்
கார்குழல் விரித்து கண்டவர் நடுங்க
மதுரை வீதியில் முன்னம் ஓர்நாள்
அதிர நடந்து அவைக்களம் ஏகி
காவலன் முன்னே காற்சிலம்பு உடைத்து
கணவன் கொண்ட பழிச்சொல் துடைத்த
கண்ணகி கேள்வன் கோவலன் யானே!
ஆவியை நீத்த அற்றை நாள்முதல்
அமைதி இழந்து தவிக்கின்றேன் யான்
பாவி எந்தன் தலையைக் கொணர்ந்து
பத்திரமாய் என் கைத்தலம் தந்தால்
முண்டம் நீங்கி முழுஉரு பெற்று
கண்டோர் மயங்கும் காளை ஆவேன்

இதைக்கேட்டு
கொலைக்களம் சென்ற மாடல மறையோன்
கோவலன் தலையைத் தேடி எடுத்து
கொண்டுவந்து முண்டத்தின் கைதர

தலையை வாங்கிப் பொருத்திய கோவலன்
நிலைக் கண்ணாடிமுன் தன்உரு கண்டு
பெருகிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து
தெருவில் இறங்கி ஓடத் தொடங்கினான்.

அதுகண்டு மாடல மறையோன்
" கண்ணகியைக் காண இத்தனை விரைவா?"
எனக்கேட்க

" இல்லை இல்லை! மாதவி!" என்று உரைத்தது
முண்டம்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 11 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Mon Jun 15, 2015 5:30 pm

அற்ப ஆசைகள்
=================
வண்ணக் காட்சிகளைக் கண்டு மகிழவும்
தின்னும் வெற்றிலை எச்சில் துப்பவும்
இன்னல் ஏதும் இருக்காது என்பதால்
ஜன்னல் ஓரத்தைப் பேருந்துகளில் விரும்புவர்.

அட்சய திருதியையில் நகையை வாங்கினால்
லட்சுமி வீட்டில் வாசம் செய்வாளென
லட்ச லட்சமாய் பணத்தைக் கொட்டி
இச்சைக்கு இனிய நகைகளை வாங்குவர்.

குங்குமப்பூ தின்றால் கொழுகொழு குழந்தை
மங்கையர் வயிற்றில் நாளும் வளர்ந்து
செங்குருதி நிறத்தில் செக்கச் செவேலென
மங்கள முகத்துடன் பிறக்கும் என்பர்.

பூஜை பண்டிகையில் சரஸ்வதி முன்னே
மேஜையின் மீது புத்தகங்கள் அடுக்கி
அள்ளி சந்தனத்தை அதன்மீது தெளித்தால்
கல்வி வருமெனக் கடவுளை வணங்குவர்.

வாஸ்து முறைப்படி கட்டடம் கட்டினால்
ஆஸ்தி பெருகுமென்று யாரோ சொல்ல
மாசுமறு இல்லாமல் கட்டிய வீட்டைக்
காசுபல செலவிட்டு இடித்துத் தள்ளுவர்.

அற்ப ஆசைகள் மனதில் நுழைந்தால்
அறிவுக்கு அங்கே என்ன வேலை?
எப்பொருள் யார்யார் வாய் கேட்டாலும்
மெய்ப்பொருள் காண்பதே அறிவின் வேலை.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 11 Empty Re: எனது கவிதைகள் !

Post by M.Jagadeesan Mon Jun 15, 2015 5:33 pm

நிற்பவை எல்லாம் நிற்பவையல்ல
===================================
நிற்பவை எல்லாம் நிற்பவை அல்ல
நீடித்த புகழே நிற்பவை ஆகும்.
கற்பவை எல்லாம் கல்வியல்ல -சொந்தக்
காலில் நிற்கச் செய்வதே கல்வியாகும்.

வாழ்வது எல்லாம் வாழ்க்கையல்ல -பகுத்துண்டு
வாழும் வாழ்க்கையே வாழ்க்கையாகும்.
வீழ்வது எல்லாம் வீழ்ச்சியல்ல என்றும்
வீழ்ந்து கிடப்பதே வீழ்ச்சியாகும்.

உண்மை எல்லாம் உண்மையல்ல மற்றவர்க்கு
நன்மை செய்வதே உண்மையாகும்.
திண்மை எல்லாம் திண்மையல்ல தோல்வியை
ஏற்றுக் கொள்வதே திண்மையாகும்.

வெற்றி எல்லாம் வெற்றியல்ல நல்வழியில்
பெற்றவை மட்டுமே வெற்றியாகும்.
தோல்வி எல்லாம் தோல்வியல்ல அதைத்
தொடர விடுவதே தோல்வியாகும்.

சுற்றம் எல்லாம் சுற்றமல்ல துன்பத்தில்
பங்கு கொள்வதே சுற்ற மாகும்.
குற்றம் எல்லாம் குற்றமல்ல மீண்டும்
திரும்பச் செய்வதே குற்றமாகும்.

கற்றவர் எல்லாம் கற்றோர் அல்லர்-கற்றவழி
நிற்பவர் தாமே கற்றோர் ஆவார்.
பெற்றவை எல்லாம் பிள்ளைகளல்ல-பெற்றோர்க்கு
பெருமை சேர்ப்பவரே பிள்ளைகளாகும்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது கவிதைகள் ! - Page 11 Empty Re: எனது கவிதைகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum