புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_c10'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_m10'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_c10'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_m10'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_c10'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_m10'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_c10'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_m10'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 1:07 am


சாமான்ய மக்கள் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தில் அடிப்படை உரிமைகளோடு புழங்க ஏற்படுத்தப்பட்டவையே சட்டமும் அதனை செயல்படுத்தும் நீதிமன்றமும். சில தனிமனிதர்களின் அதிகார துஷ்பிரயோகத்தால் சமீப காலங்களாக சாதாரண குடிமகன்களுக்கு ஆபத்து உருவாகியுள்ள நிலையில், சட்டத்தை செயல்படுத்துகின்ற நீதிமன்றங்களின் அவசியம் அதிகரித்திருக்கிறது.

சட்டத்தால் வழங்கப்பட்ட ஒரு விதிவிலக்கை கையில்கொண்டு அதை அரிதாகவும், நியாயமாகவும் பயன்படுத்தாமல், தமிழக காவல்நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்ற பல வழக்குகளில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, குற்றவாளிகளை தப்பிக்க வைத்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கா மலும் செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மதுரையில் செயல்படும் எவிடென்ஸ் அமைப்பு ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் எவிடென்ஸ் கதிர், ‘’கடந்த ஜனவரி 2௦1௦ முதல், மார்ச் 2௦13 வரை தமிழகத்திலுள்ள 19௦ காவல்நிலையங்களில் மொத்த வழக்குகள் எவ்வளவு பதிவு செய்யப்பட்டன, இவற்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? இதில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு முன், உண்மைக்கு மாறாக பதிவு செய்யப்பட்டதாக (mistake of fact), சட்டத்திற்கு மாறாக (mistake of law) என்ற விதியின் பேரிலும், கண்டறிய முடியவில்லை (undetected) என்றும், மேல்நடவடிக்கை எடுக்க தேவையில்லை (action dropped) என்ற அடிப்படையில் காவல்நிலையங் களிலேயே முடித்துக்கொண்ட வழக்கு விவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றோம்.

மேலே சொன்ன விதிகளை உண்மையான வழக்குகளில் காட்டாமல், தங்களுக்கு தேவையான வழக்குக ளில் பயன்படுத்தி காவல்துறையினர் ஆதாயம் அடைந்ததோடு மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் செய்திருக்கிறார்கள். அதாவது முப்பது சதவீத வழக்குகளை நீதிமன்றம் செல்வதற்கு முன்பே தள்ளுபடி செய்துள்ளனர். சுருக்கமாக சொன்னால், காவல்நிலையங்களிலேயே கட்டப் பஞ்சாயத்து செய்து முடித்துள்ளனர் என்று சொல்லலாம்.

தொடர்ந்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பு, காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்களிடமும் பேசி விவ ரம் சேகரித்தோம். 2௦1௦ ஜனவரி முதல், 2௦13 மார்ச் வரை, 19௦ காவல்நிலையங்களில் 3,௦1,936 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2௦1௦ ஆம் ஆண்டில் மட்டும் 96,௦75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 1621 வழக்குகள் உண்மைக்கு மாறாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், 38 வழக்குகள் சட்டத்திற்கு மாறாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், 997 வழக்குகள் கண்டறிய முடியவில்லை என்றும், 16,836 வழக்குகள் மேல் நடவடிக்கை தேவையில்லை என்றும் நீதிமன்றம் போகாமலேயே வழக்குகளை முடித்துள்ளனர்.

இதுபோல், 2௦11 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட 93, 971 வழக்குகளில் 2௦,6௦8 வழக்குகளையும், 2௦12 ஆம் ஆண்டில் பதிவு சய்யப்பட்ட 86,214 வழக்குகளில் 21,818 வழக்குகளையும், 2௦13 ஆம் ஆண்டில் மூன்று மாதத்தில் 25,676 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 6,991 வழக்குகள் காவல்நிலையங்களிலேயே முடித்து வைக்கப்பட்டுள்ளன.

இப்படி காவல்நிலையங்களிலேயே உண்மைக்கு மாறாக என்கிற அடிப்படையில் போலீஸ்காரர்களே வழக் கினை முடிக்கிறார்களென்றால் சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் அதுகுறித்த விளக்கத்தை கொடுக்க வேண் டும். எங்களது ஆய்வில் 9௦ சதவீதத்திற்கு மேற்பட்ட புகார்தாரரிடம் இந்த சட்ட வழிமுறையை போலீஸார் கடைபிடிக்கவில்லை.

அரசியல் அழுத்தம், அதிகார வர்க்கத்தினரின் குறுக்கீடு, வலுவான சக்திகொண்ட எதிர் தரப்பினரின் பண பலம், போன்ற காரணங்களுக்காக போலீஸார் இதுபோன்று வழக்கினை முடித்துக்கொள்கின்றனர் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பொலிஸாரின் விசாரணையில் குற்றத்தை நிரூபிக்கின்ற அளவிற்கு தரமான விசாரணை மேற்கொள்ளாததால் வழக்கினை முடித்துக் கொள்கின்றனர். பல சம்பவங்களில் வழக்கினை முடிக்க வேண்டுமென் கின்ற அடிப்படையில் வாக்கு முலத்தை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்படுகிறது.

எங்கள் ஆய்வில், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிற வழக்குகளில், முப்பது சதவீதத் தை போலிஸாரே முடித்து வைக்கிறார்கள், இதில் பட்டியல் சாதியினர் மற்றும், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் சராசரியாக நாற்பது சதவீதமும், பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தில் 35 சதவீதம் என போலீஸாரே உண்மைக்கு மாறான வழக்கு என்று முடித்து வைக்கின்றனர்.

சில நேரங்களில் குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர், கடுமையான நெருக்கடி கொடுப்பதினால், பாதிக்கப்பட்ட தரப்பினர் அச்சத்துடன் தாங்கள் கொடுத்த புகாரினை திரும்ப பெறுகின்றனர். சாதாரண ஏழை எளிய மக்கள் புகார்களை திரும்ப பெறுவது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொள்வது கிடையாது. சமயங்களில் இதன் பின்னணியில் காவல்துறையினரே இருப்பதும் உண்டு. . இதுபோன்று காவல்நிலையங்கள் வழக்கு களை முடித்துவிடுவதால், பல உண்மைகள் சமூகத்திற்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.

நாங்கள் இதற்கு தீர்வாக சொல்வது, உண்மைக்கு மாறாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று காரணம் கூறி, போலீஸாரே தள்ளுபடி செய்கிற வழக்கின் விவரங்களை புகார்தாரரிடம் முறைப்படி தெரிவிக்க வேண்டும். அதில் ஆட்சேபனை செய்யும் புகார்தாரருக்கு மறுவிசாரணை கேட்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். என்ன காரணத்திற்காக தள்ளுபடி செய்யப்படுகிறது, தள்ளுபடி செய்வதற்கான வலுவான ஆதாரங்கள் என்ன போன்றவற்றை புகார்தாரருக்கு எழுத்துபூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும்.

உண்மைக்கு மாறான வழக்குகளை அரசு குற்ற வழக்கறிஞர் மற்றும் போலீஸார் தள்ளுபடி செய்யாமல், அதற்கென்று சிறப்பு சட்ட வல்லுநர் குழுவினை ஏற்படுத்தி அந்த குழுவினர் முன்பு புகார்தாரர் நேரடியாக வருகை தந்து விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்’’ என்றார்.

பொதுவாகவே காவல்துறை வழக்குகளை நடத்தும் முறைகளில் பல குற்றச்சாட்டுகள் உண்டு. இது இன் னும் தொடர்வது பாரம்பரியம் மிக்க காவல்துறைக்கு அழகாய் இராது. காவல்துறை துஷ்பிரயோகம் என்ற பூனைக்கு மணி கட்டவேண்டியது நீதித்துறையின் கையில் உள்ளது.

விகடன்



'தீர்க்கப்படும்' குற்ற வழக்குகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2015 9:14 am

புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 9:51 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக