புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் உலகப் பொதுமறையா ?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 14, 2015 7:34 pm

First topic message reminder :

திருவள்ளுவர் "புலால் மறுத்தல்" அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக இறைவன் படைத்தான் என்கிறது. இஸ்லாமியரின் குர்ஆன், ஹலால் ஓதிச் சொல்லப்பட்ட விலங்கின் உடலைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றது. இந்நிலையில் உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்ற ஜைன, பௌத்த சமயக் கருத்துகளைப் பிற மதத்தினர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. சங்க காலத்திலிருந்து இன்றுவரை இறைச்சியை உணவாகக் கொள்ளும் பெரும்பான்மைத் தமிழர்களும் திருவள்ளுவரின் புலால் மறுத்தல் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாடன், இசக்கி, பாண்டி, முனி, காளி போன்ற பல்வேறு துடியான கிராமத்துத் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலி கொடுத்துத்தான் வழிபாடு நடைபெறுகிறது. நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் நிரம்பிய தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் உயிர்ப்பலி கூடாது என்ற கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் திருவள்ளுவர் உணவுக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லுகிறவர்களைப் "புலையர்" என்றும், அவ்வாறு கொல்லும்போது ஏற்படும் வெட்டினைப் "புண்" என்றும் இழிவுபடுத்துகின்றார். அறக்கருத்து என்ற பெயரில் ஜைன சமயக் கருத்தைத் தமிழர்கள் மீது திணிக்கும்போது, புலால் உண்பதற்காகப் "புலையர்" என்று திட்டுவது பொருத்தமன்று.
"புலால் மறுத்தல்" அதிகாரம் வலியுறுத்தும் அறக்கருத்துகளைப் பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எல்லாத் தமிழர்களுக்கும் ஏற்புடைய கருத்துகள் திருக்குறளில் உள்ளன என்பது முரண்பாடானது. இந்நிலையில், இறைச்சியையே தினசரி முதன்மை உணவாகக் கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க மக்களிடையே "இறைச்சி உண்ணக்கூடாது" என்று அறம் போதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.
மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும் விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குப் பல்லாண்டுகளாக மக்கள் பழகியுள்ளனர். மேலும் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலை நாடுகளில் "மது கூடாது" என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக் குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து நவீன வாழ்க்கையுடன் முரண்படுகிறது.
புலால் உண்ணுதலையும், கள் குடித்தலையும் கடுமையாகக் கண்டிக்கும் திருக்குறளின் அறங்களை உலக மக்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா? என்பது முக்கியமான கேள்வி


மேல்கண்ட கருத்துக்களை திரு ந. முருகேச பாண்டியன் அவர்கள், " திருக்குறள் உலகப் பொதுமறையா ? " என்ற தமது கட்டுரையில் கேட்டுள்ளார்.
திருக்குறளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், திருக்குறளை முழுவதும் படிக்கவேண்டும். திருக்குறளை பலமுறை படிக்கவேண்டும்; மீண்டும், மீண்டும் படிக்கவேண்டும். முதல் தடவை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள், இரண்டாம் முறை படிக்கும்போது தோன்றும். இரண்டாம்முறை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள் மூன்றாம்முறை படிக்கும்போது தோன்றும். ஒவ்வொருமுறை படிக்கும்போதும், புதிய கருத்துக்கள் ஊறிக்கொண்டே இருக்கும் அறிவுக்கேணி திருக்குறளாகும். " அறிதோறும் அறியாமை கண்டற்றால் " என்பது திருக்குறளுக்கே மிகவும் பொருந்தும்.

ஒரு குறளுக்குப் பொருள் கொள்ளுங்கால் , முதலில் அக்குறள் எந்த அதிகாரத்தின் கீழ் வந்துள்ளது; இரண்டாவதாக எந்த இயலில் வந்துள்ளது; மூன்றாவதாக எந்தப் பாலில் வந்துள்ளது ஆகிய பின்புலங்களை மனதில்கொண்டே பொருள் காணவேண்டும். " புலால் மறுத்தல் " என்ற நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டதாகும்; இல்லறத்தானுக்கு அல்ல. இல்லறத்தான் புலால் உண்ணலாம் என்றோ அல்லது உண்ணக்கூடாது என்றோ வள்ளுவர் சொல்லவில்லை. ஆனால் துறவிகள், அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப்படிப்பட்ட தட்ப வெப்ப நிலையில் வாழ்பவர்களாக இருந்தாலும் புலால் உண்ணக்கூடாது. ஆகவேதான் துறவிகளின் அடிப்படைத் தகுதிகளான அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை ஆகிய அதிகாரங்களை துறவறவியலில் வைத்தார். புலால் உண்ணும் நெஞ்சிலே அருள் எவ்வாறு சுரக்கும் ? ஆகவே புலால் மறுத்தல் என்னும் நெறி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (செங்கோன்மை-550 )

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. ( கொல்லாமை- 327 )

இவ்விரண்டு குறள்களும் கருத்தால் முரண்பட்டு நிற்பதுபோல் தோன்றும். ஆனால் முரண் நம்மிடம் உள்ளதேயன்றி , வள்ளுவரிடம் அல்ல. முன்னது நாடாளும் வேந்தனுக்குச் சொல்லப்பட்ட நீதி; பின்னது பற்ற்ற துறவிக்குச் சொல்லப்பட்ட நீதி. எனவே ஒவ்வொரு குறளையும், அதன் பின்புலத்தை மனதில்கொண்டே ஆராயவேண்டும்.

திருக்குறள் உலகப்பொதுமறை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. திருக்குறளை எழுத்தெண்ணிப் படிப்பார்க்கு இவ்வுண்மை தெற்றென விளங்கும்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 5:29 pm

//குடும்பத் தலைவன் என்பவன் தாய், தந்தை , தாரம் ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் பொருள் கூறுவார். இன்னும் சிலர், குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கூறுவார். இன்னும் சிலரோ, குடும்பத் தலைவன் என்பவன் , தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கொள்வர்.

ஆக இயல்புடைய மூவர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது என்பதை நூலைப் படிப்பவர் ஊகத்திற்கே வள்ளுவர் விட்டுவிடுகின்றார்.//

எனக்கு என்னவோ, 'குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் ' என்பது தான் சரியாகப்படுகிறது புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 5:44 pm

// " எச்சம் " என்ற சொல்லிற்குப், " புகழ் " என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.//

சூப்பர் ! ........................ திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 3838410834 திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 3838410834 திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 3838410834



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 5:59 pm

முழுவதும் படித்துவிட்டேன், பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்தத்திரி....முடிந்தால் மின்னுலாகத் தாருங்கள் புன்னகை ................. திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 3838410834 திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 3838410834 திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 3838410834



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 9:10 pm

கால் இல்லாத குறள் :
======================
நிற்பதற்குக் கால் வேண்டும் . ஆனால் கால் இல்லாமலேயே ஒரு குறள் நீண்ட நெடுங்காலமாக நிற்கிறது .

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக . ( கல்வி-391 )

இந்தக் குறளில் நெடிலுக்குரிய துணைக்கால் இல்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 9:29 pm

மூன்று திரவங்கள் பயின்று வரும் குறட்பா ;
===========================================
ஒரே ஒரு குறளில் மட்டும் மூன்று திரவங்கள் வருகின்றன .

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர் . ( காதற் சிறப்புரைத்தல் -1121 )

பொழிப்புரை :
==============
பணிவான மொழியினையுடைய இந்தப் பெண்ணின் எயிற்றிலே ஊறுகிற உமிழ் நீரானது , பாலொடு தேன் கலந்தால் எப்படி இனிக்குமோ அப்படி இருக்கிறது .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 9:59 pm

மூன்று பகாஎண்கள் வருகின்ற குறட்பா:
========================================

ஒரு குறட்பாவில் மூன்று பகாஎண்கள் வருகின்றன .

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து . ( அடக்கமுடைமை-126 )

இந்தக் குறளில் ஒன்று, ஐந்து , ஏழு ஆகிய மூன்று பகாஎண்கள் வருகின்றன .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 1:41 am

உங்களுடைய பணி மிகவும் சிறந்தது. தமிழர் களாய் பிறந்து, வாழ்ந்து கொண்டுஇருக்க நாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். நமக்கு மட்டுமே புரியும் இதன் அழகு. பிற மொழிகளில் மொழி பெயர்த்தாலும் ஒரு குரலின் எல்லா சிறப்பு அம்சமும் அதில் வருமா என்பது சந்தேகமே. வாழ்க தமிழ். வளர்க தமிழ்.  அய்யா உங்கள் சேவை அருமை. தயவு செய்து தொடருங்கள். திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 103459460 திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 3 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க  அருமையிருக்கு நன்றி நன்றி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 29, 2015 11:34 am

ஒரே குறளில் ஐந்து உவமைகள் !
=================================

வள்ளுவர் , குறளில்  உவமைகளைக் கையாண்டு , தமது கருத்தை வலியுறுத்திக் கூறுவார் . பொதுவாக ஒரு குறளில் ஓர் உவமையைக் கையாள்வது அவரது வழக்கம் . ஆனால் ஒரே ஒரு குறளில் மட்டும் ஐந்து உவமைகளைக் கையாண்டு, தம் புலமையைக் காட்டியுள்ளார் .

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுன்கண் வேய்த்தோ ளவட்கு , ( நலம் புனைந்துரைத்தல்-1113 )

தளிர் வண்ண மேனி , வெண் முத்துப்போல் பற்கள் ,வெறியூட்டும் நறுமலர் மணம், வேல்போன்ற கூர்மையான கண்கள் , மூங்கில் போன்ற தோள்கள் என்பன அந்த ஐந்து உவமைகள் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 29, 2015 2:56 pm

வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும் குறட்பா :
=======================================================
திருக்குறளில் வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வருகின்ற குறட்பா ஒன்று உண்டு . அதாவது காய் முன் நேர் மட்டுமே வருகின்ற குறட்பா அது .

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . (  கல்வி- 397 )

இக்குறட்பாவில்  வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வருவது காண்க .

இதுபோல் இயற்சீர் வெண்டளை மட்டும் ( விளம் முன் நேர், மா முன் நிரை ) பயின்று வருகின்ற குறட்பாக்கள் 99 உள்ளன . மீதியுள்ள குறட்பாக்களில் இவ்விரண்டு தளைகளும் கலந்து வருகின்றன .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 29, 2015 5:14 pm

கொம்பு முளைக்காத குறட்பா :
==============================
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று . ( இனியவை கூறல்-100 )

இக்குறட்பாவில் கொம்பு கிடையாது . இதுபோல 17 குறட்பாக்களில் ஒற்றைக்கொம்பு  கிடையாது .

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக