புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_lcapதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_voting_barதிருக்குறள் உலகப் பொதுமறையா ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் உலகப் பொதுமறையா ?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 14, 2015 7:34 pm

First topic message reminder :

திருவள்ளுவர் "புலால் மறுத்தல்" அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக இறைவன் படைத்தான் என்கிறது. இஸ்லாமியரின் குர்ஆன், ஹலால் ஓதிச் சொல்லப்பட்ட விலங்கின் உடலைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றது. இந்நிலையில் உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்ற ஜைன, பௌத்த சமயக் கருத்துகளைப் பிற மதத்தினர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. சங்க காலத்திலிருந்து இன்றுவரை இறைச்சியை உணவாகக் கொள்ளும் பெரும்பான்மைத் தமிழர்களும் திருவள்ளுவரின் புலால் மறுத்தல் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாடன், இசக்கி, பாண்டி, முனி, காளி போன்ற பல்வேறு துடியான கிராமத்துத் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலி கொடுத்துத்தான் வழிபாடு நடைபெறுகிறது. நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் நிரம்பிய தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் உயிர்ப்பலி கூடாது என்ற கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் திருவள்ளுவர் உணவுக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லுகிறவர்களைப் "புலையர்" என்றும், அவ்வாறு கொல்லும்போது ஏற்படும் வெட்டினைப் "புண்" என்றும் இழிவுபடுத்துகின்றார். அறக்கருத்து என்ற பெயரில் ஜைன சமயக் கருத்தைத் தமிழர்கள் மீது திணிக்கும்போது, புலால் உண்பதற்காகப் "புலையர்" என்று திட்டுவது பொருத்தமன்று.
"புலால் மறுத்தல்" அதிகாரம் வலியுறுத்தும் அறக்கருத்துகளைப் பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எல்லாத் தமிழர்களுக்கும் ஏற்புடைய கருத்துகள் திருக்குறளில் உள்ளன என்பது முரண்பாடானது. இந்நிலையில், இறைச்சியையே தினசரி முதன்மை உணவாகக் கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க மக்களிடையே "இறைச்சி உண்ணக்கூடாது" என்று அறம் போதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.
மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும் விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குப் பல்லாண்டுகளாக மக்கள் பழகியுள்ளனர். மேலும் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலை நாடுகளில் "மது கூடாது" என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக் குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து நவீன வாழ்க்கையுடன் முரண்படுகிறது.
புலால் உண்ணுதலையும், கள் குடித்தலையும் கடுமையாகக் கண்டிக்கும் திருக்குறளின் அறங்களை உலக மக்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா? என்பது முக்கியமான கேள்வி


மேல்கண்ட கருத்துக்களை திரு ந. முருகேச பாண்டியன் அவர்கள், " திருக்குறள் உலகப் பொதுமறையா ? " என்ற தமது கட்டுரையில் கேட்டுள்ளார்.
திருக்குறளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், திருக்குறளை முழுவதும் படிக்கவேண்டும். திருக்குறளை பலமுறை படிக்கவேண்டும்; மீண்டும், மீண்டும் படிக்கவேண்டும். முதல் தடவை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள், இரண்டாம் முறை படிக்கும்போது தோன்றும். இரண்டாம்முறை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள் மூன்றாம்முறை படிக்கும்போது தோன்றும். ஒவ்வொருமுறை படிக்கும்போதும், புதிய கருத்துக்கள் ஊறிக்கொண்டே இருக்கும் அறிவுக்கேணி திருக்குறளாகும். " அறிதோறும் அறியாமை கண்டற்றால் " என்பது திருக்குறளுக்கே மிகவும் பொருந்தும்.

ஒரு குறளுக்குப் பொருள் கொள்ளுங்கால் , முதலில் அக்குறள் எந்த அதிகாரத்தின் கீழ் வந்துள்ளது; இரண்டாவதாக எந்த இயலில் வந்துள்ளது; மூன்றாவதாக எந்தப் பாலில் வந்துள்ளது ஆகிய பின்புலங்களை மனதில்கொண்டே பொருள் காணவேண்டும். " புலால் மறுத்தல் " என்ற நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டதாகும்; இல்லறத்தானுக்கு அல்ல. இல்லறத்தான் புலால் உண்ணலாம் என்றோ அல்லது உண்ணக்கூடாது என்றோ வள்ளுவர் சொல்லவில்லை. ஆனால் துறவிகள், அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப்படிப்பட்ட தட்ப வெப்ப நிலையில் வாழ்பவர்களாக இருந்தாலும் புலால் உண்ணக்கூடாது. ஆகவேதான் துறவிகளின் அடிப்படைத் தகுதிகளான அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை ஆகிய அதிகாரங்களை துறவறவியலில் வைத்தார். புலால் உண்ணும் நெஞ்சிலே அருள் எவ்வாறு சுரக்கும் ? ஆகவே புலால் மறுத்தல் என்னும் நெறி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (செங்கோன்மை-550 )

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. ( கொல்லாமை- 327 )

இவ்விரண்டு குறள்களும் கருத்தால் முரண்பட்டு நிற்பதுபோல் தோன்றும். ஆனால் முரண் நம்மிடம் உள்ளதேயன்றி , வள்ளுவரிடம் அல்ல. முன்னது நாடாளும் வேந்தனுக்குச் சொல்லப்பட்ட நீதி; பின்னது பற்ற்ற துறவிக்குச் சொல்லப்பட்ட நீதி. எனவே ஒவ்வொரு குறளையும், அதன் பின்புலத்தை மனதில்கொண்டே ஆராயவேண்டும்.

திருக்குறள் உலகப்பொதுமறை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. திருக்குறளை எழுத்தெண்ணிப் படிப்பார்க்கு இவ்வுண்மை தெற்றென விளங்கும்.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 19, 2015 5:51 pm

முரண்பாடா?
==========
தமிழாசிரியர் திருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். " உழவு " என்ற அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களையும் நடத்தி முடித்துவிட்டு மாணவர்களிடம், " ஏதேனும் ஐயம் இருப்பின் கேளுங்கள் " என்றார். அப்பொழுது ஒரு மாணவன் எழுந்து, " ஐயா! இரண்டு குறட்பாக்களில் முரண்பாடு இருப்பது போலத் தோன்றுகிறது." என்றான்.

உடனே ஆசிரியர் ," எந்தெந்த குறட்பாக்களில் முரண்பாடு உள்ளது? " என்று கேட்டார். அதற்கு மாணவன்,

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

இந்த குறட்பாக்களில் முதல் குறட்பாவில் நன்றாக உழுதால், நிலத்திற்கு உரம் இடத் தேவையில்லை என்று சொல்கிறார்; ஆனால் இரண்டாம் குறட்பாவில் உரம் இடவேண்டும் என்று சொல்கிறார் ; ஏன் இந்த முரண்பாடு? " என்று கேட்டான்.

ஆசிரியர் சிரித்துக் கொண்டே ," நல்ல கேள்வி, காரணம் சொல்கிறேன், முதல் குறள் புன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகுமாறு உழுதுவிட்டு , மழை பெய்தவுடன் புன்செய்த் தானியங்கள், பயறு வகைகளை விதைத்து விட்டால் மேல் உரத்தையோ, பாய்ச்சு நீரையோ எதிர்பாராமல் வானத்தை, அதாவது மழையைப் பார்த்தே புன்செய்ப் பயிர்கள் விளைந்துவிடும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

இந்தக் குறள் நன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. உழுதல்,எருவிடுதல்,களையெடுத்தல்,நீர்பாய்ச்சுதல், காவல் காத்தல் என்பது போன்ற எல்லா வேலைகளையும் பார்த்தால்தான் நன்செய் நிலத்தில் பலன் காணமுடியும். இப்போது புரிகிறதா? முரண்பாடு உன்னிடம்தான் உள்ளது; வள்ளுவரிடம் இல்லை."

" மிக்க நன்றி ஐயா! தெளிவாகப் புரிந்து கொண்டேன். இன்னும் சில குறட்பாக்களில் முரண்பாடு உள்ளதுபோல எனக்குத் தோன்றுகிறது. அவற்றைக் கேட்கலாமா ஐயா?"

" நாளைக்குப் பார்க்கலாம் " என்று ஆசிரியர் சொன்னார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 20, 2015 11:27 am

இடுக்கண் வருங்கால் நகுக.
====================
அது தமிழ்ப் பாடவேளை.புதிய தமிழாசிரியரின் வரவுக்காக மாணவர்கள் காத்திருந்தனர். நெடுநெடுவென்று வளர்ந்த , ஒடிசலான உருவம் கொண்ட , சுமார் 25 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் , வகுப்பறையினுள் நுழைந்தார். அவரைப் பார்த்தவுடன் மாணவர்கள் அனைவரும், " ஓ " வென்று கூச்சலிட்டனர்.

ஒரு மாணவன் அவர் காதுபடவே, " டேய் ! ஒட்டடைக் குச்சிடா ! " என்று கத்தினான். சில மாணவர்கள் அவரைப் பார்த்து ஊளையிட்டனர். இன்னும் சில மாணவர்கள் , காகிதத்தை மடித்து அம்புபோலச் செய்து அவர்மீது ஏவினர். அந்தக் காகித அம்புகள் ஆசிரியர் முகத்தை வேகமாக வந்து தாக்கின. சில போக்கிரி மாணவர்கள் பெஞ்சின்மீது ஏறிநின்று நாட்டியமாடினர். இவ்வளவு அமளியையும் கண்ட அந்தப் புதிய ஆசிரியர் , சற்றும் அலட்டிக் கொள்ளாமல் , புன்னகை பூத்தவாறு நின்றுகொண்டிருந்தார்.

பத்து நிமிடம் சென்றபின்பு மாணவர்கள் அனைவரும் அமைதியாயினர்.

ஒரு மாணவன் அவரைப் பார்த்து," சார் ! உங்களுக்குக் கோபம் வரலையா ? சிரித்துக் கொண்டே இருக்கீங்களே? " என்று கேட்டான்.

' எனக்குக் கோபம் வராது; ஏனென்றால் நான் தமிழ் படித்தவன். "

" தமிழ் படித்தால் கோபம் வராதா சார் ? "

" அப்படியில்லை ; நான் அய்யன் திருவள்ளுவர் சொற்படி நடப்பவன்; அதனால் நான் எதற்கும் கோபம் கொள்வதில்லை. "

" அப்படி அவரு என்ன சார் சொல்லி இருக்காரு திருக்குறள்ல? "

' இடுக்கண் வருங்கால் நகுக. " என்று சொல்லியிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? அதன்படி எனக்குத் துன்பம் வரும்போதெல்லாம் நான் சிரிப்பது வழக்கம். "

" அதெப்படி சார் முடியும்? கஷ்டம் வரும்போது எப்படி சார் சிரிக்க முடியும்? "

உடனே மற்றொரு மாணவன் எழுந்து ,

துன்பம் வரும்போது
கொஞ்சம் சிரிங்க - என்று
சொல்லி வச்சார்
வள்ளுவரு சரிங்க!

பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில்
பொங்கிவரும் சிரிப்பு ?

என்ற சினிமாப் பாடலுக்கு உங்க பதில் என்ன சார்? என்று கேட்டான்.

" நல்ல கேள்வி! துன்பம் இரண்டு வகைப்படும். உடல் படும் துன்பம்; மனம் படுகின்ற துன்பம். பாம்பு கடிக்கும்போது உடல் துன்பமடைகிறது. வள்ளுவர் " நகும் " என்ற சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார். இடத்திற்குத் தகுந்தவாறு நாம் பொருள் கொள்ளவேண்டும்.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். ( உழவு-1040 )

தங்களுக்கு வாழ்க்கையில்லை என்று சோம்பி இருப்பவரைக் கண்டு நிலமாகிய நல்லபெண் பரிகசித்துச் சிரிப்பாள் என்பது இக்குறளின் பொருளாகும். இக்குறளில் " நகும் " என்ற சொல் " எள்ளலின் அடிப்படையில் பிறந்த சிரிப்பு " என்னும் பொருள்படும்.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். ( குறிப்பறிதல்- 1094 )

இக்குறளில் " நகும் " என்ற சொல் , நாணத்தின் அடிப்படையில் பிறந்த சிரிப்பு என்னும் பொருள்படும்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (நட்பு- 784 )

இன்ப விளையாட்டுக்கு மாத்திரம் நட்பு அல்ல.தீய செயலைச் செய்ய நண்பன் முற்படும்போது அதைத் தடுத்து நிறுத்துவதும் நட்பிற்கு அழகாகும்.

இக்குறளில் " நகுதல் " என்ற சொல் இன்ப நுகர்ச்சியின் அடிப்படையில் பிறந்த சிரிப்பு " என்னும் பொருள்படும்.

சரி! இப்பொழுது பாடத்துக்கு வருவோம். " இடுக்கண் வருங்கால் நகுக " என்ற குறளில் வந்துள்ள " நகுக " என்றசொல் துணிவின் அடிப்படையில் பிறந்த சிரிப்பு என்னும் பொருள்படும்.

பாம்பு கடித்து இறப்போரைக் காட்டிலும், பாம்பு கடித்துவிட்டதே என்ற பயத்தில் இறப்பவர்களே அதிகம். இது உளவியல் உண்மையாகும். ஒரு காட்டின் வழியாக சில நண்பர்கள் செல்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது ஒருவனைப் பாம்பு கடித்துவிட்டது. உடனே மற்றவர்கள் அவனை நோக்கி ," அய்யய்யோ! உன்னைப் பாம்பு கடித்து விட்டதே! " என்று பதறுகிறார்கள்.

ஆனால் பாம்பால் கடிபட்டவனோ, " அஹ்ஹாஹ்ஹா என்று சிரித்துவிட்டு , பதட்டப் படாதிர்கள்! எனக்கு ஒன்றும் ஆகாது; சீக்கிரம் ஒரு கயிறு கொண்டு வாருங்கள் "என்று கேட்கிறான்.

உடனே ஒருவன் தன் வேட்டியைக் கிழித்து கயிறுபோல ஆக்கி அவனிடம் கொடுக்கிறான்.

" பாம்பு கடித்த கடிவாய்க்கு சற்றுமேலே இறுகக் கட்டுங்கள் " என்று அவன் சொல்ல மற்றவர்கள் அவ்வாறே செய்கின்றனர்.

" சீக்கிரம் என்னை மருத்துமனைக்கு தூக்கிச் செல்லுங்கள்!" என்று கேட்க , நண்பர்கள் அவனை மருத்துவ மனையில் சேர்த்து அவனைக் காப்பாற்றி விடுகின்றனர். பாம்பால் கடிபட்டவன் பயம் கொள்ளாது, துணிவுடன் சிரித்தானல்லவா ! அந்தச் சிரிப்பைத்தான் வள்ளுவர்," இடுக்கண் வருங்கால் நகுக " என்று வேண்டுகிறார்.

உடனே மற்றொரு மாணவன் எழுந்து," சார் ! நான் ஒரு கேள்வி கேட்கலாமா ? "

" சரி கேள் ! "

அந்தணர் ஒருவர் ஆற்றிலே குளிக்கச் சென்றார். குளிக்கும் முன்பாகக் காதிலே இருந்த கடுக்கண்களைக் கழற்றி கரையிலே வைத்துவிட்டுக் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த திருடன் ஒருவன் அக் கடுக்கண்களைக் களவாடிக் கொண்டு ஓடினான். அதைக் கண்ட அந்தணர் " திருடன்! திருடன்! " என்று கத்தினார். உடனே பொதுமக்கள் சிலர் அவனைப் பிடித்து அரசனிடம் ஒப்படைத்தனர். அரசனும் அவனுக்கு சிறைத் தண்டனை விதித்து சிறையில் அடைத்தான். இப்பொழுது அந்தத் திருடனுக்கு இடுக்கண் வந்துவிட்டது. இந்த நேரத்தில் அவனால் எப்படி சிரிக்க முடியும்? அப்படி சிரித்தால் துன்பம் போய்விடுமா என்ன ?"

உடனே ஆசிரியர் , " இதுவும் நல்ல கேள்விதான் ! பாம்பு கடித்து வந்த இடுக்கண் தானாக வந்தது; கடுக்கண் திருடியதால் திருடனுக்கு வந்த இடுக்கண் அவனாகத் தேடிக்கொண்டது. தானாக வந்த துன்பத்திற்குத் தீர்வு உண்டு. நாமாகத் தேடிச்செல்லும் துன்பத்திற்குத் தீர்வு இல்லை. தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். எனவேதான் வள்ளுவரும், " இடுக்கண் வருங்கால் நகுக " என்று கூறினார். தானாக வருகின்ற துன்பத்தைத் துணிவோடு எதிர்கொண்டு சிரித்தால் , அத்துன்பம் பகலவனைக் கண்ட பனிபோல மறைந்துவிடும் என்று அறிவுறுத்தவே " இடுக்கண் வருங்கால் நகுக " என்று கூறினார். இனிக் குறளைப் பார்ப்போம்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.

பொருள் : துன்பம் வரும்போது துணிவுடன் புன்னகையோடு அதை எதிர்கொள்ளவேண்டும். அத்துன்பத்தைக் கடப்பதற்கு இதைவிடச் சிறந்த வழி ஏதும் இல்லை.

துன்பம் வரும்போது சிரித்தல் என்பது முதல் தீர்வேயன்றி , முற்றிலும் முடிந்த தீர்வாகாது. பாம்பு கடித்தபோது , பதட்டப்படாமல் , கடிவாய்க்கு மேலே கட்டுப்போட்ட செயல் முதல் தீர்வு. பிறகு அவனை மருத்துமனைக்குத் தூக்கிச் சென்று , முறையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து காப்பாற்றிய செயல் முடிந்த தீர்வாகும்.

பாடவேளை முடிந்து மணி அடிக்கவே , மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று , " நன்றி ஐயா!" என்று ஆசிரியருக்கு வணக்கம் கூறினார்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 22, 2015 8:14 am

எது சரி ?
======
தினற்பொருட்டாற் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டாற் ஊன்தருவார் இல். ( புலால்மறுத்தல் -256 )

இதன் பொருள் :

தின்பது காரணமாக உலக மக்கள் கொல்லவில்லை யானால் , பொருள் காரணமாக ஊனை விற்பவர் எவரும் இல்லை என்பது பரிமேலழகர் கருத்து. மகாவித்துவான் மு. அருணாசலக் கவிராயர் அவர்களும், பேராசிரியர் கா. சு. பிள்ளை அவர்களும், பிறரும் தாங்கள் பதிப்பித்த பதிப்புகளில் இவ்வுரையை அப்படியே பொழிப்புரையாக்கிப் பதிப்பித்திருக்கிறார்கள்.

மூலத்திற்கும் உரைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ? என்பதைத் தயவு செய்து அமைதியாக இருந்து எண்ணிப் பார்ப்பது நல்லது.

" தின்பதற்காக " என்று உலகமக்கள் கொல்லாதிருந்தால் என மூலத்தில் இருக்கும்போது பரிமேலழகரும், பிறரும் உலக மக்கள் வாங்காதிருந்தால் என்று கருதும்படி உரை எழுதுவானேன் என்பது நமது ஐயப்பாடு.

குறளுக்கு உள்ள நேரான உரை பின்வருமாறு:

தின்பதற்காக என்று உலக மக்கள் கொல்லுவதில்லை யானால் , விலை பெற்று ஊன் தருபவர் எவரும் இருக்க மாட்டார்கள் என்பதே.

இவ்வுரை நேரானதே எனினும் கருத்தில் பெரும்பிழை காணப்படுவதைக் காணுங்கள். அதாவது தின்பதற்காகக் கொல்லுகிற எவனும் வேறு எவனுக்கும் விலை கொடுக்க வேண்டியிராது. அவனே கொன்று தின்பான். கொன்று தின்பவனிடம் சும்மாயிருப்பவன் விலை கேட்க முடியாது. கொடுப்பதற்கு அவனிடம் ஊனும் இராது. ஆகவே இவ்வுரையும், குறளும் குழப்பத்தை விளைவிக்கின்றன. ஆகவே உண்மைதான் என்ன என ஆராய வேண்டியிருக்கிறது.

முதன்முதலில் ஏடு எழுதியவரோ , அச்சுக் கோப்பவரோ, பதிப்பித்தவரோ செய்த சிறு பிழையே இக்குழப்பதிற்கெல்லாம் காரணமாயிற்று. " கொல்லா " என்பது தவறு. " கொள்ளா " என்பதே சரியான பாடம் ஆகும்.இப்போது கொல்லா என்பதைக் கொள்ளா எனத் திருத்தி மூலத்தைப் படித்துப் பாருங்கள். இக்குழப்பங்கள் அனைத்தும் ஒழிந்து வெளிப்படையாகப் பொருளைக் காணலாம்.

' தின்பதற்காக வாங்குபவர்கள் இல்லையானால் பொருளுக்காகக் கொன்று விற்பவர் எவரும் இரார் " என்பதே வள்ளுவரின் குறளும் , அவரது கருத்துமாகும். ' கொல்லுவதுதான் பாவம், கொன்றதைத் தின்பது பாவமில்லை " என்பாரது கூற்றையும் வள்ளுவர் இக்குறளின் மூலம் மறுத்திருப்பதைக் கண்டும் மகிழலாம்.

தினற்பொருட்டாற் கொள்ளாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டாற் ஊன்தருவார் இல்.

என்பதே சரி.


நன்றி : திருக்குறளில் எழுத்துப்பிழை பற்றிய ஆய்வு - முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ. பெ. விசுவநாதம் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 23, 2015 8:00 am

திருவள்ளுவர் காட்டும் எண்கள்
=======================
திருவள்ளுவர் ஒன்றிலிருந்து கோடி வரையில் எண்களைப் பயன்படுத்தியுள்ளார்.ஆனால் ஒன்பது என்ற எண்ணை மட்டும் அவர் பயன்படுத்தவில்லை.என்ன காரணம் என்று தெரியவில்லை.

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோ ராறு. (932)

இக்குறளில் மட்டும்தான் " நூறு" வருகிறது. " ஒன்று" என்ற எண்ணும் வருகிறது. மொத்தம் 47 குறட்பாக்களில் "ஒன்று" வருகிறது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.(19)

இதுபோல் 13 குறட்பாக்களில் "இரண்டு" வருகிறது.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.(941)

இதுபோல் 8 குறட்பாக்களில் "மூன்று" வருகிறது.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.(35)

இதுபோல் 11 குறட்பாக்களில் "நான்கு' வருகிறது.

ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.(25)

இதுபோல் 12 குறட்பாக்களில் "ஐந்து" வருகிறது.

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.(381)

இரண்டு குறட்பாக்களில் "ஆறு" வருகிறது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.(107)

இதுபோல் 8 குறட்பாக்களில் "ஏழு" வருகிறது.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.(9)

இந்த ஒரே குறளில்தான் "எட்டு" வருகிறது.

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.(450)

இந்த ஒரே குறளில்தான் "பத்து" வருகிறது.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.(259)

இந்த ஒரே குறளில்தான் "ஆயிரம்" வருகிறது.

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப*
கோடியும் அல்ல பல.(337)

இதுபோல 4 குறட்பாக்களில் "கோடி" வருகிறது.

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்.(817)

இந்த ஒரு குறளில்தான் "பத்துக்கோடி" வருகிறது.

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி யுறும்.(639)

இந்த ஒரு குறளில்தான் "எழுபதுகோடி" வருகிறது.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.(954)

இதுபோல் இரண்டு குறட்பாக்களில் "அடுக்கியகோடி' வருகிறது.

இத்தனை எண்களையும் பயன்படுத்திய வள்ளுவர் "ஒன்பது' என்ற எண்ணை மட்டும் பயன்படுத்தாமல் விட்ட காரணம் தெரியவில்லை. "ஒன்பது" என்ற சொல் மிகவும் பிற்காலத்தது என்று சிலர் சொல்லுகின்றனர். பண்டைக்காலத்தில் "தொண்டு" என்ற சொல் சங்க இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் இடம்பெற்றுள்ளது.இது "ஒன்பது" என்ற எண்ணைக் குறிப்பதாகக் கருதுவர்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 25, 2015 10:36 am

குறளுக்கு வேறு பெயர்கள்



திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்.
==============================
1 .அறம்
2 .இரண்டு
3 .உத்தரவேதம்
4 .எழுதுண்ட மறை
5 .ஒன்றே முக்காலடி
6 .ஒத்து
7 .கட்டுரை
8 .குறளமுது
9 .தமிழ் மறை
10 .திருக்குறள்
11 .திருமறை
12 .திருவள்ளுவப்பயன்
13 .திவள்ளுவர்
14 .திருவள்ளுவன் வாக்கு
15 .திருவறம்
16 .தெய்வ நூல்
17 .பழமொழி
18 .பால்முறை
19 .பொதுமறை
20 .பொய்யாமொழி
21 .பொருளுரை
22 .முதுமொழி
23 .முப்பால்
24 .மெய்ஞான முப்பால் நூல்
25 .வள்ளுவ தேவர் வாய்மை
26 .வள்ளுவம்
27 .வள்ளுவ மாலை
28 .வள்ளுவர்
29 .வள்ளுவர் வாய்ச்சொல்
30 .வள்ளுவர் வாய்மொழி
31 .வள்ளுவனார் வாக்கு
32 .வள்ளுவனார் வைப்பு
33 .வாயுறை வாழ்த்து
34 .வான் மறை

நன்றி: டாக்டர். கு. மோகன ராசுவின் " திருக்குறள் மரபுகள்."



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 8:01 pm

பொன்னான பொக்கிஷ தகவல்கள்.
மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 26, 2015 7:43 am

நன்றி !ப்ரீதிகா சந்திரகுமார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 26, 2015 4:50 pm

சுற்றும் உலகு
===============
அந்தப் பள்ளியில் ஆண்டாய்வு நடந்துகொண்டிருந்தது. மாவட்டக் கல்வி அதிகாரி அவர்கள் வகுப்புகளை மேற்பார்வை செய்துகொண்டு இருந்தார். பத்தாம் வகுப்பில் தமிழாசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

மாவட்டக் கல்வி அதிகாரி, 10ம் வகுப்பில் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று, "வணக்கம் ஐயா!" என்றனர்.

தமிழாசிரியரும், " வணக்கம்! வாருங்கள் ஐயா!" என்று வரவேற்றார்.

மாவட்டக் கல்வி அதிகாரி அனைவருக்கும் வணக்கம் சொன்னார்.

" என்ன பாடம் நடத்துகிறீர்கள்?" என்று தமிழாசிரியரை அதிகாரி கேட்டார்.

" திருக்குறள் ஐயா!"

" சரி, நடத்துங்கள்."

" சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
..உழந்தும் உழவே தலை."

மாணவர்களே! உழவு என்ற அதிகாரத்தில் முதல் குறள் இது. இந்தக் குறளில் ஓர் அறிவியல் உண்மை உள்ளது.16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோ சூரியனைப் பூமி சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐயன் வள்ளுவர் இந்த பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது என்ற உண்மையை உலகுக்கு உரைத்துள்ளார். " சுழன்றும் " என்ற சொல்லிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. சுற்றுகின்ற இந்த உலகமானது உழவுத் தொழிலின் பின்னே உள்ளது. மற்ற தொழில்களின் மூலமாக மக்கள் துன்பமடைவதால் உழவுத்தொழிலே சிறந்த தொழிலாகக் கருதப்படுகிறது.

தமிழாசிரியரின் இந்த உரையைக் கேட்டு மாவட்டக் கல்வி அதிகாரி முகம் சுளித்தார்.வகுப்பு முடிந்தவுடன் அதிகாரி, தமிழாசிரியரைத் தனியாக அழைத்து, " அந்தக் குறளுக்கு உங்களுடைய விளக்கம் எனக்கு சரியாகப் படவில்லை. " சுழன்றும் " என்ற சொல்லுக்கு " சுற்றுகின்ற உலகம் " என்பது பொருள் அல்ல. " உலகம் " என்றது உலகத்திலே வாழும் மக்களைக் குறித்து நின்றது. இடவாகு பெயர். தாங்கள் குறிப்பிட்டது போல " பூமி " யை அல்ல. அந்தக் குறளின் பொருள்

உழவுத் தொழில் கடினமானது என்பதால், அதை ஒதுக்கிவிட்டுப் பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும்,முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்;ஆதலால் எவ்வளவுதான் துன்பம் தருவதாக இருந்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது என்பதுதான் அக்குறளின் பொருள்." என்று கல்வி அதிகாரி கூறினார்.

" ஐயா! மிக்க நன்றி! அக்குறளுக்கு உண்மையான உரையை அறிந்துகொண்டேன். இனி பிழை நேராதவாறு பாடம் நடத்துகிறேன் என்று சொன்னார்.

" நூல்களைப் பிழையில்லாமல் கற்கவேண்டும் என்பதற்காகத்தான் " கற்க கசடற " என்றார் வள்ளுவர். இந்த அறிவுரை திருக்குறளுக்கும் பொருந்தும். எனவே வகுப்பறைக்குச் செல்லும் முன்பாக உங்களை நன்கு தயார்செய்து கொண்டு செல்லுங்கள். நாம் கூறும் தவறான கருத்துக்கள் மாணவர்கள் மனதில் பதிந்துவிடும். எனவே எச்சரிக்கையுடன் பாடம் நடத்துங்கள்."

" நன்றி ஐயா! இனி அவ்வாறே செய்கிறேன்."

" கற்க கசடற கற்பவை கற்றபின்
..நிற்க அதற்குத் தக.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 4:59 pm

//ஒரு குறளுக்குப் பொருள் கொள்ளுங்கால் , முதலில் அக்குறள் எந்த அதிகாரத்தின் கீழ் வந்துள்ளது; இரண்டாவதாக எந்த இயலில் வந்துள்ளது; மூன்றாவதாக எந்தப் பாலில் வந்துள்ளது ஆகிய பின்புலங்களை மனதில்கொண்டே பொருள் காணவேண்டும். " புலால் மறுத்தல் " என்ற நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டதாகும்; இல்லறத்தானுக்கு அல்ல. இல்லறத்தான் புலால் உண்ணலாம் என்றோ அல்லது உண்ணக்கூடாது என்றோ வள்ளுவர் சொல்லவில்லை. ஆனால் துறவிகள், அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப்படிப்பட்ட தட்ப வெப்ப நிலையில் வாழ்பவர்களாக இருந்தாலும் புலால் உண்ணக்கூடாது. ஆகவேதான் துறவிகளின் அடிப்படைத் தகுதிகளான அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை ஆகிய அதிகாரங்களை துறவறவியலில் வைத்தார். புலால் உண்ணும் நெஞ்சிலே அருள் எவ்வாறு சுரக்கும் ? ஆகவே புலால் மறுத்தல் என்னும் நெறி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.//

அருமையான விளக்கம் புன்னகை..........இன்று தான் இந்த பதிவை படிக்கிறேன்  ..............நன்றி.................. .தொடருங்கள் ..............ஜெகதீசன் புன்னகை  சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 5:03 pm

//" நாமிருவர் நமக்கிருவர் " என்ற குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை திருவள்ளுவர் காலத்திலேயே மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்ப வாழ்க்கைக்கு இரு குழந்தைகள் போதும் என்ற கருத்துப்பட குழலையும், யாழையும் குறிப்பிட்டார். அதுவும் ஆண் ஒன்று , பெண் ஒன்று இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் கண்ணன் கையிலே இருக்கின்ற குழலையும், சரஸ்வதியின் கையிலே இருக்கின்ற யாழையும் குறிப்பிட்டாரோ என்று எண்ணவும் தோன்றுகிறது.//

நல்லா இருக்கே இது புன்னகை ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக