ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண்

3 posters

Go down

ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண் Empty ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண்

Post by ராஜா Wed May 13, 2015 1:27 pm

சீன நாட்டைச் சேர்ந்தவர் அன் சி பாங்.

1900–ம் ஆண்டு பிறந்த இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மரைன் என்ஜினீயரிங் படித்து கப்பலில் பணிபுரிந்து வந்தார்.

சீனாவில் நஞ்சிங் என்ற ஊரில் வசித்து வந்த இவருக்கு திருமணமாகி 6 குழந்தைகள் பிறந்தனர். 1939–ம் ஆண்டு இவர் சீன கப்பல் ஒன்றில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டு ராணுவம் சீனாவுக்குள் ஊடுருவி பல பகுதிகளை கைப்பற்றியது.

ஜப்பான் விமானப்படை குண்டு வீசித் தாக்கியதில் நஞ்சிங் நகரம் கடும் பாதிப்புக்குள்ளானது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அன் சி பாங்கின் மனைவி மற்றும் 5 குழந்தைகளும் ஜப்பான் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

அன் சி பாங்கின் குழந்தைகளில் ரோசாய் அன் மட்டும் உயிர் தப்பினார். ஜப்பான் படைகள் தாக்குதல் நடத்திய சமயத்தில் ரோசாய் அன் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்ப முடிந்தது.

அந்த சமயத்தில் ரோசாய்க்கு 8 வயது தான் ஆகியிருந்தது. தாயையும், உடன் பிறந்தவர்களையும் இழந்த ரோசாய் பாட்டி வீட்டிலேயே வசித்து வந்தார்.

இரண்டாம் உலகப்போர் சுமார் 5 ஆண்டுகள் நீடித்ததால் கடுமையான பயணக்கட்டுப்பாடு இருந்தது. இதனால் அன் சி பாங் சீனாவுக்கு திரும்ப முடியாமல் போய் விட்டது. என்றாலும் அவருக்கு மனைவியும் 5 குழந்தைகளும் ஜப்பான் படைகளால் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் அவருக்கு மேலும் சோதனை ஏற்படுத்தும் விதமாக அவர் பணிபுரிந்து வந்த கப்பல் அரபிக்கடல் பகுதியில் பழுதாகி விட்டது. மும்பை கடற்கரைக்கு வந்த கப்பலில் உள்ள பழுதை நீக்க முயன்றனர். முடியவில்லை.

இதனால் அந்த கப்பல் சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னையில் அந்த கப்பல் பழுது பார்க்க முடியாமல் கைவிடப்பட்டது. இதனால் வேறு வழி தெரியாத அன் சி பாங் சென்னையிலேயே தங்கி விட்டார்.

அந்த சமயத்தில் அன் சி பாங்கிற்கு 47 வயது ஆகி இருந்தது. சீனாவுக்கு உடனே திரும்பிச் செல்வது கடினம் என்ற சூழ்நிலை நீடித்ததால் அவர் சென்னையைச் சேர்ந்த ஐரீன் பெரீரரா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார்.

அன் சி பாங் – ஐரீன் பெரீரரா தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தனர். என்றாலும் அன் சி பாங்கிற்கு முதல் மனைவியையும், 6 குழந்தைகளையும் மறக்க முடியவில்லை. அவர்களது நினைவுடனே வாழ்ந்து வந்தார்.

1970களில் அவருக்கு சீனாவில் உள்ள பூர்வீக இடத்துக்கு செல்ல ஆசை ஏற்பட்டது. ஆனால் வயதாகி விட்டதால் முடியவில்லை. என்றாலும் இரண்டாம் உலகப்போரின் போது உயிர்தப்பிய தன் மகள் ரோசாயை சந்திக்க ஆசைப்பட்டார்.

இதற்காக சென்னையில் இருந்தபடி அவர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஷாங்காய் நகரில் ரோசாய் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.

திருமணமாகி விட்ட ரோசாய் சீன ராணுவத்தில் பணிபுரிந்ததும், அவருக்கு ஒரு மகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மகளையும், பேத்தியையும் நேரில் பார்க்க அன் சி பாங் மிகவும் ஆசைப்பட்டார்.

1982–ம் ஆண்டு இதற்கான ஏற்பாடுகளை அவர் தீவிரமாக செய்து வந்தார். ஆனால் 82 வயதில் 1982–ம் ஆண்டு அவர் திடீரென மரணம் அடைந்தார். சீனாவில் பிறந்த மகளை பார்க்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறாமலே போய் விட்டது.

சென்னையில் வசித்தாலும் அவர் தொடர்ந்து சீன குடியுரிமை பெற்று வந்தார். கடைசி வரை அவர் தன் மகளை பார்த்து விடலாம் என்ற ஆசையில் சீன பாஸ்போட்டை புதுப்பித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பலன் கிடைக்காமல் போய்விட்டது.

இந்த நிலையில் அன் சி பாங்கின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது 2–வது மனைவியின் 4 குழந்தைகளில் ஒருவரான ஜெனீபர் தீர்மானித்தார். ஜெனீபர் சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

அன் சி பாங் மரணம் காரணமாக சீனாவில் உள்ள ரோசாயுடன் இருந்த தொடர்பு துண்டித்துப் போனது. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்பதும் தெரியாமல் இருந்தது. ஆனாலும் ஜெனீபரும், பாலாஜியும் மனம் தளரவில்லை. மீண்டும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்கள்.

குறிப்பாக பாலாஜி தன் மாமனார் ஆசையையும் மனைவி ஜெனீபர் விருப்பத்தையும் நிறைவேற்ற களம் இறங்கினார். அவருக்கு பிரதமர் மோடி நேபாளம் பயணத்தின் போது அந்த நாட்டு வாலிபரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தது நினைவுக்கு வந்தது.

எனவே சீனாவுக்கு 14–ந்தேதி பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடியின் உதவியை நாட முடிவு செய்தார். இதையடுத்து சீனாவில் உள்ள ரோசாயை கண்டுபிடித்து உதவும்படி அவர் பிரதமர் மோடிக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினார்.

அதன் பேரில் சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் ரோசாயை தேடும் பணி நடந்து வந்தது.

இதற்கிடையே சமூக இணையத்தளங்கள் மூலமாகவும் ஜெனீபர், பாலாஜி இருவரும் சீனாவில் உள்ள ரோசாயை தேடினார்கள். சீன ரேடியோவிலும், பாலாஜி பேசினார். அவரது தேடுதல் பற்றி சீன ரேடியோ இணையத்தளத்திலும் தகவல்கள் வெளியிடப்பட்டது.

இதற்கு உடனடி பலன் கிடைத்தது. ரோசாயும் அவரது மகளும் ஷாங்காய் நகரின் கிழக்கு பகுதியில் இருக்கும் இடம் தெரியவந்தது. இதனால் ஜெனீபர், பாலாஜி இருவரும் நேற்று முன்தினம் சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு விஸ்வநாத் என்பவர் உதவியுடன் ரோசாயை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ரோசாய் அன்னுக்கு தற்போது 81 வயதாகிறது. ஜெனீபருக்கு 62 வயதாகிறது. தந்தையின் ஆசையை நிறைவேற்ற இந்த சகோதரிகள் சந்தித்து பேச உள்ளனர்.

இன்று காலை வரை அந்த சந்திப்பு நடக்கவில்லை. நாளை (வியாழன்) ஜெனீபர், பாலாஜி இருவரும் பீஜிங்கில் இருந்து ஷாங்காய் செல்ல உள்ளனர். ரோசாயை சந்தித்து பேசப்போகும் தருணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக ஜெனீபர் கூறியுள்ளார்.

காலங்கள் கடந்தாலும் அன் சி பாங்கின் ஆசை, அவர் மகள் மூலம் நிறைவேறப் போகிறது.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண் Empty Re: ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண்

Post by ராஜா Wed May 13, 2015 1:30 pm

படிப்பதற்கு வார இதழ்களில் வரும் கதை போல இருந்தாலும் , இவர்கள் அனுபவித்துள்ள வழிகளும் இழப்புகளும் மனதை கனக்க வைக்கிறது.

கடைசி வரை தான் பெற்ற மகளை ஒரு முறையேனும் பார்த்துவிடவேண்டும் என்று இருந்த அந்த பெரியவரின் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண் Empty Re: ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண்

Post by krishnaamma Thu May 14, 2015 10:15 am

பல திருப்பங்கள் நிறைந்த கதையை படிப்பது போல இருக்கு புன்னகை................அந்த சகோதரிகள் சந்திப்பு நல்லபடி நிகழட்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண் Empty Re: ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu May 14, 2015 7:41 pm

தந்தையால் முடியவில்லை என்றாலும், தங்கைகள் இருவரும் சந்திக்க இருக்கிறார்கள் என்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்படியும் நம்மாட்களுக்கு ஒரு நல்ல சினிமா கதை கிடைத்துவிட்டது என்றே தோன்றுகிறது.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண் Empty Re: ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண்

Post by krishnaamma Thu May 14, 2015 7:49 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தந்தையால் முடியவில்லை என்றாலும், தங்கைகள் இருவரும் சந்திக்க இருக்கிறார்கள் என்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்படியும் நம்மாட்களுக்கு ஒரு நல்ல சினிமா கதை கிடைத்துவிட்டது என்றே தோன்றுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1136762

நன்னா சொன்னேள் போங்கோ புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண் Empty Re: ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை
» சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்
» திருடப்பட்ட ஐ போனை டிராக்கிங் அப் மூலம் கண்டுபிடித்த இளைஞர் சுட்டுக்கொலை
» 'மாற்றம்' குறித்த எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ் மூலம் விளம்பரம்-திமுக எதிர்ப்பு
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum