புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_m10ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 10:10 pm

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதி மன்றம் அவருக்கு விடுதலை வழங்கியதன் மூலம் ஊழலை ஊக்குவிக்கிறதா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக்குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் ஏராளமான ஓட்டைகள் இருப்பதை நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். ஜெயலலிதா தரப்பினர் பெற்ற வங்கிக் கடன்களை அவர்களின் வருவாயாக காட்டும் விஷயத்தில் ரூ.13.50 கோடி தவறுதலாக சேர்க்கப்பட்டதை சுட்டிக்காட்டியிருந்தேன். இதேகருத்தை இவ்வழக்கின் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் நீதிபதி குமாரசாமி அளித்தத் தீர்ப்பில் இன்னும் பல ஓட்டைகள் உள்ளன. அவற்றில் பல குறைபாடுகள் ஜெயலலிதா தரப்புக்கு சாதகம் என்ற அளவுடன் முடிந்து விட்டன. ஆனால், பல குறைகள் இந்தியாவில் ஊழலை ஒழிக்கும் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடியவையாக இருப்பது தான் கவலையளிக்கிறது. உதாரணமாக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவரது தீர்ப்பு ஆணையின் 853 மற்றும் 854 ஆவது பக்கங்களில் ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருட்களையும் அவரது வருமானமாக கருதி, அவரது வருவாய் கணக்கில் ரூ.1.50 கோடியை சேர்த்திருக்கிறார். இது ஜெயலலிதா செய்த ஊழல்களுக்கு அப்பட்டமாக அங்கீகாரம் அளிக்கும் மோசமான நடவடிக்கையாகும்.

‘‘இவ்வழக்கின் முதல் எதிரி ஜெயலலிதா தனக்கு ரூ.2.15 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வந்ததாகவும், ரூ.77 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் வந்ததாகவும் கூறியுள்ளார். ஜெயலலிதா அவரது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அவரது வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு அவர்களின் பிறந்த நாளில் பரிசுப் பொருட்கள் தருவது வழக்கமாக உள்ளது. அதனடிப்படையில் ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருட்கள் மூலம் அவருக்கு ரூ.1.50 கோடி வருமானம் கிடைத்ததாக மதிப்பீடு செய்கிறேன்’’ என்று நீதிபதி குமாரசாமி தமது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். இதில் ஒரு விஷயம் மிகவும் கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதையோ அல்லது பிறந்த நாளின்போது தொண்டர்களிடமிருந்து பரிசுப் பொருட்களை வாங்குவதையோ யாரும் குறைகூற முடியாது. ஆனால், ஜெயலலிதா அரசியல் கட்சித் தலைவராக இந்த பரிசுப் பொருட்களை வாங்கவில்லை; முதலமைச்சராக இருந்து கொண்டு இந்த பரிசுகளை வாங்கியுள்ளார் என்பது தீர்ப்பு ஆணையில் மறைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களாக இருப்பவர்கள் எந்தவித பரிசுப் பொருட்களையும் வாங்கக் கூடாது என்று நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதைமீறி ஜெயலலிதா பரிசுகளை வாங்கியதே குற்றமாகும். இத்தகைய சூழலில் அந்த பரிசுகளை எப்படி வருவாயாக எடுத்துக் கொள்ள முடியும்? என்பது தெரியவில்லை.

அதுமட்டுமின்றி, ஜெயலலிதா விதிகளை மீறி பரிசுப் பொருட்களை பெற்றது தொடர்பாக அவர் மீது நடுவண் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது ஜெயலலிதா சட்டவிரோதமாக வாங்கிய பரிசுப் பொருட்களை வருமானமாக அறிவித்து அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கியிருப்பது மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம்; வழக்கு என்று வந்தால் அவை பரிசுப் பொருட்களாக கிடைத்தவை என்று கூறி தப்பித்து விடலாம் என்ற நிலையை இந்த தீர்ப்பு ஏற்படுத்திவிடும். ஊழல் மிகப்பெரிய சமூகத் தீமை என்பதை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த போதிலும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு ஊழலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பது துரதிருஷ்டவசமானது.

ஜெயலலிதாவும், அவரது கூட்டாளிகளும் தங்களின் சொத்துக்களுக்கு வருமானவரித் துறையிடம் கணக்கு காட்டியுள்ளனர்; அதை வருமான வரித்துறையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை காரணம் காட்டியே ஜெயலலிதா தரப்பை அனைத்துக் குற்றச்சாற்றுகளில் இருந்தும் நீதிபதி விடுவித்துள்ளார். ஆனால், ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்பட்ட பிறகே அவர் தமது சொத்துக்கள் குறித்த வருமானவரிக் கணக்கை காட்டினார் என்பதையும், இவ்விஷயத்தில் வருமானவரித் துறையின் முடிவு நீதிமன்றங்களை கட்டுப்படுத்தாது என்பதையும் நீதியரசர் ஏனோ கருத்தில் கொள்ளவில்லை.

மொத்தத்தில் நீதிபதி குமாரசாமி அளித்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தீர்ப்பு திருத்தப்பட்டால் தான் இந்தியாவைப் பீடித்துள்ள ஊழல் என்ற சாத்தானை ஒழிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.



ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 10:10 pm

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு: களத்தில் இறங்கும் விஜயகாந்த்!

சென்னை: ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யவில்லை என்றால் அப்பணியை தேமுதிக செய்யும் என்று அக்கட்சியின் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில், வருமானம் மற்றும் கடன் கணக்கீடுகளில் தவறு நடந்திருப்பது தெள்ளத் தெளிவாக "உள்ளங்கை நெல்லிக்கனி போல்" தெரியவருகிறது.

புடம்போட்ட தங்கம் என்று நம்பி நாம் வாங்குகிற பொன்நகைகள், சில நேரங்களில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பாடத்தை நமக்கு தந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பிலும் அது தான் நடந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

உச்ச நீதிமன்ற நீதி அரசர்களால் பெரிதும் நம்பப்பட்ட, மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதி குமாரசாமி, கணக்கீடுகளில் தவறு செய்திருக்கிறார் என்பது தற்செயலாக நடந்த நிகழ்வாக தெரியவில்லை. மாறாக ஏதோ ஓர் அழுத்தத்தில்தான் இது நடந்திருப்பதாக யூகிக்கமுடிகிறது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பது நீதி நெறிமுறையில் நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் ஒரு கோட்பாடு. ஒருவேளை அந்த ஆயிரத்தில் ஒருவரோ இந்த ஜெயலலிதா, அதனால்தான் தப்பித்துவிட்டாரோ என்று சட்ட வல்லுனர்களும், சமூக அக்கறையாளர்களும் சந்தேகிக்கிறார்கள்.

இதற்கு முன்பு அரசு ஊழியர்களான ஐபிஎஸ் அதிகாரி ஜெகன்சேஷாத்திரி வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக 3 ஆயிரம் ரூபாய் அவர் கணக்கில் இருந்தமைக்காக ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல் சுங்கத்துறை அதிகாரி புகழேந்தி என்பவர் சுமார் 90 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக அவர் கணக்கில் இருந்தமைக்காக இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்து சேர்த்ததில் விலக்களிக்கப்பட்ட வழக்கின் விபரம் தெரிந்த நீதிபதிக்கு, தண்டனை அளிக்கப்பட்ட வழக்கின் விபரம் மட்டும் தெரியாமல்போனது ஏன்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

பாமரரில் இருந்து பணக்காரர் வரை வாக்களித்து ஜெயலலிதாவை முதலைமைச்சராக்கினால் அதிகார பலமும், பணபலமும் இருக்கின்ற மமதையில் எதையும் சாதித்து விடலாம் என்று நினைத்தால் எல்லாவற்றிற்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்பது இதுபோன்ற தருணங்களில்தான் நிரூபிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கில் 18 ஆண்டுகள் முடிவில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஆதார ஆவணங்களை, அலசி ஆராய்ந்து, ஆய்வு செய்து வரலாற்று சிறப்புமிக்க 1030 பக்கம் கொண்ட தீர்ப்பை அளித்துள்ளார். அதனால்தான் அவரை நீதியரசர் என்று சொல்கிறோம். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி எதன் அடிப்படையில் இந்த மூன்று நிமிட தீர்ப்பை அளித்துள்ளார்? இவரை நீதியரசர் என சொல்லமுடியுமா? இது நீதித்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதென மக்கள் பேசுகிறார்கள்.

எனவே கர்நாடக அரசு இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். இல்லையேல் அப்பணியை தேசிய முற்போக்கு திராவிட கழகம் மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.



ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:26 pm

==================================================================================================
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு: களத்தில் இறங்கும் விஜயகாந்த்!

சென்னை: ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யவில்லை என்றால் அப்பணியை தேமுதிக செய்யும் என்று அக்கட்சியின் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
==================================================================================================

ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் ! 99a55ddf297fe1c0e5cd25b32402e97a_M



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக