Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரிவடையும் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி.
4 posters
Page 1 of 1
விரிவடையும் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி.
இந்த உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்களை இணையம் வழியாக இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பர்க் உருவாக்கிய திட்டம் தான் இன் டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. இந்த திட்டத்தை அறிவித்த சில நாட்களில், அனைவருக்கும் சமமான இணையம் தரப்பட வேண்டும் என்ற முழக்கம் “நெட் நியூட்ராலிட்டி” என்ற பெயரில் பன்னாடுகளில் எதிரொலித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் இருந்தது. அப்போது ஸக்கர்பெர்க் தானும் சமமான இணைய வழங்கலை ஆதரிப்பதாக அறிவித்தார். அந்த வழியில் தான் தன் இண்டர்நெட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஆனால், அது அப்படி அல்ல என்ற எதிர்ப்புக் குரலும் ஒலித்தது.
தற்போது ஸக்கர்பெர்க்கின் இணைய திட்டத்தில் யார் வேண்டுமானாலும், எந்த இணைய தளமும், அல்லது இணைய சேவை நிறுவனமும் பங்கெடுத்துக் கொள்ளலாம் என்று ஸக்கர்பெர்க் அறிவித்துள்ளார். தன் திட்டம் சமமான இணைய சேவைக்கு எதிரானது என்று சொல்பவர்கள், இந்த அறிவிப்பினைக் கேட்டுத் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள் என்று ஸக்கர்பெர்க் கூறியுள்ளார். எந்த இணைய தளமும் சேவை நிறுவனமும் இணைந்து கொள்ள வழி வகுப்பதன் மூலம், மக்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ள கூடுதலாக விருப்பங்களும், இலவச சேவைகளும் கிடைக்கும் என்றார்.
இந்த திட்டத்தில் இணைய விரும்பும் நிறுவனங்களுக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார். இந்த இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. வழியாக எந்த தளத்தையும் இலவசமாக அணுகலாம். HTTPS, JavaScript போன்றவற்றைத் தங்கள் தளங்களில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். இணையத்தை இலவசமாக அணுகத் தர வேண்டும். பின்னர், வாடிக்கையாளர்களே, கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையில் சேவை இருக்க வேண்டும். அவர்களை கட்டணம் செலுத்தும் வகையில் சேவைகளை வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும். இதில் பேஸ்புக் என்ன வகையான உற்சாகத்தினை எதிர்பார்க்கிறது எனத் தெரியவில்லை.
இத்திட்டத்தில் இணையும் இணைய தளங்கள், இணைய வழி தொலைபேசி, விடியோ மற்றும் பைல் பரிமாற்றம், அதிக அளவில் போட்டோ பரிமாற்றம் போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாது. மொபைல் போன் மற்றும் ஸ்மார்ட் போன்களில் அணுகும் வகையில், இணைய தளங்கள் குறிப்பிட்ட அலைவரிசையில் செயல்பட வேண்டும். இந்த திட்டம் வழியாக, இணையம் அணுக விரும்பும் வாடிக்கையாளர்கள், கட்டாயமாக பேஸ்புக் அக்கவுண்ட் கொண்டிருக்க வேண்டும். இது போல பல நிபந்தனைகளை பேஸ்புக் விதித்துள்ளது. இவற்றை மற்ற நிறுவனங்கள் எப்படி எடுத்துக் கொள்ளும் எனத் தெரியவில்லை.
ஆனால், பலர் இந்த திட்டம் செயல்படும் வழியை நோக்கினால், இது அனைவருக்கும் சமமான இணையம் வழங்குவதற்கு எதிரானதாகும் என்று மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம் பேஸ்புக் ஓர் இணைய சேவை நிறுவனம் போல இயங்கத் தொடங்கும். அனைத்து இணைய அணுகலும், பேஸ்புக் சர்வர்களின் வழியே அனுப்பப்படும். மக்கள் இணையத்தை அணுக இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. மூலமே செல்ல வேண்டியதிருக்கும். ஸக்கர்பெர்க்கின் திட்டத்தில் இணையும் அனைத்து இணைய தள நிறுவனங்களுக்கும், பேஸ்புக் ஒரு காவலாளியாகச் செயல்படும். பின்னர், உலகத்தின் அனைத்து தகவல்களுக்கும். இன்டர்நெட் ஓ.ஆர்.ஜி. மட்டுமே மாற்ற இயலாத காவலாளியாக இயங்கும். ஏற்கனவே தன் இணைய தளத்தை முழுமையாக பேஸ்புக்கினால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே, இத்திட்டத்தில் பல இணைய தளங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் இணைகையில், இணைய தளங்களைக் காண்பது சிக்கலாக மாறும்.
மேலும், இத்திட்டத்தை, அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினால், பாதுகாப்பு பிரச்னைகளும், ஹேக்கர்கள் நுழையக் கூடிய தவறாக அமைக்கப்பட்ட குறியீடுகளின் எண்ணிக்கையும் பெருகும். ஏனென்றால், பேஸ்புக் தன் திட்டத்தில் இணையும் இணைய நிறுவனங்களுக்கு, தன் வசம் உள்ள முக்கியமான பாதுகாப்பு வளையமான எஸ்.எஸ்.எல் அல்லது டி.எல்.எஸ் ஆகியவற்றை அவற்றின் பயன்பாட்டிற்கு வழங்காது. இந்த இரண்டு பாதுகாப்பு வளையங்கள் தான் இணையத்தில் டேட்டாவின் பயணத்தைச் சுருக்கி மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி வைப்பவையாகும். இவை பின்பற்றப்படவில்லை என்றால், ஹேக்கர்களிடமிருந்து பயனாளர்கள் தப்பிப்பது சிரமம்.
மேலும் பேஸ்புக்கின் இணையத் திட்டத்தில், வெளிப்படையான தன்மை இல்லை. பல முக்கிய தகவல்களை, இத்திட்டத்தில் இணைய விரும்பும் நிறுவனங்களுக்குத் தரவில்லை. பயனாளர்கள் பரிமாறிக் கொள்ளும் தகவல்கள், அரசு வேண்டுகோள் கொடுத்தால் அது குறித்து என்ன முடிவெடுத்துச் செயலாற்றுவது, தகவல் தொடர்பு பிரிவில் செயல்படும் சேவை நிறுவனங்களுடனான உடன்பாடு, இந்த திட்டம் நிர்வாகம் என எந்த தகவலும் தரப்படவில்லை. இது பேஸ்புக் நிறுவனத்தை எதேச்சாதிகாரம் கொண்டதாக மாற்றிவிடும் என்ற கருத்தினைப் பலர் முன் வைக்கின்றனர்.
மேலும் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டமானது, பயனாளர்கள் எந்த டேட்டா திட்டத்தை வாங்க வேண்டும் என முடிவு செய்வதற்கு முன்னரே, இலவச இணைய இணைப்பு என்ற குறுகிய வாசலைக் காட்டுகிறது. இதனைக் காட்டி, பயனாளர்களை இது சிக்க வைக்குமோ என்ற அச்சம் அனைவரிடமும் தலை தூக்கியுள்ளது. இதனால், பயனாளர்கள், மற்ற பயனாளர்களுடன் சமமில்லாத ஒரு இணைப்பில் சிக்கிவிடுவார்கள் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்போது இயங்கி வரும் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் இந்த வகையில்தான் வாடிக்கையாளர்களைக் கட்டிப் போட்டு வருகின்றன. இவையாவது, அப்ளிகேஷன்களை வழங்குவதில் தன்னிட்சையாக நடந்து கொள்கின்றன. ஆனால், இணைய இணைப்பினையே ஒரு நிறுவனம் வைத்துக் கொண்டால், அதனிடம் நம் சுதந்திரம் சிறைப்பட்டுவிடும்.
இந்த இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டத்தினை அறிமுகப்படுத்திப் பேசுகையில், ஸக்கர்பெர்க், நெட் நியூட்ராலிட்டி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, நெட் நியூட்ராலிட்டி என்பது,” ஒரு பயனாளர், விடியோ ஒன்றைக் காணவிரும்பி, அதனைத் தரவிறக்கம் செய்திட முற்படுகையில், அது மிக மெதுவாக அவரின் கம்ப்யூட்டரை அடையும் சூழ்நிலை தரப்படுகிறது. ஏனென்றால், விரைவாக வேண்டும் எனில், அதற்குத் தனியே, இணைய இணைப்பு தரும் நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியாக வேண்டும். இது சரியல்ல” என்று கூறினார். ஆனால், அவருடைய திட்டத்தில், குறிப்பிட்ட தளங்கள் அளிக்கும் தகவல்கள் மட்டுமே, எந்தவிதப் பாகுபாடும் இன்றிக் கிடைக்கும். மற்றவை பற்றி, ஸக்கர்பெர்க் எதுவும் கூறவில்லை.
மார்க் ஸக்கர்பெர்க், உண்மையிலேயே நெட் நியூட்ராலிட்டி குறித்து அக்கறை கொள்பவராக இருந்தால், அதன் அடிப்படை கொள்கைகளுக்கு மதிப்பு அளிப்பவராகத் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும். பேஸ்புக், இணையத்தில் தன் வலிமையான இடத்தைப் பயன்படுத்தி, இணைய சேவை நிறுவனங்களிடம், டேட்டாவுக்கான அடிப்படை கட்டணத்தை நிர்ணயம் செய்திட வேண்டும். சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கு, தங்கு தடையற்ற, பாகுபாடு இல்லாத இணைய இணைப்பினைத் தருவதை உறுதி செய்திட வேண்டும். அப்படி ஒரு நிலையை பேஸ்புக் செயல்படுத்தினால் மட்டுமே, உலக அளவில் முழு இணையத்தை கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கும் தன் இலக்கை பேஸ்புக் ஈட்ட முடியும்.
பேஸ்புக் தற்போது தன் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டத்தினை அனைத்து முன்னேறிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்து வருகிறது. அதில் இந்தியாவும் அடக்கம். அதனால் தான், பன்னாட்டளவில் பல மக்கள், எல்லாருக்கும் சமமான இணைய அணுகல் குறித்துப் பேசி வருகின்றனர். இந்த நாட்டில் உள்ள அமைப்புகள் எல்லாம், ஒன்றிணைந்து நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில், பல லட்சம் மக்கள், சமமான இணைய இணைப்பிற்கெனக் குரல் கொடுத்ததால், பேஸ்புக்கின் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டத்தில் இருந்து பல நிறுவனங்கள் விலகி உள்ளன.
இந்த உலகம் இணையத்தைப் பொறுத்தவரை ஒரு திருப்பு முனையைச் சந்தித்து வருகிறது. இணையத்திற்கு அடுத்து வர இருப்பவர்களின் எண்ணிக்கை 300 கோடியாக இருக்கப் போகிறது. அவர்கள் அனைவரும், இந்த உலகின் அறிவுசால் தகவல்கள் அனைத்தையும், பாகுபாடற்ற முறையில் அணுக, ஏற்கனவே உள்ளவர்கள் தற்சமயம் பெற்று வருவதைப் போல அனுமதிக்கப்பட வேண்டும். இவர்கள், இரண்டாம் நிலை இணையக் குடிமக்களாக, பெரும் தகவல் தொடர்பு நிறுவனங்கள் போட்டுள்ள வேலிகளுக்குள்ளாக, கட்டுப்பாடுள்ள இணைய சேவைகளையும், அப்ளிகேஷன்களையும் பெறுபவர்களாக இருக்கக் கூடாது.
கம்ப்யூட்டர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விரிவடையும் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி.
செய்திக்கு நன்றி சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: விரிவடையும் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி.
internet.org என்பது உலகம் மொத்தத்தையும் தன கட்டுபாட்டுக்குள் கொண்டுவர பார்க்கும் கூட்டுகளவானிகளின் சதிவேலை தான்.
Similar topics
» இஸ்லாத்தின் பார்வையில் விரிவடையும் பிரபஞ்சம்
» டாட் டிப்ஸ்கள் (சித்திரை ,26)
» டாட் காம் - ஒரு பக்க கதை
» அழிந்துபோகும் நிலையில் டாட் காம்(.COM) ஆதிக்கம்.!
» எலக்ஷன் ரன்னர்ஸ் டாட் காம் - ஜாலியா ஒரு கற்பனை
» டாட் டிப்ஸ்கள் (சித்திரை ,26)
» டாட் காம் - ஒரு பக்க கதை
» அழிந்துபோகும் நிலையில் டாட் காம்(.COM) ஆதிக்கம்.!
» எலக்ஷன் ரன்னர்ஸ் டாட் காம் - ஜாலியா ஒரு கற்பனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|