ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.ராமகிருஷ்ணனின் "எனதருமை டால்ஸ்டாய்" மற்றும் சில நூல்களும்

Go down

request எஸ்.ராமகிருஷ்ணனின் "எனதருமை டால்ஸ்டாய்" மற்றும் சில நூல்களும்

Post by bhimrocky Mon May 11, 2015 11:04 pm

எனக்கு மின்புத்தகங்கள் படிப்பதில் அத்தனை ஆர்வமில்லாமல் இருந்தது. ஆனால், தமிழ்நேசன் & செல்லா போன்றோரின் தெளிவான அளவில் அடக்கமான மின்னூல்களை வாசிக்க தொடங்கிய பின்தான் பழக்கமானது. அதனால், இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.      

பின்வரும் எஸ்.ராமகிருஷ்ணனின்  புத்தகங்கள் தேவை.
1. எனதருமை டால்ஸ்டாய்
2. ஹெமிங்க்வேயின் கடலும் கிழவனும்
3. தச்தொவ்ச்கியின் குற்றமும் தண்டனையும்

இவை 2013 ஆம் ஆண்டு எஸ்.ரா. ஆற்றிய சொற்பொழிவுகளை தொகுத்து புத்தகமாக்கபட்டுள்ளன. எனவே பார்க்க சிறியதாக இருப்பினும் மூன்று எழுத்தாலேகளை பற்றிய தகவல் களஞ்சியம்.

இப்படிக்கு,
https://facebook.com/bhimrocky
@=@=@=@=@=@=@=@=@=@=@=@=@

"மனிதர்களின் நலன்சார்ந்த தொடர்பில்லாத எவ்விதமான விஞ்ஞானமும், கலையும் போலிகள் அன்றி வேறில்லை. புதிய புதிய கொலை ஆயுதங்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய பயங்கர வெடிகுண்டுகளால் நாசம் செய்பவர்கள் போல் ஆபாசமாக இசை, நாடகங்கள், நாவல்கள், கவிதைகள் எழுதும் இலக்கியவாதிகள் எல்லோரும் போலிகள். சமுதாயத்தின் விஷவிதைகள் நோய்கிருமிகள்" - இவை உலக புகழ் பெற்ற ரஷ்யா எழுத்தாளர் Leo Tolstoy ன் வரிகள்.

((( மு.கு: இந்த பதிவில் நான் எழுதிய அனைத்தும் "எனதருமை டால்ஸ்டாய்" பற்றி ஒரு வலைதளத்தில் எழுதப்பட்ட புத்தக விமர்சனத்தில் பெற்றது)))

ஒரு திரைப்படம் உருவாகும் பின்னணி பற்றி தெரிந்து கொள்ள எனக்கு எப்போதுமே ஆர்வம் இருக்கிறது. ஆனால் புத்தகங்கள், நாவல், கவிதை நூல் உருவாகும் காரணம் பற்றி அறிய இதுவரை முயற்சிததில்லை. எதேர்ச்சையாக புத்துயிர்ப்பு(Resurrection) என்ற நாவல் பிறந்த காரணம் பற்றி தெரிய வந்த போது மிக மிக ஆச்சர்யம் அடைந்தேன். உலகில் இதுவரை வெளியான எந்த நாவலுக்கும் இல்லாத பின்புலம் இந்த நாவல் பெற்றிருக்கிறது என அடித்து சொல்லலாம். ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலைக்காக எழுதபட்ட நாவல் இது. அந்த இனத்தை சேர்ந்த 47000 மக்களின் வாழ்க்கை புத்துயிர்ப்பு எழுதிய டால்ஸ்டாய்யின் கைகளில் இருந்தது. யார் அந்த மக்கள்? என்ன பிரச்சனை அவர்கள் சந்தித்தார்கள்? டால்ஸ்டாய் அவர்களுக்கு செய்தது என்ன? பார்ப்போம்.

Doukhobors இன மக்கள்:

டுகொபார்ஸ் என்பது ரஷ்யாவில் இருந்த ஒரு மத பிரிவு. அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் சிறப்பானதாக இருந்திருக்கிறது. காந்தியடிகள் கூட அவர்களின் வாழ்வியலை பின்பற்றினார் என்று சொல்லபடுகிறது. அதை சேர்ந்த மக்கள் எத்தகைய ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சைவ உணவு மட்டுமே உண்பார்கள். பால் அருந்துவது கூட பாவம். அது கன்றுகளுக்கு உரியது என தவிர்த்துவிட்டனர்.

ஆண் பெண் யாராக இருந்தாலும் அவர்களால் முடிந்த வேலையை செய்தே ஆகவேண்டும். வயதானவர்களை ஊர் பராமரிக்கும்.

தங்களை யார் தாக்கினாலும், எவ்வளவு வன்முறை செய்தாலும் திருப்பி அடிக்க மாட்டார்கள். அகிம்சை தான் அவர்களை பொறுத்தவரை தெய்வம்.

புகையிலை, மது பழக்கம் கிடையாது. உணவை விற்பது பாவம்.

அடிப்படை வசதிகளுக்கு மேல் உணவோ, உடைமையோ வைத்துகொள்ள மாட்டார்கள். பணத்தின் மேல் பற்று கிடையாது.

மிக முக்கியம். அவர்கள் ராணுவ சேவையை வெறுத்தார்கள்.

மேல கூறியவற்றில் கடைசி வரிதான் அவர்களை சோதித்தது. கம்யூனிஸ்ட்களுக்கு முன்பு ரஷ்யாவை ஆண்ட ஜாரின் கொடுங்கோல் ஆட்சி, டுகொபார்ஸ் மக்களை கட்டாய ராணுவ பணி செய்ய உத்தரவிட்டது. கருணை மிக்க அந்த மக்களிடம் ஆயுதம் எடுத்து, கொலை செய்ய சொன்னால் கேட்பார்களா. மறுத்துவிட்டார்கள். அரசு கொதித்தது. ராணுவ பணி செய்ய மறுத்தவர்களை சிறையில் தள்ளியது. சைபீரிய சிறையில் நிரப்பி கொடுமைபடுத்தபட்டனர். அவர்கள் மனம் தளரவில்லை. எந்த நேரத்திலும் திருப்பி தாக்காமல் அமைதியுடன் ஏற்று கொண்டனர். இங்கு தான் டால்ஸ்டாய் எனும் மீட்பர் இவர்களுக்கு கரம் கொடுக்கிறார்.

டால்ஸ்டாய் செய்தது என்ன:

டுகொபார்ஸ் மக்களின் இந்த நிலையை பற்றி கேள்வி பட்ட டால்ஸ்டாய் அவர்களுக்கு ஆதரவாக பேச துவங்கினார். உலக நாடுகளின் கவனத்திற்கும், பத்திரிகைகளின் கண்களுக்கும் இந்த பிரச்னையை கொண்டு சென்றார். அரசு இறங்கி வந்து 47000 டுகொபார்ஸ் மக்களையும் நாட்டை விட்டு விரட்ட முடிவு செய்தது. கனடா அவர்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது . ஆனால் ரஷ்யாவில் இருந்து கனடாவிற்கு கடல் வழி பயணம் செய்ய ஆறாயிரம் மைல் பயணம் செய்ய வேண்டும். அதற்கான செலவை ரஷ்யா தராது என்று சொல்லிவிட்டது. அதனால் டால்ஸ்டாய் தன் நாவல் மூலம் கிடைக்கும் வருவாய் எல்லாம் இந்த மக்களின் பயணத்திற்கு செலவிட முடிவு செய்தார். அப்படி அவர் எழுதிய நாவல் தான் புத்துயிர்ப்பு.

ஒரு பத்திரிக்கையில் தொடராக இந்த நாவலை எழுதினார். இதன் ராயல்டி தொகை எல்லாமே டுகொபார்ஸ் மக்களுக்கு கொடுக்கபட்டது. முதலில் கிடைத்த ராயல்டி தொகையை வைத்து 2300 அகதிகள் கப்பல் மூலம் கனடா அனுப்பபட்டனர். ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் உணவு உறக்கம் எல்லாம் மறந்து எழுதி இருக்கிறார். இதை எழுதும் பொது இவருக்கு வயது 78 என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இடையில் இவர் உடல் நலம் குறைந்து அவதி பட்டாலும் எழுதுவதை நிறுத்தவில்லை. ஒரு தேவதூதன் போல் தங்களை காக்க வந்த இவரின் உடல் நலம் பெற டுகொபர்ஸ் மக்கள் இறைவனை வேண்டினர். ஒரு வருடம் கழித்து நாவல் முடிவுற்றது. மக்கள் கனடா போய் சேர்ந்தனர்.

டால்ஸ்டாய் தன் ஆயுள் முழுதும் சக மனிதனை எவ்வாறு நேசிக்க வேண்டும் என கூறியே வாழ்ந்துவந்திருகிறார். அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றை படித்தேன். அருமை. அவரது 'போரும் அமைதியும்' நூல் இன்று வரை உலகின் சிறந்த நாவலாக கருதபடுகிறது.
bhimrocky
bhimrocky
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 09/08/2013

Back to top Go down

request Re: எஸ்.ராமகிருஷ்ணனின் "எனதருமை டால்ஸ்டாய்" மற்றும் சில நூல்களும்

Post by bhimrocky Fri May 15, 2015 1:34 am

நன்றி தோழர்

- fb.com/bhimrocky
bhimrocky
bhimrocky
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 09/08/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum