Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
+5
Dr.சுந்தரராஜ் தயாளன்
anikuttan
ayyasamy ram
உமா
சிவா
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
First topic message reminder :
ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு தேதி - தொடரும் சஸ்பென்ஸ் - ஏகிறும் டென்சன்
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு தேதி தள்ளிக் கொண்டே செல்வதால், தமிழக அமைச்சர்களும், அதிமுகவினரும் கடும் டென்சனில் உள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீிதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, குற்றவாளிகள் தரப்புக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ 100 கோடி அபராமுதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதனால், இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கர்நாடக நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் பவானி சிங்கின் நியமனத்தை தமிழக அரசே நியமனம் செய்ததால், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பவானி சிங் நியமனம் குறித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று பரபரப்பு தீர்ப்பளித்தனர்.
அந்தத் தீர்ப்பிலேயே, இந்த வழக்கை தொடுத்த திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகனின் எழுத்து பூர்வமான வாதங்களையும், கர்நாடாக அரசின் எழுத்துப் பூர்வமான வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பவானிசிங் வைத்த வாதங்களை ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வாதங்களை கணக்கில் கொண்டு, நன்கு பரிசீலித்த பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின்படி, கர்நாடக உயர் நீதி மன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 81 பக்கம் மனுவும், கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 18 பக்க எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தனர்.
தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருக்குமா அல்லது அவரது எதிர்காலத்தை மீண்டும் புரட்டிப் போடும் வகையில் இருக்குமா என மில்லியன் டாலர் கேள்வி அதிமுக , திமுக தரப்பில் மட்டும் இன்றி இந்தியா முழுமைக்கும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த வழக்கு தீர்ப்பு தேதி குறித்து மே 8 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதிக்குள் நீதிபதி குமாரசாமி வெளியிடுவார் என கர்நாடாகவில் தகவல் பரவிவருகின்றது.
இந்த தகவல் உறுதியாகாத நிலையில், தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள் கடும் டென்சனில் உலா வருகின்றனர்.
முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ள கூட்டுச்சதி குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என நால்வர் தரப்பிலும் கடந்த வாரம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு தேதி - தொடரும் சஸ்பென்ஸ் - ஏகிறும் டென்சன்
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு தேதி தள்ளிக் கொண்டே செல்வதால், தமிழக அமைச்சர்களும், அதிமுகவினரும் கடும் டென்சனில் உள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீிதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, குற்றவாளிகள் தரப்புக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ 100 கோடி அபராமுதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதனால், இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கர்நாடக நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் பவானி சிங்கின் நியமனத்தை தமிழக அரசே நியமனம் செய்ததால், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பவானி சிங் நியமனம் குறித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று பரபரப்பு தீர்ப்பளித்தனர்.
அந்தத் தீர்ப்பிலேயே, இந்த வழக்கை தொடுத்த திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகனின் எழுத்து பூர்வமான வாதங்களையும், கர்நாடாக அரசின் எழுத்துப் பூர்வமான வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பவானிசிங் வைத்த வாதங்களை ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வாதங்களை கணக்கில் கொண்டு, நன்கு பரிசீலித்த பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின்படி, கர்நாடக உயர் நீதி மன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 81 பக்கம் மனுவும், கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 18 பக்க எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தனர்.
தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருக்குமா அல்லது அவரது எதிர்காலத்தை மீண்டும் புரட்டிப் போடும் வகையில் இருக்குமா என மில்லியன் டாலர் கேள்வி அதிமுக , திமுக தரப்பில் மட்டும் இன்றி இந்தியா முழுமைக்கும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த வழக்கு தீர்ப்பு தேதி குறித்து மே 8 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதிக்குள் நீதிபதி குமாரசாமி வெளியிடுவார் என கர்நாடாகவில் தகவல் பரவிவருகின்றது.
இந்த தகவல் உறுதியாகாத நிலையில், தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள் கடும் டென்சனில் உலா வருகின்றனர்.
முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ள கூட்டுச்சதி குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என நால்வர் தரப்பிலும் கடந்த வாரம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு:
-
பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெ., ஆஜராக தேவையில்லை:
-
பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெ., ஆஜராக தேவையில்லை:
Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
ஏராளமான கருப்பு ஆடுகள் நம்ம நாட்டில் சுதந்திரமாக சுத்தி திரியும்போது இந்த அம்மாவை மட்டும் தண்டிப்பது வருத்தமாக இருக்கிறது.
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
அடுத்த வாரம் மகிழ்வுந்தில் கோவை செல்லலாம் என்று இருக்கின்றோம். கல்லடியையும் சொல்லடியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ தெரியவில்லை.
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
டோன்ட் வொர்ரி அம்மா வில் return
ponsamon- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 10/05/2015
Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
anikuttan wrote:ஏராளமான கருப்பு ஆடுகள் நம்ம நாட்டில் சுதந்திரமாக சுத்தி திரியும்போது இந்த அம்மாவை மட்டும் தண்டிப்பது வருத்தமாக இருக்கிறது.
நல்லா இருக்கு உங்க நியாயம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
தொண்டர்கள் நிதானம் காக்க வேண்டும்; ஜெயலலிதா மீண்டும் கட்டளை
ரெயில் முன் பாய்ந்து அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, தொண்டர்கள் உணர்ச்சி வயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று ஜெயலலிதா மீண்டும் கட்டளையிட்டுள்ளார்.
இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ரெயில்முன் பாய்ந்துதற்கொலை
அ.தி.மு.க. தலைமையின் மீது மிகுந்த பேரன்பு கொண்டு பல்வேறு தியாகங்களை தொடர்ந்து செய்து வரும் கழக தொண்டர்கள், ஒரு சில இடங்களில் எனக்குப் பெரிதும் மனவேதனையைத் தருகின்ற வகையில் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக்கொள்ளும் செயல்களிலும் ஈடுபட்டுவிடுகின்றனர்.
அண்மையில், திருநெல்வேலி புறநகர் மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி 5-வது வார்டு செயற்குழு உறுப்பினர் எம்.முத்தையா ரெயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகவும் துடிதுடித்தேன்.
நிதானம் காக்க வேண்டும்
என் உயிரினும் மேலான எனதருமைக் கழக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் கட்டளை இடுகிறேன்.
முத்தையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரெயில் முன் பாய்ந்து அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, தொண்டர்கள் உணர்ச்சி வயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று ஜெயலலிதா மீண்டும் கட்டளையிட்டுள்ளார்.
இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ரெயில்முன் பாய்ந்துதற்கொலை
அ.தி.மு.க. தலைமையின் மீது மிகுந்த பேரன்பு கொண்டு பல்வேறு தியாகங்களை தொடர்ந்து செய்து வரும் கழக தொண்டர்கள், ஒரு சில இடங்களில் எனக்குப் பெரிதும் மனவேதனையைத் தருகின்ற வகையில் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக்கொள்ளும் செயல்களிலும் ஈடுபட்டுவிடுகின்றனர்.
அண்மையில், திருநெல்வேலி புறநகர் மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி 5-வது வார்டு செயற்குழு உறுப்பினர் எம்.முத்தையா ரெயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகவும் துடிதுடித்தேன்.
நிதானம் காக்க வேண்டும்
என் உயிரினும் மேலான எனதருமைக் கழக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் கட்டளை இடுகிறேன்.
முத்தையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
//என் உயிரினும் மேலான எனதருமைக் கழக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் கட்டளை இடுகிறேன்.//
இதைப்படிக்கும் போதே நாளை என்ன விபரீதம் நடக்கப்போகிறதோ என்று பயமாய் இருக்கே சிவா !
இதைப்படிக்கும் போதே நாளை என்ன விபரீதம் நடக்கப்போகிறதோ என்று பயமாய் இருக்கே சிவா !
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
ஜெயலலிதா வழக்கில் ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும். வக்கீல் ஆச்சார்யா
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் மட்டுமின்றி தமிழக எதிர்க்கட்சிகளும் வந்தன.இந்த நிலையில் கர்நாடாக மாநில மந்திரி சபை முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கூடி ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்துள்ளது.
மேல் முறையீடு எபோது செய்யபடும் எனபது குறித்து நேற்று ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வக்கீல் ஆச்சார்யா அளித்த பேட்டி விவரம் அவருமாறு
எஸ்எல்பி தயார் செய்ய ஒன்று இரண்டு வாரங்கள் ஆகலாம்.தற்போது உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை நடைமுறையில் உள்ளது. எனவே அவசர வழக்குகளை மட்டுமே உடனடியாக விசாரணைக்கு எடுப்பர். இவ்வழக்கு அவசர வழக்காக கருதப்பட முடியாது என்பதால், விடுமுறை கால பெஞ்சில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாது என்று கருதுகிறேன். எனவே, ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும்.
வழக்கமாக, அப்பீல் மனுக்கள் மீது சட்டத்துறை செயலாளர் இறுதி முடிவு எடுப்பார். இந்த வழக்கு, ஒரு மாநில முதல்வருக்கு எதிரானது என்பதால், கர்நாடக முதல்வர், ஒட்டுமொத்த அமைச்சரவை சம்மதத்துடன் இம்முடிவை எடுத்துள்ளார். இந்த கூட்டு முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. சட்டப்படிதான் எல்லாம் நடந்துள்ளது.
காங்கிரசில் ஒரு கோஷ்டி, மேல்முறையீடு வேண்டாம் என்று கூறிவந்தாலும், மற்றொரு கோஷ்டி மேல்முறையீட்டுக்கு ஆர்வம் காண்பித்தது. எனக்கே காங்கிரசிலிருந்து சிலர் கடிதம் எழுதி, உங்கள் முயற்சி தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இறுதியில் சட்டப்படியே மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பிலுள்ள ஏகப்பட்ட தவறுகளை அடிப்படையாக வைத்து, மேல்முறையீட்டின்போது வாதம் செய்யப்படும். அக்னிகோத்ரி வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக 10 சதவீதத்துக்கு குறைவாக சொத்து இருந்ததால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால், அது ஒன்றும் கணக்கீடு அல்லது அறிவியல் பார்முலா கிடையாது. எல்லாவற்றிலும் அதை அப்ளை செய்யவும் முடியாது.
உதாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வைத்துள்ள ஒருவர், 900 கோடிகளை வருவாய்க்கு அதிகமாக சேர்த்தாலும், அது 10 சதவீதத்துக்கு குறைவாகத்தான் வருகிறது. இதற்காக 900 கோடி ரூபாயை சுருட்டியவரை விடுதலை செய்துவிட முடியுமா? 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான வித்தியாசமாக இருந்தால், பரவாயில்லை என்று சொல்லலாம். இதையெல்லாம், உச்சநீதிமன்றத்தில் எடுத்து வாதிடுவோம்.
மேல்முறையீடு எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாது. 18 வருடங்களாக நடந்த வழக்கு, ஹைகோர்ட்டில் நான்கே மாதங்களில் முடிவடைந்தது. உச்சநீதிமன்றத்தில் எப்படி நடைபெறும் என்று தெரியாது. ஆனால், ஊழல் தடுப்பு சட்டப்படி, இதுபோன்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
இவ்வாறு ஆச்சாரியா கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் மட்டுமின்றி தமிழக எதிர்க்கட்சிகளும் வந்தன.இந்த நிலையில் கர்நாடாக மாநில மந்திரி சபை முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கூடி ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்துள்ளது.
மேல் முறையீடு எபோது செய்யபடும் எனபது குறித்து நேற்று ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வக்கீல் ஆச்சார்யா அளித்த பேட்டி விவரம் அவருமாறு
எஸ்எல்பி தயார் செய்ய ஒன்று இரண்டு வாரங்கள் ஆகலாம்.தற்போது உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை நடைமுறையில் உள்ளது. எனவே அவசர வழக்குகளை மட்டுமே உடனடியாக விசாரணைக்கு எடுப்பர். இவ்வழக்கு அவசர வழக்காக கருதப்பட முடியாது என்பதால், விடுமுறை கால பெஞ்சில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாது என்று கருதுகிறேன். எனவே, ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும்.
வழக்கமாக, அப்பீல் மனுக்கள் மீது சட்டத்துறை செயலாளர் இறுதி முடிவு எடுப்பார். இந்த வழக்கு, ஒரு மாநில முதல்வருக்கு எதிரானது என்பதால், கர்நாடக முதல்வர், ஒட்டுமொத்த அமைச்சரவை சம்மதத்துடன் இம்முடிவை எடுத்துள்ளார். இந்த கூட்டு முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. சட்டப்படிதான் எல்லாம் நடந்துள்ளது.
காங்கிரசில் ஒரு கோஷ்டி, மேல்முறையீடு வேண்டாம் என்று கூறிவந்தாலும், மற்றொரு கோஷ்டி மேல்முறையீட்டுக்கு ஆர்வம் காண்பித்தது. எனக்கே காங்கிரசிலிருந்து சிலர் கடிதம் எழுதி, உங்கள் முயற்சி தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இறுதியில் சட்டப்படியே மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பிலுள்ள ஏகப்பட்ட தவறுகளை அடிப்படையாக வைத்து, மேல்முறையீட்டின்போது வாதம் செய்யப்படும். அக்னிகோத்ரி வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக 10 சதவீதத்துக்கு குறைவாக சொத்து இருந்ததால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால், அது ஒன்றும் கணக்கீடு அல்லது அறிவியல் பார்முலா கிடையாது. எல்லாவற்றிலும் அதை அப்ளை செய்யவும் முடியாது.
உதாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வைத்துள்ள ஒருவர், 900 கோடிகளை வருவாய்க்கு அதிகமாக சேர்த்தாலும், அது 10 சதவீதத்துக்கு குறைவாகத்தான் வருகிறது. இதற்காக 900 கோடி ரூபாயை சுருட்டியவரை விடுதலை செய்துவிட முடியுமா? 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான வித்தியாசமாக இருந்தால், பரவாயில்லை என்று சொல்லலாம். இதையெல்லாம், உச்சநீதிமன்றத்தில் எடுத்து வாதிடுவோம்.
மேல்முறையீடு எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாது. 18 வருடங்களாக நடந்த வழக்கு, ஹைகோர்ட்டில் நான்கே மாதங்களில் முடிவடைந்தது. உச்சநீதிமன்றத்தில் எப்படி நடைபெறும் என்று தெரியாது. ஆனால், ஊழல் தடுப்பு சட்டப்படி, இதுபோன்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
இவ்வாறு ஆச்சாரியா கூறியுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
ஜெயலலிதா வழக்கு அப்பீல் அரசு வழக்கறிஞராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் மட்டுமின்றி தமிழக எதிர்க்கட்சிகளும் வந்தன.இந்த நிலையில் கர்நாடாக மாநில மந்திரி சபை முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கூடி ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்துள்ளது. இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக ஐகோர்ட்டில் ஆஜரான ஆச்சாரியாவையும், அவரின் உதவிக்காக வழக்கறிஞர் சந்தேஷ்சவுட்டாவையும் சுப்ரீம்கோர்ட்டிலும் தொடரச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.அதற்கான அரசாணை, இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தொடரும் வழக்கு என்பதால், இந்த அரசாணை அவசியமாகும். ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு செய்ய கர்நாடக தரப்பு திட்டமிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் மட்டுமின்றி தமிழக எதிர்க்கட்சிகளும் வந்தன.இந்த நிலையில் கர்நாடாக மாநில மந்திரி சபை முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கூடி ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்துள்ளது. இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக ஐகோர்ட்டில் ஆஜரான ஆச்சாரியாவையும், அவரின் உதவிக்காக வழக்கறிஞர் சந்தேஷ்சவுட்டாவையும் சுப்ரீம்கோர்ட்டிலும் தொடரச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.அதற்கான அரசாணை, இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தொடரும் வழக்கு என்பதால், இந்த அரசாணை அவசியமாகும். ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு செய்ய கர்நாடக தரப்பு திட்டமிட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!
ஜெயலலிதா வழக்கை நடத்த செலவிட்ட ரூ.5.11 கோடியை தமிழக அரசிடம் வசூலிப்போம் --கர்நாடக அரசு
பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி பெங்களூரு தனிக்கோர்ட்டு மற்றும் கர்நாடக ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. கர்நாடக ஐகோர்ட்டில் நடந்த மேல் முறையீட்டு விசாரணையின்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அரசு சிறப்பு வக்கீலாக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.
மேலும் கர்நாடக அரசு தரப்பு வாதமும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
இந்த வழக்கை நடத்துவதற்கு கர்நாடக சட்டத்துறை சார்பில் ரூ.5.11 கோடி வரை செலவிடப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. அதுபோல, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவு விவரங்கள் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் கேட்டு உள்ளேன். அதுபற்றிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான செலவு தொகையையும் தமிழக அரசிடம் இருந்து பெறுவோம்.
மேலும் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு ஆகும் முழு செலவையும் தமிழக அரசிடம் இருந்து பெறுவோம். இந்த வழக்கிற்கு ஆகும் செலவை தமிழக அரசிடம் இருந்து பெற்று கொள்ளும்படி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.”
இவ்வாறு மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா கூறினார்.
கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்--அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.18.9.1996-ந் தேதி ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.
19.11.1999-ந் தேதி தொடங்கிய விசாரணை 18.7.2001-ந் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 259 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யபட்டன. அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 2001-ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 79 சாட்சிகளிடம் மறு விசாரணை நடந்தது. இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் முதல் நபர்(ஜெயலலிதா) முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு 27.12.2003-ந் தேதி அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தனிக்கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது.
பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி பெங்களூரு தனிக்கோர்ட்டு மற்றும் கர்நாடக ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. கர்நாடக ஐகோர்ட்டில் நடந்த மேல் முறையீட்டு விசாரணையின்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அரசு சிறப்பு வக்கீலாக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.
மேலும் கர்நாடக அரசு தரப்பு வாதமும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
இந்த வழக்கை நடத்துவதற்கு கர்நாடக சட்டத்துறை சார்பில் ரூ.5.11 கோடி வரை செலவிடப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. அதுபோல, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவு விவரங்கள் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் கேட்டு உள்ளேன். அதுபற்றிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான செலவு தொகையையும் தமிழக அரசிடம் இருந்து பெறுவோம்.
மேலும் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு ஆகும் முழு செலவையும் தமிழக அரசிடம் இருந்து பெறுவோம். இந்த வழக்கிற்கு ஆகும் செலவை தமிழக அரசிடம் இருந்து பெற்று கொள்ளும்படி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.”
இவ்வாறு மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா கூறினார்.
கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்--அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.18.9.1996-ந் தேதி ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.
19.11.1999-ந் தேதி தொடங்கிய விசாரணை 18.7.2001-ந் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 259 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யபட்டன. அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 2001-ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 79 சாட்சிகளிடம் மறு விசாரணை நடந்தது. இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் முதல் நபர்(ஜெயலலிதா) முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு 27.12.2003-ந் தேதி அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தனிக்கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 16 வருடமாக சொத்து குவிப்பு வழக்கை சந்திக்கும் ஜெ. முதல்வராக தொடரலாமா?: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு!
» ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜன.5க்கு ஒத்திவைப்பு!
» ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு!
» ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜன.5க்கு ஒத்திவைப்பு!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|