ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மே 2 - நரசிம்ஹ ஜெயந்தி ! ....33333 பதிவு - கிருஷ்ணாம்மா !

Go down

இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Empty இன்று மே 2 - நரசிம்ஹ ஜெயந்தி ! ....33333 பதிவு - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Sat May 02, 2015 12:48 pm

இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  JWpbi5TTadPRjzgpZIGA+2708362770_c3f04878db_o(1)

முனிவர் சாபம் பெற்ற பெருமாளின் துவார பாலகர்களான ஜெய விஜயர்களே இரண்யனும் இரண்யகசிபுவும். இந்தப் பெயர்களில்தான் அவர்கள் நரசிம்மாவதாரத்தில் தோன்றினார்கள். விஷ்ணுவின் ராமாவதாரத்தில் அவர்கள் ராவணனும் கும்பகர்ணனுமாய்ப் பிறந்தார்கள். அவர்களே கிருஷ்ணாவதாரத்தில் தந்த வக்த்ரனும் சிசுபாலனாகவும் பிறந்தார்கள் என்கிறது பாகவதம்.

விஷ்ணு, கணத்தில் தோன்றி அருள்பாலித்தது நரசிம்ம அவதாரத்தில்தான். அதனால் ஆண்டாளும் நரசிம்மருக்கு என்றே ஒரு பாசுரம் பண்ணி இருக்கிறாள். “மாலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்” எனத் தொடங்கும் பாடல் அது. “இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிளவாய் முன் கீண்டாய் குடந்தை கிடந்த என் கோவே” என்கிறது பெரியாழ்வார் பாசுரம்.

பசியால் அழும் குழந்தை குரல் கேட்டு, போட்டது போட்டபடி பதறிக்கொண்டு ஓடி வரும் தாயைப் போன்ற அன்புள்ளம் கொண்ட தயாபரன் ஸ்ரீ நரசிம்மன். தன் பக்தன் பிரகல்லாதன் என்ற குழந்தையைப் பாடாய்ப் படுத்தும் இரண்யனை வதம் செய்யத் திருவுளம் கொண்டான் எம்பெருமான்.

`நாராயணாய’ என்று சொல்லாதே `இரண்யாய` என்று சொல்லி உயிர் பிழைத்துப் போ என்கிறான் இரண்யன் பிரகல்லாதனிடம். பிரகல்லாதன் அதனை மறுக்கிறான். எங்கே உன் நாராயணன் என இரணியன் கோபத்துடன் கேட்க, என் ஐயன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று விஷ்ணுவின் விசுவரூபத்தைப் புரிய வைக்க முயலுகிறான் பிரகல்லாதன். பக்தனின் இந்த வார்த்தையைக் கேட்டுத் துணுக்குற்றது விஷ்ணுதான். வாயு வேகம் மனோ வேகம் என்பார்கள். எந்தத் திக்கை நோக்கி அந்தக் குழந்தை கை காட்டும் என்பது தெரியாது. பக்தன் வாக்கைக் காப்பதற்காகத் தூணிலும் துரும்பிலும் வியாபித்தான் எம்பெருமான்.

வெடித்துச் சிதறிய தூண்
 

இங்கே இருப்பானா உன் நாராயணன் என்றபடியே ஒரு தூணைச் சுட்டிக்காட்டிக் கேட்டான் இரண்யன். அப்போது தூண் பிளக்கவில்லை. மீண்டும் உச்சகட்ட கோபத்துடன் கேட்டான் இந்தத் தூணில் இருப்பானா உன் நாராயணன்? என்று தன் கதையால் தொட்டுக் கேட்டபோதும் தூண் பிளக்கவில்லை. ஆம் என்று பிரகல்லாதன் தலை ஆட்டிய கணம், வெடித்துப் பிளந்தது தூண். எட்டுக் கைகள், இரண்டு கால்கள், கோபமுற்ற சிங்க முகம் ஆகியவற்றுடன் தோன்றினான் நாராயணன். உலகம் கிடுகிடுத்தது. வானம் இடி மின்னலுடன் மழை பொழிந்தது. சூறாவளி சுழன்று வீசியது.

.............................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Empty Re: இன்று மே 2 - நரசிம்ஹ ஜெயந்தி ! ....33333 பதிவு - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Sat May 02, 2015 12:51 pm

இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  ECareuvASgmrRBvOLyo0+10246736_643167109109759_7254971219151291453_n

மணிவண்ணன் மாலை

பெருமாளுக்குத் துளசி மாலை விசேஷம் என்பார்கள். தாயார் அவருக்கு இட்டு மகிழ்ந்த மாலைகள் ஏராளம். மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, சம்பங்கிப்பூ, முல்லைப்பூ, இருவாட்சிப்பூ என சூடிக் கொடுத்த மாலை உட்பட அவை பலவகைப்படும். ஆனால் பெருமாள் தானே விரும்பிப் போட்டுக்கொண்ட மாலை குடல் மாலை. இரணியனின் நீண்ட குடல் அது.

`மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய` என்று ஆண்டாள் கூறியது போல வீரத்தின் பொருளான எம்பெருமான், இரண்யனின் குடலை உருவி மாலையாகச் சூட்டிக்கொண்டான். அது அந்தி நேரம். அவதாரம் எடுத்ததோ அஹோபிலம் மலைக் காடு. அங்கே அரக்கன் இரணியனை மாய்த்த எம்பெருமான் ஹூங்காரம் எழுப்பினான்.

இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Ltn7qniBTYmqvIUbGIcN+tn2114naras

அன்புப் பார்வை


பிறகு எம்பெருமான் பார்வை பிரகல்லாதனை நோக்கித் திரும்பியது. பார்வையில் உஷ்ணம் தணிந்து, குளுமை பரவியது. தாய்ப் பாசம் மீதுற பிரகல்லாதன் அருகே செல்ல விழைந்தான் எம்பெருமான். சுற்றி இருந்த தேவாதிதேவர்களும் லட்சுமி தேவியும் அவரது உக்கிர உருவைக் கண்டு நடுநடுங்கினார்கள்.

பிரகல்லாதனை நோக்கித் திரும்பிய அவரது பார்வையில் கனிவு ததும்பியது. பிரகல்லாதனும் நரசிம்மரின் அன்புப் பார்வைக்கு இணையான பார்வை கொண்டு நோக்க, பக்தனும் பரந்தாமனும் பரஸ்பரம் கட்டுண்டார்கள். விஷ்ணுவின் குறுகிய கால அவதாரம் குன்றின் விளக்காய் ஒளிர்கிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Empty Re: இன்று மே 2 - நரசிம்ஹ ஜெயந்தி ! ....33333 பதிவு - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Sat May 02, 2015 12:55 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

உகரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிமம் பீஷணம்
பதரம் மிருத்ய மிருதயம் நமாம்யஹம் ||

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று மே 2 - நரசிம்ஹ  ஜெயந்தி ! ....33333  பதிவு - கிருஷ்ணாம்மா !  Empty Re: இன்று மே 2 - நரசிம்ஹ ஜெயந்தி ! ....33333 பதிவு - கிருஷ்ணாம்மா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum