ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

+7
M.Jagadeesan
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
விஸ்வாஜீ
T.N.Balasubramanian
mbalasaravanan
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Empty "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Post by சிவா Wed Apr 29, 2015 4:54 pm


சென்னை: புலியைப் பார்த்து பூனை சூடு வைத்துக்கொண்டதைப் போல், நடிகராக இருந்து முதல்வர் ஆன எம்ஜிஆர் என்ற புலியைப் பார்த்து சூடு வைத்துக்கொண்ட பூனைகள் ஏராளம். சிவாஜிகணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் போன்ற பூனைகள் எல்லாம், அரசியல் என்ற சூடான பாலில் வாயை வைத்து சுட்டுக்கொண்டன. இவர்களால் கடைசிவரை புலியாகவே முடியவில்லை.

இந்த வரிசையில் கடைசி பூனை விஜயகாந்த். மற்ற பூனைகள் எல்லாம், அரசியல் களத்தில் காணாமல் போன நிலையில் இந்த பூனை மட்டும் கொஞ்ச காலம் தாக்குப்பிடித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் மற்ற பூனைகளுக்கு கிடைக்காத இந்த வாய்ப்பை, இந்த பூனை பயன்படுத்திக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவரது சமீபத்திய நடவடிக்கைகள், அவருடன் சேரலாம் என கொஞ்சம் ஆசையை வளர்த்துக்கொண்டு இருந்த மற்ற கட்சிகளை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது.

தன்னைப் பற்றியும் தனது கட்சியின் செல்வாக்கு பற்றியும் அதீத கற்பனையையும் எதிர்பார்ப்பையும் வளர்த்துக்கொண்டு இருப்பவர் விஜயகாந்த். சென்ற சட்டசபை தேர்தலுக்கு முன், கடைசி வரை எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று அறிவிக்காமல், அனைத்துக் கட்சிகளுக்கும் "தண்ணி' காட்டியபோதே, மற்ற கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்தன. "ஏற்கனவே, தேர்தலுக்கு தேர்தல் ஓட்டு வங்கி, "ஓட்டையாகி' வரும் நிலையில் எதற்கு இவ்வளவு "பந்தா','' என வெளிப்படையாகவே சில தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

ஒரு வழியாக பாஜ கூட்டணியில் ஐக்கியம் ஆனாலும், தேர்தல் முடிவில் அந்தக் கூட்டணிக்கு பலத்த அடி தான் காத்திருந்தது. விஜயகாந்தால் கூட்டணிக்கு எந்த பயனும் இல்லை என்ற முடிவுக்கு பாஜ வந்தது. பிரதமராக பதவியேற்பு விழாவுக்கு விஜயகாந்த்தை அழைத்த மோடி, அதன் பிறகு அவருடனான சந்திப்புக்கு முக்கியத்துவம் தரவில்லை. பிரதமரை சந்திக்க "பிரம்ம பிரயத்தனம்' செய்தும் விஜயகாந்திற்கு "அப்பாயின்ட்மென்ட்' கிடைக்கவில்லை.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம், விஜயகாந்தின் அரசியல் "தாகத்தை' தீர்க்க வாய்ப்பு அளித்தது. அதிமுக, கம்யூனிஸ்ட், பாமக தவிர, மற்ற கட்சிகளை எல்லாம் வலிய சென்று சந்தித்து, ஒரு குழுவை ஏற்படுத்தினார்.

அவரது இந்த முயற்சிக்கு, திமுக உள்பட மற்ற கட்சிகள் பாராட்டு தெரிவித்து, ஆதரவு அளித்தன. இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு மூத்த பத்திரிகையாளர், ""தமிழகத்தில் சமீபத்தில் நடக்காத ஒரு விஷயத்தை விஜயகாந்த் நடத்துகிறார் என ஆச்சரியப்பட்டோம். எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ஒரு முன்னோட்டமாகவும் இதைக் கருதினோம்'' என்கிறார்.

ஆனால் டில்லியில் பிரதமரை சந்தித்த பிறகு, பத்திரிகையாளர்களிடம் அவர் நடந்துகொண்ட விதம், அவர் மீதான ஐயத்தை மற்ற கட்சிகளிடம் அதிகப்படுத்தி உள்ளது.

முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஒருவர் கூறும்போது, ""பாஜ ஏற்பாடு செய்த சந்திப்பு என்று தெரிந்த பிறகும், தமிழகத்தின் நலனுக்காக நாங்களும் உடன் சென்றோம். ஆனால் விஜயகாந்த் நடந்துகொண்ட விதம் எங்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பத்திரிகையாளர்களின் கேள்விகளை பதிலால் தான் அவர் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல் செயல்படுகிறார். பத்திரிகையாளர் சந்திப்பையும் சினிமா சூட்டிங் என நினைக்கிறார். அவர் இன்னமும் "செல்லுலாய்ட்' உலகில் இருக்கிறாரே தவிர, உண்மை உலகத்திற்கு வரவே இல்லை'' என்றார் வருத்தத்துடன்

அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ""சட்டசபையில் நாக்கை துருத்தியதைக் கூட, ஏதோ உணர்ச்சி வசப்பட்டுவிட்டார் என நினைத்தோம். ஆனால் டில்லியில் அவரது செயல், அவர் எப்போதுமே அப்படித் தான் என்பதை நிரூபித்துவிட்டது. விஜயகாந்த் பற்றி எங்களது விமர்சனத்தை இது உண்மையாக்கி விட்டது'' என்றார்.

தென்மாவட்டத்தைச் சேர்ந்த பாஜ நிர்வாகி ஒருவர் கூறும்போது, ""அரசியலில் அவர் பக்குவப்பட வேண்டியது நிறைய இருக்கிறது. எத்தனையோ தலைவர்களிடம் இதைவிட மோசமான கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளனர். ஒவ்வொரு தலைவரும் விஜயகாந்தைப் போல் கோபப்பட்டால், கட்சியை வளர்க்க முடியாது. எதிர்காலத்தில் அவருடன் கூட்டணி வைக்க வேண்டுமா என்று எங்களைப் போன்றவர்களை யோசிக்க வைத்துவிட்டது'' என்றார்.

இப்போது முளைத்துள்ள சூழ்நிலையையும், மற்ற கட்சிகளின் மனநிலையையும் வைத்துப் பார்த்தால், இனிமேல் தேமுதிகவுடன் கூட்டணி சேர அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டாது என்றே தோன்றுகிறது.

தினமலர்


"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Empty Re: "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Post by mbalasaravanan Wed Apr 29, 2015 4:57 pm

தலைப்பு அருமையாக இருக்கிறது மற்றும் பொருத்தமாக இருக்கிறது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Empty Re: "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Post by T.N.Balasubramanian Wed Apr 29, 2015 6:53 pm

அந்த காலத்தில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் ,கொடி கட்டி பரந்த காலத்தில் ,
திமுக வளர்ந்து வருகின்ற நேரத்தில் ,
சிந்தாத்ரிபெட்டில் இரவு தேர்தல் கூட்டம் .
அண்ணா பேச்சிற்காக மக்கள் பொறுமையாக உட்கார்ந்து உள்ளார்கள் .
அண்ணா வந்து ,பேச ஆரம்பித்து , 15 நிமிடங்களில் ஒரு கல் மேடை நோக்கி வந்து ,
குறி தவறி , மேடையில் ஒரு பக்கத்தில் விழுந்தது .
கூச்சல் ,குழப்பம் , புடிடா அடிடா சத்தம் .
அண்ணா , கையை உயர்த்தி , அமைதி அமைதி எனக் கூற
கூட்டம் நிசப்த்தம் ஆனது .
அண்ணா, அந்தக் கல்லை கையில் எடுத்து , வாய் திறந்தார்.
" காங்கிரஸ் கோட்டையிலிருந்து வந்துள்ள முதல் கல்.
கோட்டை சரிய ஆரம்பித்துள்ளதை , இது காண்பிக்கிறது .
இது மாதிரி கற்களை வரவேற்போம்" என்றார் .
ஆரவாரம் அடங்க ,ஐந்து நிமிடம் ஆயிற்று .

ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியால் மட்டுமே ,
மோசமான சந்தர்பத்தையும் ,தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும் .

அண்ணாவிற்கு அடுத்தபடி ,கலைஞர் .

விஜயகாந்த் எல்லாம்
" இந்த விஷயத்திற்கு இவர் சரிபட்டு வரமாட்டார் "  

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு 69py4QmYTwSvYCBti9qT+images

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Empty Re: "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Post by விஸ்வாஜீ Wed Apr 29, 2015 7:17 pm

மனைவியையும் மச்சானையும் கட்சியை பார்க்கச் சொல்லிவிட்டு வெளியே வராமல்
இருந்துவிடலாம் கேப்டன்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Empty Re: "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Post by யினியவன் Wed Apr 29, 2015 7:29 pm

பாக்கிஸ்த்தான் பார்டர் இல்ல கட்சி பார்டரைக் கூட தாண்டி வர விடமாட்டார் எங்க கேப்டன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Empty Re: "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Post by விஸ்வாஜீ Wed Apr 29, 2015 7:45 pm

யினியவன் wrote:பாக்கிஸ்த்தான் பார்டர் இல்ல கட்சி பார்டரைக் கூட தாண்டி வர விடமாட்டார் எங்க கேப்டன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1133809

சூப்பருங்க சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Empty Re: "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 29, 2015 8:44 pm

நல்ல பதிவு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Empty Re: "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Post by M.Jagadeesan Wed Apr 29, 2015 9:35 pm

சினிமா வேறு; நிஜ வாழ்க்கை வேறு என்பதை விஜயகாந்த் புரிந்து கொள்ளவேண்டும். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக அவருடைய கட்சி ஆகிவிட்டது. 2016 தேர்தலில் அந்தக் கட்டெறும்பு கூட அவரை விட்டுப் போய்விடும். பொறுமை காக்கவேண்டும்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Empty Re: "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Post by ayyasamy ram Wed Apr 29, 2015 10:12 pm

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Empty Re: "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Post by மாணிக்கம் நடேசன் Thu Apr 30, 2015 1:23 pm

பாவம், கேப்டன். 2016 தேர்தலுக்குபு பிறகு அவரது ஆட்டம் எல்லாம் அடங்கிவிடும்.  அப்புறம் என்ன, கிராமத்துக்க ஆடு,மாடு மேய்க்க போயிருவாரு. பிறகு யாரும் அவரப்பத்தி ஏன், அவரக்காய் கூட பேசாது.  
சதா தண்ணியில  மிதக்கவே இவருக்கு நேரமிருக்காது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

"சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு Empty Re: "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum