ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Empty இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா Wed Apr 29, 2015 4:23 am

First topic message reminder :

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 19417_977771912246476_4012356103518832497_n

டோனி அபாட்டின் தொடர் கோரிக்கைகள், மயூரன் சுகுமாரனின் உருக வைக்கும் ஓவியங்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நடத்திய பிரார்தனைகள் என எதுவும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மனதை அசைத்துப் பார்க்கவில்லை.

இந்தோனேசிய நேரப்படி சரியாக நள்ளிரவு 12.25 மணிக்கு மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பாலி நைன் கைதிகளுக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பெண் கைதியான மேரி ஜேன் வேலோசோவிற்கு மட்டும் கருணை காட்டப்பட்டதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாக விடோடோ, பாலி நைன் குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றாலும், கடந்த ஜனவரி மாதம் அவர் பாலி நைன் குறித்து கூறுகையில், “போதைப் பொருட்களால் இந்தோனேசியாவில் நாள் ஒன்று 50 பேர் இறக்கின்றனர். ஆகவே, போதைப் பொருள் கும்பலுக்காக என்னிடம் கருணை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறியிருந்தார்.

அவர் கூறியது போலவே கடைசி வரை அவரிடம் கருணை பிறக்கவில்லை. ஏறக்குறைய 10 ஆண்டு காலமாக நீடித்து வந்த அவர்களின் உயிர் போராட்டம் சில நிமிடங்களுக்கு முன்னாள் முடிந்து போயின.
மரண தண்டனைக்குரிய குற்றங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால் மரண தண்டனையின் மூலம் பறிக்கப்படும் உயிர் நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை. உயிருக்கான அளவு கோல்கள், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாக இருக்க முடியாது.

மனிதர்களால் மீட்டுக் கொடுக்க முடியாத உயிரை, சட்ட விரோதமாக பறித்தாலும் சரி, சட்ட ரீதியாக பறித்தாலும் சரி, அது கொலைக்குச் சமமானதே என பெரும்பான்மையான நாடுகள் ஒப்புக் கொள்கின்றன. அவற்றில் விதிவிலக்காக இருக்கும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று.


இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Empty Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா Wed Apr 29, 2015 4:29 pm

துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு துடிதுடித்த குடும்பத்தினர்!

நேற்று நள்ளிரவில் ‘பாலி 9′ வழக்கில் ஆஸ்திரேலிய பிரஜைகளான மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரு சான் உட்பட 8 பேருக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றிய போது துப்பாக்கிச் சத்தத்தை அவர்களின் குடும்பத்தினரும் கேட்கும் துரதிருஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

நூஸா கம்பாங்கன் தீவில் தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு எதிர் திசையில் வெகு தொலைவில் குடும்பத்தினர்கள் காத்திருக்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தண்டனை நிறைவேற்றப்பட்ட போது அவர்களால் அந்த துப்பாக்கிச் சத்தத்தை கேட்க முடிந்தது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் குடும்பத்தினர்கள் தங்கள் அன்பு உறவுகள் சுடப்படுவதைக் கேட்டு துடிதுடித்துப் போனதாகவும் அங்கிருந்த ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்டவர்களில் மயூரன் சுகுமாறனின் குடும்பம், இந்தோனேசியரான சைனல் அபிடின் குடும்பம் மற்றும் நைஜீரியர்களின் குடும்பம் ஆகியோர் கூடாரங்களில் காத்திருக்காமல் சிலகாப் பகுதியில் இருந்த தங்கும்விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

தங்களுக்கு ஏற்பட்ட இந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கு ஏற்படக் கூடாது என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் கதறி வருகின்றனர்.

இந்தோனேசியாவின் கருணை காட்டாத இந்த செயலுக்கு ஆஸ்திரேலியா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Empty Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா Fri May 01, 2015 10:28 pm

இந்தோனேசியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரேசில் கைதிக்கு கடைசி நிமிடம் வரை எதுவும் தெரியாது பாதிரியார் உருக்கமான தகவல்கள்

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற (இலங்கை தமிழர்) மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான், பிரேசில் நாட்டின் ரோட்ரிகோ குலார்ட்டே ஆகிய 3 பேரது மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கு ஆஸ்திரேலியாவும், பிரேசிலும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அவர்கள் மேலும் 5 பேருடன் சேர்ந்து கடந்த 28–ந் தேதி நள்ளிரவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்களில் ரோட்ரிகோ குலார்ட்டேவுக்கு கடைசி நிமிடம்வரை என்ன நடப்பது என்றே தெரியாது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அவர் ‘சிஜோப்ரேனியா’ என்ற மூளைக்கோளாறு நோயாலும், ‘பைபோலார் டிஸார்டர்’ என்னும் மனநல கோளாறு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என தகவல்கள் கூறுகின்றன.

அவருடன் கடைசி நிமிடங்களில் இருந்த பாதிரியார் சார்லி பர்ரோஸ் இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘குலார்ட்டே கைகளில் சிறை வார்டன்கள் விலங்கு போடுகிறவரை அவர் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் சிறைக்கு வெளியே போலீசாரிடம் ஒப்படைத்து அவரது காலில் சங்கிலி போடப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்தார். அவரை சுட்டுக்கொல்லப்போவதை அவருக்கு நோட்டீசு மூலம் தெரியப்படுத்தி இருப்பார்கள் என்றே நான் கருதினேன். ஆனால் அவர் கடைசி நிமிடத்தில் என்னிடம், ‘ பாதர், என்னை சுட்டுக்கொல்லப்போகிறார்களா?’ என கேட்டார். எனவே அவருக்கு கடைசி நிமிடம் வரை அவரை சுட்டுக்கொல்லப்போவது தெரிய வில்லை’’ என்று உருக்கமுடன் கூறினார்.


இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Empty Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா Fri May 01, 2015 10:32 pm

மயூரன் சுகுமாறன் கடைசி தருணங்கள்!

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Mayuran02

மயூரன் சுகுமாறன் கொண்டாடிய கடைசி பிறந்த நாள் அது. சுட்டுக் கொல்லும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நுஸ்கம்பகங்கன் சிறையில் தனது கடைசி 34 வயது பிறந்த நாளை கடந்த 17-ம் தேதி கொண்டாடியிருக்கிறார் மயூரன். இப்போது அந்த படங்கள் இந்தோனேஷிய ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.

அன்றைய தினத்தில் ஆன்ட்ரூ சானின் தம்பியும், மயூரனின் நண்பர்கள் சிலரும் நுஸ்கம்பகங்கனின் பெஸ்ஸி சிறைக்கு, பிளாக் பாரஸ்ட் கேக்கோடு சென்று மயூரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி பரிசுகளையும் அளித்திருக்கிறார்கள். தனது இறுதி பிறந்த நாள் விழா, தன் அம்மாவுக்கு மிகப்பெரிய கவலை நாளாக மாறி விடும் என்பதால் அவர்களை வர அனுமதிக்கவில்லை மயூரன்.

அம்மாவும், தம்பியும், தங்கையும் வர விரும்பியபோதும் மயூரன் அதற்கு மறுத்திருக்கிறார். 'அம்மாவை ரொம்ப சிரமப்படுத்தி விட்டேன்!' என்று தனக்கு நேரப்போகும் மரணத்தை விட அம்மாவையும் தம்பி, தங்கைகளையும் பற்றிய கவலைகளே மயூரனுக்கு அதிகம் இருந்திருகிறது.

தனது எஞ்சிய நாட்களை ஓவியம் வரைவதில் செலவிட்ட மயூரன், தனது மரணத்திற்காக அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ‘’வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்திருக்கிறேன். சிறை மிகப்பெரிய அளவில் என்னை மாற்றி விட்டது. நான் புதிதாக ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்” என அவர் தனது வெளிப்படுத்தியபோதிலும், இந்தோனேஷிய சட்டங்களும், மூர்க்கத்தனமான இதயமற்ற அரசு இயந்திரமும் அதற்கு அனுமதிக்காது என்பதையுமே தெரிந்து வைத்திருந்தார் மயூரன்.

ஏப்.29 - புதன்கிழமை அதிகாலை, மரணதண்டனை நிறைவேற்ற இருந்த 8 பேரையும் அவர்களின் கொட்டடியில் இருந்து அழைத்து வந்தபோது முதன் முதலாக அழைத்து வரப்பட்டவர் மயூரன்தான். காரணம், மன ரீதியாக அதை ஏற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தார் மயூரன். அழைத்து வரப்பட்டவர்கள் சுமார் 90 நிமிடங்கள் இறையிலாளர்களுடன் உரையாடினார்கள். பின்னர் அனைவரும் இணைந்து ஒரு தேவாலயப்பாடலைப் பாடினார்கள். பின்னர் மயூரன் சுகுமாறனும், ஆன்ட்ரூ சானும் ஒரு வண்டியிலும், மற்றவர்கள் வேறு வாகனங்களிலுமாக 6 வாகனங்களில் சுட்டுக்கொல்லப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

மயூரன் சுகுமாறனுக்கும், ஆன்ட்ரூ சானுக்கும் வெள்ளை ஆடை அணிந்த போது தலையை மறைக்க கருப்புத் துணி அணிய வேண்டாம் என நிராகரித்து விட்டார்களாம். வரிசையாக சிலுவை வடிவிலான மரக்கம்பத்தில் பின்னங்கைகள் கட்டப்பட்டு, சுடப்பட்டு மூன்று நிமிடம் கழித்து மருத்துவர்கள் உறுதி செய்ய, அவர்கள் மரணித்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

9 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்ற இருந்த நிலையில் மேரி ஜேன் பியஸ்டா வெலோசோ (Mary Jane Fiesta Veloso) என்ற 30 வயது பிலிப்பைன் பெண்ணுக்கு மட்டும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. வறுமை நிலையில் தந்திரமாக போதை மருந்து கடத்தலில் சிக்க வைக்கப்பட்ட கதையை பல முறை அவர் கூறிய போதும் அதை செவிமடுக்க எவரும் இல்லை. தன்னை இந்தோனேஷியாவுக்கு அனுப்பி வைத்ததாக ஜேன் சொன்ன மரிய கிறிஸ்டினா செர்ஜியோ (Maria Kristina Sergio) புதன்கிழமை இந்தோனேஷிய போலீசாரிடம் சரணடைந்தார்.

''ஜேன் குற்றமற்றவர்தான். அவரை ஏமாற்றி போதை பொருளை கடத்தும்படி ஏற்பாடு செய்தேன்” என்று வாக்குமூலம் கொடுக்க, அவரை கைது செய்த போலீசார், மூன்றாவது முறையாக ஜேன் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மறு விசாரணைக்காக மேல் முறையீடு செய்திருக்கிறார்கள்.

கொல்லப்பட்ட மயூரன், ஆன்ட்ரூவின் உடல்கள் வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா வந்து சேரும். அப்போது பெருந்திரளான மக்களும் பாடகர்களும், ஓவியர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அவர்களுக்காக அஞ்சலி நிகழ்வு ஒன்றை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.

தனது கோரிக்கைகளையும் மீறி இந்தோனேஷியா தண்டையை நிறைவேற்றியதால், தங்கள் நாட்டு தூதரை திரும்ப பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. ஆனால், மொத்தமாக 'பாலி 9' வழக்கில் அத்தனை பேரும் கைது செய்யப்படவும், இருவர் மரணதண்டனை பெறவும் காரணமே ஆஸ்திரேலியாதான். மயூரன் சுகுமாறன் குழுவினர் இந்தோனேஷியாவின் பாலி தீவில் போதை பொருள் கடத்துகிறார்கள் என்ற தகவல் கிடைக்க, அந்த தகவலை எது பற்றியும் யோசிக்காமல் இந்தோனேஷியாவுக்குச் சொன்னது ஆஸ்திரேலிய அரசுதான்.


இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Empty Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா Fri May 01, 2015 10:47 pm

ஆஸ்திரேலிய அருங்காட்சியத்தில் இருந்து இந்தோனேஷிய அதிபரின் புகைப்படம் நீக்கம்

இந்தோனேஷியாவில் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட மயூரன் சுகுமாரன், ஆண்ட்ரூ சான் என்ற 2 ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் உள்பட 8 பேரின் மரண தண்டனையை ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த புதன்கிழமை இந்தோனேஷிய அரசு நிறைவேற்றியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் இருந்து தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் தேசிய புகைப்பட அருங்காட்சியகம் உள்ளது. இதில் உள்நாடு மற்றும் சர்வதேச தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவின் புகைப்படமும் இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால், நாடு முழுவதும் இந்தோனேஷிய எதிர்ப்பு அலை வீசி வருகிறது. இதனால் இந்த புகைப்படத்தை அருங்காட்சியக நிர்வாகம் அகற்றி விட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள மற்ற கலைப்பொருட்கள் மற்றும் அங்கு வரும் பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக இந்த புகைப்படத்தை எடுத்து விட்டதாக அருங்காட்சியக இயக்குனர் அங்குஸ் ட்ரம்பிள் கூறினார்.


இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Empty Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by சிவா Mon May 04, 2015 3:28 pm

பாலி நைன் வரிசையில் பிரிட்டிஷ் பெண்மணி – கருணை மனு நிராகரிப்பு!

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 CQEd7APSwWrbp6WTlgaw+british

பாலி நைன் குற்றவாளிகளைத் தொடர்ந்து பிரிட்டனைச் சேர்ந்த லிண்ட்சே சாண்டிஃபோர்ட் (58) என்ற பெண்மணிக்கும் மரண தண்டனை நிறைவேற்ற இந்தோனேசிய அரசு தயாராகி வருகிறது.

இது தொடர்பாக லிண்ட்சே தனது குடும்பத்தாருக்கு எழுதி உள்ள இறுதிக் கடிதங்கள் குறித்தும், அவரது தண்டனைக் காலம் குறித்தும் பிரிட்டிஷ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், லிண்ட்சே பிரிட்டிஷ் ஊடகங்களுக்கு எழுதி உள்ள கடிதமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“பாலி நைன் வரிசையில் எனக்கும் எந்நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம். நான் எனது குடும்பத்தாருக்கு இறுதிக் கடிதங்களை எழுதத் தொடங்கி விட்டேன். பாலி நைன் வழக்கில் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியர்களான ஆண்ட்ரு சானும், மயூரனும் சிறையில் எனக்கு நெருங்கிய நண்பர்களானார்கள். ஆண்ட்ரு சான் நான் பெரியதாக மதிக்கும் மனிதர்களில் ஒருவர். அவர்களின் மறைவு மிகுந்த வேதனை தருகிறது.”

“அதேபோல், எனது இரண்டு வயது பேத்தியை பார்க்க முடியாமல் இருப்பது வலி மிகுந்ததாக உள்ளது”என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு தாய்லாந்திலிருந்து, பாலி திரும்பிய லிண்ட்சே, 1.6 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய போதைப்பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம், கடந்த 2013-ம் ஆண்டு மரண தண்டனை வழங்க உத்தரவிட்டது. இவருடைய கருணை மனுவையும் அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Empty Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 04, 2015 7:51 pm

சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! - Page 2 Empty Re: இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 202 பேர் பலியான பாலி குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய தீவிரவாதி பாகிஸ்தானில் கைது
» வன்னிப்போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் – இதனைப் புறந்தள்ள முடியாது! – ஐ.நா கூறுகின்றது!
» அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு
» இந்தோனேசியா: நிலநடுக்கத்தால் மசூதி இடிந்து விழுந்தது - 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
» ஏமனில் அமெரிக்கா குண்டு வீச்சு: அல்கொய்தா மதகுரு அவலாகி மகன் பலி- மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum