புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_m10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10 
37 Posts - 82%
heezulia
நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_m10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_m10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_m10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_m10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 27, 2015 1:43 am


நேபாளத்தில் கடந்த 80 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு பள்ளத்தாக்கு மற்றம் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல்வேறு இந்து கோவில்கள் அழிந்து விட்டன. நிலநடுக்கத்தினால், கஸ்தமண்டபம், பாஞ்சிடேல் கோவில், 9 அடுக்கு பசந்தபூர் தர்பார், தசவதார கோவில், கிருஷ்ண மந்திர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் அழிந்து விட்டன.

காத்மண்டு என்ற பெயர் ஏற்பட காரணமான கஸ்தமண்டபம் கடந்த 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மர சிற்பங்கள் கொண்ட கோவில் ஆகும். வரலாற்று ஆய்வாளரான புருஷோத்தம லோசன சிரேஸ்தா என்பவர் கூறும்போது, இந்த சிற்பங்கள் முழுவதுமாக அழிந்துபோக கூடும். இவற்றை மீண்டும் உருவாக்குவது என்பது தொழில் நுட்ப ரீதியில் கடினமானது மற்றும் அதிக செலவு மிக்கது.

காத்மண்டு, பக்தாபூர் மற்றும் லலித்பூர் பகுதிகளில் உலக பாரம்பரிய இடங்களாக அங்கீகரிக்கப்பட்ட பெரும்பான்மையான சிற்பங்களை நாம் இழந்து விட்டோம். அவற்றின் பழைமையான நிலைக்கு அவற்றை திரும்ப கொண்டு வர முடியாது என்று அவர் கூறியுள்ளார். நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான நிலநடுக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நாள் முழுவதும் நடந்த நிலஅதிர்வுகள் ஆகியவற்றால் காத்மண்டு நகரில் உள்ள பசந்தபூர் தர்பார் சதுக்கத்தில் உள்ள 80 சதவீத கோவில்கள் அழிந்து விட்டன.

காத்மண்டுவில் உள்ள புகழ் பெற்ற தரஹாரா உள்ளிட்ட நூற்றாண்டுகள் பழைமையான வரலாற்று சிற்பங்கள் ஆகியவை சிதைந்து போய் விட்டன. கடந்த 83 வருடங்களுக்கு முன்பு 1934ம் ஆண்டு இதுபோன்று நடந்த நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் பேர் பலியானதுடன், தரஹாரா துண்டுகளாக உடைந்தும் போனது. அதேபோன்று பதான் மற்றும் பக்தபூரில் உள்ள 12க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள் சிதைந்தும் அல்லது பகுதி சிதைந்தும் உள்ளன.



நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 27, 2015 1:43 am

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் CDcfx4kUgAETXBA

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவின் அடையாளச் சின்னமாக திகழ்ந்து வந்தது, ‘பீம்சென் கோபுரம்’ என்று அழைக்கப்பட்டு வந்த ‘தாரஹரா கோபுரம்’.

பிரதமர் பெயரிலானது

நகரின் மையப்பகுதியில் சுந்தரா என்ற இடத்தில், இந்தக் கோபுரம் 1832–ம் ஆண்டு கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்கது.

9 அடுக்குகளை கொண்டதும், 203 அடி உயரம் உடையதுமான இந்த கோபுரத்தை காட்மாண்டின் கட்டிடக் கலையாக ‘யுனெஸ்கோ’ அங்கீகரித்திருந்தது.

நேபாளத்தில் பிரதமராக இருந்த பீம்சென் தாபா கட்டியதால் அவரது பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது.

தரை மட்டமானது

இந்த கோபுரத்தின் 8–வது தளத்தில் அமைந்துள்ள சுழலும் மாடத்தில் இருந்து பார்த்தால், ரம்மியமான நேபாள பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க முடியும். இதனால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் இதைப் பார்வையிடுவதற்காக குவிந்தனர்.

நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டு, அந்தக் கோபுரம் தரை மட்டமானதில், சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பல 100 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு கோபுரம்

இந்த கோபுரத்தை கட்டுவதற்கு முன்பாக 1824–ம் ஆண்டு, பீம்சென் தாபா 11 அடுக்குகள் கொண்ட ஒரு கோபுரத்தை கட்டி இருந்தார்.

இந்த கோபுரம், 110 ஆண்டுகள் ஆன நிலையில், 1934–ம் ஆண்டு ஜனவரி 15–ந் தேதி ஏற்பட்ட நில நடுக்கத்தில் தரை மட்டமாகி விட்டது நினைவுகூரத்தக்கது.

பசுபதி நாதர் கோவில்

இதே போன்று இந்தியாவின் ஆன்மிக பயணிகளை பெரிதும் கவர்ந்து வந்த பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவில், நில நடுக்கத்துக்கு பின்னர் என்ன ஆயிற்று என்று உறுதியான எந்த தகவலும் இல்லை.

இருப்பினும், உத்தரகாண்ட் பாரதீய ஜனதா மூத்த தலைவர் பகத் கோஷ்யாரி, ‘‘பசுபதிநாதர் கோவில் பற்றி நேபாள அரசு அதிகாரியிடம் பேசினேன். நேபாள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களிடமும் கேட்டேன். கோவிலுக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்’’ என்றார்.

அதே நேரத்தில் அந்தக் கோவிலுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என பத்திரிகையாளர் நளினி சிங் தெரிவித்தார்.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தர்பார் சதுக்கமும், நில நடுக்கத்தில் உருக்குலைந்து போனது வேதனை அளிப்பதாக அமைந்துள்ளது.





நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 1:08 am

பேரழிவு பூகம்பத்தில் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவிலுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை- பக்தர்கள் தகவல்

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் 201504271651289694_Pashupatinath-Temple-unharmed-in-Nepal-s-devastating-quake_SECVPFநேபாளம் பேரழிவு பூகம்பத்தில் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவிலுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.

இமயமலை நாடு என்று அழைக்கப்படுகிற நேபாளம் என்ற அழகான நாட்டை நிலநடுக்கம் என்ற பெயரில் இயற்கை சீற்றம், சின்னாபின்னப்படுத்தியது. நேபாளம் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3700-ஐ தாண்டியது. 6,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவின் அடையாளச் சின்னமாக திகழ்ந்து வந்த, ‘பீம்சென் கோபுரம்’ என்று அழைக்கப்பட்டு வந்த ‘தாரஹரா கோபுரம்’ நிலநடுக்கத்தில் தரைமட்டம் ஆகிவிட்டது. காட்மாண்டு நகரின் மையப்பகுதியில் சுந்தரா என்ற இடத்தில், இந்தக் கோபுரம் 1832–ம் ஆண்டு கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்கது. 9 அடுக்குகளை கொண்டதும், 203 அடி உயரம் உடையதுமான இந்த கோபுரத்தை காட்மாண்டின் கட்டிடக் கலையாக ‘யுனெஸ்கோ’ அங்கீகரித்திருந்தது. நேபாளத்தில் பிரதமராக இருந்த பீம்சென் தாபா கட்டியதால் அவரது பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது.

இந்த கோபுரத்தின் 8–வது தளத்தில் அமைந்துள்ள சுழலும் மாடத்தில் இருந்து பார்த்தால், ரம்மியமான நேபாள பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க முடியும். இதனால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் இதைப் பார்வையிடுவதற்காக குவிந்தனர். நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டு, அந்தக் கோபுரம் தரை மட்டமானதில், சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதே போன்று இந்தியாவின் ஆன்மிக பயணிகளை பெரிதும் கவர்ந்து வந்த பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவில், நில நடுக்கத்துக்கு பின்னர் என்ன ஆயிற்று என்று உறுதியான எந்ததகவலும் வெளியாகாமல் இருந்தது. .இந்நிலையில் நேபாளம் பேரழிவு பூகம்பத்தில் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவிலுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பக்தர்கள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக கோவிலில் இருந்த பக்தர்கள் பேசுகையில், “பசுபதிநாத் கோவில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது, நாங்கள் கோவிலை பலமுறை சோதித்து பார்த்தோம், அங்கு ஒரு விரிசல்கூட காணப்படவில்லை,” என்று தெரிவித்து உள்ளனர்.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தர்பார் சதுக்கத்தில் பசுபதிநாதர் கோவிலும் ஒன்று ஆகும். “நாங்கள் அலுவலகம், கடைகள் மற்றும் வீடுகளுக்கு செல்லவில்லை ஏனென்றால் இந்த அழிவுகரமாண நேரத்தில் கோவில் ஒன்றே பாதுகாப்பான பகுதி என்று உணர்கிறோம்,” என்று பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.

அங்கு பூகம்பத்தால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு கூட போதிய தகன மேடை வசதி இல்லை. இதன் காரணமாக எங்கெல்லாம் உடல்களை தகனம் செய்ய இடம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மொத்த மொத்தமாக உடல்களை தகனம் செய்கின்றனர். பிரசித்தி பெற்ற பசுபதி நாதர் கோவில் அருகே அமைந்துள்ள தகன மையத்தில் கடும் இட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த தகன மையத்துக்கு வெளியே கிடைத்த இடத்தில் எல்லாம் உரிய இறுதிச்சடங்குகளை முறையாக செய்ய முடியாமல் உடல்களை தகனம் செய்து வருகின்றனர். நேற்று அங்கு நூற்றுக்கணக்கான உடல்கள் தகனம் செய்யப்பட்டன.



நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக