ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

4 posters

Go down

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Empty பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சிவா Tue Apr 28, 2015 1:04 am

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் 201504272127148382_India-wipe-the-tears-of-Nepal_SECVPFஇமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகளை புரட்டிப்போட்டது.

வீடுகள், ஓட்டல்கள், கோவில்கள் என கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாயின. மேலும் சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு என அனைத்தும் துண்டிக்கப்பட்டு வெறுமையாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவை நேபாளம் சந்தித்து உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்ததில் பொதுமக்கள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டினர், சுற்றுலாப்பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரை விட்டனர்.

மாலை வரை 3 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய தூதரக அதிகாரியின் மகள் உள்பட 5 இந்தியர்களும் இந்த பூகம்பத்துக்கு பலியாயினர். இன்னும் பல்வேறு பகுதிகளில் கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டியுள்ளதால், இந்த பூகம்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கு திரும்பினாலும் பிணங்களும், மக்களின் அழுகுரலாகவுமே உள்ளது. அத்துடன் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதிகளில் ஒருவித குழப்பமும், பரபரப்பும் நிலவி வருகிறது. அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் நீடித்து வருவதால் இடிந்து விழாமல் இருக்கும் வீடுகளிலும் மக்கள் குடியிருக்க அஞ்சுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெட்டவெளி கூடாரங்களில் தங்கியுள்ளனர்.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் தேசிய பேரிடரை சந்தித்துள்ள நேபாளத்துக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. குறிப்பாக பூகம்ப மீட்புப்பணிகளுக்காக உடனடியாக களத்தில் குதித்த இந்தியா, ராணுவம் மற்றும் விமானப்படையை அனுப்பி நேசக்கரம் நீட்டியுள்ளது.

இதற்காக இந்திய விமானப்படையின் 13 போர் விமானங்கள், 3 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள், 2 இலகு ரக ஹெலிகாப்டர்கள் உள்பட சுமார் 25 விமானங்கள் அங்கு மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த சுமார் 1000 பேரும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 டன் போர்வைகள், 50 டன் தண்ணீர் பாட்டில்கள், 22 டன் உணவு பொருட்கள் மற்றும் 2 டன் மருந்துகளை மத்திய அரசு காட்மாண்டுக்கு அனுப்பி வைத்தது. மேலும் ராணுவ மருத்துவர்கள் உள்பட பல்வேறு மருத்துவக்குழுக்களும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. இந்திய மீட்புக்குழுவினர் பூகம்பம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மாலை வரை சுமார் 2500 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

பூகம்ப மீட்புப்பணிகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்வதற்காகவும் மத்திய உள்துறை அமைச்சக குழு ஒன்று காட்மாண்டு போய் சேர்ந்தது. பி.கே.பிரசாத் தலைமையிலான இந்த குழுவினர், நேபாள அரசுடன் இணைந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து நடத்துவர். நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உதவ ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதாக எம்.பி.க்கள் அறிவித்தனர்.

நேபாளத்தில் இந்தியா மிகப்பெரிய மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசுகையில், பக்கத்து நாடான நேபாளத்தில் இந்தியா மிகப்பெரிய மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இதுவரை தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் அங்கே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 6 குழுவினர் காட்மாண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். பொறியாளர் நிபுணர் குழு மற்றும் 18 மருத்துவ குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆகாயமார்க்கத்தில் கண்காணித்து தகவல் அனுப்ப ஆளில்லாமல் இயங்கும் வாகனம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தலைமையில் சக்திவாய்ந்த 250 உயர்தர வயர்லஸ் சாதனங்களுடன் அனைத்து அமைச்சக குழுவினர் நேபாளம் சென்று உள்ளனர். இதேபோல் அந்த நாட்டில் தகவல் தொலைத் தொடர்பு முறை சீரமைக்கவும் நிபுணர்கள் குழுவினர் விரைந்துள்ளனர்.

நேபாள நிலநடுக்கம் மிகப்பெரிய துயரமாகும். நெருக்கடியான தருணத்தில் இருக்கும் நேபாள மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். நேபாள எல்லையோர பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்கள் நிவாரண முகாம்களை அமைத்து இருப்பதும் நில நடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்டு வருவதற்காக பஸ்களை இயக்குவதும் பாராட்டுக்குரியது.

நேபாளத்தில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கும் நாம் உதவி வருகிறோம். அவர்கள் இந்தியாவர விரும்பினால் இலவச விசா வழங்கப்படும். இதுவரை 22 டன் உணவு மற்றும் 2 டன் மருந்து பொருட்கள், 50 டன் குடிநீர், அதிக அளவில் போர்வைகள், இதர நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. என்றார்.

இந்திய மோப்ப நாய்கள்

நேபாளத்தில் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் குவியல், குவியலாக கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 3 நாட்களுக்கும் மேலாகி உள்ளதால், இந்த இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை விரைவில் மீட்க வேண்டியுள்ளது. எனவே இந்த பணிகளுக்காக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா ஏற்கனவே அனுப்பிவைத்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் மோப்ப நாய்களும் இடம் பெற்றுள்ளது.

இதைப்போல பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த 6 மோப்ப நாய்களுடன், 15 அதிகாரிகள் நேபாளம் போய் சேர்ந்தனர். கோல்டன் ரெட்ரீவர் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த இந்த மோப்ப நாய்கள், இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருந்தால் மிக துல்லியமாக கண்டறிந்து அடையாளம் காட்டும் திறன் வாய்ந்தவை ஆகும். இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரை கண்டறிதல் மற்றும் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகளில் இந்த மோப்ப நாய்கள் முக்கிய பங்கு வகிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக வலைதளம் மூலம் விரைவாக தகவல்

நேபாளத்தில் மீட்புப் பணிகளின் நிலவரத்தை உடனடியாக தெரிவிக்க இந்திய அரசு டுவிட்டர் இணைய தளத்தை பயன்படுத்தி வருகிறது.

நேபாளத்தின் மீட்பு பணியின் நிலவரம் என்ன?, அங்கிருந்து இந்தியர்கள் மீட்கப்படுவது குறித்தும் மத்திய அரசு டுவிட்டர் பக்கங்களில் செய்தியை வெளியிட்டு வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை, தூதரகம் உள்பட அனைத்து முக்கிய நிர்வாகமும் டுவிட்டரில் அவ்வபோது செய்திகளை வெளியிட்டு வருகிறது.

டுவிட்டர் பகுதி மூலம் மத்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறது. https://twitter.com/SpokespersonMoD, https://twitter.com/SushmaSwaraj, https://twitter.com/PIB_India - இந்த மூன்று ட்விட்டர் பக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசின் டுவிட் செய்தியால் சிக்கிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு உயிர் பிழைக்கும் நம்பிக்கையை ஊட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள நேபாள மீட்புக் குழுவினருக்கும் தங்களுக்கு வரும் உதவிகளை தெரிந்து மீட்ப்புப் பணிகளை திட்டமிட முடியும்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் பக்கத்திலும், கன்ட்ரோல் அறைகளின் தொடர்பு எண்களை பட்டியிலிடுவதில் தொடங்கி, அனைத்து தகவல்களை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பேரழிவு நிலநடுக்கத்தில் சிக்கிஉள்ள நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்துவரும் இந்தியா உலகிற்கே முன்உதராணம் ஆகி உள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் சர்வதேச மாநாடுகளில் உதிர்க்கும் நல்லெண்ண அறிவிப்புக்கு, செயல்மூலம் இந்தியா, நல்லெண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுத்து உள்ளது.

ஏர்-இந்தியா

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனமும் நேபாளத்தில் இருந்து மக்களை அழைத்து வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. காட்மாண்டு மார்க்கத்திற்கான கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் குறைத்துள்ளது.

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினரை மீட்பதற்காக காட்மாண்டிலிருந்து பிற நகரங்களுக்கும், பிற நகரங்களிலிருந்து காத்மாண்டுக்கும் கூடுதல் விமானம் இயக்கவும் ஏர்-இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்திய விமானப்படை

உதவிகரம் காட்டுவதில் உலகநாடுகளை இந்திய விமானப்படை ஈர்த்து உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஈராக்கில் இருந்து இந்தியர்களை மீட்பதில் இருந்து அனைத்து நடவடிக்கையிலும் வெற்றி பதித்த இந்திய விமானப்படை உலக நாடுகளை வியக்க செய்தது.

உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்த ஏமனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதில் இந்திய விமானப்படையும், கடற்படையும் கவனமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளை சேர்ந்தவர்களையும் மீட்டு முத்திரை பதித்தது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படையின் நடவடிக்கையை பார்த்து ஏமனில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்று இந்தியாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. இந்தியாவும் அதற்கு ஏற்றால்போல் உதவிகளை செய்தது.

அண்டைய நாடான நேபாளத்தில் பேரழிவு நிலநடுக்கம் என்றதுமே உடனடியாக ஓடி சென்றது இந்தியா. நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் என்றதுமே பாரத பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்ற அறிவிப்பை ட்விட்டரில் தெரிவித்தார். உலக நாடுகளில் முதலில் உதவிக்கரத்தை நீட்டியது இந்தியாதான். நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே மீட்புப் பணியில் இந்திய விமானப்படை முழு வீச்சில் இறங்கியது.

'ஆபரேஷன் மைத்ரி' என்று பெயரிடப்பட்ட மீட்பு நடவடிக்கை கடுமையான சவால்களுக்கு இடையே நடந்து வருகிறது. இமாலயத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் புவியியல் ரீதியில் மீட்புப் பணிகளை மிகவும் சவாலானதாக மாற்றியுள்ளது. மழையும் பெய்து வருகிறது. இயற்கைக்கு சவால்விடும் வகையில் இந்திய விமானப்படை தனது பணியினை இதுவரையில் செய்து வருகிறது. இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேபாளத்தின் கண்ணீரை துடைக்க இந்தியா முயற்சி செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பேரழிவில் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளத்தின் கண்ணீரை இந்தியா உதவிகரம் நீட்டி துடைத்து வருகிறது. தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது. அதற்கான பணிகளில் எல்லையோர மாநிலங்களும் இறங்கி உள்ளது பெரிதும் பாராட்டத்தக்கது.

பேரிடர் நாடுகளை சூழும் போது எல்லாம் வளர்ந்த நாடுகளே முதலில் வந்து நிவாரணப் பொருட்களையும், மீட்புக் குழுவினரையும் அனுப்பும். இதேபோல் மருத்துவ உதவிகளை செய்வதில் செஞ்சிலுவை சங்கமே நம் நினைவுக்கு வரும். ஆனால் அண்மைக்காலமாக போர் பாதித்த பகுதிகளிலும், பேரிடர் ஏற்பட்ட இடங்களிலும் இந்தியா குறிப்பாக இந்திய விமானப் படையின் பேராற்றல் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

ஸ்பெயின் கோரிக்கை

பேரழிவு நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளத்தில் இருந்து தங்களது நாட்டு மக்களை காப்பாற்று மாறு ஸ்பெயின் இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

பிரதமர் மோடியிடம் பேசிய ஸ்பெயின் வெளியுறவுத்துறை மந்திரி, நேபாளத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டவர்களை மீட்க இந்தியா உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது உலக நாடுகளின் மக்களையும் அங்கியிருந்து மீட்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது, ஸ்பெயின் நாட்டவர்களையும் மீட்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் மோடிஉறுதி அளித்தார்.

இதற்கிடையே நேபாளத்தில் இருந்து வெளிநாட்டவர்களும் புதுடெல்லிக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் கண்ணீர் மலங்க இந்தியாவிற்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

தினத்தந்தி

இதற்கு முன்னர், எங்காவது பேரழிவு, இந்திய மக்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியத் தலைவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை மட்டும் தெரிவித்துவிட்டு தனது தூக்கத்தைத் தொடர்வார்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட இந்தியா. உலகமே வியந்து பார்க்கும் இந்தியா. மோடி அரசின் இந்தச் செயல்கள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, எதிர்நாடுகளாகத் திகழும் சீனா, பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய சம்மட்டி அடியாக இறங்கியிருக்கும் என்பதில் வியப்பில்லை.

சீனாவும், பாகிஸ்தானும் இந்தியா எந்த நேரத்திலும் தங்களைத் தாக்கலாம் என்ற நிலையில் கைகோர்த்து கைநடுக்கத்துடன் நிற்கிறார்கள். ஆனால் இந்திய ராணுவத்திற்கு வலு சேர்க்கும் முயற்சிகளை மோடி அரசாங்கம் முழுவீச்சில் செய்து வருகிறது. எனவே இன்னும் மூன்றாண்டுகளுக்கு இந்தியா எந்த நாட்டுடனும் போரில் இறங்காது, ஆனால் தனது பலத்தை இதுபோன்ற மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்வதன் மூலம் நிரூபித்து வருகிறது.


பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Empty Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சிவா Tue Apr 28, 2015 1:05 am

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் 7D5F239E-B7A0-4A5A-BE73-DC49F2710E6E_L_styvpf
நேபாளத்தின் திரிசுலி பஜாரில் நிலநடுக்கத்தில் காயம் அடைந்த பெண்ணை இந்திய ராணுவ வீரர்கள் காட்மாண்டு விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும் காட்சி.


பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Empty Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சிவா Tue Apr 28, 2015 1:06 am

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் 53A382AD-DD7B-473C-8F23-80EAC3DA550C_L_styvpf
காட்மாண்டுவில் காயம் அடைந்தவர்களை இந்திய விமானப்படை மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் காட்சி.


பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Empty Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சிவா Tue Apr 28, 2015 1:06 am

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் DC4CBCC0-6CD5-44C2-A775-D43424983F23_L_styvpf
பேரழிவு பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளத்தில் இருந்து இந்தியர்களை மீட்பு இந்தியாவிற்கு விமானப்படை விமானம் அழைத்து வரும் காட்சி.


பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Empty Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by ராஜா Tue Apr 28, 2015 11:13 am

சிவா wrote:
இதற்கு முன்னர், எங்காவது பேரழிவு, இந்திய மக்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியத் தலைவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை மட்டும் தெரிவித்துவிட்டு தனது தூக்கத்தைத் தொடர்வார்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட இந்தியா. உலகமே வியந்து பார்க்கும் இந்தியா. மோடி அரசின் இந்தச் செயல்கள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, எதிர்நாடுகளாகத் திகழும் சீனா, பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய சம்மட்டி அடியாக இறங்கியிருக்கும் என்பதில் வியப்பில்லை.

சீனாவும், பாகிஸ்தானும் இந்தியா எந்த நேரத்திலும் தங்களைத் தாக்கலாம் என்ற நிலையில் கைகோர்த்து கைநடுக்கத்துடன் நிற்கிறார்கள். ஆனால் இந்திய ராணுவத்திற்கு வலு சேர்க்கும் முயற்சிகளை மோடி அரசாங்கம் முழுவீச்சில் செய்து வருகிறது. எனவே இன்னும் மூன்றாண்டுகளுக்கு இந்தியா எந்த நாட்டுடனும் போரில் இறங்காது, ஆனால் தனது பலத்தை இதுபோன்ற மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்வதன் மூலம் நிரூபித்து வருகிறது.


100% உண்மை தல ...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Empty Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சரவணன் Tue Apr 28, 2015 4:46 pm

இந்தியா இந்தியா தான்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Empty Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by சிவா Tue Apr 28, 2015 6:34 pm

ராஜா wrote:
சிவா wrote:
இதற்கு முன்னர், எங்காவது பேரழிவு, இந்திய மக்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியத் தலைவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை மட்டும் தெரிவித்துவிட்டு தனது தூக்கத்தைத் தொடர்வார்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட இந்தியா. உலகமே வியந்து பார்க்கும் இந்தியா. மோடி அரசின் இந்தச் செயல்கள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, எதிர்நாடுகளாகத் திகழும் சீனா, பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய சம்மட்டி அடியாக இறங்கியிருக்கும் என்பதில் வியப்பில்லை.

சீனாவும், பாகிஸ்தானும் இந்தியா எந்த நேரத்திலும் தங்களைத் தாக்கலாம் என்ற நிலையில் கைகோர்த்து கைநடுக்கத்துடன் நிற்கிறார்கள். ஆனால் இந்திய ராணுவத்திற்கு வலு சேர்க்கும் முயற்சிகளை மோடி அரசாங்கம் முழுவீச்சில் செய்து வருகிறது. எனவே இன்னும் மூன்றாண்டுகளுக்கு இந்தியா எந்த நாட்டுடனும் போரில் இறங்காது, ஆனால் தனது பலத்தை இதுபோன்ற மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்வதன் மூலம் நிரூபித்து வருகிறது.


100% உண்மை தல ...


இன்னும் 10 ஆண்டுகளுக்கு மோடி ஆட்சி இந்தியாவில் இருந்தால் இந்தியாதான் உலகின் வல்லரசாகத் திகழும்!



பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Empty Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by M.M.SENTHIL Tue Apr 28, 2015 6:45 pm

சிவா wrote:

இன்னும் 10 ஆண்டுகளுக்கு மோடி ஆட்சி இந்தியாவில் இருந்தால் இந்தியாதான் உலகின் வல்லரசாகத் திகழும்!

மேற்கோள் செய்த பதிவு: 1133634

இதில் சந்தேகமே இல்லை அண்ணா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம் Empty Re: பேரழிவு பூகம்பத்தில் சிக்கிய நேபாளத்தின் கண்ணீரை துடைக்கும் இந்தியாவின் உதவிக்கரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum