புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. Poll_c10'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. Poll_m10'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. Poll_c10'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. Poll_m10'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. Poll_c10 
2 Posts - 20%
heezulia
'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. Poll_c10'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. Poll_m10'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'.


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 2:54 pm

'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'...இத பாடலை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடுவார் என்று நினைக்கிறேன்......அது எந்த படம் என்று யாராவது சொல்ல முடியுமா?.............

சிவன் தன் கை இல் உள்ள ஓடு என்ன செய்தாலும் விட்டு அகலாது கஷ்டப்படும்போது, தாய்
அன்னபூரணி பிக்ஷை போட்டதும் அந்த ஓடு மறைந்து விடும்.............அதை காட்டும் படம்
வேண்டும் நண்பர்களே.........அது எந்த படம் என்று சொல்ல முடியுமா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 20, 2015 3:16 pm

இன்றைய ஸ்பெஷல் (73)



'இன்றைய ஸ்பெஷலி'ல் ஒரு மாற்றத்திற்காக 'கங்கா கௌரி' (1973) திரைப்படப் பாடல்.

கதை உரையாடல்: ஏ.எஸ்.நாகராஜன்

பாடல்கள்: கண்ணதாசன்

இசை: 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்.

தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

இயக்கம்: பி ஆர்.பந்துலு





சிவன், 'பர்வத ராஜகுமாரி' பார்வதி திருமணத்திற்கு சனீஸ்வரனை அழைக்கவில்லை என்று சனி பகவானிடம் தூபம் போடுகிறான் நாரதன். ஏற்கனவே சிவன் மீது கடுப்பு கொண்டிருக்கும் சனி பகவான் கல்யாணத்தை தடுத்து நிறுத்துகிறேன் என்று கிளம்புகிறான். ஆனால் அதற்குள் சிவன் பார்வதி திருமணம் நடந்து முடிந்து விடுகிறது. திருமணத்தை பிரம்மா முன்னின்று புரோகிதராக நடத்தி வைக்கிறார்.

சனியும், நாரதனும் தங்கள் திருவிளையாட்டைத் தொடங்குகிறார்கள். தட்சப் பிரம்மன் மூலம் சிவனுக்கு இடர் வர திட்டம் தட்டுகிறார்கள். புரோகிதம் செய்து வைத்த பிரம்மாவின் தலைகள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு திசையில் இருந்தும் சிவன் தட்சணை அளிக்க வேண்டும் என்று நாரதன் யோசனை கூறுகிறான். சிவனும் அப்படியே சம்மதித்து பிரம்மனின் ஒவ்வொரு தலைக்கும் ஒவ்வொரு திசையிலிருந்தும் புரோகித தட்சணை அளிக்கிறான்.

சனி இப்போது விதி வடிவில் விளையாடுகிறான். பிரம்மன் நான்கு தலைகளுக்கும் தட்சணை பெற்றுக் கொண்டு தனது ஐந்தாவது தலைக்கும் தட்சணை கேட்கிறான் அதுவும் இதுவரை கொடுக்காத திசையிலிருந்து. விவரமறியாத சிவன் "அதற்கென்ன கொடுத்தால் போகிறது" என்று அப்பாவியாய் கூறுகிறான்.

தனது ஈசான திக்கிலிருந்து தட்சணை தருவதாக சிவன் கூற, அதற்கு பிரம்மன் "கிழக்கும், வடக்கும் சேர்ந்தது ஈசான திசை... அதனால் அது புது திசை ஆகாது" என்று மறுக்கிறான் சனியின் சதியால். "அப்படியானால் அக்கினி திசையிலிருந்து தருகிறேன்" என்கிறான் சிவன். அதற்கு திருமாலோ "அக்கினி திசை கிழக்கும் தெற்கும் சேர்ந்தது. வாயு திக்கு மேற்கும் வடக்கும் சேர்ந்தது. பிரம்மா சொல்வது போல இதுவெல்லாம் புது திசை ஆகாது" என்று எடுத்துரைக்கிறார்.

"என்ன செய்வது?" என்று சிவன் விழிக்க, பிரம்மா "திருமால் அடிகாணாமல் அழிந்தான் என்றும், நான் முடி காணாமல் மயங்கினேன் என்றும் கேலி செய்தார்களே.... அந்த சிவன் இப்போது திசை காணாமல் திக்கற்று திகைக்கிறாரே.... திருமணம் செய்து வைத்த புரோகிதருக்கு தட்சணை கொடுக்க வழியில்லாமல் திக்கற்று நிற்கும் இவர் புவனங்கள் அனைத்தையும் படைத்த என்னை விட எவ்விதத்தில் உயர்ந்தவர்? இவரைப் போய் பரம்பொருள் என்கிறார்களே" என்று சிவனை அவமானப்படுத்தி கேலி பேசுகிறான் பிரம்மன்.

இதைக் கேட்டு பெரும் கோபம் கொள்கிறான் சிவன். ஐந்தாவது தலைக்கு புது திக்கிலிருந்து தட்சணை கேட்டதால் பிரச்சனைக்குரிய அந்த பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவன் கிள்ளி எடுத்துவிடுகிறான் அதுமட்டுமல்ல. "ஐமுகன் நீ இனி நான்முகன் என்றே அழைக்கப் படுவாய்... இதுவே உன் கடைசி புரோகிதமாய்ப் போகட்டும்... உலகில் உனக்கு கோவில்களே இனி இல்லாமல் போகட்டும்" என்றும் சாபமிட்டு விடுகிறான்.

இதனால் ஆத்திரமுற்ற பிரம்மன் பதில் சாபமிடுகிறான். "நீ கிள்ளி எடுத்த எனது ஐந்தாவது தலை பிச்சை ஓடாக மாறி உன் கையிலேயே ஒட்டிக் கொள்ளட்டும். அதற்கு பிச்சை எடுத்து ஜீவிப்பதே உன் தொழிலாகும் அந்த ஓடு அதில் இடப்பட்ட பொருள்களை பாதி தின்றுவிட்டு நிரம்பாமலே போகும். அது எப்போது நிரம்புகிறதோ அப்போதுதான் உனக்கு சாப விமோசனம்" என்று சிவனுக்கு கடுமையாக சாபம் இட்டு விடுகிறான்.

கையில் பிச்சை கபால ஓடுடன் பரிதாபமாக நிற்கிறான் சிவன். அதைக் கண்டு சனி மௌனமாகக் கொக்கரிக்கிறான்.

பிச்சை ஓடுடன் எல்லோரிடமும் பிச்சை எடுக்கிறான் சிவன். ஆனால் பிச்சைப் பாத்திரம் நிரம்பியபாடில்லை.

இந்த சூழ்நிலையில் ஒலிக்கும் அற்புத பாடல். சிவன் மேல் பரிதாபம் கொள்ள வைக்கும் கவிஞரின் பாடல்.



சிவனாக காதல் மன்னன் ஜெமினி கணேசன். பிரம்மாவாக ஜெமினி மகாலிங்கம். திருமாலாக சிவக்குமார். சனி பகவானாக ஓ..ஏ.கே தேவர் நாரதராக 'துகளக்' ஆசிரியர். பார்வதியாக ஜெயந்தி.

பாடகர் திலகத்தின் அற்புதமான குரல் பாவங்களில் ஒலிக்கும் பாடல். இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாகப் பாடிவிட முடியுமோ!

பிச்சை ஓடு நிரம்புவது எப்போது? சிவன் சாபம் தீருவது எப்போது? எல்லாம் அந்த 'கோபாலனு'க்குதான் வெளிச்சம்.

'இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்' என்று சிவன் கதறும் ஒரு வரியிலேயே அவனின் துன்ப நிலையை நம் மனதில் அப்படியே பதிய வைக்கும் கவிஞரின் வரிகள். அதற்கேற்றவாறு அருமையான இசை அமைத்த 'மெல்லிசை மன்னர்' அவர்கள்.

இனி பாடலின் முழு வரிகள்

'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. Fgj

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்
இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்
இந்த ஈசனுக்கும் சாபம் உண்டு கண்டு கொள்ளுங்கள்
இந்த ஈசனுக்கும் சாபம் உண்டு கண்டு கொள்ளுங்கள்

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள்
இப்போது திருவோடு ஏந்திய கைகள்
எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள்
இப்போது திருவோடு ஏந்திய கைகள்
கட்டி வைத்த பொன்னரிசி கொட்டி விடுங்கள்
கையில் ஒட்டி உள்ள ஓடு தன்னை தட்டி விடுங்கள்
கையில் ஒட்டி உள்ள ஓடு தன்னை தட்டி விடுங்கள்

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

ஆண்டவன் என்று சிலர் என்னை அழைத்தார்
ஆண்டி இவன் என்றே பிரம்மன் அழைத்தான்
சாத்திரத்தில் வந்ததில்லை இந்த பாவம்
என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்
என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

நன்றி : mayyam

வாசுதேவன் என்று போட்டுள்ளது , அநேகமாக வாசு சாராக தான் இருக்குமென நினைக்கிறேன்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 3:25 pm

மிக்க நன்றி ராஜா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Apr 20, 2015 5:26 pm

பழைய பாடல் நினைவு படுத்தியமைக்கு நன்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 6:08 pm

'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. 103459460 'பிச்சாண்டி தன்னைக்கண்டு பிச்சை இடுங்கள்'. 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக