Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
4 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
First topic message reminder :
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
இயற்கையின் அதி பயங்கர ஆட்டம்..
உயிர் துறந்தோரின் ஆன்மா சாந்தியடையட்டும்...
மக்கள் வெகு சீக்கிரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, நலமாய் வாழ ஆண்டவனை பிரார்த்திப்போம்.
உயிர் துறந்தோரின் ஆன்மா சாந்தியடையட்டும்...
மக்கள் வெகு சீக்கிரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, நலமாய் வாழ ஆண்டவனை பிரார்த்திப்போம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்தது
நேபாளத்தை இன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 16 முறை நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன.
ஆனால், ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பசுபதி நாதர் ஆலயம் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இன்றிரவு 9.30 மணி நிலவரப்படி ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன.
நேபாளத்தை இன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 16 முறை நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன.
ஆனால், ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பசுபதி நாதர் ஆலயம் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இன்றிரவு 9.30 மணி நிலவரப்படி ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நேபாளத்தின் இமாலய பூகம்பம்: விஞ்ஞானத் தகவல்கள் கூறுவது என்ன?
இமயமலைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக பல ஆண்டுகளாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த பூகம்பம்தானா இது என்று ஆராயப்பட்டு வருகிறது.
இந்திய-யூரேசிய கண்டத் தட்டுகள் (டெக்டானிக் பிளேட்ஸ்) ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதற்குக் காரணமாகும் ஒரு முக்கிய ஃபால்ட் நேபாளத்தில் இருக்கிறது. இந்த ஃபால்ட்டில் பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான வரலாற்று சாட்சியங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில பெரிய பூகம்பங்களுக்கு இந்த ஃபால்ட் பகுதி முக்கிய காரணமாக அமையலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2013 மே மாதம் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு நிலநடுக்க ஆய்வாளர் வினோத் குமார் கவுர் அளித்த பேட்டியில் "இந்த ஃபால்ட்டில் ஏகப்பட்ட ஆற்றல் சேர்ந்திருப்பதற்கான ஆதாரங்களை கணக்கீடுகள் காட்டுகின்றன. அதாவது ரிக்டர் அளவுகோலில் 8 என்று பதிவாகும் பயங்கர நிலநடுக்கத்திற்கான வாய்ப்பு இந்த ஃபால்ட்டில் உள்ளது. ஆனால் எப்போது என்றால் என்னால் கூற முடியாது. நாளையே இது ஏற்படும் என்று கூற முடியாது, ஆனால் இந்த நூற்றாண்டில் ஏற்படும் அல்லது மேலும் காத்திருந்து இன்னும் ஆற்றல்களைச் சேமித்துக் கொண்டு சிறிது காலம் கழித்து பயங்கர பூகம்பமாக உருவெடுக்கலாம்” என்று அப்போதே கூறியிருந்தார்.
மேலும், டிசம்பர் 2012-இல் நேச்சர் ஜியோ சயன்ஸ் இதழில் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து வெளியான தகவலில் மத்திய இமாலயத்தில் 8 முதல் 8.5 ரிக்டர் அளவுகோலில் பூகம்பம் ஏற்பட்டதற்கான பூமி வெடிப்புகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இமாலயத்தில் வெளி உலகம் அறியாத, அறிய முடியாத பல பூகம்பங்கள் நிகழ்வதுண்டு.
உயர் தொழில்நுட்ப உத்திகள் கொண்ட ஆய்வில் 1255 மற்றும் 1934ம் ஆண்டுகளில் இமாலயத்தில் இரண்டு மிகப்பெரிய பூகம்பங்கள் பூமியின் மேற்பகுதியில் பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 1934-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக பூமி சுமார் 150கிமீ தூரம் வரை பிளவு கண்டது.
மேற்புறத்தை பிளவுறுத்தும் இத்தகைய நிலநடுக்கங்கள் தவிர "பிளைண்ட் த்ரஸ்ட்" என்று அழைக்கப்படும் கண்களுக்குப் புலப்படா பூகம்பங்களும் இமாலயத்தில் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இமாலயத்தில் சாத்தியமாகக்கூடிய மிகப்பெரிய பூகம்பங்களில் இது ஆரம்பமா, அல்லது முடிவா அல்லது இது தொடர்கதையா என்ற கேள்வி தற்போது ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இமயமலைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக பல ஆண்டுகளாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த பூகம்பம்தானா இது என்று ஆராயப்பட்டு வருகிறது.
இந்திய-யூரேசிய கண்டத் தட்டுகள் (டெக்டானிக் பிளேட்ஸ்) ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதற்குக் காரணமாகும் ஒரு முக்கிய ஃபால்ட் நேபாளத்தில் இருக்கிறது. இந்த ஃபால்ட்டில் பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான வரலாற்று சாட்சியங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில பெரிய பூகம்பங்களுக்கு இந்த ஃபால்ட் பகுதி முக்கிய காரணமாக அமையலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2013 மே மாதம் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு நிலநடுக்க ஆய்வாளர் வினோத் குமார் கவுர் அளித்த பேட்டியில் "இந்த ஃபால்ட்டில் ஏகப்பட்ட ஆற்றல் சேர்ந்திருப்பதற்கான ஆதாரங்களை கணக்கீடுகள் காட்டுகின்றன. அதாவது ரிக்டர் அளவுகோலில் 8 என்று பதிவாகும் பயங்கர நிலநடுக்கத்திற்கான வாய்ப்பு இந்த ஃபால்ட்டில் உள்ளது. ஆனால் எப்போது என்றால் என்னால் கூற முடியாது. நாளையே இது ஏற்படும் என்று கூற முடியாது, ஆனால் இந்த நூற்றாண்டில் ஏற்படும் அல்லது மேலும் காத்திருந்து இன்னும் ஆற்றல்களைச் சேமித்துக் கொண்டு சிறிது காலம் கழித்து பயங்கர பூகம்பமாக உருவெடுக்கலாம்” என்று அப்போதே கூறியிருந்தார்.
மேலும், டிசம்பர் 2012-இல் நேச்சர் ஜியோ சயன்ஸ் இதழில் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து வெளியான தகவலில் மத்திய இமாலயத்தில் 8 முதல் 8.5 ரிக்டர் அளவுகோலில் பூகம்பம் ஏற்பட்டதற்கான பூமி வெடிப்புகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இமாலயத்தில் வெளி உலகம் அறியாத, அறிய முடியாத பல பூகம்பங்கள் நிகழ்வதுண்டு.
உயர் தொழில்நுட்ப உத்திகள் கொண்ட ஆய்வில் 1255 மற்றும் 1934ம் ஆண்டுகளில் இமாலயத்தில் இரண்டு மிகப்பெரிய பூகம்பங்கள் பூமியின் மேற்பகுதியில் பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 1934-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக பூமி சுமார் 150கிமீ தூரம் வரை பிளவு கண்டது.
மேற்புறத்தை பிளவுறுத்தும் இத்தகைய நிலநடுக்கங்கள் தவிர "பிளைண்ட் த்ரஸ்ட்" என்று அழைக்கப்படும் கண்களுக்குப் புலப்படா பூகம்பங்களும் இமாலயத்தில் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இமாலயத்தில் சாத்தியமாகக்கூடிய மிகப்பெரிய பூகம்பங்களில் இது ஆரம்பமா, அல்லது முடிவா அல்லது இது தொடர்கதையா என்ற கேள்வி தற்போது ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நேபாளம் சென்ற பாபா ராம்தேவ் பாதுகாப்பாக உள்ளார்: 250 இந்தியர்களை இன்றே அழைத்துவர துரித நடவடிக்கை
நேபாள நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் யோகாசன முகாம் நடத்தவும், பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கி வைப்பதற்காகவும் நேபாளத்துக்கு சென்ற யோகாசன குரு பாபா ராம்தேவ் அங்கு பாதுகாப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நேபாள மக்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் நான் அவர்களுடன் இங்கிருப்பதையே விரும்புகிறேன் என பாபா ரம்தேவ் தெரிவித்ததாகவும் சுஷ்மா கூறியுள்ளார்.
நேபாளத்துக்கு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை சென்றுள்ள சில இந்தியர்களின் உறவினர்களும் சுஷ்மாவுடன் டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு நேபாளம் சென்றுள்ள தங்களது உறவினர்களின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை தெரியப்படுத்தி, அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்துவர உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
அவர்களுக்கு ஆறுதலாக பதில் அளித்து வரும் சுஷ்மா சுவராஜ், இதுபற்றிய தகவல்களை உடனுக்குடன் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்தி, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். இன்று மட்டும் சுமார் 250 இந்தியர்களை நேபாளத்தில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக காத்மாண்டுவில் உள்ள இந்திய உயர் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுஷ்மா சுவராஜ் கேட்டு கொண்டுள்ளார்.
நேபாளத்தில் 5 நாள் தொடர் யோகாசன பயிற்சி முகாம் நடத்துவதற்காக அங்கு சென்றுள்ள பாபா ராம்தேவ் நேற்று நடத்திய முகாமில் சுமார் 25 ஆயிரம் பேர் யோகாசன பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாள நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் யோகாசன முகாம் நடத்தவும், பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கி வைப்பதற்காகவும் நேபாளத்துக்கு சென்ற யோகாசன குரு பாபா ராம்தேவ் அங்கு பாதுகாப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நேபாள மக்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் நான் அவர்களுடன் இங்கிருப்பதையே விரும்புகிறேன் என பாபா ரம்தேவ் தெரிவித்ததாகவும் சுஷ்மா கூறியுள்ளார்.
நேபாளத்துக்கு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை சென்றுள்ள சில இந்தியர்களின் உறவினர்களும் சுஷ்மாவுடன் டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு நேபாளம் சென்றுள்ள தங்களது உறவினர்களின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை தெரியப்படுத்தி, அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்துவர உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
அவர்களுக்கு ஆறுதலாக பதில் அளித்து வரும் சுஷ்மா சுவராஜ், இதுபற்றிய தகவல்களை உடனுக்குடன் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்தி, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். இன்று மட்டும் சுமார் 250 இந்தியர்களை நேபாளத்தில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக காத்மாண்டுவில் உள்ள இந்திய உயர் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுஷ்மா சுவராஜ் கேட்டு கொண்டுள்ளார்.
நேபாளத்தில் 5 நாள் தொடர் யோகாசன பயிற்சி முகாம் நடத்துவதற்காக அங்கு சென்றுள்ள பாபா ராம்தேவ் நேற்று நடத்திய முகாமில் சுமார் 25 ஆயிரம் பேர் யோகாசன பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
15 டன் மருந்து பொருட்களை நேபாளத்திற்கு அனுப்புகிறது இந்தியா
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 2000-க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மீட்பு பணியில் முழு உதவியை செய்து வரும் இந்திய அரசு 34 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவை நேபாளத்திற்கு அனுப்புகிறது. அத்துடன், 15 டன் மருந்து பொருட்களும் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த மருத்துவ குழுவில் 10 ஆர்தோபேடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், 4 அனஸ்தேசியஸ்ட் வல்லுனர்கள், 12 நர்சுகள் (ஆண்கள்), 8 ஓ.டி. டெக்னீசியன்களும் அடங்குவர். மேலும், மருத்துவ உபகரணங்களும் விமானத்தில் அனுப்பப்படுகிறது.
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 2000-க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மீட்பு பணியில் முழு உதவியை செய்து வரும் இந்திய அரசு 34 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவை நேபாளத்திற்கு அனுப்புகிறது. அத்துடன், 15 டன் மருந்து பொருட்களும் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த மருத்துவ குழுவில் 10 ஆர்தோபேடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், 4 அனஸ்தேசியஸ்ட் வல்லுனர்கள், 12 நர்சுகள் (ஆண்கள்), 8 ஓ.டி. டெக்னீசியன்களும் அடங்குவர். மேலும், மருத்துவ உபகரணங்களும் விமானத்தில் அனுப்பப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நேபாள நிலநடுக்க மீட்பு பணியில் இணைகிறது ஆர்.எஸ்.எஸ்.
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு மீட்பு பணியில் இணைந்து களத்தில் பணியாற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தயாராகியுள்ளதாக அறிவித்துள்ளது.
நேபாள அரசுடன் முறைப்படி கலந்தாலோசித்த பிறகு மீட்பு பணியில் இறங்குகிறது. சற்று நேரத்திற்கு முன்பாக, நேபாளத்திற்கு சென்றடைந்த ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹாஸ்போலே அங்குள்ள இந்து சுவயம்சேவக் சங்கத்துடன் இணைந்து மீட்பு பணி திட்டத்தை வடிவமைத்து வருகின்றனர்.
அங்கு சேதம் எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டு அதற்கேற்றவாறு எண்ணிக்கையில் இங்கிருந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நேபாளத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு மீட்பு பணியில் இணைந்து களத்தில் பணியாற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தயாராகியுள்ளதாக அறிவித்துள்ளது.
நேபாள அரசுடன் முறைப்படி கலந்தாலோசித்த பிறகு மீட்பு பணியில் இறங்குகிறது. சற்று நேரத்திற்கு முன்பாக, நேபாளத்திற்கு சென்றடைந்த ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹாஸ்போலே அங்குள்ள இந்து சுவயம்சேவக் சங்கத்துடன் இணைந்து மீட்பு பணி திட்டத்தை வடிவமைத்து வருகின்றனர்.
அங்கு சேதம் எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டு அதற்கேற்றவாறு எண்ணிக்கையில் இங்கிருந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நேபாளத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நேபாலுக்கு தினமும் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை அனுப்பும் சீக்கிய அமைப்புகள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாலின் காத்மண்டுவிற்கு நாளை முதல் தினமும் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை அனுப்ப சீக்கிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
சண்டிகரில் சிரோன்மனி அகலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் அறிவுறுத்தலின்படி, சீக்கிய அமைப்புகளான சிரோன்மனி குருத்வாரா பர்பன்தாக் கமிட்டி (SGPC) மற்றும் டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக்குழு இணைந்து தினமும் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை நேபாலுக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உணவுப் பொட்டலங்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. விமானத்தில், 20 சமையல்காரர்களும், தன்னார்வ தொண்டர்களும் உடன் அனுப்பப்படுகிறார்கள்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாலின் காத்மண்டுவிற்கு நாளை முதல் தினமும் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை அனுப்ப சீக்கிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
சண்டிகரில் சிரோன்மனி அகலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் அறிவுறுத்தலின்படி, சீக்கிய அமைப்புகளான சிரோன்மனி குருத்வாரா பர்பன்தாக் கமிட்டி (SGPC) மற்றும் டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக்குழு இணைந்து தினமும் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை நேபாலுக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உணவுப் பொட்டலங்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. விமானத்தில், 20 சமையல்காரர்களும், தன்னார்வ தொண்டர்களும் உடன் அனுப்பப்படுகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் நிறுத்தம்; கனமழைக்கு வாய்ப்பு
நேபால் நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
இதற்கு இந்திய பேரிடர் மீட்புக்குழு மற்றும் இந்திய ராணுவம் பெரிய அளவில் உதவி புரிந்து வருகிறது. இந்நிலையில், இன்று அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மீட்பு பணியில் தாமதம் உண்டானது.
இந்நிலையில், இன்று மாலை மீண்டும் வானிலை மோசமாக துவங்கியதால் விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த 4 மணிநேரத்திற்கு நேபாலில் பரவலாக இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
நேபால் நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
இதற்கு இந்திய பேரிடர் மீட்புக்குழு மற்றும் இந்திய ராணுவம் பெரிய அளவில் உதவி புரிந்து வருகிறது. இந்நிலையில், இன்று அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மீட்பு பணியில் தாமதம் உண்டானது.
இந்நிலையில், இன்று மாலை மீண்டும் வானிலை மோசமாக துவங்கியதால் விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த 4 மணிநேரத்திற்கு நேபாலில் பரவலாக இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நேபாலில் மீட்பு பணிக்காக 13 போர் விமானங்களை அனுப்புகிறது இந்தியா
நேபாலில் சிக்கி தவித்த 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு சில மணி நேரத்திற்கு முன்பு டெல்லி கொண்டு வரப்பட்டனர். ஏற்கனவே, நேபாளுக்கு மீட்பு பணியில் முழு ஆதரவையும் உதவியையும் வழங்கி வரும் இந்தியா மேலும் 13 இந்திய போர் விமானங்களை காத்மண்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தியர்கள் மட்டுமில்லாமல் மற்ற வெளிநாட்டவர்களையும் மீட்க இந்தியா தயாராகி வருகிறது. ஏற்கனவே, 5 விமானங்கள் களத்தில் உள்ளதாகவும் இந்திய பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நேபாலில் மீட்பு பணியை துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் பொருட்டு இந்திய பாதுகாப்பு துறை, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து அவசரக் கூட்டம் ஒன்றை சற்று நேரத்திற்கு முன்பு நடத்தியது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவலை இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
நேபாலில் சிக்கி தவித்த 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு சில மணி நேரத்திற்கு முன்பு டெல்லி கொண்டு வரப்பட்டனர். ஏற்கனவே, நேபாளுக்கு மீட்பு பணியில் முழு ஆதரவையும் உதவியையும் வழங்கி வரும் இந்தியா மேலும் 13 இந்திய போர் விமானங்களை காத்மண்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தியர்கள் மட்டுமில்லாமல் மற்ற வெளிநாட்டவர்களையும் மீட்க இந்தியா தயாராகி வருகிறது. ஏற்கனவே, 5 விமானங்கள் களத்தில் உள்ளதாகவும் இந்திய பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நேபாலில் மீட்பு பணியை துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் பொருட்டு இந்திய பாதுகாப்பு துறை, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து அவசரக் கூட்டம் ஒன்றை சற்று நேரத்திற்கு முன்பு நடத்தியது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவலை இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நேபாளம், வடஇந்தியாவில் மீண்டும் 6.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம், மக்கள் அச்சம்
நேபாளம் மற்றும் வடஇந்தியாவில் இன்று மீண்டும் 6.7 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இச்சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இமயமலையில் அமைந்த நாடான நேபாளத்தை நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியது. நேபாள நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் வடமாநிலங்கள் சிலவும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேபாளத்தில் நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1,900 ஐ தாண்டியது. 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழிந்தனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இரவு முழுவதும் மக்கள் அச்சத்தில் தூங்கவில்லை. இன்று மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேபாளம் மற்றும் வடஇந்தியாவில் இன்று மீண்டும் 6.7 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இச்சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. நேபாளம் நாட்டின் கோதாரிக்கு தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுஉள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் இன்றும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் கட்டிடங்கள் குலுக்கியதை அடுத்து மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தை அடுத்து கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. புதிய நிலநடுக்கம் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால், பாதிப்பு அதிகரித்து உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையே பின்அதிர்வுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியிலும் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலும் நிலஅதிர்வு உணரப்பட்டு உள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் நேற்றை போன்று அதிர்வு உணரப்பட்டது என்று தெரிவித்து உள்ளனர். மக்கள் பெரிதும் அச்சம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிரதமர் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார். மாலை 3:30 மணியளவில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
நேபாளம் மற்றும் வடஇந்தியாவில் இன்று மீண்டும் 6.7 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இச்சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இமயமலையில் அமைந்த நாடான நேபாளத்தை நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியது. நேபாள நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் வடமாநிலங்கள் சிலவும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேபாளத்தில் நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1,900 ஐ தாண்டியது. 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழிந்தனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இரவு முழுவதும் மக்கள் அச்சத்தில் தூங்கவில்லை. இன்று மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேபாளம் மற்றும் வடஇந்தியாவில் இன்று மீண்டும் 6.7 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இச்சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. நேபாளம் நாட்டின் கோதாரிக்கு தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுஉள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் இன்றும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் கட்டிடங்கள் குலுக்கியதை அடுத்து மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தை அடுத்து கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. புதிய நிலநடுக்கம் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால், பாதிப்பு அதிகரித்து உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையே பின்அதிர்வுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியிலும் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலும் நிலஅதிர்வு உணரப்பட்டு உள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் நேற்றை போன்று அதிர்வு உணரப்பட்டது என்று தெரிவித்து உள்ளனர். மக்கள் பெரிதும் அச்சம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிரதமர் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார். மாலை 3:30 மணியளவில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|