ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!

5 posters

Go down

 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Empty தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!

Post by சிவா Thu Apr 23, 2015 12:07 am

 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  11161341_974100132613654_8888385751676567607_n

‘‘ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் தமிழகம் முழுவதும் மேலும் புதியதாக 360 அம்மா உணவகங்களை விரைவில் திறக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்று 2014-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அம்மா அறிவித்தால் சும்மா இருப்பார்களா அதிகாரிகளும் அமைச்சர்களும். துரிதமாகக் கட்டத் தொடங்கினார்கள். கட்டி முடித்தார்கள். ஆனால், திறந்து வைத்தார்களா?

அம்மா உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, சமையல் பாத்திரங்களையும் வாங்கி டெஸ்ட் சமையலையும் முடித்துவிட்டனர். ஆனால், அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் அந்த 140 அம்மா உணவகங்களும் திறப்புவிழாவுக்காகக் காத்திருக்கின்றன.

‘‘அம்மா முதலமைச்சராக வந்ததும்தான் திறப்போம்” என்று ஆங்காங்கே அ.தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து கட்டி முடிக்கப்பட்ட இந்த உணவகங்களின் நிலையை அறிய மாநிலம் முழுவதும் வலம் வந்தோம்!

ஃப்ளாஷ் பேக்!

சென்னை மாநகராட்சியின், ‘மலிவு விலை உணவகம்’ திட்டத்தை 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதே நாளில் சென்னையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. மலிவு விலை உணவகம் என்ற பெயரை, ‘அம்மா உணவகம்’ என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் 2013-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சென்னையில் மலிவு விலை உணவகங்களின் எண்ணிக்கை 73 ஆக இருந்தன. ஜெயலலிதா தொடங்கி வைத்த, ‘அம்மா’ உணவகம் அ.தி.மு.க-வின் மக்கள் செல்வாக்கு பெற்ற திட்டமாக மாறியதாகச் செய்திகள் பரவின. அதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு  நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்களும் மற்ற இடங்களில் 231 உணவகங்களும் என ஆக மொத்தம்  360 உணவகங்களைத் திறக்க ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து அம்மா உணவகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்தன. 140 அம்மா உணவகக் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், இன்னும் திறக்கப்படத்தான் இல்லை.

ஒவ்வோர் உணவகத்துக்கும் சமையல் பாத்திரங்கள் வாங்க சுமார் ரூ.6 லட்சம் வரை செலவாகியிருக்கிறதாம். ஒவ்வோர் உணவகத்துக்கும் மூன்று ஷிப்டுக்கும் சேர்த்து 12 பேர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு நபருக்கு ரூ.300 தினக்கூலி. இந்த வேலைக்கு ஆசைப்பட்டு சிலர் ஒரு லட்சம் வரை கொடுத்து வேலைக்குச் சேர்ந்ததாகவும் சொல்கிறார்கள்.

கதவு எப்போது திறக்கும்?

தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களிலும் பட்டுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், கும்பகோணம் தெற்குவீதி ஆகிய பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் ஒரு மாதத்துக்கு முன் கட்டி முடிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களை ஒரே நாளில் திறப்பதற்காக அமைச்சர் வைத்திலிங்கம் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். ஆனால், ஜெயலலிதாவின் தீர்ப்பு தலைகீழாக மாறிப்போனதால், கட்டிய உணவகங்கள் அனைத்தும் அப்படியே கிடக்கின்றன. சமையல் பாத்திரங்கள், டைனிங் டேபிள் எல்லாம் வாங்கிப் போடப்பட்டு, கடந்த 10 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கின்றன. திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே  முடிக்கப்பட்ட அம்மா உணவகம், அடுத்த ஒரு வாரத்தில் திறப்புவிழா என்றனர். ஒரு வருடம் ஓடிவிட்டது. ‘அம்மா ரிலீஸ் ஆனால்தான் இங்கே அம்மா உணவகத்தின் கதவு திறக்கும்’ என்று அ.தி.மு.க-வினர் பகிரங்கமாகவே பேசுகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திலும் தலைமை மருத்துவமனையிலும் அம்மா உணவகங்கள் கட்டப்பட்டு திறப்புவிழாவுக்குத் தயாராகக் காத்திருக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகளான, கடலூர் உழவர் சந்தை, நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம், பண்ருட்டி அரசு மருத்துவமனை, விருத்தாசலம் பாலக்கரை, சிதம்பரம் அரசு மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களில் அம்மா உணவகம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்காகக் காத்துள்ளது. ‘‘எங்களுக்குக் கொடுத்த டெண்டர்படி சொன்ன தேதிக்குள் கட்டடத்தைக் கட்டி முடித்துவிட்டோம். அதுமட்டுமில்லாமல் ‘அம்மா உணவக’த்துக்குத் தேவையான அனைத்துப்  பொருட்களையும் வாங்கி வெச்சுட்டோம். ஆனால், கட்டடத்தைத் திறக்க நகராட்சி கமிஷனர்தான் அனுமதி வாங்கித் தரவேண்டும். அவரைக் கேட்டால், தலைமையும் தாம்பரத்தில் உள்ள மண்டல நிர்வாக இயக்குநரகமும் அதற்கான அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள். தனி ஒரு மனிதருக்காக இப்படி மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளது’’ என்று புலம்புகின்றனர் பொதுமக்கள்.

பாத்திரங்கள் ரெடி... சாப்பிடவும் ரெடி!

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகில் கட்டப்பட்ட அம்மா உணவகத்தில் வாங்கப்பட்ட புதிய பாத்திரங்கள் எல்லாம் வீணாகிக் கொண்டிருக்கின்றன. மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் ஏரியாவில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சகல ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், ஓர் உணவகம் மட்டும் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கிறது. சமையலுக்கான பாத்திரங்களும் ரெடி. சாப்பிட ஆட்களும் ரெடி. இந்த அனைத்து உணவகங்களுக்கும் ஒரு வாட்ச்மேனை காவலுக்குப் போட்டு சம்பளம் கொடுத்துக்கொண்டிருப்பது வேதனை.

சேலம் மாநகராட்சியில் ஏற்கெனவே 10 அம்மா உணவகங்கள் இருக்கின்றன. அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் ஓர்  அம்மா உணவகத்தை ஏழு மாதங்களுக்கு முன்பு கட்டினார்கள். மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், அம்மா உணவகத்துக்கே அதிக அளவு மாநகராட்சி நிதியை ஒதுக்குகிறார்கள் என எதிர்க் கட்சியினர் புகார் சொன்னார்கள். அப்படிக் கட்டப்பட்ட உணவகம் இன்னும் திறக்கப்படவில்லை. தர்மபுரியில் இரண்டு, கிருஷ்ணகிரியில் ஒன்று, ஓசூரில் ஒன்று என்று காத்திருக்கும் அம்மா உணவகங்களின் பட்டியல் நீளுகிறது.

மக்கள் முதல்வரின் பச்சைக்கொடி அசைவுக்காக மக்களின் வரிப்பணம் வீணாகலாமா?

விகடன்


 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Empty Re: தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!

Post by ayyasamy ram Thu Apr 23, 2015 7:01 am

எதிர்க்கட்சிகள் இதனை பயன்படுத்தி
மலிவு விலையில் ஏழைகளுக்கு உணவு
வழங்கி
கட்சியை வளர்த்துக் கொள்ளலாம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Empty Re: தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!

Post by M.M.SENTHIL Thu Apr 23, 2015 1:24 pm

இந்த அம்மா சாராய கடை மட்டும் தினமும் திறக்கப்படுகிறதே சோகம் சோகம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Empty Re: தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Apr 23, 2015 3:16 pm

M.M.SENTHIL wrote:இந்த அம்மா சாராய கடை மட்டும் தினமும் திறக்கப்படுகிறதே சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1132481

இன்னும் ஒரு ஆயிரம் டாஸ்மாக் திறந்தால் போதுமே இந்த அம்மா உணவகம் நடத்த!


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Empty Re: தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!

Post by பாலாஜி Fri Apr 24, 2015 2:02 pm

M.M.SENTHIL wrote:இந்த அம்மா சாராய கடை மட்டும் தினமும் திறக்கப்படுகிறதே சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1132481

நல்ல கேள்வி தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!  Empty Re: தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum